Save some for me. Next time I will take transAtlantic flight stopping by your place ! :lol:
Printable View
ஓ.. தாங்க்ஸ் ராஜேஷ்..
//எதை கேட்பதோ எதை சொல்வதோ
நான் அறியாத பெண்ணல்லவோ
நீ கேட்கலாம் நானும் சொல்லலாம்
அது புரியாத ஒன்றல்லவோ// இந்தப் பாட்டு தேடிக்கிட்டே இருக்கேன் சிக்க மாட்டேங்குது..!
(மதுரகானத்துக்காக ஒரு பாட்டும் போட்டாச்சு!)
அது என்ன அழகாகச் சிரித்தது அந்த நிலவுன்னு ஒரு பாட்டு மனசுக்குள்ற ரீங்காரம் பாடுது..!
ஆஹா வாங்கோ வாங்கோ.. ஃப்ரஷ்ஷா பண்ணியே தருவோமே..
இப்போதைக்கு ஒரு பாட்டு
வரச் சொல்லடி அவரை வரச்சொல்லடி
அந்தி மாலை நேரந்தனில் நானாகத் தரவேண்டும்
வரச்சொல்லடி..
:)
வாசு, சி க, அங்கிள், ராகவ் ஜி, மதுண்ணா
இதோ மனதை மயக்கும் ஒரு கன்னட பாடல்
குல கவுரவா (தமிழில் பின்னாளில் இதே படம் குல கெளரவம் என்று முத்துராமன் ஜெயந்தி நடித்து வெளிவந்தது)
டி.ஜி.லிங்கப்பாவின் இசை அப்படியே அந்த வயலின் ஆஹா நம்மை அசையவிடாது
இசையரசி பற்றி சொல்லவும் வேண்டுமா...
ராகா நின்னது பாவா நன்னது
https://www.youtube.com/watch?v=a4DS4fNta04
சிக உமக்காக விளக்கம்
ராகம் உன்னுடையது பாவம் என்னுடையது
தாளம் உனது நாட்டியம் எனது
மனமே யமுனா
மனையே(வீடு) கோகுலம்
நான் புல்லாங்குழல்(முரளி)
நீ கோபாலா
நாம் இணைவது ஒரு புதிய சங்கமம்
வா என் இதய வீணையை மீட்டு. இருவரும் சேர்ந்து பாடுவோம் அமர கானம்
என் வாழ்க்கை கோவிலுக்கு ஒளி தந்தாய்
என் வாழ்க்கைபடகை ஓட்டுபவன் நீ
உன் புன்னகை மல்லிகை போன்றது
இந்த அன்பு இந்த கனிவு இந்த காதல் என்றுமே இருக்க வேண்டும்.
ஆஹா.. தாங்ஸ் ஃபார்த பாட் அண்ட் விளக்கம் ராஜேஷ்.. கேட்டேன் கோகுலா சங்கமா (ம் விட்டுட்டு கால் போட்டால் கன்னடா ஆகிடும் போல.. கன்னடம் ஆகிடும் போல)
இந்தாங்கோ இதுக்கு வீடியோ அகப்படலை உங்க சுசீலாம்மா பாட்டு.. ( சாதகப் பறவைகள்க்காக இன்னிக்கு ப் ப்ரோக்ராம் இருக்கு..ஆனா ஸ்பான்ஸர் ப்ரோக்ராம்.டிக்கட் ரேட்லாம்போடலை..ம்ம் கேட்டுப்பார்க்கணும்)
வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்
கண்ணா ஆஆ கண்ணா ஆஆஆ
பொன்னி சிரிக்கும் தஞ்சை நாட்டில் காணப்
போக வேண்டும் சூரக்கோட்டை - அந்த
சூரக் கோட்டை சின்ன ராஜா - உங்க
தோள்களிலே இந்த வண்ண ராணி கண்ணா
கட்டிலில் பாடலாம் கைகளில் ஆடலாம்
தொட்டு விளையாடினால் தொட்டில் வரை போகலாம்
தொடங்கட்டும் கோகுல லீலைகளெல்லாம் - பின்பு
தொடரட்டும் கண்ணனின் சேவைகளெல்லாம்
*
போனஸாக..
உங்களுக்காக சப்தபதி பாட்டு..ஹே ஜாதவே.. (ஆடுபவர் சபிதா பொம்மிடிப்பட்டி)
http://www.youtube.com/watch?v=pHh8w...yer_detailpage
http://upload.wikimedia.org/wikipedi...endran.S.S.jpg
இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடு செய்யவொணா இழப்பாகும். தமிழ் மொழியின் மீது அவரது பற்று மிகவும் ஆழமானது. அவர் நடித்த படங்களில் இடம் பெற்ற பல பாடல்கள் மக்களால் பெரிதும் வரவேற்புப் பெற்றுள்ளன.
அவர் நினைவாகவும் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ...
அவரே பாடிய பாடல்...
http://www.youtube.com/watch?v=PxB877Szahk
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 3)
தேவராஜ் மோகன், இளையராஜா கூட்டணியில் இன்னொரு கருப்பு வெள்ளைப் படம். வஞ்சனை இல்லாமல் பாடல்கள் போட்டுக் கொடுத்த இசைஞானி. இளையராஜாவை நம்பினார் கெடுவதில்லை. நீ பெரிய தயாரிப்பாளர், நீ பெரிய நடிகன், நீ சின்ன பட்ஜெட் புரடியூசர், நீ சின்ன நடிகன் என்ற பாகுபாடெல்லாம் ஞானியிடம் கிடையவே கிடையாது. தராசு போல நடுநிலை ராஜா.
சின்ன நடிகர்கள், சின்ன பட்ஜெட் படம். மாதவன் தயாரித்து தேவராஜ் மோகன் இயக்கிய படம். புகழ் பெற்ற 'கௌரவம்' படத்தில் நடிகர் திலகம் பாடும் 'பாலூட்டி வளர்த்த கிளி' பாடல் வரியே டைட்டிலாக.
ஆம். 'பாலூட்டி வளர்த்த கிளி' படத்தின் பாடல்கள் இன்று மட்டுமல்ல அன்று மட்டுமல்ல என்றுமே சுகம்.
விஜயகுமார், ஸ்ரீப்ரியா இருவரின் மௌனக் காதலை மிக அழகாக நம்முள் புதைக்கும்,
'நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தையில்லை'
அமிர்தத்துக்கு இணையான பாடல்.
'வாடியம்மா பொன் மகளே வந்த இடம் நல்ல இடம்' இனிமையோ இனிமை. சாமிக்கண்ணு பொடி உறிஞ்சும்போது அதுக்கும் கூட கலக்கல் மியூசிக். சுசீலாம்மா, பாலா ரகளை.
இப்போது நாம் பார்க்கப் போவது நாம் அனைவரும் சிறுவயதில் விளையாடி மகிழ்ந்த
'கொல கொலையா முந்திரிக்கா
நரிய நரிய சுத்தி வா'
விளையாட்டுப் பாடல்தான்.
விளையாட்டுப் பாடலைக் கூட மிக இனிமையாகத் தந்திருப்பார் ராஜா. ஜானகியும் 'ஜம்'மென்று பாடியிருப்பார். இசை உற்சாக அருவியாய் நம்மை மகிழ வைக்கும். அப்போதுதான் பறித்துப் போட்ட செவ்விளநீர் போல இளமை கொழிக்க, செழிப்பான புள்ளிமான் போல், பிள்ளைகளுடன் துள்ளி துள்ளி ஓடி விளையாடுவார் அழகு கன்னக்குழி ஸ்ரீபிரியா.
ஏனோ நம்மையறியாமலேயே உற்சாகம் பீறிட்டு வந்து நம்மைத் தொற்றிகொள்ளும் இந்தப் பாட்டிலே.
http://www.youtube.com/watch?feature...&v=ylfCsR4GMx4
வாசு ஜி,
ஆம் பாலூட்டி வளர்த்த கிளி பாடல்கள் எல்லாமே அருமை .. இனிமை ..
//செழிப்பான புள்ளிமான் போல், பிள்ளைகளுடன் துள்ளி துள்ளி ஓடி விளையாடுவார் அழகு கன்னக்குழி ஸ்ரீபிரியா.// புள்ளி மான்லாம் ஒல்லியான்னா இருக்கும்..! :)ம்ம் பாலூட்டி வளர்த்த கிளி படம் பார்த்ததில்லை..கொலைகொலையாம் முந்திரிக்கா எனக்குப் பிடிக்கும்.. தாங்க்ஸ் வாசுசார்..நான்…பேச வந்தேன் சொல்லத் தான் வார்த்தை இல்லையும் நல்ல பாட்
:என்னை துரோகி என்று சொல்லாதே தியாகு.. நான்காதலித்த வானம்பாடி தான் உன் மீனா” ஆலயமணி
“என்னமோ தாது தூதுன்னு பேசறாங்க..அர்த்தமும் அவங்களே சொல்லட்டும்..” வானம்பாடி
“வாராதிருப்பாளோ வண்ண மலர்க் கன்னி அவள்” – பச்சை விளக்கு
“என்னை விட்டு ஓடிப் போக முடியுமா “
ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே
ம்ம் இன்னும் பல இனிய பாடல்கள் காட்சிகள்..செய்தவர் மறைந்து விட்டார். எஸ்.எஸ்.ஆர்.. அவர் ஆன்மா சாந்தியடைவதாக..