NOVEMBER 2ND -
HAPPY BIRTH DAY TO SIVA AND ANANTH
Raghavendra
___
:D
Printable View
NOVEMBER 2ND -
HAPPY BIRTH DAY TO SIVA AND ANANTH
Raghavendra
___
:D
இரு மலர்கள். இந்த படத்தின் பாடல் காட்சிகளிலெல்லாம் நமது ராகேஷ் அடிக்கடி சொல்வது போல் பல nuances நடிகர் திலகம் செய்திருப்பார். மன்னிக்க வேண்டுகிறேன் பாடலில் வரும் வாயசைப்பு பற்றி ஏற்கனவே பேசியிருக்கிறோம். அது போல் கடவுள் தந்த இரு மலர்கள் பாடல் காட்சி. இந்த பாடல் பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம். இனம் புரியாத சோகத்தை மனதில் விதைக்கும் மெல்லிசை மன்னரின் அற்புதமான இசை, வாலியின் முத்தாய்ப்பான வரிகள், இனிமையே உருவான சுசீலா, ஈடு கொடுக்கும் ஈஸ்வரி, திரையில் நாட்டியப் பேரொளியும் புன்னகை அரசியும் அவரவர் பாணியில் அழகுற செய்திருப்பார்கள்.
ஆனால் நான் சொல்ல வந்தது நமது நடிகர் திலகம் பற்றி. இந்தப் பாடலை எப்போது பார்த்தாலும் இரண்டு விஷயங்கள் பளிச்சென்று தெரியும், ஒன்று நடிகர் திலகத்தின் புற தோற்றம் மற்றொன்று அவரின் உடல் மொழி எனப்படும் body language. புற தோற்றத்தைப் பொறுத்த வரை ஆள் அவ்வளவு அழகாக இருப்பார். மோகன் குறிப்பிட்ட விகடனில் எழுதியது போல படு இளமையாக ஸ்லிமாக இருப்பார். அந்த பால்கனியின் கைப்பிடி ரைல்ஸ்-ஐ பிடித்தப்படி நிற்கும் அந்த போஸ் ஒன்றே போதும்.
Body language - அந்த பாத்திரம் [சுந்தர்] தன் காதலி மேல் தீராக் கோபம் கொண்டிருக்கின்றான். தன்னிடம் அவ்வளவு வாக்குறுதி கொடுத்தவள் வார்த்தை தவறி விட்டாளே என்ற ஆத்திரம், அவளை வாழ்க்கையில் மீண்டும் சந்திக்க நேர்ந்த போது அந்த கோவம் ஆத்திரம் எல்லாம் ஒன்று சேர்ந்து வார்த்தைகளால் அவளை குத்தி கிழித்த பிறகும் அடங்காமல் அவளைப் பார்க்கும் போதெல்லாம் அது முகத்தில் பிரதிபலிக்கிறது.
அவளாலும் நடந்த உண்மையை சொல்ல முடியவில்லை. தன் நிலையை பாடலாய் வடிக்கிறாள் அதை கேட்கும் போதும் நாயகனுக்கு கோபம் தணியவில்லை என்பது அந்த முகத்தில் தெரிகிறது.
அந்நிலையில் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினார்கள் என்பதையோ முன்பு நடந்தது என்னவென்றோ தெரியாத நாயகனின் மனைவி அவளுக்கு ஆறுதல் சொல்லி பாடுகிறாள்.
இந்த காட்சியை சற்று கூர்ந்து நோக்கினால் நான் முதலில் சொன்ன nuance தெரியும். கதைப்படி நாயகனுக்கு தன் மனைவி பாடப் போகிறாள் என்று தெரியாது. ஆனால் காட்சிப்படி சிவாஜி என்ற நடிகருக்கு விஜயா என்ற நடிகை வாயசைக்க போகிறார் என்று தெரியும். தெரிந்த ஒன்றை தெரியாதது போல் செய்ய வேண்டும், பார்வையாளனும் அதை உணர வேண்டும். இப்போது கவனியுங்கள். இரண்டாவது சரணம் தொடங்குகிறது
அலையில் மிதந்த மலர் கண்டு
அதன் மேல் கருணை மனம் கொண்டு
குரல் ஒலித்தவுடன் கிழே டீச்சரை பார்க்கும் நடிகர் திலகம், டீச்சர் பாடவில்லை குரல் தன் பக்கத்திலிருந்து வருகிறது என்று புரிந்து தன் மனைவியை பார்க்கும் நடிகர் திலகம், அந்த ஒரு வினாடிக்குள் அவர் முகத்தில் வந்து போகும் அந்த திகைப்பு +ஆச்சரியம், எப்படி இவரால் மட்டும் முடிகிறது? என்று பல முறை நான் வியந்து போவேன்.
பொதுவாகவே சினிமாவில் நடிகனுக்கு தெரியும், கதாபாத்திரத்திற்கு தெரியாது என்பதுதான் அடிப்படை என்றாலும் அதை இவர் அளவிற்கு convincing-ஆக செய்தவர்கள் எத்தனை பேர்?
பல முறை மனதில் தோன்றிய இந்த எண்ணத்தை எழுத்தில் வடிக்க வேண்டும் என்பது இன்று காலை இந்த பாடலை டி.வியில் பார்க்க நேர்ந்த போது தோன்றியது.
அன்புடன்
நண்பர் ஜெய்கணேஷ் 1000 பாடல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறார். சிலர் சில ஆல்பங்களை அப்படியே எடுத்துக் கொள்ளலாம் என்று அங்கே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த லிஸ்டிற்கு எது suit ஆகுமோ இல்லையோ, இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் நிச்சயமாக தேர்வு பெறும்
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 151
கே: சிவாஜி கணேசன், நடிப்புப் பயிற்சிக் கழகம் ஒன்றை ஆரம்பித்து, புது முகங்களுக்கு நடிப்புப் பயிற்சி அளித்தால் என்ன? (ஜி.கண்ணன், தேனி)
ப: நடிப்பில் முன்னேற ஆர்வம் உடையவர்கள், அவர் நடிப்பதை ஊன்றி கவனித்தாலே போதுமே.
(ஆதாரம் : பேசும் படம், ஜூன் 1971)
அன்புடன்,
பம்மலார்.
டியர் ஷிவ் சார்,
தங்களது உயர்ந்த உள்ளத்திலிருந்து வரும் உயர்வான பாராட்டுக்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 152
கே: மார்லன் பிராண்டோ, ரெக்ஸ் ஹாரிசன், அல்பசினோ, ராபர்ட் டிநீரோ - இவர்களில் நம் சிவாஜி கணேசனுடன் போட்டி போடத் தகுதி பெற்ற நடிகர் யார்? (ஜி.கே.எஸ்.மூர்த்தி, கோபிசெட்டிபாளையம்)
ப: பிராண்டோ, ரெக்ஸ் - இந்த இருவர் தான் சிவாஜியின் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவருமே சிவாஜி செய்த விதவிதமான ரோல்களைச் செய்ததில்லை என்பதே உண்மை. அந்த இருவரும் உலகின் மிகச் சிறந்த டைரக்டர்களிடம் பணியாற்றியவர்கள். சிவாஜி சுயம்பு!
(ஆதாரம் : ஆனந்த விகடன், 3.11.2002, "ஹாய் மதன்" கேள்வி-பதில் பகுதி )
அன்புடன்,
பம்மலார்.
டியர் முரளி சார்,
நடிகர் திலகம், நாட்டியப் பேரொளி, புன்னகை அரசி, வரகவி வாலி, மெல்லிசை மன்னர், இசைவாணி சுசீலா, இசைக்குயில் ஈஸ்வரி ஆகியோருடன் போட்டி போட்டுக் கொண்டு, தங்களது பதிவின் மூலம் பாடலைத் தங்களுடையதாகவும் ஆக்கிக் கொண்டு, திறனாய்வுத் திலகம் என்பதனை மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டீர்கள், மனமார்ந்த பாராட்டுக்கள்!
அன்புடன்,
பம்மலார்.
தொழிநோயாளிகளுக்குச்சேவை செய்வதையே லட்சியமாகக்கொண்ட 'டாக்டர் சிவா' அவர்களுக்கும்,Quote:
Originally Posted by RAGHAVENDRA
கொள்ளையர்களைப் பிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்ட 'வைர நெஞ்சம்' கொண்ட ஆனந்த் அவர்களுக்கும் 36-வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
'மலரே... குறிஞ்சி மலரே
(எங்கள்) தலைவன் (சிவா-ஜி) சூட நீ மலர்ந்தாய்
(அதன் மூலம்) பிறந்த பயனை நீ அடைந்தாய்'
ஆனந்த், உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துப்பாட..
'செந்தமிழ் பாடும் சந்தனக்காற்று
தேரினில் வந்தது கண்ணா'.
Welcome back to Pammalar, very good information about Smt.Indira Gandhi & our NT's association.
Mr.Murali did a very nice, short & sweet research about Iru Malargal.
Thanks
டியர் முரளி,Quote:
Originally Posted by pammalar
நான் சொல்ல நினைத்ததை பம்மலார் அவர்கள் சிறப்பாகச் சொல்லியிருப்பதால், அவர் கூற்றை அப்படியே வழிமொழிகிறேன். (நடிகர்திலகம் திரியின் முந்தைய பாகமொன்றில், இருமலர்கள் படத்தின் 'அன்னமிட்ட கைகளுக்கு' பாடலைப்பற்றி நான் எழுதியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்). அப்படத்தில் கே.ஆர்.விஜயா ரொம்ப அப்பாவியாக வந்து நம் அனுதாபங்களை அள்ளிக்கொண்டு போவார்.
MGR speaks about Sivaji Ganesan and Kamal hassan - Rare Old Article cuts from a magazine
http://www.smubla.com/view.cgi?key=1...e9af6af3cb6ade