thanks saradha madam, for your sincere efforts in posting kolangal here :D
Printable View
thanks saradha madam, for your sincere efforts in posting kolangal here :D
:lol:Quote:
Originally Posted by saradhaa_sn
thanks saradha madam, for your sincere efforts in posting kolangal here :D
நன்றி (எல்லோருக்கும்).....
நேற்றிரவு விஜயதசமியை முன்னிட்டு சன் டி.வி.யில் ஒளிபர்ப்பான 'கில்லி' திரைப்படம் (எத்தனையாவது தடவை ஒளிபரப்பாகிறது என்று தெரியவில்லை) கஸ்தூரி, மேகலா, ஆனந்தம், கலசம், கோலங்கள் என்று பல சீரியல்களை விழுங்கி ஏப்பம் விட்டு விட்டது. தப்பிப் பிழைத்தவை அரசி மற்றும் சிவசக்தி மாத்திரமே. ஆகவே நேற்று கோலங்கள் ஒளிபரப்பாகவில்லை.
இன்று என்ன நடக்கிறதென்று பார்ப்போம்....
ஆதி சிபாரிசு செய்த ஃபைனான்ஸியரிடம் லோன் பெறுவதற்காக அவருடைய அலுவலகத்தில் ஆர்த்தியும், ராஜேஷும் அமர்ந்திருக்கும்போது, உள்ளேயிருந்து மனோ வெளியே போவதைப்பார்த்து அவர்களுக்கு ஆச்சரியம். அப்போது அங்கிருந்து வெளியே வரும் சிப்பந்தியிடம் விசாரித்ததில் மனோவும் லோனுக்காகத்தான் தங்கள் பாஸைப்பார்த்துவிட்டுப்போவதாகவும், ஆனால் அவருக்கு லோன் கிடைத்ததா இல்லையா என்று தனக்கு தெரியாது என்றும் கூறி, அவர்கள் இருவரையும் ஃபைனான்ஸியர் அறைக்குள் அனுப்புகிறார். ஆதி லோன் விஷயமாக எல்லா விவரமும் போனில் சொல்லியிருப்பதால், பணம் தயாராக இருப்பதாகச் சொல்லி சில பத்திரங்களில் கையெழுத்துப்போடும்படி கேட, அப்பத்திரங்களை வாங்கிப்பார்க்கும் ராஜேஷ் அவை வெற்றுப்பத்திரங்களாக இருப்பதைச் சுட்டிக்காட்ட, ஆதி எதுவும் உங்களிடம் சொல்லவில்லையா என்று அவர் கேட்கிறார். எங்கே லோன் கிடைக்காமல் போய்விடுமோ என்று அச்ச்ப்படும் ஆர்த்தி, எதுவும் கேட்காமல் அவசரமாக அவற்றில் கையெழுத்துப்போட்டுக் கொடுத்துவிட்டு, பணம் அடங்கிய சூட்கேஸை வாங்கிக்கொண்டு போகிறாள்.
திரைப்படங்களிலும் சரி, சீரியல்களிலும் சரி... இம்மாதிரி சூட்கேஸ் நிறையப் பணத்தை வாங்குபவர்கள், லட்சத்தில் இரண்டுபேர் தவிர மீதி பேர், (பணம் சரியாக இருக்கிறதா என்று பார்க்காவிட்டாலும் கூட பரவாயில்லை) அட்லீஸ்ட் உள்ளே பணமாவது இருக்கிறதா அல்லது வெற்றுத்தாள்கள் இருக்கிறதா என்று கூட பார்ப்பதில்லை. ஆர்த்தியோ அல்லது அவரை இயக்கும் தொல்ஸோ அந்த லட்சத்தில் இரண்டு பேரில் வர வாய்ப்பில்லை.
பந்தா எம்.எல்.ஏ. திருவேங்கடம் தன் தொண்டர்(?)களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். தன் தொகுதியை எப்படி முன்னேற்றுவது என்பதைப்பற்றி அல்ல என்பது நம் எல்லோருக்கும் தெரியும். எம்.எல்.ஏ.ஆகிவிட்டால் மட்டும் போதாது, அடுத்து அமைச்சர், அடுத்து முதல்வர் என்று போய்க்கொண்டே இருக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது, அவருடைய ஃப்ராடு மருமகன் யோசனை சொல்லத்துவங்குகிறான். என்னமோ ஐன்ஸ்டீன், லிங்கன் அது இது என்று அவன் பங்குக்கு அவனும் பெனாத்துகிறான். எடுபிடி தங்கராசுவும் என்னென்னெவோ உருப்படியில்லாத யோசனைகளைச்சொல்கிறார். மொத்தத்தில் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமல்ல யாருக்குமே புரியவில்லை. ஏன் இடையிடையே திருவேங்கடம் எம்.எல்.ஏ.யைக்கொண்டுவந்து டெம்போவைக் குறைக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
கார்த்திக், ஆனந்தியின் அலுவலகத்தில் அமர்ந்து தங்கள் பத்திரிகையின் அடுத்த நாள் பதிப்புக்காக பணியாளரிடம் ஆலோசனையில் இருக்கும்போது, தோழர் பாலகிருஷ்ணன் ரொம்ப கோபமாக வருகிறார். அவர் தன் கையிலுள்ள ஒரு தினசரி நாளிதழைக் காட்டி, 'ஆனந்திக்கு நடந்தது திட்டமிட்ட கொலைமுயற்சி அல்ல, தற்செயலான சாலை விபத்துதான்' என்று கோர்ட் தீர்ப்பு சொல்லி, அந்த லாரி ஓட்டுனருக்கு வெறும் அபராதமும், மூன்றுமாத சிறைத்தண்டனையும் மட்டுமே தந்து தீர்ப்பளித்திருப்பது தனக்கு அதிர்ச்சியாக இருப்பதாகவும், இதன் பின்னணியில் பணபலமும், அதிகார பலமும் விளையாடியிருப்பதாகவும் சொல்லி, இதுபற்றி விளக்க உடனடியாக பிரஸ்மீட் ஏற்பாடு செய்ய வேண்டுமென்று சொல்ல கார்த்திக்கும் சம்மதிக்கிறாண். தனக்கும் இந்த தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாகவும் கூறுகிறான்.
மனோவையும் அனுவையும் தங்கள் வீட்டுக்கு வரவழைத்த காஞ்சனாவும் ரேகாவும் மனோவைக் காய்ச்சியெடுக்கிறார்கள். அபிக்கோ அல்லது ஆனந்தி, ஆர்த்தி, மனோ இவர்களுக்கோ அப்பாவை எத்தனை வயதில் தெரியுமென்றும், அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும் வரை அப்பா யாரென்றே தெரியாது என்றும், ஆனால் தன்னுடைய பிள்ளைகள் பிறந்த்து முதலே அப்பாவின் கண்ணெதிரிலேயே வளர்ந்ததாகவும், கற்பகத்தை விட தானே அதிக வருடங்கள் ஈஸ்வரனுடன் வாழ்ந்ததாகவும், ஆகவே தனக்குள்ள உரிமைகள் கற்பகத்துக்கு கிடையாது என்றும், தனக்கு இவ்வளவு உரிமைகள் இருந்தும் தான் சஷ்டியப்த விழாவுக்கெல்லாம் ஏற்பாடு செய்யாததற்கு காரணம் தேவையில்லாத குழப்ப்ங்களை தவிர்க்க வேண்டுமென்பதற்காவும்தான் என்று காஞ்சனா சகட்டுமெனிக்கு பொழிந்துதள்ளுகிறாள். கூடவே ரேகாவும், 'தன் அத்தையின் இந்த கேள்வி ஒன்றுக்காவது அவனால் பதில் சொல்ல முடியாதென்றும்' கூற, ஆதி இவற்றை வேடிக்கைபார்த்துக் கொண்டிருக்கிறான். கடைசியில் மனோவுக்கு உதவிக்கு வருவது போல வந்து அம்மாவிடம், 'பாவம் இவன் என்னம்மா பண்ணுவான்?. அந்த அபி செய்யும் அநியாயங்களை அந்த வீட்டில் யாரும் தட்டிக்கேட்க முடியாது' என்று உசுப்பேத்திவிட, உடனே முறுக்கேறிய மனோ'இல்லை இப்பவே நான் போய் அந்த விழாவைத்தடுக்க ஏற்பாடு செய்கிறேன்' என்று அனுவுடன் வெளியேற..... 'சரி இந்த மாடும் மந்தையில் இருந்து பிரிந்து விட்டது' என்று ஆதிக்கு மகிழ்ச்சி.....
Saradha madam,Quote:
Originally Posted by saradhaa_sn
I saw the above scene while switching between channels :) hw r u able to putt forth the visual scenes in ur writing :o definitely a great skill :clap: :clap:
Saradha Madam, eththana varushama indha serial'a telecast panraanga :? more than 4 years :roll:
மீண்டும் மீண்டும் நன்றி பலQuote:
Originally Posted by saradhaa_sn
athuthaan SaradhaQuote:
Originally Posted by sarna_blr
:clap: :clap: :clap:
Thanks Saravana & Aanaa.....
தொல்காப்பியனும் உஷாவும் ‘பில்டர்ஸ் அசோஸியேஷன்’ கட்டிடத்துக்குள் நுழையும்போது, அங்கிருந்து அபியும் கூடவே கிருஷ்ணனும் வெளியே வருகின்றனர். (முன்பெல்லாம் அபி எங்காவது செல்வதென்றால் கூடவே தொல்காப்பியனுடன், அல்லது பலநேரம் தனியாக செல்வாள். ஆனால் இப்போது ஒட்டுவால் கிருஷ்னனுடன்தான் எங்கும் போகிறாள்). கிருஷ்ணன் உஷாவைப்பார்த்து “உஷாம்மா, நீங்க ரெண்டு பேர்ம் சேர்ந்து புதுசா ஒரு பிஸினஸ் ஆரம்பிக்கப்போகிறீர்களாமே”
“யார் சொன்னது?”
“இல்லம்மா, பரவலா பேசிக்கிறாங்க”
“இதுவரை அப்படி எதுவும் இல்லை, இனிமேல் ஆரம்பித்தாலும் ஆச்சரியம் இல்லை”
இப்போது அபி குறுக்கிட்டு (தொல்காப்பியனைப் பார்த்த்வாறே) “முன்பு இப்படித்தான் ஒரு புது பிஸினஸ் ஆரம்பிக்கும்போது ஒருவர் ‘நட்புக்காக’ ஆர்ம்பிப்பதாக சொன்னார். இப்போது அந்த நண்பரே இல்லை. அதான் கேட்டேன்”
அபியிடமிருந்து இந்த வார்த்தைகளை எதிர்பார்க்காத உஷா, “ரொம்ப நல்லாயிருக்கே நீ சொல்றது..!, நீங்களா சேர்ந்து ஒருத்தரை கம்பெனியை விட்டு வெளியே அனுப்புனீங்க. இப்போ அவரையே குத்தம் சொன்னால் என்ன அர்த்தம்?. அபி உணக்கு உண்மை என்னன்னு தெரியுமா?. புதுசா ஒரு பிஸினஸ், அதுவும் ‘கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பிஸினஸ்’ ஆரம்பிக்கலாம் என்று சொன்னதே நான்தான். ஆனா அதுக்கு தொல்ஸ் என்ன சொன்னார் தெரியுமா?. ‘அபியில்லாமல் இன்னொரு பிஸினஸை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை’ என்றார்” .
“ஏன் தொல்ஸ் நீங்க ஒண்ணும் பேச மாட்டீங்களா?” என்ற அபியின் கேள்வி தொல்காப்பியனுக்கு மட்டுமல்ல உஷாவுக்கும் ஆச்சரியமாக இருக்க, “அவர் உங்கிட்ட பேசுகிற மாதிரியா நடந்துகிட்டே. அவரை ஒரு வார்த்தை கேட்காமல் கம்பெனியை விட்டு வெளியே அனுப்பினே. அன்னைக்கு கூட ‘கார்டு ஷாப்’ல நீ எனக்கு மட்டும்தான்னே பத்திரிகை கொடுத்தே. அது எப்படி அபி உங்கிட்டே தப்பே இல்லாத மாதிரி உன்னால் பேச முடியுது?”
“சரி உஷா, புதுசா பிஸினஸ் தொடங்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்” உஷாவிடம் கைகுலுக்கிய அபி தொல்காப்பியனைப்பார்த்து, “தொல்ஸ் உங்களுக்கும் வாழ்த்துக்கள்” என்று சொல்ல, இத்தனை உரையாடல்களுக்கும் தொல்ஸிடமிருந்து வழக்கமான ட்ரேட்மார்க் புன்னகை மட்டுமே.
அபியும் கிருஷ்ணனும் வெளியே போனதும், அந்தக்கட்டிடத்துக்குள் நுழையும் கிரியின் கண்ணில் உஷாவும் தொல்காப்பியனும் படுகின்றனர், ஆனால் அவர்கள் கிரையைக்கவனிக்காமல் சிரித்துப்பேசிக்கொண்டே போக, கிரி அங்கிருக்கும் அசோஸியேஷன் மெம்பர்களின் உரையாடல்களைக் கவனிக்கிறான். ‘இப்போ சிரித்துப்பேசிக்கொண்டே போகும் பெண், அசோஸியேஷனின் சேர்மன் ஆதித்யாவின் மனைவி என்றும், அவள் ஆதியைப் பிரிந்து தொல்காப்பியனுடன் சுற்றுவதாகவும், இவர்களின் கூடா நட்பை ஆதி கண்டும் காணாமல் இருப்பதாகவும்’ அவர்கள் பேசிக்கொள்ள கிரி திடுக்கிடுகிறான்.
மாமியார் வீட்டிலிருந்து (சித்தியை மாமியார் என்று அழைக்கவேண்டிய சூழ்நிலை மனோவுக்கு) காரில் அனுவுடன் திரும்பிக்கொண்டு இருக்கும் மனோவிடம், அபி நடத்தப்போகும் விழாவை எப்படி நிறுத்தப்போகிறீர்கள் என்று அனு கேட்க, அவனோ இனிமேல்தான் அதுபற்றி யோசிக்க வேண்டும் என்று சொல்ல, தன் அம்மா(?)வின் முன் மனோ காட்டிய வேகம் இப்போது இல்லையென்பதை அறிந்த அனு கோபமடைந்து காரில் இருந்து இறங்கிக்கொள்ள, மனோ அவளை சமாத்னப்படுத்த முயல்கிறான். அவளோ “நீங்க யோசித்து முடிவு செய்வதற்குள் விழாவே முடிந்துவிடும். இப்பவே போய் உங்க அக்காவிடம் பேசினால் பேசுங்க, இல்லேன்னா நான் என் அம்மா வீட்டுக்குப் போகிறேன்” என்று முறுக்க “சரி சரி வா, இப்பவே போய் அபியக்கா கிட்டே பேசுறேன். ஆனா நான் பேசும்போது நீயும் கூட இருக்கணும்” என்று சொல்லி அழைத்துப்போகிறான்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில், ஆனந்திமீது நடந்த கொலைமுயற்சியை நீதிமன்றம் சாதாரண சாலைவிபத்தாக சித்தரித்து லேசான தணடனையளித்து தீர்ப்பு வழங்கியது பற்றி தோழர் ரொம்ப ஆக்ரோஷமாக பேசுகிறார். கூடவே கார்த்திக்கும் விளக்குகிறான். பத்திரிக்கையாளர்கள் பேசாமல் இருந்தால் இன்று ஆனந்திக்கு நடந்ததுதான் நாளை மற்ற பத்திரிக்கையாளர்களுக்கும் நடக்கும் எனக்கூற, அவர்களில் ஒருவர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என்று சொல்ல, தோழர் ஏளனமாக சிரித்து, ‘இப்போது இந்த நீதிமன்ற தீர்ப்பை பணத்தாலும் அதிகார பலத்தாலும் வளைத்தவர்கள் மேல்முறையீட்டிலும் அதைத்தானே செய்வார்கள்?. இதற்கு முதற்கட்டமாக கடற்கரையிலிருந்து நீதிமன்றம் வரை ஊர்வலம் சென்று நீதிமன்றத்தின் முன் உண்ணாவிரதம் இருக்க வேண்டுமென்றும், இதன்மூலம் மற்றவர்களின் கவனத்தை இந்த வழக்கின்பக்கம் திருப்ப வேண்டுமென்றும்’ கேட்க, பத்திரிக்கையாளர்கள் அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர்.
காரில் ஆதியுடன் போய்க்கொண்டிருக்கும் கிரி, அசோஸிய்ஷன் அலுவலகத்தில் தான் பார்த்த காட்சிகள், கேட்ட உரையாடல்களை ஆதியில் காதுகளில் போட வேண்டுமென்ற எண்ணத்துடன், காரை நிறுத்தச்சொல்லி, டிரைவரை இறங்கி நிற்கச்சொல்லிவிட்டு, பாஸிடம் பேச்சை ஆரம்பிக்கிறான். தான் தொல்காப்பியனையும் உஷாமேடத்தையும் ஒன்றாகப்பார்க்க நேர்ந்ததையும், அவள் ஆதியின் மனைவியாக இல்லாமல் பழையபடி சுடிதார் அணிந்துகொண்டு ரொம்ப சகஜமாக சந்தோஷமாக இருந்ததையும், முக்கியமாக அவள் கழுத்தில் ஆதி கட்டிய தாலி இல்லையென்பதையும் சொல்ல, ஆதிக்கு அதிர்ச்சி. இருந்தும் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அசோஸியேஷன் மெம்பர்கள், தொல்காப்பியனுக்கும் உஷாவுக்கும் கள்ள உறவு இருப்பதாகவும், கணவனாகிய ஆதி இதைக் கண்டுகொள்ளவில்லையென்றும் அவர்கள் பேசியதாகவும், பாஸுக்கும் மேடத்துக்கும் இன்னும் விவாகரத்து ஆகாத நிலையில் அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள பிணக்கு மற்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லாததால் பாஸைப்பற்றியும் மேடத்தைப்பற்றியும் இவ்வாறு தவறாகப் பேசுவதாக கிரி சொல்ல, ஆதியின் கோபம் உச்சந்தலைக்கு ஏறுகிறது.
உடனடியாக காரை எடுக்கச்சொல்லும் ஆதியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, அத்துடன் காட்சி ஃப்ரீஸ்…..
(அடுத்து எங்கே போவான்?. தன் அம்மா காஞ்சனாவிடமா அல்லது உஷாவின் பெற்றோரிடமா…?).
நன்றி சாராதா
தமிழில் கலக்கிறீங்க!!!!!