எஸ்.எஸ்.ராஜேந்திரன் நினைவாக சில பாடல்கள்..
மறக்க முடியுமா திரைப்படத்திலிருந்து இனிமையான பாடல்...
ஒண்ணு கொடுத்தா...
http://www.youtube.com/watch?v=OZ3iOYKjDro
Printable View
எஸ்.எஸ்.ராஜேந்திரன் நினைவாக சில பாடல்கள்..
மறக்க முடியுமா திரைப்படத்திலிருந்து இனிமையான பாடல்...
ஒண்ணு கொடுத்தா...
http://www.youtube.com/watch?v=OZ3iOYKjDro
எஸ்.எஸ்.ஆருக்கு மிகப் பெரும் புகழைத் தேடித் தந்த பாட்டு..
அக்காலத்தில் இப்பாடல் நடிகர் திலகம் படத்தில் இடம் பெற்றிருக்கக் கூடாதா என பல ரசிகர்கள் ஏங்கியதுண்டு..
திரை இசைத்திலகம் இசையில் வானம்பாடி படத்தில் பாடகர் திலகம் குரலில் கவியரசர் வரிகள்...
கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்...
http://www.youtube.com/watch?v=HGu2z9X8JXI
ஈஸ்வரியின் ஹம்மிங் அரவணைத்துச் செல்ல பாடகர் திலகம் பாடும் அற்புதமான பாடல். எஸ்.எஸ்.ஆருக்கு வாய்த்த மிகச்சிறந்த பாடல்களில் ஒன்று.
வானம்பாடி ... திரை இசைத்திலகம் கே.வி.எம். அவர்களின் இணையற்ற படைப்புக்களில் ஒன்று..
ஏட்டில் எழுதி வைத்தேன்.. எழுதியதைச் சொல்லி வைத்தேன்..
இதுவும் கவியரசரின் வரிகள் தான்..
http://www.youtube.com/watch?v=arPkgsUyjR0
ஜி.ஆர். நாதனின் ஒளிப்பதிவு குறிப்பிடத்தக்கது.
வேளாண்மையின் சிறப்பை எடுத்துரைக்கும் கருத்தாழமிக்க பாடல்...
பிள்ளைக்கனியமுது படத்திலிருந்து.. பாடகர் திலகத்தின் குரல்.. திரை இசைத் திலகம் இசை...
ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே...
http://www.youtube.com/watch?v=2QnnDK2E3gQ
மெல்லிசை மன்னர்கள்..ஏ.எம்.ராஜா...பி.சுசீலா...மருதகாசி...கூட ்டணியில் மாபெரும் புகழ்பெற்ற பாடல்... பெற்ற மகனை விற்ற அன்னை திரைப்படத்திலிருந்து...
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா...
http://www.youtube.com/watch?v=tQ55acTpSWs
நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியங்களில் ஒன்றான பழநி திரைப்படத்தில் இடம் பெற்ற இனிமையான டூயட் பாடல்...
வட்ட வட்டப் பாறையிலே வந்து நிற்கும் வேளையிலே..
http://www.youtube.com/watch?v=Gxl2MG5EhaA
எஸ்.எஸ்.ஆர். அவர்களுக்கென்று பல ரசிகர்களை உருவாக்கிய பாடல்களில் ஒன்று ஆனந்தி திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணிலே அன்பிருந்தால்....
பாடகர் திலகத்தின் குரலைக் கேட்கும் போதே கற்பனையில் எஸ்.எஸ்.ஆரின் உருவம் நிழலாடும்..
http://www.youtube.com/watch?v=yfCzXD8mz-I
இனி சில மற்ற அபூர்வமான பாடல்கள்..
இசையரசியின் ஈடு இணையற்ற குரலில் என்.எஸ்.தியாகராஜனின் இசையில் வள்ளி தெய்வானை படத்திலிருந்து...
பூத்திருந்தோம் காத்திருந்தோம் ... இப்பாடலைக் கேட்க... பார்க்கவும் தான்...
http://www.youtube.com/watch?v=RS4tP7h91DM
அபூர்வ ராகங்கள்... கானங்கள்...
அந்தியில் சந்திரன் வருவதேன்...
மெல்லிசை மன்னரின் இசையைக் கேட்டு மெய்மறக்க..
http://www.youtube.com/watch?v=mGihFumUJW8
மல்லிகை மோகினி....
பாடல் மிகவும் பிரபலம்...
ஒரு பாடலை பல ராகத்தில் உனைப் பார்த்துப் பாடினேன்...
இலங்கை நடிகர் காமினி ஃபொன்சேகா லதா மற்றும் பலர் நடித்த படம்..
http://www.youtube.com/watch?v=6oSvnYBIexo
மேற்கண்ட அபூர்வமான பாடல்களைத் தரவேற்றிக் காணும் வாய்ப்பளித்த ஃப்ரெஞ்சு நண்பருக்கு உளமார்ந்த நன்றி