இதுவாவது பரவாய் இல்லை kaarthik sir . டைரக்ட் செய்கிறேன் பேர்வழி என்று
'சாந்தி முஹர்தம் (மோகன் ஊர்வசி ),காதோடு தான் நான் பேசுவேன்
,மாலினி பாளையம்கோட்டை போன்ற படங்கள் எல்லாம் டைரக்ட் செய்த நினைவு
http://www.meditations.jp/images/7LPE23588.jpg
Printable View
இதுவாவது பரவாய் இல்லை kaarthik sir . டைரக்ட் செய்கிறேன் பேர்வழி என்று
'சாந்தி முஹர்தம் (மோகன் ஊர்வசி ),காதோடு தான் நான் பேசுவேன்
,மாலினி பாளையம்கோட்டை போன்ற படங்கள் எல்லாம் டைரக்ட் செய்த நினைவு
http://www.meditations.jp/images/7LPE23588.jpg
வருக கிருஷ்ணா சார்,
ஈகரை நெட்டில் நான் எழுதிய விமர்சனம்
மாலினி 22
பாளையங்கோட்டை
மாலினி வயது 22 கொண்ட பாளையங்கோட்டையை சேர்ந்த இளம் பெண். சென்னையில் நர்ஸாக ஒரு ஹாஸ்பிடலில் பணிபுரிகிறாள். தன் சக தோழிகளுடன் ஒரு தோழியின் வீட்டில் தங்கியிருக்கிறாள். வேலை நிமித்தம் மாலினி கனடா செல்ல ஆசைப்பட்டு விசாவுக்காக ஏற்பாடு செய்யும் போது விசா ஆபிசில் பணிபுரியும் வருண் என்ற இளைஞனுடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறுகிறது. தோழி வெளிநாடு செல்வதால் வருண் வீட்டிலேயே மாலினி தங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. நல்லவன் போல நடிக்கும் நயவஞ்சகன் வருண் மாலினியை தான் அனுபவிப்பது மட்டுமின்றி பணத்துக்காக பெண் பித்தனான தன்னுடைய பாஸ் பிரகாஷையும் அனுபவிக்க வைக்கிறான் மாலினி அறியாமலேயே. மாலினியின் வாழ்வு சின்னாபின்னமாகிறது. மாலினிக்கு மறு வாழ்வு தருவது போல வருண் நடித்து அவள் உடல்நிலை தேறியவுடன் மீண்டும் நரேஷ் மூலம் அவள் வாழ்வை சீர் குலைக்கிறான். உடலாலும், மனதாலும் பாழ்பட்டுப் போன மாலினியை தந்திரமாக போதை மருந்து கடத்தல் கேஸில் போலீசில் சிக்க வைத்தும் விடுகிறான் வருண். அப்போதுதான் மாலினிக்கு வருணின் மோசடி லீலைகள் புரிகிறது. ஜெயில் தண்டனை பெறும் மாலினி தன்னுடன் இருக்கும் தீவிரவாதி பெண் கைதி ஜானகி என்பவளுக்கு பிரசவம் பார்த்து அவள் அன்புக்கு பாத்திரமாகிறாள். ஜானகி மூலம் பெயிலில் சிறையிலிருந்து வெளிவருகிறாள். ஜானகியின் தீவிரவாத கும்பலின் உதவியோடு தன்னை சீரழித்த பிரகாஷையும், தன்னை நம்பி ஏமாற்றி வாழ்வை நாசமாக்கிய மோசடிக் காதலன் வருணையும் வித்தியாசமான முறையில் பழி வாங்குகிறாள்.
'மாலினி 22 பாளையங்கோட்டை' படத்தின் கதை இதுதான். '22 female kottayam' என்று மலையாளத்தில் ஹிட்டடித்த படத்தை தமிழில் தந்திருக்கிறார் முன்னாள் தமிழ் 'கிளாமர் குயின்' ஸ்ரீப்ரியா. தயாரிப்பு முன்னாள் நடிகர் ராஜ்குமார் சேதுபதி.
http://galleries.celebs.movies.2.plu...ecb2566a95.jpg
டைட்டில் ரோலில் நடிகை நித்யா மேனன் பரிதாபப்பட வைக்கிறார். நர்ஸாக வரும் போது வெகு இயல்பான நடிப்பு. பின் வருணால் ஏமாற்றப்பட்டு நரேஷால் கற்பழிக்கப் படும்போது 'உச்' கொட்ட வைக்கிறார். ஜெயிலில் இருக்கும் காட்சிகளிலும் நேர்த்தியாகப் பண்ணியிருக்கிறார். ஜெயிலில் இருந்து திரும்பி வில்லன்களைப் பழி வாங்கும் போதும் அமைதியாகவே தன் பங்கைச் செய்திருக்கிறார். ஆனால் எப்போதுமே 'உம்'மென்று இருப்பதால் என்னவோ போல் இருக்கிறது. (கேரக்டர் அப்படியோ!) முன்னாள் இந்தி நடிகை டினா முனிம், மறைந்த நடிகை சௌந்தர்யா போன்ற முக அமைப்பைக் கொண்டுள்ள மாலினி தமிழில் ஒரு ரவுண்டு வர சந்தர்ப்பம் இருக்கிறது.
கிரிஷ் J.சத்தார் 'வருண்' என்ற நயவஞ்சகக் காதலனாக பார்வையாளர்கள் ஆத்திரப்படும்படி தன் பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார். இவர் பிரபல மலையாள நடிகர் சத்தார் மற்றும் நடிகை ஜெயபாரதி நட்சத்திர ஜோடியின் மகன் ஆவார்.
வருணின் பாஸ் பிரகாஷாக பெண்களை வித்தியாசமான கோணத்தில் கற்பழிக்க முயலும் காமக் கொடுரனாக நடித்திருக்கிறார் பிரபல தெலுங்கு நட்சத்திர ஜோடி கிருஷ்ணா மற்றும் விஜயநிர்மலா ஆகியோரின் மகனான நடிகர் நரேஷ். பெண் பித்து பிடித்த பெரிய மனிதர்களின் குணத்தை அப்படியே அசலாகப் பிரதிபலிக்கிறார். கால் ஊனமுற்ற பெண் ஒருத்தியை அவர் அனுபவிக்க ஆசைப்படுவதும், அதற்குண்டான காரணத்தை அவர் விளக்குவதைக் கேட்டும் நமக்கு 'பகீர்' என்கிறது.
மற்றும் கோவை சரளா, கோட்டா ஸ்ரீனிவாசராவ் போன்ற பிரபலங்களும் உண்டு.
இசை அரவிந்த் சங்கர். ஒளிப்பதிவு மனோஜ் பிள்ளை.
நடிகை நித்யா மேனனுக்கு காட்சியை விளக்கும் இயக்குனர் ஸ்ரீப்ரியா
http://moviegalleri.net/wp-content/g...ls_07beff9.jpg
நடிகை ஸ்ரீப்ரியாவின் இயக்கம் தெளிந்த நீரோடை போல் செல்கிறது. இயக்குனர் தான் பெண் என்பதால் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளைக் கையில் எடுத்திருக்கிறார். சிறைக் காட்சிகள் ஏற்கனவே பல படங்களிலும், சீரியல்களிலும் வந்து விட்டதால் சலிப்பை ஏற்படுத்துகின்றன. அடுத்த காட்சிகள் என்ன என்பதை யூகித்தும் விட முடிகிறது. ஆனால் மாலினி வெளியே வந்து பிரகாஷை வித்தியாசமாக நல்ல பாம்பை விட்டு கடிக்க வைத்து சாகடிக்கும் காட்சி அமர்க்களம். ஆனால் கதாநாயக வில்லனுக்கு மாலினி இறுதியில் தரும் தண்டனை கொஞ்சம் ஏமாற்றமே.
கே.பாலாஜி எடுத்த 'நிரபராதி' என்ற தமிழ்ப் படத்தில் (இந்தியில் 'இன்சாப் கா தராசு') நடிகை மாதவி ஏற்கனவே இம்மாதிரி மாலினி ரோலில் நடித்து விட்டார். அதில் தன்னை நாசப்படுத்திய கயவர்களின் பிறப்புறுப்பை அறுத்து அவர்களுக்கு தண்டனை வழங்குவார் மாதவி. அதே முறையை மாலினி இப்படத்தில் இறுதியில் கையாள்வதால் கிளைமாக்ஸ் அவ்வளவு சுவாரஸ்யமில்லை. வேறு வகையில் யோசித்திருக்கலாம்.
எப்படியோ! தான் சொல்ல வந்ததை மிக நேர்த்தியாக ஸ்ரீப்ரியா சொல்லியிருகிறார் என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம். சமுதாயத்தில் கமுக்கமாக இருக்கும் பெரிய இடத்து காமுகப் பேய்களின் முகமூடிகளைக் கிழித்திருக்கிறார் இயக்குனர்.
நம் ஹீரோக்களின் அலட்டல்களும், 'ஏய்' கத்தல்களும், பஞ்ச் வசனங்களும், அடியாட்களின் அரிவாள்களும், வில்லனின் உருட்டல்களும், நம்ப முடியாத சண்டைக் காட்சிகளும் இல்லாமல் ஒரு நல்ல படத்தைப் பார்த்த உணர்வு நிச்சயம் இப்படத்தைப் பார்த்ததும் ஏற்படுவது உண்மை.
அந்த வகையில் இயக்குனருக்கு வெற்றியே!
http://tamil.oneindia.in/img/2014/01...nesan5-300.jpg
இல கணேசன் அவர்கள் வழங்கிய பேட்டி ஒன்று சமீபத்தில் படித்தேன்
அதன் ஒரு பகுதியின் பகிர்வு ஏன் என்றால் அதன் மறு பகுதி விவாதத்திற்குரியது . நமது திரியின் நோக்கம் மற்றும் பதிவுகளை வேறு திசைக்கு கொண்டு சென்று விடும் என்று மனதிற்கு தோன்றியதால் தவிர்த்து விட்டேன்
ஒரு காலத்தில் நிறைய படங்கள் பார்த்ததுண்டு. தஞ்சாவூர் கிருஷ்ணா திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் குறிப்பாக சிவாஜி கணேசன் நடித்தவை
ஒன்றுவிடமாட்டேன். நடிப்பு என்றால் சிவாஜிதான் என்று தீர்மானமாக இருந்தது அக்காலம். அவர் நடிப்பின் மீது அப்படி ஒரு மயக்கம்.
சிவாஜி படம் பார்த்துக் கண்கலங்காமல் வருவதில்லை. ‘கப்பலோட்டிய தமிழன்’ பார்த்து அழுதிருக்கிறேன். எத்தனை முறை பார்த்தாலும் என் அழுகையை நிறுத்த முடிந்ததில்லை. ஒவ்வொரு முறையும் புதிதாகப் பார்ப்பது போலப் பார்ப்பேன். அழுவேன். குறிப்பாக அந்தப் படத்தில் பாரதியின் பாத்திரமும் மிகவும் பிடித்தது. அந்தப் பாரதி போல பிறகு வந்த ‘பாரதி’ மனதைக் கவரவில்லை.
சிவாஜிக்குப் பிறகு எனக்கு பிடித்த நடிகர் கமல். அவரது படங்கள் விரும்பிப்பார்ப்பேன். ‘சலங்கை ஒலி’, ‘மூன்றாம் பிறை’, ‘அன்பேசிவம்’ போன்ற பல படங்களை விரும்பிப் பார்த்ததுண்டு. அவை என்னைக் கவர்ந்த படங்கள்.
ரஜினி மக்களைக் கவர்ந்த நடிகர். அவர் ஒரு வித்தியாசமான நடிகர். அவர் மக்களிடம் இளைஞர்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் பெரியது. அவரை பின்பற்றுபவர்களைப் பெற்றிருப்பது அவரது சிறப்பு. ஆற்றல் என்று கூறலாம். பிற நடிகர்களுடன் ஒப்பிட முடியாத வித்தியாசமான ரகம் அவர்.
கதாநாயக நடிகர்களைத் தவிர்த்து விட்டு சில வில்லன் நடிகர்களும் குணச்சித்திர நடிகர்களும் எனக்குப் பிடித்தவர்களாக இருக்கிறார்கள். அந்தவகையில் ரகுவரனை எனக்குப் பிடிக்கும். பல படங்களில் என்னைக் கவரும்படி நடித்திருப்பார். இன்னொருவர் பிரகாஷ்ராஜ். பிரமாதமான நடிகர். அவர் நடித்த படங்களில் அலியாக ‘அப்பு’ படத்தில் வரும் பாத்திரம் என்னைக் கவர்ந்த ஒன்று என்பேன்.
இப்போது அரசியலில் தீவிரமானவுடன் படங்களே பார்ப்பதில்லை. எப்போதாவது மட்டும் பார்க்கிறேன். ‘அன்பே சிவம்’ போல நான் பார்த்த கடைசிப்படம் ‘எந்திரன்’ என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
நான் நிறைய படங்கள் பார்ப்பதில்லை. தொலைக்காட்சிகளில் ஏராளமான திரைப்படங்கள் வருகின்றன. எனக்கு வருத்தமாக இருக்கிறது.
தமிழ்த் திரையுலகில் எவ்வளவோ நல்ல படங்கள் வருகின்றன. நல்ல சிந்தனைகள் வருகின்றன. ஆனால் சில படங்கள், அதில் வரும் காட்சிகளைப் பார்க்கும்போதும் பேசுகின்ற வசனங்களைக் கேட்கும்போதும் வருத்தம் வரும். கோபமும் வரும்.
சந்திரோதயம் படத்தில் எனக்குப்பிடித்த இரண்டாவது பாட்டு, சந்தேகமென்ன 'எங்கிருந்தோ ஆசைகள்' தான் (முதல் பாகத்தில் அலசியாச்சு). வழக்கமாக புஜம் தெரிய சட்டை அணியும் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். இப்படத்தில் படம் முழுவதும் வித்தியாசமான காலருடன் கூடிய முக்கால் கை சட்டை அணிந்து எடுப்பாக இருப்பார்.
'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள்' பற்றி சொல்லவே வேண்டாம். அழகுன்னா அழகு அப்படி அழகு. (எனக்கு ரொம்ப பிடித்த நடிகை, அறவே பிடிக்காத அரசியல்வாதி) . புடவை, ஜாக்கெட், வித்தியாசமான ஹேர் ஸ்டைல் என்று கிறங்கடிப்பார்.. ஸாரி.. கிறங்கடித்தார். அதுவும் ஒரு கட்டத்தில் மேஜையின்மீது குனிந்தவாறு.... நமக்கு முந்தைய தலைமுறையின் துக்கத்தை பறித்திருப்பார்.
சரணம் முழுக்க தபேலா, பாங்கோஸ் என்று தாள வாத்தியங்கள் எதுவுமில்லாமல் ஜஸ்ட் ட்ரம்ஸ் மீது பிரஷ் டச். இடையிசையின்போது ஐயோ அந்த சாக்ஸபோன் நம்மை எங்கோ கொண்டுபோகும். இசை யாரோ பூர்ணம் விஸ்வநாதனோ என்னமோ சொல்வார்கள் (நண்பரின் பாதிப்பு)
இரண்டு பாடல்களை அருமையாக அமைத்துவிட்டதாலோ என்னவோ மற்றவை சுமார்.
கம்பன் ஏமாந்தான் ஆணாதிக்கப்பாடல் என்றால் இப்படத்தில் வரும் 'கொட்டுமேளம் கொட்டுற கல்யாணம்' அக்மார்க் பெண்ணியப்பாடல்.
'காசிக்குப்போகும் சந்நியாசி' நகைச்சுவையை வரவழைக்கவில்லை.
'புத்தன் ஏசு காந்தி பிறந்தது' தலைவர் முதலில் மக்களை மழையிலிருந்து வேகமாக கொண்டுசென்று சத்திரத்தில் சேர்த்துவிட்டு அப்புறம் நிதானமாக பாடியிருக்கலாம். முதியவர்கள் முதல் சிறுவர்கள் வரை (ஆட்டுக்குட்டி உள்பட) குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கும்போது, நின்று நிதானித்து பாடியிருக்க வேண்டுமா?. (மாற்று திரி நண்பர்களும் இதை ஒத்துக்கொள்வார்கள்) .
அடடே, படத்தில் நம்ம பாரதியும் இருக்கிறாரே...
வாசு சார்
மிக்க நன்றி . நலம் தானா ?
22 Female Kottayam ஏற்படுத்திய ஒரு தாக்கத்தை மாலினி 22 பாளையம்கோட்டை ஏற்படுத்தவில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து
ஷாலினி எண்டே கூட்டுகாரி என்ற மலையாள படம் தமிழில் சுஜாதா என்று வந்தது . சரிதா ராஜலக்ஷ்மி நடித்து இருப்பார்கள்.
கல்யாணி மேனன் இன் 'நீ வருவாய் என நான் நினைத்தேன் ஏன் மறந்தாய் என் நான் அறியேன் ' அருமையான பாடல் உண்டு
ஆனாலும் மலையாளத்தில் ஏற்படுத்திய தாக்கம் தமிழ் இல் இல்லை
http://upload.wikimedia.org/wikipedi...Koottukari.gifhttp://i29.tinypic.com/2iavn8k.png
சி.க.சார்,
என்னுடையதையும் சொல்லி விடுகிறேன்
பூவே செம்பூவே வாசம் வரும்- ராதாரவி
கண்ணனை நினைக்காத நாளில்லையே- பாதிப் பாடலை தேங்காய் சீனிவாசனுக்கும், மனோரமாவிற்கும் தந்து கொடுமை படுத்தியிருப்பார்கள். என்ன மாதிரிப் பாட்டு அது.
இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட- இதுவும் தேங்காயின் கொடுமை
ஜெயுச்சுட்டே! கண்ணா நீ ஜெயுச்சுட்டே -தேங்காய் கொடுமைடா சாமி. இதற்கு நடிகர் திலகத்தைவிட தேங்காய் சிறப்பாக நடித்து விட்டார் என்று சில பத்திரிக்கைகளின் பாராட்டு வேற. இந்த தமிழ் நாடு உருப்படும்?
உனைப் பார்க்க வேண்டும் ரசிக்க வேண்டும் - முத்துராமன்.
சம்சாரம் என்பது வீணை- முத்துராமன் (உணர்ச்சியே இல்லாமல் மண் மாதிரி நிற்பார்)
அசோக அறுவை- அனைத்துப் பாடல்களும்.
சந்திரகாந்தா- ஆம்பிளை சண்முக சுந்தரம். பல பாடல்கள்.
எனக்கொரு காதலி இருக்கின்றாள் - தேங்காய், ஜெய் கணேஷ்
ஓராயிரம் கற்பனை- ஸ்ரீகாந்த்
இன்னும் நிறைய.
மனதில் உள்ளதை எழுத வாய்ப்பு தந்தற்கு நன்றி!
டியர் வாசு சார்,
'மாலினி 22 பாளையங்கோட்டை' ஆய்வு ரொம்ப அருமை. நான் இந்தப்படம் பார்க்கும் சந்தர்ப்பம் இதுவரை வாய்க்கவில்லை. ஆனால் ஸ்ரீபிரியா இயக்கிய 'சாந்தி முகூர்த்தம்' மற்றும் நீயா படத்தின் இரண்டாம் பாகமான 'நானே வருவேன்' படங்கள் பார்த்திருக்கிறேன். ஆய்வைப்படிக்கும்போது மாலினியை தேடிப்பிடித்து பார்க்கவேண்டுமென்று தோன்றியது. ஆனால் முடிவைப்படித்தபோது, 'நிரபராதி'தான் ஏற்கெனவே பார்த்துவிட்டோமே. மாலினியை மெதுவாகப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.
ராஜ்குமார் சேதுபதி என்பவர் ஸ்ரீபிரியாவின் கணவர்தானே. அதாவது லட்டு லதாவின் தம்பிதானே. அதாவது கடல்மீன்கள் ஸ்வப்னா பின்னால் ஜொள்ளுவிட்டு, அது நடக்காமல் போனதும் ஸ்ரீபிரியா கழுத்தில் தாலி கட்டியவர்தானே....
நவம்பர் 21, டிச. 3, 1990
நன்றி : இந்தியா டுடே
http://www.internationalreporter.com...-wallpaper.jpg
அது சாவகாசமாகப் பேட்டி அளிக்கும் நேரமே அல்ல. மூன்று நாட்களாக கமல்ஹாசனுக்குத் தூக்கமில்லை. தீபாவளிக்கு வெளிவர வேண்டிய அவர் படம் மைக்கேல் மதன காமராஜன், நாள் நெருங்கியும் கூட முடிந்த பாடில்லை. மூவியோலாவில் ஒலியையும், ஒளியையும் இணைக்கும் பணியில் கமல் பிஸியாக இருந்தார்.
இதற்கிடையில் இரண்டாவது பெண் குழந்தைக்குத் தந்தையானார். ஆனால், சகலகலாவல்லவரான அந்த நடிகர் களைப்படைந்தவராகத் தோற்றமளிக்கவில்லை. பேட்டியின்போது வார்த்தைகள் சரளமாக வந்தன.
தன் குடும்பம் பற்றி: சராசரி மயிலாப்பூர் குடும்பம் அல்ல எங்கள் குடும்பம். அப்பாவுக்கு அன்பு அதிகம். சற்று தோரணையும் உண்டு. என் பெண் ஸ்ருதி என் முதுகில் ஏறிக் குதித்து விளையாடுவது போல் நான் அப்பாவிடம் நடந்துகொள்ள முடியாது. நான் பிறக்கும் போது அவருக்கு 48 வயது. அதனால் நான்தான் செல்லப்பிள்ளை. என் அப்பா மிகவும் சுதந்திரமான மனிதர். வீட்டின் வாசல் பக்கம் இருந்த கடைகளை வாங்கினார். ஒருவேளை நான் வாழ்க்கையில் வெற்றி பெறாமல் உதவாக்கரையாகிவிட்டால், இந்தக் கடைகளை வைத்தாவது நான் பிழைத்துக் கொள்ளட்டுமே என்ற நினைப்பில் வாங்கினார். ஆனால் கடைகளையும், வீட்டையும் சேர்த்தே நான் வாங்கி விட்டேன். என்னை அவர்கள் கட்டிக் காப்பாற்ற வேண்டியிருக்கவில்லை. இதை நினைத்தால் எனக்குப் பெருமைதான்.
பாதிப்புகள் பற்றி: முதலில் வீட்டிலிருந்து. எல்லோருக்கும் மேலாக சிவாஜி கணேசனைக் கூறலாம். நடிகர்கள் என்று எடுத்துக் கொண்டால் ரங்காராவ், நாகேஷ் இருவரிடமும் நிறைய கற்றுக்கொண்டேன். கே.பாலசந்தர் ஒரு அற்புதமான நடிகர். அவரை நடிக்கச் சொல்லி நான் டைரக்ட் செய்ய வேண்டும் என்று எனக்கு ஆசை.
என்னை அதிகம் பாதித்தவை பதேர் பாஞ்சாலி. முகல் ஏ ஆஜம் போன்ற படங்கள். ஆரம்ப நாட்களில் என் மனதில் ஷ்யாம் பெனகல் அதிமுக்கிய இடம் வகித்தார். அவரது போட்டோக்களையும் சேர்த்துச் சேர்த்து வைத்துக் கொள்வேன். இந்திய நடிகர்களை எடுத்துக் கொண்டால், அம்ரீஷ் பூரியிடம்தான் நிஜமான ஹீரோத்தன்மை இருக்கிறது என்று 15 வருடங்களாகச் சொல்லி வருகிறேன். ஸ்டாலோன், ப்ரான்ஸன், ஈஸ்ட்வுட் ஆகியோருக்கெல்லாம் சமமானவர். மாகம்பாஸிற்கு இணையாக ஹீரோ வேடம் ஏற்கக்கூடியவர்; இவரிடம் ஒரு முரட்டுத்தனம் பொருந்துகிறது. இதில் இவருக்கு ஒரே போட்டி தர்மேந்திராதான். புதிய டார்ஜான் மற்றும் ப்ரேஸ்டோக் டார்ஜானில் நடித்த பெல்மாண்டோ அல்லது கிறிஸ்டோபர் லேம்பர்ட் ஆகியோரிடம் உள்ள அதே தன்மை அமிதாப்பச்சனிடம் உள்ளது. இவர்கள் எல்லோருமே கற்கால மனிதனுக்கு அடுத்தபடியில், நியாண்டர்தால் மனிதன் ஜாடையில் இருப்பவர்கள். யூசுப் கான் சாகிப் (திலீப்குமார்) கூட அதே ஜாடைதான்.
அபூர்வ சகோதரர்கள் தயாரித்தது பற்றி: நான் எப்படி தயாரித்தேன் என்று என்னாலேயே சொல்ல முடியவில்லை. எவ்வாறு மாஜிக் செய்கிறாய் என்று மாஜிக் நிபுணரைக் கேட்பதைப் போலிருக்கிறது இது. சாகரில் நடிக்கும்போது, ரமேஷ்ஜியிடம் (சிப்பி) நான், ஹீரோவின் கண்ணாடியில் பிரதிபலிக்கும் மனசாட்சியாக, குள்ளனை ஏன் காட்டக்கூடாது என்று கேட்டேன். இயேசு கிறிஸ்துவிடம் பேசுவதாகப் பல படங்களில் பாத்திரங்கள் வருகின்றன. அமிதாப் குடித்து விட்டுத் தனது துன்பங்களையெல்லாம் கடவுளிடம் கொட்டுவார். ஆனால் எனது கேரக்டர், தன்னையே குள்ளனாகப் பார்க்கிறான். எப்படியெல்லாம் அலட்சியப்படுத்துகிறார்கள் என்று வருந்துகிறான். இதை நானே ஏன் நடிக்கக் கூடாது என்று யோசித்தேன். இறுதியில் அதை நானே செய்தேன்.
உயரமானவர்கள், குள்ளமானவர்கள் பற்றி: நான் உயரமாக இல்லை என்ற உணர்வு உள்ளூர உறுத்தியது. அதனால்தான் எனது லட்சிய மனிதர்களாக நான் கொண்ட அனைவருமே குள்ளம். சிவாஜி, சார்லி சாப்ளின், ப்ராண்டோ, சஞ்சீவ் குமார், பாசினோ இப்படியாக அ..ப்..பா எவ்வளவு உயரம், என்ன தீர்க்கமான மூக்கு என்று சிலரைப் பற்றிக் கூறுகிறார்கள். இந்த அம்சங்கள் இல்லாதவர்கள், அதனாலென்ன? என்று சொல்வார்கள். அதனாலென்ன என்று கூறி எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாதவர்கள் நாம். அபூர்வ சகோதரர்களில் நான் உயரமாக என்னைக் காட்டிக் கொள்ள இதையே பயன்படுத்தியிருக்கலாம். நம்ப முடியாத அளவிற்கு குண்டனாகக் கூட நடித்திருக்கலாம். ஆனால், அப்படி நான் நடிக்கவில்லை.
இந்திப் படங்கள்: நான் தவறு செய்தேன். நான் என் திறமையைக் காட்ட விரும்பினேன். நான் முதலில் ஒரு நகைச்சுவை படத்தில் நடித்திருக்க வேண்டும். ‘தில்’ படம் போல் ஒரே நகைச்சுவையும் காதலுமாக. இந்தி ரசிகர்கள் என்னை ஏற்றுக் கொள்ளும் வரை நான் அப்படி செய்திருக்க வேண்டும்.
காமெடி பற்றி: காமெடி என்பது மிகவும் சீரியஸான ஒரு விஷயம். பாலசந்தருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். ஒரு கோமாளியின் சாவுதான் சோகரசம் ததும்பும் காட்சி என்று நினைப்பவர். நிஜமாகவே கோமாளி என்று சொல்லிவிடுவார்களோ என்றுதான் நடிகன் பயப்படுகிறான். உதாரணமாக சோ, நாகேஷ் போன்றவர்கள் மிகவும் ஆழமான உணர்வு உடையவர்கள். காமெடியன்கள் தலைக்கு மேல் எப்போதுமே கத்தி தொங்கிக் கொண்டிருக்கும். காமெடி எனக்கு மிகவும் பிடிக்கும்.
மதம் பற்றி: இது மிகவும் சொந்த விஷயம். மதமே இல்லை என்பதை உறுதிப்படுத்த நான் நேரத்தை வீணடிக்க மாட்டேன். ஆனாலும் மக்களுக்குப் பைத்தியம் பிடிக்காமல் தடுப்பது மதம்தான்.
கடவுள் பற்றி: முதலில் எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இருந்தது. பிறகு நான் கேள்விகள் கேட்க ஆரம்பித்தேன். ஆனால், அப்போதெல்லாம் எனக்கொரு பயம் இருக்கும். தன்னைப் புறக்கணிக்கிறேன் என்பதால் கடவுள் என்னை தண்டித்துவிடுவாரோ? பிறகு நானே சமாதானப்படுத்திக் கொள்வேன்: அற்ப விஷயங்களுக்கெல்லாம் ஒரு பொடிப்பயலைக் கடவுள் தண்டித்தால், அவர் நிச்சயம் கொடுமையானவர்.
சினிமா பற்றி: எனக்கு சினிமா பிடிக்கும். ஆனால், அதுவே வாழ்க்கையல்ல. வேறு பல ஆசைகளும் எனக்கு உண்டு. எழுத்து எனக்குப் பிடிக்கும். இன்று கூட எழுதுகிறேன். சிறு சிறு கவிதைகள் எழுதுவேன். ரஜினிகாந்த மிகவும் தெளிவானவர். இருவருக்கும் ஒரே மாதிரியான மனநிலைதான். நாங்கள் எதிரிகள் – தொழிலில். அடிப்படையில் அவரிடம் உள்ள நேர்மை எனக்குப்பிடிக்கும். நாங்கள் அடிக்கடி சர்ச்சையில் ஈடுபட்டிருக்கிறோம். ஏதாவது கருத்து வேற்றுமை என்றால் நேரடியாகத் தான் பேசித் தீர்த்துக் கொள்வோமே தவிர, தூதுவர்கள் மூலம் அல்ல.
நண்பர்கள் பற்றி: எனக்கு நண்பர்கள் வெகு சிலர்தான். நான் தனிமையானவன். அதற்காக அகம்பாவம் பிடித்தவனல்ல. நண்பர்கள் என்னைக் குற்றம் சாட்டியதே இல்லை. ஆனால் சிலர் எனக்கு, நண்பர்களை விட உயர்ந்தவர்கள் – அனந்துவைப் போன்றவர்கள்.
ரசிகர் மன்றங்கள் பற்றி: 73லிருந்து 80 வரை எனக்கு ரசிகர் மன்றங்கள் கிடையாது. அதன் பின்னர், எனது ரசிகர்கள் தாமாகவே மன்றங்கள் அமைத்துக் கொண்டார்கள். விவாதம் செய்வதிலேயே பொழுதை வீணடிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரிய வந்தபோது, நான் அவர்களை அழைத்தேன். ஒரு நடிகரிடம் ஏன் இப்படி நேரத்தை வீணடிக்கிறீர்கள்? என்று கேட்டேன். சமூக சேவை செய்யுங்கள் என்று புத்தி சொன்னேன்.
நான் முதலமைச்சராக வரவேண்டும் என்ற வண்ணக்கனவு என் ரசிகர்களுக்கு உள்ளது. ஆனால், அரசியலில் நுழைவதில்லை என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறேன்.
சர்வதேச திரைப்படத் துறையில் நுழைய இந்திய சினிமாத் துறையிடம் திறமை இருக்கிறது. நமது பசங்கள் செய்வார்கள். மணி, பாலுவால் செய்ய முடியும் இந்த வகையில்.
தனது தோற்றம் பற்றி: நான் முழுவதுமாக ஆரியனல்ல. என்னிடம் நிறைய மொஹஞ்சதாரோ சாயல் உண்டு. உதடுகளைப் பாருங்கள், மூக்கைப் பாருங்கள்; கச்சிதமான திராவிட – ஆரியக்கலப்பு.