திரு பொன் ரவிச்சந்திரன் அவர்களே
நடிகர்திலகத்தின் படங்களை பற்றிய ஆய்வு உங்கள் பார்வையில் விரைவில் வரும் என்று
எதிர்பார்க்கிறேன்+ஆசைப்படுகிறேன்.
Printable View
திரு பொன் ரவிச்சந்திரன் அவர்களே
நடிகர்திலகத்தின் படங்களை பற்றிய ஆய்வு உங்கள் பார்வையில் விரைவில் வரும் என்று
எதிர்பார்க்கிறேன்+ஆசைப்படுகிறேன்.
http://i1110.photobucket.com/albums/...aar/OVU1-1.jpg
தமிழ் சினிமா சரித்திரத்தில் ஒரே நாளில் இரு படங்களை பல முறை வெளியிட்டு அதில் இரு முறை தலா இரு படங்கள் வீதம் நான்கு படங்கள் நூறு நாள் கொண்டாடிய சாதனை புரிந்த ஒரே கதாநாயகனின் வெற்றிப் புன்னகை
தீபாவளி - சிவாஜி ரசிகனின் சிறந்த நாள் - 4
தொடர்ச்சி...
திராவிட அரசியல் சுனாமியை எதிர்கொண்டு தாங்கியது மட்டுமல்லாமல் அதே திராவிட ஆட்சியில் சினிமா சுனாமியாய்ப் பொங்கி எழுந்து ஒரே நாளில் இரண்டு படங்களை வெளியிட்டு இரண்டுமே மகத்தான வெற்றி பெற்ற அந்த தீபாவளி .. 01.11.1967.... தமிழ் சினிமா வரலாற்றிலும் சிவாஜி ரசிகர்கள் நெஞ்சினிலும் ஆழப் பதிந்து விட்டது.
அன்று 01.11.1967 அன்று எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது ஊட்டி வரை உறவு படத்திற்கே..பல மூத்த ரசிகர்கள் மணிஜே சினி புரொடக்ஷன்ஸ் மேல் மிகவும் கோபமாக இருந்தனர். அதற்கு முன்னரும் ஒரே நாளில் இரு படங்கள் வந்துள்ளன. என்றாலும் நடிகர் திலகம் உச்சகட்ட புகழுடன் திகழ்ந்த இந்த கால கட்டத்தில் இரு படங்கள் ஒரே நாளில் வெளி வருவது முதன் முறையாக ரசிகர்கள் நெஞ்சில் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியது. அது அன்றைய சூழ்நிலையில் நியாயமான கலக்கமாகவும் பட்டது.
சாந்தியில் எள் போட்டால் எண்ணெயாய் விழும் எனச் சொல்வார்களே அது போல கூட்டமென்றால் அவ்வளவு கூட்டம். பட்டாசு, வாண வேடிக்கை, ரசிகர் மன்ற அளப்பரை எல்லாம் திருவிழா போல ஜொலித்தன. என்றாலும் ரசிகர்கள் பக்கத்திலேயே வெலிங்டனிலும் சென்று குவிந்து விட்டனர். மேட்னி ஷோ முடிந்து மாலையில் வரும் ரசிகர்கள் முகத்தையே பார்த்த வண்ணம் ஆவலோடு காத்திருந்தோம்.. எனக்கு ஊட்டி வரை உறவு படத்திற்கு மட்டும் முதல் நாள் மாலைக்காட்சிக்கான டிக்கெட்டு கிடைத்தது.
எனவே முதல் நாள் பகல் முழுதும் சாந்தி வெலிங்டன் என தியேட்டர் கொண்டாட்டத்தில் மூழ்கி விட்டோம்.
வெலிங்டனில் அலங்காரம் செய்ய வாய்ப்புக் கம்மி. பேனர் மற்றும் கட்அவுட் தியேட்டர் முகப்பின் மேல் பக்கத்திலேயே வைக்கப்படும். உள்ளே டிக்கெட் கவுண்டர் இருக்குமிடம் அருகே சற்று இடம் உண்டு அங்கு மட்டும் நாம் டெகரேஷன் செய்து கொள்ளலாம். எனவே வெலிங்டன் தியேட்டர் எதிரே சாலையில் நீளமான கொம்புகளை நட்டு வைத்து அங்கிருந்து முகப்பின் உச்சியில் கொடிகளையும் தோரணங்களையும் கட்டி விடுவார்கள்.
சாந்தியில் கொண்டாட்டங்களைப் பார்த்து விட்டு சுமார் 5 மணி வாக்கில் வெலிங்டனுக்கு வந்தோம். சற்று நேரத்தில் வெலிங்டனில் மணி அடித்தது. படம் முடியப் போகிறது என்பதற்கான அறிகுறி.. பரபரப்பு, டென்ஷன், கூடிக்கொண்டே போகிறது.. கதவு திறக்கிறது. மக்கள் வெளியே வருகிறார்கள்..
ஆஹா.. ஒரே வினாடி தான்.. படம் பார்த்து விட்டு வந்தவர்கள் மட்டுமின்றி எங்கள் முகத்திலும் ஆயிரம் வாட்ஸ் பல்பு ஒளிர்வது போல பிரகாசம்.. ரசிகர்கள் ஓ... எனக் கூச்சலிட்டுக்கொண்டே வந்தனர். படம் சூப்பர். நூறு நாள் நிச்சயம். தலைவரின் ஸ்டைல் க்ளாஸ்... நாளைக்கே இன்னொரு தரம் பார்க்கப் போகிறேன் என்றபடியெல்லாம் ரசிகர்கள் உற்சாகக் குரல் கொடுத்துக் கொண்டே வந்தனர். அதுவும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி என்று மாதவிப் பொன்மயிலாள் பாடலை சிலாகித்துக் கொண்டே வந்தனர். சற்றுப் பொறுத்து விட்டு சில வயதான தம்பதிகள், மூத்தவர்களிடம் பேச்சுக் கொடுத்தோம்.. எல்லோரும் ஒருமித்த குரலில் சொன்னது ... படம் சூப்பர்.. சிவாஜி சிவாஜி தான்.. அவரை எவனாலும் பீட் பண்ண முடியாது..
எங்கள் உற்சாகத்திற்கு கரையேது.. அவ்வளவு தான் வெலிங்டன் தியேட்டர் வாசலே இரண்டாகி விட்டது. ரோடிலேயே பட்டாசு வெடித்து மகிழ்ச்சி ஆரவாரம் கொண்டாடினோம்.
இப்போது வேறு டென்ஷன்... சாந்தி ரிஸல்ட் எப்படி...உடனே ஓடினோம்.. அதற்குள் சாந்தியிலும் படம் முடிந்து விட்டிருந்தது. வாசலில் உள்ள பஸ் ஸ்டாப் ஜேஜே என இருந்த்து. உள்ளே கால் வைக்கக் கூட முடியவில்லை. சீக்கிரம் இருண்டு விட்ட படியால் விளக்கையெல்லாம் ஏற்றி விட்டிருந்தார்கள். ஹவுஸ்ஃபுல் போர்டு எங்களை உற்சாகமாய் வரவேற்றது. ஏழு மணி வரை ரிசர்வேஷன் என்பதால் படம் விட்டு வந்தவர்களில் பலர் மீண்டும் பார்ப்பதற்காக ரிசர்வேஷன் க்யூவில் நின்று கொண்டார்கள். அப்போதே தெரிந்து விட்டது. இதுவும் சூப்பர் ஹிட் என்று. இருந்தாலும் அங்கே இருந்த பல ரசிகர்களிடம் பேச்சுக் கொடுத்தோம். பலரும் படத்தைப் பார்த்து விட்டனர் என்றாலும் அதிலும் மெஜாரிட்டி வெலிங்கனுக்கு சென்று விட்டனர். மீதம் இருந்த நண்பர்களிடம் கேட்ட போது எல்லோருமே சந்தோஷமாக இருந்தனர். படம் சூப்பர். கொஞ்சம் கூட போரில்லை. நல்ல காமெடி. அங்கு ரிஸல்ட் எப்படி எனக் கேட்டனர். நாங்கள் இருமலர்கள் ரிஸல்ட் பற்றி சொன்னோம்..
அவ்வளவு தான் இரு படங்களும் நூறு நாள் என்பது முதல் நாளிலேயே தெரிந்து விட்டது.
உற்சாகம் கரைபுரண்டோட ஷோவுக்கு நேரமான படியால் உள்ளே ஓடினோம். நல்ல வேளை நியூஸ் ரீல் தான். நாங்கள் உள்ளே போய் அமர்ந்து கொஞ்ச நேரத்திலேயே படம் ஆரம்பித்து விட்டது.
அவ்வளவு தான்.. அதற்கப்புறம் இந்த உலகையே மறந்து விட்டோம். கூடவே இருமலர்கள் ஹிட்டான சந்தோஷமும் சேர்ந்து கொள்ள தலைவரின் சூப்பர் டூப்பர் ஸ்டைலில் ஊட்டி வரை உறவு மக்களைப் பரவசப்படுத்த ஒரே அதகளம் தான். குறிப்பாக புது நாடகத்தில் பாட்டில் குனிந்து நடக்கும் ஸ்டைல், ஹேப்பி பாட்டில் கை தட்டும் ஸ்டைல், அங்கே மாலை மயக்கம் பாட்டில் வெள்ளை உடையில் கம்பீரமாக நிற்கும் போஸ் என காது ஜவ்வு கிழியும் வண்ணம் ரசிகர்களின் உற்சாகக் குரல் தான். தேடினேன் வந்த்து பாட்டில் சிகரெட் ஸ்டைலுக்கு ஆரம்பித்த கைதட்டல் படம் முழுதும் ஓயவேயில்லை.
பலருடைய கணிப்பும் தவறவில்லை. தமிழ் சினிமாவின் தன்னிகரில்லா சாதனைக்கு 01.11.1967 அன்றே நடிகர் திலகம் வித்திட்டு விட்டார்.
தீபாவளி சிவாஜி ரசிகனின் சிறந்த நாள் என்பதற்கு அன்றைய தினம் ஒரு அத்தாட்சியாக அமைந்து விட்டது.
.... தொடரும்....
http://i1110.photobucket.com/albums/...GEDC4926-1.jpg
http://i1110.photobucket.com/albums/...DC4925-1-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC4927-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC4924-1.jpg
தரிசனம்-1. இரு மலர்கள்.
---------------------------
தொடர்கிறது...
---------------
அழும் குழந்தையை தேற்றும்
வேலையைச் செய்யும் போதே
அன்னை அதனைப் பிரிந்து
செல்ல வேண்டியிருப்பதை
நாசூக்காகச் சொல்வதைப்
போல..உமா, தனக்கும் சுந்தருக்குமான காதலைத்
திருமணமாக்க தன் அண்ணனின் அனுமதி கோரும்
பொருட்டு தான் ஊருக்குச்
செல்லவிருப்பதாகவும்,
அண்ணனின் அனுமதி கிடைத்து விட்ட நல்ல செய்தி
தாங்கிய தனது கடிதம், அக்டோபர் 10 ந் தேதி சுந்தரை
வந்தடையும் என்று உறுதி
சொல்லி அழுத பிள்ளையைச்
சிரிக்க வைக்கிறாள்.
----------------
இங்கே அழுத உயிர் சிரிக்க..
அங்கே சுந்தரின் வீட்டில்
சிரித்த உயிர் அழுகிறது.
வெகு தற்செயலாக சுந்தரின்
நாட்குறிப்பைப் படிக்க நேர்ந்த
சாந்தி, தன் அத்தான் சுந்தருக்கும், உமாவுக்குமான
ஆழமான காதலைத் தெரிந்து
கொள்கிறாள்.
அழுகிறாள்.
அத்தானுடன் அவளிருப்பதாய்
அவள் இதயத்துள் தீட்டிக்
கொண்ட ஆசை ஓவியங்களை
அவளது கண்ணீரே கரைத்து
அழிக்கிறது.
---------------
அலுத்துக் களைத்து இரவில்
வீடு திரும்பும் மாமாவை,
தினமும் இரவில் களைத்து
வருவது குறித்து கனிவுடன்
விசாரிக்கிறாள்.
அவளுக்கும், சுந்தருக்கும்
மணமுடிக்கும் பொருட்டு
தான் வேலை செய்து சம்பாதிக்கச் செல்வதாக மாமன் சொல்ல..
அவரது எண்ணம் பொய்க்கப்
போகிற யதார்த்தம் தெரிந்து
அவரைப் பரிதாபமாய்ப்
பார்க்கிறாள்.. சாந்தி.
சாந்தியை மணந்து கொள்ளும்
விஷயத்தில் சுந்தரின் முடிவைத் தெரிந்து கொள்ள
சிவக்கொழுந்து உறுதி காட்ட..
சாந்தி தவிக்கிறாள்.
இன்று என்னவானாலும் சரி..
சுந்தர் வீடு திரும்பியவுடன்
அவனது முடிவைத் தெரிந்து
கொள்வதென சிவக்கொழுந்து
திடமாயிருக்கும் போதா
சுந்தர் வீடு திரும்ப வேண்டும்?
மெல்ல மெல்ல..சாந்தியை,
சுந்தர் மணக்க வேண்டும்
எனும் தன் விருப்பத்தைத் தெரிவிக்கும் தந்தையிடம்
தன் காதலைச் சொல்ல முடியாமல் தவிக்கும்
நடிகர் திலகத்தின் நடிப்பில்
வெட்கி, அவருக்குக் கிட்டாத
உயரிய விருதுகள் தலைகவிழ்கின்றன.
மகன் சொல்லும் மழுப்பலான
பதில்களால் சந்தேகமுற்ற
தந்தை விடாமல் கேள்விகளால்
துளைக்க, தான் வேறொரு
பெண்ணை விரும்புவதாய்
ஒரு வழியாய்ச் சொல்லி விட,
உள்ளத்தின் ஆத்திரத்தையெல்லாம் கைக்கு
கொண்டு வந்து மகனை
அறைந்த பின்னும் மனசாறாத
தந்தை, மகனின் காதலியால்
மகனே அழியப் போவதாய்
கடுஞ்சொல் பேச..
கண்களில் மளமளவென்று நீர்
திரள, வேதனையுடன் தன்
தந்தையை நோக்கி "யாருன்னே
தெரியாத பொண்ணைப் பத்தி
ஏன் கேவலமாப் பேசுறீங்க?"
என்று குரல் கம்ம கேட்கும்
சுந்தர் கதாபாத்திரத்திற்கு
யார் இப்படிப்
பொருந்துவார்கள்..
நடிகர் திலகம் போல.
--------------
உமா கிளம்பி விட்டாள்.
சுந்தர், பரிசுப் பொருளோடு
வழியனுப்ப வந்து விட்டான்.
இனிமேல் நிரந்தமாகப் போகிற
தங்கள் பிரிவை, தற்காலிகமானதென்று எண்ணிக் கொண்ட இரண்டு
அப்பாவி உயிர்களின் கண்ணீரும், நம்பிக்கையும்,
ஏக்கங்களும் அந்த ரயிலடி
இரைச்சலை மீறி சத்தப்படுகின்றன.
இதயத்தின் வடிவங் கொண்டதாய், மூடி திறந்தால்
உருவங் காட்டும் கண்ணாடியைப் பரிசளிக்கிறான்..சுந்தர்.
சொல்லும் போது சுருக்கமாகத்
தெரியும் பிரிவு, அனுபவிக்கக்
கொடியது.
இதனை உணர்ந்து கொண்ட
சுந்தர், உமாவிடம் வேகமாகக்
கேட்கிறான்.
"நானும் இப்படியே உன் கூட
ரயிலேறி வந்துடவா?"
உமாவின் பிரிவு தாங்கா மனம்
பதிலுக்குப் பதிலாக வேறொரு கேள்வியை வீசுகிறது.
"அதுக்குப் பதிலா..இப்படியே
என்னை ஒங்க வீட்டுக்குக்
கூட்டிட்டுப் போயிடுங்களேன்."
கூட்டிப் போய் விடலாம் என நினைத்து வரும் சந்தோஷம்,
அப்படியெல்லாம் கூட்டிப்
போய் விட முடியாது என்கிற
யதார்த்தத்தில் துளிர்க்கிற
கண்ணீர்..
கண்ணிமைக்கும் நேரத்துக்கும்
குறைவான கால வித்தியாசத்தில்,இரண்டையும் ஒரே முகத்தில் கொண்டு வர வேண்டும்.
அப்படியெல்லாம் நடிப்பதற்கு
உகந்த அந்த ஒரே
கலைஞனுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.
அதற்கு, அந்த நடிகர் திலகம்
வாழும் அந்த சொர்க்கம்
நோக்கி கைகூப்ப வேண்டும்.
(...தொடரும்...)
Quote:
Originally Posted by raghavendra;1268798[quote
எத்தகைய திறமைமிக்க நடிகரும் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத சாதனை -
தன்னுடைய திறமையின் மீது எந்த அளவுக்கு நம்பிக்கை இருந்தால் இத்தகைய சாதனையை நிகழ்த்தி இருப்பார் நடிகர்திலகம் -
ஒரே நாளில் தன்னுடைய இரண்டு படங்களை துணிச்சலாக வெளியிட்டு அந்த இரண்டு படங்களும் 100 நாள் ஓடியது (அதுவும் இரண்டு முறை) - இது அசுரத்தனமான சாதனை என்பதோடு மட்டுமல்லாமல் மனிதனால் நிகழ்த்த முடியாத சாதனை - தெய்வப்பிறவியால் மட்டுமே முடிந்தது
ராகவேந்திரன் சார்,
ஏ.வி.எம்.ராஜன், மஞ்சுளா நடித்த 'டாக்டரம்மா' திரைப்படத்தில் தேங்காய் சீனிவாசன், மஞ்சுளா இடம் பெற்ற ஒரு காட்சியில் நமது தலைவரின் 'வீரபாண்டியக் கட்டபொம்மன்' காவியத்தின் போஸ்டர் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.
http://i66.tinypic.com/2vcj8fs.jpg
நினைப்போம்.மகிழ்வோம்-107.
"நவராத்திரி".
தொழுநோயாளியாய் வருபவரிடம் அவரது உதவி
பெற்று வளர்ந்த மருத்துவர்
நன்றி பாராட்டும் காட்சி.
அவரது நினைவாக வைத்துள்ள
அவரது புகைப்படத்தையே
காட்டி, " அய்யா ..இந்த
போட்டோல இருக்கிறது யாருன்னு பாருங்க" என்பார்..
மருத்துவர்.
"கண் பார்வை தெரியவில்லை"
என்று சொல்லி, மருத்துவர்
போன பிறகு, கண் குழித்து,
கண்களுக்குக் குடை போல
கைகள் வைத்து, மிக முயன்று
அந்தப் புகைப்படத்தைப்
பார்ப்பது.
நினைப்போம்.மகிழ்வோம்-108.
"பாபு."
"வரதப்பா" பாடல்.
மேரியம்மா கேரியரின் எறா
பத்மநாபன் வீட்டுக் குழம்பில்
கிடப்பதைப் பாடுகையில்
சிரிக்கும் கள்ளமிலாச் சிரிப்பு.
நினைப்போம்.மகிழ்வோம்-109.
"ஊட்டி வரை உறவு."
"ஹேப்பி" பாடல்.
புன்னகை அரசி பாடியபடியே
அழகாய்த் தன் தோள்கள்
ஒடித்து ஆட..
அதை அப்படியே உள்வாங்கி
இன்னும் அழகாய் தோள்கள்
ஒடித்து ஆடும் அழகு.
இல்லைஜி! ஏ.வி.எம்.ராஜன், மஞ்சுளா, தேங்காய், அசோகன் பிரதான பாத்திரங்கள்.
ஏ.வி.எம்.ராஜன், மஞ்சுளாவிற்கு 'கண்கள் மலரட்டுமே' என்ற பாடலும் உண்டு. பாலா, சுசீலாம்மா பாடி இருப்பார்கள். 'செல்வங்கள் ஓடி வந்தது' என்று இசையரசி பாடுவாரே. அதுவும் ராஜனிடம் குடித்துவிட்டு நடிப்பது போல மஞ்சுளா பாடுவது.
உங்கள் சந்தேகத்திற்காக இதோ என் டி.வி.டியிலிருந்து இமேஜ்.
http://i67.tinypic.com/nqzpyb.jpg