These 'Bold Lettered' portions should be followed not only inside the temples, but in outside too. If so, we can get free from 75% of our problems.Quote:
Originally Posted by Shakthiprabha
Printable View
These 'Bold Lettered' portions should be followed not only inside the temples, but in outside too. If so, we can get free from 75% of our problems.Quote:
Originally Posted by Shakthiprabha
true karthik. thanks for stopping by. :)
இன்றைக்கு நாம் பல்வேறு துறைகளில் காணாத முன்னேற்றமா? அவை எல்லாம் வேதகாலங்களில் இருந்ததா என்ன? இதற்கு பதில் தெரியாமலே, நம் நாட்டின் பொக்கிஷங்களைப் பற்றி அறியாமலே இருந்துவிட்டிருக்கிறோம். நவீன கண்பிடிப்புகளான பலவும் மிக முன்னரே இந்திய வல்லுனர்கள் பேசப்பட்டவை. ஆன்ம ஞானமும் விஞ்ஞானமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தே வளர்ந்து வந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஒன்றுடைய வளர்ச்சிக்கு மற்றொன்றும் கைகொடுத்து இணைந்தே வளர்ந்தது.
'பூஜ்யம்' என்ற அடிப்படை கணித அறிவே இந்தியமண்ணில் துவங்கியது. வேத காலத்திலேயே கணிதவல்லமை பெற்று விளங்கியது மெய்ஞான விஞ்ஞானத்தின் இருப்பிடமுமான நம் இந்திய நாடு. 5 BC இல் பிங்களா என்பவர் ஒன்றும் பூஜ்ஜியமும் வைத்து கணக்கிடும் 'பைனரி' கணித முறையை உபயோகித்திருக்கிறார் என்று தெரியவருகிறது. 476 CE ல் கேரள நாட்டில் ஆர்யபட்டா என்பவரோ கணிதவல்லுனராக மட்டுமின்றி வானவியல் நிபுணராகவும் திகழ்ந்திருக்கிறார். உலகம் உருண்டை என்றும் அது தன்னைத் தானே சுற்றி சூரியனையும் சுற்றி வருகிறது என்ற தத்துவத்தை முதலில் ஆணித்தரமாக உரைத்தவர் ஆர்யபட்டா. "பை" என்பதற்கு 3.1416 என்ற கணக்கை சொன்னதும் ஆர்யபட்டா.
பாஸ்காராச்சார்யா, ந்யூட்டன் கண்டுபிடிப்பிற்கு 500 நூற்றாண்டு முன்னரே புவியீர்ப்பு சக்தியை கண்டுணர்ந்தார்.
விஸ்வாமித்ர மஹரிஷியின் புதல்வரான ஆச்சார்யர் சுஷ்ருத், அறுவை சிகிச்சை முறைகளைப் பற்றி சுஷ்ருத் சம்ஹிதா என்ற நூலில் எழுதியிருக்கிறார்.
குஜராத்தில் கணட் என்ற ஆச்சார்யர் அணு / பரமாணு பற்றிய ஆராய்ச்சியின் முடிவில், உலகில் அனைத்தும் பரமாணுவால் உருவாக்கப்பட்டது, அது அழிவற்றதும், நிலையானதும் மட்டுமின்றி, நம் புலனறிவிற்கு அப்பாற்பட்டு நிற்கிறது என்றும் அறிவித்தார். அதன் குணாதிசயங்களை வர்ணித்துள்ளார். அணுவைப் பற்றியும் கம்பராமாயணத்தில் மற்றும் வால்மீகி ராமாயணத்தில் பேசப்பட்டிருக்கிறது. 'புஷ்பக விமானம்' என்று புராணக் கதைகளில் வரும் உபயோகங்கள் கூட, ஏறத்தாழ நம் நவீன விமானங்களுடன் ஒத்துப் போவதாய் அமைந்திருக்கிறது என்கிறார் சோ. ரசாயனம், ஆயுர்வேதம், என்று எல்லாத்துறையிலும் நம் முன்னோர்கள் கண்டு தெளிந்த விஷயங்கள் நிறைய.
யோகம் முதல் யாகம் வரை, அணு முதல், ஆன்ம வளர்ச்சி வரை கண்டும் உணர்ந்தும் இருந்தனர் நம் முன்னோர்கள். இத்தனை விஞ்ஞான வளர்ச்சிக்கு அப்பாலும் ஆன்ம வளர்ச்சியின் அருமை உணர்ந்து தெளிந்த பாதையில் நடந்திருந்தனர். இத்தனை வளர்ந்த நாகரீகம் இருந்தும், வேத வழிபடி வாழ்வு முறை பெருமளவு போற்றப்பட்டு வந்திருக்கிறது. இதனை புத்தகத்திலும் அச்சிலும் கொணராமல், உச்சரிப்பு தெளிவுடன் நேர்த்தியுடன், குருகுலத்தில் கற்று தேர்ந்து செவி வழியாய், உணர்ந்து ஓதி வந்திருக்கின்றனர். அதனை கடைபிடித்திருக்கின்றனர் என்றால் அந்த வாழ்வு முறையில் அறிவியலும் ஆன்மவியலும் கலந்தே இருந்திருக்கிறது என்பதை நான் உணரலாம்.
நம் ஹிந்து மதத்தில் காலத்தை யுகங்களாக பிரித்திருக்கிறோம். க்ருத யுகம், த்ரேதா யுகம், த்வாபர யுகம், கடைசியாக கலியுகம். ஒவ்வொரு யுகமாக தர்மமும் 'சத்' சிந்தையும் குறைந்து கொண்டே வரும் பொழுது, நான்காவதாக தர்மம் க்ஷீணித்த நிலையில் பல காலங்கள் கடந்து தோன்றுகிறது கலியுகம். கலியுகத்தில் எல்லா கார்யங்களிலும் பாபமும் புண்யமும் கலந்தே இருக்கிறது.
பரிக்ஷீத் அரசன் பதவி ஏற்கும் நேரம் கலியுகம் ஆரம்பம் ஆகின்றது. எருது ஒன்றை ஒருவன் துன்புறுத்தி அடித்துக் கொண்டிருப்பதை அரசன் கவனிக்க நேருகிறது. அப்படி துன்புறுத்துபவனே கலிபுருஷன் எனவும், தர்மம் எருமை ரூபத்தில் அழிந்து கொண்டிருப்பதாகவும் உருவகப்படுத்துகின்றனர். பூமி பசு ரூபத்தில் இருக்கிறது. தர்மம் அழிவது தாங்காது அதுவும் கதறுகிறது. தர்மம் என்ற எருதோ ஒரே காலில் நிற்கிறதாம். மற்ற மூன்று காலகளும் ஊனமாகி அழிந்தே விட்டன.
நீ யார் உனக்கேன் இந்த கதி என்று பரிஷீத் அரசன் கேட்டதற்கு,
* தவம் என்ற கால் கர்வம் அதிகரித்ததால் அழிந்தது
* புனிதம் என்ற கால் எதிர்பாலோரின் முறையற்ற சங்கத்தால் அழிந்தது
* தயை என்பது புத்தி கெட்டு விட்டதால் போய்விட்டது
* உண்மை என்ற ஒரே காலில் நின்று கொண்டிருக்கிறேன். அதன் ஷக்தியும் குறைந்து கொண்டே வருகிறது என்று கதறிதாம் எருமை.
இக்கதிக்கு தள்ளிய கலி புருஷனை வெட்ட புறப்படுகிறான் பரிஷீத். கலி புருஷன் அவன் காலில் விழுந்து, என் கடமையை நான் நிறைவேற்றியே ஆக வேண்டும். நான் நிலைப்பதற்கு எனக்கு ஏதேனும் ஒரு இடம் கொடு என்று விண்ணப்பிக்கிறான்.
பரிஷீத் அரசனோ "எங்கு சூதாட்டம், குடி, முறையற்ற ஸ்த்ரீ (ஆடவன்) சேர்க்கை, ஹிம்சை, இருக்கிறதோ அங்கெல்லாம் நீ இருந்து கொள் என்கிறான். இன்னும் சிறிது இடம் கொடுக்க முறையிடுகிறான் கலிபுருஷன். "எங்கெலாம் தங்கம், வைரம், பொய், கர்வம், பணம், ஆடம்பரம் முதலியவை தலைதூக்கி இருக்கிறதோ, அங்கெல்லாம் நீ இருந்துகொள் என்கிறான். அஃதாவது இப்படிப்பட்ட இடங்களில் கலி புருஷனின் மோசமான பக்க-விளைவுகள் அதிகம் காணப்படும்.
கலிமுற்றிவிட்டது என்று கூறிக்கொள்கிறோம். கலி முற்றிவிட்டதால், எதிலும் பரிசுத்தம் இருப்பதில்லை. நிர்ணயிக்கபட்ட வாழ்வு முறையை கடைபிடிக்க முடிவதில்லை. வேறு ஏதும் வழியே இல்லையா? என்றால் சிறு துகள் அளவேனும் உயர்த்திக்கொள்ள வழி நாமே உருவாக்கிக்கொள்ளலாம்.
* தர்ம காரியங்கள் பேருக்காகவோ புகழுக்காகவோ மற்றும் 'பலன் எதிர்பாரமாலோ' செய்யலாம்.
* மருத்துவர்கள் வசதியற்ற நோயாளிகளுக்கு இலவச மருத்துவம் பார்கலாம்.
* சங்கீதக்காரர்கள் தர்மத்திற்காக சில நேரம் சங்கீதம் பாடி, அதில் வரும் வருமானத்தை தானம் செய்யலாம்.
* எழுத்தாளர்கள் நல்ல விஷயங்களை, சத் கார்யங்கள் பற்றிய அறிவைப் பற்றி எழுதி விழிப்புணர்வு வரச்செய்யலாம்.
* இவை ஏதும் முடியாவிட்டால் குறைந்த பட்சம் திருமூலரின் வாக்கு படி, பிறரிடம், முகம் கோணாத அகமலர்ச்சியோடு கூடிய இன்சொற்களையாவது வழங்கலாம்.
யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.
என்ற திருமூலர் மந்திரத்தை முன்பே கண்டோம்.
குறைந்தது இனியன பேசி, இனியன சிந்தித்தால் எல்லாமே இனியவை. நம் அகத்தையே பிரதிபலிக்குமல்லவா உலகமும்? அகம் இனியதாய் இருப்பின், புறமும் இனிதாய் காண்பதே இயல்பு. இக்கருத்தையொத்த அருமையானதொரு தமிழ்ப்பாடலை வசனக்
கவிதைத் தொகுப்பில் பாரதி எழுதியிருக்கிறார்.
இவ்வுலகம் இனியது
இதிலுள்ள வான் இனிமையுடைத்து;
காற்றும் இனிது.தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது.
ஞாயிறு நன்று;திங்களும் நன்று.
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன.
மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது.
கடல் இனிது, மலை இனிது காடு நன்று. ஆறுகள் இனியன.
உலோகமும்,மரமும், செடியும், கொடியும்,மலரும்,காயும்,கனியும் இனியன.
பறவைகள் இனிய.
ஊர்வனவும் நல்லன.
விலங்குகளெல்லாம் இனியவை,
நீர் வாழ்வனவும் நல்லன.
மனிதர் மிகவும் இனியர்.
ஆண் நன்று. பெண் இனிது. குழந்தை இன்பம்.
இளமை இனிது.முதுமை நன்று.
உயிர் நன்று.சாதல் இனிது.__
பாரதி இனியவர்.
நன்றி: (do check out the link for further ref / to know about priceless infos)
http://hubpages.com/hub/Ancient-Great-Indians
:ty:Quote:
Originally Posted by Shakthiprabha
புராண இதிஹாசங்களை நடந்தவற்றை நடந்தபடியே கொடுத்தவர்கள் சிலர் என்றால், இறைவன் பால் கொண்ட பக்தியின் காரணமாக பக்திரசத்தோடு கற்பனையும் சேர்ந்து எழுதியவர்கள் வேறு சிலர்.
பொதுவாக வால்மீகி ராமணயத்தில் ராமன் பல நல்ல குணங்கள் நிரம்பிய மேம்பட்ட மனிதனாக மட்டுமே பார்க்கபட்டிருக்கிறான். இறைவன் என்று ஏத்தி வைத்து பக்தியோடு படைக்கப்பட்ட கம்பர் அல்லது துளசிதாசரின் இராமாயணத்தில், கற்பனைவளமும் சேர்ந்து காவியமாக தீட்டப்பட்டது. வால்மீகி இராமாயணமே ஆதாரமாக கருதப்படுகிறாது. ப்ரம்மதேவன் அருளால் நடந்ததும் நடக்கவிருப்பதும் தெரிந்து வால்மீகி எழுதிய காவியம். ராமாயணத்தில் நிகழ்ந்ததாக சொல்லப்படும் சில சம்பவங்களை இவர்கள் கையாண்ட விதங்கள் அவரவரின் பக்திரசத்தையும், கவிதை நயத்தையும் வெளிப்படுத்துவதாய் அமைகிறது.
சீதையை இராவணன் முடியை பிடித்து இழுத்துக்கொண்டு போவதாய் எழுதியுள்ளார். கம்பருக்கு சீதையை இராவணன் தொட்டு அபகரித்தான் என்று எழுத மனம் வரவில்லை போலும், சீதையை தொடாமல், பூமியை தரையோடு பெயர்த்து எடுத்துப் போனான் என்று தீட்டியுள்ளார். இதற்கும் ஒரு படி மேலே செல்கிறார் துளசிதாசர். இராமனுக்கு நடக்கவிருப்பது முன்னமேதெரிந்ததால், சீதையை அக்னியின் இருப்பிடத்தில் ஒப்படைத்து விட்டு, மாயை அவள் இடத்தை நிரப்புகிறாள். இராவணன் அபகரித்தது மாயா சீதையை என்றே சொல்லியிருக்கிறார்.
கவிநயம் மிக்க கம்ப ராமாயணத்திலோ பக்தி நிரம்பிய துளசிதாசரின் ராமாயணத்திலோ கூட இன்றைக்கு நாம் பேசிக்கொண்டிருக்கும் "லக்ஷ்மண ரேகை" என்ற லக்ஷமண கோடு பற்றிய சிலாகிப்பு இல்லை. இது பற்றி ஆனந்த ராமாயணம் என்ற வேறொரு ராமாயண காப்பியத்தில் இருக்கலாம் என்றார் சோ. ராமாயணம் ஒன்றையே பலரும் பலவிதமாய் தங்கள் பக்தி அல்லது கற்பனைவளத்திற்கேற்ப நமக்கு தந்திருக்கின்றனர் என்றாலும், ஆதாரம் என்று இன்று வரை வால்மீகி ராமாயணமே பெரிதும் கருதப்படுகிறது.
ராமரை தெய்வம் என்று கருதி காவியங்கள் படைக்கப்பட்டதாலோ என்னவோ, கண்ணில் விளக்கெண்ணய் விட்டுக்கொண்டு, நாம் ராம அவதாரத்தையும், கண்ணன் அவதாரத்தின் இயல்பையும் தோண்டித் துருவி கேள்விக் கணைகளால் துளைக்கின்றோம். இறைவனே மனிதன் ரூபத்தில் என்றால், அவர் மறைந்திருந்து கொல்லலாமா? பத்தினியை அக்னியில் இறங்கச் சொல்லலாமா? வெண்ணை திருடலாமா? கபடநாடகம் ஆடலாமா? இன்னும் நிறைய குற்றச்சாட்டுகள். இறை தத்துவம் என்றால் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு நிற்க வேண்டும் என்ற நம் எண்ணத்தின் பேரில் வரும் ஏமாற்றங்கள்.
உண்மையில் இவர்கள் வாழ்கை முறையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன. அதையெல்லாம் புறம் தள்ளிவிட்டு, அவர்களின் ஓரிரண்டு முரண்பாடுகளை சுட்டிக்காட்டியே நாம் கற்கவேண்டிய நல்லனவைகளையும் விட்டு விடுகின்றோம். ஆட்டுவைக்கும் இறைவன் ஒரு முரண்பாடும் இன்றி காரண காரியத்துடனேயே ஆட்டுவிக்கிறான். நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் நடப்பும், நிகழ்ச்சியும் காரண காரியம் இன்றி நடப்பதில்லை. ஒரு துளி துகள் வழியே உலகத்தை தரிசிக்கும் நமக்கு முழுமையான காட்சி கிடைக்காத வரையில் பலவிஷயங்கள் சிற்றறிவிற்கு எட்டுவதில்லை.
ராமனின் குணாதிசயங்களை அலசும் பலரும் போனால் போகிறது என்று விட்டு வைக்கும் ஒரு விஷயம் ராமனும் சில இடங்களில் பொய் கூறியிருக்கிறான் என்பது. சுமந்திரன் தேரை ஓட்டிக்கொண்டு போகும் நேரம், அயோத்தியே கலங்கி நிற்கிறது, தசரதரோ துக்கம் தாளாமல் தேரை நிறுத்த சொல்லி குரலெழுப்புகிறார். அதை கேட்ட ராமன், 'தேரை நிறுத்தாது ஓட்டிக்கொண்டு போ என்று ஆணையிடுகிறார். பின்னால் இதுபற்றி அரசர் கேட்க நேரிட்டால், உங்கள் குரல் என் காதில் விழவில்லை' என்று சொல்லிவிடும்படி பணிக்கிறார். இங்கு கூறப்படுவதும் பொய் தான். ஆனால் சொல்லப்பட்ட பொயானது மேன்மையான விஷயத்திற்காக (சாமான்ய விஷயமோ, லௌக்கீக விஷயத்திற்காகவோ அல்லாமல்) சொல்லப்படும் போது, அது வாய்மைக்கு சமமாகிறது. தசரதர் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டியது மகனின் கடமை. அவர் வார்த்தை பொய்க்கக்கூடாது என்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இதனையொட்டி நடக்கும் மற்றொரு சம்பவத்திலும் பரதனை அனுப்பிவிக்கும் பொருட்டு, கைகேயிக்கு திருமணத்தில் போதே அவள் மகனே அரசாளும் வரம் தசரதன் கொடுத்தான் எனவே தந்தையின் சொல் காப்பாற்றப்படவேண்டும் என்ற நோக்கத்திற்காக பரதனே மீண்டும் நாடு திரும்பி அரசாள வேண்டும் என்று ஆறுதல் கூறி அனுப்பிவைக்கிறான். கைகேயிக்கு திருமணத்தின் போது எந்த வரமும் கொடுக்கப்படவில்லை. இது பற்றி கைகேயியோ வசிஷ்டரோ, சுமந்திரரோ, வால்மீகியோ ஏன் மந்திரையோ கூட சொல்லவில்லை ஆனால் ராமன் சொல்வதாக புராணம் கூறுகிறது.
கொடுத்த வாக்கை காப்பாற்றுதல் அதி முக்கியமான கர்மா. வாக்கை காப்பாற்றுவது தவத்திற்கு ஈடாகும். உயிர் கொடுத்தேனும் வாக்கை காப்பாற்றியவர்கள் பலர், தசரதர் உட்பட. வாக்கு காப்பாற்றப்படவேண்டிய கடமையை நினைவூட்டும் பொருட்டு கைகேயி 'உயர் குலத்திலும் நல்ல பிறப்பிலும் பிறந்த நீங்கள் நல்ல ஒழுக்கம் நிரம்பிய நீங்கள், அதனை தக்கவைக்கும் பொருட்டு, மேன்மையடைச்செய்யும் கடமையாக உங்கள் வாக்கை காப்பாற்றிக்கொள்ளுங்கள்' என்று தசரதனை எச்சரிக்கிறாள். 'சொன்ன சொல் தவறாமை' என்னும் உயரிய பண்பை கடைப்பிடிப்பது பல வியக்கத்தக்க பயன்களையும் பலன்களையும் தரவல்லது.
இறைவன் மனித உடல் தாங்கி வரும் பொழுது அவனும் அவற்றிற்கேற்ப பலாபலன்களையும், துக்க சுகங்களையும் அனுபவிக்க கடமைப் பட்டிருக்கிறான். உலக மாதாவாகிய சீதை பிராட்டியே மண்ணுலகில் தோன்றிய போது அனுசூயாவிடம் பாடம் பெற்றாள். அதுவும் எப்பேற்பட்ட பாடம்? நல்ல மனையாளுக்கான அடிப்படை குணங்கள் பற்றிய பாடமாம். அத்திரி மஹரிஷியின் பத்தினி அனுசூயா மிக அறிவும் தேஜஸும் மேன்மையும் நிரம்பப் பெற்றவள். பிராட்டிக்கு தெரியாத விஷயமா என்ன! எனினும் சிறு பெண்ணுக்கேயுறிய அடக்கத்துடன் கேட்டுக்கொள்கிறாள். 'புருஷன் சொல்பேச்சு கேட்டு நடப்பவளே நல்ல மனையாள். அவன் கெட்டவனோ, நல்லவனோ, காம இச்சை கொண்டவனோ, ஏழ்மையில் உழல்பவனாயினும், பணம் நிரம்பியவனாக இருப்பினும், அவன் சொல்பேச்சு கேட்டு நடப்பதே உயரிய பண்பு. கணவனே உயர்ந்த தெய்வம். ஆர்ய ( மேன்மையான, மரியாதைக்குறிய என்பது அர்த்தம், இது எந்த வகுப்பினரையும் குறிக்கும் சொல் அல்ல. தற்காலத்தில் இது தவறாக பயன்படுத்த படுகிறது) ஸ்வபாவம் நிரம்பிய பெண்களுக்கு புருஷன் சொல் உயர் வேதம். அது அல்லாத பெண்கள் காமத்தில் (காமம் என்றால் ஆசை, இச்சை என்று பொருள், காமம் என்னும் பாலியல் இச்சை மட்டும் குறிக்கும் சொல் அல்ல ) உழல்பவர்களாக, கணவனை அடக்கி ஆளும் ஸ்வபாவம்
கொண்டவர்களாக இருப்பவர்கள். அப்படிபட்டவர்கள் தீய வழியில் பயணிப்பவர்கள், சொல்பேச்சு கேட்டு நடப்பதில் இருக்கும் நன்மை தீமைகளை அவர்கள் அறிய மாட்டார்கள்' என்கிறாள்.
அனுசூயை சொன்னதற்கு ஒரு படி மேல் சென்று, புருஷனைத் தொடர்ந்து காட்டிற்கே சென்று சொந்த சுக துக்கங்களை கைவிட்ட மனையாள் சீதை.
புராணக் கதைகளின் மூலம் நாம் கற்கும் சில பாடங்கள் தற்காலத்திற்கு எந்த அளவு பொருந்தும் என்று சொல்வதற்கில்லை. எனினும், குடும்பத்தில் சுமூக சூழல் நிலவ, சச்சரவுகளை வாக்குவாதங்களை அதிகரிக்காமல் அனுசரித்து போதல் நலம். இது இயல்பாய் பெண்களுக்கு எளிதில் அமைந்து விடக்கூடிய சுபாவம். விட்டுக்கொடுத்து வாழப் பழகுவதால் இறுதியில் அமைதியும், இன்பமும் வெற்றியும் எங்கும் நிரம்பியிருக்கும்.
உடல் அநித்தியம், ஆன்மா நித்தியம், உடலானது உயிர் தங்கும் கூடு. 'கூடுவிட்டு கூடு பாய்தல்' பெரிய சித்தர்களால் ஞானிகளால் செய்யக்கூடிய சித்திகளுள் ஒன்று. இன்னொருவரின் உடல் தாங்கி நின்ற போதும், ஆன்மா வேறுபடுவதால் (நிற்க: ஆன்மா வேறுபடாது என்றாலும், தனிப்பட்ட கர்ம பதிவுகளைத் தாங்கிய ஜீவ-ஆத்மா என்று கொள்ளலாம்) நடை உடை பாவனை குணம் முதலியவை வேறுபடுவதால் தங்கியிருப்பது வேறு ஒரு ஆன்மா என்று கண்டுகொள்ளலாம்.
"கூடுவிட்டு கூடு பாய்தல்" முக்கியமாக சித்தர்கள் வரலாற்றில் சர்வசாதாரணமாய் சுட்டிக்காட்டப்படும். ஆதிஷங்கரர் இதே முறையை கையாண்டு, விடையுணர்ந்து நிபந்தனையில் வென்ற சரித்திரம் அனைவரும் அறிந்ததே. பாம்பாட்டி சித்தரும் கூடுவிட்டு கூடு பாய்ந்து சில ஞான உபதேசங்களை உபதேசித்தார். சித்தர்கள் இச்சித்தியை உயர்ந்த நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தினர் என்பது நினவில் கொள்ளத்தக்கது.
பெயருக்கேற்றார் போல் பாம்பாட்டி சித்தர், பாம்பை பிடிப்பது, படமெடுத்து ஆடச் செய்வது, அவைகளில் விஷத்தை சேமித்து விற்பது இதையே தொழிலாகக் கொண்டிருந்தார். பாம்புடன் பழகுவதால் அவருக்கு விஷமுறிவு மூலிகைகளெல்லாம் அத்துபடி. அவ்வூரில் பாம்பு கடிக்கு சிறந்த வைத்தியராகவும் திகழ்ந்தார். பாம்புகளைப் பற்றிய ஆராய்ச்சியிலும் இறங்கினார். மருதமலைப் பகுதியில் விஷவைத்திய ஆய்வுக் கூடம் ஒன்றும் துவங்கினார்.
ஒரு சமயம் நவரத்தின பாம்பு ஒன்று மருதமலைப் பகுதியில் வசிப்பதாகவும், அதன் நஞ்சு மிகப்பெரிய சித்து வித்தைகளைச் செய்யும் திறன் கொண்டது என்றதால் அதனை பிடிது விட உறுதிபூண்டு மருதமலைக் காட்டிற்கு சென்றார். இவர் தேடும் பணியில் மும்முரமாக இருக்கும் தருவாயில், பலத்த சிரிப்பொலியுடன் பிரகாச உருவம் தாங்கி சட்டை-முனி சித்தர் பாம்பாட்டி சித்தர் முன் தோன்றினார்.
இவர் பாம்பை தேடுவதைப் பார்த்து சிரித்தபடி, "நவரத்தின பாம்பை நீயே உனக்குள் வைத்துக்கொண்டு வெளியே தேடுகிறாயே இது பயனற்ற செயல்தானே" என்றார்.
"மிகுந்த உல்லாசத்தைக் கொடுக்கக்கூடிய ஒரு பாம்பு உன் உடலுக்குள் குடியிருக்கிறது (பாம்பாக உருவகப்படுத்துவது உறங்கிக்கொண்டிருக்கும் குண்டலினி ஷக்தியை) , உன் உடலில் மட்டுமன்றி எல்லோர் உடலிலும் குடியிருக்கிறது, உன் உடம்புக்குள் இருக்கும் அப்பாம்பை ஆட்டுவிப்பவன் தான் அறிவாளி. அதனை அடக்கி ஆளக்கூடியவர்கள் தான் சிறப்பு மிக்க சித்தர்கள் எனவே வெளியில் இருக்கும் அந்தப்பாம்பை விட்டு விட்டு, உன்னுள் இருக்கும் இந்தப்பாம்பை அடக்க வழி தேடு" என்று அருள் கூர்ந்தார். மேலும், 'இறைவனை உணர்ந்து பாடுபவர்களுக்கு சுவாசம் ஒடுங்கும், குண்டலினி விழித்து எழும், தியானம் சித்திக்கும்ம். மனிதனுள் இறைவனைக் காணும் ரகசியம் இதுவே' என்கிறார்.
பாம்பாட்டி சித்தர் பக்குவம் அடைந்து இனி இப்பாதையை விட்டு விலகாத யோகம் பயில்வேன் என்று உறுதிபூண்கிறார்.
"அப்பொழுதும் நீ பாம்புகளை பிடித்துக்கொண்டிருந்தாய், இப்பொழுதும் சூட்சுமமான பாம்புகளை பிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளாய் எனவே நீ இப்பொழுதும் பாம்பாட்டி தான்" என்று அருளி மறைந்தார் சட்டை முனி சித்தர்
ஒரு ஊரில் இறந்து போன மன்னனைச் சுற்றி மனைவி சுற்றத்தார் அழுது புலம்பிக்கொண்டிருந்தனர். கொடுங்கோலாட்சி புரிந்த தீய நடத்தை கொண்டிருந்தவன் மன்னன். அப்படியும் மக்கள் அவன் மேல் வைத்த பாசம் ஆச்சரியம் தந்தது. அவனை நல்லவனாக்கி நடமாடவிட்டு, நல்ல உபதேசம் செய்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து, தன் உடலை பத்திரப்படுத்திவிட்டு, இறந்து போன பாம்பு ஒன்றை அரசன் உடலில் விசிறியடிக்கிறார். மக்கள் எல்லோரும் பீதியுடன் விலக அரசி மட்டும் உடலை விட்டு நகராது நிற்கிறார். அதன் பின் அரசன் உடலில் சித்தர் புகுந்து கொண்டார்.
பாம்பு தான் அரசனை கொன்றுவிட்டது என்று அதனை அடிக்க மக்கள் புறப்படுகின்றனர். அரசன் உடல் தாங்கி எழுத சித்தர் "செத்த பாம்பை ஏன் அடிக்கிறீர்கள்? என்று அதனை தடவி கொடுத்து " பாம்பே நான் எழுந்து விட்டேன், நீயும் எழுந்திரு" என்றார்.
ஆடு பாம்பே என்று பாம்பை ஆட்டுவித்து தத்துவங்கள் நிரம்ப பாடல் பாடுகிறார். அரசிக்கு வந்திருப்பது வேறு ஒரு நபர் என்ற
சந்தேகம் உதித்தது.
நாடுநகர் வீடு மாடு நற்பொருள் எல்லாம்
நடுவன் வரும்போது நாடிவருமோ
கூடுபோன பின்பு அவற்றால் கொள்பயன் என்னே?
கூத்தன் பதங்குறித்தி நின்று ஆடு பாம்பே
முக்கனியும் சக்கரையும் மோதகங்களும்
முதிர்சுவை பண்டங்களும் முந்தி உண்ட வாய்
மிக்க உயிர் போன பின்பு மண்ணை விழுங்க
மெய்யாக கண்டோமென்று ஆடு பாம்பே
(பாடல் எளிமையாய் இருக்கிறது. self explanatory ) செல்வமும், புகழும், படை பலமும், இறப்பும் காலனும் தேடி வரும் போதும் கூட வருமோ? கூடு விட்டே ஆவி பொனால் அவற்றின் பயன் தான் என்ன என்று ஆடு பாம்பே (கூத்தன் பதம்: ? இங்கு சிவனை அவனின் புகழைக் குறிக்கிறதா அல்லது சிற்றறிவு கொண்டு கூத்தாடும் மாநதரைக் குறிக்கிறதா எனத் தெரியவில்லை...any takers? )
முக்கனி சக்கரை பத்து வகை பட்சணங்கள் உண்ட வாய், இப்போது மண்ணைக் கவ்வும் நிலை குறித்து, உடலின் நிலையற்ற தன்மை நினைந்து எழுதாடு பாம்பே என்பது குத்துமதிப்பான விளக்கம்.
I cant help recollecting adhi shankara's similar tone when he says
மா குரு தன ஜன யௌவன கர்வம் ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம்
மாயாமயம் இதம் அகிலம் ஹித்வா ப்ரஹ்ம பதம் த்வம் ப்ரவிச விதித்வா
ஞான உபதேசங்கள் தொடர்ந்து பாடிய வண்ணமிருக்கிறார். அதன் பின் சந்தேகம் உதித்த அரசிக்கும் தான் யார் என்று கூறி நல்லுபதேசம் செய்து மீண்டும் தன் உடல் கொண்டார். பல அறிவுரைகளும் தத்துவ உபதேசங்களும் செய்த வண்ணம் தன் வாழ்நாள் தொடர்ந்தார். தேடிப்போய் உபதேசித்தும் இந்த அறிவிலி மக்கள் திருந்துவதில்லையே என்று வருந்திய் சித்தர், யார் கண்ணிலும் படாமல் மறைந்தார்.
திருமூலர் என்ற சித்தரும் கூடுவிட்டு கூடுபாய்ந்ததாக சொல்லப்படுகிறது. திருமூலர் கைலாய பரம்பரையை சேர்ந்தவர். சித்தர்களில் முதன்மையானவராக கருதப்படுகிறார்.
அந்தணர்கள் வாழும் சாத்தனூரில் தொன்று தொட்டு ஆனிரை மேய்க்கும் குடியிற் பிறந்த ஆயனனாகிய மூலன் பசுக்கள் மேய்த்து வந்தான். அவன் வாழ்நாள் முடிந்த வினையால் உயிர் நீங்கி நிலத்தில் வீழ்ந்து கிடந்தான். மூலன் இறந்ததைக் கண்ட பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றி கதறி வருந்தின. இதனைக் கண்ட திருமூலர் பசுக்களுக்காக மனம் நெகிழ்ந்து அவன் உடல் கொண்டார். பசுக்களை மேய்த்து தத்தம் இடத்தில் அனுப்பிய பின், தனித்து நின்று கொண்டிருந்த திருமூலரை மூலன் மனைவி கண்ணுற்றாள். விரும்பி வீடு அழைக்கும் அவளுக்கு தான் மூலன் அல்ல என்றும் அவன் விதி முடிந்து இறந்து விட்டான் என்ற உண்மை திருமூலர் கூறியும் உரைத்தபாடில்லை. தன் கணவனுக்கு புத்தி தடுமாறியதென்று ஊரைக் கூவி அழைத்து, அவனை தன்னுடன் இருக்குமாறு அறிவுரை வழங்கச் செய்கிறாள். தன்னுடலைத் தேடி அதனுள் புகுந்து உண்மையை உணர்த்தி இவ்வுடலை செய்யலற்றதாக்கி தன்னை யார் என்று நிரூபித்தார். உண்மை உணர்ந்த சான்றோர் மூலன் மனைவியைத் தேற்றி அவளை வீட்டுக்கு அனுப்பி விடுகின்றனர்.
அதன் பின் அவருக்கு எங்கு தேடியும் தன் பழைய உடல் தென்படவில்லை. மூலன் உடலிலேயே நிரந்தரமாகத் தங்கி விட நேரிடுகிறது. உலகத்தோர் உய்யும் பொருட்டு க்ரியை, ஞானம், சரியை, யோகம் என்று நால்வகை நன்னெறிகளும் விளங்கும் திருமந்திரம் என்னும் நூல் வழியாக ஓர் ஆண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்கள் வழங்கியுள்ளார். பின்னர் இந்நூல் நிறைவுற்றதும் மூவாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் இறைவன் திருவடி அடைந்தார்.
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நென்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே
- திருமந்திரம்.
உயிர்கள் அனைத்தும் ஒன்றே குலம் ஒருவனே இறைவன், என்று நினைப்பவருக்கு மரணமில்லை i.e. அவர்கள் இறவாத்தன்மை அடைந்து விடுகின்றனர். இந்த எண்ணத்தில் நீர் நிலைபெற்று நின்றால் அதுவே முக்திக்கு வழி. வேறில்லை என்பது தோராயமான பொருள்.
(நன்றி: சி.எஸ் முருகேசன் அவர்கள் எழுதிய பதினெண் சித்தர் வரலாறு )
(தொடரும்)
:ty:
தொடருங்கள்..
shakthi prabha [ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நென்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே
- திருமந்திரம். ]
madam thodarathum ungal pani. mikka magilchi.thooya thamil ennai meisilirkka vaikkiradhu. indrum thooya thamil keatpathai anu anuvaaga anubavithu type pannivigirirgal. :clap:
Latha madam,
nandri :ty:
இதுவரை (கதை)
உமா பெண் குழந்தையை ஈன்றெடுக்கிறாள். நாதன் தம்பதி ராசி கருதி வேறு வீடு மாற்றுகின்றனர். பைராகி ஒருவள் வீடு தேடி வந்து ஆசி வழங்கி, வசுமதியை அன்னதானம் செய்யுமாறு உபதேசிக்கிறாள்.
அஷோக் வேதம் கற்பதும், குருகுல வாசம் செய்வதும், பிட்சை பெற்று உண்பதும், அவனது வாழ்க்கை முறையும் எல்லோருக்கும் பழகிவிடுகிறது. இனி கேள்வி கேட்டோ புத்தி சொல்லியோ பலன் இல்லை என உணர்ந்து படிப்படியாக அவன் தாய் தந்தை உட்பட அனைவரும் வேறுவழியின்றி ஏற்றுக் கொண்டுவிடுகின்றனர். உலகின் வித்தியாசமான முயற்சிகள், தனிமனித சாதனைகள், போராட்டங்கள் துவக்கங்கள் அனைத்துமே ஏதிர்ப்பு, ஏளனம் முதலிய படிகளை சந்தித்த பின்பே ஏற்பு நிலைக்கு ஏற்றப்படுகிறது.
சாம்பு வீட்டின் முன் நாரத முனிவர் சிவ பக்தராக தோன்றி, அஷோக் சாதாரணன் அல்ல என்று கூறி, அவன் சீலமும், மேன்மையும் விரைவில் உலகெங்கும் பரவும் நாள் வந்ததெனக் கூறுகிறார்.
ஏழைகளுக்கும் இல்லாதவர்களுக்கும் வீடு வீடாக சென்று பொருட்கள் சேகரித்து உதவுகிறான். வேதம் பாராயணமும் முறையான வேத கல்வியும் படிப்படியாக குறைந்து கொண்டு வருவதை எண்ணி, வீடுவீடாக சென்று வேதம் ஓத ஒரு பிள்ளையை அனுப்ப வேண்டிக்கொண்டு தானே கற்று தருவதாகக் கூறுகிறான். அவன் செல்லும் இடமெங்கும் தோல்வியே மிஞ்சுகிறது.
திருத்தம்: முன்பு பகிர்ந்து கொண்ட முசுகுந்தன் கதையில் ( http://forumhub.mayyam.com/hub/viewt...=asc&start=705 ) 'லிங்கம்' கொடுக்கப்பட்டதாக கூறியது தவறு. "மூர்த்தி" என்று இருக்க வேண்டும். சிங்கப்பூரிலிருந்து ஒரு வாசகர் சுட்டிக்காடியதன் பேரில், தவறு நேர்ந்ததற்கு திருத்தம் கூறப்பட்டது.
(தொடரும்)
(பிரதோஷம் பற்றிய பதிவை பிரதோஷம் அன்றே எழுதி பதிக்க ஆவலாய் இருந்தேன். என்னால் முடியவில்லை. இன்றேனும் பதிக்க முடிந்தது மகிழ்ச்சி)
____________
பிரதோஷம் என்றால் சந்தியாக்காலம். சூரியம் அஸ்தமிக்கும் நேரம் பிரதோஷ காலம். பாற்கடலை கடைந்து அமுதம் பெற விழைகின்றனர் அசுரர்களும் தேவர்களும். வாசுகி எனும் பாமப்யே கயிறாகக் கொண்டு மந்திர மலையில் மத்தாக்கி பெரும் பாற்கடலைக் கடைகின்றனர். அமுதின் ஊடே நஞ்சும் எழும்ப, வாசுகி என்ற பாம்பு கக்கிய விஷமும் சேர்ந்து கொண்டு எங்கும் கடும் விஷம் கருமையாய் எழும்பி நின்றது. அஞ்சிய தேவர்களும் அசுரர்களுக்கும் ஈஸ்வரன் கருணை உள்ளம் கொண்டு அபயம் அளித்தார். தம் தொண்டர் சுந்தரரை விட்டு விஷம் கொணரச் செய்தார். சிவன் அதனை உட்கொண்ட பின்னர், சற்றே கலங்கிய பார்வதி, சிவனின் தொண்டையில் அழுத்தி விஷத்தை கீழறங்காமல் செய்து விடுகிறாள். திருநீலகண்டன் ஆகிய ஈசனின் கருணை உள்ளத்தை போற்றித் துதித்து சகல ஜீவராசிகளும் வழிபட்ட அந்த நேரம் பிரதோஷ நேரம்.
சகலரையும் காத்து நின்ற ஈசன் மனம் குளிர்ந்து அனைவரின் பயமும் வருத்தமும் போக நந்தி பெரிய ரூபம் எடுத்து நிற்க அதன் கொம்பின் நடுவே ஆனந்த நடனம் புரிகின்றார். இதன் பொருட்டே பிரதோஷ காலத்தில் நந்தியின் கொம்பின் வழியே இறைவனை
தரிசிப்பது சாலச் சிறந்தது. வளர்பிறை / தேய்பிறையின் பதிமூன்றாம் நாள் பிரதோஷமாக பாவிக்கப்படுகிறது. சூரிய அஸ்தமனத்திற்கு முன்னர் மூன்றரை நாழிகையும் அஸ்தமனம் ஆன பின் மூன்றரை நாழிகையும் பிரதோஷ காலம். இந்நேரத்தில் ஈஸ்வர தியானத்தில் இருப்பது சிறந்தது.
பிரதோஷம் என்பது ஒடுங்கும் நேரம் என்ற கோணத்திலும் பார்க்கப்படுகிறது. ஜீவராசிகள் தங்கள் கூட்டுக்குள் அமிழ்ந்து அடங்கும் நேரம். பிரதோஷத்தை, நித்திய ப்ரதோஷம், பக்ஷப் ப்ரதோஷம், மாதப் பிரதோஷம், மஹா பிரதோஷம், பிரளய பிரதோஷம் என்று பலவாக வகைப் படுத்துகின்றனர்.
நித்திய ப்ரதோஷம் என்பது தினமும் சந்தியா நேரத்தில் சிவனை வணங்கி அவன் தியானத்தில் இருப்பது.
பட்சப் பிரதோஷம்: சுக்லபட்ச(வளர்பிறை) சதுர்த்தி பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவது.
மாதப் பிரதோஷம்: க்ருஷ்ணபக்ஷ (தேய்பிறை) திரயோதசியில் பிரதோஷம் அனுஷ்திப்பது
மஹா பிரதோஷம்: க்ருஷ்ணபக்ஷ திரயோதசி சனிக்கிழமை அன்று வந்தால் அன்று மஹா பிரதோஷம்
பிரளய பிரதோஷம் மஹா பிரளய காலத்தில் அண்டசராசங்களும் அழிந்து அனைத்தும் சிவனிடம் ஒடுங்கும் நேரம், பிரளய பிரதோஷம்.
பிரதோஷத்தின்போது து அப்பிரதக்ஷிணமாகவும் பின்னர் பிரதஷிணமாகவும் மாறி மாறி மூன்று முறை (பொதுவாகவே சிவனை மூன்று முறை வலம் வருதல் சிறப்பு) வலம் வருவது சோமசூத்திர வலம் வருதல் எனப்படுகிறது. இது பிரதோஷ காலத்திலோ அல்லது எந்த நாளிலும் கூட செய்வது உத்தமம்.
சிந்தையும் நித்தியம் அஸ்தமனத்தின் போது ஈஸ்வரனை தியானித்தல் மிக நல்ல சித்தியும், அமைதியும் கிட்ட வழிவகுக்கும். அண்டங்களை அழித்தலை (இங்கே கூட்டுக்குள் ஒடுக்குதல் என்று கொள்ளவேண்டும்) அல்லவா சிவனின் பிரதான தர்மம். பிரளயத்தில் அனைத்து ஜீவராசிகளையும் தன்னுள் ஏற்று பின்னர் மீண்டும் தோன்றச் செய்கிறார் சர்வேஸ்வரன். அப்படிப்பட்டவனை வணங்கி அவன் கருணை பெறுதல் வீடுபேறு எய்த சுலபமான வழி.