கவிதைக்கு நன்றி.Quote:
நன்றி கரவை திரு பாஸ்கரன்
நிலவே என் நிலவே
நிலவே என் நிலவே
நீ எங்கே நீ எங்கே
தலைவன் வரவு எண்ணியோ
நாணி நீயும் மறைகின்றாய்
உன் பெயரைக் கொண்டவனாம்
உன் நிறத்தை தந்தவனாம்
நின் உயிரும் தன் உயிராய் காத்தவனாம்
நிகரில்லா தலைவன் குணமன்றோ
சிரிக்கும் ஏழை முகம் தன்னில்
சிலிர்க்கும் உள்ளம் கொண்டவனாம்
சிந்தும் கண்ணீர் துடைத்திடவே
சீறி வருவான் புயலாக
படிக்கும் குழந்தை பசி என்று
பரிதவிக்கும் நிலை மாற்ற
வடித்துப் போட்டான் சத்துணவு
வள்ளல் அவனே அவனே
பத்துத் திங்கள் தமிழகத்தை
பலரும் மெச்சும் வண்ணமதில்
முத்தாக ஆண்டவனாம்
முத்தமிழாய் நாளும் நின்றவனாம்
உலகத் தமிழ் நாடு தன்னை
உன்னதமாக நடத்தியவன்
உலகமெங்கும் தமிழ் பரவிடவே
மருவும் கணினித் தமிழ் மாற்றியவன்
தொலை நோக்கு இல்லையென்று
தொடராக தொல்லை தந்த எதிரிகளிடம்
விலை போகா எங்கள் மன்னவனும்
வீற்றிருப்பான் எங்கள் இதயக் கனியாய் என்றும்
வாழ்க்கை என்னும் புத்தகத்தை
வரலாறாய் மாற்றியவன்
கொள்கை தீபம் ஏற்றி
கொற்றவனாய் வாழ்ந்து காட்டியவன்
நிலவே என் நிலவே
நீ எங்கே நீ எங்கே
என் தலைவன் வழியினில் நான் நடக்க
என்றும் வருவாய் ஒளியதுவாய்