தனது கலைஉலகின் 50வது ஆண்டில் காலடி வைக்கும் திரு ஒய்.ஜி.எம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வின்னுலகில் தங்களது திருமன நாளை கொன்டாடிகொன்டிருக்கும் நடிகர்திலகம்-கமலம்மாள் தம்பதிக்கு வாழ்த்துக்கள்.
Printable View
தனது கலைஉலகின் 50வது ஆண்டில் காலடி வைக்கும் திரு ஒய்.ஜி.எம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வின்னுலகில் தங்களது திருமன நாளை கொன்டாடிகொன்டிருக்கும் நடிகர்திலகம்-கமலம்மாள் தம்பதிக்கு வாழ்த்துக்கள்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 1
கே: சிவாஜி கணேசனின் நடிப்பை எத்தனை தடவை பார்த்தாலும் அலுப்பதில்லையே, ஏன்? (எஸ்.எஸ்.குமார், திருவனந்தபுரம்)
ப: தேன் என்றும் கசப்பதில்லை.
(ஆதாரம் : பொம்மை, மார்ச் 1969)
அன்புடன்,
பம்மலார்.
வாழ்வியல் திலகம் அருளிய பொன்மொழி
(இந்த வார [2.5.2010] ராணி இதழிலிருந்து) (எழுதியவர் : த.ஜெகன், சரலூர் )
மனைவியின் அருமை
1995-ம் ஆண்டு நாகர்கோவிலில் நடந்த திருமண விழா ஒன்றில் பேசுகையில், "நமது மனச்சுமையை நண்பனிடம் சொன்னால் உதவிக்கு அஸ்திவாரம் போடுவதாக நினைப்பான். தந்தையிடம் சொன்னால் - 'என் மகனுக்கு பிழைக்கத் தெரியவில்லை' என்பார். சகோதரனிடம் சொன்னால் சுமை தன் தோளுக்கு வந்துவிடுமோ என்று பயப்படுவான். பிள்ளையிடம் சொன்னால் - 'கையாலாகாத அப்பா புலம்புகிறார்' என்று நினைப்பான். தாயிடம் சொன்னால் இடிந்து போய்விடுவாள். ஆனால், எந்த காலகட்டத்திலும் மனைவியிடம் மனச்சுமைகளைப் பகிர்ந்து கொள்வதைப் போன்ற சுகம் வேறு எதிலும் இல்லை" என்றார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். திருமணக் கூட்டமே ரசித்து கைதட்டியது.
அன்புடன்,
பம்மலார்.
ஒய்.ஜி. விழா - 1
திரு. ஒய்.ஜி. மகேந்திரா அவர்களின் கலையுலகப் பொன்விழா [நாடக மேடையில் 50 ஆண்டுகள் (1960-2010)], நேற்று (30.4.2010) வெள்ளியன்று, மாலை 6:15 மணி முதல் இரவு 10:15 மணி வரை, சென்னை மியூசிக் அகாடமியில் சிறந்த முறையில் இனிதே நடைபெற்றது. திரை இலக்கியத் திலகம், முத்தமிழறிஞர் மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தலைமை வகித்தார். திருமதி.ஒய்ஜிபி, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர், கலைஞானி கமலஹாசன், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக சிறப்பித்தனர். நடிகர் திலகத்தின் அருந்தவப்புதல்வர் தளபதி ஜி. ராம்குமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். மத்திய, மாநில அமைச்சர் பெருமக்கள், சென்னை நகர மேயர் மற்றும் கலையுலகப் பிரமுகர்கள், பல்துறைப் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், பெருந்திரளான பொதுமக்கள், ரசிகர்கள் (அரங்கம் கிட்டத்தட்ட ஹவுஸ்ஃபுல்) ஆகியோர் படையெனப் புடை சூழ பொன்விழா களை கட்டி ஜொலிஜொலித்தது.
விழா, "வியட்நாம் வீடு" நாடகத்துடன் தொடங்கியது. சிவாஜி நாடக மன்றத்தின் மெகாஹிட் நாடகமான நடிகர் திலகத்தின் "வியட்நாம் வீடு" நாடகத்தை, கடந்த 1.10.2008 முதல் (நடிகர் திலகத்தின் 80வது ஜெயந்தி நிறைவு விழா முதல்) இன்று வரை, அவரது நினைவைப் போற்றும் வகையில், திரு.ஒய்.ஜி. அவர்கள், தனது UAA (United Amateur Artistes) குழு சார்பில் மிக வெற்றிகரமாக நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே. இக்குறுகிய காலத்திற்குள், 50 முறைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ள இந்நாடகம், கூடிய விரைவில் 100வது நாடக விழாவை நோக்கி வெற்றி நடைபோட உள்ளது.
"வியட்நாம் வீடு" நாடகம் சரியாக மாலை 6:15 மணிக்குத் தொடங்கியது. 'அமரர் நடிகர் திலகம் என்கின்ற குருவுக்கு, இந்த எளிய சிஷ்யனின் குரு காணிக்கை, அவரது பொற்பாத கமலங்களுக்கு இந்நாடகம் சமர்ப்பணம்' என்கின்ற பக்தி உரையுடன் நாடகம் தொடங்கியது. பிரஸ்டீஜ் பத்மநாப ஐயர் பாத்திரத்தில் ஒய்ஜிஎம் ஜெம்(GEM). ஏனைய பாத்திரங்களில் நடித்தவர்களும் உணர்ந்து நடித்திருந்தனர். சரியாக 6 மணிக்கு விழா அரங்கிற்கு வருகை புரிந்த முதல்வர் கலைஞர் அவர்கள், தனக்கிருந்த கண்வலியோடு இடைவேளை வரை நாடகத்தை கண்டு களித்தார். பின்னர் பாராட்டு விழாவுக்கும் தலைமை தாங்கி ஒய்ஜிஎம்மை வாயார வாழ்த்தினார். என்னே அவரது கலை ஈடுபாடு! எல்லா விஷயங்களிலும் அவருக்கு நிகர் அவரே!
சரியாக 7:45 மணிக்கு நாடகத்திற்கு இடைவேளை விடப்பட்டு, பாராட்டு விழா தொடங்கியது.
தொடரும் .....
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 2
கே: "நடிகர் திலகம்" சிவாஜி கணேசன், சிவாஜி கணேசன் எம்.பி. - ஒப்பிடுக? (தீபன், புதுவை)
ப: ஒன்று அவரது தொழிலுக்குக் கிடைத்த பட்டம், மற்றது அவரது நாட்டுப்பற்றுக்குக் கிடைத்த கௌரவம்.
(ஆதாரம் : பொம்மை, மே 1982)
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 2
கே: "நடிகர் திலகம்" சிவாஜி கணேசன், சிவாஜி கணேசன் எம்.பி. - ஒப்பிடுக? (தீபன், புதுவை)
ப: ஒன்று அவரது தொழிலுக்குக் கிடைத்த பட்டம், மற்றது அவரது நாட்டுப்பற்றுக்குக் கிடைத்த கௌரவம்.
(ஆதாரம் : பொம்மை, மே 1982)
அன்புடன்,
பம்மலார்.
பம்மலார் சார்,
எப்படி சார் உங்களுக்கு மட்டும் தலைவரை பற்றிய எல்லா தகவல்களும்!!! அதுவும் 1982 ம் வருடம் வந்த பொம்மை இதழ்!!!!
Fantastic!
மிக்க நன்றி !!!!!!!!!!
சகோதரி சாரதா,Quote:
Originally Posted by saradhaa_sn
தங்களது பண்பான பாராட்டுக்களுக்கு அன்பான நன்றிகள்! தாங்கள் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு திரையரங்கிலும், நமது நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள் புரிந்த சாதனைகள், கூடிய விரைவில் சிறப்புப் பதிவுகளாக வர உள்ளன என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை காஸினோ அரங்கில், 1950களில் நமது நடிகர் திலகத்தின் திரைப்படங்களைப் போலவே, மக்கள் திலகம் மற்றும் காதல் மன்னன் ஆகியோரது திரைப்படங்களும் சாதனைகள் புரிந்துள்ளன.
மக்கள் திலகத்தின் சூப்பர்ஹிட் எவர்கிரீன் காவியமான மலைக்கள்ளன்(1954), காஸினோவில் 100 நாள் விழாக் கொண்டாடியது.
காதல் மன்னனின் காலத்தை வென்ற காவியங்களான மிஸ்ஸியம்மா(1955) மற்றும் கணவனே கண்கண்ட தெய்வம்(1955) ஆகியவை காஸினோ அரங்கில் 100 நாட்களுக்கு மேல் ஓடி அமோக வெற்றி கண்ட திரைக்காவியங்கள். 1957-ம் ஆண்டு வெளிவந்த மாயா பஜார் திரைக்காவியமும் இங்கே 100 நாள் விழாக் கொண்டாடியது. மேலும், காதல் மன்னன் கதாநாயகனாக நடித்த ஸ்ரீதரின் கல்யாண பரிசு(1959) திரைக்காவியம் இங்கே வெள்ளிவிழாக் கண்டது.
1960களில், காஸினோவில், நமது நடிகர் திலகத்தின் அன்னை இல்லம்(1963) 100 நாள் விழாக் கொண்டாடியது. (நமது நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை, எல்லா விவரங்களும் காஸினோ அரங்கின் பட்டியலில் உள்ளது)
காதல் மன்னனின் கைராசி(1960), காஸினோவில் மிக வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடியது.
தாங்கள் குறிப்பிட்டதைப் போலவே, காஸினோ அரங்கம், சில காலம் சாதனை இயக்குநர் ஸ்ரீதரின் கோட்டையாகத் திகழ்ந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. ஸ்ரீதரின் செல்லுலாய்ட் காவியமான நெஞ்சில் ஓர் ஆலயம்(1962) இங்கே 100 நாட்களுக்கு மேல் ஓடி சூப்பர் டூப்பர் ஹிட். காமெடிக் காவியமான காதலிக்க நேரமில்லை(1964), இங்கே 210 நாட்கள் ஓடி ஹிமாலயன் ஹிட்.
பின்னர், காஸினோ, இரண்டு ஆண்டுகளுக்கு, மக்கள் திலகத்தின் கோட்டையாக மாறியது. மக்கள் திலகத்தின் மகாமெகாஹிட் காவியமான எங்க வீட்டுப் பிள்ளை(1965) இங்கே 211 நாட்கள் ஓடி விண்ணை முட்டும் வெற்றியைப் பெற்றது. ஏவிஎம் தயாரிப்பில் மக்கள் திலகம் கதாநாயகனாக நடித்த அன்பே வா(1966), இங்கே 154 நாட்கள் சூப்பர்ஹிட் ரேஞ்சில் ஓடியது.
இதற்குப் பின்னர், இங்கே தமிழ்ப் படங்கள் வெளியாவது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, தாங்கள் குறிப்பிட்டதைப் போல், 1970 களிலிருந்து, ஆங்கிலப் படங்கள் மட்டுமே திரையிடும் அரங்கமாக மாறிப் போனது. (அத்தி பூத்தாற் போல் எப்போதாவது தமிழ்ப் படங்கள் வெளியாவதுண்டு.)
1982-ல் கமலின் வாழ்வே மாயம் இங்கே வெள்ளிவிழாக் கண்டது.
தற்பொழுது இங்கே தெலுங்குப் படங்கள் அதிகமாக திரையிடப்படுகின்றன.
1963-ல் அன்னை இல்லத்திற்குப் பின், 35 வருடங்கள் கழித்து, 1998-ல் என் ஆச ராசாவே வெளியானதற்குக் காரணம், காஸினோவில், தொடர்ந்து ஆங்கிலப் படங்களும் பின்னர் தெலுங்குப் படங்களும் வெளியானதால் தான்.
எமது அறிவுக்கு எட்டிய புள்ளி விவரங்களை, எமக்குத் தெரிந்த தகவல்களை மட்டும் இங்கே அளித்துள்ளேன்.
அன்புடன்,
பம்மலார்.
watched Karnan once again on Vellithirai. eththanai thadavai paarththaalum thigattaatha mahaa kaaviyam.
saththiyamaa sollren, innoruththen porandhu varanum.....
Idharkku vaaippe illai. Nadippu ennum kalai started and ended with Nadigar Thilagam!Quote:
Originally Posted by NOV