http://mimg.sulekha.com/t-rajendar/i...n-stills01.jpg
TO MARK THE BIRTH DAY OF T.M.S.
https://www.youtube.com/watch?v=j8FLrNk-Gak
Printable View
http://mimg.sulekha.com/t-rajendar/i...n-stills01.jpg
TO MARK THE BIRTH DAY OF T.M.S.
https://www.youtube.com/watch?v=j8FLrNk-Gak
செலுலாய்ட் சோழன்
(From Mr.Sudhangans Facebook page)
ஜி.என். வேலுமணி தன்னுடைய `பாகப்பிரிவினை கதையை யாருக்கோ விற்றார். அந்தத் தயாரிப்பாளர் லாபமடைந்தார். இப்போது `ஆலயமணி கதை ஏன் இன்னொருவருக்கு கொடுக்க வேண்டும் நாமே எடுத்தால் என்ன? ஆசை பி.எஸ். வீரப்பாவின் மனதில் அலை புரண்டது!
தானே இந்தியிலும் எடுக்க முடிவு செய்தார்! அப்போது இந்தியின் நட்சத்திர நடிகர் தீலிப்குமார்! அவர் தான் கதாநாயகன் என்று முடிவாகி, தமிழில் கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட படம் இந்தியின் வண்ணப்படமானது! படத்திற்கு தலைப்பு `ஆத்மி படத்தை எடுக்க ஆரம்பித்தவுடனேயே ஏன் காலை வவத்தோம்! என்கிற மாதிரி ஆனது!
எப்போது இந்திப் படத்தில் நடிகர்கள் குறிப்பிட்ட நேரத்திறு வரமாட்டார்கள். அதனால் ஏற்பட்ட கால விரயம்! அதிகமான பணச் செலவு, அதையும் மீறி படம் வெளி வந்த போது படம் படுதோல்வி!
உடனே தான் கதை எழுதி நடித்து வெற்றி கண்ட இந்திப் படமான கங்கா ஜமுனா கதையை தமிழில் எடுக்கும் உரிமையை வீரப்பாவிற்கு கொடுத்தார் தீலிப் குமார்.
அதை தமிழில் சிவாஜி, பத்மினியை வைத்து ` இரு துருவங்கள் என்கிற பெயரில் தமிழில் வண்ணபடமாக எடுத்தார் வீரப்பா அதுவும் தோல்வி!
சரி தமிழில் வெற்றி `ஆலயமணி ஏன் இந்தியில் எடுபடவில்லை!
அப்போது விமர்சகர்கள் சொன்னது! சிவாஜி,எஸ்.எஸ்.ஆர் கண்ணதாசன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, கூடவே இங்கே திரைக் கதைக்கு ஜாவர் சீதாராமன்! அங்கே இந்த காம்பினேஷன் எங்கேயிருந்து? என்று திரை விமர்சகர்கள் கேட்டார்கள்! அது ஒரு வகையில் உண்மைதான்! இயல், இசை நாடகம் என்கிற முப்பரிமாணமும் கொண்ட படம் ஆலயமணி! ஆமாம்! பாடல்கள் ஆலயமணிக்கு ஒரு பெரிய பலம்! `மானாட்டம் தங்க மயிலாட்டம் ` தூக்கம் உன் கண்களை தழவட்டுமே ` கண்ணான கண்ணனுக்கு அவசரமா பொன்னை விரும்பு பூமியிலே என்னை விரும்பு ஒருயிரே
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா ` சட்டி சுட்டதடா கைவிட்டதடா என்று எல்லா பாடல்களுமே அற்புதமான ஹிட்! சிவாஜி ஒரு முறை என்னுடம் பேசும்போது சொன்னார், ` காதலும், கவிதையும், வாழ்க்கைத் தத்துவமும் இணைந்த பாடல்கள் கொண்ட படம் ஆலயமணி!. எல்லா பாட்டும் ஹிட்டானாலும், எனக்கு அந்த படத்தில் பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த பாடல் ` சட்டி சுட்டதடா கைவிட்டதடா~! புத்தி கெட்டதடா நெஞ்சை தொட்டதடா பாடலுக்காகவே பல முறை படம் பார்த்தவர்கள் உண்டு!.
ஆட்டம் போட்ட அடங்கிய மனிதர்களின் குரலாகவே அந்த சட்டி சுட்டதடா பாட்டை பார்த்தார்கள்! வாழ்க்கையில் ஆட்டம் போட்ட அடங்கிய பல பெரிய மனிதர்கள் தங்களின் இன்றைய நிலையை வெளியே சொல்ல முடியாமல் எனக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
ஒரு முறை நான் பொள்ளாச்சிக்கு ஒரு படப்பிடிப்புக்கு போயிருந்தேன். தொலைவில் ஒரு பெரியவர் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். அவர் படப்பிடிப்பிற்கு உதவுகிறார் என்பதையும், அந்த ஊரில் முக்கிய புள்ளி என்பதையும் புரிந்து கொண்டேன். ஆனால் அவர் முகம் மட்டும் எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. அவரை அருகில் அழைத்து பேசியபோதுதான் தெரிந்தது. அப்போது அவர் சொன்னார், `ஆலயமணியில வர்ற உங்க கதாபாத்திரம் தாங்க நான்! தோல்வியே வரக்கூடாதுன்னு நினைத்த ஒரு பொறாமைக்காரன்! அதனால் பணத்தையும் சொத்தையும் இழந்தேன். இப்போது என் நிலைமை நீங்க பாடின ஆலயமணி பாட்டு மாதிரிதாப் ` எலும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா என் உள்ளத்த்தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா என்றார். அதுதான் அந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றார் சிவாஜி!
அதே போல் சிவாஜிக்கு தன் படத்தில் எஸ்.எஸ். ஆர் இருக்க வேண்டும் என்று நினைப்பார்! சிவாஜி எஸ்.எஸ். ஆர் இணைந்து நடித்த பல படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. ` தெய்வப் பிறவி `கைகொடுத்த தெய்வம் படங்களைச் சொல்லலாம்! எஸ்.எஸ். ஆர். முதல் முறையா ராஜ்ய சபா எம்.பியானார். அப்போது சிவாஜி எஸ்.எஸ். ஆர் வீட்டிற்கே போய் முதலில் வாழ்த்தினார். பிறகு எஸ்,எஸ், ஆர் டெல்லி போவதில் தனக்கு விருப்பமில்லை என்பதையும் தெரிவித்தார் சிவாஜி. அதற்கு சிவாஜி சொன்ன காரணம், ` என் நடிப்புக்கு பெருமையே உன்னாலதான்!. நீ என் படத்தில் இருந்தா நான் இன்னும் எச்சரிக்கையாக நடிப்பேன்.நீ என்னோடு நடிக்கும்போது நீ நடிகனாகவே எனக்குத் தெரிய மாட்டே அந்த கதாபாத்திரமாகத்தான் தெரிவே என்றாராம் சிவாஜி!
இதை எஸ்.எஸ். ஆர் தன் சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார்!
சினிமாவில் வெற்றி என்பது நிரந்தரமல்ல என்பதை உணர்ந்தவர்கள் தான் அன்றைய திரைக் கலைஞர்கள்! அதற்குக் காரணம் இருந்தது!
1962ம் வருடம் `ஆலயமணி மிகப்பெரிய வெற்றி கண்ட அதே ஆண்டு, சிவாஜி, பத்மினி, நடித்த செந்தாமரை படம் வெளியானது.
இந்த படத்தை தயாரித்தவர் கண்ணதாசனின் மூத்த சகோதரர் ஏ.எல்.சீனுவாசன். அப்போது அவர் பெரிய தயாரிப்பாள்ர்!
படத்திற்கு இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி! படத்தை இயக்கியவர் ஏ.பீம்சிங்!
ஏனோ படம் நீண்ட நாள் தயாரிப்பாக போனது! வெகு நாள் கழித்து படம் வெளியானது! அந்த படத்தில் தான் பத்மினி ஆண்டாளாக தோன்றி ` வாரணமாயிரம் சூழ வலம் வந்து பாட்டாய் பாடியிருப்பார்.
அதில் வரும் திருப்பாவை பாடலுக்கு குரல் கொடுத்திருந்தவர் எம்.எல் வசந்தகுமாரி! சிவாஜி தன் பட வரிசையில் ` செந்தாமரை படமும் உண்டு என்று சொன்னாலே லேசாக முகத்தைச் சுளிப்பார்!
அப்படி ஒரு தோல்வி கண்ட படம் `செந்தாமரை ஒரே காம்பினேஷனின் முதல் படம் வெற்றி கண்டவர்கள் அடுத்த படத்திலேயே தோல்வியையும் கொடுத்தார்கள். சினிமாவின் போக்கே அலாதியானது என்பதை 1962ம் வருட சிவாஜி படங்களை வைத்தே சொல்லலாம்!
அந்த வருடத்தின் ஆரம்பத்தில் அவருக்கு வெற்றியை கொடுத்த படம் ` பார்த்தால் பசி தீரும்
அதற்கடுத்த பெரும் வெற்றியை தந்தது ` பலே பாண்டியா பதினைந்தே நாளில் எடுக்கப்பட்ட படம் படத்தின் தயாரிப்பாளர் பி.ஆர் பந்துலு!
அந்த படத்தில் பல சிறப்பம்சங்கள் இருந்தன! சிவாஜிக்கு மூன்று வேடங்கள்! சிவாஜியை வைத்து ஒரு முழு நீள நகைச்சுவை படம் எடுக்க முடியுமா? என்கிற பிரமிப்பில் பலரை ஆழ்த்திய படம்
இந்தப் படத்திற்கு பின் சிவாஜியை வைத்து பல விதங்களில் கதைகளை யோசிக்க ஆரம்பித்தார்கள்
மக்கள் தலைவர், வசூல் சக்கரவர்த்தி நடிகர்திலகத்தின் டிஜிட்டல் மிரட்டல் மீண்டும்.
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...79368121_o.jpg
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...9a54ae3914cfee
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
https://scontent.xx.fbcdn.net/hphoto...9f&oe=55B3A4C2
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
https://scontent.xx.fbcdn.net/hphoto...4c&oe=5570E7DC
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
https://scontent.xx.fbcdn.net/hphoto...e7&oe=557A21C5
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...2d506f1a2ebbd8
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.