http://i60.tinypic.com/2r6cdc0.jpg
Printable View
எங்கள் குடும்பத்தின் சார்பாக தங்கத்தலைவனுக்கு கண்ணீர் அஞ்சலி
http://i58.tinypic.com/sc6sux.jpg
NADIGAR THILAGAM SIVAJI GANESAN
http://i61.tinypic.com/206xw7d.jpg
இன்றைய தமிழ் இந்து வெளியிட்ட செய்திகள்.
----------------------------------------------------------------------------------
http://i61.tinypic.com/30sug4o.jpg
http://i60.tinypic.com/aoubes.jpg
இன்றைய தின மலர் தினசரி வெளியிட்ட செய்தி.
---------------------------------------------------------------------------------------
http://i57.tinypic.com/2n6xatw.jpg
http://i62.tinypic.com/2znpgsl.jpg
இன்றைய தின இதழ் நாளிதழில் வெளிவந்த செய்திகள்.
-----------------------------------------------------------------------------------------------------
http://i61.tinypic.com/24ffwhx.jpg
மக்கள் திலகம் அவர்கள் நினைவுநாள் - சில எண்ணங்கள் !
december 24 - நாட்காட்டியில் ஏழை எளிய மக்கள் மறக்க நினைக்கும் நாள் இன்று !
ஆம் ! ஜனனம், மரணம் இரெண்டும் மனிதன் சலுகை பெறமுடியாத இயற்க்கை !
மக்கள் அந்த இயற்கையிடம் கூட சலுகை வேண்டியது உன் ஒருவனுக்குதான், உன்னை எப்போதும் தங்களுடன் வைத்திருக்கவேண்டும் என்பதற்குத்தான்...!
இலங்கையில் பிறந்ததால் சிங்களவரா..?
கேரளாவை பூர்விகமாககொண்டதால் கேரளத்தவரா ?
அண்ணா மீது பற்றுகொண்டு தமிழ் மண்ணில் இருந்ததால் தமிழனா ?
இல்லை...இப்படி எதுவும் இல்லை...இவை எதுவும் இல்லை.....பிறகு எதுதான் உண்டு ?
ஏழை எளிய மக்கள் மீது அபரிதமான பற்றுகொண்டதால் நீர் இதய தெய்வம் அல்லவா ! அதுதான் உண்மை !
அயோத்தி ராமனின் பெயர் கொண்டது உமது பெயர்...ஆனால் கீதை சொன்ன கண்ணன் சாதுர்யம் உனது மட்டுமே திறம் !
பாரத போர் வென்றது கண்ணனின் சாதுர்யத்தால் மட்டுமே ! இருந்தும் போரில் அர்ஜுனன், பீமன் மற்றும் பல கைதேர்ந்த மன்னர்கள் களத்தில் !
அதைப்போல சிறப்பு கொண்ட தமிழ்நாடு தர்ம போர் !
சத்தியம் ! அசத்தியம் இடையே !
ஞாயத்திர்க்கும் அநியாயத்திற்கும் இடையே...!
தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே...!
களத்தில் ஒரு புறம் கௌரவர் படை !
மறுபுறம் அர்ஜுனன், பீமன் மற்ற கைதேர்ந்த மன்னர் ஒருவரும் இல்லாத ஒற்றையாள் பட்டாளம் உனது வடிவில் !
சூது கவ்விய தர்மத்தின் வாழ்வு மீண்டது ....உனது போர் சாதுர்யத்தால் !
திரை உலகில் உணகேன்று ஒரு தனி இடம் !
முழுமுதற்கடவுள் கணேசன் !
அப்பெயர் கொண்ட தம்பியை அன்பால் அணைத்த அண்ணன் நீர் !
அவர் தாயும் உனது தாயே ! உனது தாயும் அவர் தாயே !
அரசியல் பாதை வேறாக இருந்தாலும் இதுபோல ஒரு அண்ணன் தம்பி நிழல் உலகில் மட்டுமல்ல நிஜ உலகிலும் இல்லை என்பதற்கு பல உதாரணம் ....அதில் உச்சம் ஒன்று !
தம்பியின் தாய் திருவுருவச்சிலை திறந்தது ! அன்னை மீது கொண்ட பற்றும்...தம்பி மீது கொண்ட பாசமும்...இதை விட வேறு எதை சொல்வது ?
தம்பியுடையான் படைக்கஞ்சான் என்கிறது பழமொழி !
அண்ணனுடயானும் படைக்கஞ்சான் என்றல்லோவோ தம்பியும் பெருமிதம் கொண்டார் !
திரையில் நீர் பாடிய பாடல் பல உண்மையாகின, உண்மையாக்கிநீர்! மக்கள் சந்தோஷம் கொண்டனர் ..! ஆனந்தக்கூத்தாடினர் !
"கடலோரம் வாங்கிய காற்று" என்று திரையில் மக்களை குதூகலிக்க செய்தது...87ஆம் வருட கடைசி மாதத்தில் கடைசி வாரத்தில், கடலோரம் துயில் கொள்வேன் என்று உன் மனதில் அன்றே தோன்றியதால் தானோ ?
திரையில் ஒரு அரியாசனம் ! மக்கள் மனதில் என்றென்றும் நிறைந்த நிரந்தர சிம்மாசனம் !
பொல்லாத மனிதர் அய்யா நீங்கள் !
முதன் முதலாக என்னை நீர் எழுதி வைத்தது.... உம்மை பற்றிய எனது எண்ணங்கள் எனது வரிகளில்... இந்த பாழாய்ப்போன தினதிர்க்குதான் நீங்கள் என்னை உந்தவேண்டுமா ?
...இருந்தாலும் கண்ணீருடன் எனது நன்றி..நீர், எனக்கு கொடுத்த இந்த சந்தற்பத்திர்க்கும் கிடைத்த தருணத்திற்கும் !
வணக்கத்திற்குரிய தன்மான தலைவனே ! தமிழகம் அழிந்தாலும் உனது பெயர் நிலைக்கும் !
Rks
மக்கள் திலகம் வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i59.tinypic.com/18bw9w.jpg
தத்துவ நெறிதனை, தர்மத்தின் காப்பினை,
தாயின் உயர்வினை, ஆண்டவன் அருள்தனை,
அமைதியின் ஆக்கத்தை, கருணையின் ஒளிதனை,
கடமையின் வலிமையை, கொள்கையின் நோன்பினை,
ஆட்சியின் நெறிதனை, மக்களின் நலன்தனை,
தித்திக்கும் இசையோடு தெவிட்டாத தேன்பாக,
முத்தாக, மணியாக, தெள்ளமுது பாடல்களில்
வலியுறுத்தி/நிலைநிறுத்தி/அறிவுறுத்தி அருமருந்தாய்
மானிடர்நெஞ்சத்தில் எளிதாய்/இனிமையாய் விதைத்தவர்
நல்லோர்கள் இதயத்தில் நல்லகுருநாதனாக இசைந்தவர்
உலகில் பலமக்கள் உன்னையே அடிகோலி/மேற்க்காட்டி
உத்தமன் உன்உருவில் நற்பணிகள் நாளுமே புரிகின்றார்.
கொக்கரிக்கும் கொம்பர்களும், வக்கணை பேசுவோரும்,
நயவஞ்சகர்களும், கஞ்சர்களும் உன் வேல்போன்ற
விழிகண்டால் பதுங்கும்/புறம்ஒதுங்கும் பூனையடா.
சத்தியமும் தர்மமும் அற்புதமாய் சத்யதாய் தந்ததடா
வெற்றியின் மலர்கொண்டு புன்னகைப்பூக்கும்,
நான்மறை போற்றிடும் புரட்சித் தலைவர்.
இன்னிக்கு நான் இந்த நிலையில் சினிமாவில் இருக்கிறேன் என்றால் அதற்கு முதல் காரணம் அமரர் எம்ஜிஆர் அவர்கள்தான். அவரைப் புரட்சித் தலைவர் என்பதில் மிகை ஏதுமில்லை. -இது அமரர் கே பாலச்சந்தர் எம்ஜிஆர் பற்றிச் சொன்னது. பாலச்சந்தரின் நாடகங்களைப் பார்த்து ரசித்த எம்ஜிஆர், 1964-ல் சத்யா மூவீஸ் பேனரில் தான் நடித்த தெய்வத்தாய் படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பை கே பாலச்சந்தருக்கு வழங்கினார்
அதுதான் பாலச்சந்தரின் திரையுலகப் பிரவேசம் நடந்த படம். அதன் பிறகு நீர்க்குமிழி மூலம் இயக்குநராகவிட்டார் கேபி. அறுபது, எழுபதுகளில் ஏராளமான படங்களை இயக்கிக் கொண்டிருந்தார் பாலச்சந்தர். ஆனால் தன்னை அறிமுகப்படுத்திய எம்ஜிஆரை வைத்து அவர் ஒரு படம் கூட இயக்கவில்லை. காரணம் கேட்டபோது, 'எம்ஜிஆர் படத்தை நான் இயக்கினால் அது எம்ஜிஆர் படமாகத்தான் இருக்கும். அதனால்தான் நான் இயக்கவில்லை. ஆனால் அவர் மீது நான் வைத்திருக்கும் மரியாதை அளவற்றது," என்று கூறினார். பொய் படத்தின் வெளியீட்டின்போது எம்ஜிஆரை நினைவு கூர்ந்த கேபி, "இன்னிக்கு நான் இந்த நிலையில் சினிமாவில் இருக்கிறேன் என்றால் அதற்கு முதல் காரணம் அமரர் எம்ஜிஆர் அவர்கள்தான். அவரைப் புரட்சித் தலைவர் என்பதில் மிகை ஏதுமில்லை,' என்றார். இன்று அமரர் எம்ஜிஆரின் 27வது நினைவு நாள். அவரது நினைவு நாளுக்கு ஒரு நாள் முன்பு கே பாலச்சந்தர் மரணத்தைத் தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
http://tamil.filmibeat.com/img/2014/...er-mgr-600.jpg
FROM TO DAY
MADURAI- TIRUPPARANGUNDRAM - LAKSHMI
MAKKAL THILAGAM MGR IN VIVASAYI.
http://i58.tinypic.com/54sy2q.jpg