Quote:
Originally Posted by KCSHEKAR
Printable View
Quote:
Originally Posted by KCSHEKAR
அன்னை இல்லத்தின் நாயகிக்கு ஆத்மார்த்தமான அஞ்சலி
" 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்'னு கண்ணதாசன் பாடுவாரே, அந்த 'வரம்' அண்ணனுக்குக் கிடைக்கணும்ங்கிறதுக்காகவே, நீங்க அவருடைய அக்கா மகளா ஒரு குக்கிராமத்துல அறுபத்தெட்டு வருஷங்களுக்கு முந்திப் பொறந்தீங்க.
'இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று' - கண்ணதாசன் பாடுன இந்தப் பாட்டும் ஒங்களுக்குப் பொருந்திடுச்சு. உள்ளந்திறந்து சொல்றேன், 'மருமகளா... வீட்டுக்கு வந்த மகாலட்சுமி'னு சொல்வாங்களே, சத்தியமா அது நீங்க தான்.
1952-ல், பன்னன்டு அல்லது பதிமூணாவது வயசுல, இருபத்து மூணு வயசான அண்ணன் ஒங்க கழுத்துல மாங்கல்யம் புனைஞ்சு, ஒங்க கைய புடிச்சதுக்கப்பறந்தான், கமலாங்குற பேர்கொண்ட தாமரையான ஒங்க முகத்தைப் பாத்து, கணேசன்ங்கிற அந்த சிவாஜி உதிச்சு வெளிச்சத்துக்கு வந்தாரு! நீங்க அவர் வீட்டுக்கு வந்து விளக்கேத்தி வெச்சதுக்கப்பறந்தான் 'பராசக்தி' வந்து அவர் வாழ்க்கையில விளக்கேத்தி வச்சா. நீங்க புன்னகை புரியப் புரிய அவருக்குப் புகழ் பொங்குச்சு! நீங்க சிரிக்கச் சிரிக்க அவருக்குச் செல்வம் சேந்துச்சு!
பொழுது விடிஞ்சதிலிருந்து ராத்திரி தூங்கற வரைக்கும் அவரு, 'கமலா, கமலா'ன்னு கூப்பிட்டதை எண்ணிப்பாத்தா, குறைஞ்சது நானூறு ஐநூறு தடவையாவது இருக்கும். எனக்குத் தெரிஞ்சு அவர் ஒங்களைக் கட்டிக்கிட்டதிலேந்து நிரந்தரமா ஒங்களை விட்டுப் பிரிஞ்சு போன அந்த நாள் வரைக்கும், நீங்க இல்லாம வீட்டுல அவர் இயங்கினதே இல்லை. இயங்கவும் அவரால முடியாது.
அவர் ஒங்களைக் கோவிச்சுக்கிட்டதை ஒருநாளும் நான் பார்த்ததே இல்லை. ஒங்களைக் குறை சொன்னதாகக் கேள்விப்பட்டதும் இல்லை. 'மாமா, மாமா'ன்னு எப்போ பாத்தாலும் ஒரு குழுந்தை மாதிரி அவரையே சுத்தி வந்துகிட்டிருப்பீங்க! ஒரு மனிதனுக்கு நல்ல மனைவி மட்டும் அமைஞ்சிட்டா, அவ பாதி தாய்க்குச் சமம்! நீங்க அவருக்குப் பண்புள்ள மனைவியா மட்டும் இல்லாம பாசமுள்ள தாயாவும் இருந்து கவனிச்சிக்கிட்டீங்க.
பேரன் பேத்திங்க எடுத்ததுலேர்ந்து பேத்தியோட கல்யாணம் வரைக்கும் பாக்க வேண்டியதையெல்லாம் பாத்து சந்தோஷப்பட்டு, அண்ணன் இல்லேங்குற ஒரே ஒரு குறையோட மட்டும் ஆறு வருஷங்களா வாழ்ந்துக்கிட்டிருந்த எங்கள் அன்புள்ள கமலா அம்மா! அண்ணனைப் பாக்குறதுக்காக ஆகாயத்துக்குப் போய்ட்டீங்க! போயிட்டு வாங்க...! ஒங்க பேரன்-பேத்தி யாரோட கருவுலேயாவது நீங்க ரெண்டு பேரும் உருவாகி, மறுபடியும் ஒங்க அன்னை இல்லத்துக்கு வாங்க. போயிட்டு வாங்கம்மா...!"
- திரை இலக்கிய விற்பன்னர் ஆரூர்தாஸ் 11.11.2007 தேதியிட்ட 'ஜூனியர் விகடன்' இதழில் கமலா அம்மாளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எழுதிய கட்டுரையிலிருந்து (சில வரிகள் மட்டும் மேலே கொடுக்கப்பட்டுள்ளது).
இன்று 2.11.2010 நடிகர் திலகத்தின் மனைவி கமலா அம்மாள் அவர்களது மூன்றாம் ஆண்டு நினைவு தினம்.
பக்தியுடன்,
பம்மல் ஆர்.சுவாமிநாதன்.
டியர் பம்மலார்,
ஆரூர்தாஸ் அவர்களின் அஞ்சலிக்கட்டுரை இதயத்தை நெகிழ வைக்கிறது. அதனைப்பகிர்ந்துகொண்ட உங்களுக்கு நன்றி.
ஒரு சிறு இடைவேளைக்குப்பிறகு மீண்டும் கலக்க வந்திருக்கும் பம்மலார் அவர்களை துள்ளலுடன் வரவேற்க்கிறோம்.
முரளி சார்,
வழக்கம்போல் தங்கள் ஆய்வுக்கட்டுரை மிகவும் அருமை.தாங்கள்தான் நடிகர்திலகத்தின் ரசிகர்திலகம் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டீர்கள்
நடிகர்திலத்தின் 83வது பிறந்தநாளை முன்னிட்டு கர்நாடக மாநில சிவாஜி பிரபு ரசிகர்மன்றத்தின் சார்பாக கர்நாடக தமிழ் சங்கத்துக்கு ஒரு கம்ப்யூட்டர் இலவசமாக வழங்கப்பட்டது.இதைப்பற்றிய விரிவான செய்தி மற்றும் புகைப்படத்தை அப்லோட் செய்யும்படி திரு.குமரேசன்பிரபு அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
Dear NT Fans
Wishing you all a very Happy, prosperous and safe DEEPAVALI.
Pl dont miss Mr.Prabhu's program in Jaya TV at 3.30pm on Diwali day.
Regards
Shiv
:clap: :clap: எப்படி முரளி சாரால் மட்டும் இவ்வளவு நுணுக்கமாக Observe செய்ய முடிகிறது என்று நானும் வியக்கிறேன்.Quote:
Originally Posted by Murali Srinivas
Thanks Mr.Nov for posting the Tirunelveli Funtion Invitation.
MY DEAR NT FANS,
Hope the festival of lights enlightens your home and heart with peace and serenity..
May the Goddess of wealth and the God of Knowledge bless you all with their choicest blessings. On this Diwali and always!
On this auspicious festival of lights,
May the glow of joy,
Prosperity and happiness
Illuminate your life and all your homes.....
Wishing you loads of joy and happiness on Diwali......
JAIHIND
M. Gnanaguruswamy
There is another article in this week's Ju.Vi on S.A. Kannan's book. Very touching...