பொங்கும் பூம்புனல்
நண்பர்கள் தினத்தையொட்டி ஸ்பெஷலாக...
http://www.youtube.com/watch?v=GQvBncn1aq4
Printable View
பொங்கும் பூம்புனல்
நண்பர்கள் தினத்தையொட்டி ஸ்பெஷலாக...
http://www.youtube.com/watch?v=GQvBncn1aq4
நன்றி ராகவேந்திரன் சார்.
'நீச்சல் குளம்' ஒரு விறுவிறுப்பான படமே.
நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல் பாலா மற்றும் சுசீலா இணைந்து பாடுவது.
இந்தப் பாடல்தான் என்று நினைக்கிறேன்.
நல்ல பாடல். இப்படத்திற்கு 'தாராபுரம்' சுந்தர்ராஜன் இசை என்று நினைவு.
'கட்டழகைத் தொட்டாலென்ன
கன்னத்திலே இட்டாலென்ன'
கட்டிலறைக் காவியமே
வா பக்கமா'
https://www.youtube.com/watch?v=qhWP...yer_detailpage
Suman started his film career as a police officer in Tamil movie 'Neechal Kulam' (1977) produced by T.R.Rammanna.
http://1.bp.blogspot.com/-ILseTnpAek...00/suman-3.jpg
சுமன் என்றதுமே எனக்கு உடனே நினைவுக்கு வரும் பாடல் 'கடல் மீன்கள்' திரைப்படத்தில் இளையராஜா இசையில் 'மலேஷியா' வாசுதேவன் பாடும் பாடல்தான்.
http://i1098.photobucket.com/albums/...al00000006.jpg
என்றென்றும் ஆனந்தமே
எண்ணங்கள் ஆயிரமே
வாலிபத்தின் ரசனை
கண்ணில் துள்ளவே வந்த அழகு
மஞ்சள் நிறப் பூவெடுத்து
மங்கை உடல் சீர் கொடுத்து
கொஞ்சி வரும் பாட்டெடுத்து
வந்த சுகமே
சொல்ல சொல்ல நெஞ்சை அள்ளும்
காவியம் பிறக்கும்
கொள்ளை கொள்ளும் வண்ணம்
இன்ப ராகம் பிறக்கும்
இசை மழை பொழிந்தது குயிலே
அழகே வருவாய் அருகே
தங்கச் சிலை நீ சிரிக்க
தாகம் கொண்டு நான் இருக்க
ஒன்றில் ஒன்று சேர்ந்திருக்க
எண்ணமில்லையோ
தொட்டு தொட்டு மன்மதனின்
லீலை அறிவோம்
மொட்டவிழ்ந்து வாசம் தரும்
பூக்களை ரசிப்போம்
அணைப்பதில் கிடைப்பது பெருமை
வருவாய் தருவாய் சுகமே
என்றென்றும் ஆனந்தமே
எண்ணங்கள் ஆயிரமே
வாலிபத்தின் ரசனை
கண்ணில் துள்ளவே வந்த அழகு
பிரமாதமான பாடல். இளையராஜா ஆரம்ப காலத்தில் போட்ட அற்புதமான பாடல். அம்பிகா சிறு வயதாக இருப்பார் அழகாகவே. மலேஷியாவின் கம்பீரக் குரலுக்குக்காகவே மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்.
http://i1098.photobucket.com/albums/...al00000005.jpg
https://www.youtube.com/watch?v=-dUR0nO8aqQ&feature=player_detailpage
நீச்சல் குளம் நான் பார்க்க விட்டுப் போன ஒரு படம்..என்றென்றும் ஆனந்தமேயும் நல்ல பாட்டு..சுமன் டார்லிங் டார்லிங் டார்லிங்கில் தான் கொஞ்சம் அடையாளம் தெரிந்தது..அதற்கு முன் மதுரை நியூசினிமாவில் ஆராதனை என்னும் படம் பார்த்த நினைவு சுமன் - சுமலதா.. நல்ல பாட்டும் ஒன்று இருந்த நினைவு..பாடல் நினைவிலில்லை..ஆனால் படம்..ம்ம் ஒரு பேய் ப் படமாக்கும்..
இமை தொட்ட மணிவிழி இரண்டுக்கும் நடுவினில் தூரம் அதிகமில்லை.. எனக்கு ரொம்ப்பப் பிடித்த பாடல்களில் ஒன்று.. நன்றி ராகவேந்தர் சார்..
ஆடியிலே பெருக்கெடுத்துக்கு நான் தான் லிரிக்ஸ் போட்டேன் :sad:
நண்பர்கள் தினத்தில் ,திரி நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
'சிவாஜி' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த சுமன் அப்போதே கமல் படத்தில் (எல்லாம் இன்ப மயம்) நடித்து விட்டார். இதில் இவருக்கு சுரேகா ஜோடி. அது சரி! சுரேகா யாரென்று கேட்கிறீர்களா?
http://www.metromatinee.com/Metromat...%20news%20.jpghttp://i.ytimg.com/vi/dlm2Xd_WR54/0.jpg
பரதன் எடுத்த 'தகரா' என்ற படத்தில் ஹீரோயினாக கவர்ச்சியுடன் நடித்தவர். அப்போது 'தகரா' ரொம்ப பிரபலம். அப்போதைய இளவட்டங்கள் மிஸ் பண்ணாமல் சுரேகாவின் கவர்ச்சிக்காக தகராவை டிக்கெட் கிடைக்காமல் 'தகரா'று செய்து பார்த்தார்கள். நம்ம பிரதாப் போத்தன் தான் ஹீரோ.
இந்த 'தகரா' தான் பின்னால் வினித், நந்தினி (அருணாவின் தங்கை) நடித்து 'ஆவாரம் பூ'வாக வெளி வந்தது. இளையராஜாவின் இசையில் அருமையான பாடல்களைக் கொண்ட படம் இது.
//தகராவை டிக்கெட் கிடைக்காமல் 'தகரா'று செய்து பார்த்தார்கள்// :) நந்தினி அருணாவின் தங்கை என்பது நான் அறியாத தகவல்..பட் ரொம்ப படங்கள்ள அவங்க நடிக்கலை (ஆவாரம் பூ பதினாறு வயதினிலே ரீமேக் மாதிரி இருக்கும் இல்லியா வாசு சார்)..
நந்தினி தொடர்பா அந்தக் கால கட்ட இன்னொரு நடிகையும் நினைவுக்கு வர்றாங்க..ஆம்னின்னு நினைவு..பிரபு நடையா நடையான்னு பாடற ஒரு பாட்டு உண்டு..பாடல் தான் நினைவுக்கு வரலை
வாவ்..எழுதுங்க வாசுசார்.. வீ ஆர் வெய்ட்டிங்க்.. :)
ஆம்னி
ஹானஸ்ட் ராஜ், இதுதாண்டா சட்டம், விட்னெஸ், முதல் சீதனம் (இதில் ஒரு அருமையான பாடல் உண்டு சி.க.சார். 'எட்டு மடிப்பு சேல... இடுப்பில் கட்டப்பட்ட ஒரு சோல') படங்களில் நடித்திருக்கிறார்.
http://123tamilforum.com/imgcache2/2...57454496-1.png
http://www.inbaminge.com/t/p/Paasava...995/folder.jpg
கமலுடன் 'சுப சங்கல்பம்' தெலுங்கு படத்தில் ஹீரோயின் இவரே. கே. விஸ்வநாத் படம் இது. தமிழில் 'பாசவலை' என்று வந்து நம் பொறுமையை சோதித்தது.
உங்களுக்குப் பழைய பாடல் சிங்கம் எனப் பட்டம் கொடுக்கலாம் என நினைக்கிறேன்..வாசு சார் :) சூப்பர்..
நான்கைந்து வருடம் முன்னால் 2009 ஆ 2010 ஆ நினைவிலில்லை..ஆனால் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முதல் நாள்.. கோல்டன் பீச்சிற்கு எதிரில் ஒரு கிமீ தள்ளி எதிர்ப்புறம் அமைந்திருக்கும் ஒரு ரிசார்ட்டில் மூன்று குடும்பங்கள் ஹாலிடேக்காகச்சென்றிருந்தோம்..
ரிசார்ட் ஓனரின் தம்பியின் பெயர் ரமணா.. ரிசார்ட் ஓனர் தன் தம்பியை வைத்து தம்பி அர்ஜூனா எனப் படம் எடுப்பதாகவும் சொல்லி பாடல்கள் எல்லாம் போட்டுக் காண்பித்தார்..பின் அதில் ஒரு ரோலுக்காக சுமன் வந்திருக்கிறார்..அவரும் அங்கேயே தங்கியிருக்கிறார் எனச் சொன்னார்..
மறு நாள் காலை சுமனிடம் அறிமுகமும் செய்வித்தார்..பளீரென்ற தோற்றம்..சிவாஜியில் பார்த்ததை விடக் கொஞ்சம் மெலிந்த உடல் வாகு..கை குலுக்கிய போது அவரது தன்னம்பிக்கை தெரிந்தது..சிவாஜியில் நன்றாக குண்டாக இருந்தீர்கள்..இப்போது இளைத்துவிட்டீர்கள் குட் எனச் சொல்ல..ஓ குண்டாக நான் எவ்வளவு கஷ்டப் பட்டேன் தெரியுமா எனப் புன்னகைத்தார்..ம்ம்
(அந்தத் தம்பி ரமணா சில படங்களில் நடித்திருக்கிறார்..சமீபத்தில் கூட பார்த்திபன் விமல் படத்தில் ஒரு ரோல்..அந்தப் படத்தின் பெயர் மறந்து விட்டது)
நான் சந்தித்துப் பேசிய ஒரே நடிகர் சுமன் தான் :)
//திரைப்படத்தில் -சீவி முடிச்சி சிங்காரித்து-பாடலில் ஈ.வி.சரோஜாவை கிண்டல் செய்து பாடியிருப்பார்.// அந்த சீவி முடித்து சிங்காரித்து தான் இசைக்களஞ்சியத்தில் (சிலோன் ரேடியோ) ஆரம்ப ட்யூனாக வரும் ( நேரம் 4 டு 4.30 என நினைவு)
http://mimg.sulekha.com/tamil/thambi...i-arjuna_m.jpg
சி.க.சார்,
நீங்கள் கூறிய படம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். சுமனும், ரமணாவும் 'தம்பி அர்ஜுனா' படத்தில் இருக்கும் போஸ் இது.
இன்னொரு விஷயம். இந்த நடிகர் ரமணா யார் என்று கண்டு பிடிக்க முடிகிறதா?
பழைய நடிகர் விஜய்பாபு என்று ஒருவர் இருந்தாரே.. 'படிக்காதவன்' படத்தில் நடிகர் திலகம், ரஜினியின் சகோதரர் ..... 'ஒரு விடுகதை ஒரு தொடர் கதை' எம்.ஏ காஜா படத்தின் இரட்டை நாயகர்களில் ஒருவர். அந்த விஜய்பாபுவின் மகன்தான் இந்த ரமணாவாம்.
'படிக்காதவன்' படத்தில் விஜய்பாபு
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/nm.jpg
ஓ.. விஜய்பாபுவின் மகனா இவர்..விஜய்பாபுவின் பாடல் நினைவுக்கு வருகிறதா..மழைக்கால மேகம் நீர் கொண்டு வந்து மலையின் முடிவில் பொழியும் வழியும் நிலமும் அதனால் குளிராதோ - அம்பிகையின் இரண்டாவது படம்-தரையில் வாழும் மீன்கள்..இன்னொரு படம் கூட உச்சக்கட்டம் அதிலும் இவர் தானே?!
பார்த்திபன் விமல் ரமணா நடித்த படம் நினைவுக்கு வந்து விட்டது..ஜன்னல் ஓரம்..வித்தியாசமான படம்..ஸோ வி.பாவின் மூத்த மகனைத் தான் நான் பார்த்திருக்கிறேன் :)
உச்சக்கட்டம் ல் ஒரு பாட்..இதழில் தென் பாண்டி முத்துக்கள்..வைரங்கள்..எனச் செல்லுமாக்கும்.. :) அதில் ஹீரோயின் சுரேகா இல்லை..ஹி ஹி..சுனிதா..
I am dedicating this song to Mr Vasu ji the following NT's Melodious Song from PB.
http://youtu.be/w-l5vYDIh8U
சி.க.சார்!
பார்த்தீர்களா? உங்களால் ஒரு மிக நல்ல பாட்டு 'தரையில் வாழும் மீன்கள்' படத்திலிருந்து நினைவு படுத்தப்பட்டிருக்கிறது. அருமையான பாடல். கவிஞரல்லவா! அதான் ரசனையின் உச்சம். மிகப் பிரமாதமான பாடல். நீண்ட நாள் சென்று தங்கள் புண்ணியத்தில் கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறேன் புதையல் கிடைத்தது போல. நன்றி கவிஞரே!
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=cwwQi0mb8yU
சி.க.சார்,
'மழைக்கால மேகம்' பாடலைக் கேட்டால் அமிதாப், சத்ருகன் நடித்த 'ஷான்' படத்தின் 'பியார் கரனே வாலே... பாடல் போலவே சாயல் கொஞ்சம் இல்லை?
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=RbPDSKqKPCQ
'உச்சகட்டம்' சரத்பாபு, ராஜ்குமார், சுனிதா (wine &women):) புகழ் நடித்தது. இதில் விஜயபாபு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இயக்குனர் ராஜ்பரத். தொட்டால் சுடும், சொல்லாதே யாரும் கேட்டால், இதுதான் ஆரம்பம், ஒரே குறி.... இந்தப் படங்கள் எல்லாம் ராஜ்பரத் இயக்கியவை. என்ன சார்! குழப்புதா?:)
வாசு சார் நன்றி.. மழைக்கால மேகம் பாடல் தேடி இட்டமைக்கு.. நானும் கேட்டு மகிழ்ந்தேன்..
ஊடி வலையில் உளமார வாசுசார்
தேடித்தான் பார்த்ததில் தேன்
அப்புறம் ஸாரி..விஜய்பாபு அண்ட் ராஜ்குமார் கன்ஃப்யூஸ் ஆகிவிட்டேன்..ராஜ் பரத் படம் தானே முதல் உச்சக்கட்டத்துடன் ஓவர்..மற்றவை எல்லாம் ஒரே டைப்..
யெஸ்..ப்யார் கர்னே வாலி பாட்டிற்கும் இதற்கும் ஒற்றுமை தெரிகிறது..ஆனால் தரையில் வாழும் மீன்கள் முன்னாலேயே வந்து விட்டது தானே?
இல்லை சின்னக் கண்ணன் சார். த.வா .மீன்கள் 'ஷான்' படத்துக்குப் பிறகுதான் ரிலீஸ். ஷான் 1980. இது 1981. மீன்களுக்கு இசை சந்திரபோஸ் அண்ணாச்சி. தெரிந்தும்,தெரியாமலும் கொஞ்சம் நிறையவே சுடுவார். அதுவும் இந்தியில் அதிகம் சுடுவார். இதுவும் அப்படித்தான்.
நீல பட்டாடை கட்டியதற்கு நன்றி வாசு. நண்பர்கள் தினத்தில்தான் ராமு,ராஜா போட்டு மிரட்டி ,தினத்தையே கெடுத்தாய்.ஆண்டவன் படைச்சான்,வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று நிறைய உள்ளதே?
நட்புக்கு வயதேது, காலமேது,
http://skjbollywoodnews.com/wp-conte...1024x768_z.jpg
கூகுள் லோகோ மூலம் இன்று இந்தப் பாடகன் உலகமெங்கும் இசை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகி அவர்தம் நெஞ்சங்களில் நிறைகிறான். ஜாலி ஒன்றையே வாழ்க்கையாகக் கொண்டு கலகலப்பாக வாழ்ந்த மறக்கவொண்ணா பாடகன்.
அவன் பிறந்தநாள் இன்று.
கிஷோர்குமார் என்று அழைக்கப்பட்ட அந்த கில்லாடி நிகழ்த்திய சாதனைகள் எண்ணிலடங்காது. எத்தககைய பாடல்களையும் பாடி ஊதித் தள்ளிய திறமையாளன். இந்திப் பாடல்களுக்கு தனி உருவம் கொடுத்தவன். காமெடி முதல் கஜல் வரை கலக்கி எடுத்தவன்.
அவன் பிறந்தநாளில் அவன் கொடிநாட்டிய பாடல்கள் சிலவற்றின் மூலம் அவனுக்கு இதயபூர்வமான நம் வாழ்த்துக்களைக் கூறுவோம்.
முதலில் ஒரு கலகலப்பான கிஷோர் அவர்களின் அமர்க்களத்தைப் பார்ப்போம்.
தான் நேரிடியாகப் பாடும் கச்சேரி மேடை ஒன்றில் அவ்வளவு பெரிய பாடகன் ரசிகர்களோடு ரசிகர்களாக கலந்து அவர்களை தன்னோடு பாடவைத்து ஆடவைத்து அடிக்கும் கூத்துக்கள் நம்மை விலா நோகச் செய்கின்றன.
அதுவும் 'ஓ... கைகே பான் பனாரஸ்வாலா' டான் படப் பாடலைப் பாடி அமர்க்களம் பண்ணுவதைப் பாருங்கள்.
https://www.youtube.com/watch?v=GVD-r4MU3Wc&feature=player_detailpage
http://www.hindustantimes.com/Images...hore-kumar.jpg
கிஷோர் 'முக்கந்தர் கா சிக்கந்தர்' படத்தில் பாடிய மறக்கவே முடியாத, அமிதாப் அவர்களின் அமர்க்களமான பைக் சவாரியில் நம்முடன் என்றும் பயணிக்கும்
'ரோத்தே ஹூவே ஆத்தா ஹே சப்'
பாடல்.
இந்த ஒரு பாடல் போதும் கிஷோர்ஜியின் பெயரை காலம் முழுதும் சொல்ல.
https://www.youtube.com/watch?v=RuQMjuvMugk&feature=player_detailpage
http://images.mid-day.com/2013/feb/Kishore-Kumar.jpg
'அனாமிகா' படத்தில் கிஷோர்ஜி சஞ்சீவ் குமார் அவர்களுக்காகப் பாடிய சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்
'மேரி பீகி பீகி சே'
இந்தப் பாடலைக் கேட்டவர்கள் மறுமுறை கேட்காமல் இருக்க மாட்டார்கள்.
https://www.youtube.com/watch?v=K0THyu8oNlw&feature=player_detailpage
http://mimg.sulekha.com/events/kisho...ictures030.jpg
'அந்தாஜ்' திரைப்படத்தில் இளமை கொப்பளிக்கும் ராஜேஷ் கண்ணாவுக்காக கிஷோர் பாடும் உற்சாகப் பாடல்.
'ஜிந்தகி ஏக் சபர் ஹே சுஹானா'
'ஓட்லயீ ஓட்லயீ ஊ....ஓட்லயீ ஓட்லயீ ஊ'....
என்ன ஒரு பாடல்!
https://www.youtube.com/watch?v=UBUEXlOsGPY&feature=player_detailpage
kishore kumar - sweet voice.
http://youtu.be/a-9tKVYD4o4
https://lh3.googleusercontent.com/-N...or-Kishore.jpg
தேவ்ஜி நடித்த மிகவும் புகழ் பெற்ற 'கைட்' படத்தில் லதாவுடன் இணைந்து கிஷோர் படும் நம்மை மெய்மறக்கச் செய்யும் பாடல்.
'காதாரஹே மேரா தில்
தூ ஹி மேரி மன்ஜில்'
சோறு, தண்ணி, ஊன், உறக்கம் எதுவும் வேண்டாம். இந்தப் பாடல் ஒன்று போதும்.
https://www.youtube.com/watch?v=b543r0E8ciI&feature=player_detailpage
http://www.keefarakpainda.com/wp-con...8/kishore1.jpg
'Door Gagan kee Chhav Mein'
படத்தில் கிஷோர் நடித்து பாடும் அதி அற்புத பாடல்.
https://www.youtube.com/watch?v=7bNULRlWh1k&feature=player_detailpage
ஹிந்தியில் சொந்தப் படம் எடுத்து நடித்து பாடி... கிஷோர் குமார் அந்தக் காலத்தில் செதுக்கிய சிற்பம் ஒன்று
பல மொழிகளிலும் மெருகேற்றப்பட்டு பளபளத்தது.
வீடு திரும்பும் ராணுவ வீரன் மனைவி தீவிபத்தில் இறந்து போக ஊமை மகனுடன் திரியும்போது ஒரு
பணக்கர்ரப் பெண்ணைக் காப்பாற்றி அவளிடம் வேலைக்கு சேர அவளோ அவனையே நேசிக்க ஆரம்பிக்க
.... அவன் " நிலவே என்னிடம் நெருங்காதே" என்று பாடும் கதை தெரியுமல்லவா ? அட.. நம்ம "ராமு"வேதான்..
அதன் ஒரிஜினல் இதுதான் ..."தூர் ககன் கி சாவொன் மே" எனும் இந்தப் படம்.
இதில் இடம் பெற்ற "கோயி லௌட்டாதே மேரே பீதே ஹுவே தின்" எனும் இந்தப் பாட்ல்...
( அங்கங்கே தென்படும் இசைத் துணுக்குகளில் இது சத்தியம் படத்தின் "காதலிலே பற்று வைத்தாள்"
பாடல் தென்படுகிறதோ ?_
http://youtu.be/OBdZDPrHzg8
https://lh3.googleusercontent.com/-v...ar-Ganguly.jpg
'தண்டி ஹவா ஏ சாந்த்னி சுஹானி'
'ஜும்ரூ' படத்தில் கிஷோர் பாடி தென்றலாய் நம் மனதை மயிலிறகால் வருடுவது போல வருடும் பாடல்.
நாம் மனம் மயங்கி சொக்கிப் போகத்தான் வேண்டும்.
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=7-AJ7HxlUFU