-
மதுரை என்றதும் சில சுவையான நினைவுகள். எம்.ஜி.ஆரின் திரைப்பட, அரசியல் வாழ்க்கையில் மதுரைக்கு தனி இடம் உண்டு. தமிழகம் முழுவ திலும் எம்.ஜி.ஆருக்கு ஆதரவு உண்டு என்றாலும் மதுரை அவரது கோட்டையைப் போல விளங்கி
சிறுவயதில் எம்.ஜி.ஆர். நடித்த நாடகக் கம்பெனியின் பெயர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி. எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்து வெள்ளி விழா கண்ட முதல் படம் ‘மதுரை வீரன்'. படம் வெள்ளி விழா கொண்டாடியது மதுரையில்.
1958-ம் ஆண்டு ‘நாடோடி மன்னன்’ படத்தின் அசுர வெற்றிக்காக முதன் முதலில் பொதுமக்கள் முன்னிலையில் விழா நடந்த இடம் மதுரை தமுக்கம் மைதானம். இந்த விழாவில்தான் எம்.ஜி.ஆர். ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு 110 பவுனில் அவருக்கு தங்கவாள் வழங்கப்பட்டது.
அதிமுகவை தொடங்கிய பின் அப் போதைய திமுக ஆட்சிக்கு எதிராக பிரதமர் இந்திரா காந்தியிடம் புகார் மனு கொடுக்க மதுரைக்கு எம்.ஜி.ஆர். சென்ற ரயில், வழிநெடுக மக்களின் வரவேற்பால் 10 மணி நேரம் தாமதமாகச் சென்று பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய 7 மாதத்தில் அவரது கட்சிக்கு முதல் வெற்றியைக் கொடுத்தது திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர் தல். அப்போது திண்டுக்கல் தனி மாவட் டமாக பிரிக்கப்படவில்லை. மதுரை மாவட்டத்தில்தான் இருந்தது. அதிமுக வுக்கு முதல் மேயரைக் கொடுத்தது மதுரைதான்.
1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர்.ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர், நடந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி மதுரை மேற்கு. மீண்டும் முதல்வரான பின்னர், மதுரை யில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி னார். 1984-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்தபடியே ஆண்டிப்பட்டி தொகுதி யில் போட்டியிட்டு வென்றார். அப்போது ஆண்டிப்பட்டி மதுரை மாவட் டத்தில்தான் இருந்தது. 1986-ம் ஆண்டு ஜூலையில் மதுரையில் எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டை நடத்தினார். எம்.ஜி.ஆர். நடித்த கடைசிப் படம் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’. இப்படி மதுரையோடு எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான பிணைப்பு உண்டு!
ஜப்பானில் எக்ஸ்போ 70 கண்காட் சியில் ‘உலகம் சுற்றும் வாலிபன்' படத் தின் படப்பிடிப்பு நடந்தது. ‘உலகம் அழகு கலைகளின் சுரங்கம்…’ பாடலின் சில காட்சிகளை 30 ஆயிரம் பல்புகளைக் கொண்டு ஒளி வெள்ளம் பாய்ச்சப்பட்ட ஸ்விஸ் பெவிலியனில் எடுக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டார்.
அந்த சமயத்தில் ஒரு காட்சிக்காக ஒளிப்பதிவாளர் அழைக்கும்வரை எம்.ஜி.ஆர், நடிகை சந்திரகலா, அசோ கன், நாகேஷ் ஆகியோர் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது அவர் கள் அருகில் வந்த ஜப்பானியர் ஒருவர் மது மயக்கத்தில் இருந்தார். ஆர்வத் தோடு சந்திரகலாவின் உடையை கவ னித்தார். திடீரென சில்மிஷம் செய்யும் எண்ணத்துடன் சந்திரகலாவின் உட லைத் தொட்டுவிட்டார். ஜப்பானியரின் கை சந்திரகலாவின் உடலைத் தொட்ட மறுகணம் எம்.ஜி.ஆரின் கை அவர் கன்னத்தில் விழுந்தது. ஜப்பானியரை எம்.ஜி.ஆர். பலமாக அறைந்து விட்டார். இதில் ஜப்பானியர் அணிந்திருந்த கண்ணாடி தெறித்து விழுந்தது.
தயாரிப்பாளரும் இயக்குநருமான பி.ஆர். பந்துலுவுக்கு உதவுவதற்காக அவரது ‘ஆயிரத் தில் ஒருவன்’ படத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். ‘‘தொலைபேசியில்தான் எம்.ஜி.ஆரிடம் கேட்டேன். உடனே நடிக்க ஒப்புக் கொண்டு ‘கால்ஷீட்’ கொடுத்தார்’’ என்று பின்னர், 5-2-1971 தேதியிட்ட ‘சித்ராலயா’ இதழில் பந்துலு நன்றியுடன் கூறியிருந்தார். ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முதலில் பந்துலுதான் இயக்குவதாக இருந்தது. இடையே அவர் இறந்து விட்டதால் எம்.ஜி.ஆரே படத்தின் இயக்குநராக பணியாற்றினார்.
சத்யா மூவீஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த ‘தெய்வத்தாய்’ திரைப்படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. அப்போது, கடுமையான அரிசிப் பஞ்சம் இருந்தது. மக்கள் அவதிப்படும் நிலையில், படம் வெற்றி பெற்றதற்காக 100வது நாள் விழா தேவையில்லை என்று எம்.ஜி.ஆர். கூறியதால் வெற்றி விழா கொண்டாடப்படவில்லை
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ஆதரவற்ற பெண் களுக்கு திருமண நிதி உதவித் திட்டம், தாலிக்கு தங்கம் வழங் கும் திட்டம் ஆகியவற்றை செயல் படுத்தியதோடு, ஆதரவற்ற விதவை தாய்மார்களின் பெண்களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங் கவும் உத்தரவிட்டார்.
எம்.ஜி.ஆர். நடித்த ‘மதுரை வீரன்’ திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்பட்ட 33 திரையரங்குகளிலும் 100 நாட்கள் ஓடி சரித்திரம் படைத்தது. எந்த கருப்பு வெள்ளை படமும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை. பெங்களூரிலும், இலங்கையிலும் தலா ஒரு திரையரங்கில் 100 நாட்கள் ஓடியது. எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் வெள்ளி விழா படம் என்பதோடு, ரூ.1 கோடி வசூல் செய்த முதல் தமிழ்படம் என்ற பெருமை பெற்றது ‘மதுரை வீரன்.’
இதயவீணை’ படத்தை தொடர்ந்து ‘உதயம் புரொடக் ஷன்ஸ்' நிறுவனத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். நடித்த ‘சிரித்து வாழ வேண்டும்’, ‘பல்லாண்டு வாழ்க’ ஆகிய படங் களையும் மணியன் தயாரித்தார். இந்த மூன்று படங்களுமே 100 நாட் கள் ஓடி அமோக வெற்றி பெற்ற
எம்.ஜி.ஆரின் 100-வது படம் ‘ஒளிவிளக்கு’. 1968-ம் ஆண்டில் வெளியாகி அமோக வெற்றி பெற்றது. மதுரையில் 21 வாரங்கள் ஓடியது. மறு வெளியீடுகளிலும் சக்கைபோடு போட்டது. 1979-ம் ஆண்டு இலங்கையில் மறு வெளியீட்டிலும் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது ‘ஒளிவிளக்கு’.
அடிமைப் பெண்’ படப்பிடிப்புக்காக எம்.ஜி.ஆர். ராஜஸ்தான் சென்றபோது, அந்த மாநில முதல்வராக இருந்த மோகன்லால் சுகாதியா, எம்.ஜி.ஆருக்கு விருந்தளித்து கவுரவித்தார். அப்போது அவர் பரிசளித்த புசுபுசுவென்ற வெள்ளைத் தொப்பி, எம்.ஜி.ஆருக்கு அழகாக பொருந்தியது. அதிலிருந்துதான் எம்.ஜி.ஆருக்கு தொப்பி அணியும் பழக்கம் ஏற்பட்டது......... Thanks.........
-
19.03.2020 இன்று தலைவரின் துணுக்குகளில்
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது திருத்தணி ஆந்திராவுடன் சேர்க்கப்பட்டது.
போராட்டம் வடக்கு எல்லையிலிருந்து நடத்தி திருத்தணியை
தமிழகத்து மீட்டார்
ம.பொ.சி.
பின்நாளில் அவர் குடல் நோயால் பாதிக்கப்பட்ட போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை............... Thanks...
-
அவருக்கு தைரியம் சொல்லி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கான
செலவுகளையும் செய்து
குணப்படுத்தி மா.பொ.சியை மீட்டார்
எம்ஜிஆர்.
பின்நாளில் தலைவர் மா.பொ.சியைப் பார்த்து
இனி ஒவ்வொரு பிறந்த நாள் விழா விலும் தாங்கள் விரும்பியதை வாங்க நான் தவறாமல்
கலந்து கொண்டு அந்த வயதுக்கு ஏற்றபடி
உ.ம் 80 என்று வைத்தால் 80000.00 ரூபாய் கவரில் தருவேன் என்று
தந்தவர் நம் தலைவர்....... Thanks...
-
எம்.ஜி.ஆர்., நடித்த "மதுரை வீரன் "படம் தமிழகத்தில் திரையிட்ட 33திரையரங்கிலும் 100 நாட்கள் ஓடியது.எந்த கறுப்பு வெள்ளைப்படமும் சாதிக்க வில்லை.பெங்களூரிலும் இலங்கையிலும் 100 நாட்கள் ஓடியது.தலைவர் கதாநாயகனாக நடித்த முதல் வெள்ளிவிழா படம் இதுவே.ரூபாய் 1 கோடி தாண்டிய வசூல் செய்த முதல் படமும் இதுதான். திரையுலக வசூல் சக்கரவர்த்தி என எல்லோரும் எம்.ஜி.ஆர். அவர்களை கூற தொடங்கியது இந்த பட வெற்றி யினால் தான்......... Thanks.........
-
முன்னெல்லாம் சைக்கிளில் பின்னால் அமர்ந்து கொண்டு டபுள்ஸ் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது
போனால் போலீஸார்
அபராதம் விதிக்கப்படும்.
தலைவர் முதல்வரானதும் டபுள்ஸ் சைக்கிளில் செல்வாம் என உத்தரவிட்டார்.
ஏழைகளின் இதய தெய்வம் அல்லவா......... Thanks.........
-
எம்ஜிஆர் படங்களை முதல் நாளிலேயே பார்த்து விட ரசிகர்கள் துடிப்பார்கள்.
அந்த ஆர்வமே சோகமாய் முடிந்தது.
சேலத்தில் 1975 ம் ஆண்டு மே 9ம் தேதி
நினைத்ததை முடிப்பவன் படம் வெளியானது.
சேலத்தில் ஜெயா தியேட்டரில் முதல்நாள்
கூட்டநெரிசலில் 4பேர்
இறந்தனர்கள்.மேலும்
சிலருக்கு காயம்.
தலைவர் கேட்டதும்
அங்கு சென்று ஆறுதல்
மற்றும் கருணைத் தொகையும் வழங்கினார்......... Thanks.........
-
எம்ஜிஆர் நடித்த" நாடோடி மன்னன் "படம்
1959 ம் ஆண்டு திருவண்ணாமலை கிருஷ்ணா திரையரங்கில் மறுவெளியீடு செய்யப்பட்டது.
சினிமாஸ்கோப் போன்ற நவீன உத்திகள் இல்லாமல் தினசரி 3 காட்சிகளாக
மறுவெளியீட்டில் 100
நாட்கள் ஓடிய ஒரே முதல் படம்
நாடோடிமன்னன்........... Thanks.........
-
சத்யா மூவிஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த தெய்வத்தாய் படம் 100நாட்கள் ஓடியது. அப்போது கடுமையான அரிசிபஞ்சம் இருந்தது. மக்கள் அவதி ப்படும் நிலை.படம் வெற்றிவிழா தேவையில்லை என
எம்ஜிஆர் கூறியதால்
கொண்டாடப் படவில்லை........ Thanks...
-
ரகசிய*போலீஸ் 115 படத்திற்கு*திரண்ட பக்தர்கள் கூட்டம்*
------------------------------------------------------------------------------------------
தென்னக ஜேம்ஸ் பாண்டாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்து முதல் வெளியீட்டிலும், அதன்பின் பல வெளியீடுகளிலும் வசூலில் புரட்சி செய்து சாதனை புரிந்த " ரகசிய போலீஸ் 115" டிஜிட்டல் வடிவில் புதிய தொழில்நுட்ப்பதில் கடந்த வாரம் சென்னையில் சுமார் 10 அரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டது .
முன்னதாக திருச்சி, கரூர், பழனி,தேனீ, சேலம் ,சேலம் மாவட்டத்தில் .;8 அரங்குகள் ,மதுரை (2 வாரங்கள் ) வெளியாகி புதிய படங்களுக்கு சவால் விடும் வகையில் வசூல் சாதனை செய்துள்ளது .
சென்னை பேபி ஆல்பட்டில்* தினசரி 2 காட்சிகள் (மாலை /இரவு ) 13/03/20 முதல் நடைபெற்றது.* ரசிகர்கள் / பக்தர்கள் பேராதரவு,மற்றும் வரவேற்பை முன்னிட்டு ஞாயிறு மாலை (15/03/20) காட்சி , இரவு காட்சி* ஆல்பட்டில் திரையிடப்பட்டது .ஞாயிறு* மாலை சிறப்பு காட்சிக்கு , கலைவேந்தன் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை பக்தர்கள் குழு சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது .* அதன்படி ஞாயிறு காலை 10 மணி முதல் இரவு 7 மணிவரை இடைவிடாது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்பட பாடல்கள் அரங்க வளாகத்தில் ஒலித்த வண்ணம் இருந்தது .வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரின் பிரத்யேக கட் அவுட் தயார் செய்து , அரங்க வாயிலில் அமைத்து , மலர்மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது .மாலை 6 மணியளவில் புரட்சி தலைவரின் கட் அவுட்டுக்கு பூஜைகள், பாலபிஷேகம், இளநீர் அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டது . அரங்கத்தின்*வாயில் அருகில் சாலையில் சரவெடிகள், பட்டாசுகள் வெடித்த வண்ணம் இருந்தன .பல்வேறு எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகளை சார்ந்த உள்ளூர் ,மற்றும் வெளியூர் பக்தர்கள் திரண்டு வந்திருந்து இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
ஞாயிறு மாலை காட்சியில் சென்னை ஆல்பட்டில் சுமார் 700 நபர்களுக்கு மேல் காட்சியை ரசித்ததாக நெல்லை நண்பர் திரு.வி.ராஜா , அரங்க ஊழியர்களிடம் விசாரித்து* தகவல் தெரிவித்தார் .* பெரும்பாலான ரசிகர்களுக்கு ஆல்பட்டில் ஞாயிறு மாலை காட்சி திரையிடுவது தெரியாது .தினசரியில் முறையான விளம்பரம் இல்லை .* சென்னை தி.நகரில்* சர் பி.டி.தியாகராயர் அரங்கில் ,உரிமைக்குரல் மாத இதழ் நடத்தும்*மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 103 மனித நேய விழா, மற்றும் 1970ல் வெளியான மக்கள் திலகத்தின் திரைக்காவியங்களின்* பொன்விழா நிகழ்ச்சிக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள்* சுமார் 400 நபர்கள்* கலந்து கொண்டிருந்ததால்கணிசமான பக்தர்கள் ஆல்பட் அரங்கிற்கு வரமுடியாமல் போய்விட்டது .இல்லாவிடில், அட்வான்ஸாக அரங்கு நிரம்பி வழிந்திருக்கும்**
கொரானா வைரஸ் நோய்* அச்சுறுத்தலை மீறி* இப்படி ரசிகர்கள் /பக்தர்கள்*திரண்டு வந்து காட்சியை ரசித்தது சென்னையில் ஆல்பட்* அரங்கில் மிகவும் ஆச்சர்யம் என்று அரங்க ஊழியர்கள் பேசிக் கொண்டதாக நெல்லை நண்பர் திரு.ராஜா தகவல் அளித்தார் .
ஒளி விளக்கு படத்தில் நடிகர் சோ, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை பார்த்து என்ன வாத்தியாரே, மாங்குடி கிராமமே காலியாகிறது கொடிய நோயால். சீக்கிரம்*புறப்படு என்று கூறும்போது, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பதில் சொல்வார் . இந்த நோயே என்னை கண்டால் பறந்து போய்விடும் என்று . அதுபோல எம்.ஜி.ஆர்.*பக்தர்கள் நோயை கண்டு அசராமல், அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படத்திற்கு நல்ல வரவேற்பு அளித்தது மகிழ்ச்சியான தருணம் .
பல ஆண்டுகளாக , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்களுக்கு திரை அரங்குகளில் பேனர் அமைத்து , பூஜைகள் , மலரலங்காரம் , ஆராதனைகள் செய்து சிறப்பிக்கும்* திரு. ஷிவ பெருமாள் மற்றும் ஈ பாஸ்கரன் தலைமையிலான கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அறக்கட்டளை குழுவிற்கு ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு சார்பில்*நெஞ்சார்ந்த நன்றிகள்
-
" படகோட்டி" திரைப்படத்தில் இடம்பெற்ற " கல்யாணப் பொண்ணு" முழுமையான பாடல்..
திரைப்படத்திலும் இல்லாத முழுமையான 78 Rpm இசைத்தட்டு பதிவு !
தவறாமல் கேட்டு மகிழுங்கள் நண்பர்களே !
இதோ ....
யாரும் பார்க்காத முகத்தை
கேட்காத சுகத்தை
கேளாது தரும் வளையல்
கைகளிலே ஓசை வர
கண்களிலே ஆசை வர
பெண்ணோடு வரும் வளையல்
அவ முன்னழகை சொல்லிக் கொண்டு
பின்னழகை அள்ளிக் கொண்டு
பின்னோடு வரும் வளையல்...
வாலி அவர்கள் இயற்றிய வரிகள்
ஆனால் அன்றைய பாடல் புத்தகத்தில் கூட இந்த வரிகள் இடம் பெறவில்லை என்பது நண்பர்கள் சொன்ன தகவல்...
( அன்றைய தணிக்கை குழுவினர் மேற்குறிப்பிட்ட வரிகளை அகற்றி இருக்கலாம் )
இருப்பினும் அன்றைய இசைத்தட்டு நிறுவனம் இப்பாடலை முழுமையாக தந்தமைக்கு நன்றி தெரிவித்து கொள்வோம் !.......... Thanks.........
-
#தெரியாதது #கடலளவு
சென்னை சத்யா ஸ்டூடியோவில் உரிமைக்குரல் படப்பிடிப்பில் வாத்தியாரைக் காண, தேனி மாவட்டத்திலிருந்து சண்முகவேலு என்ற தீவிர ரசிகர் காணச் சென்ற போது, ""என் கூட நடிக்கிறீயா...'' எனக்கேட்டார்.
"உங்க பக்கத்தில் நிற்கும்போதே, எனக்கு கை, கால் உதறுது; உங்க அன்பே போதும்,' என, அந்த ரசிகர் கூறியதும், அவரைக் கட்டிப்பிடித்து, போட்டோ எடுக்கச் சொன்னார் வாத்தியார்...
பின்னர்,
அருப்புக்கோட்டை வறட்சி நிதி வசூலுக்கு வந்த அவர், மதுரை தமிழ்நாடு ஓட்டலில் தங்கியிருந்த போது, வாத்தியாரைச் சந்திக்க, அந்த ரசிகர் மனைவி குழந்தைகளுடன் காத்திருந்தார்...நிறைய பார்வையாளர்கள் இருந்தபோதும், சண்முகவேலுவை அடையாளம் கண்டு, உதவியாளரிடம் அழைத்து வரச்செய்தார்.
அந்த ரசிகரின் இரு மகள்களுக்கு சத்யா, ராணி என பெயரிட்டு, "சத்யா, எனது தாய், ராணி எனது அண்ணியார்,' எனக் கூறி, அவர் மனைவியிடம் நலம் விசாரித்து, 'என்ன உதவி வேண்டுமானாலும், இந்த அண்ணனிடம் தயக்கமில்லாமல் கேளுங்கள்...' என்றார். வெளியே வந்த சண்முகவேலுவின் மனைவி மிகவும் நெகிழ்ந்து, "கட்சிக்காக, சொத்துக்களை நீங்கள் விற்ற போது, எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது... ஆனால் இந்த கூட்டத்தில், உங்களை அடையாளம் கண்டு பேசி நமக்கு உதவியும் செய்கிறேன்... என்றால்,
#அவருக்காக #நம் #சொத்துக்களை #இழந்தாலும், #பரவாயில்லை,' என்று கண்ணீருடன் கூறினார்...
வெளியே தெரியாத இப்பேர்ப்பட்ட பகட்டில்லா பக்தர்கள் இன்னும் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்...
படித்ததைப் பகிர்கிறேன்...
வாத்தியாரின் மனிதநேயம் 'நமக்குத் தெரிந்தது கையளவு, தெரியாதது கடலளவு'....... Thanks...
-
தமிழகத்தில் வருகின்ற 31-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுப்பு என்று அரசால் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதை பயன்படுத்தி நாம் ஒரு பதிவை வருங்கால சந்ததிகளுக்கு உதவுமே என்று பதிவிடுகிறோம் டாக்டர் புரட்சித்தலைவர் வாழ்ந்த வாழ்க்கை தொகுப்பை இட்டாள் பல ஆண்டுகள் பதிவிடலாம். ஆனால் மிகச் சுருக்கமாக இப்பதிவு இடுகிறோம். காரணம் வரக்கூடிய சந்ததிகளுக்கு சுருக்கமாக பதிவிட்டால் அதைப்பற்றி அவரிடம் பல கேள்விகள் உருவாகும், அதைப்பற்றி தெரிந்து கொள்வோம் என்ற ஆர்வம் உருவாகும் ஆகையால் பெற்றோர்கள் தன் குழந்தைகளுக்கு இப்பதிவை ஒரு கதையாக சொல்லி அவரவர் தன் குழந்தைகளின் மனதில் பதியவைத்து, இவ்வாறான ஒரு மாமனிதன் இவ்வுலகில் வாழ்ந்தார் என்பதை விளக்கிச் சொல்லி நீங்கள் ஒரு நல்ல வழிகாட்டியாக பெற்றோர்கள் இருப்பீர்கள் என்பதை உணர்ந்து இந்த சிறு விடுமுறை நாட்களை புரட்சித் தலைவரோடு இப்பதிவை பதிவிடுகிறோம்.
மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற இவர், ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்றும், ‘எம்.ஜி.ஆர்’ என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். அவருடைய வாழ்க்கையில், நடிப்பும், அரசியலும் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. அவருடைய இளமைக்காலத்திலேயே, பல நாடக குழுக்களில் பிரபலமாக திகழ்ந்தார். அவர் காந்தியின் மீதும் அவரது கொள்கைகள் மீதும் மிகவும் பற்றுடையவராக இருந்ததால், அவருடைய இளம்வயதிலேயே இந்திய நேஷனல் காங்கிரஸில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள், தமிழ் திரையுலகை முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆதிக்கம் செய்தார். பின்னர், திமுக அரசியல் கட்சியுடன் கைகோர்த்தார். ஒரு தமிழ் நடிகர் என்ற மகத்தான புகழ் பெற்றிருந்தாலும், எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் சமமான வெற்றிகரமான அரசியல் வாழ்க்கையையும் அனுபவித்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டப்பின், அவர் தனது சொந்தக் கட்சியான அ.தி.மு.கவை மிகச் சிறப்பாக வழி நடத்தினார். மக்கள் எம்.ஜி.ஆரை மிகவும் நேசிக்க முக்கிய காரணம், அவர் ஏழை மக்களின் இதய தெய்வமாக விளங்கினார். நாட்டின் மாநில முதலமைச்சர் நாற்காலியை ஆக்ரமித்த, முதல் இந்திய திரையுலக பிரமுகர் என்ற பெருமை எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களையே சேரும். ஒரு நடிகராக இருந்து அரசியலில் பதவி அடைந்த போதும், அவர் ஏழைகளின் தோழனாகவும், இல்லாதோருக்குக் கொடையாளியாகவும் விளங்கினார். தனது மனிதநேய பண்புகளால் அன்பு செலுத்தியதால் பெருமளவில் பிரபலமானார்.
பிறந்த தேதி: ஜனவரி 17, 1917
பிறந்த இடம்: நாவலப்பிட்டி, கண்டி, இலங்கை
இறந்த தேதி: டிசம்பர் 24, 1987
தொழில்: நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி
குடியுரிமை: இந்தியா
திரையுலக வாழ்க்கை
எம்.ஜி.ஆர் தனது இளமைப்பருவத்திலேயே, நடிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவர் சிறுவனாக இருந்த போதே அவரது தந்தை இறந்துவிட்டார். அவரது தந்தையின் மறைவுக்குப் பின், குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாமல், பணம் சம்பாதிக்கும் நிர்பந்தம் ஏற்பட்டதால், இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில், தனது பெயரை முதல்முறையாக ‘ஒரிஜினல் பாய்ஸ்’ என்ற நாடக குழுவில் பதிவு செய்தார். அவருடைய சகோதரரும் இந்த குழுவில் உறுப்பினராக இருந்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு, நாடகத்தில் நடிப்பதை விட்டுவிட்டு, 1935ல் தமிழ் திரையுலகில் சேர்ந்தார். 1936ல் ‘சதிலீலாவதி’ என்ற படத்தில் துணை கதாபாத்திரமாக முதல்முறையாக நடித்தார். 1940களில் தான் அவருக்கு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. தமிழ் சினிமாவிலேயே இதுவரை பார்த்திராத வர்ததகரீதியான ரொமாண்டிக் மற்றும் ஆக்க்ஷன் ஹீரோ என்று அவரை உருவாக்கிய படம், ‘இராஜகுமாரி’. இது கலைஞரால் எழுதி உருவாக்கப்பட்டது. 1947ல், இராஜகுமாரி’ திரைப்படம் தமிழக திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பின்னர், தமிழ் திரையுலகம் மூன்று தசாப்தங்களுக்கும் எம்.ஜி.ஆரை முழக்கமிட்டனர். 1956ல், எம்.ஜி.ஆர், திரையுலகில் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் உருவெடுத்தார். அவர் இயக்கிய முதல் படமான ‘நாடோடி மன்னன்’, தமிழ்நாட்டில் பல திரையரங்குளில் ஓடி, பெரிய வெற்றிப்பெற்று, தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றது. ஒரு இயக்குனராக தனது முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவர் இரண்டு படங்களை இயக்கி நடிக்கவும் செய்தார். அவை ‘உலகம் சுற்றும் வாலிபன்’ மற்றும் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ ஆகும். 1971ல் வெளியான ‘ரிக்க்ஷாக்காரன்’ படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததால், எம்.ஜி.ஆர் அவர்களுக்கு, சிறந்த நடிகருக்கான ‘தேசிய விருது’ கிடைத்தது.
விருதுகள் மற்றும் அங்கீகாரம்
1960ல், எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் இந்தியாவின் ‘பத்மஸ்ரீ விருதுக்காகத்’ தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவர் அரசாங்கத்தின் பற்றற்ற நடத்தையின் காரணமாக அதை ஏற்க மறுத்துவிட்டார். ஏனென்றால், விருதில் பாரம்பரிய ஹிந்தி வார்த்தைகளுக்கு பதிலாக தனது தாய்மொழியான தமிழில் இருக்க வேண்டுமென்று அவர் விரும்பினார்.
‘ரிக்க்ஷாக்காரன்’ படத்திற்காக, தனது நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை 1972ல், எம்.ஜி.ஆர் பெற்றார்.
சென்னை மற்றும் உலக பல்கலைக்கழகமும் அவருக்கு ‘முனைவர் பட்டம்’ வழங்கி சிறப்பித்தது.
தமிழ்நாட்டின் சமுதாயத்தின் நன்மைக்காக அவருடைய பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக அவர் இறந்த பிறகு 1988ல் ‘பாரத ரத்னா விருதை’ வழங்கப்பட்டது.
தனிப்பட்ட வாழ்க்கை
எம்.ஜி.ராமச்சந்திரன் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். அவரது முதல் இரண்டு மனைவிகள் நோயின் காரணமாக இறந்துவிட்டனர். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, அவரது மூன்றாவது மனைவியான ஜானகி ராமச்சந்திரன் அவர்கள் அ.இ.அ.தி.மு.கவின் பொறுப்பை ஏற்றார்.
இறப்பு
எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களுக்கு சிறுநீரக பிரச்சினைகள் இருந்தது. சிறுநீரகக் கோளாறு காரணமாக 1984ஆம் ஆண்டு அக்டோபரில், அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் உள்ள டவுன்ஸ்டேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே ஆண்டு, சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொண்டார். இறுதியாக 1987ல் நோய்வாய்ப்பட்டார். டிசம்பர் 24ஆம் தேதி, 1987ல் இயற்கை எய்தினார். எம்.ஜி.ஆருடைய மரணம் தமிழ்நாட்டில் பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கட்டுக்கடங்காத மக்களையும், அதிகளவில் போராடி உயிரிழந்த உணர்ச்சித் தமிழர்களையும் நிர்வகிக்க தமிழக அரசும், போலீஸ் அதிகாரிகளும் கடுமையாக போராடினர். அவரது மறைவுக்குப் பின், அஇதிமுக இரண்டு பிரிவுகளாக பிரிந்தது. ஒன்று அவரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலும், மற்றொன்று ஜே.ஜெயலலிதா தலைமையிலும் தனித்தனி கட்சிகள் உருவாகின. அவரது ‘சத்யா ஸ்டுடியோ’ இப்போது ஒரு பெண்கள் கல்லூரியாக உள்ளது. சென்னை டி.நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டை தமிழக அரசு நினைவு இல்லமாக மாற்றி பராமரித்து வருகிறது.
காலவரிசை
1917 : எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் ஜனவரி ம் தேதி 17 பிறந்தார்.
1936 : தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
1947 : அவரின் முதல் வெற்றிப்படமான ‘ராஜகுமாரி’ வெளியானது.
1953 : அரசியல் கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தில் சேர்ந்தார்.
1956 : முதல் முறையாக திரைப்பட இயக்குனராக மாறினார்.
1960 : பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுத்து விட்டார்.
1962 : மாநில சட்ட மன்றத்தின் உறுப்பினரானார்.
1967 : தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார்.
1967: எம். ராதாவால் கழுத்தில் சுடப்பட்டார்.
1969 : திமுக பொருளாளராக மாறினார்.
1972 : தனது சொந்த அரசியல் கட்சியான, அ.தி.மு.கவை உருவாக்கினார்.
1972 : ‘ரிக்க்ஷாக்காரன்’ படத்திற்காக தேசிய விருதை வென்றார்.
1977 : முதல் முறையாகவும், மூன்று முறை தொடர்ந்தும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார்.
1984 : சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார்..
1987 : டிசம்பர் 24ஆம் தேதி,1987ல் இறந்தார்.
1988 : இறப்பிற்கு பின், பாரத ரத்னா விருதை அரசு அவருக்கு வழங்கியது.......... Thanks.........
-
-
தினகரன் வெள்ளிமலர்*-20/3/20
-------------------------------------------------------
old is gold*- ம. சே. மயில், சாத்தான்குளம்*
எம்.ஜி.ஆர். பாட்டுன்னா*சும்மாவா*
--------------------------------------------------------
அடிமைப்பெண் படத்திற்காக ஒரு* சிச்சுவேஷனுக்கு ஏகப்பட்ட பாடலாசிரியர்கள் எழுதியும் , எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லை .* அவர் நிராகரித்தது மொத்தம் 43 பாடல்கள் .* அதன் பிறகே, ஆலங்குடி சோமு எழுதிய பாடலை ஒப்புக் கொண்டார் .அந்த பாடல்தான் "தாயில்லாமல் நானில்லை "* இதே ஆலங்குடி சோமு " எங்க வீட்டு பிள்ளை " படத்திற்கு , கண்களும் காவடி சிந்தாகட்டும் பாடலை வெறும் ஏழே நிமிடங்களில் எழுதி சரித்திர சாதனை படைத்தார் .* "நேற்று இன்று நாளை " படத்தில் இடம் பெற்ற "தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று " பாடலுக்காக மொத்தம் 103 மெட்டுகள் போடப்பட்டதாம்*
-
தண்டோரா* வாய்ஸ் வார இதழ் - 03/03/2020
------------------------------------------------------------------------
தண்டோரா பதில்கள் :
----------------------------------
நான்கு படங்கள் ஓடிவிட்டால் தங்களையும் எம்.ஜி.ஆர். என நினைத்து* அரசியல்* கனவு காண* ஆரம்பித்து விடுகிறார்களே நடிகர்கள் ?
வரலாறு தெரியாதவர்கள் அவர்கள் ..பேரறிஞர் அண்ணாவே, தம்பி , நீ நிதி அளிக்க* வேண்டாம் .* உன் முகத்தைக் காட்டு, மக்கள் வாக்குகளை கொட்டுவார்கள் என்று கூறியது வரலாறு .* அதன் பிறகு கருணாநிதி முதல்வராக தேர்வு ஆனதற்கு எம்.ஜி..ஆர் தான் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும் .**அதாவது கிங் ஆவதற்கு முன்பே கிங் மேக்கராக இருந்தவர் எம்.ஜி.ஆர்.*
இன்னொரு விஷயம் .* அவரது படத்தைப் பார்த்த ரசிகர்கள் மட்டுமல்ல .*மற்ற பொதுமக்களும் எம்.ஜி.ஆர். மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள் .* அதாவது திரையை மீறிய மக்கள் செல்வாக்கு அவருக்கு இருந்தது .**
இதையெல்லாம் உணராமல் , பகல் கனவு காண்கிறார்கள்* இந்த இலவு காத்த கிளிகள் .*
-
தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படங்கள் ஒளிபரப்பு*
--------------------------------------------------------------------------------------------------------------------------------
14/03/20-* *சன்லைப்* -காலை 11 மணி* - உழைக்கும் கரங்கள்*
14/03/20 - முரசு* - இரவு* 7 மணி -அலிபாபாவும் 40 திருடர்களும்*
17/03/20* *- முரசு* *இரவு 7 மணி* - நல்ல நேரம்*
18/03/20* - சன்லைப் - காலை 11 மணி - திருடாதே*
19/03/20* - முரசு* -இரவு 7 மணி* - ஆனந்த ஜோதி*
21/03/20* - சன்லைப் - காலை 11 மணி - தாழம்பூ*
-
புர*ட்சித்த*லைவ*ர் 1977ல் திரையுலகை விட்டு விலகி முத*ல்வ*ரானார். அப்போதும் அவ*ர்தான் நெ.1. அதிகப*ட்ச ஊதிய*மும் பெற்றார். அப்போது மட்டும் அவ*ர் கைவ*ச*ம் இருந்த ப*ட*ங்க*ள் எந்த ந*டிக*ருக்கும் இருந்ததில்லை. அதன் ப*ட்டிய*ல் இதோ!
1. அண்ணா நீ என் தெய்வ*ம்
2. ந*ல்லதை நாடு கேட்கும்
3. நானும் ஒரு தொழிலாளி
4. மக்கள் என் ப*க்க*ம்
5. தியாக*த்தின் வெற்றி
6. இதுதான் ப*தில்
7. ச*மூக*மே நான் உனக்கே
சொந்த*ம்
8. உன்னை விடமாட்டேன்
9. இமய*த்தின் உச்சியிலே
10. கேப்ட*ன் ராஜா
11. உங்க*ளுக்காக நான்
12. அண்ணா பிற*ந்த நாடு
13. ஊரே என் உற*வு
14. கிழ*க்கு ஆப்பிரிக்காவில் ராஜு
15. எல்லைக்காவ*லன்
16. மீண்டும் வ*ருவேன்.
17. புர*ட்சிப்பித்த*ன்
இவ*ற்றில் ந*ல்லதை நாடுகேட்கும் மற்றும் அண்ணா நீ என் தெய்வ*ம் ஆகிய ப*ட*ங்க*ளின் காட்சிக*ள் வேறு இயக்குனர்க*ளின் ப*ட*ங்க*ளில் இட*ம்பெற்று வெளிவ*ந்த*து.
இவை த*விர எம்ஜிஆர் மறைந்த* பிற*கு அவ*ர*து வாழ்க்கை வ*ர*லாற்றை ப*திவு செய்யும் வ*கையில் காலத்தை வென்ற*வ*ன், ந*மது தெய்வ*ம், த*ர்ம தேவ*ன் ஆகிய ப*ட*ங்க*ள் வெளியாகி உள்ளன.
இன்னமும் அவ*ர் ப*ழைய ப*ட*ங்க*ளில் 80 ச*த*வீத*ம் தியேட்ட*ர்க*ளில் வெளியிட*ப்ப*ட்டு வ*சூலை வாரி கொடுக்கின்ற*ன.
புர*ட்சித்த*லைவ*ர் ச*ரித்திர நாய*க*ர் மட்டுமல்ல! சாத*னை நாய*கரும் ஆவார்!, சகாப்தம் படைத்தவரும் ஆவார்......... Thanks.........
-
M G R
வீரம் திரையில் மட்டும் அல்ல நிஜத்திலும் நடத்தி காட்டியவர் எம்ஜிஆர்
ரயில் போராட்ட கைதான பின் வந்து இறங்கிய கருணாநிதி கூட்டத்தில் திணற எம்ஜிஆர் அலேக்கா தோள் மீது கருணாநிதியை தூக்கி வெளியே கொண்டு வந்தார் இதில் எம்ஜிஆரின் விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்சு தொலைந்து விட்டது
வெளியூர் சென்று விட்டு காரில் திரும்பி கொண்டிருந்த எம்ஜிஆர் கார் வழி பறி கும்பலால் மறிக்க படுகிறது கூச்சலோடு காரை நெருங்க எம்ஜிஆர் இறங்கி முறைப்போடு நோக்க கும்பல் மொத்தமும் கார் வெளிச்சத்தில் எம்ஜிஆரை கண்டு வாத்தியாரே உங்களயைா மறித்தோம் மன்னித்து விடுங்கள் என காலில் விழ அவர்களை எழப்பி வழி பறி செய்வது தவறு ஏதாவது ஒரு தொழில் செய்து பிழைங்கள் என ஒரு கணிசமான தொகையை கொடுக்கிறார் எம்ஜிஆர்
எந்த வகையிலும் எவராலும் எம்ஜிஆரை வெல்ல முடியாது என்ற நிஜ வீரனாக எம்ஜிஆர் இருந்ததால் இன்றும் எம்ஜிஆர்புகழ் கொடிகட்டி பறக்கிறது
வாழ்க எம்ஜிஆர்புகழ்............ Thanks.........
-
பாட்டாலே*புத்தி சொன்ன வாத்தியார் - எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்*
----------------------------------------------------------------------------------------------------------
வின்*டி.வி.யில் நேற்று (21/03/20) பிற்பகல் 3.30 மணிக்கு*"பாட்டாலே*புத்தி சொன்ன*வாத்தியார் " என்கிற*நிகழ்ச்சியில், உலகத்திலேயே, திரைப்படங்களின் மூலம் மக்களுக்கு*தேவையான சமூக*சீர்திருத்த*கருத்துக்கள், சிந்தனை தரக்கூடிய கருத்தான*வசனங்கள், முற்போக்கான இலக்கிய, இலக்கண*நயம் கலந்த*பாடல்கள்*தந்தவர்*மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஒருவரே. அதனால்தான் எல்லோருக்கும் அவர் வாத்தியார் .* விவசாயி, தொழிலாளி, படகோட்டி,மீனவ*நண்பன், காவல்காரன், வேட்டைக்காரன், ரிக்ஷாக்காரன் , என்று பாமர*மக்களுக்கும், ஏழை எளியோர்*துயர் துடைக்கும்*வகையிலான பாத்திரங்களை ஏற்று திரைவானில்*ஜொலித்தவர் .* இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் , இவர் போல யார் என்று ஊர் சொல்ல*வேண்டும் என்பது*போல அன்றும், இன்றும், என்றும் அவரது*பாடல்கள்*காலத்தால் அழியாதவை .வாழ்ந்தவர்கள் கோடி*, மறைந்தவர்கள் கோடி.* ஆனால் இடையிலே*திரைதுறையில் , நடிப்புலகில் ஆதிக்கம் செலுத்தியவர் ஒரு சிலரே.* அந்த ஒரு சிலரில் மன்னாதி*மன்னன், ராஜ*ராஜன், ஆயிரத்தில் ஒருவனாக*மக்களின்*இதய*சிம்மாசனங்களில் வீற்றிருந்ததோடு, பத்தாண்டுகள்*கோட்டை கொத்தளத்தில் பொற்கால*ஆட்சி புரிந்து சாதனை, சரித்திரம், சகாப்தம்*படைத்த*எட்டாவது வள்ளல், ஏழை பங்காளன்*எம்.ஜி.ஆர். என்றால் மிகையாகாது*.* கவிஞர்கள் எல்லா*நடிகர்களுக்கும்தான் பாடல்கள்*எழுதினார்கள் புகழ் பெற்றார்கள் . ஆனால் அந்த கவிஞர்கள் எழுதும்*பாடல்களையே திருத்தி*எளிதில் மக்களை*சென்றடையும் வகையில்*எம்.ஜி.ஆர். எனும் வாத்தியார்*செயல்பட்டார். அத்துடன் தான் ஆட்சி பீடத்தில்*அமர்ந்ததும்*, அந்த பாடல்களுக்கு தகுந்தாற்ப்போல்* பல்வேறு நல திட்டங்களை*மக்கள் பாராட்டும்*வகையில்*செயல்படுத்தினார் . *அதனால்தான் அவரது*பாடல்கள்*சாகாவரம்*பெற்று திகழ்கின்றன .தேர்தல் காலங்களில் பல கட்சியினருக்கும் பொருத்தமாக*அமைவதால்* அவர்கள் அதை பயன்படுத்தி கொள்கிறார்கள்.* அத்தகைய*பாடல்களில் நேரம் காலம் கருதி*சிலவற்றை மட்டுமே*நேயர்களுக்கு ஒளிபரப்புகிறேன் .
1.* ஓடி*ஓடி*உழைக்கணும்* -நல்ல நேரம்*
2.காடு வேளைஞ்சென்ன* மச்சான் - நாடோடி மன்னன்*
3.உன்னை அறிந்தால்* நீ - வேட்டைக்காரன்*
4. நான் ஏன் பிறந்தேன்* -நான் ஏன் பிறந்தேன்*
5.தாயில்லாமல் நானில்லை* - அடிமைப்பெண்*
6.தூங்காதே*தம்பி தூங்காதே*- நாடோடி மன்னன்*
7. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - தெய்வத்தாய்*
8.சின்னப்பயலே , சின்னப்பயலே - அரசிளங்குமரி*
9.புத்தன்*இயேசு காந்தி*பிறந்தது*-சந்திரோதயம்*
10,எத்தனைகாலம்தான் ஏமாற்றுவார் -மலைக்கள்ளன்*
11.திருடாதே*பாப்பா திருடாதே*- திருடாதே*
12.கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி*
13.தாய் மேல் ஆணை* - நான் ஆணையிட்டால்*
14..நான் ஆணையிட்டால் - எங்க வீட்டு*பிள்ளை*
15..அச்சம் என்பது*மடமையடா*- மன்னாதி*மன்னன்*
16.இறுதியாக வாசலிலே*இரட்டை இலை* கோலம்*இடுங்கள்*என்கிற*பாடல்*தேர்தல் காலத்தில், அனைவரும் வானொலி, தொலைக்காட்சிகளில் பேட்டி அளிக்கும்போது ,எம்.ஜி.ஆர். தனது முறை வரும்போது*கட்சியின்*சின்னத்தை*பிரபல படுத்தும்*நோக்கில்*இந்த பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்தார் என்று*கூறி முடித்தார்*.அத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது .
-
-
-
தீர்க்கதரிசி 2:- இன்று கொரோனா வைரஸ் னு உலகம் முழுவதும் கத்துகிறோம் அல்லவா , அன்றே நம் தலைவர் தனது 100 வது படமான ஜெமினியின் ஒளிவிளக்கு படத்திலேயே காட்டியிருப்பார் , அவர் இருக்கும் ஊருக்கு மர்மகாய்ச்சல் ஒன்று பரவும் அந்த ஊர்லேர்ந்து எல்லாரும் வேற ஊருக்கு போய்விடுவாங்க தலைவர் அப்ப தான் சௌகார்ஜானகி வீட்டுக்கு போய்பார்க்கும் அந்த மர்ம காய்ச்சல் வந்து உருக்குலைஞ்சு போயிடுவாங்க , தலைவர் தன்னோட பாதுகாப்புல கண்காணிச்சு வைத்தியம் பார்ப்பார், அதே போல் அக் கிராமத்திலே வயதான பாட்டி அந்த மர்ம காய்ச்சல் வந்து இறந்து விடுவார்கள், தலைவரோ தீ விபத்தில உயிர் பிழைத்து படுத்திருப்பார், நமக்கா படம் பார்க்கும் போது வயிற்றில் ஈரக்குலையை பிசையும், இதயமோ படபடக்கும் ஏனென்றால் படங்களில் கூட அவர் சாக கூடாது என்பது தான் நமது ஆசை அதே போல் அந்த காட்சில சங்கு ஊதும் அப்பா சௌகார் வந்து நமது தெய்வத்து கிட்ட சொல்லுவாங்க அந்த பாட்டி இறந்துட்டாங்க உடனே தலைவர " அம்மா" னு வாய் விட்டு அலறுவார் அப்பப்பா அந்த சீன்ல கண்களே குளமாகிடும். அதனால் இந்த மர்மகாய்ச்சலையும் முன்பே சொன்னவர் எங்க தலைவர் நம்ம தலைவர் தான் தீர்க்கதரிசி ............. Thanks.........
-
இன்றைய நிலைமையை நினைத்து பார்க்கையில், அன்றே சக்கரவர்த்தி மக்கள் திலகம் கனிந்த விஷ ஜுரம் தனது மகத்தான இணையேயில்லா வெற்றி காவியமாம் "ஒளிவிளக்கு" முன்னுதாரணமாக திகழ்கிறது...
-
மாமனிதர் எம் .ஜி .ஆர் .
நூற்றாண்டு கடந்தும் இன்றும் நினைக்கப்படுகிறார்
நாடே கொண்டாடி மகிழ்கின்றது எம் .ஜி .ஆரை !
ஏழ்மையில் பிறந்து வளர்ந்த காரணத்தால்
ஏழ்மை ஒழிக்க முயற்சிகள் செய்தார் !
கொடுத்துக் கொடுத்து சிவந்த கரங்கள்
கண்ணால் கண்ட காட்சிகள் ஆனது !
தோன்றின் புகழோடு தோன்றுக என்று
திருக்குறளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் !
மனிதநேயத்தின் சின்னமாக வாழ்ந்து சிறந்தவர்
மக்கள் மனங்களில் என்றும் வாழ்பவர் !
நல்லவனாகத் திரைப்படத்தில் நடித்தது மட்டுமன்றி
நல்லவனாகவே வாழ்க்கையில் வாழ்ந்து காட்டியவர் !
ஈழத்தமிழரின் விடுதலையை பெரிதும் விரும்பியவர்
ஈழத்தின் விடுதலைக்கு பெரிதும் உதவியவர் !
ஏழைப்பங்காளன் காமராசரின் மத்திய உணவுத்திட்டத்தை
ஏழைமாணவர் அனைவருக்கும் சத்துணவாக விரிவாக்கியவர் !
வெற்றி மாலைகள் பெற்றுக் குவித்தவர்
வேதனைகள் நீக்கி மகிழ்வைத் தந்தவர் !
என்னுடைய முதல்வர் நாற்காலியில் ஒருகால்
என்பது பட்டுக்கோட்டையின் பாடல்கள் என்றவர் !
நன்றி மறக்காத உயர்ந்த உள்ளம் பெற்றவர்
நாடு போற்றும் பொன்மனச் செம்மல் ஆனவர் !
பொற்காலம் படைத்தது தமிழா வரலாற்றின்
பொன் எழுத்துக்களில் இடம் பிடித்தவர் !
விருதுகள் பல பெற்றபோதும் என்றும்
விவேகமாகச் சிந்தித்து எளிமையாய் வாழ்ந்தவர் !
ஏழைகளின் கண்ணீர் துடைக்க முதல்வராகி
எண்ணிலடங்காத திட்டங்களை நிறைவேற்றியவர் !
திரைப்படத்தில் மிகமிக நன்றாக நடித்தவர்
தமிழக மக்களிடம் என்றும் நடிக்காதவர் !
புன்னகை மன்னராக பூவுலகில் வாழ்ந்தவர்
புரட்சித் தலைவர் எனும் பட்டம் பெற்றவர் !
இன்னும் பல நூற்றாண்டுகள் வாழ்வார் எம் .ஜி .ஆர் .
என்றும் அழிவில்லை எம் .ஜி .ஆர் . புகழுக்கு !
பொன்மனச் செம்மல் எம் .ஜி .ஆர் ! கவிஞர் இரா .இரவி
தனித்தமிழ் ஈழத்தை ஆதரித்த
தனிப்பெரும் தலைவர் எம் .ஜி .ஆர்
ஈழத்திற்கு நிதி உதவி தந்து வளர்த்தவர்
ஈழத்தமிழரின் நெஞ்சம் நிறைந்தவர்
சிங்களக் கொடுமை உணர்ந்தவர்
சிங்களம் வீழ்ந்திட விரும்பியவர்
மதிய உணவை சத்துணவாக விரிவாக்கியவர்
மாணவர்கள் பள்ளி வரக் காரணமானவர்
கோடிகளைக் கொள்ளை அடிக்காதவர்
குடும்பத்திற்குச் சொத்துச் சேர்க்காதவர்
திரையில் மட்டுமே நடித்தவர்
நிஜத்தில் என்றுமே நடிக்காதவர்
விலைவாசியை கட்டுப்பாட்டில் வைத்தவர்
விவேகமாகச் சிந்தித்துச் செயல்படுத்தியவர்
அவரால் வாழ்ந்தவர்கள் கோடி
அவரால் வீழ்ந்தவர்கள் மிகச் சிலர்
உலகம் வியக்கும் வண்ணம் மதுரையில்
உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியவர்
உயிருள்ளவரை முதல்வராய் இருந்தவர்
உன்னத ஏழைகளின் இதயத்தில் வாழ்பவர்......... Thanks.........
-
#ஒருதாய்மக்கள்நாமென்போம்...
#உன்னையறிந்தால்நீஉன்னையறிந்தால்.
#ஏமாற்றாதேஏமாற்றாதேஏமாறாதேஏமாறாதே..
#இன்னொருவர்வேதனைஇவர்களுக்குவேடிக்கை..
#தொட்டுவிடதொட்டுவிடதொடரும்..
#தைரியமாகச்சொல்நீமனிதன்தானா..
#நான்பாடும்பாடல்நலமாகவேண்டும்..
மேற்கண்ட தலைவரின் பாடல்கள் இப்போதுள்ள கொரோனா வைரஸ் பரவும் சூழ்நிலைக்கு ஏற்ற பாடல்களாக கருதுகிறேன்,
நண்பர்களே, உறவினர்களே எவ்வளவு முக்கிய காரணமாக இருந்தாலும் மற்றவர்களை சந்திப்பதை தவிர்த்திடுங்கள்,
உங்களையும், உங்கள் சந்ததிகளையும் காத்திடுங்கள், அனைவரும் அவரவர் இருப்பிடத்திலேயே இருந்துகொள்ளுங்கள்,
அலட்சியம் வேண்டாம்........... Thanks...
-
இன்று பகல் sunlife சேனலில் புரட்சி நடிகர் வழங்கிய என்றும் எல்லோரும் ரசிக்கும் "நம்நாடு" ஓளி பரப்பப்பட்டது. நாளை காலை "சந்திரோதயம்" ஒளிபரப்பாகிறது.........
-
நக்கீரன் வார இதழ் --18/03/20
--------------------------------------------------
அடுத்த கட்டம் -அந்த அடையாளம் கடைசிவரை தேவைப்பட்டது -பழ கருப்பையா*
----------------------------------------------------------------------------------------------------------
அண்ணாவும் , கருணாநிதியும், கண்ணதாசனும், எம்.ஜி.ஆரும்* திரைத்துறை வழியே திராவிட இயக்கத்தை மிக எளிமையாகவும் , வலிமையாகவும் எடுத்துச் சென்றுள்ளனர் என்பது வரலாறு .
அஞ்சாமை திராவிடர் உடமையடா* என்னும் கண்ணதாசன் வரிகள் , எம்.ஜி.ஆர். நடிப்பில், அடிமட்ட கிராமமான சாலைகளே இல்லாத பட்டி, தொட்டி வரை போய் சேர்ந்தது .**
அண்ணாவும் , கருணாநிதியும், கண்ணதாசனும், எம்.ஜி.ஆரும்* திரைத்துறை வழியே திராவிட இயக்கத்தை மிக எளிமையாகவும் , வலிமையாகவும் எடுத்துச் சென்றுள்ளனர் என்பது வரலாறு .
அஞ்சாமை திராவிடர் உடமையடா* என்னும் கண்ணதாசன் வரிகள் , எம்.ஜி.ஆர். நடிப்பில், அடிமட்ட கிராமமான சாலைகளே இல்லாத பட்டி, தொட்டி வரை போய் சேர்ந்தது .**
வேலூரில் எம்.ஜி.ஆரின் செல்வாக்கோடு மோதி ஈ .வே .கி.சம்பத் நிலைகுலைந்து வெளியேறும் நிலைக்கு உள்ளானார் .* அண்ணா சம்பத்திடம் உருகினார் .**சம்பத்தின் அளப்பரிய தேவையை உணர்ந்திருந்தார் .* கசிந்தார் .* கண்ணீர் மல்கினார் .* ஆனால் நடப்பு அரசியலில் எம்.ஜி.ஆரின் பயன்பாடு (utility)இழப்பதற்குரியது இல்லை என்பதில் அண்ணா திண்ணமாக இருந்தார் .**
சம்பத் தன தமிழ் தேசிய நிலைப்பாட்டில் அவர் ஊன்றி நின்று இருந்தால் , அண்ணாவுக்கு மாற்று தலைவராக உருவாகி நிலைபெற்றிருப்பார் .* அவர்*கோபதாபங்களில் இந்திய தேசிய அரசியலில் போய்க் கரைந்து தனக்குரிய உயரத்தை இழந்துவிட்டார் .**
வழவழப்பான நெடுஞ்செழியனோ, தன்னை பெரிதும் வருத்திக் கொள்ளாத*அன்பழகனோ தலைமைக்கான பந்தய மைதானத்தை அடைய போவதில்லை .
ஆகவே, எஞ்சியவர்கள் இருவர்தாம் .* ஒருவர் கருணாநிதி. இன்னொருவர் எம்.ஜி.ஆர் .* கருணாநிதி முதல்வராவதற்கு பின் வலிமையாக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். தான் .* ராமாவரம் தோட்டம்தான் அண்ணாவின் வழித்தோன்றலை தீர்மானித்தது .*
கருணாநிதி முதல்வராகிவிட்டார்.* கட்சியிலும், ஆட்சியிலும் முதல் நிலைதான் அந்நாள் அது தன்னுடைய வலிமையினால் மட்டுமே அடைந்த இடம் இல்லை என்பதனால் அவருக்குள் ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருந்தது .
மாடு தன்* போக்குக்கு போக முடியாதவாறு அதன் கழுத்தில்* ஒரு கட்டை கட்டி விடப்படுவது போல், எம்.ஜி.ஆர். என்னும் கட்டை கழுத்தை விட்டு அகலாதவரை தன்னுடைய முதலிடம் பெயரளவில்தான் என்பது கருணாநிதிக்குத் தெரிந்து இருந்தது ..* பெயருக்கு முதல்வராக இருக்க எடப்பாடி*அல்லவே*கருணாநிதி .
அதே நேரத்தில் ராமாவரம் தோட்டத்தின்* தயவினால்* முடிவு செய்யப்பட பதவிதான்*அது .என்கிற எண்ணமும் எம்.ஜி.ஆருக்கு*கொஞ்சமும் குறையாமல் இருந்தது .
மோதலுக்கு*நாள்* குறிக்கப்படுவது இயற்கைதானே .* எம்.ஜி.ஆர். வெளியேற்றப்பட்டார் .* அண்ணா*எதை செய்ய தயங்கினாரோ , அதை கருணாநிதி செய்து முடித்துவிட்டார் .**
அதனுடைய விளைவு கருணாநிதி 14 ஆண்டுகள் வனவாசம்*செல்ல*நேரிட்டது*.* ஆட்சி வளையத்திற்கு வெளியே, அவர்* அவ்வளவு காலம் தாக்குப்*பிடித்து தன்னுடைய*கட்சியையும், தாக்கு பிடிக்க செய்ததுதான்*கருணாநிதியின் தனித்திறமை .* அவருக்குள்ள நிகரற்ற*தலைமைக்*கூறு .* ஆனால் காலம் சம்பத்திற்கு எதிராக*எம்.ஜி. ஆரைத்தான்* தாங்கியது.* அதுபோல*கருணாநிதிக்கு எதிராகவும் எம்.ஜி.ஆரைத்தான்* தாங்கியது*.**
திராவிட இயக்க நாட்காட்டி போடுவார்கள் .* அந்த காலத்தில் அந்த ஐம்பெருந்தலைவர்கள் படம் போட்டிருக்கும் .* அதில்*எம்.ஜி.ஆர். படம் இருக்காது .திராவிட இயக்கத்தின் கேள்விக்கு அப்பாற்பட்ட (பெரியாரும்*அப்படிதான்*) தலைவராக*அண்ணா இருந்தார் .**
கேள்விக்கு உட்பட்டவராக அதே சமயத்தில் சம்பத்தாலும் , கருணாநிதியாலும் வெல்ல முடியாத*தலைவராக*எம்.ஜி.ஆர். இருந்தார் .* என்பது*அறிவியக்கத்தின் வியப்புதானே*.**
*வெறும் திரைக்கவர்ச்சி* அதற்கு காரணமாக*முடியாது*.அது அவருக்கு*அடித்தளம் அமைத்துத்*தந்திருந்தாலும் , அவரிடமும் இயற்கை யான ஒரு தலைமைத்துவம் இருந்திருக்கிறது என்பது*ஒத்துக்*கொள்ள வேண்டிய விஷயம் அல்லவா .**
-
மூன்று பேர்களின் மறைவு தன்னை*மிகவும் பாதித்ததாக*மெல்லிசை மன்னர்*எம்.எஸ்.விஸ்வநாதன் தான் மறைவதற்கு முன்பு தெரிவித்திருந்தார்*
------------------------------------------------------------------------------------------------------------------------------
*அவர்கள்* பின்வருமாறு :
1. தனது*தாய் ,* *2.கவிஞர் கண்ணதாசன் .* * 3.மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.**
-
குமுதம் வார இதழ் -25/03/2020
--------------------------------------------------
நேற்று இன்று நாளை படத்திற்காக எம்.எஸ்.வியை ஒரு பாட்டுக்காக பல மெட்டுகள் போட* வைத்த எம்.ஜி.ஆர்.*
--------------------------------------------------------------------------------------------------------------------
நேற்று இன்று நாளை படம் , நடிகர் அசோகன் சொந்தமாக தயாரித்தது . ஒரு குறிப்பிட்ட பாட்டுக்கான மெட்டை மாற்றி மாற்றி போட்டுக் கொண்டேயிருந்தார் எம்.எஸ். வி.* ஒவ்வொரு மெட்டையும் அசோகன் விசுவிடமிருந்து கொண்டுபோய் எம்.ஜி.ஆருக்கு போட்டு காட்டுவார் .* ஓ.கே. ஆகாது . இப்படி பல மெட்டுகள் போட்டாயிற்று .
ஒரு நாள் மெட்டை வாங்கி கொண்டு வழக்கப்படி தோட்டத்துக்கு போனார் அசோகன் .* திரும்பி வந்து விசுவிடம் தலைவருக்கு மெட்டு பிடிக்கவில்லை என்றதும் விசுவுக்கு கோபம் வந்துவிட்டது .**
என்னாலே இனிமே இதுக்கு ட்யூன் போட முடியாது .* இந்த பாட்டுக்கு மட்டும் தோட்டத்திலேயே எம்.ஜி.ஆரை வைத்து* ட்யூன் போட சொல்லி, அவர் கிட்டேயே ஓ.கே. வாங்கிடுங்க என்றார் .
சில மாதங்கள் கழித்து, ஒரு ட்யூனை ஓ.கே. செய்து எம்.ஜி.ஆர். விசுவிடம் ரகசியமாக சொன்னார் .* விசு. உன் திறமை மீது எனக்கு அபார நம்பிக்கை உள்ளது* *ஆகவே ஒவ்வொரு ட்யூனும் நல்லாத்தான் போட்டிருந்தே .* நான் முதல்லேயே ஓ.கே. பண்ணியிருந்தா* உடனே படப்பிடிப்பு நடத்தணும்னு தேதி கேட்டு என்னை நச்சரிப்பாங்க .* எனக்கு கால்ஷீட் தருவதற்கு வேறு தேதியே இல்லை .* இதற்காகத்தான் இந்த தாமதம் .என்று சமாதானம் சொன்னார் .
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. நூலில் இருந்து . *
-
எம்.ஐி.ஆரும், சரோஐாதேவியும் இணைசோ்ந்து சுமாா் 10 ஆண்டுகளில் 26 படங்களில் நடித்திருக்கின்றனா். இந்த இணை நடிப்பில் வெளிவந்த கடைசி சில படங்களில் ஒன்று பத்மினி பிக்சா்ஸ் சாா்பில் இயக்குநா் பந்தலு தயாாித்த 'நாடோடி'.
இப்படத்தில்தான் நடிகை பாரதி தமிழ்த் திரை உலகிற்கு அறிமுகமானாா். இப் படத்தில் பல பாடல்கள் நம் காதுகளுக்கு இனிமை சோ்த்தன.
கவிஞா் வாலி இப்படத்திற்காக ஒரு பாடலை இயற்றி மக்கள் திலகத்திடம் வாிகளை வாசித்து காட்டினாா்.
புரட்சி தலைவா் "இது என்ன சாித்திரப் பாடலைப் போலிருக்கிறது" எனறு சொல்லி பாடலை நிராகாித்தாா். ஆனால் அழகான அா்த்தமுள்ள அவ்வாிகளை வீணாக்காமல் இசையமைப்பாளா் கே.வி.மகாதேவனிடம் பாடி காட்டினாா் கவிஞா் வாலி.
இசையமைப்பாளருக்கு பிடித்துப் போக, அப்போது அவா் இசையமைத்துக் கொண்டிருந்த எம்.ஐி.சக்கரபாணியின் சொந்த தயாாிப்பான 'அரச கட்டளை' எனும் சாித்திர படத்தில் சோ்த்து கொண்டாா்.
'நாடோடி' படத்திற்கு எழுதப்பட்டு 'அரச கட்டறை' யில் சோ்த்துக் கொள்ளப் பட்ட அந்தப் பாடல் "புத்தம் புதிய புத்தகமே"............... Thanks.........
-
-
-
-
-
-
-
தண்டோரா வாய்ஸ் வார இதழ் -03/03/2020
--------------------------------------------------------------------
பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் மிக சுவையானவை மட்டுமல்ல .* அனைவருக்குமான பாடமும் கூட .* அவை , பொன்மன சம்பவங்கள் என்கிற தலைப்பில் தொடர்ந்து நமது இதழில் வெளியாகும் .
எம்.ஜி.ஆர். அவர்களின் எண்ணங்களை தெரிந்து கொள்ளும் வகையில் அவர் அளித்த பேட்டி .முதல் அத்தியாயத்தில் வெளியாகிறது .* இதன் கூடுதல் சிறப்பு .*எம்.ஜி.ஆரை பேட்டி கண்டவர்* முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா* அவர்கள்.*1968ம் ஆண்டு பொம்மை சினிமா மாத இதழில் வெளியான பேட்டி இது .
கேள்வி :* அந்த கட்சி தலைவர்களில் நீங்கள் யாரிடம் ரொம்பவும் நெருங்கி பழகி இருக்கிறீர்கள்*
பதில்: அந்த அளவுக்கு அப்போது நான் வளர்ந்திருக்கவில்லை .* அதாவது நான்கு பேர் என்னை தெரிந்து கொள்ளுமளவிற்கு விளம்பரம் பெற்றிருக்கவில்லை .
கேள்வி : தி.மு.க. வில் எந்த ஆண்டு சேர்ந்தீர்கள் ?
பதில் : 1952ம் வருடம்* தி.மு.க. வில் சேர்ந்தேன் .
கேள்வி :தி.மு.க. வில் சேர காரணம் என்ன ?
பதில் : எனது காந்திய வழி கொள்கைகள் அண்ணாவினால் உருவாக்கப்பட்ட தி.மு.க.வில்* இருப்பதை அறிந்து சேர்ந்தேன் .
கேள்வி : உங்களை இந்த கட்சியில் செரித்த பெருமை யாருக்கு உண்டு?
பதில் : என்னை யாரும் சேர்க்கவில்லை .* அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன் , என்.வி. நடராசன் , போன்றவர்களிடம் என்னை அழைத்து சென்று அறிமுகப்படுத்திய பெருமை நாடகமணி டி.வி. நாராயணசாமி ஒருவருக்கே உண்டு .
கேள்வி: உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா ?
பதில் : நிச்சயமாக உண்டு*.
கேள்வி : நீங்கள் கோவிலுக்கு போனதுண்டா ?
பதில் : நிறைய. திருப்பதிக்கு இரண்டு முறை சென்றுள்ளேன் .* முதல் தடவை நான் திருப்பதிக்குபோய்* வந்தபோது எனக்கு 12 அல்லது* 13 வயதிருக்கும் .நாடக கம்பெனியில் அப்போது நான் நடித்து வந்தேன் .* இரண்டாவது மர்மயோகி படம் வெளியானபோது இரண்டாவது தடவை போனபோதுதான் திருப்பதியை பொறுத்தவரை கடைசியானது .* அதற்கு பிறகும் வேறு பல கோவில்களுக்கு சென்றுள்ளேன் .
கேள்வி : ஏதேனும் பிரார்த்தனை செய்துகொண்டு அதை நிறைவேற்ற போயிருந்தீர்களா ?
பதில் : பார்க்க வேண்டும் என்ற ஆவல்.* பக்தி, பிரார்த்தனை எதுவும் நான் செய்து கொள்ளவில்லை .
கேள்வி : உங்கள் தாயார் எந்த கடவுளை வழிபட்டு* வந்தார் ?
பதில் : எங்கள் தாயார் இரண்டு கடவுள்களை வணங்கி வந்தார் .* ஒன்று விஷ்ணு.*நாராயணன் .* அதன் காரணமாக திருப்பதி வெங்கடாசலபதியை வணங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருந்தார் . குல தெய்வமாக வணங்கி வந்தது காளியை .
கேள்வி : வீட்டைவிட்டு புறப்படும் முன்பு யாரை வணங்கிவிட்டு வருகிறீர்கள் ?
பதில் :* என் பூஜை அறையில் என் தாய், தந்தை , மகாத்மா காந்தியடிகள் என் வாழ்க்கை துணைவியின் தாய் தந்தையரின் படங்கள் இருக்கின்றன .அத்துடன் முகம் பார்க்கும் கண்ணாடியும் உண்டு .* இவர்கள்தான் நான் வணங்கும் தெய்வங்கள் .
கேள்வி :: உங்களது பழைய படம் ஒன்றைப் பார்த்தேன் .* அதில் கழுத்தில் ருத்திராட்சை* மாலையுடன் இருக்கிறீர்கள் .* ஏதேனும் ஜெபம் செய்து கொண்டிருந்தீர்களா ?
பதில் : நான் வணங்கும் கடவுளுடைய நாமத்தை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வதற்காகத்தான்* அந்த மாலையை கழுத்தில் அணிந்து கொண்டிருந்தேன் .* இப்போது அந்த மாலை இல்லாமலேயே கடவுளை நினைத்துக் கொண்டே இருக்கும் தகுதியை நான் பெற்றிருப்பதாக நினைக்கிறேன் .* ஒரு சின்ன திருத்தம்* அது ருத்ராட்ச மாலை அல்ல .* தாமரை மணி மாலை .
கேள்வி : அந்த மாலையை யார் தந்தார்கள் ?
பதில் : திருப்பதியில் நானே வாங்கிய மாலை .
கேள்வி : தமிழ் படங்களில் , தமிழ்நாட்டின் பண்பை விளக்கும் காட்சிகள் , கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் காட்சிகள் அவ்வளவாக இல்லை என்று சிலர் சொல்கிறார்களே. இதை நீங்கள் ஒர்க் கொள்கிறீர்களா ? உங்கள் அபிப்பிராயம் என்ன ?
பதில் : மறுக்கிறேன் .* காலை, ஆச்சாரம், பண்பாடு அதையும் கலாச்சாரம் என்று சொல்லலாம் .* பண்பு*+ பாடு = பண்பாடு* என்றால் உழைப்பு . பண்படுத்தப்பட்ட செயல் . இப்படியும் சொல்லலாம் .* ஆக இவை அத்தனையும் சமூகத்தில்*உள்ள மக்களிடையே நிலவும் நம்பிக்கைகளை , செயல்களை ஆதாரமாக கொண்டு சொல்லப்படும் வார்த்தைகள் .**
கேள்வி : தமிழ் படங்களுக்கு தங்க பதக்கம் கிடைக்குமா?
பதில் : தமிழர்களால் அமைக்கப்பட்ட குழு ஒன்றுக்கு இந்த அதிகாரம் அளிக்கப்படுமானால் தங்க பதக்கம் நிச்சயம் கிடைக்கும் .**
கேள்வி : நீங்கள் விரும்பி உங்களுக்கு கிடைக்காமல் போன விஷம் ஏதாவது உண்டா ?
பதில் : விரும்பியதை பல. ஆனால் நான் விரும்பிய பாத்திரங்களை என்னிடமிருந்து இன்னும் யாரும் பறித்துக் கொள்ளவில்லை .
கேள்வி : உங்கள் அன்னையார் இப்போது உயிருடன் இருந்திருந்தால் ?
பதில் : என் நிலைக்காக மிகவும் அனுதாபப்பட்டிருப்பார் .
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *------தொடரும் .........
-
தனியார் தொலைக்காட்சிகளில் கலைவேந்தன் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*
--------------------------------------------------------------------------------------------------------------------------
22/03/20* *- வசந்த் டிவி* - பிற்பகல் 1.30மணி - நவரத்தினம்*
* * * * * * * * * * மெகா 24* * * - பிற்பகல் 2 மணி* *- காதல் வாகனம்*
23/03/20* * * சன்லைப்* - காலை 11 மணி* - மன்னாதி மன்னன்*
24/03/20* * - முரசு டிவி - இரவு 7 மணி* - தாயின் மடியில்*
25/03/20* *- சன்லைப்* - காலை 11 மணி - நம் நாடு*
* * * * * * * * *- புதுயுகம் - பிற்பகல் 2 மணி - குடும்ப தலைவன்*
26/03/20* - சன்லைப்* - காலை 11 மணி* - சந்திரோதயம்*
* * * * * * * * *மீனாட்சி டிவி* - இரவு 7 மணி - நல்ல நேரம்*
-
திருடாதே 23.3.1961
தமிழ்திரை உலகில் சமூக புரட்சி உருவாக்கிய படம் .
மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு .
திருடுவதால் ஏற்படும் அவலம் - பாதிப்பு .
மக்கள் மனதில் சமூக சிந்தனையை தூண்டிய படம் .
இனிய பாடல்கள் .
சென்னை நகரில் பிளாசா - பாரத் - மகாலட்சுமி மூன்று அரங்கில் 100 நாட்கள் ஓடிய படம் .
2011ல் சென்னையில் திருடாதே பொன்விழா நடைபெற்றது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு திருப்பு முனை தந்த படம் - திருடாதே
புரட்சி நடிகர் எம்ஜிஆர் நடித்த மாபெரும் வெற்றி படம் திருடாதே 23- 3-1961 வெளியானது .
-
தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த திருடாதே திரைப்படம்..
ஆம். அன்றைய சூழலில் சமூகத்தில் நிலவி வந்த திருட்டு என்னும் அவலத்தை, திருத்தும் நோக்கோடு, அழகிய, ஆழமான திரைக்கதையில் மக்களுக்கு எடுத்துக்காட்டிய படம். சட்டங்கள் மூலமாகவோ, கடுமையான தண்டனைகள் வாயிலாகவோ திருட்டு என்னும் குற்றத்தை குறைக்க முடியாது. திருடர்களின் மனமாற்றத்தின் மூலமே சமூகத்தில் இந்த குற்றத்தை குறைக்க முடியும் என்ற உயரிய சிந்தனையை தனக்கே உரித்தான இயல்பான நடிப்பால் வெளிபடுத்திய சிறந்த திரைப்படம்..இந்த திரைப்படம் அந்த கால கட்டத்தில் பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தியதை யாராலும் மறுக்க முடியாது. அந்த சமூக மாற்றம் ஒரு திரைப்படத்தின் மூலம் சாத்தியம் என்ற அதிசயத்தால்தான் தமிழகம் இத்திரைப்படத்தை உற்று நோக்க ஏதுவானது. பொது உடமைவாதியான எழுச்சிகவிஞர் பட்டுகோட்டையார் தன்னுடைய பொதுஉடைமை கொள்கை பாடல்களை யார் மூலம் பரப்பலாம் என்று நினைத்தபோது அதற்கு பொருத்தமானவர் உண்மையிலே பொது உடமை கொள்கை கொண்ட எம்ஜிஆர் என்பதை உணர்ந்தார். அதனால் தன்னுடைய பெரும்பாலான பாடல்களை தலைவரின் படங்களிலே இடம் பெற செய்தார்..அதே போல் தலைவர் அவர்களும் பட்டுக்கோட்டையாரை மிகவும் மதித்து அவர் இருக்கும் வரை அவரது பாடல்களை தன்னுடைய படங்களில் இடம் பெற செய்தார். கவிஞரின் பாடல்களிலே மிகவும் சிறப்பு வாய்ந்த, நமது தெய்வத்திற்கு மிகவும் பிடித்த பாடலான "திருடாதே பாப்பா திருடாதே" என்னும் சமூக சீர்திருத்த பாடல் இடம்பெற்ற படம்தான் திருடாதே. இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து ஒரு பெரிய சமூக மாற்றத்தையே ஏற்படுத்தியது..இன்னும் சொல்ல போனால் இந்த பாடலின் வரி தமிழ் மக்களுக்கு தாரக மந்திரமாகவே விளங்கியது..இன்றும் விளங்கிகொண்டிருக்கிறது..இன்று கூட திருட்டு குற்றங்களைப் பற்றி யார் பேசினாலும் 'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்..இன்றைக்கும் யாராலும் ஏற்றுகொள்ளப்பட்ட கருத்தை அன்றே சொன்னவர்தான் நம் தலைவர்..அதனால்தான் அவர் புரட்சித் தலைவர்..
இந்த படத்தில் திருமதி சரோஜா தேவி நடிக்கும்போது, ஒரு கட்டிலை சுற்றி ஓடி காட்சி எடுத்தபோது அவருடைய காலில் கண்ணாடி துண்டுகள் குத்தி ரத்தம் கொட்டியது..காட்சிக்கு நடுவே சொன்னால் யாராவது ஏதாவது சொல்ல போகிறார்கள் என்று திருமதி சரோஜா தேவி அவர்கள் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்தார் ..அவருடைய காலில் வந்த ரத்தத்தை யாரும் கவனிக்காதபோது. நமது தலைவர் பதறிப்போய் காட்சியை நிறுத்த சொல்லி திருமதி சரோஜா தேவி அவர்களின் அடிபட்ட காலை கைகளால் பிடித்து மடிமீது வைத்து காலில் குத்திய கண்ணாடி துண்டுகளை எடுத்து சிகிச்சை செய்தார்..திருமதி சரோஜாதேவி அவர்கள் பதறிப்போய் மதிப்பிற்குரிய ஒரு பெரிய நடிகர் ஒரு சிறிய நடிகையின் காலைத்தொட்டு சிகிச்சை செய்வதா என்று மறுத்த போதும்., அவரிடம் இனிமேல் இப்படி எல்லாம் செய்ய கூடாது..ஏதாவது விபத்து என்றால் சொல்லவேண்டும் என்று அறிவுரை கூறினார்..மேலும் அந்த காட்சியை ரத்து செய்து கால் குணமான பின் நடிக்க வைத்தார்..அதனால்தான் திருமதி சரோஜாதேவி அவர்கள் நமது தலைவரை 'எனது தெய்வம்' என்று அழைத்தார். சக நடிகரின் பாதுகாப்பில் அவர் எப்படி கவனம் செலுத்தினார் என்பதற்கும், அனைவரையும் அவர் சமமாக பாவிக்கும் தன்மைக்கும் இந்நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு..இதைப்போல் கோடிகணக்கான நிகழ்சிகள் தலைவரின் வாழ்க்கையில் உள்ளது.
மேலும். இந்த படத்தில் தலைவரின் இயல்பான நடிப்பு அனைவரையும் கவரும் விதத்தில் அமைந்தது..சமூக படங்களிலும் தலைவர்தான் நம்பர் ஒன் என்பதை அறிய வைத்த படம்..அதுவும் கிளைமாக்ஸ் சண்டையில் ஏற்படுத்திய புதுமை அனைவராலும் பாராட்டப்பட்டு..பல படங்களுக்கு முன்னோடியாக விளங்கியது
Climax Fight MGR - M.N.Nambiar Fight Scenes மூன்று நாட்கள் இரவு பகலாக படமாக்கப்பட்டது. இந்த சண்டை காட்சிகள் ரீரீகார்டிங் ஆகியவற்றை எம்ஜிஆர் அவர்கள் டைரக்டர் செய்தார்.
தகவலுக்கு நன்றி : திரு.சி.எஸ். குமார் , பெங்களூரு*