-
மக்கள் திலகத்தை காதல் காட்சிகளில் மிக சிறந்த முறையில் இயக்கிய பெருமை ப .நீலகண்டன்
அவர்களையும் சேரும் .......
காதல் மன்னன் என்று ஜெமினி புகழ் பெற்றிருந்தாலும் மக்கள் திலகம் அவர்கள் ரொமான்ஸ் காட்சிகளில் மிகவும் அழகாக , நளினமாக , நடனத்துடன் நடித்து ரசிகர்களின் நெஞ்சை கொள்ளை அடித்திருப்பார் . இனிமையான பாடல்களும் , படமாக்கப்பட்ட விதமும் , எம்ஜிஆரின் உடை ,
சிரித்தமுகம் ,மறக்க முடியாத அளவிற்கு ரசிகர்கள் ஒன்றி போனார்கள் .
இன்று பார்த்தாலும் எம்ஜிஆரின் காதல் பாடல்கள் பிரமிக்க வைக்கிறது .
இயக்குனர் ப.நீ கை வண்ணதில் வந்த சில மக்கள் திலகத்தின் கனிரச பாடல்கள் .
1. கனவுகளே ... காதல் கனவுகளே ..... நீதிக்கு தலை வணங்கு
2. ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து -----------நினைத்ததை முடிப்பவன்
3. நீ என்னென்ன சொன்னாலும் கவிதை - நேற்று இன்று நாளை
4. என் உள்ளம் உந்தன் ஆராதனை - ராமன் தேடிய சீதை
5. நல்லது கண்ணே .. கனவு - ராமன் தேடிய சீதை
6. தமிழில் அது ஒரு இனிய கலை --- சங்கே முழங்கு
7. இரண்டு கண்கள் பேசும் விழியில் - சங்கே முழங்கு
8. கண்ணன் எந்தன் காதலன் - ஒரு தாய் மக்கள்
9. மாலை நேர தென்றல் என்ன - நீரும் நெருப்பும்
10.கன்னி ஒருத்தி மடியில் - நீரும் நெருப்பும்
11.எங்கே அவள் என்றே மனம் - குமரிகோட்டம்
12.நாம் ஒருவரை ஒருவர் - குமரிகோட்டம்
13.தொட்டு கொள்ள வா. தொடர்ந்து - மாட்டுக்கார வேலன்
14,நீல நிறம் - வானுக்கும் - என் அண்ணன்
15.மயங்கும் வயது ......- கணவன்
16.சிரித்தாள் பதுமை - கண்ணன் என் காதலன்
17.நினைத்தேன் வந்தாய் நூறு வயது - காவல்காரன்
18.மெல்ல போ .மெல்ல போ - காவல்காரன்
19.என்னருகே நீ இருந்தால் - திருடாதே
20.பாலாற்றில் தேனாடுது - கொடுத்து வைத்தவள் .
மேற்கண்ட பாடல்களில் மக்கள் திலகத்தின் வசீகர தோற்றமும் , காதல் பாவனைகளும் அருமை.......... Thanks.........
-
*🌺🌷💐 உரிமைக்குரல், 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்... ❤💜💙*
*💚💓💛 ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர், லதா, வி. எஸ். ராகவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்... 🍀🌸🌺*
⬇⬇⬇⬇⬇⬇
*உரிமைக்குரல் (திரைப்படம்)*
*இயக்கம் - ஸ்ரீதர்*
*தயாரிப்பு - கண்ணைய்யா சித்ரயுகா*
*இசைசை - எம். எஸ்.விஸ்வநாதன்*
*நடிப்பு - எம். ஜி. ஆர், லதா*
*வெளியீடு - நவம்பர் 7, 1974*
*நீளம் - 4751 மீட்டர்*
*MGR_Vs_Latha*
*♥♥♥ தங்கமே தோற்றுப் போகும் மேனி அழகராம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள், இந்தப் பாடலின் இறுதியில் கன்னியர் கூட்டத்தை வீழ்த்தி வழக்கம் போல் வெற்றி பெறுவார்... 🌸💐🌺🌷*......... Thanks.........
-
நிழலில் எதிரிகள்; நிஜத்தில் நண்பர்கள்
M.G.R. பற்றி பேசினால் நம்பியார் பற்றி பேசாமல் இருக்க முடியாது.
எம்.ஜி.ஆர். படங்களில் வில்லனாக நம்பியார் வந்த பிறகுதான் படத்தில் விறுவிறுப்பு கூடும். படத்தில்தான் எம்.ஜி.ஆருக்கு அவர் வில்லனே தவிர, உண்மையில் நெருங்கிய நண்பர்.
எம்.ஜி.ஆரை பெயர் சொல்லி அழைக்கும் உரிமை பெற்ற ஒரு சிலரில் நம்பியாரும் ஒருவர். ரொம்ப ஜாலியான பேர்வழியும் கூட. அவரது நகைச்சுவையை எம்.ஜி.ஆரும் விரும்பி ரசிப்பார். இருவரும் நிழலில் எதிரிகள். நிஜத்தில் நண்பர்கள்.
எம்.ஜி.ஆர். கத்தி சண்டைக் காட்சிகளில் நடிப்பதை பார்த்து அவரை ‘அட்டை கத்தி வீரர்’ என்றெல்லாம் அக்காலத்தில் விமர் சனங்கள் எழுந்தது உண்டு. ஆனால், உண்மை யான கத்தியைக் கொண்டே எம்.ஜி.ஆர். படங்களில் சண்டை போட்டிருக்கிறார். அவர் பயன்படுத்திய கத்திகள் சென்னையில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
‘சர்வாதிகாரி’ படத்தில் நம்பியாருடனான வாள் சண்டைக் காட்சியில் எம்.ஜி.ஆரின் கத்தி நம்பியாரின் கட்டை விரலை ஊடுருவிவிட்டது. அதே போல, ‘அரசிளங்குமரி’ படம் எம்.ஜி.ஆரின் வாள் வீச்சுக்காகவே புகழ் பெற்றது.
அந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கும் நம்பி யாருக்கும் ஆக்ரோஷமான சண்டை. ஒரு நாள் படப்பிடிப்பில் நம்பியாரின் கத்தி எம்.ஜி.ஆரின் கண்ணுக்கு மேலே புருவத்தில் பட்டு கிழித்து விட்டது. படத்துக்கான மேக் அப் இல்லாமல் எம்.ஜி.ஆர். தனது வழக்கமான தோற்றத்தில் இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இடது புருவத்தில் அந்தத் தழும்பு தெரியும்.
படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆரின் புருவத் தில் நம்பியாரின் கத்தி பட்டு ரத்தம் கொட்டுகிறது. இன்னும் இரண்டு அங்குலங்கள் கீழே பட்டிருந் தால் எம்.ஜி.ஆரின் கண் பார்வை பறிபோயிருக் கும். அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனர். ஓடி வந்த உதவியாளர் ஒருவர், எம்.ஜி.ஆரின் புருவத்தில் ரத்தம் கொட்டிய இடத்தில் துணியை அமுக்கிப் பிடித்தபடி, நம்பியாரைப் பார்த்து,
‘‘என்னண்ணே, பார்த்து செய்யக் கூடாதா? நீங்க கூடவா இப்படி?’’
என்று இரைந்தார். நம்பியாருக்கும் வருத்தம்.
எம்.ஜி.ஆர். உடனே,
‘‘அவருக்கு என் மீது கோபம் இல்ல; அந்தக் கத்திக்குத்தான் என் மீது கோபம்’’ என்று சொல்லி அந்த இடத்தில் சகஜ நிலையை ஏற்படுத்தினார்.
பின்னர், நம்பியாரைப் பார்த்து,
‘‘ஏன்யா இப்படி செஞ்சீரு?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.
‘‘நியாயமாக பார்த்தால் எனக்கு நீங்கள் நன்றி சொல்லணும்’’ - நம்பியார் பதில்.
தெரியாமல்தான் என்றாலும் கத்தியாலும் குத்தி விட்டு, அதற்கு நன்றி வேறா? என்று நினைத்த படி ‘‘ஏன்?’’ என்று கேட்ட எம்.ஜி.ஆருக்கு,
‘‘டைரக்டர் சொன்ன இடத்தில் குத்தாமல் இருந்ததற்காக’’ என்று மேலும் புதிர் போட்டார் நம்பியார்.
‘‘டைரக்டர் என்ன சொன்னார்?’’ - வியப்புடன் கேட்டார் எம்.ஜி.ஆர்.
‘‘நெஞ்சில் குத்தச் சொன்னார்’’
என்ற நம்பியாரின் பதிலைக் கேட்ட எம்.ஜி.ஆர். சிரித்த சிரிப்பால் படப்பிடிப்பு அரங்கமே அதிர்ந்தது.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது அவரைப் பார்க்க அவரது வீட்டுக்கு நம்பியார் சென்றுள்ளார். அமைச்சர்கள் உட்பட வி.ஐ.பி-க்கள் எம்.ஜி.ஆரை பார்க்க காத்திருந்தனர். நம்பியார் வந்துள்ள விஷயம் எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்கப் பட்டது. அவர் உடனே தனது அறையின் கதவைத் திறந்து நம்பியாரைப் பார்த்து உள்ளே வரும்படி சைகை காட்டிவிட்டு சென்றார்.
தங்களைத்தான் எம்.ஜி.ஆர். கூப்பிடுகிறார் என்று நினைத்துக்கொண்டு அங்கிருந்த அமைச்சர்கள் சிலர் எம்.ஜி.ஆர். அறைக்குச் சென்றனர். நம்பியார் வராததைப் பார்த்த எம்.ஜி.ஆர். மீண்டும் தனது அறையின் கதவைத் திறந்து, நம்பியாரைப் பார்த்து
‘‘உன்னைத்தான். உள்ளே வாய்யா’’
என்றார். நம்பியார் உள்ளே வந்த பின் உதவியாளரிடம் எல்லோருக்கும் காபி கொண்டு வருமாறு எம்.ஜி.ஆர். கூறினார். அந்த உதவியாளரை நம்பியார் தடுத்து,
‘‘எனக்கு மட்டும் ஒரு காபி கொண்டு வாருங்கள்’’ என்றார்.
அங்கிருந்த அமைச்சர் ஒருவர் நம்பியாரைப் பார்த்து,
‘‘ஏன், நாங்க என்ன பாவம் செஞ்சோம்?’’ என்று நம்பியாரிடம் கேட்டார். அதற்கு,
‘‘இங்கே நான் மட்டும்தான் விஐபி’’ என்ற நம்பியாரின் பதிலால் எம்.ஜி.ஆர் மட்டுமின்றி கேள்வி கேட்ட அமைச்சர் உட்பட எல்லோரும் சிரித்தனர்.
நகைச்சுவை உணர்வு உள்ளவர்களால்தான் நல்ல நகைச்சுவையை ரசிக்க முடியும். எம்.ஜி.ஆருக்கு நகைச்சுவை உணர்வு அபாரம்.
பல்வேறு இடையூறுகளுக்கு இடையே வெளி நாடுகளில் எம்.ஜி.ஆர். எடுத்து வெளியிட்டு மிகப் பெரும் வெற்றி பெற்ற ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில்தான் நடிகை லதா அறிமுகம். முதல் படத்திலேயே கதாநாயகி. அதிலும் உச்ச நட்சத்திரமான எம்.ஜி.ஆருக்கு ஜோடி. ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர். என்ற ஆளுமை முன் நடிப்பதில் லதாவுக்கு உள்ளூர நடுக்கம். படத்தின் இயக்குநரும் எம்.ஜி.ஆர்தான். லதா நடித்த காட்சிகளில் அவர் எதிர்பார்த்த அளவுக்கு நடிக்கவில்லை. காரணம் கேட்டார் எம்.ஜி.ஆர்.
‘‘சார், உங்கள் முன் நடிக்க எனக்கு தயக்க மாக இருக்கிறது’’ என்றார் லதா.
இவ்வளவு ஏற்பாடுகளுக்குப் பிறகு, நடிக்கத் தயக்கம் என்றால் யாருக்குத்தான் கோபம் வராது? ஆனாலும், லதாவின் நிலையை எம்.ஜி.ஆர். புரிந்துகொண்டார்.
அவருக்கு தைரியம் ஏற்படுத்த எம்.ஜி.ஆர். சொன்னதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்த லதா, இயல்பான நிலைக்கு வந்து நன்றாக நடிக்கத் தொடங்கிவிட்டார். லதாவின் தயக் கத்தை போக்குவதற்காக எம்.ஜி.ஆர். கேட்ட கேள்வி...
‘‘பேசாமல் படத்தின் கதாநாயகனை மாத்திட லாமா?’’
‘நாடோடி மன்னன்’ படத்தை எம்.ஜி.ஆர். தானே தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடித்தார். பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்ற இந்தப் படத்தின் வெற்றி விழா 16.10.1958-ல் மதுரையில் நடந்தது. மதுரை ரயில் நிலையத்தில் இருந்து விழா நடந்த தமுக்கம் மைதானம் வரை 4 குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் மக்களின் ஆரவார வரவேற்புக்கு இடையே எம்.ஜி.ஆர். ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
எம்.ஜி.ஆர். சென்ற சாரட் வண்டிக்கு முன் உலக உருண்டையின் மீது 110 பவுனில் தங்க வாள்
(மதுரையில் புகழ்பெற்ற RM அப்பாவுசெட்டியார் நகைக்கடையில் செய்யப்பட்டது) எடுத்துச் செல்லப்பட்டது.
விழாவில் எம்.ஜி.ஆருக்கு தங்க வாளை நெடுஞ்செழியன் பரிசளித்தார். முதன்முதலில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த திரைப்பட வெற்றி விழா இதுதான்!
நன்றி:இந்து தமிழ்............ Thanks.........
-
-
#ஒரு #சாமானியனின் #பார்வையில் #எம்ஜிஆரின் #நடிப்பு
எனது நண்பர்களுடன் நாகர்கோயில் கார்த்திகை திரையரங்கு சென்று எம்.ஜி.ஆர் நடித்து இயக்கி தயாரித்த நாடோடி மன்னன் திரைப்படத்தைப் பார்த்தோம். நான் அந்தப்படத்தை முதல்முறையாகப்பார்த்தது 1972 ல். நான் ஐந்தாம் வகுப்பு மாணவன் அப்போது. அன்று கண்ட காட்சிகள் பலவும் நினைவில் அப்படியே நீடிக்கின்றன.
அன்றெல்லாம் நாடோடி மன்னன் வெளியாவதென்பது ஒரு திருவிழா போல. வருடாந்தரத் திருவிழா. பலரும் பத்துப்பதினைந்து தடவைப் பார்த்திருப்பார்கள். ஆனால் அரங்கில் கூட்டம் நெரிபடும். படம் முழுக்க ரசிகர்களின் எதிர்வினை இருக்கும். வசனங்கள் வருவதற்கு முன்னரே அவற்றுக்கான கைத்தட்டல்கள் தொடங்கிவிடும். பாட்டுக்குரிய சந்தர்ப்பம் வருவதற்குள்ளே அரங்கு பாடத்தொடங்கிவிடும்.
மீண்டும் நாடோடி மன்னன் படத்தைப்பார்த்தது 1980ல், பட்டப்படிப்பு படிக்கையில். அப்போது நான் மலையாளப்படங்களின் ரசிகனாகிவிட்டிருந்தேன். படம் பிடிக்கவில்லை. கேலிசெய்தபடி பார்த்தது நினைவிருக்கிறது. இப்போது நவீனத் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட பிரதி என போட்டிருந்தனர். சரி, போய்த்தான் பார்ப்போமே என்று கிளம்பினோம். அரங்கில் நூறுபார்வையாளர்கள். பெரும்பாலானவர்கள் வயதானவர்கள்.
படம் தொடங்கும்வரை எந்த எதிர்பார்ப்பும் இல்லை. வேடிக்கைபார்க்கும் மனநிலைதான். ஆனால் பல ஆச்சரியங்கள் இருந்தன. மூன்றரை மணிநேரம் ஓடியபடம் கொஞ்சம் கூட சலிப்பேற்படுத்தவில்லை. தொடர்ந்து பார்க்கவைத்தது படத்தின் சரளமான, விரைவான திரைக்கதை. எம்.என்.ராஜம்- எம்.ஜி.ஆர் சம்பந்தப்பட்ட ஒரு காட்சியில் தவிர எங்குமே தமிழ்சினிமாவின் புகழ்பெற்ற மெலோடிராமா இல்லை என்பது படத்தை ரசிக்கவைத்த முக்கியமான அம்சம்.
இம்முறை, சினிமாவுக்குள் வந்துவிட்டபின் அறிந்தவற்றுடன் பார்க்கையில் உணர்ந்த சில விஷயங்களை குறிப்புட்டுச் சொல்லவேண்டும். சினிமா என்னும் விசேஷமான காட்சிக் கலைக்குரிய தனிநடிப்பை அறிந்த நடிகர் எம்.ஜி.ஆர். அவருடைய இந்தத்திறன் தமிழில் மதிப்பிடப்படவே இல்லை. அவர் ‘நடிக்கத்தெரியாதவர்’ என்றே திரும்பத்திரும்ப சொல்லப்பட்டுவருகிறது. அவருடைய ரசிகர்களுக்குக்கூட அவர் நடிகர் என்னும் எண்ணம் இல்லை.
இப்படத்தில் எம்ஜிஆர், எம்.ஜி.சக்ரபாணி, பானுமதி மூவரும்தான் மிக இயல்பாக நடித்திருந்தனர். பிறரும் இயக்குநரால் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டு நடிக்கவைக்கப்பட்டிருந்தமையால் உறுத்தவில்லை. ஆனால் அப்போதுகூட பிறருடைய நாடகத்தனமான நடிப்புக்கு நடுவே இம்மூவரும் தனித்துத் தெரிந்தனர்.
சினிமாவுக்குத்தேவை ‘நடிப்பு’ [acting] அல்ல ‘நடப்பு’ [behaving] தான் என்பது மிகத்தெளிவாக எம்.ஜி.ஆருக்குத் தெரிந்திருக்கிறது. அவருடைய அந்த மூக்குறிஞ்சும் ஸ்டைல் செயற்கைதான், ஸ்டைல் எதுவானாலும் செயற்கையே, ஆனால் அதையே அளந்துதான் செய்திருக்கிறார். மிக இயல்பான சிரிப்பு. அச்சுமொழி வசனத்தைக்கூட இயல்பாகவே சொல்கிறார். அவை வசனமென்றே தெரியாதபடி. உணர்ச்சிவசப்படுகிறார், உணர்ச்சிகளைக் ’காட்ட’வில்லை காதல்காட்சியில் காமிரா இருக்கும் உணர்வே இல்லாமல் அக்காட்சிக்குள் இருக்கிறார்.
எம்.ஜி.ஆரின் தலைமுறையில் சினிமாவை அவரளவுக்கு எவரும் புரிந்துகொள்ளவில்லை என்றே எனக்குப்படுகிறது. நாடகபாணி நடிப்பு சினிமா பார்க்கும் அனுபவத்தை பெரிய வதையாக ஆக்கக்கூடியது. இன்றுகூட சினிமா நடிகர்களிடமிருந்து நடிப்பை இல்லாமலாக்க ரத்தம் சிந்துகிறார்கள் இயக்குநர்கள். #எம்ஜிஆர் #என்னும் #நடிகரை #நம் #விமர்சகர்கள் #மறுமதிப்பீடு #செய்யவேண்டும்.
ஓர் இயக்குநராக காட்சிகளை ஒருங்கமைத்திருக்கும் விதமும், தொடர்ந்து எல்லா படச்சட்டங்களிலும் சிக்கலான காட்சியசைவுகள் ஊடும்பாவுமாக இயல்பாக அசைவமைக்கப்பட்டிருக்கும் விதமும், தொலைதூரப் பின்னணியில்கூட இயல்பான நடிப்பும், சண்டைக்காட்சிகளில் எல்லா சட்டகங்களும் கொப்பளித்துக்கொண்டே இருப்பதும் எம்.ஜி.ஆர் அவருடைய படங்களை இயக்கிய இயக்குநர்களில் ஸ்ரீதருக்கு மட்டுமே நிகரானவர் என்பதைக் காட்டுகின்றன.
அனேகமாக எல்லா துணை நடிகர்களிடமும் அளவான நடிப்பை வாங்கியிருக்கிறார். எல்லா காட்சிகளையும் மிகச்சரியான நீளத்தில் அமைத்திருக்கிறார். பெரும்பாலானவற்றை மிகக்குறைவான வசனங்களுடம் பெரும்பாலும் காட்சிவழியாகவே உணர்த்தியிருக்கிறார். உதாரணம் எம்.என்.நம்பியார் தன்னைப்பற்றி கண்ணாடியில் பார்த்து சொல்லிக்கொள்வதும், அதே கண்ணாடியில் எம்ஜிஆரின் படம் தெரிவதும்.
நான் இப்படி ஒரு திரையனுபவமாக இந்தப்படம் இருக்கும் என நினைக்கவேயில்லை. இது தழுவல்படம்தான். அலக்ஸாண்டர் டூமாவின் மேன் இன் த அயர்ன் மாஸ்க் வெவ்வேறு வடிவில் உலக வணிகசினிமாவில் வந்தபடியே இருந்திருக்கிறது. ஹாலிவுட் படங்களை நகல்செய்தே பெரும்பாலும் காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அரண்மனை, உடையலங்காரம் எல்லாமே ஹாலிவுட் பாணி. நம்மூர் வரலாற்றுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. இது ஒரு பொழுதுபோக்கு மிகைபுனைவு, அவ்வளவுதான். அந்த எல்லைக்குள் நின்றுகொண்டு வணிகரீதியான எல்லா நுட்பங்களையும் உணர்ந்து எடுக்கப்பட்டிருக்கிறது படம்.
உதாரணமாக இடைவேளைக்குப்பின் படம் ஒரு தீவுக்குச் சென்றுவிடுகிறது. இன்னொரு படமாகவே ஆகிவிடுகிறது. மிகநீளமான இந்தப்படம் முதல்பகுதியின் களத்திற்குள்ளேயே இருந்திருந்தால் அரண்மனைச்சதியை மட்டுமே காட்டிச் சலிப்பூட்டியிருக்கும் என வணிகத்திரைக்கதையை அறிந்தவர்கள் சொல்லமுடியும். மேன் இன் தி அயன் மாஸ்க் திரைவடிவங்களில் பலவற்றில் அந்தச் சலிப்பு உண்டு. உண்மையில் மூலநாவலிலேயே அந்தச்சலிப்பு உண்டு, த்ரீ மஸ்கிட்டீர்ஸ் போல சுவாரசியமான நாவல் அல்ல அது.
காட்சிகளைச் சுருக்கமாகவே அமைப்பது, தேவையற்ற குளோஸப்களை வைக்காமலிருப்பது, வெவ்வேறு காமிராக்கோணங்கள் வழியாக எப்போதும் காட்சியின் பிரம்மாண்டத்தை நினைவூட்டியபடியே இருப்பது [பல காட்சிகளில் பார்வையாளன் பொருட்களுக்கு இப்பாலிருந்து பார்க்கிறான். நிகழ்வுகள் ஆடம்பரப்பொருட்களினூடாக ஒழுகிச்செல்கின்றன] என ஒரு வணிகப்பட இயக்குநராக ஏறத்தாழ எல்லா நுட்பங்களையும் எம்ஜிஆர் அறிந்திருக்கிறார். அனைத்துக்கும் மேலாக இந்த சினிமாவில் அவர் அழகாக இருக்கிறார். அவருடைய சிரிப்பில் வெளிப்படும் அந்தச் சிறுவன் உற்சாகமானவன். அவர் போரிடுகிறார், எவரையும் வெட்டுவதே இல்லை. ஏன் அவர் அவ்வளவு விரும்பப்பட்டார் என்பதைக் காட்டுகிறது இந்தப்படம்.
உண்மையில் தமிழ் சினிமாவில் நாம் இன்று வெறுக்கும் பல விஷயங்கள் மேலும் பத்தாண்டுகளுக்குப்பின் உருவாகி வந்தவை என நினைக்கிறேன். மிகையான நாடகத்தன நடிப்பு, செயற்கையான வசன உச்சரிப்பு, கண்களை உறுத்தும் காமிராக்கோணங்கள் போன்றவை. இந்தப்படத்தில் காமிரா இருப்பதே தெரியவில்லை. தனியாகக் கவனித்தால் சீரான நிதானமான காமிரா நகர்வை உணரமுடிகிறது. இன்றைய சினிமாக்களை என்னால் பலசமயம் பார்க்கவே முடிவதில்லை. ஒரு ரோலர்கோஸ்டரில் ஏறி இறங்கி சுழன்றபடி கீழே நிகழ்வதைப் பார்ப்பதுபோலிருக்கிறது இன்றைய காமிரா ஓட்டமும் வெட்டிவெட்டிச் செல்லும் படத்தொகுப்பும்.
வீட்டுக்குத்திரும்பும்போது மீண்டும் மீண்டும் வியப்புடன் பேசிக்கொண்டே வந்தேன். மூன்றரை மணிநேரம் ஒருநிமிடம்கூட சலிக்காமல் இந்தப்படத்தை பார்த்திருக்கிறேன். மிகப்பெரும்பாலான சமீபகாலப் படங்களில் நான் முதல் பதினைந்து நிமிடங்களுக்குள் நன்றாகத் தூங்கிவிடுவேன். திரும்பவரும்போது அருண்மொழியிடம் சுருக்கமாகக் கதையைக் கேட்டுத்தெரிந்துகொள்வேன்.
வணிகசினிமா என்பது கேளிக்கை. ஆனால் அது சமூகத்தின் அரசியல் விழைவுகள், சமூகமாற்றம் சார்ந்த கனவுகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியிருக்கும். ஏனென்றால் அது பார்வையாளனை கவர்ந்து உள்ளே அமரவைக்கவேண்டும். இப்படத்தில் ஜனநாயகம், பொதுவுடைமை சார்ந்த ஆரம்ப பாடங்கள் சொல்லப்பட்டிருக்கும் விதம் கவனத்திற்குரியது. அன்று தமிழகத்தில் பலபகுதிகளில் ஜனநாயகம் வந்தபின்னரும் மன்னராட்சியும் ஜமீன்தாராட்சியும் மறைமுகமாக நீடித்தது.அன்று படம் பார்த்தவர்களில் பெரும்பாலானவர்கள் மன்னராட்சியில் பிறந்தவர்கள். புரட்சி பற்றிப் பேசுகிறது படம், கூடவே அது வன்முறையற்ற புரட்சி என்று சொல்கிறது. இப்படி என்னென்ன கருத்துருக்களை, காட்சிக்குறியீடுகளை இது பயன்படுத்தியிருக்கிறது என எவரேனும் விரிவாக ஆராயலாம்.
கேளிக்கை வடிவங்கள் எப்போதும் வெளியே இருந்து வரும் கேளிக்கைவடிவங்கள் உள்ளூர் வடிவங்களுடன் கலந்து, ரசிகர்களின் விருப்பங்களுக்கும் மனநிலைக்கும் ஏற்ப நுட்பமாக மாற்றிக்கொண்டு மெல்லமெல்ல உருவாகி வருபவை. வணிகசினிமா என்ற கலைவடிவம் ஹாலிவுட் சினிமாவுக்கும் உள்ளூர் இசைநாடகங்களுக்கும் நடுவே திரண்டுவந்த ஒன்று. அது மெல்லமெல்ல உருவாகிவந்த விதத்தை ஆராயும் எவரும் நாடோடி மன்னன் ஒரு பெரும் திருப்புமுனை, ஒரு சாதனை என்றே மதிப்பிடுவார்கள் என நினைக்கிறேன்............ Thanks FB., Friends...💐
-
5.04.2020 இன்று தலைவரின் வரலாற்று சுவடுகளில் நாம் நிறைய பார்க்கலாம்
என நினைக்கிறேன்.
எம்ஜிஆர் செய்த உதவிகள் நடிகராகவும்
முதல்வராகவும்
தெரிந்தும் தெரியாமலும்
கணக்கில் அடங்காது.
1.இலங்கை அதிபர் கேப்டன் பிரபாகரன்
சொந்த செலவில்
4 கோடி ரூபாய் இலங்கை மக்களுக்காக
இரண்டு சிக்காக கொடுத்தார்
முதல்வராக இருந்த போது பதிலுக்கு
ஏ.கே.47 ரக துப்பாக்கியை ஆசைப்பட்டு கேட்டு
வாங்கினார் இது போதும் என்றார்.
2.முதல்ஆனதும் கவிஞர் கண்ணதாசனுக்கு
ஆஸ்தான கவிஞர்
அரசவையில் வழங்கி
இறக்கும்வரை மாதம்
ரூ.1000.00 வழங்க உத்தரவிட்டார்.
3.இதேபோல் கவிஞர் வாலிக்கும் பின்னாநளில் மாதம்
ரூபாய் 3000.00 வழங்கினார்....... Thanks...
-
4.தியாகி கக்கனுக்கு
நோய்வாய் பட்டு
ஆஸ்பத்திரியில இருக்கும் போதுஉதவிகள்செய்தார்.குடும்பத்திற்கு மாதம்
500.00 ரூபாய் வழங்க உத்தரவு.
5.சின்னப்பா தேவருக்கு
படவிஷயத்தில் அதிக கவனம் அதிக லாபம்
கிடைத்தல்
6.பட்டுக்கோட்டையார்
குடும்பத்திற்கும்
மகனுங்கு வேலைவாய்ப்பு.
7.வி.கே.ராமசாமிக்கு
பண உதவி
கஷ்ட நேரத்தில்........ Thanks...
-
8.நாகேஷ் பிறந்தநாள்
அன்று மோதிரம் வழங்கினார் வெளிநாட்டில் ஷூட்டிங்
இருந்த போது.
10.அப்போது நடிக சங்கத்தலைவராக இருந்த மேஜர் சுந்தர்ராஜனுக்கும் சங்க
கட்டடநிதிக்கு பண உதவி செய்தார்.
9.மா.பொ.சி க்கு 83 வது
பிறந்தநாள் அன்று 83000.00 வழங்கினார்
11.இசை சக்கரவர்த்தி
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அதிக பண உதவி
குறிப்பாக உ.சு.வாலிபன் படத்திற்கு இரண்டு சாக்கு நிறைய பணம்
12.இயக்குநர் ஸ்ரீதருக்கு
படவிஷயத்தில் எதிர்பாராத லாபம்........... Thanks...
-
13.கிருபானந்தர் கேட்டுகொண்டபடி
கோவில் கும்பாபிஷேகத்திற்காக
முதலில் blank செக் கொடுத்தார்.பிறகு
வாரியார் பிடிவாதத்தில்
ரூபாய் 10000.00 வழங்கினார்.
15.நடிகர் ரஜினிக்கு தான் கட்டிய
ராகவேந்தர் மண்டபத்தின் பிரச்சனை தீர்த்து வைத்தல் மற்றும்
அவர் திருமண தடையை தகர்த்தார்
14.துணை நடிகர் குண்டுமணிக்கு 5 பெண்கள் திருமணத்திற்காக
100 பவுன் வழங்கியது.
அப்போது பவுன் மிகவும்
கம்மி. இருந்தாலும் மனம் வரணுமே.16.தலைவர் அண்ணன்
எம்ஜிசக்கரபாணியின்
சடலத்தில் உதவி வெட்டியானுக்கு ரூபாய்
10000.00 வழங்கினார் 17.ஏலத்தில் இருந்த வீட்டை மீட்டுக்கொடுத்தார் தலைவர் எம்கே.டி என்.எஸ்.கே நாகேஷ்
குமுதினி நடிகை அடங்கும்......... Thanks...
-
ஆயிரத்தில் ஒருவர்
‘ஏப்ரல் பதினாலு பூஜை வச்சுக்கலாம்’ என்றார் எம்.ஜி.ஆர்.
சுற்றி நின்ற அத்தனைபேருக்குமே ஆச்சரியம். ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். அதை எம்.ஜி.ஆரும் பார்த்தார். ‘நான்தான் ஹீரோ; சீக்கிரம் கதையை ரெடி பண்ணுங்க. நீங்கதான் வசனமும் எழுதறீங்க’ என்று சொன்னபோது கவிஞர் வாலி கருங்கல் சிலைபோல நின்றுகொண்டிருந்தார். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமான உளவுத்துறை அதிகாரி மோகன்தாஸுக்கு மயக்கம் வருவதுபோல இருந்தது.
என்ன ஆயிற்று இவருக்கு? தமிழ்நாட்டின் முதலமைச்சர். எத்தனை பெரிய பொறுப்புகள் நிறைந்த பதவி. சட்டம். ஒழுங்கு. மக்கள். பிரச்னை. திட்டங்கள். கோப்புகள். ரசிகர்கள். தொண்டர்கள். எத்தனை எத்தனை நெருக்கடிகள். எத்தனை எத்தனை பிரச்னைகள். எப்போது சறுக்குவார் என்று காத்துக்கொண்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர். எல்லாவற்றையும் சமாளிக்கவேண்டும். மூச்சுவிடக்கூட நேரம் இல்லை. இருந்தும் நடிக்கிறேன் என்கிறாரே?
என்ன மனிதர் இவர்? பதவிக்கு வந்த ஒரே ஆண்டில் (1978) அதிகாரம் அலுத்துவிட்டதா? நாற்காலி கசந்துவிட்டதா? சொடக்கு போடும் நேரத்தில் எதையும் சாதிக்கும் வித்தை தெரிந்தவர் எம்.ஜி.ஆர் என்பது வாஸ்தவம்தான். ஆனாலும் இது சாத்தியமா?
சாத்தியம்தான் என்று புன்னகை செய்தார் எம்.ஜி.ஆர். அந்தப் புன்னகையில் தெறித்து விழுந்த பொறி மற்றவர்களை ஆக்கிரமித்தது. கதை தயாரிக்கும் பணிகள் தொடங்கின. பத்து நாள்கள். கதை தயார் என்ற விவரத்தைத் தொலைபேசியில் சொன்னார் வாலி. நல்லது. அன்று இரவே வாலி வீட்டுக்கு வந்தார் எம்.ஜி.ஆரின் உறவினர் கே.என். குஞ்சப்பன்.
‘நாளைக் காலை ஆறு மணிக்கு முதலமைச்சருடன் நீங்கள் மதுரை செல்கிறீர்கள். விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போகும் வழியில் முதலமைச்சரிடம் கதையைச் சொல்லிவிடுங்கள். காரியம் முடிந்ததும் நீங்கள் விமானத்திலேயே சென்னை திரும்பிவிடலாம்.’
ஆகாயத்தில் பறந்தபடியே வாலி சொன்ன கதையை எம்.ஜி.ஆர் கவனம் கலையாமல்
கேட்டார். பிறகு சில திருத்தங்களைச் சொன்னார். படத்துக்கான தலைப்பை வாலியே சொன்னார்: ‘உன்னை விடமாட்டேன்!’
விடமாட்டார்கள் என்றார் மோகன்தாஸ். எதையும் முகத்துக்கு நேராகச் சொல்லிவிடக்கூடியவர் அவர். எம்.ஜி.ஆருக்கு எதிரே அப்படிப் பேச அனுமதிக்கப்பட்ட ஒரே நபரும் அவர்தான். அப்படிச் சொன்னதற்குக் காரணம் இருந்தது. 1971 சட்டமன்றத் தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்த சமயம் அது. வெற்றிக்குக் காரணகர்த்தாக்களுள் ஒருவரான எம்.ஜி.ஆருக்கு அமைச்சர் பதவி நிச்சயம் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது.
வெற்றிச் செய்தி வந்தபோது எம்.ஜி.ஆர் காஷ்மீரில் ‘இதயவீணை’ வாசித்துக் கொண்டிருந்தார். தொலைபேசி மூலம் தன் விருப்பத்தை கலைஞரிடம் நாசூக்காகச் சொல்லிவிட்டு, தனிவிமானம் மூலம் சென்னை வந்தார். ஆனால், ‘திரைப்படத்தில் நடித்துக்கொண்டே அமைச்சராக இருப்பது சரியாக இருக்காது. அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளாது’ என்று காரணம் சொல்லப்பட்டு அவருடைய கோரிக்கை
நிராகரிக்கப்பட்டது.
அமைச்சர் பதவிக்கே இத்தனை எதிர்ப்பு என்றால் முதலமைச்சர் பதவி எத்தனை முக்கியமானது. மத்திய அரசு இதை சகித்துக்கொள்ளுமா? அதிலும் பிரதமர் மொரார்ஜி தேசாய் கொஞ்சம் கெடுபிடியான மனிதர். சினிமா சங்கதிகளை எல்லாம் அவர் அனுமதிக்கவே மாட்டார். தவிரவும், அரசியல் அமைப்புச் சட்டத்துக்குச் சவால் விடக்கூடிய காரியம் இது. ஆகவே வேண்டாம்.
எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான எல்லோருமே கிட்டத்தட்ட இதே ரீதியில்தான் ஆலோசனை சொன்னார்கள். எல்லோருக்கும் புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தார் எம்.ஜி.ஆர்.
காலை எழுந்ததும் தொலைபேசியை எடுத்து சில எண்களை சுழற்றினார் எம்.ஜி.ஆர்.
‘பேப்பர் பார்த்தீர்களா? இண்டியன் எக்ஸ்பிரஸ்?’
எதிர்முனையில் இருந்தவர் தட்டுத்தடுமாறி பேப்பரை எடுத்துப் பார்த்தார். அவர், முதல்நாள் எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை சொன்னவர்களுள் ஒருவர். செய்தித்தாளின்மீது வேகவேகமாகக் கண்களை அலைபாயவிட்டார். தட்டுப்பட்டது
அந்தச் செய்தி.
‘மாநில முதலமைச்சராக இருந்துகொண்டு தன்னுடைய கடமைகளுக்குக் குந்தகம் வராமல் திரு. எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிப்பதில் தனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை’ என்று பேட்டி கொடுத்திருந்தார் பிரதமர் மொரார்ஜி தேசாய்.
செய்தியைப் படித்த அத்தனை பேருமே அசந்துபோனார்கள். எம்.ஜி.ஆர் மீண்டும் சினிமாவில் நடிக்கிறார் என்ற செய்தி டெல்லி வரைக்கும் கேட்டிருந்தது. பத்திரிகையாளர்கள் இந்த விஷயத்தைப் பற்றி எழுதி விஷயத்துக்கு தேசிய அந்தஸ்து கொடுத்திருந்தனர். பிரதமர் மொரார்ஜி தேசாயைச் சந்தித்தபோதும் இது தொடர்பான கேள்விகளை எழுப்பினர். அப்போது அவர் அளித்த பதில்தான் மேலே இருப்பது.
எப்படி நடந்தது இந்த அதிசயம்? யாருக்கும் தெரியவில்லை. படம் தொடர்பாக அடுத்தடுத்த வேலைகள் தொடங்கின. அப்போது புகழ்பெறத் தொடங்கியிருந்த இளையராஜா, இசையமைக்கப் பணிக்கப்பட்டார். மூத்த அமைச்சர் நாஞ்சில் மனோகரன் தலைமையில் படத்தின்
தொடக்கவிழா
தொடக்கவிழா ஜெகஜ்ஜோதியாக நடந்தது. எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார் இளையராஜா.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல. இந்தியா முழுவதிலுமே, எம்.ஜி.ஆர் படத்தில் நடிப்பதுதான் முக்கியச் செய்தி. எம்.ஜி.ஆரின் தைரியத்தைப் பத்திரிகைகள் அனைத்தும் மாய்ந்து மாய்ந்து சிலாகித்துக்கொண்டிருந்தன. அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரு கலக்கு கலக்கியது எம்.ஜி.ஆரின் அறிவிப்பு.
கலைஞர் கொடுக்க விரும்பாத சுகாதாரத்துறையைத் தான் முதல்வரானதும் தன்வசம் வைத்துக்கொண்டு ஆட்டத்தின் முதல் காயை வெட்டினார். தற்போது முதலமைச்சர் பதவியில் இருந்துகொண்டே சினிமாவில் நடிப்பது வெட்டாட்டம். இந்நிலையில் எம்.ஜி.ஆரிடம் இருந்து திடீரென ஒரு அறிவிப்பு வெளியானது.
‘படம் நிறுத்தப்படுகிறது.’
வட்டமடித்துக் கொண்டிருந்த அத்தனை சர்ச்சைகளும் ஒரே நொடியில் அடங்கி ஒடுங்கிவிட்டன. ‘ஏன் நிறுத்தினீர்கள்?’ என்று எவருமே கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை. அதுதான் எம்.ஜி.ஆர். அவர் எடுக்கும் முடிவுக்கு அவர் மட்டுமே
ராஜா. நிமிர்ந்து நிந்திக்கவும் முடியாது. குனிந்து குமுறவும் முடியாது.
முற்றிலும் புரிந்துகொள்ளமுடியாத நபர் அவர். மற்றவர்களால் கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாத காரியங்களை அநாயாசமாகச் செய்து முடிக்கக்கூடியவர் அவர். ஆனாலும் எந்த நேரத்தில் என்ன முடிவு எடுப்பார் என்று எவராலும் ஊகிக்க முடியாது. ஒரு முடிவை பகிரங்கமாக எடுப்பார். பத்தே நிமிடங்களில் அதைத் தலைகீழாக மாற்றுவார். ஆனால் அவர் எந்த முடிவை எடுத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தனர் மக்கள்.
சத்துணவுத் திட்டம் என்றபோது எம்.ஜி.ஆரை நோக்கிக் கைகூப்பிய மக்கள், சாராய பேர ஊழல் வெடித்தபோது அதிகாரிகளை நோக்கியே கைகளை நீட்டியிருந்தனர். எம்.ஜி.ஆர்மீது சந்தேகத்தின் நிழல்கூட விழவில்லை. அதுதான் எம்.ஜி.ஆர் என்ற மந்திர வார்த்தையின் பலம்.
எம்.ஜி.ஆருக்குப் பல்வேறு பரிமாணங்கள் உண்டு. ரசிகர்களுக்குத் தலைவன். ஏழைகளுக்கு ரட்சகர். எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனம். படத்தயாரிப்பாளர்களுக்கு லாபதேவன்.வறியவர்களுக்கு வள்ளல். தமிழ்நாட்டுப் பாட்டிகளுக்கு அவர்தான் கடவுள். இன்னும் இன்னும் நிறைய பரிமாணங்கள் எம்.ஜி.ஆர் என்ற மனிதருக்குள் புதைந்து கிடக்கின்றன. ஆச்சரியங்களாலும் சுவாரஸ்யங்களாலும் பிரமிப்புகளாலும் நிரம்பிய மனிதர் அவர்.
நன்றி: வாத்யார்............... Thanks.........
-
#ஒன்னப்போல #உண்டா #வாத்தியாரே!!!
செய்யாறு இடைத்தேர்தல் ...
தேதி அறிவிக்கப்படுகிறது...
வேட்பாளர் நேர்காணலுக்குப் பலர் வருகின்றனர்...அதில் ஒருவர் "செய்யாறு வே.குப்புசாமி..."அவரிடம் நேர்காணலில் புரட்சித்தலைவர் கேட்கிறார்...
"என்னய்யா தேர்தலில் நிற்கிறேன் என்கிறாயே உன்னிடம் எவ்வளவு சொத்து இருக்கிறது" என்ற Mandatory கேள்வியைக் கேட்க...அதற்கு வே.குப்புசாமி, "அண்ணே! நான் தையல்கடை வைத்து நடத்திவருகிறேன். எனக்கு ஆறு பெண்பிள்ளைகள். என்னிடமிருந்த எல்லா சொத்துக்களையும் விற்று அவர்களுக்கு திருமணமும் செய்துவிட்டேன்...
ஆனால், #என்னிடமுள்ள #ஒரே சொத்து '#என் #தையற்கடையில் #மாட்டிவைத்திருக்கும் #உங்கள் #திரு #உருவப்புகைப்படம் #தான்..என்று சொல்ல...
இதைக் கேட்ட நம் #பொன்மனச்செம்மல் மனம் கரைந்துவிட்டார்.
'கவலைப்படாதய்யா, உன்ன தான்யா இந்த தொகுதியில் வேட்பாளராக நிற்க வைக்கப் போறேன்...
எனக்கு உன் சொத்து முக்கியமில்லை. உன்னைப் போன்ற உண்மையான தொண்டர்களை நான் இழக்கவிரும்பவில்லை. ...
தைரியமா போயிட்டு வா..' என்றார்.
யாரால இப்படி சொல்லமுடியும்???
வே.குப்புசாமிக்கான தேர்தல் செலவுகளை தலைமை கழகத்தையே ஏற்கச்செ ய்ததோடல்லாமல் அவரை 26000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்தார்.
இச்செய்தி அன்று #குமுதம் வார இதழில் வெளிவந்தது.
அன்றாடங்காய்ச்சிகளைக்கூட அரசு அதிகாரத்தில் பங்கு பெறச்செய்தவர் நம் பொன்மனச்செம்மல்!
அதேபோல் உப்பிலியாபுர*ம் ச*ரோஜா, எம்ஜிஆர் காலத்தில் ச*த்துண*வு கூட*த்தில் வேலை பார்த்துவ*ந்த*வ*ர். அவ*ரையும் எம்.எல்.ஏ. ஆக்கிய*வ*ர் புர*ட்சித்த*லைவ*ர்...
இனிய மாலை வ*ணக்கத்துட*ன்........... Thanks.........
-
மைனாரிட்டி திமுக - ஒரு எளிய விளக்கம்
1990 க்கு முன்பு தமிழ்நாட்டு இஸ்லாமியர்கள் இந்து கோவில்களுக்கு வருவதும், இந்துக்கள் மசூதிக்கும், தேவாலயங்களுக்கு போய் வேண்டிக் கொள்வதெல்லாம் சாதாரணம். அம்மை நோய் வந்தால் முஸ்லிம் பெண்கள் மாரியம்மனுக்கு நேர்ந்து கொள்வதும், கோவில் திருவிழா கமிட்டியில் முஸ்லிம்கள் ஒருவராக இருந்து திருவிழாக்களை முன்நின்று நடத்தியதையும் நாற்பது வயதை கடந்தவர்கள் யாரும் மறுக்க முடியாது.
தொப்புள் கொடி உறவுகளாக இருந்தவர்கள் தாலிபான்களாக எப்போது மாறினார்கள்...? மதத்தை கடந்து இந்துக்களிடமும் மிகுந்த செல்வாக்கு பெற்று விளங்கிய பாதிரியார்கள் இன்று எப்படி ஹிந்து விரோதிகளாக மாறினார்கள்? அனைத்தும் திமுகவின் திருவிளையாடல்கள் தான்.
அண்ணா துரையின் மரணத்திற்க்குப் பின் 1969 ல் முதலமைச்சரான கருணாநிதி லட்சங்களில் ஊழல் செய்து கொண்டிருந்தார். அவருக்கான அறிவு அவ்வளவு தான். 1976 வரை எட்டு ஆண்டுகளாக ஆட்சியிலிருந்து தமது அறிவுக்கு எட்டின முறைகளில் ஊழல் செய்தார். அதாவது பெரும்பாலும் அரசு கான்ட்ராக்ட்களில் கமிஷன். லட்சங்களில் மட்டுமே ஊழல் செய்யத் தெரிந்த அப்பாவி கருணாநிதி அவர்.
இந்த நிலையில் தி.மு.க உடைந்து எம்ஜிஆர் தலைமையில் அ.தி.மு.க உதயமாகிறது. எம்ஜிஆர் என்னும் மக்கள் செல்வாக்கு பெற்ற மனிதர் இருந்த வரையில் கருணாநிதி ஒரு காகிதப்புலியாகத்தான் தமிழக அரசியல் களத்தில் இருந்தார். எம்ஜிஆர் மறைந்த பின் வந்த பொதுத்தேர்தல் வரை அதாவது 1989 வரையிலான 13 ஆண்டுகள் கருணாநிதிக்கு வனவாசம் தான். இந்த வனவாச காலத்தில் கட்சியை நடத்த திமுக வினர் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தனர் என்றே சொல்லலாம்.
வருடத்திற்கு மூன்று முறை முப்பெரும் விழா, ஐம்பெரும் விழா, இந்தி எதிர்ப்பு மாநாடு, டெஸோ மாநாடு, அண்ணா பிறந்த நாள் விழா, பெரியார் விழா,... இப்படி மக்களையும், தொழில் அதிபர்களையும் ஏமாற்றித்தான் வயிறு வளர்த்து வந்தனர். கருணாநிதியின் மீதான மக்களின் அதிருப்தி மிக அதிகமாக இருந்த காலகட்டம் அது. ரவுடிகளின் கட்சி என்ற மதிப்பீடே அப்போது இருந்தது.
அதிமுக விற்கும் திமுக விற்கும் இருந்த நிரந்தர ஓட்டு வங்கியில் 10% ற்கும் மேலான வித்தியாசம் இருந்தது. இந்த வித்தியாசம் தான் தி.மு.க வை 13 ஆண்டுகள் வனவாசத்தில் வைத்திருந்தது. எம்ஜிஆரின் மறைவிற்குப் பின் அதிமுக இரண்டாக உடைந்தது. இது தான் கருணாநிதியின் அரசியல் வனவாச வரலாற்றில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.
பிளவு பட்ட அதிமுக வை எதிர்த்து தேர்தல் களம் கண்ட திமுக 1989 ல் ஆட்சியை பிடித்தார். இப்போது கருணாநிதியை சுற்றி முரசொலி மாறன் தலைமையிலான ஒரு கில்லாடியான ஒரு கூட்டம் உருவாகியிருந்தது. கில்லாடி கூட்டதும் என்றதும் தமிழக மக்களுக்காக செயல்படும் அறிவார்ந்த கூட்டம் என்று நினைக்க வேண்டாம்.
பழைய கருணாநிதி அரசு காண்ட்ராக்ட்களில் எப்படி கமிஷன் பார்ப்பது என்ற அறிவிலானவர் என்றால் முரசொலி மாறன் தலைமையிலான கூட்டம் அரசு அதிகாரத்தை பயன்படுத்தி எந்த வகையிலெல்லாம் கொள்ளையடிக்கலாம் என மிக துல்லியமாக கணக்கிட்டு சுரண்டியது. அரசு காண்ட்டிராக்ட்களில் கட்டாய கமிஷன் என்பது மாறி பினாமி நிறுவனங்களை துவக்கி அதற்கு ஒப்பந்தங்களை வழங்கினர்.
அரசு வேலைகளுக்கு ரேட் நிர்ணயிக்கப்பட்டு வசூல், பதவி உயர்வுக்கு ரேட், டிரான்ஸ்பருக்கு ரேட், டிரான்ஸ்பரை ரத்து செய்ய ரேட்... என வசூலை வாரி குவித்தனர். இதில் ஒரு கொடுமையான விசயமும் நடந்தது. லஞ்சம், ஊழல் இல்லாத அரசை அமைப்போம் என வாய் கிழிய பேசும் இவர்கள் மாமூல், கட்டிங், வசூல் கொட்டும் ஏரியாக்களில் உள்ள அரசு பதவிகளுக்கு தனி ரேட்டே நிர்னயம் செய்து வசூலித்தனர். அதாவது ஏலம் விடாத குறை தான்.
சென்னை பூக்கடை பகுதி காவல் துறை பதவிகள், சேலம் மாவட்ட வனத்துறை பதவிகள், சென்னை கோவை பத்திரப்பதிவு அலுவலர் பதவிகள், சென்னை கோவை விற்பனை வரி அலுவலக பதவிகள்.... இவற்றை போல ஆயிரக்கணக்கான பசையுள்ள இடங்களும், பதவிகளும் அடையாளம் காணப்பட்டு அவற்றிற்கு தனி ரேட் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்ட அக்கிரம் எல்லாம் திமுக ஆட்சியில் நடந்தது.
சரி, கோடி கோடியாக கொள்ளையடிக்க வழி கிடைத்து விட்டது. லட்சங்கள், ஒரு கோடி இரண்டு கோடி எனில் கரன்சியாக பதுக்கி வைக்கலாம். பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கலாம். இதெல்லாம் போக காட்டாறு போல வந்து குவிந்து கொண்டே இருக்கும் ஊழல் பணத்தை என்ன செய்தார்கள்? இந்த பணம் தான் வெளிநாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு வங்கிகளில் ரொக்கமாகவும், பங்குச் சந்தை முதலீடுகளாகவும், அசையா சொத்துக்களாகவும் பதுக்கப்பட்டது.
வெளிநாட்டிற்கு பணத்தை கொண்டு போக வேண்டும் எனில் முறைப்படி ரிசர்வ் வங்கியில் முறைப்படி அனுமதி பெற்று கொண்டு போக வேண்டும். முறைப்படி ரிசர்வ் வங்கியில் அனுமதி பெற வேண்டும் எனில் அந்த பணம் வந்த வழியை சொல்ல வேண்டும். என்ன சொல்வார்கள் இவர்கள்? ஊழல் செய்து மக்களை கொள்ளையடித்த பணம் என்று சொல்ல முடியுமா? இந்த இடத்தில் இந்தியாவில் மதம்மாற்றி பிழைப்பு நடத்த வந்த கிறித்தவர்களும், முஸ்லீம்களுக்கும் இதே பிரச்சனை தான். ஆனால் அவர்களுக்கு இது தலைகீழ். மதத்தை பரப்ப வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் வருகிறது. அப்படி வரும் பணத்தை என்ன சொல்லி இவர்கள் வாங்குவார்கள்? மதத்தை பரப்ப வாங்குகின்றோம் என சொல்ல முடியுமா? இந்த இடத்தில் தான் மைனாரிட்டிகளும், திமுகவும் கிவ் அன்ட் டேக் (Give and Take) என்ற ஒரு அடிப்படை புரிதலுடன் இணைகின்றனர்.
திமுக வின் ஊழல் பணம் இந்தியாவில் உள்ள மெஷினரிகளிடமும், மதராசாக்களிடமும் கொடுக்கப்படும். அதற்கு பதிலாக மதமாற்றத்திற்காக வெளிநாடுகளில் தொண்டு நிறுவனங்களுக்கு வசூலிக்கப்படும் பணத்தின் மூலம் அங்கேயே திமுக வினரின் பணம் முதலீடு செய்யப்படும். இதனால் ஒரு பக்கம் மதமாற்றத்திற்கான பணம் மைனாரிட்டிகளுக்கு இங்கேயே கிடைத்து விடுகிறது. திமுக வினரின் ஊழல் பணம் பாதுகாப்பாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பதுக்கப்படுகிறது.
இது தான் திமுக தலைமைக்கு "மைனாரிட்டி" மதங்களின் மேல் பாசம் ஏற்பட காரணம். வெளிப்படையாக பார்த்தால் திமுக என்பது நாத்திக தலைவர்களால் ஆனது. அது பெரியாரின் இறை மறுப்பு கொள்கையை அடிப்படையாக கொண்டது என்பதால் இந்துக்களை விமர்சனம் செய்கின்றனர் என்று தெரியும். ஆனால் உண்மை காரணம் இது தான்:
அதிமுக விற்கும் திமுக விற்குமான 10% இடைவெளியை மைனாரிட்டிகளை கொண்டு நிரப்புவது. அடித்த கொள்ளை பணத்தை அவர்கள் மூலம் பாதுகாப்பாக வெளிநாட்டிற்கு கொண்டு சென்று பதுக்குவது. இந்த இரண்டும் தான் திமுக வின் பிரதான கொள்கை.
திமுகவின் உதவி மதத்தை பரப்ப மைனாரிட்டிகளுக்கு அவசியம். அடித்த கொள்ளை பணத்தை வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று பதுக்க மைனாரிட்டிகளின் உதவி திமுக விற்கு அவசியம். கடவுள் மறுப்பு கொள்கைகளில் ஏசப்பாவிற்கும், அல்லாவிற்கும் திராவிட கொள்கையில் விதிவிலக்கு வழங்கப்பட்டது இந்த காலகட்டத்தில் தான். திமுக வின் எழுதப்படாத பார்ட்னர் ஆன தைரியத்தில் இந்த காலத்தில் தான் ஜிஹாதி கொலைகள் தொடங்கியது.
80% பெரும்பான்மை சமுதாயமாக இருந்தாலும் கோவில் விழாக்களில் தகராறு, கோவில்களையே உடைப்பது, இந்துக்களை பகிரங்கமாகவே மேடை போட்டு கேவலப்படுத்துவது என கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் கிளம்பினர். இவர்களின் தயவு தேவைப்பட்டதால் திமுக வும் மறைவில் நின்று இவர்களை ஆதரித்து வளர்த்து விட்டது.
இது படிப்படியாக வளர்ந்து திமுக வின் அனைத்து மேடைகளிலும் "மதச்சார்பற்ற அமைப்புகள்" என்ற பெயரில் மைனாரிட்டிகள் இந்துக்களை கேவலப்படுத்தி பேசுகின்றனர். மதசார்பற்ற மாநாடு என்று திமுக கூட்டம் போடும், ஆனால் அதில் முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் மத அடையாளத்தோடு கலந்து கொண்டு இந்து மதத்தையும், இந்துக்களையும் விலாசுவார்கள்.
சரி, இதிலிருந்து தி.மு.க விலகாதா? என அப்பாவி இந்துக்கள் கேட்கலாம். கண்டிப்பாக முடியாது. இப்போது திமுக வின் குடுமி மைனாரிட்டிகளின் கைகளில். இதுவரை சுருட்டிய பல்லாயிரம் கோடிகள் மைனாரிட்டிகளின் ஹவாலா நெட்வொர்க் மூலம் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு முதலீடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் பதுக்கப்பட்ட கருப்பு பணத்தையும், முதலீடு செய்யப்பட்ட சொத்துக்களையும் இதே மைனாரிட்டி கும்பல் முறையாக பராமரித்து வருகிறது.
இங்கு திமுக தலைவர் ஏதாவது பல்டி அடித்தால் அத்தனை பதுக்கல் பணமும் அவர்களுக்குச் சொந்தமாகிவிடும். அது மட்டுமல்ல திமுக வினரின் சட்ட விரோத கருப்பு பண பரிமாற்றங்களையும், வெளிநாட்டு முதலீடுகளையும் போட்டு கொடுத்தால் ஸ்டாலினின் குடும்பமே சுற்றம் சூழ நீதிமன்றத்திற்கு அலைந்து சிறையில் கம்பி எண்ண வேண்டியது தான். தண்டனை முடிந்து விடுதலையாகி வந்தாலும் பூக்கடை பஸ் ஸ்டாண்டில் மாங்காய் விற்றுத்தான் பிழைக்க வேண்டி வரும்.
பச்சையாக சொன்னால் திமுக என்கிற கட்சி இன்று மைனாரிட்டிகளின் ஹவாலா மாபியாக்களுக்கு அடிமையாகி முப்பது ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. மைனாரிட்டிகளுக்கு மண்டி போட்டு சலாம் போடும் நிலை வந்து விட்டது. எஜமானன்களை திருப்தி படுத்த ஒவ்வொரு இடத்திலும் முடிந்தளவு இந்துக்களை பார்த்து குரைத்து எஜமான விசுவாசம் காட்டுவதை தவிர வேறு வழியில்லை. எஜமான விசுவாசத்திற்காக இந்து மத எதிர்ப்பு என்கிற நிலைப்பாடு எடுத்தாகி விட்டது. ஆனால் அரசியலில் வெற்றி நடை போடுவது கட்டாயம். அதற்கு இந்துக்களின் ஓட்டு அவசியம். இதனால் ஒவ்வொரு தேர்தல் முடியும் வரை இந்துமத எதிர்ப்பு மூட்டை கட்டி வைக்கப்படும். தேர்தலில் இந்துக்களின் ஓட்டு வாங்க மைனாரிட்டிகளிடம் அனுமதி பெற்று - விபூதி பூசுதல், குங்குமம் வைத்தல், கோவிலுக்கு சென்று வழிபடுதல், ஐயர்களை கட்டிப்பிடித்தல்... போன்ற காமெடிகள் நடக்கும்.
இந்து மக்களுக்கு திமுக கட்சி செய்த நன்மைகள் என பைசாவிற்கு உபயோகமில்லா உதவிகளை பட்டியலிடுவார்கள். இந்து மக்களின் காவலன் திமுக என்று கூட பல்டி அடித்து வாக்கு கேட்பார்கள். இந்த பல்டியெல்லாம் ஓட்டுப்பதிவு நாள் வரை தான். வாக்குப்பதிவு முடிந்தவுடன் எஜமான விசுவாசத்தை காட்ட மறுபடியும் துண்டு சீட்டில் எழுதி வைத்து, சதா..சதா.. சந்தானத்தை வேரறுப்போம் என பேச ஸ்டாலின் கிளம்பி விடுவார்.
இந்துக்கள் வாக்களிக்கும் முன் சற்று யோசிக்கவும். மைனாரிட்டிகளின் அடிமை கூட்டணிக்கு வாக்களித்து நீங்களும் அடிமையாக போகிறீர்களா...? அல்லது சுய மரியாதையுடன் வாழ சிந்தித்து வாக்களிக்க போகின்றீர்களா? மைனாரிட்டிகளின் அடிமையாக மாறி அவர்களிம் மண்டி போட்டு நிற்பதும், மான மரியாதையுடன் நாம் வாழ்வதும் உங்கள் கைகளில் உள்ள வாக்குச் சீட்டில் தான் உள்ளது. சிந்தித்து செயல்படுவீர்............ Thanks...
-
பாகம் 1 [மக்கள் திலகம் அவர்களின் தந்தை கோபாலன் அவர்களுடைய பாட்டனாரின் பாரம்பரியம் கோவை மாவட்டத்தில் காங்கேயம் என்ற ஊருக்கு அடுத்து உள்ள புத்துர் என்ற கிராமம்.
அதில் ஒரு சிறிய ஜமீன் போலவும் ஒரு மிராசுதாரர் ஆகவும் வாழ்ந்து உள்ளார்கள். இவர்கள் வாழும் காலத்தில் கோவை மாவட்டத்திற்கு பெயர் "கொங்கு நாடு".
இந்த கொங்கு நாட்டில் இருந்து அந்த காலத்தில் கோபாலன் அவர்களுடைய தாய், தந்தை கேரளா பாலக்காடு வடவனூருக்கு வந்து குடியேறிவிட்டதாக தெரிகிறது. எம்.ஜி.ஆர் அவர்களுடைய பூர்விகம் தமிழ்நாடு.
இவர் பிறந்தது ஈழத்தமிழ்நாடு இலங்கை கண்டி. இவர் படித்தது, வளர்ந்தது, பிறகு வேலைக்கு சென்றது கும்பகோணம், செந்தமிழ்நாடு. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள், "நான் ஒரு தமிழன்" என்பதை பல முறை சொல்லி இருக்கிறார்.
கோவையிலிருந்து சுமார் 30, 40 மைல் தொலைவில் உள்ள பாலக்காடு என்ற பெரும் நகரத்திற்கு அடுத்து 20 மைலில் உள்ள வடவனூர் என்ற ஊரில் மருதூர் என்ற இடத்தில் வசித்து வந்த கோபாலன் அவர்கள் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் பெயர் சத்தியபாமா. அவருடைய ஊர் குழல் அந்தம்.
கோபாலன் அவர்கள் பட்டப்படிப்பு வரை படித்தவர். எந்த விஷயத்திலும் கோபப்படமாட்டார். மனிதாபிமானத்தோடு நடந்து கொள்பவர். இவர்கள் வடவனூரில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் நான்கு குழந்தைகள் பிறந்தது. இதில் இரண்டு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள். நான்காவது குழந்தைதான் சக்கரபாணி.
இந்த குழந்தைகளுடன் அவர்கள் வடவனூரில் வாழ்ந்து இருந்த காலத்தில் கோபாலன் அவர்களுக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் சொத்து விஷயத்தில் தகராறுகள் ஏற்பட்டது.
கோபாலன் அவர்கள் பாலக்காட்டில், ஒரு சில வருடங்கள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாவட்ட முனிசிப்பு கோர்ட்டில் துணை நீதிபதியாக பணியாற்றி வரும் காலத்தில் வடவனூரை சேர்ந்த ஒரு வழக்கில், 'தனக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்க வேண்டும்' என்று உறவினர்கள் வற்புறுத்தினார்கள்.
அதை ஏற்றுக்கொள்ளாத துணை நீதிபதி கோபாலன், "உங்கள் பக்கத்தில் கொஞ்சம் கூட நியாயம் இல்லை. எனவே உங்களுக்கு நான் உதவ முடியாது" என்று சொன்னதில் ஏற்பட்ட எதிர்ப்பும் அந்த ஊரில் அவர்களுக்கு உண்டு.
கோபாலன் அவர்கள், 'தர்ம நியாயம் அற்றவர்களுடன் நாம் சேர்ந்து வாழ்வதா?' என்ற எண்ணத்தோடு...... 1913ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நான்கு குழந்தைகளையும், தன் மனைவியையும் அழைத்துக்கொண்டு இலங்கை செல்கிறார்.
இலங்கை கண்டிக்கு சென்றவுடன் நண்பர்கள் ராமுபிள்ளை, வேலுபிள்ளை இருவரும் கோபாலன் அவர்கள் குடும்பத்தினருக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறார்கள்.
இந்த காலகட்டத்தில் ஈழ தமிழர்கள் வாழும் கண்டியில் 1917ல் செவ்வாய் கிழமை காலை 11.36க்கு 5வது குழந்தையாகப் பிறக்கிறார் எம்.ஜி.ஆர் அவர்கள்!
அண்ணன்கள் அக்காமார்கள் ராமச்சந்திரா என்று அழைத்து கொஞ்சி விளையாடும் போது அதை பார்த்து கோபால் சத்தியபாமா அவர்கள் ரசிப்பார்கள். நான்காவது குழந்தையான் சக்கரபாணிக்கும் எம்.ஜி.ஆருக்கும் 4 வயது வித்தியாசம் என்று சொல்லப்படுகிறது.
இந்த காலகட்டத்தில் கோபாலன் அவர்களுக்கு ஒரு கல்லூரியில் பேராசியராக வேலை கிடைத்தது. அதில் இருந்த சில வருடங்கள் கழித்து கண்டியின் மாவட்ட முனிசிப் போர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்தார்.
இந்த 5 குழந்தைகளுடன் நல்ல வசதியோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் காலத்தில் கோபாலன் அவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்படுகிறது. கோபாலன் அவர்கள் மாரடைப்பால் 1920ம் ஆண்டு இறந்து விடுகிறார்.
Cont...] பாகம் 1.......... Thanks.........
-
தமிழ்வாணன் கல்கண்டு இதழில்
31.07.1960 மக்கள்சக்தியும்
ஒழுக்கத்திற்கு ஒரே
நடிகர் எம்ஜிஆர் மட்டுமே. தலைவர் ரசிகர்கள் ஒவ்வொருவரும் 1ரூபாய் எம்ஜிஆருக்கு
மணியார்டர் செய்தாலே
கோடீஸ்வரர் ஆகிவிடுவார். மேலும் மது மாது புகையிலை காப்பி டீ
எந்த பழக்கமும் கிடையாது. தண்ணீர் கொடுத்தால் தூக்கித்தான் குடிப்பார்.
எச்சிலைக் காரி உமிழ்வதில்லை.நகத்தை கடிக்க மாட்டார். கெட்டவார்த்தை பேசமாட்டார்.நம் மக்கள் திலகம்.......... Thanks mr.SR.,
-
* வரலாற்றில் அழியாத திரு.சைதை துரைசாமியின் துணிச்சலை நினைவு கூறும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் உரை... ❤*
*திரு.சைதை துரைசாமி பற்றி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் அரசு விழாவில் பேசிய பேச்சு... ⬇⬇⬇*
*➡ நாங்கள் அரசியல்வாதிகள் எப்படி இருக்கின்றோம்...?*
*நான் இங்கு வந்து மேடையில் நிற்கும் போதே சைதாப்பேட்டை என்றாலே எலுமிச்சம்பழம் தான் எனக்கு ஞாபகம் வரும்... *
* நான் ஒரு அரசியல்வாதி...❗*
*☀☀☀எலுமிச்சம் பழத்தை மாலையாகப் போட்ட துரைசாமியைத் தான் எனக்கு ஞாபகம் வருமே தவிர, பிறகு தான் இந்த நிகழ்ச்சி கூட ஞாபகம் வரும்... *
*❤❤ நான் ஒரு அரசியல்வாதி...❗❗❗*
* என்னுடைய அரசியல் கட்சியில் இருந்த ஒருவர், அப்போதிருந்த முதலமைச்சருக்கு, இந்த சைதாப்பேட்டையிலே துணிச்சலாக எலுமிச்சம் பழ மாலையைப் போட்டு, அந்த மேடையையே அடித்து தூளாக ஆக்கி, அவரைத் தூக்கிக்கொண்டு போய் சிறைச்சாலையில் போட்ட அனுபவம் தான் என் கண்முன்னே முன்னே நிற்கும்... *
* ஆனால், அதை நினைத்துக் கொண்டு இங்கே வந்து, அந்த எண்ணத்தைப் பரிந்துரைக்கின்ற வகையில்நான் பேச ஆரம்பித் தேனானால், நான் முதலமைச்சராக இருக்க லாயக்கற்றவன் என்பதை இங்கே தெளிவாகக் கருதுகிறேன்... *
* ஓட்டு வாங்குவது வேறு, அதை வாங்கிய பிறகு மக்களுக்குப் பணி செய்யும் நிலைமை வேறு... *
*✨⭐ தன் தொண்டருக்காக எப்படி பட்ட எச்சரிக்கையுடன் புரட்சித் தலைவர் பேசுகிறார் என்பதற்கு இது ஒரு சான்று ....⚡⚡⚡*........... Thanks.........
-
மலேசியா நாட்டில் தைப்பிங் என்கிற இடத்தில் மிக பிரமாண்டமான அய்யனார் கோவில் உள்ளது இந்த கோவில் வளாகத்தில் மக்கள்திலகம் அவர்களுக்கும் கோவில் உள்ளது. மலேசியா அரசாங்கம் இந்த கோவில் வளாகத்தை சுற்றுலா மையமாக அறிவித்து உள்ளது. கோவிலுக்கு வருபவர்கள் மக்கள்திலகத்தை வணங்கி வழிபட்டு பின்னர் அய்யனாரை வழிபட செல்லுகின்றர். Unlimited videos free download! Dont miss the chance to get to know the App which 10000000+ person love the most https://www.vidmateapp.com/subpub/yq...8yNjU5MTI3MjY3
NzQ2MTQ5Lz9zZm5zbj1zY3dzcG1v&f=wh......... Thanks...
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சம்பளம் வாங்காமல் நடித்த*படங்கள்*விவரம்*
----------------------------------------------------------------------------------------------------------------------
1.பைத்தியக்காரன் -* *1947 - கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுக்காக*
2. தாய் மகளுக்கு கட்டிய தாலி -1959 -பேரறிஞர் அண்ணாவுக்காக*
3. சபாஷ் மாப்பிள்ளை* - 1961 - இயக்குனர் ராகவன் மற்றும் நடிகை மாலினிக்காக*
4.தாலி பாக்கியம்* -1966-* நடிகை மற்றும் தயாரிப்பாளர் பி.கண்ணாம்பாவுக்காக*
5.எங்கள் தங்கம்* - 1970-* மு.கருணாநிதி மற்றும் முரசொலி மாறனுக்காக*
6.மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்* - 1978 - இயக்குனர் மற்றும் * தயாரிப்பாளர்** பி.ஆர். பந்துலுவுக்காக .
தகவல் உதவி : ஒளி விளக்கு மாத இதழ்*
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நாடகம் மற்றும் சினிமா*துறையில்*சந்தித்த*சவால்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன் சிறு வயது முதல் நாடக துறையிலும், சினிமா துறையிலும் சந்தித்த சவால்கள் குறித்து 1 yes tv* சானலில் நேற்று (04/04/20) மாலை 6.30 மணி* முதல் 7 மணி வரையில் ஒளிபரப்பான நிகழ்ச்சி* பற்றிய தொகுப்பு :
எம்.ஜி.ஆர். சிறு வயதில் ( ஏழு வயதில் ) நாடகத்தில் நடிக்கும்போது ஒரு வார சம்பளமாக 0.25 பைசா* வாங்கினார் .* நன்றாக நடித்தால் சம்பளம் இரு மடங்காக*அதாவது 0.50 பைசாவாக உயரும் .* *ஒரு முறை எம்.ஜி.ஆரும் ,அவரது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியும் நடனம் கற்பதற்காக புதுவைக்கு சென்றிருந்தனர் .நடனம் ஒழுங்காக கற்காமல் இருந்தாலோ, நடன பயிற்சியில் தவறுகள் செய்தாலோ பிரம்படி விழும் .* ஆரம்பத்தில் செய்த தவறுகளினால் இருவருக்கும் அடி விழுந்தது . எனவே ஊருக்கு திரும்ப யோசித்தனர் .நாடக துறையை சார்ந்தவர் ஒருவரின் ஆலோசனையின்படி, இந்த பிரச்னைகளுக்கு பயந்தால் ஒருக்காலும் முன்னேற முடியாது என்ற சொல்லை கேட்டு** பின்னர் இருவரும்*தவறுகளை திருத்தி நடனம் பயின்றனர் .
நாடகங்களில் ராஜா, ராணி, மற்றும் ராஜபார்ட் வேடம் போடுபவர்களுக்கு அறுசுவை சாப்பாடும், மற்றவர்களுக்கு மிகவும் சாதாரண சாப்பாடும் கிடைத்து வந்தது . கொஞ்ச காலத்திற்கு பிறகு பக்கிரிசாமி என்பவர் மேலாளர் ஆக வந்த பிறகு* நிலைமை கொஞ்சம் மாறியது .
ராயல் தியேட்டர்ஸ் நிறுவனம் வள்ளி திருமணம் என்ற நாடகத்தை சென்னையில் கிட்டப்பா மற்றும் கே.பி.சுந்தராம்பாள் ஜோடியை வைத்து*நடிக்க ஏற்பாடு செய்தனர் . அந்த சமயம்* பி.யு.சின்னப்பாவும் , எம்.ஜி.ஆரும்*நாடகத்தை கண்டுகளிக்க மதுரை பாய்ஸ் கம்பெனியில் இருந்து வந்திருக்கிறோம் என்று அறிமுகம் செய்து கொண்டனர் .* அப்போது கிட்டப்பா - கே.பி.எஸ்.ஜோடி , பி.யு.சின்னப்பாவையும், எம்.ஜி.ஆரையும் மதுரை பாய்ஸ் கம்பெனி* விவரம், மற்றும் நாடக துறையில்* அவர்களது வளர்ச்சி குறித்து*கேட்டு தெரிந்து கொண்டனர் .*
மாணவ பருவத்தில் நாடக துறையில் நடிக்கும்போது எம்.ஜி.ஆர். சில சண்டை காட்சிகளுக்காக பயிற்சி எடுத்துக் கொண்டார் .* ஒருமுறை நாடகத்தில் நடிக்கும்போது கதையின் படி* எம்.ஜி.ஆர். தான் முதலில் எதிராளி மீது பாய வேண்டும் . ஆனால்* எதிராளி முதலில் பாய்ந்து சண்டையிட்டபோது ,போராடி எம்.ஜி.ஆர். எதிராளியை வீழ்த்தி நெடுநேரம் அவனை தன்* கட்டுக்குள் வைத்து*இருந்தார். பதிலுக்கு எதிராளியும் முடிந்தவரையில் போராடினான் .பயனில்லை .காட்சி முடிந்து படுதாவும் போட்டாகிவிட்டது .* எதிராளி கீழேயும் எம்.ஜி.ஆர். அவன்மீது அமர்ந்து சண்டையிட்டு கொண்டிருந்தபோது மேலாளர் வந்து இருவரையும் பிரித்து எம்.ஜி.ஆரை முதலில் கோபித்துக் கொண்டாராம். அப்போது எம்.ஜி.ஆர். முதலில் கதையின்படி நான்தான் பாய வேண்டும் . ஆனால் அவன் முந்திக் கொண்டான் . மேலும் போட்டியில் நான் தோற்றால் எதிர்பார்க்கும் சம்பளமும், வாய்ப்பும்* தரமாட்டீர்கள் .* நல்ல சாப்பாடும் கிடைக்காது* என்றதும் மேலாளர் கோபம் தணிந்து சென்றாராம் .* அன்று முதல்*எம்.ஜி. ஆர். நுணுக்கமாக சண்டை காட்சிகளுக்கான பயிற்சிகளை மேற்கொண்டு*தன்னை யாரும் வெல்ல முடியாத அளவிற்கு தயார் படுத்திக் கொண்டார் .அதன் விளைவே, பின்னாளில் சினிமா துறையிலும் சிலம்பம், குத்து சண்டை,*கம்பு சண்டை, வாள் சண்டை* போன்ற அனைத்திலும் வல்லவனாக , இருந்ததோடு , அவரது படங்களில் பிரத்யேக சண்டை காட்சிகள் அமைய*ஏதுவாகி, ரசிக பெருமக்களின் நல்ல* வரவேற்பை பெற்றார் என்று சொன்னால் மிகையாகாது .
நிகழ்ச்சியின் நடுவே படகோட்டியில் இருந்து கல்யாண பொண்ணு பாடலும்,*கன்னித்தாய் படத்தில் இருந்து சில காட்சிகளும், படகோட்டியில் முதல் சண்டை காட்சியில் கம்பு சுழற்றுவது , ரிக்ஷாக்காரன் படத்தில் கடலோரம் வாங்கிய காற்று பாடலும்* *ஒளிபரப்பப்பட்டது .
**
-
தனியார் தொலைக்காட்சிகளில் ஏழை பங்காளன் எம்.ஜி.ஆர். படங்கள்*
---------------------------------------------------------------------------------------------------------------
04/04/20* * * -ஜெயா மூவிஸ் - காலை 7மணி -விக்கிரமாதித்தன்*
* * * * * * * * * * -புதுயுகம்* * * *- இரவு 7 மணி* *- ராமன் தேடிய சீதை*
05/04/20* * *- ஜெயா மூவிஸ் - காலை 7 மணி -குலேபகாவலி*
* * * * * * * * * *மெகா 24 டிவி* *-பிற்பகல் 2.30 மணி* - ராஜராஜன்*
* * * * * * * * * * *சன் லைப்* * *- மாலை 4 மணி* *- எங்கள் தங்கம்*
06/04/20* * - சன்* லைப்* *- காலை 11 மணி* - நல்ல நேரம்*
மெகா*டிவி* -12 மணி* * -சக்கரவர்த்தி திருமகள்*
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சந்தித்த*சவால்கள் - 1 yes* tv* சானல்*
--------------------------------------------------------------------------------------------------------
இன்று (05/04/20) மாலை* 6.30 மணி முதல் 7 மணி வரை ஒளிபரப்பான*நிகழ்ச்சியின் தொகுப்பு :
ஓர் இரவு என்கிற கதையை பேரறிஞர் அண்ணா ஒரு இரவு முழுவதும் இருந்து*உட்கார்ந்து எழுதி முடித்தார் .* அண்ணா அவர்கள் முதல்வராகும் சமயம் ராகு காலத்தில் உள்ளதை சிலர் சுட்டி காட்டியபோது அதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி பதவி ஏற்றார் .* அதனாலோ என்னவோ, அவரது ஆட்சி இரண்டு ஆண்டுகளுக்குள் முடிவுற்றது .என்று பின்னாளில் குறிப்பிட்டனர் . அண்ணா அவர்கள் மறைந்தபோது வங்கியில் இருப்பு ரூ.5,000/- .* அவருக்கு கடன் சுமார் ரூ.35,000/- இருந்தது . அவர் மறைவதற்கு முன்னாள் நடிகர் எஸ்.எஸ். ஆர். தனது காரை அண்ணாவுக்கு வழங்கி இருந்தார் .* அண்ணா அவர்கள் மறைந்ததும், அவரது மனைவி ராணி அம்மையார் அந்த காரை விற்று கடன்களை சரிசெய்ய முற்பட்டார் .
ஒருமுறை கோவையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் எம்.ஜி.ஆரும், அவரது அண்ணன் சக்கரபாணியும் கலந்து கொள்வதாக ஏற்பாடு . முன்னதாக 10 வயது சிறுமி கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டி, கருணாநிதி என்று பெயர் சொல்லி பேசினார் . விவரம் அறிந்த பெரியவர் சக்கரபாணி* அந்த சிறுமியின் பேச்சையும், கூட்டத்தின் தலைவரையும் கண்டித்து பேசினார் .* பின்னர் பேசிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கலைஞர் கருணாநிதி எனக்கு தலைவராக இருந்தவர், முன்னாள் முதல்வர் . எனக்கு நெடுங்கால நண்பர் .* எங்களுக்குள் அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு சிறுமியை வைத்து அவரை ஒருமையில் வெறும் கருணாநிதி என்று பேசுவதற்கு அனுமதி அளித்த கூட்டத்தின் தலைவரை நான் வன்மையாக கண்டிக்கிறேன் .* இனிமேல் நான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் இதுபோல் நடக்க கூடாது என உத்தரவிட்டார் .நானும், கலைஞரும் நண்பர்களாக இருந்தபோது* அரசியல் , பொது வாழ்க்கை ,சினிமா பற்றி நெடுங்காலம் பேசி வந்துள்ளோம் .* காங்கிரஸ் ஆட்சியின்போது கலைஞர்*குறைகளை சுட்டிக்காட்டி பேசியபோது , ஒருவேளை நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்று , ஆட்சி பொறுப்பை ஏற்றால் வறுமையை ஒழிப்பீர்களா, மக்களின் பசி கொடுமையை நீக்குவீர்களா* என்று கேட்டுள்ளேன்*.
எம்.ஜி.ஆர். அவர்கள் பிற்காலத்தில் அரசியல் துறையில் தன்னால் வெற்றி பெற முடியுமா , மக்கள் தன்னை நல்ல தலைவராக ஏற்றுக் கொள்வார்களா, தன்னை அங்கீகரிப்பார்களா* என்ற* வகையில் சினிமா துறையில் மெல்ல தன் காய்களை நகர்த்தி, அதற்கு தகுந்தாற் போல கதையமைப்பு, சில காட்சிகள், வசனங்கள் ,பாடல்கள் , அமைத்து* அதில்* சோதனைகளை* சந்தித்து***பெரும் வெற்றி கண்டார் .**
நிகழ்ச்சியில் நினைத்ததை முடிப்பவன் படத்தில் இருந்து பூ மழை தூவி* பாடல்,*அன்பே வா படத்தில் ராஜாவின் பார்வை ராணியின் பக்கம், மந்திரி குமாரி படத்தில் இருந்து* வாராய்* நீ* வாராய் பாடல் ஆகியன ஒளிபரப்பப்பட்டன .
-
1969ல்தான் தங்க சுரங்கம், அடிமைப்பெண், நம்நாடு, மற்றும் சிவந்த மண் ஆகிய எம்ஜிஆர்,சிவாஜி ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் வெளியானது. இதில் தங்க சுரங்கம் மார்ச் மாதம் 28ம்தேதி சார்லஸ் திரையரங்கில் வெளியாகி 18 நாளில் படம் தூக்கப்பட்டது. சிவாஜி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. சிவாஜி ரசிகர்களால். ரொம்பபில்ட் அப் கொடுத்த படம் தங்க சுரங்கம். அது முடிந்தவுடன் சிவாஜி ரசிகர்கள் தங்கள் ஒட்டு மொத்த கவனத்தையும் சிவந்த மண் மீது வைத்தார்கள்.
தலைவருக்கு 1969ம ஆண்டு ஏப்ரல் வரை எந்த படமும் வெளியாகவில்லை.எம்ஜிஆருக்கு கடைசியாக வெளியான படம் 1968ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான காதல் வாகனம். அந்த நேரம் எம்ஜிஆரின் 100வது படம் ஒளிவிளக்கு ஓடிக்கொண்டிருந்ததால் அதன் தரத்திற்கு சற்று குறைவான காதல் வாகனம் சுமாரான படமானது. ஆக நீண்ட நாட்கள் எம்ஜிஆர் ரசிகர்கள் படம் பார்க்காமல் பரிதவித்து கொண்டிருக்கும் போது வெளியான படம்தான் அடிமைப்பெண். 1969 மே 1ம் தேதி. தூத்துக்குடி பாலகிருஷ்ணா தியேட்டரில் வெளியானது.
அடிமைப்பெண்ணுடன் காவல்தெய்வம் என்ற சிவாஜி கெஸ்ட் ரோலிலும் சிவகுமார் லட்சுமி ஜோடியாக நடித்த படமும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னால் பல தடவை இதோ வருகிறது அதோ வருகிறது என்று பலமுறை தேதி அறிவித்து விளம்பரங்கள் வந்தது.
ஆனால் அந்த நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருந்ததால் அது முடிந்தவுடன் படம் வெளியாகும் என்று உறுதியான தேதியாக மே 1ம் தேதி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. அன்று தொழிலாளர்கள் தினம். இப்போது போல் அப்போது விஷேசமாக கொண்டாட மாட்டார்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள். ஒரு 100 அல்லது 200 பேர்கள் ஒன்று சேர்ந்து அமைதியாக ஒரு ஊர்வலத்தை நடத்தி விட்டு சாயந்தரம் ஒரு மீட்டிங் நடத்துவார்கள். அவ்வளவு தான் மே தினம் முடிவடைந்து விடும்.
ஆனால் 1969 மே தினம் எம்ஜிஆர் ரசிகர்களால் வெகு விமரிசையாக அடிமைப்பெண் வெளியான திரையரங்குகளில் கொண்டாடப்பட்டது. ரசிகர்களும் உள்ளாட்சி தேர்தலை விட அடிமைப்பெண் வெளியாகும் தேதியைத்தான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள். எனவே ஆரம்ப காட்சி அடிமைப்பெண் பார்ப்பதென்பது கனவிலும் நினைத்து பார்க்க முடியாத ஒன்று என்று தெரிந்து விட்டது. இனி என்ன செய்வது என்று தெரியவில்லை.
அதற்காக எம்ஜிஆர் ரசிகர்கள் மீனவர்கள் பலருடன் பழகியிருந்ததால் அவர்களிடம் நீங்கள் போகும் போது என்னையும் கூட்டிச் செல்லுங்கள் என்று கேட்டிருந்தேன். அவர்களும் உறுதியாக கூட்டிச் செல்கிறேன் என்று சொல்லியிருந்தார்கள். மீனவ நண்பர்கள் ரொம்ப பலசாலிகள் நாட்டு படகு பணி நிறைவடைந்தவுடன் கடலிலே செலுத்தும் போது பெரிய பெரிய வடக்கயிறுகளை கட்டி இழுக்கும் போது அவர்களின் புஜத்தை பார்த்தால் மேரு மலை போல் காட்சியளிக்கும். தரை மேல் பிறக்க வைத்தான் என்ற படகோட்டியின் பாடல்தான் அவர்களின் சமூக பாடலாக மாறிப்போனது. இன்று வரை அது தொடரந்து கொண்டுதான் இருக்கிறது. தலைவருக்காக தன் இன்னுயிரையும் மனமுவந்து தருவார்கள். அவர்கள் கூட்டத்தில் நின்று விட்டால் யாரும் அவர்களை தாண்டி செல்ல முடியாது. அவர்கள் என்னை நடுவில் நிற்க வைத்து கொண்டு சுற்றி நின்று கொண்டார்கள். ஆனால் கவுண்டர் திறந்தவுடன் அத்தனை பேரும் முண்டியடித்துக் கொண்டு முன்னேறும் போது எனக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு விட்டது.. நான் மூச்சு திணறுவது கண்டு அவர்கள் தம்பி நீ முதலில் போய்விடு என்று அனைவரையும் அணை போட்டு தடுத்தது போல தடுத்து என்னை உள்ளே அனுப்பி விட்டார்கள். எனக்கு மூச்சு நின்று திரும்பி வந்தது போல இருந்தது.
ஒருவழியாக தியேட்டருக்குள்ளே சென்று அவர்கள் கூடவே இருந்து படத்தை பார்த்தேன். படம் பார்த்ததை விட ரசிகர்களின் ஆரவாரத்தை கண்டு களித்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.. வசனத்தையோ பாடல்களையோ எதையுமே என்னால் கேட்கவோ பார்க்கவோ முடியவில்லை. ரசிகர்களின் ஆரவாரம் தியேட்டரை தாண்டி ரோடு வரை ஆக்கிரமித்தது. ஒரே ஆட்டம்,விசில் சத்தம் என்று பயங்கரமாக இருந்தது. அந்த சத்தத்தில் அசோகனின் குரல் கூட எடுபடவில்லை. படம் ஒன்றுமே புரியாமல் மீண்டும் அடுத்த காட்சி பார்க்க முயற்சி செய்தும் பார்க்க முடியாமல் இரவுக்காட்சிக்கு நண்பர்கள் பிளாக்கில் எனக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கியிருந்தார்கள்.
2வது முறையாக பார்த்தும் திருப்தி ஏற்படாததால் கிட்டத்தட்ட 14 முறை பார்த்தேன். அப்படி ஒரு பிரமிப்பை ஏற்படுத்திய படம் அடிமைப்பெண். ஓபனிங் காட்சியில் ஒற்றை காலில் சண்டை செய்யும் போதே தலைவரின் புதுமையான சிந்தனை வெளிப்பட்டது. ஒவ்வொரு காட்சியிலும் ஒரு பிரமாண்டம், புதுமை என்று படம் பார்ப்பவர்களை பிரமிக்க வைத்தது.குறிப்பாக ஜெய்ப்பூர் அரண்மனை, பாலைவனத்தில் ஒட்டகம் சுற்றி வளைக்கும் காட்சி,சிங்க சண்டை என்று ரசிகர்கள் ஆனந்த தாண்டவம் ஆடினார்கள் இப்போது உள்ளது போல் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் இல்லாமல் ஒரிஜினலாகவே தலைவர் சிரமப்பட்டு எடுத்திருப்பார். இப்போது வந்த பாகுபலி போன்ற படங்கள் சிஜி(Computer Graphics) வேலைக்காக பல நூறு கோடிகள் செலவு செய்து விட்டு ஆஹா பிரமாண்டம் என்று கூறும்போது தலைவரின் தொழில் நுட்ப திறமையை யாரும் பாராட்டாமல் இருக்க முடியாது.
அந்த வருடம் மே மாத லீவுக்கு மக்கள் ஊருக்கு போவதை நிறுத்தி விட்டு குடும்பத்தோடு அடிமைப்பெண்ணை கண்டு ரசித்தார்கள்.50 நாட்களில் சனி,ஞாயிறு காலை காட்சி செவ்வாய்,வெள்ளி மாட்னி ஷோ தவிர மற்ற அனைத்து காட்சிகளும் கிட்டத்தட்ட அரங்கம் நிறைந்தே ஓடியது. 50 நாட்களில் மட்டும் ரூபாய் 78678.23வசூலாக கொட்டியது. 100 நாட்களில்ரூபாய் 105816.13. வசூலாக கலெக்ட் செய்து ஒரு மாபெரும் சாதனையை உண்டாக்கியது.
இனிமேல் இதுபோல் ஆகக்கூடாது என்பதற்காக எம்ஜிஆர் மன்றத்தில் சேர்ந்தால் ஓபனிங் ஷோ டிக்கெட் வாங்கி கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டதால் நடிகப் பேரரசர் எம்ஜிஆர் கலைக்குழுவில் உறுப்பினராக சேர்ந்தேன். இப்போது உள்ளது போல் ரசிகர் ஷோ வெல்லாம் தரமாட்டார்கள். எத்தனை பேருக்கு டிக்கெட் வேண்டும் என்று கேட்டு எம்ஜிஆர் மன்றத்தினர் டிக்கெட்டுகளை வாங்கி மன்ற உறுப்பினர்களுக்கு கொடுப்பார்கள்.
நம்நாடு படத்திலிருந்து மன்றத்தின் மூலமாக தள்ளு முள்ளு இல்லாமல் டிக்கெட் பெற்றாலும் தியேட்டருக்குள் நுழைந்து செல்வதும் ஒரு கஷ்டமான விஷயம்தான். இதை எல்லாம் தாண்டி நடிகப் பேரரசர் எம்ஜிஆர் படம் பார்ப்பதே தீபாவளி சிறப்பாக கொண்டாடியதை போலதான்.
மீண்டும் அடுத்த பதிவில்.!
தூத்துக்குடி நண்பர் ......... Thanks.........
-
மக்களின் இதயக்கனி, இதய தெய்வம் -எம்.ஜி.ஆர். !
எம்.ஜி.ஆர். அரசியல் கட்சி தொடங்கியதுமே புரட்சிநடிகர் என்பதை விலக்கிவிட்டு புரட்சித் தலைவர் ஆக்கினர். இவரும் அரசியல் வாழ்விலும் ஆட்சியிலும் தன்னைப் புரட்சித் தலைவராக நிரூபிக்க விரும்பவில்லை. அதைவிடத் தன்னை மக்களின் தலைவராக நிலைநாட்டவே விரும்பினார். அதில் வெற்றியும் பெற்றார்...
mgr
இரண்டிலும் தன்னுடைய பலமும் பக்க பலமும் என்ன என்பதை உணர்ந்திருந்ததுதான் வெற்றிக்குக் காரணம். சினிமாவில் அவர் புகழ்பெற்றிருந்த 20 ஆண்டுகளில் திரைப்படத்தின் போக்கு பலவிதங்களில் மாறினாலும், தனது ரசிகர்கள் எதை விரும்புவார்கள் என்பதைத் துல்லியமாக உணர்ந்து அதற்கேற்ற படங்களைக் கொடுத்தவர் எம்.ஜி.ஆர். அதுபோல, அரசியலில் தன்னை ஆதரிப்பவர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பதை அறிந்து அவர்களுக்கான தேவைகளையும் திட்டங்களையும் நிறைவேற்றுவதில் மட்டும் கவனம் செலுத்தி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டவர். சினிமா, அரசியல் இரண்டிலும் தனது போட்டியாளர்களின் போக்குகளை உற்று நோக்கி தன் பயணத்தில் கவனம் செலுத்தியதும் எம்.ஜி.ஆரின் வெற்றிக்குக் காரணம் (எம்.ஜி.ஆர் அகம் - புறம்) என்று கணித்துள்ளனர்.....
mgr
பெரியாரின் தமிழ் எழுத்து சீர்திருத்தம், உலகத் தமிழ் மாநாடு, தமிழ்ப் பல்கலைக்கழகம், பாரதி, பாரதிதாசன் பெயர்களில் பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்களில் தமிழில் கையெழுத்து, இலங்கைத் தமிழர் நலம், காவேரி நடுவர் மன்ற கோரிக்கை, தெலுங்கு கங்கைத் திட்டம் என்று தமிழர் வளர்ச்சிக்கு ஆழமாகக் கால்கோள் செய்தார். சத்துணவுத் திட்டம், சைக்கிளில் டபுள்ஸ் செல்ல அனுமதித்தது, நியாய விலைக் கடையில் குறைந்த விலையில் அரிசி, பாமாயில், சர்க்கரை தந்தது, கிராம நிர்வாக அலுவலர் எனும் பரம்பரை பதவிகளை ஒழித்தது, இலவச வேட்டி சேலை, புயல் வெள்ளக் காலங்களில் உடனடி நிவாரணம் என இவர் மக்களுக்காக நடைமுறைப்படுத்திய திட்டங்கள் ஏராளம்....
mgr
மக்கள் இவரது ஆட்சியில் நடந்த அடக்குமுறைகளைப் பற்றியோ, மதுக்கடைகளைப் (டாஸ்மாக்) பற்றியோ, ஊழல்களைப் பற்றியோ, சுயநிதிக் கல்வித் தந்தைகளாகக் கட்சிக்காரர்களைப் படைத்தது பற்றியோ, பெரியாரின் சமூக நீதியைக் குலைத்தது பற்றியோ, நக்சலைட்டுகளை மனித உரிமைக்கு எதிராக நசுக்கியது பற்றியோ, கச்சத்தீவை சொன்னபடி மீட்காதது பற்றியோ, உள்ளாட்சி அமைப்பை உடைத்தது பற்றியோ, அடாவடி வரிவசூல் பற்றியோ, மேலவை கலைப்பு போன்ற எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. இவை எம்.ஜி.ஆருக்கே தெரியாமல் நடந்ததாக நம்பினர். இவர் பேரைச் சொல்லி யார் யாரோ சம்பாதித்துக் கொண்டார்கள் என்றே எண்ணிக் கொண்டனர். எம்.ஜி.ஆர். சுடப்பட்டு மீண்டதும் அமெரிக்க சிகிச்சைக்குப்பின் மீண்டதும் இவரைத் தனிப்பிறவியாகவும் தெய்வப் பிறவியாகவும் கருத வைத்தது மக்களின் இதயக்கனி, இதய தெய்வம் ஆனார்............ Thanks.........
-
மக்கள் திலகத்தின் ரசிகர்களின் '' நினைவலைகள்''
104/2020
எங்களுக்கு விபரம் தெரிந்த ''நாடோடிமன்னன்'' 1958 முதல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'' 1978 வரை
மக்கள் திலகம் எம்ஜிஆரின் படங்களை கண்டு களித்த அந்த இனிய நாட்களை மறக்க முடியாது . மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் திரை அரங்குகளில் வெளியான நேரத்தில் வண்ண தோரணங்களை கட்டியது
எம்ஜிஆரின் புதுமையான ஸ்டார்களை அலங்கரித்து வைத்தது. .
திரை அரங்கு முன்பு வைத்த பதாகைகளுக்கு மாலை அணிவித்தது ..
நகரம் முழுவதும் ஒட்டப்பட்ட''' வருகிறது'' போஸ்டர்களை கண்டு மகிழ்ந்தது .
''இன்று முதல்'' விளம்பரத்தை கண்டு ஆனந்தமடைந்தது .
ஷோ கேசில் வைக்கப்பட்ட எம்ஜிஆரின் ஸ்டில்களை கண்டு பரவசமடைந்தது .
முன்பதிவு அன்று திரை அரங்குகளில் அலை மோதிய எம்ஜிஆர் ரசிகர்களின் கூட்டத்தை கண்டு ஆர்ப்பரித்தது .
முதல் நாள் , முதல் காட்சியில் எம்ஜிஆர் ரசிகர்களின் அலப்பறையில் ஆனந்தமடைந்தது .
தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கம் நிறைந்த கண்கொள்ளா காட்சியை கண்டு வியப்படைந்தது .
25,50,75,100,125,150,175,200,225,250 நாட்கள் என்று வெற்றி நாட்களை பார்த்து ரசித்தது...
சில படங்கள் எதிர்பார்த்த வெற்றி இலக்கை தொடமுடியாமல் போனது கண்டு வருந்தியது...
படம் காண வரும் மக்களை வரவேற்பு நோட்டீஸ் தந்து வரவேற்றது .
வசூலை வாரி குவித்த விபரங்களை நன்றி நோட்டீஸ் மூலம் வெளியிட்டு உற்சாகமடைந்தது .
வெற்றிவிழாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.,
கலந்து கொண்ட திரை அரங்கை அமர்க்களப்படுத்தியது .
எம்ஜிஆர் சிறப்பு மலர்கள் வெளியிட்டது .
20 வருடங்கள் தொடர்ந்து எம்ஜிஆரின் படங்கள் திரைக்கு வந்த நாளை ஒரு திருவிழாவாக கொண்டாடி போற்றியது .
நாடெங்கும் எம்ஜிஆர் மன்ற தோழர்களின் நட்பு வட்டம் இணைத்தது
வாலிப வயதில் துவங்கிய எம்ஜிஆர் நட்பு முதுமையிலும் தொடர்வது
1978க்கு பிறகு 2019 வரை எம்ஜிஆரின் 100 படங்களுக்கு மேல் மறு வெளியீடு மூலம் இன்னமும் எம்ஜிஆர் நம்மோடு வாழ்வது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் 104 வது பிறந்த நாள் காணும் 2020 லும் எம்ஜிஆர் சாதனைகளை எண்ணி ஆனந்த வெள்ளத்தில்
கடந்த காலத்தின் வெற்றிகளை நினவு கொண்டு எல்லோரும் எம்ஜிஆரின் நினைவுகளோடு வலம் வருவோம் .......... Thanks.........
-
எம்ஜிஆர் திரை உலகில் நடித்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய படங்களை பார்த்து லட்சக்கணக்கான ரசிகர்கள், பின் கோடானுகோடி ரசிகர்களாக உருவானார்கள் .
எம்ஜிஆர் திமுக இயக்கத்தில் சேர்ந்த நேரத்தில் எம்ஜிஆர் ரசிகர்கள் திமுக தொண்டர்களாக மாறினார்கள் .
எம்ஜிஆர் மீது பற்றும் பாசமும் வைத்திருந்த ரசிகர்கள் இரவு பகலாக தேர்தல் நேரத்தில் திமுகவிற்காக உழைத்தார்கள் .
எம்ஜிஆர் 1967ல் குண்டடிப்பட்டபோது எம்ஜிஆருக்காக ரத்ததானம் செய்தார்கள் .
எம்ஜிஆர் மன்ற அமைப்புகள் உலகளவில் அனைத்துலகஎம்ஜிஆர் மன்றங்களாக மாறியது .
எம்ஜிஆர் அவர்களுக்கு 1972ல் சோதனையான கால கட்டத்தில் எம்ஜிஆர் ரசிகர்கள் ஆற்றிய பங்களிப்பு உலக சாதனை .
எம்ஜிஆர் 1972ல் அதிமுக உருவாக்கிய நேரத்தில் ஒட்டு மொத்த எம்ஜிஆர் ரசிகர்கள் எம்ஜிஆர் அனுதாபிகள் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கான மக்கள் அதிமுகவில் இணைந்தார்கள் .
எம்.ஜி.ஆர்., 1977 பாராளுமன்ற தேர்தலில் இமாலய வெற்றிக்கு எம்ஜிஆர் ரசிகர்கள் உழைத்தார்கள் .
1977ல் எம்ஜிஆர் மக்கள் பேராதரவோடு தமிழக முதல்வராக உயர்வு பெற்றார் .
எம்ஜிஆர் நடிப்பதை நிறுத்தினார் . ஆனாலும் அவர் நடித்த படங்கள் மறு வெளியீடுகளில் மகத்தான சாதனைகள் புரிந்தது .
எம்ஜிஆர் ரசிகர்கள் காலப்போக்கில் இளமையிலிருந்து முதுமை நிலைமைக்கு சென்று இருந்தாலும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பலரும் இன்றும் அவர் நினைவாகவே எம்ஜிஆர் ரசிகர்களாக வாழ்கிறார்கள்
அதிசயம் ...
எம்ஜிஆர் நடிப்பதை நிறுத்திய 1977க்கு பிறகு பிறந்தவர்கள்
எம்ஜிஆர் மறைவிற்கு 1987க்கு பிறகு பிறந்தார்கள்
இன்றைய வளர்ந்து வரும் புதிய தலைமுறை ரசிகர்கள் எம்ஜிஆர் ரசிகர்களாக இருப்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது .
எம்ஜிஆரை நேரிலே பார்த்திரா தவர்கள் பலரும் எம்ஜிஆரின் நடிப்பையம் , அவருடைய வீர தீர சண்டைக்காட்சிகள் , மக்களுக்கு கூறிய கொள்கை மற்றும் நல்லொழுக்க காட்சிகள் இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு ஈர்ப்பாக உள்ளது .
70 வருடங்கள்
7 தலை முறை சினிமா ரசிகர்கள்
லட்சக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்கள்
இன்னமும் உயிர்ப்புடன் எம்ஜிஆர் ரசிகர்களாக உலகமெங்கும் இருப்பது எம்ஜிஆர் ஒருவருக்கு மட்டுமே கிடைத்த வரப்பிரசாதம் .........இது மிகையாகாது... Thanks.........
-
கதாநாயகிகளின் காதல் கீதங்களில் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
சரோஜாதேவி
தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது
ஜெயலலிதா
புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய புன்னகை புரிந்தாயே பூமுகம் மலர
தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க பொன்னைப்போல் உடல் கொண்ட அழகே நீ வருக உள்ளமும் எண்ணமும் உன்னிடம் வந்தது அச்சமும் வெட்கமும் என்னுடன் நின்றது
வெண்ணிற ஆடை நிர்மலா
என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே -
நீ எந்தன் தலைவன் என்றெண்ணும் எண்ணம் இனித்திடுமே
மஞ்சுளா
அந்த நூற்றாண்டு சிற்பங்களும்உங்கள் பக்கத்திலே
வந்து நின்றாலும் ஈடில்லை என்று
ஓடும் வெட்கத்திலே
லதா
மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்
அந்தி மாலையில் அந்த மாறனின் கணையில்
ஏன் இந்த வேகம் ஏன் இந்த வேகம்
பத்மினி
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
ராஜ சுலோச்சனா
அன்புத் திருமுகம் காணாமல் -
நான்துன்பக் கடலில் நீந்தி வந்தேன்
காலப் புயலில் அணையாமல் -
நெஞ்சில்காதல் விளக்கை ஏந்தி வந்தேன்
உதய சூரியன் எதிரில் இருக்கையில்
உள்ளத்தாமரை மலராதோ ?
அஞ்சலி தேவி
அன்பு மிகுந்திடும் பேரரசே
ஆசை அமுதே என் மதனா
ராஜஸ்ரீ
இளமை பொங்கும் உடலும் மனமும்
என்றும் எனதாக
உரிமை தேடும் தலைவன் என்றும் அடிமை என்றாக
சாவித்திரி
அவன் தோட்டத்தில் எத்தனை மான்களோ
தோள்களில் எத்தனை கிளிகளோ
அவன் பாட்டுக்கு எத்தனை ராகமோ
பார்வையில் எத்தனை பாவமோ
பானுமதி
சிந்தைதன்னை கவர்ந்து கொண்ட சீதக் காதியே
திராட்சை போல இனிக்க பேசும் ஜீவ ஜோதியே
சிங்கார ரூபகாரனே என் வாழ்வின் பாதியே
கே.ஆர். விஜயா
நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே பொன்மேனி என்னாகுமோ ..
லக்ஷ்மி
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை
அழகில் நீயொரு புதிய கலை
உன்னை அணைத்துக் கண்டேன் இன்ப கனவுகளை
வாணிஸ்ரீ
அடிமை இந்த சுந்தரி
என்னை வென்றவன் ராஜ தந்திரி
சௌகார் ஜானகி
பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்
உள்ளமது உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்
ரத்னா
அல்லி மலராடும் ஆணழகன்கலைகள் தவழும் கண்ணழகன்
கன்னி மயிலாடும் மார்பழகன்
எல் .விஜயலட்சுமி
உள்ளங்கள் நேரான வழி காணட்டும்
உறுதியிலே துன்பம் தூளாகட்டும்
நன்மையே உன் வாழ்வில் தொழிலாகட்டும்
நாடெல்லாம் உன்னை கண்டு புகழ் பாடட்டும்
தேவிகா
இணையத் தெரிந்த தலைவா
உனக்கு என்னைப் புரியாதா
தலைவா என்னைப் புரியாதா
பத்மப்ரியா
அமுத தமிழில் எழுதும் கவிதை
புதுமை புலவன் நீ
புவி அரசர்குலமும் வணங்கும் புகழின்
புரட்சி தலைவன் நீ
ராதா சலுஜா
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ..
உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி
உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..
காஞ்சனா
இதுவரை என் கண்களுடன் ... எவரும் பேசவில்லை ...
புதியவன் நீ பார்க்கும் வரை இந்த புதுமை தெரியவில்லை.......... Thanks.........
-
#மக்கள்_திலகம்
#புரட்சி_நடிகர்
#வாத்தியார்
#பொன்மனச்_செம்மல்
#இதயக்கனி
#புரட்சித்தலைவர்
இப்படி எம்ஜிஆர் க்கு பல பட்டப் பெயர்கள் இருப்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும் ஆனால் அவர் செய்த இந்த செயலுக்கு என்ன பெயர் கொடுக்கலாம் என்று நீங்களே
சொல்லுங்கள்.
அது மெடிக்கல் காலேஜுக்கு இடம் வேண்டி விண்ணப்பித்தவர்களின் தேர்வுப் பட்டியல். முதல்வர் எம்.ஜி.ஆரின் கையொப்பத்திற்கு வருகிறது. அதைப் பார்வையிட்ட எம்.ஜி.ஆர்,,பெற்றோர் கையொப்பம் இட்ட இடத்தை முதலில் பார்க்கிறார்?
கை நாட்டு வைக்கப்பட்டிருந்த அப்ளிகேஷன்கலுக்கு முதலிலும்,,தமிழில் கையொப்பமிட்டிருந்த அப்ளிகேஷன்களுக்கு அடுத்ததாகவும்,,ஆங்கிலத்தில் கையொப்பமிட்டிருந்த படிவங்களுக்குக் கடைசியாகவும் கையொப்பமிடுகிறார்??
எம்.ஜி.ஆர் ஏன் அப்படிச் செய்தார்?
தலைவர் ஏன் இப்படி செய்தார் என்று உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன் பதில் தெரிந்தவர்கள் கண்டிப்பாக #கமெண்ட் பண்ணுங்கள்.......... Thanks.........
-
MGR வாழ்க
பங்குனி 27 வியாழன்
எம்ஜிஆர் பக்தர்களே
படத்தில் இருப்பவர் பெயர் கே ஏ கிருஷ்ணசாமி
இவர் தென்னகம் என்ற ஒரு திமுக ஆதரவு பத்திரிகையை நடத்தினார்
எம்ஜிஆர் அவர்கள் திமுகவில் இருக்கும் காலத்திலேயே இவர் எம்ஜிஆரின் தீவிர விசுவாசி
,1972 அக்டோபர் மாதம் 8 ந்தேதி
திருக் கழு குன்றத்தில் நடந்த அண்ணா
பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில்
திமுக அமைச்சர்கள் அனைவரும் சொத்து கணக்கு காட்டவேண்டும் எண்று
பேசினார்
இந்தசெய்தியை தனது தென்னகம்
பத்திரிக்கையில் வெளியிட்டார்
அடுத்து சிலநாட்களில் திமுக. வில் இருந்து MGR அவர்களைநீக்கிவிட்டார்கள்
அடுத்தநாள் கே ஏ கிருஷ்ணசாமி அவர்களையும் திமுகவில் இருந்து நீக்கிவிட்டார்கள்
எம்ஜிஆர் அண்ணா திமுகவை ஆரம்பித்தார்
அண்ணா திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு தென்னகம் என்று எம்ஜிஆர் அறிவித்தார்
அண்ணா திமுக வின் முதல் பொதுக்கூட்டம் சென்னை கடற்கரையில் நடந்தது
அந்தப் பொதுக் கூட்டத்திலேயே கிருஷ்ணசாமி அவர்கள் பேசும்பொழுது
இன்று முதல் நம் தலைவரை புரட்சித்தலைவர் MGR / என்றுதான் அழைக்கவேண்டும் என்று கூறினார்
எம்ஜிஆர் அவர்களே நீங்கள்ஆணையிட்டாள் முதலமைச்சர் கருணாநிதியின் தலையை வெட்டி உங்கள் காலடியில் கொண்டு வந்து சமர்ப்பிப்பேன் என்று கே எஸ் கிருஷ்ணன் கிருஷ்ணசாமி பேசினார்
இவர் இப்படிப் பேசிய காரணத்தினால்
கருணாநிதி அவர்கள்
இவரை
தலைவெட்டி கிருஷ்ணசாமி என்று கூறுவார்
அடுத்து நடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று எம்ஜிஆர் முதலமைச்சராக பதவி ஏற்றார்
தன்னுடைய அமைச்சரவையில் கிருஷ்ணசாமி அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தார்
அடுத்து எம்ஜிஆருக்கு வந்த சோதனையான காலகட்டத்தில் எல்லாம் தோளோடு தோள்கொடுத்து நின்றார்
இவருடைய மகள் திருமணம் சென்னையில்முதலமைச்சர் எம்ஜிஆர் தலைமையில் நடக்கும் என்று ஏற்பாடு செய்திருந்தார்கள்
எம்ஜிஆர் இவருடைய திருமணத்திற்கு காலையில் ஜானகி அம்மாவுடன் சென்று கொண்டிருந்தார்
திடீரென்று எம்ஜிஆர் அவர்கள் வேறொரு திருமண மண்டபத்திற்கு செல்லுமாறு கட்டளையிட்டார்
அங்கு சென்று அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார்
நடிகர் ராமராஜன் நடிகை நளினி திருமணத்தை எம்ஜிஆர் ஜானகி அம்மையார் இருவரும் நடத்தி வைத்தார்கள்
பிறகு கே ஏ கிருஷ்ணசாமி வீட்டு திருமணத்திற்கு எம்ஜிஆர் சென்றார்
இப்படி எம்ஜிஆருக்கு சோதனையான காலகட்டத்தில் எம்ஜிஆருக்கு உறுதுணையாக நின்ற. K.A. கிருஷ்ணசாமி வீட்டு திருமணத்திற்கு கூட செல்லாமல்
நடிகர் ராமராஜன் திருமணத்திற்கு சென்றார் எம்ஜிஆர் ஜானகி அம்மையார்
அடுத்த சிலநாட்களில் ராமராஜன் நளினி இருவருக்கும் எம்ஜிஆர் ராமாவரம் தோட்டத்தில் விருந்து வைத்தார்
நளினிக்கு தங்க நகை பரிசளித்தார்
MGR
////////////////////////////////////////?/////////////
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யாதே
இது நல்ல தாய் வயிற்றில் கருவாகி உருவான ஒரு மனிதன் கடைப்பிடிப்பார் கள்
/////////////////////////////////??????????????
ஆனால் எம்ஜிஆர் வீட்டில் ஜானகி அம்மையாரின் கையில் உணவை வாங்கி அருந்திய நடிகர் ராமராஜன்
எம்ஜிஆர் கையால் பல பவுன் எடையுள்ள தங்க நகையை
ராமராஜனின் மனைவிக்கு எம்ஜிஆர் அளித்ததை பெற்றுக்கொண்ட ராமராஜன்
,எம்ஜிஆரின் மனைவி விஎன் ஜானகி அவர்களின் ஆட்சியை கலைப்பதற்கு ஜெயலலிதாவிற்கு துணை போனார் நடிகர் ராமராஜன்
எங்களைப் போன்ற உண்மையான எம்ஜிஆர் ரசிகர்களின் வயிறு எரிந்தது
எம்ஜிஆரிடம் ஒரு ரூபாய் கூட உதவி பெறாத நாங்கள் எம்ஜிஆருக்கு நாயைப்போல் நன்றியுடன் விசுவாசமாக இருக்கிறோம்
எம்ஜிஆர் வீட்டு உணவு அருந்தி பல ஆயிரம் ரூபாய் உதவி பெற்ற கழுதைகள்
எம்ஜிஆருக்கு துரோகம் செய்தனர்
ஜானகி அம்மையாரின் ஆட்சியை கவிழ்க்க ஜெயலலிதாவுக்கு துணைபோன ராமராஜனை
துரோகி என்று கூறி ஜெயலலிதா அண்ணா திமுகவிலிருந்து ராமராஜனை நீக்கினார்
உண்மையான எம்ஜிஆர் ரசிகர்கள்சாபமிட்ட காரணத்தினால் ராமராஜன் மார்க்கெட் இழந்தார்
இன்று செல்லாக்காசாகி தெருவில் அலைந்து கொண்டிருக்கிறார்
எம்ஜிஆர் குடும்பத்திற்கு செய்த துரோகம் அவரை விடவில்லை
கட்சிக்காக உயிரைக் கொடுத்து பாடுபட்ட கே ஏ கிருஷ்ணசாமி வீட்டு திருமணத்திற்கு கூட செல்லாத எம்ஜிஆர்
இந்தக் துரோகத்திற்கு துணை போன இந்த கழுதையின் திருமணத்திற்கு சென்றார் எம்ஜிஆர்
வாழ்க கே ஏ கிருஷ்ணசாமி அவர்களின் எம்ஜிஆர் பக்தி
கே ஏ கிருஷ்ணசாமி போன்றவர்கள் கட்சி வளர்த்து வைத்த காரணத்தினால்தான்
ஜெயலலிதா முதல் எடப்பாடி வரை முதல்வராக வர முடிந்தது
கே ஏ கிருஷ்ணசாமி போன்றவர்கள் கட்சியை வளர்த்து வைத்த காரணத்தினால்தான்
இந்த நிமிடம் வரை தமிழ்நாட்டில் எம்ஜிஆர் கட்சியின் ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது
கே ஆர் கிருஷ்ணசாமி அவர்கள்
திமுகவை ஆரம்பித்த தலைவர்களில் ஒருவரான
K.A.மதியழகனின் தம்பி
மதியழகன் திமுகவில் அமைச்சராக இருந்தார்
பிறகு சபாநாயகராகவும் இருந்தா
இவருடைய சொந்த ஊர் / கணியூர்
பழனியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது........ஒரு ரசிகரின் ஆதங்க பதிவு... Thanks...
-
-
-
கனியூர் குடும்பம்
என்று அண்ணாவால் அழைக்கப்பட்டவர்கள்...!
சட்ட அமைச்சராக இருந்தவர்...!
ஆயிரம் விளக்கு தொகுதியில் சிறுபாண்மையினரின் செல்ப்பிள்ளை...!
இரண்டு முறை இவரிடம் முக. ஸ்டாலின் அவர்கள் அதே தொகுதியில் தோல்விகண்டார்.
இவர் மறைந்த போது கலைஞர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்...!
கே. எ. கே. உடல் அவர் வீட்டு மாடியில் இருந்ததால், ஜெயலலிதா அவர்கள் படியில் என்ற இயலாளதால் கீழ் பகுதியில் வந்து அஞ்சலி செலுத்தினார்......... Thanks.........
-
கையெழுத்தே போடத்தெரியாதவர்கள்,படிக்காதவர்கள்,அவர்களுடைய குழந்தைகள்தான் அந்தக் குடும்பத்தில் படித்தவர்கள்... அதுவுமில்லாமல் வசதிக்குறைவானவர்களாகவும் இருக்க வாய்ப்பு உண்டு,அதை மனதில் கொண்டு அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவினார்,இது தனது முதல்வர் கோட்டாவில் இருக்கும் சீட்டுகளுக்குத் தலைவர் கடைப்பிடித்த சூத்திரம்......... Thanks...
-
தனியார் தொலைக்காட்சிகளில் நடிக*மன்னன் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*
----------------------------------------------------------------------------------------------------------------------
06/04/20* *- மெகா 24 டிவி - இரவு 10 மணி - தாயை காத்த தனயன்*
07/04/20* -ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் -காலை 10 மணி -ரகசிய போலீஸ் 115
* * * * * * * *-சன் லைப் - காலை 11 மணி* - பல்லாண்டு வாழ்க*
08/04/20- ஜெயா மூவிஸ் - காலை 7 மணி - தர்மம் தலை காக்கும்*
* * * * * * * * *மெகா 24 டிவி* - காலை 8.30 மணி -தர்மம் தலை காக்கும்*
* * * * * * * * * சன்* லைப்* * * - காலை 11 மணி* - தேடி வந்த மாப்பிள்ளை*
* * * * * * * * * புதுயுகம்* * - இரவு* 7மணி* - வேட்டைக்காரன்*
* * * * * * * * ஷாலினி டிவி - இரவு 8 மணி - ஆயிரத்தில் ஒருவன்*
09/04/20 - சன் லைப் -* * காலை 11 மணி - நீதிக்கு தலை வணங்கு*
-
நெல்லை மணி என்பவரின் பதிவில் இருந்து ...
1977 இல் மக்கள் துணையுடன் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்று முதல்வர் ஆகிறார் நம் தலைவர்.
அந்த நேரத்தில் அவர் வீட்டில் தினம் தினம் வாழ்த்து சொல்ல அனைத்து தரப்பினரும் குவிந்து வந்தனர்.
ஒரு நாள் காலை வந்தவர்களில் நடிகர் வீ.கே.ராமசாமியும் இருந்தார்...அவர் வாழ்த்து சொல்லி புறப்படும் போது அண்ணே இருங்க என் கூட வாங்க ஒரு வேலை இருக்கு என்று சொல்ல.
வீ.கே.ஆர்...திகைத்து நம்மகிட்ட என்ன வேலை முதல்வர் ஆகிவிட்டார் இனி அவருக்கு தானே வேலை என்று யோசிக்க.
கோட்டைக்கு புறப்பட்ட முதல்வர் தன் காரில் வீ.கே.ஆர்... அவர்களையும் ஏற்றி கொண்டு வழி நெடுக மக்களை கை கூப்பி வணங்கி கொண்டு கார் கோட்டையை அடைகிறது.
அங்கு கார் நிற்கும் இடத்தில் தயார் ஆக இருந்த இருவரிடமும் வீ.கே.ஆர் ஐ காட்டி இவரை கோட்டை முழுவதும் நன்கு சுற்றி காட்டிவிட்டு என் அறைக்கு அழைத்து வாருங்கள் என்று சொல்ல.
அதன் படி ஒரு மணி நேரம் கழித்து நடிகர் வீ.கே.ஆர்...திரும்பி வந்து அடா அடா என்ன ஒரு இடம் என்று வெடி சிரிப்புடன் சொல்ல.
அது சரி ஏன் இந்த திடீர் ஏற்பாடு என்று கேட்க....
தலைவர் சிரித்து கொண்டே அண்ணே நீங்க 1948 இல் வால்டாஸ் சாலையில் நீங்கள் நடிக்கும் நாடகங்கள் போடுவீர்கள்... நான் தினமும் வந்து பார்ப்பேன்.
ஒரு பொங்கல் அன்று நீங்கள் நாடகத்துக்கு வரவில்லை... மறுநாள் நேற்று எங்கே போனீர்கள் என்று நான் கேட்க.
அதற்கு நீங்கள் தினமும் நாடகம் என்னென்று வெறுத்து அப்பிடியே காலாற பீச் பக்கம் போய் நடந்தே சுற்றி பார்த்து கொண்டு வீட்டை பற்றி சிந்தனை செய்து கொண்டு அப்படியே நடந்து கோட்டை பக்கம் போய் உள்ளே போகலாம் என்று நினைத்த போது.
அட இப்ப நியாபகம் வந்து விட்டது...என்னை உள்ளே விடாமல் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் துரத்திவிட அதை நான் உங்களிடம் சொன்னேனே அது.
ஆமாம் அண்ணே அன்று உங்கள் ஆசை இன்று நீங்கள் காலையில் வீட்டுக்கு வந்த உடன் நினைவுக்கு வந்தது.
சரி இன்றைக்கு உங்கள் ஆசையை ராஜ மரியாதை உடன் நிறைவேற்றும் பாக்கியம் எனக்கு கிடைத்துவிட்டது என்று சொல்ல.
கண்ணீர் மல்கிய கண்கள் உடன் கரம் கூப்பி விடை பெற்ற வீ கே.ஆர்...தலைவர் முதல்வர் அனுப்பிய காரில் வீடு திரும்பும் போது என்ன மனுஷன் இவரு....ஒவ்வொருவர் ஆசையையும் எப்ப நிறைவேற்ற முடியும் என்று எதிர்பார்த்து காத்து இருப்பார் போல எனக்கே மறந்து போச்சு என்று வியந்து சிந்தித்து திரும்ப.
அதுதான் எம்ஜியார்.
பல ஆண்டுகள் கழித்தாலும் ஒருவர் சொல்வது அது சாமானியன் அல்லது புகழ் பெற்றவர்கள் ஆக இருந்தாலும் அவர்கள் எண்ணங்களை அதை நிறைவேற்ற துடிக்கும் ஈடு இணையற்ற ஒரு மாமனிதர் நம் தலைவர்.......... Thanks.........
-
கோவை ராஜாவில் "தேர்த்திருவிழா" திரை படம் வெளியான அதே நாளில் தான் (23-02-1968) இருதயாவில் "பணமா பாசமா" வெளியானது...!
இதே கால கட்டத்தில் பொங்கலுக்கு வெளி வந்த ''ரகசிய போலிஸ் 115'' கர்னாடிக்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது...! ராயலில் திருமால் பெருமை வெளியானது...!
மார்ச் 15 ல் "குடியிருந்த கோயில்" வந்ததால் ராஜாவில் வசூலுடன் ஓடிக்கொண்டிருந்த "தேர்திருவிழா"
நிறுத்தப்பட்டது...!......... Thanks mr.Shajahan...
-
#எம்ஜிஆர் #எங்களின் #குலதெய்வம்..
#நாமக்கல் #கவிஞர் வெ. ராமலிங்கம் அவர்களின் #பேரன் திரு.H.நடராசன் தமது நினைவுகளைப் பகிர்கிறார்...!
#மலைக்கள்ளன்...
மக்கள்திலகத்தின் திரைவாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம்...
நாமக்கல் கவிஞரின் கதை கிட்டத்தட்ட ஆறு மொழிகளில் வெளியாகி அனைத்திலும் வசூலை அள்ளிக்குவித்த திரைப்படம்...
இதன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பட்சிராஜா ஸ்டூடியோ திரு ஸ்ரீராமுலு நாயுடு அவர்கள்... எனது தாத்தாவிற்கு கொடுப்பதாக உறுதியளித்த தொகையைத் தராமல் ஏமாற்றிவிட்டதால், வருத்தமடைந்து தயாரிப்பாளர் மீது வக்கீல் நோட்டீசு அனுப்புகிறார்..!
சில நாட்கள் கடந்து, சென்னை லாயிட்ஸ் ரோடு பகுதியில் வசிக்கும் தாத்தாவின் இல்லத்திற்கு ஒரு கார் வந்து நிற்கிறது...!
அதில் எம்ஜிஆர் ...! எனது தாத்தாவை நோக்கி விறுவிறுவென்று வந்தவர் சாஷ்டாங்கமாக காலில் விழுந்து, 'தயாரிப்பாளர் தங்களை ஏமாற்றியது குறித்து வருந்தவேண்டாம்... எனக்கு மலைக்கள்ளன் பேரும் புகழையும் ஈட்டித்தந்தது...அதனால் மறுக்காமல், இதை மறுக்காமல் வாங்கிக்கொள்ளவும் என்று சொல்லி நாங்கள் யாருமே எதிர்பாராத ஒரு பெரும்தொகையை எனது தாத்தாவிடம் அளிக்கிறார்... இப்படி ஒரு கொடைவள்ளல் யாருமுண்டா?
எனது தாத்தா வசித்த வீடு ஒண்டுக்குடித்தனம்... இதையறிந்த எம்ஜிஆர் அரசு சார்பில் ராயப்பேட்டையில் ஒரு வீடு வாங்கி அளித்து கௌரவித்தார்...! இந்தக்காலத்தில் இப்படியுமா???
மற்றுமோர் முக்கிய நினைவு...1965 ல் நடந்த AVM இல்லத்திருமணத்திற்கு என் தாத்தாவும் நானும் சென்றிருந்தோம்... தாத்தா சரியாக நடக்கமுடியாத காரணத்தினால் செல்லப்பேரனான என்னை வெளியிடங்களுக்கு அழைத்துச்செல்வார், எனது தோளில் கையைப் போட்டு தான் நடப்பார்...
அந்த திருமணத்தில் எம்ஜிஆர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்...எனது தாத்தாவைப் பார்த்ததும் அப்படியே எழுந்தவர், கையைக் கழுவிட்டு பலர் முன்னிலையில் நெடுஞ்சாண்கிடையாக தாத்தா காலில் விழுந்தார்... நெகிழ்ந்து போன தாத்தாவின் ஜிப்பாவில் பணக்கட்டை யாரும் அறியாவண்ணம் போட்டார்...!
எம்ஜிஆர் மற்றவர்களுக்கு வேண்டுமானால் நடிகர்...ஆனால் எங்களுக்கு கடவுள்...!
நாமக்கல் கவிஞரின் பேரன் தனது உற்ற நண்பராகிய என் அண்ணன் சுந்தர்ராஜன் அவர்களுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் ஆடியோ...!
இந்த அரிய தகவலை எனக்கு அனுப்பிய #அண்ணன் #சுந்தர்ராஜன் அவர்களுக்கு என் அனந்தகோடி அநேக நமஸ்காரங்கள் 🙏🏻🙏🏻🙏🏻......... Thanks.........
-
* 1965-ல் வெளியான ‘எங்கள் வீட்டுப்பிள்ளை' தமிழ்நாட்டுப் பிள்ளையாக தலைவரை ஆக்கியது... *
*➡ சென்னை பிராட்வே, மேகலா, மதுரை - சென்ட்ரல், கோவை ராயல், தஞ்சை யாகப்பா ஆகிய ஐந்து ஊர்களிலும் 175 நாட்கள் ஓடியது இந்தப் படம்... ❤*
* சென்னை காசினோவில் 211 நாட்கள் ஓடியது. திருச்சி ஜூபிடரில் 236 நாட்கள் ஓடியது... ✨⭐*
* ‘‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் ஏழைகள் வேதனைப் படமாட்டார்'’ என்ற கனவு நாயகனாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை கொண்டு போய் நிறுத்தியது இந்தப் படம்... ♥♥♥*......... Thanks.........
-
மக்கள் திலகம் நடிக்க ஆரம்பித்ததிலிருந்தே கொள்கை பிடிப்புடன் இருந்தார். தனக்கென்று ஒரு பாணி, அதற்கென்று ஒரு கொள்கை அதற்கென்று ஒரு தலைவன் என்று வாழ்ந்தார். யாருக்காகவும் தன் கொள்கையை
விட்டுக் கொடுக்க மாட்டார். இவர் தனக்கெதிராக செயல்படுகிறார் என்று தெரிந்தாலும் அவரை அழிக்க நினைக்க மாட்டார். மேலும் அவர்களுக்கு பல உதவிகளை செய்து அவர்களை தன் வசப்படுத்தி விடுவார்.
ஒரு சிலரைப்போல 40ஆண்டு கால நட்பு என்று சொல்லி சமயம் கிடைக்கின்ற போது எதிரியை அழிப்பதற்கு ஆலகால விஷத்தை கூட பயன்படுத்த தயங்காதவர் கிடையாது. ஆனால் நாட்டில் நல்லவர்களும் நயவஞ்சகர்களும் கலந்தே இருப்பதால் மக்கள் திலகத்தின் மீது வெறுப்புடன் இருப்பவர்கள் இன்று வரை இருப்பதை நாம் பார்க்கிறோம்.
என்ன இவருக்கு இவ்வளவு செல்வாக்கு, புகழ் என்று மனம் வெதும்பி திரிபவர்கள் நமது களத்திலேயே புகுந்து சினிமா பைத்தியம்,நாட்டுக்கு இது முக்கியமா, என்றெல்லாம் கேள்வி எழுப்புவது வயத்தெரிச்சல் இன்னும் குறையவில்லை என்பதையே இது காட்டுகிறது.
பூ மார்க்கெட்டில் பூ விற்காமல் கருவாட்டையா விற்பார்கள்.மக்கள் திலகத்தின் களத்தில் நுழைந்து கொண்டு நாட்டுக்கு இது முக்கியமா என கேட்டால் என்ன சொல்வது?!. உனக்கு தேவையான களம் வேறிடத்தில் இருந்தால் அங்கு போய் கேட்க வேண்டியதுதானே? நாங்கள் யாரும் வர மாட்டோம். நரி இடமா போனால் என்ன வலமா போனால் என்ன. நம்மை கடிக்காமல் போனால் சரி என்று பேசாமல் நாங்க பாட்டுக்கு இருப்போம். மேலும் ஒருவர் தமிழ் கலாச்சாரத்தை கெடுத்தது எம்ஜிஆரும் K R விஜயா வும் என்று கமெண்ட் கொடுத்த அவர் பெயரை பார்த்தவுடன் தான் தெரிகிறது அவர் பெயரிலேயே அழுகிய வெங்காய வாடை வீசுவதை உணர முடிந்தது. அவர்கள் தலைவர். தமிழ் கலாச்சாரத்தை மட்டுமல்ல தனது சிஷ்யர்களின் மானத்தையும் கப்பலேற்றியவர் என்று. தனது கொள்கையை விட பொருந்தா திருமணமே பெரிது, உபதேசம் ஊருக்கு தங்களுக்கல்ல என்று வாழ்ந்ததனால் அவர்கள் மீது வீசிய அழுகிய வெங்காய வாடையில் கூட இருந்த கட்சி முக்கியஸ்தர்கள் அலறிப்புடைத்து. அதை கழுவ வேறு பாதையில் திரும்பி நல்ல கதி அடைந்ததை நாடறியும்.
இன்னொரு சிவாஜி ரசிகர் அடிமைப்பெண் வெளியாகி 6 மாதங்கள் எம்ஜிஆர் படமே வெளியாகாததால் படம் வெள்ளி விழா கொண்டாடியது என்று குற்றம் சுமத்தியிருந்தார். அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்வேன். அப்படி பார்த்தால் தேவர் பிலிம்ஸின் காதல் வாகனம் 193 நாட்கள் ஓடி சாதனை செய்திருக்க வேண்டுமே. காதல் வாகனம் வெளியாகி 193 நாட்கள் மக்கள் திலகத்தின் வேறு எந்த படமும் வெளியாகவில்லை. இதையெல்லாம் என்னவென்று அழைப்பது என்று தெரியவில்லை.
படத்தில் விஷயம் இல்லை யென்றால் ஒவ்வொரு பிறந்தநாளையும் கலரில் எடுத்து ஓடாத படத்துடன் சேர்த்தாலும் மேலும் ஒன்றிரண்டு வாரங்கள் கை கொடுக்குமே தவிர படத்தை சூப்பர்ஹிட் ஆக்க முடியாது என்பதை அனுபவத்தில் உணர்ந்தவர்கள் பேசுகின்ற பேச்சா இது. மேலும் தங்களுடைய படங்கள் சொந்த தியேட்டரிலும், வாடகை தியேட்டரையும் தவிர வேறு எங்கும் வெற்றி கொடி நாட்டி ஓட்ட இயலாது என்று தெரிந்தவர்களின் வயித்தெரிச்சலை வாங்க வேண்டாம்
என்று இத்துடன் நிறுத்தி கொள்கிறேன். நல்ல கமெண்ட்ஸை கொடுங்கள், அனைவரும் நலம் பெற்று வாழ புரட்சி தலைவரின் நாமம் வாழ்க என்று கூறி மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்க விரும்பும் K.சங்கர்.......... Thanks........
-
ஆமாம் சார், நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. சிலரது முகநூல், whatapp தளங்களில் வயிதெரிச்சல், முக்கல், முனகல், வேறு யாரும் வந்து அங்கு பதில் பதிவு போட முடியாது என நினைத்து அவர்களுக்குள்ளேயே ஆறுதலாக, சாதகமாக பதிவுகள் போட்டு கொண்டு இப்படியும் ஒரு அருவெறுக்க தனமான சாந்தியடைகிறார்கள் 'மூடர் கூடங்கள்'...
-
* உலகம் சுற்றும் வாலிபன் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்...*
* புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர் தயாரித்து இயக்கிய இத்திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் எம்.ஜி.ஆரும், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்திருந்தனர். அதிக பொருட்செலவில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது... ₹₹₹ *
*இயக்கம் - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்*
*தயாரிப்பு - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஆர்.எம்.வீரப்பன்*
*கதை - சொர்ணம்*
*இசை - சு.விசுவநாதன்*
*நடிப்பு - எம்.ஜி.ஆர், நாகேஷ், லதா, சந்திரலேகா, மெட்டா ரூன்கிரேட் (தாய் நடிகை), மஞ்சுளா, எஸ். ஏ. அசோகன், இரா.சு.மனோகர், எம். என். நம்பியார்*
*ஒளிப்பதிவுவி -ராமமூர்த்தி*
*படத்தொகுப்பு - எம். உமாநாத்*
*கலையகம் - எம்ஜிஆர் பிச்சர்ஸ் லிமிடட்விநியோகம்*
*வெளியீடு - 11 மே 1973*
*ஓட்டம் - 178 நிமிடங்கள்*
*நீளம் - 4305 மீட்டர்*
*மொத்த வருவாய் - ₹4.2 கோடி*
*உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளிவரும் காலத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் திமுகவினை விட்டு விலகி, அதிமுக என்ற புதுக் கட்சியை தொடங்கியிருந்தார்...*
*அதனால் ஆளும் கட்சியாக இருந்த திமுக தரப்பு உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளிவருவதை தடுக்க முயற்சிகள் மேற்கொண்டது...*
*திரைப்படத்தின் விளம்பரத்திற்கு பிரதானமாக சுவரொட்டிகளை மட்டுமே நம்பியிருந்த காலத்தில் சுவரொட்டிகளின் மீதான வரியை தமிழக அரசு ஏற்றியது...*
*நிதி நெருக்கடி காரணமாக சுவரொட்டிகள் விளம்பரத்தினை எம்.ஜி.ஆர் தவிர்த்தார்...*
*இருப்பினும், மெகா ஹிட் படமாக அமைந்தது... *......... Thanks.........
-
*எங்க வீட்டு பிள்ளையின் பக்தர்களுக்கு உதவி புரிய கோரிக்கை. எங்களை காப்பாற்ற யாரும் இல்லையா என்று கூக்குரல் வரும் போது தலைவர் நான் இருக்கின்றேன் என்று திரையில் எழுச்சியோடு வருவார். அந்த வாழும் தெய்வத்திற்காக எத்தனையோ உருவத்தில் பல வழிமுறைகளில் தன் உழைப்பையும் தன் குடும்ப எல்லைக்கு அப்பாற்பட்டு நன்கொடைகளையும் வாரிவழங்கிய தினகூலிகளாகிய சாதாரண பக்தன் இன்று சில வாரங்களாக வருமானம் இன்றி தவிக்கின்றார்கள்.அவர்களுக்கு உதவி புரிய ஒரு அமைப்பும் இல்லையே என்பதில் இருந்து நாம் எந்த கோணத்தில் உள்ளோம் என்பதை உணரும் பொழுது வருத்தமாக உள்ளது.தியேட்டரில் விழா கொண்டாட, அரங்கத்தில் விழா கொண்டாட தலைவர் புகழ் பரப்ப யார் யார் கைகள் நீண்டு வந்தனவோ அந்த 90% கைகள் வருமானம் இன்றி பூட்டப்பட்டு இருக்கின்றது.அடுத்து தலைவருக்காக எதையும் செய்ய துணியும் 10% வசதி படைத்த கைகள் எங்கே என்று தேடும் போது கண்கள் வலிக்கின்றது. அதே சமயத்தில் குறிப்பாக இந்த நேரத்திலும் இந்த மௌனம் ஏன் என்பது மட்டும் புரிகிறது.சரியான உள்கட்டமைப்பு இல்லை.ஒற்றுமை இல்லை.யார் கொடுத்து யார் பெயர் வாங்குவது என்று மனதிற்குள் நெருடல்.யார் யாருக்கு கொடுப்பது யார் சொல்லி கொடுப்பது யார் தலைவர் யார் ஒருங்கிணைப்பாளர் யார் செயளலாளர் யார் பொருளாளர் என்று நமக்குள் எழுப்பப்படும் இவை அனைத்தும் அந்த வசதி படைத்த 10% கைகளை கட்டி போட்டு இருக்கின்றது சரிதானே. ஆகவே இந்த சமயத்தில் யார் யார் தாராளமாக உதவுகிறார்களோ அவர்களை ஒருசில பதவிகளில் ஒளிரவைக்க கூடிய விரைவில் எல்லோரும் சேர்ந்து முடிவெடுப்போம். அதற்கு முன் நமக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் வசதி படைத்த பண்பாளரை ஒருவரை தேர்ந்தெடுத்து அவர்மூலமாக எல்லா நன்கொடைகளையும் வழங்கி அந்த நபர் மூலமாக தனி தனி குழுக்களாக பிரித்து அவரவர் மூலமாக மற்ற உண்மையான தலைவர் பக்தர்கள் இடத்தில் சேர்த்து சுனாமி அல்ல கண்ணுக்கே தெரியாத வைரஸ் வந்து வாழ்வாதாரத்தை சிதைத்தாலும் எங்களை அணைக்க பல கைகள் இருக்கின்றது என்று மகிழ வாட்ஸ்அப் பேஸ்புக் தொலைபேசி மூலமாக ஒவ்வொரு குழுவின் பொறுப்பாளர்களும் ஏற்பாடு செய்யுங்கள்.இதைவிட்டால் பொன்னான நேரம் அமையாது.இவன் ஷிவபெருமாள். கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை செயலாளர்.......... Thanks.........