https://fbcdn-sphotos-b-a.akamaihd.n...55713289_n.jpg
Printable View
Thank you very much Mr. Velan. If you have any health realted questions, I can answer them with out a fee.:)))
வாழைத் தண்டு ஜுஸ்
இப்போது சிறுநீரகக் கல் பிரச்சினை மிக அதிகமான அளவில் உள்ளது. இப்போது பெண்களுக்கும் அதிக அளவில் வர ஆரம்பித்துள்ளது.
இதற்கு முக்கியக் காரணம் தற்கால உணவு முறையிலுள்ள கோளாறுகள் தான்.
இது வந்தபின்பு ஓரளவு தடுக்கவும் என்றும் வராமல் தடுக்கவும் எளிய பயனுள்ள முறைகள் சிலவற்றில் முக்கியமானது வாழைத் தண்டு ஜுஸ். அதன் தயாரிப்பு முறை பின்வருமாறு….
ஒரு நபருக்கு சுமார் பத்து செ மீ நீளமுள்ள ஓரளவு கனமான வாழைத் தண்டு இருந்தால் போதுமானது.
அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நாரை எடுத்துவிட்டு மிக்ஸியில் போட்டு சிறிதளவு சீரகமும் சேர்த்து வேண்டுமளவு தண்ணீர் ஊற்றி அரைத்து எடுக்கவேண்டும்.
அரைத்ததை வடிகட்டியும் பிழிந்தும் ஜுஸாக எடுத்து அப்படியே சாப்படலாம். சீரகம் சேர்ப்பதால் மணமாகவும் இருக்கும்.
சீரகம் இல்லாமல் சாறு எடுத்து எலுமிச்சம் சாறும் நாட்டுச் சர்க்கரையும் கலந்து இனிப்புப் பானமாகவும் அருந்தலாம்.
இதை அடிக்கடி சேர்த்து வந்தால் சிறுநீரகக்கல் பிரச்சினை வரவே வராது.
நோய் இல்லாதவர்களும் சாப்படலாம் மிகவும் நல்லது.
நோயினால் துன்பப்படுவதைவிட அதற்கு சிகிச்சைசெய்து செலவழிப்பதைவிட இது மிகவும் எளிய இயற்கையான தடுப்பு முறையாகும்.
சூரிய ஒளி போல
யாருடன் பழகினாலும் அந்தஸ்து பார்க்காமல் ஒரே மாதிரியான அணுகுமுரையுடன் உள்ளன்பு குறையாமல் பழகுங்கள்.
- ரீடர்ஸ் டைஜஸ்ட்
https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...01903106_n.jpg
Years pass by and our kidneys are filtering the blood by removing salt, poison and any unwanted entering our body. With time, the salt accumulates and this needs to undergo cleaning treatments and how are we going to overcome this?
It is very easy, first take a bunch of parsley or Cilantro ( Coriander Leaves ) and wash it clean
Then cut it in small pieces and put it in a pot and pour clean water and boil it for ten minutes and let it cool down and then filter it and pour in a clean bottle and keep it inside refrigerator to cool.
Drink one glass daily and you will notice all salt and other accumulated poison coming out of your kidney by urination also you will be able to notice the difference which you never felt before.
Parsley (Cilantro) is known as best cleaning treatment for kidneys and it is natural!
imgAttachment 2754img
எளிய இயற்கை வைத்தியம்:-
* சிறிது தண்ணீ*ரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டிகொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.
* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.
* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீ ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.
* வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.
* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.
* துளசி மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடியது. அதற்கு, துளசி இலையை ஒரு டம்ளரில் பறித்துப் போட்டு ஊற வைத்து, அந்தத் நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.
* தொண்டைப் புண் பாதிப்பு குணமான பிறகு கொஞ்சம் மிளகைத் தூளாக இடித்து, அதில் வெல்லம், நெய் கலந்து உருட்டி விழுங்கி வந்தால் அந்த பாதிப்பு முற்றிலும் குணமாகும்.
* அஜீரணம் மற்றும் மந்தத்திற்குச் சிறந்தது கொய்யாவின் கொழுந்து இலை. அதனை சாப்பிட்ட உடனேயே பலனை எதிர்பார்க்கலாம்.
மஞ்சளின் மகிமை--பாட்டி வைத்தியம்:-
1. மஞ்சளை உணவில் சேர்ப்பதால் பசியை உண்டாக்கும்.
2. மஞ்சளை உணவில் சேர்ப்பது வெறும் நிறத்திற்காக மட்டுமல்ல. மணத்திற்காகவும் உணவிலுள்ள தேவையற்ற கிருமிகளையும் நீக்கும் என்பதால் தான்.
3. மஞ்சளை சுட்டு முகர மூக்கில் நீர் வடியும் ஜலதோஷம் நிற்கும்.
4. அடிப்பட்டதினால் ஏற்பட்ட இரத்தக் கட்டு உள்காயங்களை நீக்க மஞ்சளை பற்று போடுவார்கள்.
5. வெறும் மஞ்சள் பொடியை புண்கள் மீது தூவ புண்கள் ஆறும்.
6. மஞ்சளுடன் வேப்பிலையை அரைத்துப் பூச அம்மையினால் ஏற்பட்ட கொப்புளங்கள் ஆறும்.
7. மஞ்சள், வேப்பிலை உடன் சிறிது வசம்பும் சேர்த்து அரைத்து பூச, மேகப்படை, விஷக்கடிகள் வட்டமான படைகள் போகும்.
8. மஞ்சளை இலுப்பை எண்ணெயில் குழைத்து, தடவ கால் வெடிப்பு குணமாகும்.
9. கஸ்தூரி மஞ்சளுடன், வெண்கடுகு சாம்பிராணி சேர்த்தரைத்து சுளுக்குகளுக்கு பற்று போட்டால் குணமாகும்.
10. மஞ்சள் சுட்ட சாம்பலுடன், ஊமத்தன் இலைச்சாறு குழைத்து பூச கட்டிகள் பழுத்து உடையும்.
11. மஞ்சளும், கடுக்காயும் பூச சேற்றுபுண் போகும்.
12. மஞ்சள் சுட்ட சாம்பலுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து பூச, ஆறாத புண்கள் ஆறும்.
13. மஞ்சளுடன், சாம்பிராணி, ஏலம் சுக்கு சேர்த்தரைத்து தலையில் பற்றிட தலைவலி போகும்.
14. மஞ்சளுடன் சுண்ணாம்பு மூலிகையும் சேர்த்து மிகவும் பிரபலமான புத்தூர் (ஆந்திரா) எலும்பு முறிவுக்கு கட்டப்படுகிறது.
15. மஞ்சள் தூளுடன், சிறிது கற்பூரத்தூளை சேர்த்து, கை கால்கள் சில்லிட்தற்கு பூச சூடேறும்.
16. கஸ்தூரி மஞ்சள், சந்தனம், சங்கு சம அளவு அரைத்து பூச முகப்பருக்கள் மறையும்.
17. பெண்கள் முக்கியமாக முகத்தில் மஞ்சளை பூசுவதற்குக் காரணம் முகத்தில் முடி வளருவதை தடுக்கிறது.
18. பெண்கள் மஞ்சளை பூசிக் குளிப்பதினால் அவர்கள் மேனி பொன்நிறம் பெறும்
imgAttachment 2756
Nature at it's Best..........
Attachment 2757