Request or challenge? :lol:
Printable View
நாரதர் சீஸன்லாம் முடிஞ்சுடுத்தே.. அமெரிக்கால்லருந்து நாராயணான்னு கொரல்கேக்கறதே :)
To make Raghavendra happier here is a song from Veera Pandiya Kattabomman
anjaadha singam en kaaLai.....
http://www.youtube.com/watch?v=fXL2WsxKvw4
From the Hindi dubbed version Amar Shaheed
alhad mera jawan jaage
http://www.youtube.com/watch?v=meZJllsX0WU
பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெற்றுவிடும் சி க !
வாசு சிக ராகவேந்தர் முரளி கோபால் ரவிகிரண் ரவி மது கல்நாயக் ராஜ்ராஜ் .. ராகதேவன்.....இத்தனை .சிற்பிகளும் சேர்ந்து என்னை செதுக்கியிருக்கிறீர்கள்!!
படங்காட்டுவதை நிறுத்திவிட்டு இனி உங்களோடுதான் ரேஸ் ! சரியான ட்ராக்கில் உங்களோடு என்னையும் சேர்த்துக் கொண்டமைக்கு நன்றி!!
சிரிக்கும் கண்ணனை சீரியஸ் கண்ணனாக்கி விடமாட்டேன்!! என்ன...ஒரு 3000 தாண்டினபின்னால் ஆரம்பிக்கலாம் என்றிருந்தேன்....
Quote:
Quote Originally Posted by chinnakkannan View Post
சி.செந்தில்.. இந்தப் படஙகாட்டறத விட்டுட்டு ஃபுல் ஃப்ளெட்ஜ்டா பெரிய கட்டுரையா எழுதுமேன்.. (இது சி.க வினால் சி.செக்கு விடப்படும் சி.ரெக்வஸ்ட் (முதலும் கடைசியுமான சி க்கான விரிவு சின்ன, நடு சி..சிவாஜி)
Request or challenge?
கூடலில் முடியும் ஊடல் / Building Strong Basement Weak!!
பகுதி1
குளிர் நிலவு நெருப்பாகி மலரே முள்ளாகும் காதல் களம்!
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் / போலீஸ்காரன் மகள் (1962)
காதலிக்கும் தெரியும் காதலனுக்கும் புரியும் மங்கையின் ஊடல் மன்னனின் காதல் ஆழத்தை சோதித்திடவே என்பது! காதல் வயப்படும்போது கனவுலகில் சஞ்சரிக்கும் போது காதலன் காதலியின் ஊடலால் மெர்சலாகி அவள் குளிர் நிலவாக இருந்தாலும் ஊடலின் வெப்பம் உணர்கிறான் அவள் மிருதுவான சுகந்த மலராக இருப்பினும் கூரான முள் குத்துவதாக கசந்த உணர்வை அடைகிறான்Quote:
காதல் களம் வீரபாண்டிய கட்டபொம்மனின் போர்க்களத்தை விட சவால்கள் நிறைந்ததே ! போர்க்களத்தில் எல்லாமே வெட்டு ஒன்று துண்டு இரண்டுதான்!!போர்க்கள எதிரிகள் நிஜ உலகில் கண்ணுக்குத் தெரிந்தவரே! காதல்களமோ கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை காரணிகள் மலிந்த மாயா லோகம்!
நெஞ்சிலே பாயும் வேலுக்குக் கூட அஞ்சாத வீரனும் வேல்விழியாளின் ஊடலம்புக்கு நெஞ்சம் நடுங்கி விடுவானே !!பெண்ணின் மேல் ஆணாதிக்கம் மற்றவர் கண்கட்டும் தந்திர வித்தையே ! தனிமையிலோ பெண்ணாதிக்கத்தின் முன்னே (Body) Building strong ஆன ஆணின் Basement Weak தான் ! அவ்வாறே கடலை விட ஆழமான புதிரான பெண்ணின் ஊடல் வெளிப்பாடும் ஆணின் கூடல் வேண்டியே!!
போர்க்களத்தில் ஒருவர் ஜெயிக்க ஒருவர் தோற்றே ஆகவேண்டும் ..ஆனால் காதல் களத்தில் போட்டியிடும் இருவருமே வெல்வதுதான் உளவியல்ரீதியாக நமக்கு உறைக்கும் உண்மை நிலைப்பாடு !
போலீஸ்காரன் மகள் திரைப்படத்தில் புதுமை இயக்குனர் ஸ்ரீதர் இந்தக் கோட்பாட்டை மிக அழகாக பாலாஜி புஷ்பலதா பங்கு பெரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பாடல் வாயிலாக பி பி ஸ்ரீனிவாசின் ஜெமினிக் குழைவில் மெல்லிசை மன்னர்களின் இசைத் தென்றலில் உயிர்ப்பான காட்சியாக நமது விழிகளுக்கு வெண்திரை வாயிலாக விரியச் செய்திருப்பார் !
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ..நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் ..முள்ளாய் மாறியது...
கனிமொழிக்கென்மேல் என்னடி கோபம்.....கனலாய் காய்கிறது
உந்தன் கண்களுக்கென்மேல் என்னடி கோபம்.. கணையாய்ப் பாய்கிறது!
காதல் களம் போர்க்கோலம் பூணுவது போன்ற பிரமையை கவியரசர் உருவாக்குகிறார் ....
Quote:
Follows :
பகுதி 2 : காதல் கள பனிப்போரில் காதலியைக் கவிழ்த்திட காதலனின் சாம பேத தான தண்ட அணுகுமுறைகள்
இந்த ஊடல் பனிப்போர் எப்படி கூடல் வெற்றியாக இருபக்கமும் முடிகிறது என்பதைத் தொடர்வோம் ...சிக வாசு ராகவேந்தர் கல்நாயக் ரவி ராஜ்ராஜ் மது ராகதேவன் உள்ளிட்ட இத்திரியின் பதிவு வேந்தர்கள் எனது இந்த கன்னி முயற்சியான விரிவுப்பதிவை படங்காட்டாமலே என்னாலும் போட முடியும் என்பதை ஏற்றுக் கொண்டு ஆசீர்வதித்தால்.....
அன்புடன் செந்தில்
ஆசிகள் சொல்வதற்கு ஞான் மிகச் சின்னவன் சி.செ. வாழ்த்துகள்.. எழுதுங்கள்.. ( நாளை ஒர்க்கிங் டேயின் முதல் நாள் எனில் என்னால் வர இயலாது எனில் தூக்க நாயகி கண்ணா வா வா என ஆவலாக இருகரம் நீட்டிச் சிரிமுகம் காட்டி தவழ்ந்து வந்தாலும் ஒதுக்கி உங்களை வாழ்த்துகிறேன்..)
உந்துதலும் வெறிசேர்ந்தால் என்ன ஆகும்
...உணர்வுடனே துரிகையில் கற்ப னைகள்
விந்தையெனக் கரங்களிலே வண்ண மெல்லாம்
...வித்தையுடன் சரம்சரமாய் தீற்றி விட்டே
சிந்தையினைக் கொள்ளைகொளும் ஒவி யம்போல்
..சிற்பங்கள் போலிங்கே எழுதும் நீவீர்
கொந்தளிக்கும் அலைகடலாய்ப் பெருகி இங்கே
...கோட்டைபல பிடிக்கட்டும் செய்யும் நீரே..
..
முந்தானை பிடித்தங்கே மோகத்தில் காதலியை
சொந்தங் கொளநினைத்தே சோர்விலாமல் - சிந்தையில்
காலாடி எண்ணங் கனலோடிப் பாடியவர்
பாலாஜி என்றே பகர்...
குலுங்கும்முந்தானை சிரிக்கும் அத்தானை
மிரட்டுவதேனடியோ
ம்ம் புஷ்பலதாவின் மயக்கும் விழிகளுடன் மல்லாடும் பாலாஜி.. நைஸ் தான் இல்லியா செந்தில்
பூடகமாய்க் கோபமும் புன்சிரிக்கும் உள்ளமென
ஊடலிலே காட்டும் உணர்வு
என்று புஷ்பலதாவும் கொஞ்சம் ஓ.கே தான் இல்லியோ..
என்ன பாலாஜியின் அத்தைமகள் புஷ்பலதா.. பாலாஜி கள்ளப் பையர்.. படத்தில்.. விஜயகுமாரியை லவ்ஸ் விட்டு புஷ் ஷைசைடில் சைட் அடித்து நைச்சியம் பண்ணுபவர்.. தெரியாதா என்ன உமக்கு..
இருப்பினும் பாடல் சிச்சுவேஷன் சொல்லி மெட்டும் பாடலும் செய்வித்ததில் எதுவும் முடிவதில்லையே
அழகாய்ப் படம்பிடித்த டைரக்டரும் நடித்த பாலாஜி புஷ் தானே பெசப்படுகிறார்கள்..இவ்வளவு ஆண்டு காலமாகியும்..
ஆமாம்..ஊடல் சிறு மின்னல்னு ஒருபாட்டும் இருக்கு ஓய்..அதைப்பற்றியும் எழுதும்..
தொடர்போட தானே எழுதறேன்..கண்ணுக்குள்ள நித்ரா வந்துட்டாங்காணும்.. தொடருங்கள்.அசத்துங்கள்..மீட் யூ டுமாரோ நைட் இன் த மூன் லைட்.. நாளைக்கு ஈவ்னிங் வர்றேன்னு சொன்னேன்...:)
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் .......தொடர்கிறது....பகுதி 2
Quote:
இப்படத்தில் ஜெமினிதான் ஸ்ரீதரின் முதல் சாய்ஸ் !
ஆனால் நடிப்புக்கு நல்ல ஸ்கோப் இருந்தும் எதிர்மறை விளைவுகள் கருதி காதல் மன்னர் வளர்ந்து வந்த பாலாஜிக்கு பொருந்தி வரும் என்பதாக ஸ்ரீதரிடம் கூறி பாலாஜிக்கு உதவினார் என்று கேள்வி. இதேபோல எதிர்மறை குணாதிசயம் படிந்த படித்தால் மட்டும் போதுமா, பலே பாண்டியா திரைப் படங்களிலும் ஜெமினி பாடல்களைப் பாடி நடிக்கும் அதிர்ஷ்டம் பாலாஜிக்கு அடித்தது. ஸ்ரீனிவாசின் குரல் ஜெமினிக்கு அப்புறம் பாலாஜிக்கும் முத்துராமனுக்கும் ரவிக்கும் நன்றாகவே பொருந்தியது !! பாலாஜியும் தனது நன்றியறிதலை அண்ணாவின் ஆசை திரைப்படத்தில் ஜெமினியை நாயகனாக்கி வெளிப்படுத்தினார். பின்னாளில் பாலாஜி நடிகர்திலகத்தின் ஆஸ்தான தயரிப்பாளரானது தனிக் கதை. உனக்காக நான் படத்திலும் பாலாஜி நடிகர் திலகத்திற்கு இணையான பாத்திரப் படைப்பில் ஜெமினியைப் பொருத்தினார்
போலீஸ்காரன் மகள் திரைப்படத்தில் விஜயகுமாரியை ஏமாற்றிவிட்டு புஷ்பலதாவை அடைய முயலும் கேரக்டரில் நன்கு பொருந்தினார் பாலாஜி!
விஷயம் தெரியாது அவரை விரும்புவார் புஷ்பலதா இப்பக்கக் காதலில் ஒரு ஊடல் சூழலில் பாலாஜி புஷ்பலதாவின் மனம் கவர போடும் சாம பேத தான தண்ட பிட்டுக்களை அருமையான பாடல் வரிகளாக்கியிருப்பார் கவியரசர் பாலாஜியின் மலரும் நினைவுகளில் புகழ் பெற்ற பாடலாயினும் இன்றும் கண்ணை மூடிக் கேட்கையில் ஜெமினி பாடலாகவே உணரப்படுகிறது !
இந்த சூரிதார் துப்பட்டா கால மாற்றத்தில் குலுங்கும் முந்தானை அத்தான் பொத்தான் எல்லாம் மறக்கப் பட்டுவிட்டதே !
குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை மிரட்டுவதேனடியோ
உந்தன் கொடியிடை இன்று படை கொண்டு வந்து கொல்வதும் ஏனடியோ
இப்படி ஸ்டெப் பை ஸ்டெப்பாக பாடல் வரிகள் முன்னேறி ...
சித்திரை நிலவே அத்தையின் மகளே சென்றதை மறந்து விடு ...உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு பார்வையை திறந்து விடு... என்று பெரிய ஐஸ் கட்டியை புஷ்பலதா என்னும் டைடானிக் கப்பலின் வேகப் பாதையில் தடைப் பாறையாகப் போடுகிறார் பாலாஜி !
திருமண நாளில் மணவறை மீது இருப்பவன் நான்தானே என்ற உத்தரவாத முத்தாய்ப்பில் கவிழுகிறார் புஷ்பலதா !!
ஸ்ரீதரின் எந்தப் படத்திலும் பாடல்கள் சோடை போனதில்லை போலீஸ்காரன் மகளும் மிக இனிமையான இசைக்கோர்வையில் காலத்தை வென்று இன்றும்
தேனிசை மதுரங்களாய் உலவிக்கொண்டிருக்கும் பாடல்களை உள்ளடக்கியதே! ராண்டார் கை Blast from the Past பாணியில் சொல்வதென்றால் the film did not fare well at the box office !
ஏன் இந்தப் பாடல் காட்சியமைப்பை நான் சிலாகிக்கிறேன் என்றால் .....
எனது கல்லூரிப் பருவத்தில் எங்கள் ஆர்கெஸ்ட்ராவில் ஜெமினியின் ராஜா / ஸ்ரீநிவாஸ் குரல்களுக்கு நான் மைக் முன்னணிப் பாடகனாக இருந்தேன்!!!
பாட்டுப் பாட வா, நிலவே என்னிடம், மயக்கமா கலக்கமா......நான் விரும்பிப் பாடியவை...வெறும் பாத்ரூம் சிங்கிங் பிராக்டிஸ்தான்!!
அவ்வப்போது கொஞ்சம் காற்று வாங்கப் போனேன், உலகம் பிறந்தது எனக்காக, யார் அந்த நிலவு போன்ற TMS பாடல்களையும் தொட்டுக் கொள்வேன் !
இந்தப் பாடல்களையெல்லாம் மதுரகான திரி ஜாம்பவான்கள் விலாவரியாக அலசியிருப்பீர்கள்!
இருந்தாலும் சி க உங்கள் ஆதங்கமும் சரியே ! உங்கள் யானை பலத்தின் முன் நானெல்லாம் மியாவ் மியாவ் பூனைக்குட்டியே! இத்திரியில் எனது எழுத்துத் திரியை சரியாகத் தூண்டிவிட்டு எண்ணெய் ஊற்றி பிரகாசிக்க வைக்க நினைக்கும் உங்கள் முயற்சிக்கு நன்றிகள் !
senthil
பிரிக்க முடியாதது எதுவோ ? செந்திலும் கான்செப்ட் காணோளியுமே!! அப்பத்தானே இது புல் பிளட்ஜ்டு ரைட் அப்!!!
https://www.youtube.com/watch?v=PUxLkYndr-g
சிக்கா... நான் தமிள்ல வீக்கு.. வள்ளூஸ் சொன்னதுக்கு அர்த்தம் சொல்லுங்க..
நட்புன்னா அவங்க மேலே போய் இடிக்கணுமா ? அப்புறம் மிக்ஸ்ட் நட்பு பத்தி வேற சொல்றீங்க.. அடி விழப்போகுது.
ஆளை அறியாமல் மேலே போய் இடித்தால்
காலை கழட்டிடு வார்
( ஹி ஹி.. குரல்.. குரள்.. ம்ம்ம் குறள்தானே... எப்படி இருக்கு ? )
senthil: My sculpting/chiselling days are over! :lol: I did it for more than 25 years teaching my engineers how to write a report and how to make a presentation! :) I am sure some of them asked who is this Indian to tell us how to write? :lol:
I am sure they knew I was trying to help them. I understood that because I was given the nicknames 'walking dictionary' and 'professor'. Those were the days ! :) If you picked up something from me it is purely accidental ! :lol:
எல்லோருக்கும் வணக்கம். அத்தனை பேரும் கலக்குறீங்க. கல்ஸ் நண்பா! வாங்க. தோ சென்னை கிளம்பிட்டேன். கட்டபொம்மனை தரிசித்துவிட்டு வந்துடறேன். அதுவரை என் தொல்லை இல்லாம தூள் கிளப்புங்க.:)
rajraj sirQuote:
senthil: My sculpting/chiselling days are over! I did it for more than 25 years teaching my engineers how to write a report and how to make a presentation! I am sure some of them asked who is this Indian to tell us how to write?
I am sure they knew I was trying to help them. I understood that because I was given the nicknames 'walking dictionary' and 'professor'. Those were the days ! If you picked up something from me it is purely accidental !
:pink:It reflects rajraj sir by the way you interact. It is incidental and not a serendipity that I am picking up many a good guidance from esteemed persons like you in my thread life. A silver jubilee achievement :yes: to get conferred as a walking dictionary and professor would mean that you are a 'living thesaurus' too! I feel your those days are resuming virtually! Keep up your humble service sir.
senthil
வாத்தியாரையா... Dictionary-ல் புதிதாக வார்த்தைகள் கூடுமே தவிர குறைவதில்லை... நீங்களும் அப்படித்தான்..
மத்தவங்க எப்படி அழைத்தாலும் எனக்கு அன்று முதல் என்றும் நீங்க வாத்தியாரையாவேதான் !!!!
This one does not (probably) fit into any of the categories or titles on these pages...
but WOW what a song! Thanks to பாரதிராஜா, வைரமுத்து, இளையராஜா,
கே. ஜே. யேசுதாஸ், ஜென்சி, கமல் & மாதவி...
https://www.youtube.com/watch?v=ovr-8b8uIXI
நட்பு தொடர்கிறது :
நட்பின் அருமை என்பதற்கு உதாரணம் சொல்லவேண்டுமென்றால் கண்ணன் - குசேலன் இவர்கள் நட்பு தான் நினைவிற்கு உடனே வருகிறது - அவலை வாங்கித்தின்ற கண்ணன் குசேலனை குபேரனாக்கினான் என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை - தெரியாத ஒன்று - கண்ணன் -ருக்மனிக்குள் நடந்த ஒரு சம்பாஷனை
ருக்மணி கண்ணனிடம் : கண்ணா - குசேலன் உன்னை மலை மாதிரி நம்பி வந்தான் - நீயும் அவனை ஏமாற்றவில்லை - ஒரு வேளை நீ அவனை ஏமாற்றி இருந்தால் -------
கண்ணன் : ஒரு கணவன் , மனைவியை ஏமாற்றலாம் , மனைவியும் கணவனை ஏமாற்றக்கூடும் இனி வரும் நாட்களில் --- ஆனால் உறவுகளை கடந்து சிறந்து விளங்குவது நட்பு - அந்த நட்பு தான் நானும் குசேலனும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கை
என்னை அவன் நம்புவது அவன் எடுத்துக்கொண்ட முடிவு - அவன் எடுத்துக்கொண்ட அப்படிப்பட்ட முடிவு சரிதான் என்று நிரூபிப்பது என் முடிவு .
அடிக்கடி சந்தேகப்படுவது நட்பு அல்ல - சந்தேகத்தை விரட்டி அடிப்பதுதான் சிறந்த நட்பு .
சிங்கத்தின் கர்ஜனை தொடருகிறது நம் நட்ப்பைபோல
. நண்பரிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே
https://www.youtube.com/watch?v=H7xl...RTduJxMfWbW3at
அன்புள்ள நண்பரே !
https://www.youtube.com/watch?v=LJtmL7XusaA
முழுகாத ship - friendship தான்
https://www.youtube.com/watch?v=b4xWUU6g8UA
(நட்பு இன்னும் வளரும் )
Shower Stars / Swimming Beauties/ Water Masters!
நட்சத்திரக் கு(வி)ளியல் பாடல்களும் 'பாத்ரூம் சிங்கர்'களுக்கான மதுர கானங்களே!
Quote:
வேலை முடிந்து அலுப்புத் தீர வீட்டுக்கு வந்ததும் நமக்குத் தோன்றுவது ஒரு குளியல் போட்டால் புத்துணர்ச்சி மீளுமே என்பதுதான் !
என்ன.......குளியல் அ(மு)றைதான் நமது வசதி வாய்ப்புக்களுக்குத் தகுந்த மாதிரி மாறிக் கொண்டே இருக்கும்!!
கிணற்றடியில் தண்ணீர் சேந்தி ஆனந்தக் குளியல் போடலாம் ....வீட்டுக்குப் பக்கத்தில் பின்புறத்தில் ஆறோடினால் நீராடலாம்......நீச்சல் குளமிருந்தால் உலக நீச்சல் நடன தாரகை எஸ்தர் வில்லியம்ஸ் போல ஒரு டைவ் அடித்து மீனாய் நெளிந்து நீந்தலாம்......
பட்ஜெட்டில் பாத்டப் இருந்தால் முங்கலாம் ....எல்லாவற்றையும் விட சிறந்தது ஷவரை திறந்து விட்டு பாடிக்கொண்டே மேனி நனைப்பதே!!
ஷவர் குளியல் நமது சிந்தனைகளை ஒருமுகப் படுத்தும் அற்புதமான உடற்பயிற்சியும் கூட!! வேண்டுமென்றால் கீசரை போட்டுக்கொண்டு இதமான வெப்ப நீர்த் திவலைகளிலும் கவலைகளை வடித்துத் துரத்தலாம் !
அந்தக்காலப் படங்களில் எப்படியெல்லாம் குளியல் போட்டார்கள் என்பதை நாமும் 'மஞ்சக் குளித்து'ப் பார்ப்போமா !
ஷவர் ஸ்டார்/ஸ்விம்மர் 1 : Water Master ஜெமினி கணேசன் (தனிக்குளியல் எங்கே போட விட்டார்கள்!)
வஞ்சிக்கோட்டை வாலிபனில் அடிமைப் பையன் ஜெமினியை ராஜா மகள் ரோஜா மலர் அல்லிராணி வைஜயந்தி மாலா ஒரு ஊடலுக்குப் பின் கூடலில் டூயட் பாடவேண்டி பொற்றாமரைக் குளத்தில் பத்துக்கும் மேற்பட்ட பதுமையரை விட்டு அழுக்குத் தேய்த்துக் குளிப்பாட்டுவார் ...அப்புறம்..வெள்ளித்திரையில்....
Watch from 1 :06 : 00.....quite interesting segment!
[url]https://www.youtube.com/watch?v=4Hf0zQDtAGg
சிலீரென்று குளித்துவிட்டுப் பளீரென்று நகைநட்டுடன் புன்னகை பூக்கும் காதல் மன்னருக்கான வைஜயந்தியின் அதிரடி ஆட்ட பாட்டம்!
[url]https://www.youtube.com/watch?v=zkHlWFI8sac
இளமை கொலுவிருக்கும் இனிமை குவிந்திருக்கும் குமரிகளுடன் குளித்துக் கும்மாளமிடும் மிஸ்டர் ஜமீன்தார் ஜெமினி !!
https://www.youtube.com/watch?v=IbS6KHTlhsM
நீச்சல் குளமென்ன ....ஆற்றோட்டத்திலும் பத்மினி குளிப்பதால் சுடும் தண்ணீரும் ஜெமினிக்குப் பன்னீரே! தண்ணீர் சுடுவதென்ன?
[url]https://www.youtube.com/watch?v=EPWTU1WuC10
கொடுத்து வைத்த காதல் மன்னர் ரோஜர் மூரின் James Bond பனிச்சறுக்கு ரேஞ்சுக்கு வைஜயந்தியுடன் தேன் நிலவு காஷ்மீர் ஏரியில் நீர்ச் சறுக்கு விளையாட்டில் Water Master நிபுணராக சாகசம் செய்கிறாரே!
https://www.youtube.com/watch?v=WekowqRIO1E
காதல் மன்னருக்கு பாத்ரூம் ஷவரை விட திறந்த வெளி மழைத்தூறல் ஷவர்தான் பிடிக்கும் !!
இப்படிக் குளித்தால் ஜலதோஷமும் பிடிக்கும் !!
https://www.youtube.com/watch?v=_ukBdTZTQgM
Never Before Never Again feat by Esther (the one and the only) Williams!
போனஸ்: Must see! Don't Miss!!Quote:
மாற்றார் தோட்ட நீச்சல் நடன மதுர கீதம்
எஸ்தர் வில்லியம்ஸ் ....இப்பூவுலகின் ஈடுஇணையற்ற நீச்சல் சாதனை நாயகி.....
https://www.youtube.com/watch?v=rd1-dysPP9g
மாற்றார் தோட்ட மதுர கீதங்கள்
Esther Williams / The Million Dollar Mermaid!
பகுதி 36 : எஸ்தர் வில்லியம்ஸின் இணையற்ற நீச்சல் நடன கானப் பொக்கிஷங்கள்!
https://www.youtube.com/watch?v=rd1-dysPP9gQuote:
உலகில் இதுவரை தோன்றிய ஜீவராசிகளிலேயே இந்த அளவு நீருக்கடியில் எந்த மீனும் திமிங்கிலமும் சுறாவும் டால்பினும் ஆக்டோபசும் ஆமையும் நடன நாட்டிய சாகசங்கள் நிகழ்த்தியதில்லை! இனியும் நிகழ்த்துவாரில்லை! கண்களும் சிந்தையும் குளிர்ந்திட.....
If you are impressed by this performance you will be prompted to go to the You Tube site for many more such feats of the one and the only one of human kind ESTHER WILLIAMS, the million dollar mermaid!
From Veera PaNdiya Kattabomman(1959)
pogaathe pogaathe en kaNavaa.....
http://www.youtube.com/watch?v=a861UAQfX0w
From the Hindi dubbed version Amar Shaheed
matt jaa re matt jaa re saajanwa......
http://www.youtube.com/watch?v=oDRSZmOllNg
Many many happy returns of the day NOV Sir.
https://www.youtube.com/watch?v=Gu4t6mhZDK4
Many many happy returns NOV sir . இங்கே பதிவிடும் பாடல்கள் உங்களுக்காகவும் தான் !!
ஒன்றில் இரண்டு ( நட்பு தொடர்கிறது ).
பகுதி 1
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு
ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும்.
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.
திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும்.
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.
தீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு. அந்தத் தீமைதான் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது.
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.
ஊக்கத்தைச் சிதைக்கக்கூடிய செயல்களையும், துன்பம் வரும்போது விலகிவிடக்கூடிய நண்பர்களையும் நினைத்துப் பார்ககாமலே இருந்து விட வேண்டும்.
பகுதி 2
எத்தனை புலிகள் வந்தாலும் ஒரு சிங்கத்தின் முன் என்ன செய்ய முடியும் ?? கர்ஜனை தொடர்கிறது .
நல்ல நண்பர்கள் சேர்ந்தால் அங்கே கவலைகளுக்கு பிரியா விடை கொடுத்துதானே ஆகவேண்டும் - இந்த இன்பம் , தன்னை மறக்கும் சுகம் , செலவுகளைப்பற்றிய சிந்தனையே இல்லாமல் - இதுதான் வாழ்க்கையோ - ஏன் இந்த இன்பம் பல சமயங்களில் நமக்கு தொடர்ந்து கிடைப்பதில்லை ???
https://www.youtube.com/watch?v=q--oOSZlz-g
கல்லூரிப்படிப்பு முடிந்து வெளியேறும் இளைஞர்களின்
உல்லாச கனவுகள்.
நல்ல நண்பர்கள் இருவரை ஒருவராக்கும் சக்தி பெற்றவர்கள் .
https://www.youtube.com/watch?v=YU-b1hNh0g0
நல்ல நண்பர்கள் , நல்ல குடும்பம் - இது தெய்வீகம் - இதற்க்கு ஈடு இணையே இல்லை
நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற
நாளிருக்கு வாழ்ந்தே தீருவோம்
எங்கே கால் போகும் போக விடு
முடிவை பார்த்து விடு
எங்கே கால் போகும் போக விடு
முடிவை பார்த்து விடு
காலம் ஒரு நாள் கைகொடுக்கும்
அதுவரை பொறுத்துவிடு
காலம் ஒரு நாள் கைகொடுக்கும்
அதுவரை பொறுத்துவிடு
யா யா யாயா யா யா யாயா .. லா..லா…லா..
நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற
நாளிருக்கு வாழ்ந்தே தீருவோம்
லா..லா…லா….லா….லா….
.
இருந்தால் தானே .. செலவு செய்ய
எடுத்தால் தானே … மறைத்து வைக்க
கொடுத்தால் தானே வாங்கி செல்ல
படுத்தால் தானே விழித்து கொள்ள
கொடுத்தால் தானே வாங்கி செல்ல
படுத்தால் தானே விழித்து கொள்ள
எங்கே கால் போகும் போக விடு
முடிவை பார்த்து விடு
காலம் ஒரு நாள் கைகொடுக்கும்
அதுவரை பொறுத்துவிடு
யா…யா…யா… லா…லா…
நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற
நாளிருக்கு வாழ்ந்தே தீருவோம்
நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற
நாளிருக்கு வாழ்ந்தே தீருவோம்
.
துணிந்தால் தானே … எதுவும் முடிய
தொறந்தால் தானே…. பாதை? தெரிய
சிரித்தால் தானே கவலை மறைய
சில நாள் தானே சுமைகள் குறைய
சிரித்தால் தானே கவலை மறைய
சில நாள் தானே சுமைகள் குறைய
எங்கே கால் போகும் போக விடு
முடிவை பார்த்து விடு
காலம் ஒரு நாள் கைகொடுக்கும்
அதுவரை பொறுத்துவிடு
யா…யா…யா… லா…லா…
நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற
நாளிருக்கு வாழ்ந்தே தீருவோம்
நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற
நாளிருக்கு வாழ்ந்தே தீருவோம்.
https://www.youtube.com/watch?v=NaItT2DZVXU
இந்த பாடலை பாடாத நண்பர்களே இருக்க முடியாது - இன்றும் கண்களில் நீரை வர வழிக்கும் ஆற்றல் பெற்ற பாடல்
https://www.youtube.com/watch?v=Y4WGotsRPSs
A good song about true friendship !!!
https://www.youtube.com/watch?v=6MIHGllM8zI
(நட்பு தொடரும் )
குளீயல் பாட்டெல்லாம் நிறைய உண்டே..
நீராடும் அழகெல்லாம் நீ மட்டும் பார்க்கலாம்..
ரெண்டுபேர் குற்றாலத்தில் குளிப்பது..
பாலாடை மேனி பனிவாடைக்காற்று நீராட வந்தோமடி
மஞ்சக் குளிச்சு அள்ளி முடிச்சு மெட்டி ஒலிக்க மெல்லசிரிச்சு
ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்..
முத்துக்குளிக்க வாரீகளா..
உன் குளியலறையில் நான் மஞ்சளா ஷாம்ப்பூவா..
குளிக்கும் ஓர் கிளி..கொதிக்கும் நீர்த்துளி
இன்னும் நிறைய இருக்கும் போல் இருக்கே..
நன்றி ரவி, சி.க., சிவாஜி செந்தில், ராஜ்ராஜ், மது, வாசு மற்றும் ஏனைய நண்பர்கள் அனைவருக்கும்.
சி.க.விற்கு இல்லாத உரிமையா? அவர் எனது குரு. மாணவர்களை ஆசிரியர்கள் தாரளமாக வையலாம். அந்த உரிமையில் சொல்லுகிறார் என்றே எடுத்துக் கொள்கிறேன். மற்றபடி நான் இங்கு வரக் கூடாது என்றெல்லாம் வராமல் இருந்ததில்லை. முன்பு அலுவல் நேரத்தின் இடைவெளிகளில் பதிவுகளிட்டேன். தற்போது அதிகமான வேலைப் பளுவுடன். என் கணினியில் நான் என்ன செய்கிறேன் என்று மற்றொருவர் பார்க்கின்ற வாய்ப்பு மிக அதிகமான பட்சத்தில், மதுரகானத் திரியிலும் நுழைய முடிவதில்லை. அதிகமாக வேலையைப் பார்க்கிறேன். மதுரகானத் திரியில் எல்லோருடைய பதிவுகளைப் படிக்கவும் முடிவதில்லை. நானும் எழுத முடிவதில்லை. நேற்றும், இன்றும் சற்று கிடைத்த இடைவெளிகளில் வந்து விட்டேன். போன பதிவிலிருந்து இந்த பதிவிற்கு முந்தைய பதிவு வரை படித்து விட்டேன். இன்னும் இடைவெளிகள் சற்று அதிகம் கிடைத்தால் நிச்சயம் என்னுடைய பதிவுகள், பாடல்கள் வரும்.
மீண்டும் நன்றி.
கல் நாயக்.. நோ ப்ராப்ளம்..எப்போ முடியுமோ அப்போ வாங்க.. :) ப்ரமோஷன் க்கு நா வேணா ரெக்கமண்ட் பண்ணட்டா..(வீட்டிலயும் ஆஃபீஸ் வேலையை எடுத்துக்காதீங்க)
Shower Stars / Swimming Beauties/ Water Masters!
நட்சத்திரக் கு(வி)ளியல் பாடல்களும் 'பாத்ரூம் சிங்கர்'களுக்கான மதுர கானங்களே!
Quote:
வேலை முடிந்து அலுப்புத் தீர வீட்டுக்கு வந்ததும் நமக்குத் தோன்றுவது ஒரு குளியல் போட்டால் புத்துணர்ச்சி மீளுமே என்பதுதான் !
என்ன.......குளியல் அ(மு)றைதான் நமது வசதி வாய்ப்புக்களுக்குத் தகுந்த மாதிரி மாறிக் கொண்டே இருக்கும்!!
கிணற்றடியில் தண்ணீர் சேந்தி ஆனந்தக் குளியல் போடலாம் ....வீட்டுக்குப் பக்கத்தில் பின்புறத்தில் ஆறோடினால் நீராடலாம்......
பட்ஜெட்டில் பாத்டப் இருந்தால் முங்கலாம் ....எல்லாவற்றையும் விட சிறந்தது ஷவரை திறந்து விட்டு பாடிக்கொண்டே மேனி நனைப்பதே!!
ஷவர் குளியல் நமது சிந்தனைகளை ஒருமுகப் படுத்தும் அற்புதமான உடற்பயிற்சியும் கூட!! வேண்டுமென்றால் கீசரை போட்டுக்கொண்டு இதமான வெப்ப நீர்த் திவலைகளிலும் கவலைகளை வடித்துத் துரத்தலாம் !
அந்தக்காலப் படங்களில் எப்படியெல்லாம் குளியல் போட்டார்கள் என்பதை நாமும் 'மஞ்சக் குளித்து'ப் பார்ப்போமா !
ஷவர் ஸ்டார்/ 2 : மக்கள்திலகம் MGR
மக்கள் திலகமும் நிறைய படங்களில் புத்துணர்ச்சிக் குளியல் போட்டிருக்கிறார்!
மக்கள்திலகத்தின் கிணற்றடிக் குளியல் குற்றால அருவியிலே குளித்தது போல இருந்ததாம் ...இருக்காதா பின்னே....தலையில் தண்ணீர் ஊற்றுபவர் ராஜ சுலோச்சனாவாக இருக்கும்போது ....!!அதுவும் லுங்கி சட்டை கெட்டப்பில் ..!!
https://www.youtube.com/watch?v=mIQUFOFl340
உன்விழியும் என் வாளும் சந்தித்தால்....எங்கே..பாத்ட்ப்பிலா!? கொடுத்து வைத்த ராஜஸ்ரீ!....வாத்தியாரே ஷவர் அடிக்கும்போது....!!
https://www.youtube.com/watch?v=6FlCmlYEvM0
பறக்கும் பாவையுடன் பக்கத்து பக்கத்து பாத்ரூமில் ஷவர் குஷிதான் ! புத்துணர்ச்சி பொங்கிவரும் ஷவர் சிங்கிங்!!
[url]https://www.youtube.com/watch?v=2L43xqROx1k&index=1&list=PLA1A7994C02D6A13 7
கட்டோடு குழலாட ஆட ...கண்ணென்ற மீனாட ஆட...ஆற்றுக்குளியல் ஊற்றெடுக்கும் உற்சாகமே! ஒன்றுக்கு இரண்டாகப் பாவையர் உடனிருந்தால்...!!
https://www.youtube.com/watch?v=xK8NF1XaWBA
ஷவர் ஸ்டார்/ :) உன் விழிய விட உன்னைத் தானே ஏய் எனக்குப் பிடிக்கும்..சி.செ.. இந்த விளையாட்டுப்பிள்ளையிலும் காஞ்ச் குளிக்கற பாத்டப் நல்லாயிருக்கும் :)
//பாத்டப் நல்லாயிருக்கும் // அப்ப குளிக்கிற காஞ்ச் நல்லாயில்லையா சிக?
:-d
சாந்திநிலையம் அருவிக்குளியல் குழந்தைகள் கூட்டத்துடன் காஞ்சனாவின் பங்களிப்பில் ரம்மியமே!
https://www.youtube.com/watch?v=uVH9o1_kyXE
//அப்ப குளிக்கிற காஞ்ச் நல்லாயில்லையா // அவங்களுக்குத் தான் பாட் கிடையாதே..
மழைல குளிக்கற பாட்டும் உண்டா என்ன? :)
Hi aaaalllll...
அடுத்த சந்தேகம் வந்தாச்சு... இதுக்கு விடை சொல்லுங்க..
ஒரு பாடல்... அது டூயட்டா சோலோவா என்று நினைவில்லை.. ஆனால் பின்பகுதியில் டி.எம்.எஸ் பாடுவார்..
இப்படி சில வரிகள்... "மச்சி மச்சி என் மச்சிகளா இந்த மாமன் மேல் ஆசை வச்சிகளா" என்று ஆரம்பித்து "கொருக்குப்பேட்டை, ராயப்பேட்டை, சைதாப்பேட்டை" என்று பேட்டையை ராப் செய்வார்.
கடேசில " நான் எடுத்த சாட்டை அது நடத்தட்டுமே வேட்டை.. ஓட்டேரின்னா மாட்டே.. அது போகும் கிருஷ்ணாம்பேட்டை" என்று முடிப்பார்.
நண்பர்களே... இந்தப் பாடல் பற்றிய விவரங்களை தாருங்கள் என கேட்டுக் கொள்கிறேன்
Shower Stars / Swimming Beauties/ Water Masters!
நட்சத்திரக் கு(வி)ளியல் பாடல்களும் 'பாத்ரூம் சிங்கர்'களுக்கான மதுர கானங்களே!
ஷவர் ஸ்டார் 3 நடிகர்திலகத்தின் குளியல் நவரசக் குவியல்!
Quote:
சறுக்கி விழுந்துதான் சைக்கிள் கற்றுக்கொள்ள முடியும். ஜான் ஏறி முழம் சறுக்கினால்தான் வழுக்கு மரமேறி புதையல் எடுக்க முடியும்! அப்படியே தண்ணீரில் முங்கிமுங்கி மூச்சடக்கி கைகால்களை உதறினால்தான் நீச்சல் கற்றுக்கொள்ள முடியும் ....
எதிர்நீச்சல் போட்டால்தான் வாழ்க்கையின் வெற்றிக்கனிகளை பலே பாண்டியனாகி ருசிக்க முடியும் என்பதை தேவிகா சொல்லித்தான் நடிகர்திலகம் புரிந்து கொண்டாரோ ?!
https://www.youtube.com/watch?v=s0brrvQD8OU
வீரபாண்டிய கட்டபொம்மனாக இன்றும் கர்ஜித்துக் கொண்டிருப்பவரா இந்த சேற்றில் மலர்ந்த செந்தாமரையைப் பார்த்து இப்படி ஒரு இடிச்சிரிப்பு சிரிக்கிறார் ?!அதோடு எவ்வளவு லாவகமாக சேற்றில் புதைந்த பாரதியின் ராசி தங்கசுரங்கமாம் மச்சம் கண்டிட ஷவரடிக்கிறார் ?! புதுமையான சேற்று முங்கல் ஷவர் குளியல்!!பாரதியோடு கிணற்றுக்குள் இறங்குவதும் குளிக்கத்தான் என்று நம்பி ஏமாந்து விட்டோம் !
https://www.youtube.com/watch?v=TojrKH2x7lo
நீச்சல் குளம்தான் காதலியரின் நினைவுப் பகிர்தலில் புத்துணர்ச்சி தூண்டும் கிரியா ஊக்கி தத்தம் மனங்கவர் மங்கையரை தண்ணீரில் முங்கி நீந்திக்கொண்டே சிலாகித்து நினைவசைகளை சுண்டுவது வித்தியாசமே
[url]https://www.youtube.com/watch?v=rUmL6PFD1OE
இன்னும் தங்க பதுமை வசந்த மாளிகை தீபம் படங்களிலும் இத்தகைய காட்சிகளைக் கண்ணுற்று மகிழலாம் !
திரையில் பக்தி தொடர்ச்சி:
இந்த பாடலுக்கு இணையான பாடல் இதுவரை வரவில்லை
ஆம் லவ குசா திரையில் இசையரசி மற்றும் பி.லீலாவின் குரலில் ஒலித்த ஜகம் புகழும் புண்ணிய கதை
தெலுங்கில் கண்டசாலா இசை, தமிழில் மகாதேவனின் இசை. வரிகள் மருதகாசி ஐயா
https://www.youtube.com/watch?v=RA5ecj775MU
என்ன அருமையான பாடல். பேபி உமா மற்றும் இன்னொரு சிறுவனின் நடிப்பு பாடல் வரிகள், பாடியவர்களின் குரல் வளம் என எல்லாமே பக்தி ரசம் சொட்டும்
வாங்க ராஜேஷ்.. நலமா.. என்னாச்சு.. ராமாயணம் லாம்கேக்க பாக்க ஆரம்பிச்சுட்டீங்க..:)
ராஜேஷ்.... ஜகம் புகழும் புண்ய கதை என்னைக்குமே ராமன் கதைதான்..
உங்க பதிவு அயோத்தியா காண்டத்தில் இருந்துதான் ஆரம்பிக்குது.. பால காண்டம் மிஸ்ஸிங்.
இந்தாங்க பாலகாண்டம்.. ( எங்களுக்கெல்லாம் கடவுளரைக் குழந்தைகளாக மாற்றி ரசிக்கவே இஷ்டம். சிக்கா பேரிலேயே சின்னக் கண்ணனாக இருக்கிறார். நான் அவதாரில்)
https://www.youtube.com/watch?v=GblL675ZE8w
எனக்கு ஒரு சந்தேகம்.. லவகுசா படத்தில் வால்மீகி முனிவர் இந்த ராமாயணத்தைச் சொல்லிக் கொடுக்க லவனும் குசனும் பாடுறாங்க. ஆனால் அதிலே பரதன் தேடி வருவதோ.. பாதுகை வாங்கிச் செல்லும் காட்சியோ காணவே காணோமே !
முக்கியமான கட்டத்தை ஒரு வரியிலாவது சேர்த்திருக்கலாமே !
கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன் அன்பால் ராமபிரான் நண்பனாகினான்
பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்
என்று வருகிறது. ராமாயணக் கதையின் படி குகன் சித்திரகூட மலைக்குத்தான் வழி காட்டுகிறான். பிறகு பரதன் வந்து பாதுகை பெற்று சென்றபின் ராமர் குடும்ப சகிதம் விராதனைக் வதம் செய்தபடி தண்டகாரண்யம் செல்வதாகப் படித்திருக்கிறேன்.
எதனால் இந்த மாற்றம் ? யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்களேன் !!
'நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்' தெலுங்கில் பார்த்து ரசிக்க. 'நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்' பாடல் இப்படத்தில் கைவிடப்பட்டு அதற்கு பதிலாக இரு வல்லவர்கள்' பாடல் டியூன் எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது.
'மனசாரகா நீவு'
'எதிரிகள் ஜாக்கிரதை' படம்தாங்க அது.
ராஜஸ்ரீயும், ராம் மோகனும் நடித்திருப்பார்கள்.
சுசீலாவும், பி.பி ஸ்ரீனிவாசும் பாடுவார்கள். மாடர்ன் தியேட்டர்ஸ் 'எவரு மொனகாடு' படத்தில்.
https://youtu.be/yrqWryoU9dQ
மனோகரும், மணிமாலாவும், மாஸ்டர் பிரபாகரும் நடித்த 'அப்பா பக்கம் வந்தா' பாடலை தெலுங்கில் காந்தாராவ், மாஸ்டர் ராஜு சௌகார் நடிக்க பாருங்கள்.
https://youtu.be/quCk-KAZfRY
'எனக்கொரு ஆசை இப்போது' (தெலுங்கில்)
https://youtu.be/l4ugTc2rUAw
'நீயாக எனைத் தேடி வருகின்ற நேரம்' (தெலுங்கில்)
https://youtu.be/GRW-mJeQldc
'அனுபவி ஜோரா அனுபவி' (தெலுங்கில்) இதுவும் 'இரு வல்லவர்கள்' பாடல். தமிழில் ஜெய், விஜயலஷ்மி பாடுவார்கள். ஆனால் தெலுங்கில் ஹீரோ பாட மாட்டார். படம் மாறுது அல்லவா? ஒன்லி லேடீஸ்.
https://youtu.be/eR2iiqyqYL4