-
மஹா பெரியவாள் - மகான் - முதல்வர்
எம். ஜி .ஆர். சந்திப்பில்
திரு.பிச்சாண்டி I.A.S., அவர்கள் சொல்லகேட்டு ரா . வேங்கடசாமி.
காஞ்சி மகானின் சங்கர மடத்தில் அவ்வப்போது அபூர்வ நிகழ்சிகள் நடப்பதுண்டு திரு. எம். ஜி .ஆர்.முதல்வராக இருந்தபோது அவருடைய நேர் முக உதவியாளராக திரு. பிச்சாண்டி இருந்தார்.
முதல்வருக்கு உடலில் ஏற்பட்டிருந்த கோளாறு காரணமாக அவரால் சரியாக பேச முடியவில்லை . திரு.எம் ஜி. ஆருக்கு ஆன்மீக விஷயங்களில் உறுதுணையாக இருந்தவர் "இதயம் பேசுகிறது " திரு. மணியன் அவர்கள் . முதல்வர் மகானை தரிசிக்க விருப்பம் கொண்டவுடன் ,
திரு.மணியன் அவர்கள் அதற்க்கு செயல் வடிவம் கொடுத்தார் .
முதல்வர் அவரது துணைவியார் மணியன் மூவரும் புறப்பட ஆயத்தமானார்கள் ஆன்மீக விஷயமானதால் திரு.பிச்சாண்டி அவர்கள் முதல்வருடன் செல்ல தயங்கினார் ஆனால் முதல்வர் விடவில்லை தனது உதவியாளர் எந்த சந்தர்பத்திலும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று நினைத்து அவரையும் உடன் அழைத்து சென்றார் .
ஸ்ரீ மடத்திற்கு முதல்வரின் வருகை முன்னதாக அறிவிக்கப்பட்டது மகானுக்கு சற்றே உடல் நலம் பாதிப்பு இருந்த போதிலும் முதல்வரை பார்க்க அனுமதி அளித்தார் , முதல்வரும் மகானுக்கு உடல்
நலம் சரியில்லை என்று கேள்விப்பட்டுத்தான் இந்த சந்திப்புக்கு திட்டமிட்டார் .மகான் அமர்ந்திருக்க அவருக்கு சற்று எதிரே முதல்வர் தன் துணைவியாருடன் அமர்ந்திருந்தார்
செயலாளர் பிச்சாண்டியோ சற்று தள்ளி போலீஸ் வளையத்திற்கு அப்பால் நின்றிருந்தார் , இதை கவனித்த முதல்வர் அவரை சைகை கட்டி அருகே வருமாறு அழைத்தார் , காவலர்கள் உள்ளே விட மறுத்ததும் முதல்வர் அழைத்ததால் தான் செல்கின்றேன் என்று கூறி முதல்வர் அருகே சென்று அமர்ந்தார் .
மகான் பிச்சாண்டியை பார்த்து இவர் உங்கள்
பி.ஏ வா என்று கேட்க , முதல்வர் ஆமாம் என்றதும் அங்கிருந்த படியே பிச்சாண்டி தன் வணக்கத்தை தெரிவிக்க , மகானும் அவரை தனது திருக்கரத்தை உயர்த்தி ஆசிர்வதித்தார். பிறகு முதல்வர் மகானை பார்த்து "உங்கள் தேகம் எப்படி இருக்கிறது?" என்று கேட்டார்.
"தேகம்" என்று அவர் கேட்டது , "தேசம்" என்று மகான் செவிகளில் ஒலிக்க
தேசத்திற்கு என்ன நன்றாகத் தானே இருக்கிறது என்றார் மகான்
முதல்வர் பிச்சாண்டியை திரும்பி பார்க்க , அவர் மகானிடம் விளக்கினார்
"தங்களது தேகம் எப்படி இருக்கின்றது" என்று முதல்வர் கேட்கிறார்
அதற்கென்ன நன்றாகத் தான் இருகின்றது என்றார் மகான் லேசாக புன்முறுவல் செய்தபடி , இடையில் மடத்து சிப்பந்திகள் பெரியவாளுக்கு உடம்பு ரொம்ப முடியல மருந்தே சாப்பிட மாட்டேன்கரா , முதல் மந்திரிதான் சொல்லணும் என்றார்.
உடனே முதல்வர் சொல்லுங்கள் நான் என்ன செய்யவேண்டும்? மகானிடம் கேட்கிறார் . அப்போதும் மகான் தன் உடம்பை பற்றி அவரிடம் பேசவில்லை
"எனக்கு நீங்கள் மூன்று காரியங்களை செய்வதாக வாக்குறுதி தரவேண்டும்" என்றார்
"சொல்லுங்கள் செய்கிறேன் " முதல்வர் உணர்ச்சிவசப்பட்டு பதில் சொல்கிறார்
"முதல் விஷயம் - தமிழ் நாட்டிலே பல கோவில்களில் விளக்கே எரியறது இல்லை . விளக்கு எரிய நீங்கள் ஏற்பாடு பண்ணனும் , முதல்வர் தலையாட்டுகிறார்
இரண்டாவதாக , பல கோயில்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கு அதெல்லாம் ஒழுங்கு படுத்தி கும்பாபிஷேகம் நடத்தனும்".
"செய்துவிடுகிறேன் "
மூன்றாவது விஷயம் என்ன என்பதை சொல்ல மகான் சற்றே தயங்குகிறார்
முதல்வரும் மகானின் முகத்தை உற்று பார்த்த வண்ணம் இருக்கிறார்
"நாகசாமியை மன்னிச்சுருங்கோ " என்கிறார் ,
(நாகசாமி யார் என்பதை பற்றி சொல்லியாக வேண்டும்) .
பழங்கால கோவில்கள் , சின்னங்கள் போன்றவைகளைப் பற்றி ஆராய்ந்து புதிய புதிய தகவல்களை சேகரித்து வந்த தொல்பொருள் ஆராய்ச்சித்துறையை சேர்ந்தவர் . அவர் கண்டுபிடிக்கும் பல பழமையான விஷயங்களை , நேரடியாக பத்திரிகைகளுக்கு தொகுத்து கொடுத்து விடுவார் . பத்திரிகைகளை பார்த்துத் தான் முதல்வரே அவைகளைப் பற்றி அறிந்து கொள்வார் .
முதல்வருக்கு இது தம்மை உதாசீனப்படுத்தும் செயல் என்கிற எண்ணம் . அரசுக்கு சொல்லிவிட்டு தானே அதை வெளியில் சொல்லவேண்டும் , இதனால் முதல்வர் நாகசாமியை தற்காலிக பதவி நீக்கம் செய்துவிட்டார் , அதை நாகசாமி மகானிடம் சொல்லவும் இல்லை , முதல்வரிடம் கேட்கவும் இல்லை . முதல்வர் ஒரு நிமிடம் மௌனம் சாதிப்பதைக் கவனித்த மகான் பேசினார்
" நாகசாமி பல கோவில்களைப் பத்தி விவரமாக ஆராய்ச்சி செய்து எவ்வளவோ விஷயங்களை நாட்டுக்காக தெரியப்படுத்தி இருக்கார் , அவர் ஆராய்ச்சி பண்ணலேன்னா பல விஷயங்கள் வெளியில தெரியாமலேயே போய் இருக்கும் "மன்னித்து விடுகின்றேன் " என்பது போல் முதல்வர் தலையை ஆட்டினார்.
மிகவும் சிறப்பு வாய்ந்த இந்தச் சந்திப்பில் தமிழ் நாட்டுக் கோயில்களுக்கு நிறைய நன்மைகள் ஏற்பட்டன , தனது உடல் நிலையை பற்றி கவலைப்படாமல் வேறு விஷயங்களை பற்றி எவ்வளவு கவலைப் படுகின்றார் என்று வியந்தார் முதல்வர்.......... Thanks.........
-
எம்ஜியார் நினைத்து இருந்தால் !! தன் வாழ்நாள் கடைசிவரை சிவாஜி போல அக்கடா துக்கடா வேடங்களில் நடித்து காலத்தை தள்ளி இருக்கலாம் !!! இந்த நேரத்தில் கருணாநிதிக்கு நன்றி சொல்லவேண்டும் !! தலைவரை சீண்டிபார்க்க கொம்புசீவி முக முத்துவை கலமிறக்கியமைகாக !! திட்டம்போட்டு தலைவரை மட்டம் தட்டிய கருணாநிதிக்கு நன்றிதான் சொல்லவேண்டும் !! இல்லையென்றால் ஒரு புரட்சிதலைவர் , முதலமைச்சர் நமக்கு கிடைத்து இருக்கமாட்டார் !! ஊழலை எதிர்த்து திருகழுகுன்றம் கூடத்தில் சிம்மகர்ஜனை புரிந்தார் தலைவர் !! தூக்கி எறிந்தார் கண்ணில்லாத கபோதி கருணாநிதி !! தலைவரின் வாழ்க்கையே மாறிவிட்டது !! ஊழல் கருணாநிதி கூட்டத்தை வேரோடும் !! வேரடி மண்ணோடும் சாய்த்துவிட்டார் நம்தலைவர் !!! அதன் பின் தலைவர் உயிருடன் இருக்கும் வரை கருணாநிதியால் தலைதூக்க முடியவில்லை !!
அதற்கு அவர் பட்ட கஷ்டங்கள் ஏராளம் !! அவமானங்கள் சொல்லி முடியாது !! அப்படிப்பட்டவரின் தொண்டர்கள் எப்படி இருக்கவேண்டும் ?????? ஊழலுக்கு வெண்சாமரம் வீசுவதா ?? வாழ்த்து சொல்வதா ?? அப்படி ஊழலை சிவப்புக்கம்பளம் போட்டு வரவேற்கும் !! நபர்கள் என் நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ள லாயக்கு அற்றவர்கள் !! தயவுசெய்து அப்படி பட்டவர்கள் நட்பு வட்டதில் இருந்து நான் விலகிகொள்கிறேன் !! நண்பர்களே ?????
இதில் நான் யாரையும் tag செய்யவில்லை !!!.... தலைவர் பக்தர் ஒருவர் ஆதங்க பதிவு...
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., கதாநாயகனாக நடித்த முதல் படம்" ராஜகுமாரி" வெளியான நாள் 11-04-1947.
ராஜகுமாரி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] உடுமலை நாராயணகவியின் பாடல்களுக்கு எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்திருந்தார்... Thanks......
-
ராஜகுமாரி எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதலாவது திரைப்படமும்,[2] மு. கருணாநிதி முதன் முதலாக வசனம் எழுதிய திரைப்படமும், ஏ. எஸ். ஏ. சாமி முதன் முதலில் இயக்கிய திரைப்படமும் ஆகும்.[1] இத்திரைப்படத்திலேயே முதன் முதலில் பின்னணிக் குரல் பயன்படுத்தப்பட்டது. ‘காசினிமேல் நாங்கள்’ என்ற எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்து திருச்சி லோகநாதன் பாடிய பாடலுக்கு எம். என். நம்பியார் வாயசைத்தார்.[3] இப்படத்துக்கு உரையாடலை மு. கருணாநிதி எழுதியபோதும் உரியமுறையில் அவர் பெயர் படத்தில் இடம்பெறவில்லை.[4] படத்தின் பாட்டுப் புத்தகத்தின் பழைய பிரதியில், ‘கதை, வசனம், டைரக்*ஷன்’ ஏ.எஸ்.ஏ.சாமி பி.ஏ., ஹானர்ஸ் என்றும் ‘உதவி ஆசிரியர்’ – மு.கருணாநிதி என்றும் அச்சிடப்பட்டிருக்கிறது.[5]
இயக்கம்
ஏ. எஸ். ஏ. சாமி
தயாரிப்பு
எம். சோமசுந்தரம்
ஜூபிட்டர்
எஸ். கே. மொக்தீன்
இசை
எஸ். எம். சுப்பையா நாயுடு
நடிப்பு
எம். ஜி. ஆர், கே. மாலதி, எம். என். நம்பியார், எம். ஆர். சுவாமிநாதன், டி. எஸ். பாலையா, புளிமூட்டை ராமசாமி, கே. தவமணி தேவி, எம். எம். ஏ. சின்னப்பா தேவர், எஸ். வி. சுப்பையா, நாராயண பிள்ளை, டி. கே. சரஸ்வதி, எம். எம். ராதாபாய்
ஒளிப்பதிவு
டபிள்யூ. ஆர். சுப்பாராவ், வி. கிருஷ்ணன்
படத்தொகுப்பு
டி. துரைராஜ்
வெளியீடு
ஏப்ரல் 11, 1947
நீளம்
14805 அடி
நாடு
இந்தியா.......... Thanks...
-
Directed by
A. S. A. Sami
Produced by
Jupiter Pictures
Written by
A. S. A. Sami
Screenplay by
A. S. A. Sami
Story by
A. S. A. Sami
Starring
M. G. Ramachandran
K. Malathi
M. R. Saminathan
T. S. Balaiah
K. Thavamani Devi
M. N. Nambiar
Music by
S. M. Subbaiah Naidu
Cinematography
W. R. Subba Rao
U. Krishnan
Edited by
D. Durairaj
Production
company
Jupiter Pictures
Distributed by
Jupiter Pictures
Release date
11 April 1947[1]
Running time
134 mins
Country
India Male cast
M. G. Ramachandran as Sukumar
T. S. Balaiah as Aalahalan
M. R. Swaminathan as Evil Sorcerer
S. V. Subbaiah as King
M. N. Nambiar as Bahu
Pulimoottai Ramasami as Sorcerer's Diciple
M. E. Madhavan as Boat sailor
Narayana Pillai
Female cast
K. Malathi as Princess Mallika
K. Thavamani Devi as Visha, Queen of an island
M. Sivabhagyam as Bahani
M. M. Radha Bai as Queen
C. K. Saraswathi as Anjalai
R. Malathi
Vaazhvom Vaazhvom 02:12
2 Kannara Kaanpadhenro M. M. Mariyappa 02:09
3 Maaran Avadhaaram 03:15
4 Maamayilena Nadamaaduraal 03:06
5 Neyramithe Nalla .. Sukumaaran 02:13
6 Paampaatti Chiththanaye 02:59
7 Paattil Enna Solven Paangi 03:27
8 Thirumuga Ezhilai Thirudi Kondathu M. M. Mariyappa & .. 02;53....... Thanks...
-
Jupiter Pictures partner Somu asked A. S. A. Sami to create a screenplay that he himself could direct with artistes on the payroll of the company. However, when he read Sami's screenplay, he suggested that P. U. Chinnappa and T. R. Rajakumari, who were in the forefront at that time, play the lead roles. But Sami requested Somu to stick to the original decision. M. G. Ramachandran was on Jupiter's payroll. His looks were handsome and he had an athletic body. Also, the Siva-Parvathi dance he performed with K. Malathi in Jupiter's 1946 production Sri Murugan was impressive. MGR and Malathi were asked to play the lead roles. After more than half the film was shot, the company's other partner S. K. Mohideen felt the project be abandoned. Somu weighed the consequences in the light of future career of Sami and MGR. He told his partner that a decision could be taken on completion of the film.[2...... Thanks.........
-
Rajakumari" was MGR's 15th film and first film as leading actor. Director of this film, ASA Samy arranged a wrestler called Kamaludeen to participate in a fight sequence for the film. But MGR insisted to have Sandow M. M. A. Chinnappa Thevar who had been acting in small roles to do the role. At first director was not interested to have him in the film, but later agreed.[3] K. Thavamani Devi who was a talented dancer and singer played the role of a vamp. At one point she came for shooting wearing a dress with a plunging neckline (something unseen those days). It caused ripples on the set.[2]....... Thanks...
-
"Rajakumari" turned out to be a commercial success with huge profits. In 2008, film historian Randor Guy said it would be "Remembered for: the debut of M. G. Ramachandran as hero and A. S. A. Sami as director.[2]... Thanks.........
-
"ராஜகுமாரி", சென்னை ஸ்டார் கிரௌன் மற்றும் ஒரு அரங்கு மதுரை சிந்தாமணி திருச்சி வெலிங்டன் சேலம் ஓரியண்டல் கோவை ராஜா ஆகிய திரையரங்குகளில் 100நாட்களை கடந்து ஓடியது.......... Thanks.........
-
நேர்மையே உன் பெயர்தான் மொரார்ஜியோ!:::
இன்றைக்கு மொரார்ஜி தேசாயின் நினைவு நாள்!
ஒரு மாமனிதரை நினைவு கூர வாய்ப்பளித்த கொரோனாவுக்கு நன்றி!
தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஆளுமை என்பதுதான் ஆராய்ச்சியாளர்கள் தேசாய்க்கு தரும் அடைமொழி!
தேசாயையெல்லாம் அரசியல்வாதி என்று அரசியல்வாதிகளே ஒப்புக்கொள்வதில்லை!
இம்மியும் பிசகாத நேர்மை, வெறி பிடித்த தேசப்பற்று, லஞ்சம்ஊழல் என்றால் கொலைவெறி, வாரிசு அரசியலில் உடன்பாடின்மை என இலக்கணமாக வாழ்ந்த மனிதர்!
வழக்கம் போல் தனிமனித துவேசத்தையே ஆயுதமாக்கி, தங்களை வளர்த்துக்கொண்ட தமிழக தலைவர்கள் மொரார்ஜியையும் விட்டு வைக்கவில்லை!
மொரார்ஜி இந்தி வெறியர், மொரார்ஜி வட மாநிலங்கள் ஆதரவாளர் என்பதாக சொல்லி சொல்லி தமிழக மக்களிடம் மொரார்ஜியை வில்லனாக்கி விட்டார்கள்!
மொரார்ஜி இந்தியாவுக்கு ஒரு பொது மொழி தேவை, அது இந்தியாக இருக்கலாம் என்றவர்!
மொரரார்ஜி பிரதமராகயிருந்த போதுதான் எம்ஜிஆர் முதல்வர்!
மொரார்ஜியின் காலத்தில்தான் அதற்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் எப்போதும் ஒதுக்கியிராத நிதி ஒதுக்கீடு தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டது என்பது வரலாறு!
மொரார்ஜியின் காலத்தில் மத்தியில் சிவில் சப்ளைசில் செக்ரடரியாகயிருந்த ராகவன் I.A.S தனது "நேரு முதல் இந்திரா வரை"சுயசரிதத்தில் இப்படி எழுதுகிறார்!
"எம்ஜிஆர் முதல்வராகயிருந்த போது அவரே உணவு அமைச்சர் ராம்நாயக் கேபினுக்கு வருவார்! பொதுவாக அமைச்சர்களும் செக்ரட்டரிகளும்தான் வருவார்கள்! எம்ஜிஆர் ஈகோ பார்க்காமல் அவரே வருவார்! ரேசன் மாதக்கோட்டாவை மூன்று மடங்காக உயர்த்திக்கேட்பார்! தமிழகத்தில் ஐயாயிரமாக இருந்த ரேசன் கடைகளை அவர்தான் இருபதாயிரம் ஆக்கியிருந்தார்! முதலில் மறுக்கும் உணவு அமைச்சர் பிறகு ஒப்புதல் தந்து விடுவார்! எம்ஜிஆர் போனதும் எங்களிடம் "என்ன செய்வது? அவர் பிரதமரின் செல்லப்பிள்ளை" என்பார்! தமிழக செக்டார் என்ற முறையில் எனக்கு பெருமையாக இருக்கும்"
எம்ஜிஆருமே மொரார்ஜியுடனான தன் சந்திப்பை இப்படி எழுதுகிறார் "முதல்வரானதும் மரியாதை நிமித்தமாக பிரதமரை பார்க்கப்போனேன்! அதற்கு முன் ஓரிரு முறை பார்த்திருந்தாலும் பேசியதில்லை! மொரார்ஜி வட இந்திய ஆதரவாளர், சினிமாவை வெறுப்பவர், திமுக கூட்டணியில் இருப்பவர் என்ற அச்சம் என்னுள் இருந்தது! எப்படி நடத்துவாரோ என பயந்தேன்! மாறாக பிரதமர் என் கரங்களை இறுக பிடித்தபடி "ராமச்சந்திரன் நீங்கள் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் மது குடிக்க மாட்டீர்களாமே? தமிழ்நாட்டில் தீவிரமாக மது விலக்கை அமுல்படுத்த சட்டம் போட்டிருக்கிறீர்களாமே? பாராட்டுகள்" என்பதாக மகிழ்வோடு பேச ஆரம்பித்து விட்டார்! அவர் பிரதமராகயிருந்த வரை எந்த அப்பாயின்ட்மென்டுமே இல்லாமல் அவரை சந்திக்க அனுமதி அளித்தார்!"
மொரார்ஜி ஒன்றுபட்ட மஹராஷ்டிரத்தின் முதல்வராகயிருந்த போது நடந்த சம்பவம் சோகத்தின், நேர்மையின் உச்சம்!
தாயில்லாத மொரார்ஜியின் மகள் பியூசி தேர்வு எழுதியிருந்தார்! மெடிக்கல் சீட்டுக்கு இரண்டு மதிப்பெண் குறைந்து ரிசல்ட் வந்தது!
மகள் மதிப்பெண்ணில் ஏதோ தவறிருக்கிறது, மறு கூட்டலுக்கு பணம் கட்டுகிறேன் அனுமதி தாருங்கள் அப்பா என்று மொரார்ஜியிடம் கேட்டார்!
வாஞ்சையாக மகளின் தலையை நீவி விட்டு மொரார்ஜி "அம்மா நீ இப்போது முதல்வரின் மகள்! மறு கூட்டலில் நியாயமாகவே உனக்கு மதிப்பெண்கள் கிடைத்தாலும் முதல் அமைச்சராக நான் மிரட்டியே வாங்கியதாக ஊர் உலகம் சொல்லும்! சிரமம் பார்க்காமல் இன்னொரு வருடம் படித்து மெடிக்கலுக்கு தேர்வாகிக்கொள்!"
மனமுடைந்தப்பெண் தூக்கமாத்திரைகளை அதிகமாகக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதும், கதறித்துடித்த மொரார்ஜி "இது என் நேர்மைக்கு கிடைத்த பரிசு" என்றதும் சரித்திரம்!
அப்படிப்பட்ட மொரார்ஜி பிரதமராகயிருந்த போது அவரது மகன் பணி புரிந்த இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு சலுகைக்காட்டினார் என காங்கிரசும் அவரது கட்சியிலேயே இருந்த சரண்சிங் ஆதரவாளர்களும் பாராளுமன்றத்திலேயே அபாண்டமாக குற்றம் சுமத்தினார்கள்!
மொரார்ஜி பாராளுமன்றத்தை விட்டு வெளியே போய் பேசுங்கள், அப்போதுதான் வழக்கு போட முடியும், பேசுங்கள் என்று சொல்லிப்பார்த்தார்!
சட்டசபையிலும் பார்லியுலும் எதை வேண்டுமானாலும் பேசலாம்!
இருந்தும் பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு புகார் அனுப்பப்பட்டது, கோர்ட்டில் பொது நல வழக்கும் நடந்தது!
உண்மை இருந்தால்தானே நிரூபிக்க!
அதிருப்தியாளர்களுக்கு மந்திரிப்பதவியும், எம்பிக்களுக்கு நன்கொடையும் கொடுக்க மறுத்ததால் நேர்மையாளர் மொரார்ஜி பிரதமர் பதவியிலிருந்து விலக்கப்பட்டார்!
இந்தியாவின் உயரிய விருதான பாரதரத்னா விருதும், பாகிஸ்தானின் உயரிய விருதான நிசான்- இ - பாகிஸ்தான் விருதும் வழங்கப்பட்ட ஒரே இந்தியர் மொரார்ஜிதான்!
முன்னாள் பிரதமர் என்ற முறையில் அரசு வழங்கிய குடியிருப்பு, சலுகைகள் அத்தனையும் மறுத்தவர் மொரார்ஜி!
அவர் சொன்ன காரணம்தான் மெய்சிலிர்க்க வைக்கும்! "நான் தேசத்தின் குடிமகனாக என் கடமைகளை செய்தேன்! அந்திமக்காலத்தில் அதற்கான சலுகைகளைக்கொடுத்து என்னையும் கையூட்டு பெற்றவனாக சாகடித்து விடாதீர்கள்!"
மும்பையில், ஒரு வாடகை அடுக்குமாடி குடியிருப்பில், மிகச்சிறிதான அறையில் அவரது அந்திமக்காலமும், சாவும் நடந்தது!
ஜெய் ஹிந்த்!!!......... Thanks.........
-
-
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சந்தித்த*சவால்கள் - 1 yes tv*
------------------------------------------------------------------------------------------
1 yes tv யில் வியாழனன்று*(09/04/20) மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியில் திரு.இருகூர் இளவரசன் (எழுத்தாளர் ) அளித்த பேட்டியின்* விவரம் :
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த நம்நாடு படத்தை தயாரிப்பாளர் பி.நாகிரெட்டி பெரும் பொருட்செலவில் தயாரித்திருந்தார். விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் 1965ல் தயாரித்து வெளியிட்ட எங்க வீட்டு பிள்ளையின் இமாலய வெற்றி மற்றும் சாதனையை அடுத்து நாகிரெட்டி எம்.ஜி.ஆரை வைத்து 1969ல்* தயாரித்து தீபாவளி வெளியீடாக வெள்ளித்திரைக்கு வந்தது . நம்நாடு படமும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது .* நம்நாடு படத்தில் அரசியல் நெடியுடன் கூடிய வசனங்கள் பன்ச் வசனங்கள், மற்றும் ஊழல் பேர்வழிகள் நாட்டுக்கு செய்யும் தீமைகள் , மக்களுக்கு எதிரான திட்டங்கள் ,அன்றைய ஆட்சியின் அவலங்கள்*,ஆகியன* அடங்கிய காட்சிகள் ஏராளம் இருந்தன.
படத்தின் வெற்றியையும், மக்களின் வரவேற்பையும் நேரில் கண்டுகளிக்க எம்.ஜி.ஆரும் , நாகிரெட்டியும்* புரசைவாக்கத்தில் உள்ள ஒரு அரங்கிற்கு படம் ஆரம்பித்து நெடுநேரம் கழித்து , அரங்க மேலாளருக்கு மட்டும் வருகையை தெரிவித்து ரசிகர்களுக்கு தெரியாமல் கதவை திறந்து ஓரமாக நின்று பார்வையிட்டனர் . ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்கள், பொதுமக்கள் ஆரவாரம், வரவேற்பு, கைதட்டல்கள் ஆகியவற்றை கண்டு மெய்சிலிர்த்தனர் . நம்நாடு படத்தின் வரவேற்பு, வெற்றியை நேரில் கண்டு* ரசித்ததும் ரசிகர்களுக்கு தெரியாமல் பின்பு வெளியேறினார்கள் .* பின்னர் எம்.ஜி.ஆர். நாகிரெட்டியிடம்*பிற்காலத்தில் ஒருவேளை நான் அரசியல் உலகில் களமிறங்க நேரிட்டால்**இதுவே பிள்ளையார் சுழியாக இருக்கும். எனக்கு இருந்த சந்தேகங்கள்* தீர்ந்தன .என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.* பதிலுக்கு நாகிரெட்டி நீங்கள் எந்த துறையில் போட்டியிட்டாலும், ஈடுபட்டாலும், அந்த துறையின் சிகரத்திற்கு*சென்றடைவது திண்ணம் .* உங்களது கடந்த கால வாழ்க்கையின் வெற்றியே அதற்கு சிறந்த உதாரணம் .* சினிமா வாழ்க்கையில் சிகரத்தை அடைந்தாற்போல*அரசியல் வாழ்க்கையிலும் இமயத்தின் உச்சிக்கு செல்ல எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்*
நாடக துறையில் ஓரளவு அனுபவம் பெற்ற எம்.ஜி.ஆர். தனது 20 வயதில் சினிமா துறையில் அடியெடுத்து வைக்க நல்ல தருணம் பார்த்து வாய்ப்புகளை தேடினார் .அப்போது வால் டாக்ஸ் சாலையில் உள்ள ஒற்றை வாடை கொட்டகை அருகில்*(யானை கவுனி அருகில் ) வாடகை வீட்டில் எம்.ஜி.ஆர். வசித்து வந்தபோது*எம்.ஜி.ஆரின் தாயார் தங்கமணி என்ற பெண்ணை எம்.ஜி.ஆருக்கு திருமணம் செய்து வைத்தார் .* சினிமா வாய்ப்புகள் தேடி வந்த போது, போதிய வருமானம் இல்லாததால் , பெண் வீட்டார் சில காலம் தங்கமணியை கேரளாவில் பாலக்காடு அருகில் உள்ள ஊரில் தங்களுடன் தங்குவதற்கு அழைத்து சென்றனர் .* சில காலம் கழித்து திடீரென நோய்வாய்ப்பட்டு தங்கமணி* இறந்து போனார் .* * தகவல் அறிந்து எம்.ஜி.ஆர். பாலக்காடு சென்று இறுதி அஞ்சலி கண்ணீருடன் செலுத்தினார் . பெண் வீட்டார்* ஈம சடங்குகள் ஆனதும் , சம்பிரதாயப்படி*வேட்டி , சட்டை , துண்டு , ஆகியன 2 செட்* கொடுத்தனுப்பினர் . பதிலுக்கு எம்.ஜி.ஆரின் தாயார் வீடு சார்பில் பெண் வீட்டாருக்கு மரியாதைகள் செய்யப்பட்டது .**
எம்.ஜி.ஆர். இரவு வேளையில் தானே துணிகளை துவைத்து, காய்ந்ததும் ,காலையில் எழுந்து ஒரு பித்தளை சொம்பில் கரிகள் போட்டு நெருப்பு வைத்து*துணிகளை இஸ்திரி போடுவார் .* காலை சிற்றுண்டி முடிந்ததும் , நடந்தே ,கீழ்ப்பாக்கத்தில் உள்ள நியூடோன் ஸ்டூடியோ சென்று சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்பார் .* அவர்கள் வாய்ப்பு இருந்தால் தருகிறோம் , அழைக்கிறோம் என்பார்கள்* அங்கிருந்து சில சமயம் பேருந்தில் அல்லது நடந்தே வடபழனியில் உள்ள கோல்டன் ஸ்டூடியோ செல்வார் . அங்கும் வாய்ப்பு கேட்டு காத்திருப்பார் .ஒரு சமயம் மதுரை பாய்ஸ் கம்பெனியில் நாடகத்தில் நடித்த நடிகர் ஒருவர் தாடியுடன் தென்படவே நலம் விசாரித்தார் .* அவர் வாய்ப்புகள் தேடி மிகவும் சோர்ந்து இருந்தார் .* இறுதியில் சாப்பீட்டீர்களா என்று எம்.ஜி.ஆர். கேட்க, அவர்*தலை குனிந்தவாறு இருக்க, சூழ்நிலையை* புரிந்து கொண்டு , அவருக்கு தனது சட்டையில் இருந்து ரூ3/-* எடுத்து கொடுத்தார் . காலை சிற்றுண்டி, மற்றும் பேருந்து கட்டணம் செலவு ரூ.3/- போக கைவசம் இருந்த ரூ.7;ல் இருந்து தானம் செய்துள்ளார்.* எம்.ஜி.ஆருக்கே* நிரந்தர வாய்ப்புகள் கிடையாது . இன்றைக்கு வருமானம் வருமா தெரியாது . நாளைக்கு என்ன வருமானம் இருக்கும் என்பது தெரியாது . இந்த நிலையில் அடுத்தவருக்கு உதவும் மனப்பான்மை, அடுத்தவர்*பசிப்பிணி போக்கும் தன்மை ஆகிய குணங்கள் அப்போதிருந்தே இருந்துள்ளது .இன்றைய உலகத்தில் கையில் ரூ.100/- இருந்தாலும், ரூ.1,000/- இருந்தாலும் எவ்வளவு பேருக்கு அடுத்தவருக்கு உதவும் மனப்பான்மையோ* , தர்ம சிந்தனையோ* இருக்கும் யோசித்து பாருங்கள் .* இந்த நற்குணங்கள் தான் மக்கள் மனதில் எம்.ஜி.ஆருக்கு நிலையான புகழை , இடத்தைக் கொடுத்தது . அவர் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தில் யார் வந்தாலும் பசியோடு திரும்பி சென்ற வரலாறில்லை .* தன்* வாழ்நாள் முழுவதும் அதை ஒரு கொள்கையாகவே எம்.ஜி.ஆர். கடைபிடித்தார். நடிகர் சோ ஒரு முறை பேட்டியில் வீட்டில் உலை வைத்துவிட்டு அரிசிக்காக ஒருவரை தேடி செல்வதாக இருந்தால் நிச்சயம் அது எம்.ஜி.ஆர். வீடாகத்தான் இருக்கும் என்று கூறியுள்ளார் . அதனால் தான்*வாழ்ந்தவர்கள் கோடி , மறைந்தவர்கள் கோடி, மக்கள் மனதில் என்றும் நிற்பவர் எம்.ஜி.ஆர். என்று சொல்கிறார்கள் . இந்த வரிகள் அவரது மன்னாதி மன்னன் படத்திலும் இடம் பெற்றுள்ளது .
-
என்றென்றும் கவிஞர் கண்ணதாசன் - ராஜ்*டிவி*
----------------------------------------------------------------------------
ராஜ் டிவியில் வியாழனன்று*(09/04/20) மாலை 5.30 மணி முதல்* 6 மணி வரையில்* என்றென்றும் கவிஞர் கண்ணதாசன் என்கிற தலைப்பில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் அவர் வசனம் எழுதிய , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்து இயக்கிய நாடோடி மன்னன் பற்றிய சில தகவல்கள் வெளியான விவரம் :
நாடோடி மன்னன் படத்தை எம்.ஜி.ஆர். பிக்ச்சர்ஸ் நிறுவனம் 1958ல் தயாரித்தது .மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்து , சிறப்பாக இயக்கி இருந்தார் .பெரும் பொருட்செலவில் , தனது சொத்துக்களை எல்லாம் அடகு வைத்து , இந்த படம் வெளியாகி வெற்றி பெற்றால் நான் மன்னன் , தோல்வியுற்றால் நான் நாடோடி என்று எம்.ஜி.ஆர். குறிப்பிட்டு இருந்தார் . படத்தில் பானுமதி, எம்.என். ராஜம், பி.சரோஜாதேவி என மூன்று கதாநாயகிகள் .* இரண்டு வில்லன்களாக , வீரப்பாவும், நம்பியாரும் , நடித்திருந்தனர் . எம்.ஜி.ஆர். அண்ணன் திரு. சக்கரபாணி துணை வேடத்தில் நடித்திருந்தார் .* வசனம்* கவிஞர் கண்ணதாசன்* இசையமைப்பு எஸ்.எம். சுப்பையா நாயுடு . இயக்கம் எம்.ஜி.ஆர். 1958ல் வெளியான நாடோடி மன்னன் சிறப்பான வெற்றி பெற்று அதுவரை வெளியான படங்களின் வசூலை தவிடு பொடியாக்கி இமாலய சாதனை பெற்றது .* 1958ம் ஆண்டின் சிறந்த படம் , சிறந்த இயக்குனர் எம்.ஜி.ஆர். என* பரிசுகள்* பெற்றது . அந்த ஆண்டில் வசூல் சாதனையில் முதலிடம் .* இந்த படத்தின் வெற்றிக்கு மதுரை தமுக்கம் மைதானத்தில் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் , பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் எம்.ஜி.ஆருக்கு 110 சவரனில் தங்கவாள் பரிசு அளிக்கப்பட்டது* * அந்த வாளை ,எம்.ஜி.ஆர். அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக சென்று வந்த பின்னர் உடல் நலம் தேறியதும் , மூகாம்பிகை அம்மனுக்கு தானமாக அளித்துவிட்டார் .
நாடோடி மன்னன் திரைப்படம் இதுவரை வெளிவந்த தமிழ் படங்களிலேயே மிகவும் நீளமான படம் .அதாவது கிட்டத்தட்ட 4மணி நேரம் திரையில் ஓடும் .புதிய கதாநாயகியாக பி.சரோஜாதேவியை எம்.ஜி.ஆர். படத்தின் இறுதி பகுதியில் வண்ணத்தில் ( கோவா கலர் ) அறிமுகப்படுத்தினார் .* சரோஜாதேவி அதற்கு பின் எம்.ஜி.ஆருடன் 26 படங்களில் கதாயாகியாக நடித்துள்ளார் .* நாடோடி மன்னன் அளித்த அறிமுகம் காரணமாக நட்சத்திர கதாநாயாகியாக உருவெடுத்தார் .இதை பல சமயங்களில் சரோஜாதேவி எம்.ஜி.ஆருக்கு நன்றி செலுத்தும் வகையில் தெரிவித்துள்ளார் .1958 லேயே* , சினிமாத்துறை முன்னேறாத காலத்திலேயே* மிகவும் நவீன உத்திகளுடன் அப்போதைய தொழில்நுடபத்துடன் காட்சிகள் அமைத்து , மிக சிறப்பாக தனது சொந்த படத்தை வடிவமைத்தார் எம்.ஜி.ஆர்.* ஒரு காட்சியில் இரண்டு எம்.ஜி.ஆர்களும் இணைந்து கை கொடுக்கும் காட்சி* இதற்கு உதாரணம் .**
அந்த காலத்தில் தி. மு.க. கட்சியின் சின்னம் , அடையாளம் ஆகியவற்றை பல சர்ச்சைகளுக்கு நடுவே , நீதிமன்றத்தில் போராடி எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தினார்* *தமிழின் பெருமையை உணர்த்தும் வகையில்* செந்தமிழே வணக்கம் என்ற பாடல் , உழைப்பின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் என்ற பாடல் ,*முற்போக்கு சிந்தனையுடன் கூடிய சமுதாய கருத்துக்கள் அடங்கிய பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின்* தூங்காகே தம்பி தூங்காதே* என்ற பாடல் ,தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஆறு மொழி பாடல் , மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் , காடு வெலெஞ்சென்ன* மச்சான்* என்ற பாடல்*காதல் கனிரசமான* சம்மதமா,* கண்ணில் வந்து மின்னல் போல் ஆகிய பாடல்கள்* நகைச்சுவைக்கு தடுக்காதே என்கிற சந்திரபாபுவின் பாடல்* பாடுபட்டா தன்னாலே , பலனிருக்குது கைமேலே என்கிற தத்துவ பாடல் ஆகியன படத்திற்கு பலம் சேர்த்தன* .
சண்டை காட்சிகள் , புதுமையாகவும், திரில்லிங்காகவும், இருந்தன .* வீரப்பா, மற்றும் நம்பியாருடன் மோதும் வாள் வீச்சு சண்டை காட்சிகள்* அபாரம் .ஹாலிவுட் படங்களுக்கு நிகராக சண்டை காட்சிகளில் கண்ணாடி விளக்குகள், கண்ணாடிகள் உடைந்து சுக்கு நூறாவது போன்ற காட்சிகள் மிகுந்த சிரத்தையுடன் படமாக்கியுள்ளனர் .* எம்.ஜி.ஆரின்* சிறப்பான இயக்கத்தில் விறுவிறுப்பான காட்சிகள் , சுறுசுறுப்பான திருப்பங்கள் கொண்ட படமாக அமைந்தது . எம்.ஜி.ஆர். தனது ரசிகர்கள், பொதுமக்களின் எதிர்பார்ப்பிற்கு தகுந்த வகையில் இருக்கையை விட்டு அகலாதவாறு* திறம்பட இயக்கி உன்னதமான படத்தை தயாரித்து வெளியிட்டு அனைவரின் பாராட்டை பெற்றார் .
நாடோடி மன்னன் படத்தை 10க்கு மேற்பட்ட பத்திரிகைகள் சிறப்பு மலர் வெளியிட்டு புகழ்மாலை சூட்டின ,கவிஞர் கண்ணதாசன் , அந்த காலத்திற்கு ஏற்றாற்போல அரசியல் பன்ச் வசனங்கள், , காதல், வீரம், அன்பு, தாய்மை, பாசம்,*மக்கள் நலம் , நகைச்சுவை, மன்னராட்சியின் அவலங்கள், மக்களாட்சியின் தத்துவங்கள் ஆகியவற்றை மக்களுக்கு எளிதில் உணர்த்தும் வகையில் மிக சிறப்பாக எழுதியிருந்தார் .* திரைப்படத்தின் நடுவே, பானுமதி இறக்கும் காட்சியை சிம்பாலிக்காக ஒரு ஆண் மான் நிற்க , பெண் மான் அம்பால் வீழ்த்தப்பட்டு இறந்து கிடக்கும் காட்சி , சிறந்த இயக்குனர் எம்.ஜி.ஆர். என்ற*பாராட்டும் , கைத்தட்டல்களும்* பெற செய்தது .**
-
புரட்சிதலைவர் ஆட்சி காலத்தில் அவரின் துணிச்சல் தன்மையும் அதே நேரம் ரத்தத்தில் ஊறிய மனிதாபிமானம் குறித்த இரு செய்திகள் இன்று.
1981 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு பெரும் ஜாதி கலவரம் உருவானது...
வழி விடும் முருகன் கோவில் திருவிழாவில் மூண்ட கலவரம் அடங்காமல் யார் யாரோ பேச்சுவார்த்தை நடத்தியும் அடங்கவில்லை.
முதல்வர் அங்கு போக முனைந்த போது வேண்டாம் என்று தடுத்து விட்டனர் உயர் அதிகாரிகள்.
தீயசக்தி மறைமுக தூண்டுதல் ஒருபுறம் நடக்க துப்பாக்கி சூட்டில் 4 நபர்கள் பலி ஆனார்கள்...கலவரம் நின்றபாடு இல்லை.
இனி பொறுப்பதில்லை என்ற முதல்வர் எம்ஜியார் யார் தடுத்தும் கேட்காமல் திடீர் என்று விமானம் மூலம் மதுரை சென்று அங்கு இருந்து காரில் ராமநாதபுரம் நோக்கி சென்றார்..
உயரதிகாரிகள் , காவல்துறையினர் தடுத்தும் பலன் இல்லை....தலைவர் யோசனை படி சில கட்சி முக்கிய நிர்வாகிகள் கலவரத்தில் ஈடுபட்ட முக்கிய ஜாதி தலைவர்கள் உடன் பேச ஏற்பாடு செய்து இருந்தனர்...இந்த விவரம் அரசு சார்ந்த சில அதிகாரிகளுக்கு தெரியாது.
ராமநாதபுரம் சென்ற தலைவர் நேராக கோட்டாட்சியர் அலுவலகம் சென்று அந்த கோட்டாட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரையும் உடனே பணி இட மாற்றம் செய்தார்.
பிற மாவட்ட காவல்துறை சார்ந்தவர் உடனே வரவழைக்க பட்டனர்.
ஒரு பிரிவின் தலைவர் கூரியூர் வக்கீல் கோவிந்தன், மற்றும் அடுத்த பிரிவை சேர்ந்த மொடலூர் நிலக்கிழார் துரை சிங்கம் மற்றும் முனியாண்டி ஆகியோருடன் தனி தனியாக பேச்சு வார்த்தை நடத்த.
ஒரு கட்டத்தில் இழுபறி ஏற்பட பின்னர் அனைவரையும் வெளியே போக சொல்லி விட்டு அவர்களிடம் என்ன சொன்னார் என்று தெரியவில்லை.
வெளியே வரும் போது முகம் வெளுத்து மகுடிக்கு மயங்கிய நாகம் போல இரு தரப்பு தலைவர்களும் வெளியே வந்தனர்.
18 நாட்கள் மகாபாரத போர் போல நடை பெற்ற அந்த ஜாதி யுத்தம் அந்த நிமிடம் முதல் முடிந்து சகஜ நிலை திரும்பியது.
அது தான் எம்ஜியார் வைத்தியம்....தீயசக்தி அரண்டு போனது...
ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு ஒரு பகுதியில் தீப்பிடித்து எரியும் போது துணிச்சல் ஆக எதிர் கொண்டு அரை மணி நேரத்தில் அதை முடிவுக்கு கொண்டு வந்த முதல் முதலமைச்சர் நம்ம தலைவரே...
என்ன வைத்தியம் தெரியவில்லை...ஆனால் கொடிய ஜாதி நோய் உடனே முடிவுக்கு வந்தது.
கண்டிப்பு முடிந்து இனி கருணை நிகழ்வு..
1983 டிசம்பர் மாதம் கஜா புயல் போல பெரு மழை வெள்ளம் தஞ்சை புதுக்கோட்டை மாவட்டங்களில்... சேதம் மிக அதிகம்...
பார்வையிட மக்கள் முதல்வர் புறப்பட்டு பார்வையிட்டு வர மதியம் உணவுக்கு அறந்தாங்கி அரசினர் விடுதியில் உணவு எல்லோருக்கும்...அது சின்ன இடம்.
முதல்வர் உடன் வந்த அரசு அதிகாரிகள், காவல் துறையினர், மற்றும் கட்சியினர் கூட்டம் அதிகம்.
தலைவர் சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு அடுத்த பகுதி பார்க்கும் அவசரத்தில் வெளியே வர காலை முதல் சுற்றிய பலர் சாப்பிடாமல் மீண்டுமா என்று யோசிக்க காரில் ஏற வந்த முதல்வர் இடம்.
அப்போது அமைச்சர் ஆக இருந்த திருச்சி சவுந்திரராஜன் தலைவர் காதில் போய் மற்றவர் நிலை சொல்ல உடனே திரும்பி அறைக்குள் சென்றார்.
முக்கால் மணி நேரம் கழித்து வெளியே வந்த நம் தலைவர் காரில் எற போக திடீர் என்று முன்னால் நோக்கி நடக்க அனைவரும் விவரம் தெரியாமல் பர பரக்க.
பைலட் போலீஸ் கார் அருகில் வந்து நின்ற முதல்வர் அந்த காரில் இருந்த போலீஸ் ஓட்டுனரை சைகையால் அழைக்க
பயந்து கொண்டு வந்த காவலரிடம் இங்கே வாங்க நல்ல சாப்பிடீங்களா என்று கேட்க அவர் நடுங்கிய படி ஆமாம் ஐயா என்று சொல்ல.
கிட்டே வாருங்கள் என்று அவரை அழைத்து அவர் வலது கையை எடுத்து தன் மூக்கின் அருகில் கொண்டு சென்று முகர்ந்து பார்த்து ஆமாம் சாப்பிட வாசம் வருகிறது என்று சொல்லி.
திரும்பி தன் முதல்வர் வாகனம் நோக்கி திரும்பி மக்களை சந்திக்க புறப்பட்டார் நம் சரித்திர நாயகன் எம்ஜியார்.
ஒரு மாநிலத்தின் முதல்வர் தனக்கு கீழே பணியாற்றும் எவரும் பசியுடன் இருக்க கூடாது என்பதில் அவரை போல இனி ஒருவரை இந்த உலகம் காண்பது சந்தேகமே.
முதன்முதலாக அரசு துறை ஓட்டுனர்களுக்கு உணவு படி என்ற திட்டத்தை இந்தியாவில் கொண்டு வந்த முதல் முதல்வர் நம் முதல்வரே.
அதன் பின்னரே மற்ற இந்திய மாநிலங்கள் இந்த சட்டத்தை தத்தம் மாநிலங்களில் கொண்டு வந்தன.
வீரமும், நெஞ்சில் ஈரமும் கொண்ட பொன்மனசெம்மல் புகழ் என்றும் காப்போம்.
வாழ்க எம்ஜியார் புகழ்..
Courtesy: Nellaimani Aiadmk......... Thanks.........
-
ஜூனியர்*விகடன்* வார இதழ் -12/04/20
-----------------------------------------------------------------
ரஜினி ஏன் முதல்வராக விரும்பவில்லை ?
------------------------------------------------------------------
வரி பாக்கி செலுத்த வேண்டும் .* சினிமாவில் நடிக்க அனுமதி தாருங்கள் என்று முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு கடிதம் எழுதினர் .42* ஆண்டுகளுக்கு முன்பு இதே ஏப்ரல் மாதம் நடந்த விஷயம் இது .
அ . தி .மு.க வை தொடங்கிய பிறகு 1977 ம் ஆண்டு தேர்தலில் வென்று முதன்முறையாக முதல்வரானார் எம்.ஜி.ஆர். தேர்தல் முடிவுகள் வெளியாகி 15 நாட்கள்* கழித்துதான் முதல்வராக பதவி ஏற்றார் .* காரணம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படப்பிடிப்பு மீதம் இருந்தது .* முதல்வராக ஆன பின்பு* நடிக்க முடியாது* என நினைத்ததால் என்னவோ இந்த ஏற்பாட்டை செய்தார் .**
ஆட்சியில் அமர்ந்த பிறகு எம்.ஜி.ஆருக்கு சினிமா மோகம் குறையவில்லை .எம்.ஜி.ஆருக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் எம்.ஜி.ஆர். கோப்புகளில் கையெழுத்திடும் எளிமையான பணியில் அமர்ந்து விட்டார் என சொல்ல , சினிமாவில் நடிக்க ஆசை உண்டு , 15 நாள் முதல்வராகவும் , 15 நாள் நடிகராகவும் இருக்கப் போகிறேன்* என அதே மேடையில் பதில் சொன்னார் எம்.ஜி.ஆர்.* அதன் பிறகு பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் , நடிப்பை விட்டு விட போவதில்லை , இரண்டு பொறுப்புகளையும் என்னால் சமாளிக்க முடியும் என்று கூறியிருந்தார் .**
1978ம் வருடம் பிப்ரவரி 11ம்* தேதி* நெல்லை பாளையங்கோட்டை அரசு விழாவில் பேசிய எம்.ஜி.ஆர். , மேற்கு வங்காள* முதல்வர் பி.சி.ராய்* ஒரே நேரத்தில் டாக்டராகவும், முதல்வராகவும் செயல்பட்டார் .* அதே போல் என்னாலும் நடித்துக் கொண்டே முதல்வர் பணியையும் செய்ய முடியும் . அதனால் மீண்டும் சினிமாவில் நடிக்கப் போகிறேன் என்றதும் கூட்டம் ஆர்ப்பரித்தது .
விஷயம் பிரதமர் மொரார்ஜியின் கவனத்திற்கு சென்றது . சினிமாவில் நடிப்பது , முதல்வர்* பதவிக்கு கண்ணியம் சேர்க்காது என்றார் . சினிமாவில் நடிக்க முடிவான நிலையில் , பிரதமரின் கருத்தை அலட்சியம் செய்ய வேண்டாம் என எண்ணி மொரார்ஜிக்கு கடிதம் எழுதினர் எம்.ஜி.ஆர்.* முதல்வர் பதவிக்கு கிடைக்கும் சம்பளம் போதுமானதாக இல்லை . அதனால் அவகாசம் கிடைக்கும் நேரங்களில் பணம் சம்பாதிக்க திரைப்படங்களில் நடிக்க வேண்டியுள்ளது .* எனவே அனுமதி தாருங்கள் என கடிதத்தில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருந்தார் .
1978 ஏப்ரல் 2ம் தேதி* மொரார்ஜி தேசாயிடமிருந்து எம்ஜி.ஆருக்கு பதில் வந்தது .**சினிமாவில் நடிப்பது உங்கள் விருப்பம் .* அதற்கு பிரதமரின் அனுமதி தேவையில்லை .* முதல்வருக்கான கடமைகளுக்கு இடையூறு இல்லாமல் நடிப்பதில் எனக்கு ஆட் சேபனை* இல்லை என சொல்லியிருந்தார் .**
புதிய படவேலைகள் வேகமெடுத்தன .* கதாநாயகியாக லதா, இசை அமைப்பாளராக இளையராஜா, கதை வசனம் வாலி, இயக்கம் கே. சங்கர் ,தயாரிப்பு தர்மராஜ் என முடிவாகி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி , தொடக்க விழாவுக்கு தேதி குறித்தனர் .* படத்தின் பெயர் உன்னை விடமாட்டேன் .*பிரசாத் ஸ்டுடியோவில்* ஏப்ரல்**14ம் தேதி படத்தின்* தொடக்கவிழா , ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது , அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளியானது .சொந்த படமான இமயத்தின் உச்சியில் என்ற படத்தில் நடிக்க போகிறேன் என 1979 ஜனவரி 31ம் தேதி அறிவித்தார் எம்.ஜி.ஆர்.*
1978ம் ஆண்டு ஏப்ரல்*மாதம் பிரசாத்*ஸ்டுடியோவில் உன்னைவிட மாட்டேன்*படத்தின்*பூஜையின்போதும், தொடர்ந்து இசை ஞானி இளையராஜா*இன்னிசையில் டி.எம்.எஸ். பாட , படிக்கிறேன் இன்னும் படிக்கிறேன் என்ற பாடல் 9 வது* டேக்கில்*ஓ.கே. ஆனபோதும்* நான்(லோகநாதன் ) உடனிருந்து நேரில் கண்ட*காட்சி*பசுமையான நினைவுகள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பூஜைகள்*முடிந்ததும்*, பாடல் பதிவிட்டு*எனக்கு அனுப்புங்கள் என்று சொல்லிவிட்டு புறப்பட்டார் .அந்த பாடல் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பிடிக்காமல் போக பின்பு மலேசியா*வாசுதேவனை*வைத்து பின்னாளில் பாட வைத்து ஒலிப்பதிவு* செய்தார்கள் .* ஆனால் என்ன காரணமோ*தெரியவில்லை*, அதற்குப்பின் படப்பிடிப்பு தொடங்கவில்லை .எம்.ஜி.ஆர். அவர்களும்*முதல்வர் பணியில்*பிஸியாகிவிட்டார் .
உன்னைவிட மாட்டேன்*பிரச்னை*ஓய்ந்து*,மூன்று ஆண்டுகள்*கழித்து நடிகர்*ரஜினியின் திருமணம் 1981 பிப்ரவரி*26ம் தேதி திருப்பதியில் நடந்தது .அதற்கு*முன்தினம்*பத்திரிகையாளருக்கு அளித்த*பேட்டியில்*திருமணம் முடிந்ததும்*படப்பிடிப்பில்*கலந்து கொள்வேன்*. மனைவியை விட எனக்கு*சினிமா*தொழில் முக்கியம் என்று பேசியிருந்தார் . லதாவின் கரம் பிடிக்க எம்.ஜி.ஆரும் ஒரு காரணம்* என்று ரஜினி*குறிப்பிட்டார் .* எம்.ஜி.ஆர். சிபாரிசு*செய்ததால்தான் எனக்கு*லதாவை*திருமணம் செய்து வைக்க அவரின் குடும்பத்தினர் சம்மதித்தனர் .* என்று 2018 மார்ச்சில்*ஏ.சி.சண்முகம் அவர்களின்*எம்.ஜி.ஆர். கல்வி*நிறுவனத்தில் நடந்த*எம்.ஜி.ஆர். சிலை*திறப்பு விழாவில்*சொன்னார்*நடிகர்*ரஜினி .* அங்குதான்*அரசியலுக்கு யார்* வந்தாலும்*அவர் எம்.ஜி.ஆர். ஆக முடியாது*. அவர் ஒரு தெய்வப்பிறவி .* அவரைப்போல் ஒரு தலைவர் உருவாவது இனி கடினம் . சாமான்ய*மக்களுக்கு*எம்.ஜி.ஆர். அளித்த ஆட்சியை என்னால் ஆட்சிக்கு வந்தால் தர முடியும் என்றும் ரஜினி*பேசி இருந்தார்*.
இப்போது பிரச்னைக்கு வருவோம் .* எம்.ஜி.ஆர். ஆட்சியை என்னாலும் கொடுக்க முடியும்*என்று 2018ல்**பேசிய ரஜினி* , இப்போது , கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என்கிறார் .* முதல்வர் ஆவதற்கு விருப்பமில்லை .அதை நினைத்துப் பார்க்கவே முடியாது*.* நான் கட்சி தலைவராகத்தான் இருப்பேன்*. ஒரு நல்லவரை*ஆட்சியில் அமர வைப்பேன்*என்றும் கூறியிருக்கிறார் . முதல்வர் பதவியில்*அமர்ந்தால்* நடிக்க முடியாது என தீர்க்கமாக ரஜினி*நம்புகிறார் . முதல்வரானபின் எம்.ஜி.ஆர். மீண்டும் நடிக்க முடியாமல் போனது .* ஆந்திராவில் என்.டி.ராமாராவ் கூட*முதல்வரானதும் ஒரு படத்தில்*நடித்தார்*அதன்பின் நடிக்க முடியாமல் போனது* ஆட்சியில் இருந்து கொண்டு , சினிமாவில் நடிக்க முடியாது என்பது முன்னவர்களின் கடந்த கால வரலாறு .* இதையெல்லாம் மனதில் வைத்துதான்*முதல்வர் ஆவதை நினைத்து பார்க்க வே முடியாது*. கட்சி தலைவராக மட்டுமே இருப்பேன் என்று அழுத்தமாக சொல்கிறார் போலும் .**
எம்.ஜி.ஆர். சிபாரிசில் லதாவின் கரம் பிடித்த*நடிகர் ரஜினி*,எம்.ஜி.ஆருக்கு* கிடைத்த*சினிமா*, அரசியல்* பாடங்களை வைத்து , புதிய அரசியல் அரிச்சுவடி எழுத*திட்டமிட்டுள்ளார் .* அதில்*வெற்றி பெறுவாரா*என்பதை*காலம்தான்*உணர்த்தும் .**
-
தனியார் தொலைக்காட்சிகளில் நடிக* பேரரசர்*எம்.ஜி.ஆர்.படங்கள் ஒளிபரப்பு .
---------------------------------------------------------------------------------------------------------------------------
09/04/20* *- மெகா 24 டிவி - இரவு 9 மணி* - குடும்ப தலைவன்*
10/04/20* - ஜெயா டிவி* - காலை 10 மணி* - ஆயிரத்தில் ஒருவன்*
* * * * * * * * * *மீனாட்சி டிவி - காலை 10.30 மணி - நல்ல நேரம்*
* * * * * * * *-சன் லைப்* - காலை 11 மணி* *- என் அண்ணன்*
* * * * * * * * ராஜ் டிவி* * - பிற்பகல்* 1.30 மணி* - அடிமைப்பெண்*
* * * * * * * * * ஜெயா* டிவி - பிற்பகல் 2 மணி* * *- குமரிக்கோட்டம்*
11/04/20* - முரசு டிவி* *- காலை 11 மணி* - நீதிக்கு பின் பாசம்*
* * * * * * * * * * முரசு டிவி* -இரவு* 7 மணி* * - நீதிக்கு பின் பாசம்*
* * * * * * * * * *ராஜ் டிவி* *- பிற்பகல் 1.30 மணி* - நாடோடி மன்னன்*
* * * * * * * *** * * *சன் லைப்* - மாலை 4 மணி* *- நீரும் நெருப்பும்*
12/04/20* * *ஜெயா மூவிஸ் - காலை 7 மணி - இதய வீணை** * * * * * * * **
-
மக்கள் திலகம் நடித்த "குமாரி ",11-04-1952 வெளியானது. திரையிசையில் திலகம் கே.வி.மகாதேவன் இசையமைத்த முதல் எம்ஜிஆர் படம் குமாரி.
குமாரி முதல் பல்லாண்டு வாழ்க வரை 35படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
இதில் குறிப்பிடத்தக்க படங்களாக அடிமைப்பெண் அரசகட்டளை,மாட்டுக்கார வேலன், அன்னமிட்டகை, என்அண்ணன், பல்லாண்டு வாழ்க, பரிசு ,காஞ்சித்தலைவன், உட்பட தேவர் பிலிம்ஸ் 16 படங்கள் அருமையாக இசை அமைத்திருந்தார்.......... Thanks.........
-
இயக்குநர் A.C.திருலோகசந்தர் உதவி இயக்குநர் ஆக பணியாற்றிய முதல் படம் இயக்குநர் ஏ.சி. திருலோகச்சந்தர் குமாரி படத்தில் உதவி இயக்குநர் ஆக எம்ஜிஆர் அவர்களுடன் பணிபுரிந்தார். அப்பொழுதே அரசியல் பற்றி பேசியுள்ளார்.தவிர எம்ஜிஆர் பானுமதி சந்திரபாபு நடித்த அபூர்வ சிந்தாமணி படத்தில் உதவி இயக்குநர் ஆக பணி புரிந்தார். ஆனால் படம் நின்று விட்டது. பிறகு அன்பே வா படத்தை அற்புதமாக இயக்கினார். வெற்றி விழாவில் இந்த படம் டைரக்டர் படம் என்று பெருமையாக பேசினார் எம்ஜிஆர். தன் புத்தகத்தில் அன்பே வா படம் பற்றியும் எம்ஜிஆர் பற்றி புகழ்ந்து 10 பக்கம் எழுதியுள்ளார்.இந்த படத்தின் போது மக்கள் திலகம் பணியாற்றிய அனுபவங்கள் தான் எழுதிய நெஞ்சம் நிறைந்த நினைவுகள் புத்தகத்தில் எழுதியுள்ளார்......... Thanks...
-
Kumari is a 1952 Indian Tamil language film directed by R. Padmanaban and starring M. G. Ramachandran and Sriranjani in the lead roles. Wikipedia
Initial release: 1952
Director: R. Padmanaban
Music director: K. V. Mahadevan
Producer: R. Padmanaban... Thanks......
-
The music was composed by K. V. Mahadevan and lyrics were by M. P. Sivam, T. K. Sundara Vathiyar and Ku. Sa. Krishnamoorthi.[1] Playback singers are K. V. Mahadevan, A. M. Rajah, Jikki, P. Leela, A. P. Komala and N. L. Ganasaraswathi.[3]
There were also gypsy dances choreographed by Sohanlal. One song rendered by Jikki off-screen, ‘Laalalee laallee…..' picturised on Madhuri Devi, became popular.[4]
Kantha Sohanlal danced for the song Cholla Cholla Ulley Vetkam which tune became very popular and was adapted in many other films later........ Thanks...
-
Directed by
R. Padmanaban
Produced by
R. Padmanaban
Story by
Ku. Sa. Krishnamurthi
Starring
M. G. Ramachandran
Sriranjani
Madhuri Devi
Serukulathur Sama
Music by
K. V. Mahadevan
Cinematography
D. Marconi
Edited by
V. P. Nataraja Mudaliyar
Release date
11*April*1952
Country
India
Language
Tamil......... Thanks...
-
Kumari 1952
M. G. Ramachandran, Madhuri Devi, Sriranjani Jr, Serukalathur Sama, T. S. Durairaj, K. S. Angamuthu, C. T. Rajakantham and ‘Pulimoottai' Ramaswami
one of MGR's early films Kumari
An entertainer by R. Padmanabhan, this film based on folklore, had MGR playing the hero — it was one of his early films when he was not yet the iconic star he would soon become.
Padmanabhan made his mark even during the Silent Film era and was responsible for the entry of another sadly neglected Indian film pioneer, lawyer-turned-filmmaker K. Subramanyam. KS took his bow in one of Padmanabhan's silent films as a screenwriter. Padmanabhan was also responsible for bringing in Raja Sandow who created history in Bombay and later in Madras. Produced and directed by Padmanabhan, the film was written by the lyricist and Tamil scholar Ku. Sa. Krishnamurthi and S. M. Santhanam, while the lyrics were by Ku. Sa. Ki and T. K. Sundara Vathiyar. K. V. Mahadevan composed the music, while Padmanabhan had his usual cinematographer T. Marconi, an Italian in Madras, work with him.
Shot at Neptune Studio in Adyar (later Satya Studios), the assistant director was ‘A. C. T. Chandar M.A.' Soon after he would blossom as a writer-director and producer who made many hit movies with Sivaji Ganesan, M. G. Ramachandran and others under his full name, A. C. Thirulokachandar! Santhanam also worked with ACT in the directorial department.
(Santhanam was a noted film journalist and critic during the late 1940s and worked for the popular Tamil movie monthly, Gundoosi.)
A princess (Sriranjani), while travelling in a horse carriage, meets with an accident when the horses run wild, and is rescued by a handsome young man (MGR). The two fall in love and the princess gives him a signet and invites him to her palace. Problems arise when the king wishes to get the princess married and the queen (Madhuri Devi) wishes to have her married to her useless brother (Durairaj.)......... Thanks............
-
Male cast
M. G. Ramachandran as Vijayan
Serukalathur Sama as Mandhara
Vijayakumar as Prathap
Stunt Somu as Vallaban
T. S. Durairaj as Saharan
Pulimoottai Ramasami as Pulimoottai
Sayeeram as Viharan
Kottapuli Jayaram as Minister
Rajamani as Minister
Ramaraj as Minister
K. K. Mani as Mani Singh
Female cast
Madhuri Devi as Chandravali
Sri Ranjani (Junior) as Kumari
Kantha Sohanlal as Jeela
K. S. Angamuthu as Mother
C. T. Rajakantham as Chandrika
Padmavathi Ammal as Mangala......... Thanks...
-
After many thrilling incidents, the lovers are united and live happily as expected!
The film had many songs rendered by P. Leela, Jikki (P. G. Krishnaveni), A.M. Raja, A.P. Komala, and N. L. Ganasaraswathi. There were also gypsy dances choreographed by Sohanlal. One song rendered by Jikki off-screen, ‘Laalalee laallee…..' picturised on Madhuri Devi, became popular. It was a straight lift of the popular duet in Dastan (Hindi) rendered by Suraiya and Mohammed Rafi. This tune in turn was inspired by a popular Hispanic melody of that period and was used by Naushad!
In spite of the interesting onscreen narration, deft direction and excellent camerawork by Marconi and impressive performances by MGR, Serukalathur Sama and others, Kumari did not do well. One of the important roles was played by Vijayakumar, a handsome young man. After playing lead roles in some films during the 1940s and 1950s, he faded from public memory.
Comedy was provided by C. T. Rajakantham, ‘Pulimoottai' Ramaswami and others.
Padmanabhan also produced this film in Telugu under the title Rajeswari.
Remembered for being one of the early films of the future superstar and cult figure MGR, and some catchy tunes of Mahadevan.
RANDOR GUY
Printer friendly page**
Send this article to Friends by E-Mail....... Thanks...
-
The film was produced and directed by R. Padmanaban. Ku. Sa. Krishnamurthi and S. M. Santhanam wrote the story and dialogues. Cinematography was done by D. Marconi while V. P. Nataraja Mudaliyar handled the editing. Choreography was done by Sohanlal and Still photography was done by R. N. Nagaraja Rao.[2]
The film was also made in Telugu with the title Rajeshwari.[1].......... Thanks...
-
-
13 MGR movies to binge-watch if you are a starter! | The New Stuff https://www.thenewstuff.in/13-mgr-mo...ou-are-starter... Thanks...
-
*“தாயே துணை”-தாயைத் தெய்வமாகப் போற்றிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்!*
*“தாயில்லாமல் நானில்லை*
*தானே எவரும் பிறந்ததில்லை*
*எனக்கொரு தாய் இருக்கின்றாள்*
*என்றும் என்னைக் காக்கின்றாள்”*
*-‘அடிமைப் பெண்’ படத்தில் மக்கள் திலகம் பாடிய பாடலைக் கேட்டிருப்பீர்கள். ‘அவள் தான் அன்னை மகாசக்தி’ என்று முடியும் பாடலில் வெளிப்பட்டிருக்கும் அவருடைய தாயின் மீது வைத்திருந்த அளப்பரிய பாசம்...*
*“அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்” – என்று பாடியிருப்பார் ‘பெற்றால் தான் பிள்ளையா?’ படத்தில்...*
*வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்.. அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்” என்று பாடியிருப்பார் ‘தேடி வந்த மாப்பிள்ளை’ படத்தில்...*
*“அன்னை உலகின் மடியின் மேலே அனைவரும் எனது கூட்டாளி” என்று உணர்த்தியிருப்பார் ‘தொழிலாளி’ படத்தில்...*
*“தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால் வேறொரு தெய்வமில்லை வேறொரு தெய்வமில்லை எத்தனை செல்வங்கள் வந்தாலுமே எத்தனை இன்னல்கள் தந்தாலுமே அத்தனையும் ஒரு தாயாகுமா அம்மா அம்மா அம்மா எனக்கது நீயாகுமா?” என்றிருப்பார் ‘தாயின் மடியில்’ படத்தில்...*
*தெய்வத் தாய்’, ‘தாய் சொல்லைத் தட்டாதே’, தாயைக் காத்த தனயன், குடியிருந்த கோவில் – இவை எல்லாமே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த சில படங்களின் பெயர்கள்.*
*இதற்கெல்லாம் மூலம் எம்.ஜி.ஆர் தன்னுடைய தாய் ‘சத்யா அம்மையார்’ மீது வைத்திருந்த உண்மையான நேசமும், அன்பும் தான்...*
*இளமைக் காலத்தில் அவர் கஷ்டப்பட்டபோது, தாயின் அன்பு தான் அவரை அரவணைத்திருக்கிறது. வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்கொள்ள வைத்திருக்கிறது.*
*தான் வசித்த ராமாவரம் தோட்டத்தில் “தாயிற் சிறந்த கோவிலுமில்லை” என்ற முதுமொழிக்கேற்ப தன்னுடைய தாய் சத்யா அம்மையாருக்குக் கோவில் எழுப்பி, தினமும் அங்கு வணங்குவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.*
*எத்தனையோ கோப்புகளிலும், கடிதங்களிலும் கையெழுத்திட்டிருக்கிற புரட்சித்தலைவர் அதைத் துவங்கும் முன்பு “தாயே துணை” என்று தமிழில் எழுதியே ஆரம்பித்திருக்கிறார்.*
*மற்றவர்கள் தாயைப் பற்றி மேடையில் பேசுவார்கள், எழுதுவார்கள்...*
*ஆனால் தாய் மீது வைத்திருந்த பேரன்பைச் செயலில் காட்டி வாழ்ந்திருக்கிறார் சத்தியத்தாயின் மகத்தான புதல்வர்...*
-
மக்கள் திலகத்தின் "மதுரை வீரன்" : 13.04.1956 : சென்னை : சித்ரா 119 பிரபாத் 112 சரஸ்வதி 112 காமதேனு 105
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் வெள்ளி விழா ஓடியது.
சென்னை 4 தியேட்டர்கள், தினசரி 3 காட்சிகள், 100 நாட்கள் ஓடிய முதல் படம்.
தமிழகத்தில் முதன் முறையாக 30 திரையரங்கு மேலாக 100 நாட்கள் ஓடிய முதல் காவியம் "மதுரை வீரன்"......... Thanks.........
-
தென்னிந்திய திரைப்படயுலகில்... முதன் முறையாக ரூபாய் ஒரு கோடி கணக்கான வசூல் புரட்சி செய்து புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., அவர்கள் தான் " வசூல் சக்கரவர்த்தி" பட்டத்தை திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், மீடியேட்டர்கள் சார்பாக சூட்டினார்கள்... அது மட்டுமல்ல ரசிகர்கள், ரசிகைகள், பொதுமக்கள் எம்.ஜி.ஆர்., அவர்களை " வாத்தியார்" என பாசத்துடன் அழைக்க துவங்கியதும் இந்த " மதுரை வீரன்", காவியத்தின் இணையில்லாத பிரம்மாண்டமான வெற்றியை ருசித்ததற்கு பின்னர் தான்......... Thanks.........
-
-
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பற்றிப் பட்டுக்கோட்டையார் புகழ்வது...
⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇⬇
கலையென்றால் மக்களுக்குச் சொந்தம் நல்ல கலைஞருக்கு மக்களெல்லாம் சொந்தம் இந்தக் கருத்துக்கு நாடோடி மன்னன் சாட்சி கடலலைபோல் திரண்டுவந்தகூட்டம் சாட்சி
ஆகாவென் ரார்த்தெழுந்த குரல்கள் சாட்சி அரங்கத்தை யதிரவைத்தகரங்கள் சாட்சி காட்சிக்கும் நடிப்பிற்கும் கதைக்கும் உண்மைக் கருத்துக்கும் கணக்கில்லா கண்கள் சாட்சி
பாட்டுக்கும் பண்ணுக்கும் செவிகள் சாட்சி பட்ட பாட்டுக்கும் கூட்டுக்கும் வெற்றி சாட்சி எம்.ஜி.ஆர். துணிவுக்கு செலவே சாட்சி என்றார்க்கு இன்று புகழ் வரவே சாட்சி
படம் பெற்ற பெருமைக்கு பலபேர் சாட்சி பயன்கூற வெற்றிவிழா மேடை சாட்சி எண்ணரிய சாட்சிகளுக்கிடையில் நானும் இதயத்தை திறந்தொன்று சொல்கின்றேன்.
திருந்து திருந்தெனத்தானும் நடந்து காட்டும் சிறப்பாலே எம்.ஜி.ஆர். சிறப்பு பெற்றார் பொருந்தாத கூற்றுகளைப் பொய்யென் றோதும் புதுமையினால் எம்.ஜி.ஆர். புதுமையானார்
அவர் வாழ்க! கலை வளர்க! வென்று வாழ்த்தி ஆரம்பக் கருத்தினையே இங்கும் சொல்வேன்: கலையென்றால் மக்களுக்குச் சொந்தம் நல்ல கலைஞருக்கு மக்களெல்லாம் சொந்தம்.
-
எம்.எஸ்.விஸ்வநாதன் போட்ட டியூன்களை நிராகரித்த எம்.ஜி.ஆர்.,
-சித்ரா லட்சுமணன்
இசையமைப்பாளர் எம்.எஸ் விஸ்வநாதனை ஒரு நாள் டெலிபோனில் அழைத்த எம்.ஜி.ஆர் “என்னோட பல படங்களுக்கு நீ இசையமைச்சி இருந்தாலும் எம். ஜி. ஆர் பிக்சர்சுக்கு நீ இதுவரையில் ஒரு படம் கூட பண்ணலையே. இப்போ ஒரு மியூசிக்கல் படத்தை ஜப்பான்,சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் படமாக்கலாம் என்று இருக்கிறேன். நீதான் அந்தப் படத்திற்கு இசையமைக்க வேண்டும்” என்றார். மகிழ்ச்சியோடு அந்த வாய்ப்பை ஏற்றக் கொண்டார் விஸ்வநாதன். அப்போது அந்தப் படத்திற்கு பெயர் வைக்கப்படவில்லை.
அந்தச் சம்பவம் நடந்து சில நாட்களுக்குப் பிறகு “தினத்தந்தி” பத்திரிகை யில் ஒரு செய்தி வெளியானது.
எம் ஜி ஆர் “உலகம் சுற்றும் வாலிபன்” என்ற பெயரில் வெளிநாடுகளில் ஒரு படத்தை உருவாக்கப் போவதாகவும் அந்தப் படத்திற்காக குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் நான்கு பாடல்கள் ஏவி. எம் ஸ்டுடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்தச் செய்தியைப் படித்தவுடன் விஸ்வநாதனுக்கு ஏற்பட்ட குழப்பத் திற்கு அளவேயில்லை.
வீட்டில் இருந்த தனக்கு போன் போட்டு “நான் வெளிநாட்டில் ஒரு படம் தயாரிக்கப் போகிறேன். அதற்கு நீதான் இசையமைக்க வேண்டும்” என்று கூறிவிட்டு இப்போது அதே படத்துக்காக குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் நான்கு பாடல்களை எம். ஜி. ஆர் பதிவு செய்திருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி விஸ்வநாதனின் மண்டையைக் குடைந்தது.
ஆனாலும் தனக்கு வரவேண்டிய வாய்ப்பு பறி போய்விட்டதே என்று விஸ்வநாதன் எந்த கலக்கமும் அடையவில்லை. அதே போன்று “ என்னை ஏன் மாற்றினீர்கள்?” என்று எம். ஜி. ஆரைத் தொடர்பு கொண்டு கேட்கவுமில்லை. வழக்கம்போல தனது வேளைகளில் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டார் அவர்
அந்தச் சம்பவம் நடந்து சில நாட்களுக்குப் பிறகு மெஜஸ்டிக் ஸ்டுடியோவில் ஒரு பாடல் ஒலிப்பதிவில் எம்.எஸ். விஸ்வநாதன் இருந்த போது எம். ஜி. ஆரிடம் இருந்து அவருக்கு ஒரு போன் வந்தது..
“விசு. உன் மனசிலே என்ன நினைச்சிக்கிட்டிருக்கே ? இந்தப் பக்கமே உன்னைக் காணோம்?. அது மட்டுமில்லாமல் ஒரு போன் கூட உன்கிட்ட இருந்து வரலே. “உலகம் சுற்றும் வாலிபன்” படத்துக்கு நீதான் மியூசிக் போடணும்னு எவ்வளவு நாளுக்கு முன்னாலே உங்கிட்ட சொன்னேன். அதை அப்படியே மறந்திட்டியா? என் கம்பெனின்னா நீ ஏன் எப்பவும் இப்படி பொறுப்பில்லாம இருக்கே” என்றார் எம். ஜி. ஆர்.
அவர் பேசப்பேச “தினத்தந்தி” பத்திரிகையில் “உலகம் சுற்றும் வாலிபன்” படத்தைப் பற்றிய செய்தியைப் படித்தபோது ஏற்பட்ட குழப்பத்தை விட அதிகமான குழப்பம் விஸ்வநாதனுக்கு ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு தெளிவுக்கு வந்த விஸ்வநாதன்,”அண்ணே நீங்க என்னை எப்படி நினைத்துக் கொண்டாலும் சரி, எவ்வளவு திட்டினாலும் சரி,.என்னால அந்த படத்துக்கு இசையமைக்க முடியாது. என்னை மன்னிச்சிக்கங்க”என்றார்
“விசு, என்ன பேசறோம்னு புரிஞ்சிதான் பேசறியா ?” என்று எம் ஜி ஆர் கேட்டபோது“குன்னக்குடியை வைச்சி நீங்க படத்தை ஆரம்பிச்ச செய்தியையும், உங்க படத்துக்காக அவர் நான்கு பாடல்களை பதிவு செய்திருக்கிற செய்தியையும் “தினத்தந்தி” பேப்பர்ல பார்த்தேன். அவரை வைச்சி ஆரம்பிச்ச படத்தை அவரை வச்சி முடிக்கிறதுதான் சரியாக இருக்கும். நான் இப்படி சொல்றதினால நீங்க கோவிச்சிக்கிட்டு எனக்கு இனிமே படமே கொடுக்கலேனா கூட பரவாயில்லை. “உலகம் சுற்றும் வாலிபன்” படத்திற்கு மட்டும் என்னால் இசையமைக்க முடியாது” என்று திட்டவட்டமாக பதில் சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார் விஸ்வநாதன்
அவர் போனை வைத்த கொஞ்ச நேரத்தில் விஸ்வநாதன் வீட்டுக்கு வந்த எம். ஜி. ஆரின் சத்யா ஸ்டு டியோ நிர்வாகி குஞ்சப்பன், நடிகர் நாகேஷ் ஆகிய இருவரும் “உங்களை எ
ம் ஜி ஆர் கையோடு அழைத்துக் கொண்டு சொன்னார் “ என்றார்கள்.
எம்.ஜி.ஆருடன் எவ்வளவு கருத்து வேறுபாடு இருந்தாலும் அவரை சந்திக்க விஸ்வநாதன் மறுத்ததே இல்லை.ஆகவே சட்டையை மாட்டிக் கொண்டு அவர்களுடன் உடனே கிளம்பினார்.
அப்போது எம். ஜி. ஆர் “பட்டிக்காட்டு பொன்னையா” படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். அவர் அருகே சென்ற விஸ்வநாதன் எம் ஜி ஆர் பேசுவதற்கு இடமே கொடுக்கவில்லை.
“நீங்க கூப்பிட்டு அனுப்பினால் என்னால் வராம இருக்க முடியுமா ? அதனாலதான் வந்தேன். தயவு செய்து நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்கள்.என்னைப் பொருத்தவரைக்கும் நான் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு பிரபலமாக இருக்கிற ஒரு மியூசிக் டைரக்டர். அவ்வளவுதான். ஆனால் குன்னக்குடி வைத்தியனாதன் ஒரு சங்கீத மேதை. அவரை சினிமாவில் முன்னுக்கு கொண்டு வர்றதுன்னா, அது உங்களாலதான் முறையும். என்கிட்டே வேலை வாங்கற மாதிரி நீங்க குன்னக்குடியிடமும் வேலை வாங்கினா நிச்சயம் அவர் பெரிய மியூசிக் டைரக்டரா வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நீங்க விருப்பப்பட்டா எனக்கு வேற படம் கொடுங்க. நான் நிச்சயமாக வேலை செய்கிறேன்.ஆனா இந்தப்படம் வேண்டாம் “என்று எம்.ஜி.ஆரிடம் மளமளவென்று சொல்லிவிட்டு அவர் கிளம்பிவிட்டார்.
இனி விஸ்வநாதனோடு பேசிப் பயனில்லை என்பதை புரிந்துகொண்ட எம். ஜி. ஆர், விஸ்வநாதனின் அம்மாவுக்கு போன் போட்டார். விஸ்வநாதனின் தாயிடம் அடிக்கடி போனிலே பேசக்கூடியவர் அவர்.
“உங்க பிள்ளை என்ன பண்றார் பாருங்கம்மா?” என்று எம்.ஜி.ஆர் விஸ்வநாதனின் தாயாரிடம் கூறியபோது “விசு எங்கிட்டே எல்லாத்தையும் சொல்லிட்டான். அவன் காரணம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டான். அதனால இந்த ஒரு படத்தில் மட்டும் அவனை விட்டு விடுங்களேன்” என்றார் விஸ்வநாதனின் தாயார்.
ஒரு வாரம் கழிந்தது.
“உலகம் சுற்றும் வாலிபன்” படத்தின் பூஜையில் கலந்து கொள்ளும்படி எம்.ஜி.ஆரிடமிருந்து எம் எஸ் விஸ்வநாதனுக்கு அழைப்பு வந்தது.
அது பூஜைக்கான அழைப்பு அல்ல தனக்காக விரிக்கப்பட்ட வலை என்பது தெரியாமல் அந்த பூஜைக்குப் போனார் விஸ்வநாதன்.
தொடக்க விழாவிலே பங்கேற்க குன்னக்குடி வைத்தியநாதனும் வந்தி ருந்தார்.அவருக்கு தனது வாழ்த்துக்களை விஸ்வநாதன் தெரிவிக்க அவரது கையைப் பிடித்துக் கொண்ட குன்னக்குடி வைத்தியநாதன் விஸ்வநாதனின் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவிக்கவில்லை. அதற்குப் பதிலாக”அண்ணா இந்தப் படத்துக்கு நீங்களே இசையமைச்சிக் கொடுங்க அண்ணா.நம்ம ரெண்டு பேர்ல யார் வேலை செஞ்சா என்ன?அது மட்டுமில்லாமல் இந்த படத்துக்காக எம்.ஜி.ஆர் எனக்கு என்ன சம்பளம் பேசினாரோ அந்தப் பணம் மொத்தத்தையும் கொடுத்துட்டார். அடுத்த படத்தில் எனக்கு சான்ஸ் தர்றதாகவும் சொல்லியிருக்கார். அதனால நீங்க இந்த படத்தைப் பண்றதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லே. இன்னும் சரியாகச் சொன்னா நீங்க பண்ணாதான் எனக்கு சந்தோஷம்” என்றார்
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும்,குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் இடையே இந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லாததைப் போல ஒரு நமட்டு சிரிப்புடன் தூரத்தில் நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்தார் எம். ஜி. ஆர்.
குன்னக்குடி வைத்தியநாதனுக்கு வருத்தம் ஏதுமில்லை என்பதை ஒரு முறைக்கு நூறுமுறை உறுதி செய்து கொண்ட பிறகு “உலகம் சுற்றும் வாலிபன்” படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொண்டார் விஸ்வநாதன்
உலகம் சுற்றும் வாலிபன் படத்தை எம்ஜி.ஆர் ஆரம்பித்தபோது முழுக் கதையும் தயாராகவில்லை. ஆகவே பாடல் இடம் பெறவிருக்கின்ற காட்சிகளையும் அந்தப் பாடல் காட்சிகளைப் படமாக்கப் போகின்ற இடங்களையும் பற்றி எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சொல்லிவிட்டு அதற்கேற்ப அவரை டியூன் போடச் சொன்னார் எம்.ஜி.ஆர்.
எம்ஜிஆர் பிக்சர்சில் தான் பணியாற்றும் முதல் படம் என்பது தவிர வெளிநாடுகளில் படமாக்கப்படப் போகின்ற படம் என்பதால் மிகுந்த உற்சாகத்தோடு அந்தப் படத்துக்கு வேலை செய்தார் எம்.எஸ்.விஸ்வநாதன்.ஆனால் என்ன காரணத்தாலோ அவர் போட்ட எந்த மெட்டும் எம்.ஜி.ஆருக்குப் பிடிக்கவில்லை.
அவருக்குப் பிடிக்கவில்லையே என்பதற்காக நாள் முழுவதும் உட்கார்ந்து வேறு டியூனை விஸ்வநாதன் போட்டுக் காட்டியபோது “இதுக்கு நேற்று போட்ட டியூனே பரவாயில்லை” என்றார் எம். ஜி. ஆர்.
அப்படி எம்.ஜி.ஆர் தன்னுடைய பாடல்களைக் கடுமையாக விமர்சித்த போதிலும் அதையெல்லாம் மனதிலே வைத்துக் கொள்ளாமல் புதிதாக ஒரு டியூன் போட்ட எம்.எஸ்.விஸ்வநாதன் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களைக் கொண்டு அந்தப்பாடலைப் பதிவு செய்தார்.
அந்தப் பாடலைக் கேட்ட அத்தனை பெரும் விஸ்வநாதனைப் பாராட்டினார்கள்.
அந்தப் பாடலைக் கேட்டால் எம். ஜி. ஆர் நிச்சயம் அசந்து போவார் என்று நினைத்த எம்.எஸ்.விஸ்வநாதன் எம்ஜிஆருக்கு அந்தப பாடலைப் போட்டுக் காட்டிவிட்டு அவரது பாராட்டுகளுக்காக காத்துக் கொண்டிருந்தபோது பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர் உதட்டைப் பிதுக்கி விட்டுப் போய்விட்டார்
தான் முதலில் இந்தப் படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்று சொன்னதால் எம் ஜி ஆர் தன்னை பழி வாங்குகிறாரோ என்ற எண்ணம் கூட ஓரு கட்டத்தில் விஸ்வநாதனுக்கு வந்தது.
அப்படி ஒரு எண்ணம் எழுந்ததற்குப் பிறகும் அவர் எப்படி அந்த படத்தில் தொடர்ந்து பணியாற்றினார்
\\\2///
எம்.ஜி.ஆர் தந்த பணத்தை வாங்க மறுத்த எம்.எஸ்.விஸ்வநாதன்
-சித்ரா லட்சுமணன்
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் தனது வாழ்க்கையில் அதிகமாக மனம் தளர்ந்தது "உலகம் சுற்றும் வாலிபன்" படத்திற்கு இசையமைத்தபோதுதான்.கஷ்டப்பட்டு ஒரு டியூனைப் போட்டு அதை எம்.ஜி.ஆரிடம் அவர் வாசித்துக் காட்டினால் "இந்த டியூன் நன்றாகவே இல்லையே.இது வேண்டாம்"என்பாராம் எம். ஜி. ஆர்.அடுத்து "கொஞ்சம் பொறுங்கள் இன்னொரு டியூன் போடுகிறேன் " என்று விஸ்வநாதன் சொன்னால் "பரவாயில்லை விடு.இந்த டியூனே இருக்கட்டும் " என்று எம் ஜி ஆரிடமிருந்து பதில் வருமாம்.
பக்கத்தில் இருப்பவர்கள் "பாட்டு நல்லாத்தானே அண்ணே இருக்கு. எதனால உங்களுக்குப் பிடிக்கலே" என்று அவரிடம் கேட்டால் உடனே அவர்களோடு வாக்கு வாதம் செய்யத் தொடங்கிவிடுவாராம் .
“எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை. அவரை எப்படி திருப்திப் படுத்தறது அப்படீன்னும் புரியலே.ஆனா என்னுடைய மனசாட்சிக்கு விரோதமில்லாமல் என்னால முடிஞ்ச அளவுக்கு மாத்தி மாத்தி பல டியூன்களைப் போட்டு பத்து நாட்களில் பதினைந்து பாடல்களை ரிக்கார்ட் செய்து கொடுத்தேன். ஆனால் அந்தப் பாடல்களில் ஒரு பாட்டைக்கூட எம். ஜி. ஆர் பாராட்டவில்லை” என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக் கிறார் விஸ்வநாதன்
"உலகம் சுற்றும் வாலிபன்" படத்துக்கான மொத்த பாடல்களையும் பதிவு செய்து முடித்துவிட்டு கே.பாலாஜியின் புதிய படத்துக்காக அவருடைய அலுவலகத்தில் பாடல் கம்போசிங்கில் விஸ்வநாதன் இருந்தபோது கையில் ஒரு போனுடன் அவசரம் அவசரமாக கம்போசிங் நடைபெற்றுக் கொண்டிருந்த அறைக்குள் ஒடி வந்தார் பாலாஜி.
“அண்ணே உங்களுக்குத்தான் போன். எம். ஜி. ஆர் பேசறார்” என்றபடி போனை விசுவநாதன் கையில் கொடுத்தார்அவர்.
“உலகம் சுற்றும் வாலிபன்" பட ஷூட்டிங்கிற்காக நாளைக்கு எல்லோரும் சிங்கப்பூர் போகப் போறோம். படத்துக்கு பாட்டு எல்லாத்தையும் போட்டுக் கொடுத்துட்ட நீ அதுக்குப் பணம் வாங்கலேன்னா எப்படி?உடனே கிளம்பி வா”என்றார் எம். ஜி. ஆர்.
“மன்னிக்கணும் அண்ணே. எனக்குப் பணம் எதுவும் வேண்டாம்.ஏன்னா நான் எவ்வளவோ கஷ்டப்பட்டு டியூன் போட்டும் அதிலே ஒரு பாட்டு கூட உங்களுக்குப் பிடிக்கலே. அதனால உங்களைப் பார்க்கவே எனக்கு வெட்கமா இருக்கு.அதனால எனக்கு பணம் எதுவும் வேணாம் அண்ணே” என்றார் விஸ்வநாதன்.
அடுத்து “மரியாதையா நீ இப்போ கிளம்பி இங்கே வர்றியா இல்லே நான் அங்கே வரட்டுமா?”என்று கேட்டார் எம். ஜி. ஆர்.
பாலாஜி உட்பட அந்த கம்போசிங்கில் இருந்த அனைவரும் "உடனே கிளம்பிப்போய் எம். ஜி. ஆரைப் பார்த்துவிட்டு வாங்க இந்த கம்போசிங்கை நாளைக்குக் கூட வைத்துக் கொள்ளலாம்" என்று சொல்லவே அரை மனதோடு தியாகராயநகர் ஆற்காடு சாலையிலிருந்த எம் ஜி ஆர் பிக்சர்ஸ் அலுவலகத்துக்குக் கிளம்பினார் விஸ்வநாதன்'
அவர் சென்றபோது அந்த அலுவலகம் கல்யாண வீடு மாதிரி இருந்தது. "உலகம் சுற்றும் வாலிபன்" பட விநியோகஸ்தர்கள், நடிகர் நடிகைகள், தொழில் நுணுக்கக் கலைஞர்கள் என்று எல்லோரும் அங்கே கூடியிருந்தனர்.
அந்த அலுவலகத்துக்குள் எம்.எஸ்.விஸ்வநாதன் அடி எடுத்து வைத்த அடுத்த நிமிடம் அந்தப் படத்தின் விநியோகஸ்தர்கள் சார்பில் ஒரு ஆளுயர மாலை அவருக்கு அணிவிக்கப் பட்டது
அடுத்து விஸ்வநாதனுக்கு அருகில் வந்து அவரை கட்டி அணைத்துக் கொண்ட எம்.ஜி.ஆர் “இவங்க எல்லோரும் விசு சார் அடுத்த படத்துக்கு மியூசிக் ஏதாவது ஸ்டாக் வைத்திருக்கிறாரா இல்லே இந்தப் படத்திலேயே தன்னுடைய எல்லாத் திறமைகளையும் கொட்டித் தீர்த்துட்டாரான்னு என்கிட்டே கேட்கறாங்க விசு. எல்லா பாட்டுக்களும் அவ்வளவு நல்லா இருக்காம். இவங்க எல்லோரும் சொல்றாங்க”என்று சொல்லிவிட்டு ஒரு பை நிறைய நோட்டுக் கட்டுகளைப் போட்டு விஸ்வநாதன் கைகளில் கொடுத்த போது “என்னை மன்னிச்சிக்கங்க. இந்தப் பணம் எனக்கு வேண்டாம்”என்றார் விஸ்வநாதன்.
"ஏன்?" என்று எம். ஜி. ஆர் தனது பார்வையாலேயே கேட்டபோது இப்போது கூட "பாட்டுக்கள் நல்லா வந்திருக்குன்னு விநியோகஸ்தர்கள் எல்லோரும் சொல்றாங்க அப்படீன்னுதானே நீங்க சொன்னீங்க. அப்படீ ன்னா இன்னும் கூட உங்களுக்கு நான் போட்ட பாட்டுக்கள் பிடிக்க லேன்னுதானே அர்த்தம்? அப்படியிருக்கும்போது எனக்கு இந்தப் பணம் எதற்கு?"என்றார் விஸ்வநாதன்
அவர் அப்படி சொன்னவுடன் வாய்விட்டு சிரித்த எம்.ஜி.ஆர் "எல்லா பாட்டுமே ரொம்பப் பிரமாதமாக வந்திருக்கு விசு. நான் வேண்டும் என்றுதான் ஒவ்வொரு பாட்டையும் நல்லா இல்லேன்னு சொன்னேன். அப்போதுதான் அடுத்த பாட்டுக்கு இன்னும் கூடுதல் கவனத்தோடு அக்கறை எடுத்துக் கொண்டு நீ இசையமைப்பாய் என்ற என்னுடைய சுயநலம்தான் அதற்குக் காரணம்"என்றார்.
"அங்கேதான் நீங்க தப்பு பண்றீங்க.ஒவ்வொரு பாட்டையும் நீங்க அப்பவே ரசித்து பராட்டியிருந்தீங்கன்னா.நான் அடுத்தடுத்து இன்னும் நல்ல டியூனா போட்டிருப்பேன்"என்று விஸ்வநாதன் அவருக்கு பதில் சொன்ன போது "அதுதான் தம்பி நல்ல கலைஞனோட குணம்"என்று சொல்லி அவரை தட்டிக் கொடுத்தார் எம். ஜி. ஆர்.
எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்திருந்த பத்னைந்து பாடல்களில் இருந்து பத்து பாடல்களைத் தேர்ந்தெடுத்த எம். ஜி. ஆர் அந்தப் பாடல்களைச் சுற்றி சம்பவங்களைப் பின்னித்தான் "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தின் கதையை அமைத்திருந்தார்.
அந்தப்படத்தை வெளியிட எம். ஜி. ஆர் திட்டமிட்ட போது எம். ஜி. ஆர் திமுகவிலிருந்து வெளியே வந்து விட்டிருந்ததால் பல பிரச்னைகளை அவர் சந்திக்க நேர்ந்தது."உலகம் சுற்றும் வாலிபன்" படத்தின் பின்னணி இசை சேர்ப்பு நடைபெற்றபோது திட்டமிட்டு பல முறை மின்சாரத்தடை ஏற்படுத்தப்பட்டது. எப்போது மின்சாரம் வரும் எப்போது போகும் என்று தெரியாது என்பதால் இருபத்தி நான்கு மணி நேரமும் ஒலிப்பதிவுக் கூடத்திலேயே செலவழித்த எம்.எஸ்.விஸ்வநாதன் எப்போதெல்லாம் கரண்ட் வருகிறதோ அப்போதெல்லாம் பின்னணி இசையை பதிவு செய்தார். அந்தப் படத்திற்காக விஸ்வநாதன் கடுமையாக உழைத்ததைப் பார்த்து எம். ஜி. ஆர். அசந்து போனார். விஸ்வநாதனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே பல முறை மன வருத்தங்கள் வந்திருக்கின்றன. அப்போதெல்லாம் பல முறை எம். ஜி. ஆர் விஸ்வநாதனை திட்டியிருக்கிறார்.அப்படி பல முறை அவர் திட்டியிருந்தாலும் விஸ்வநாதனை வேறு யாராவது திட்டினால் எம். ஜி. ஆர் எப்போதும் தாங்கிக் கொள்ள மாட்டார்.
1969- ஆம் ஆண்டு இறுதியில் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பாக “இணைந்த கைகள்” கதையை பிரமாண்டமான திரைப்படமாக எடுக்க எம்.ஜி.ஆர் திட்டமிட்டார்.அந்தப் படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன்தான் இசை. அந்தப் படத்துக்கான ஒரு பாடல் பதிவின்போது ஒலிப்பதிவுக் கூடத்துக்கு பகல் பன்னிரண்டு மணிக்கு வந்த எம்.ஜி.ஆர் பதிவாக இருந்த பாட்டைக் கேட்டார்.அந்தப் பாடல் வரிகள் எதுவுமே அவருக்குப் பிடிக்கவில்லை ஆகவே பாடல் வரிகள் மொத்தத்தையும் மாற்றச்சொன்ன அவர் இசையி லும் சில மாற்றங்களைச் சொன்னனார்.அவர் அப்படிச் சொன்னதும் "கொஞ்சம் டைம் கொடுங்க அண்ணே எல்லாத்தையும் மாத்திட்டு உங்களுக்கு வாசித்துக் காட்டு கிறேன்" என்றார் விஸ்வநாதன்.
"என்ன விசு காமெடியா பேசறே, இப்போதே மணி பன்னிரண்டு ஆகிறது.இன்னும் சிறிது நேரத்தில லஞ்ச் பிரேக் விடணும்.அதனால இப்பவே டியூன் எல்லாம் போட வேண்டாம். முதல்ல போய் சாப்பிடு.நேரத்துக்கு சாப்பிட்டாதான் உடம்பு நல்லாயிருக்கும் உடம்பு நல்லாயிருந்தாதான் உழைக்க முடியும்.லஞ்ச பிரேக் முடிஞ்சதும் நான் சொன்னபடி ட்யூனை மாத்திப் போட்டு வை. நான் வந்து கேட்கிறேன் என்று சொல்லி விட்டுக் கிளம்பினர் எம் ஜி ஆர்
அவர் அப்படி சொல்லிவிட்டுக் கிளம்பியதும் விஸ்வநாதனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. புதிதாக ஒரு மெட்டு போடுவதில் அவருக்கு எந்தக் கஷ்டமும் இல்லை. பத்து நிமிஷத்தில் போட்டு விடுவார் ஆனால் அன்று அவர் தவித்த தவிப்பிற்கு வேறு காரணமிருந்தது.
"இணைந்த கைகள்' பாடலை முடித்து விட்டு மதியம் ஸ்ரீதர் இயக்கியிருந்த "சிவந்த மண்" படத்தின் பின்னணி இசை சேர்ப்புக்கு அவர் போகவேண்டும்.அந்தப் படத்தின் பின்னணி இசை மிகச் சிறப்பாக அமைய வேண்டும் என்ற அக்கறையில் அந்தப் படத்தின் கதாநாயகனான சிவாஜி தினமும் ரிக்கார்டிங்கிற்கு வரத் தொடங்கியிருந்தார்.
இங்கே உணவு இடைவேளை முடிந்து பாடலை கம்போசிங் செய்து அதற்குப் பிறகு ரிக்கார்டிங்கை முடித்துவிட்டு அங்கே செல்வது என்றால் நிச்சயமாக மாலை ஆறு மணி ஆகிவிடும்.அதுவரை சிவாஜியையும் ஸ்ரீதரையும் காத்திருக்க வைத்தால் நிச்சயம் அவர்களோடு தனக்குள்ள உறவு அடியோடு முறிந்துவிடும் என்று பயம் விஸ்வநாதனுக்குள் இருந்தது.
ஆனால் அதை எம். ஜி. ஆரிடம் எப்படி தெரிவிப்பது என்று அவர் தடுமாறிக் கொண்டிருந்தபோது அவரது தவிப்பைப் பார்த்த இசைக் குழுவைச் சேர்ந்த ஒருவர் காரில் ஏறப் போன எம். ஜி. ஆரிடம் விஸ்வநாதன் நிலையைப் பற்றி முழுவதுமாக எடுத்துச் சொன்னார். அதைக் கேட்டவுடன் காரில் ஏறப்போன எம். ஜி. ஆர் காரை விட்டு இறங்கி ரிக்கார்டிங் தியேட்டருக்குள் வந்தார்
"என்ன பிரச்னை உனக்கு? "சிவந்த மண்" படத்தோட ரி ரிக்கார்டிங்குக்கு நேரத்துக்குப் போகலேன்னா ஸ்ரீதர் உன்னை கோபித்துக் கொள்வார். என்பதுதானே" என்று லேசாக சிரித்தபடியே அவரிடம் கேட்ட எம்.ஜி.ஆர் "நீ அந்த ரிக்கார்டிங்குக்க்கு போறதுக்கு முன்னாலே இந்த பாட்டில என்னென்ன மாற்றம் செய்யலாம்னு நினைக்கிறியோ அதை எல்லாம் உன்னுடைய உதவியாளரான கோவர்த்தன்கிட்ட சொல்லிட்டு போ. நான் சாப்பிட்டுவிட்டு வந்து அவரை வச்சிக்கிட்டு ரிக்கார்டிங்கை பார்த்துக்கறேன். சரியா?"என்று சொல்லி விட்டு "என்ன பண்றது விசு. நீ ரொம்ப பிசியான ஒரு மியுசிக் டைரக்டர்.அதனால நீ சிவாஜி படத்துக்கு போய் வேலையைப் பாரு. நான் இங்கே உன்னுடைய அசிஸ்டண்டா இருந்துகிட்டு மத்த வேலையைப் பார்க்கிறேன்" என்று அவரை கிண்டல் செய்தார்.
அவர் அப்படிச் சொன்னவுடன் விஸ்வநாதன் கண் கலங்கி விட்டார் உடனே அவரை அருகில் அழைத்த எம். ஜி.ஆர் “நாம்ப எப்படி வேண்டுமானாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் விசு. உன்னை என்ன சொல்லவும் எனக்கு உரிமை உண்டு.அதனாலே நான் உன்னை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டுவேன். ஆனா வேறு யாரும் உன்னைத் திட்ட நான் காரணமாக இருக்க மாட்டேன். அதனால சாப்பிட்டு முடித்துவிட்டு நீ அந்த ரிக்கார்டிங்குக்கு போய்விடு என்றார்.
விஸ்வநாதனின் பாடல்களை எம்ஜிஆர் பல முறை விமர்சித்த போதிலும் அவரிடமிருந்து விஸ்வநாதன் விலகாமல் இருந்ததற்குக் காரணம் எம்.ஜி.ஆர் அவர் மீது காட்டிய இந்த அதீத அன்புதான்......... Thanks.........
-
புரட்சி நடிகர் தேவர் கூட்டணி 3 வது வெற்றி படம் "தாயைக் காத்த தனயன் ",வெளியான நாள் 13.04.1962.
திரையிசைத் திலகம் கே.வி. மகாதேவன் கண்ணதாசன் அத்தனை பாடல்களும் இன்றும் இனிமையாக உள்ளது....... Thanks...
-
சென்னை பிளாசா, பாரத், மகாலட்சுமி, மதுரை கல்பனா , திருச்சி பேலஸ், சேலம் பேலஸ் 100 நாள் ஓடியது. பற்பல ஊர்களில் 50 நாட்கள் கடந்து 1962 ம் ஆண்டின் பிரம்மாண்ட வெற்றி காவியமாம்
எம்.ஜி.ஆர்., தேவர் சிலம்பு சண்டை இதுவரை திரைவரிசையில் காணாத அற்புதம்...... Thanks...
-
முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் தலைமைச்செயலகம் செல்லும் வழியில் 'சென்னை பல்கலைக்கழக கட்டிடத்தில் உள்ள மணிக்கூண்டில் உள்ள கடிகாரம் தவறான நேரத்தைக் காட்டுவதைக் கண்டார். தொடர்ந்து இரு நாட்கள் அதைக் கவனித்தார். நேரம் சரிப்படுத்தப்படாமல் தவறான நேரத்தையே காண்பித்துக் கொண்டிருந்தது.
மூன்றாம் நாள் முதல்வர் நேராக பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தது. அங்குள்ள அலுவலர்கள் அதிர்ச்சியடைந்து காரருகே ஓடி வந்தனர்...
அப்போது புரட்சித்தலைவர், 'மணிக்கூண்டில் உள்ள கடிகாரம் கடந்த சில நாட்களாக தவறான நேரம் காட்டுவதை சுட்டிக்காண்பித்தார்.
மேலும், "வருங்கால சமுதாயத்திற்கு நல்வழி காட்டும் பல்கலைக்கழகத்திலேயே இப்படி தவறு நடந்தால் எப்படி? உடனே நேரத்தை சரிசெய்யுங்கள்..."
தான் செல்லும் வழியில் காணும் சிறுதவறைக்கூட கண்டுபிடித்து கண்ணியமாகத் திருத்தும் கடமை உணர்வு எம்ஜிஆர் அவர்களுக்கு இருந்தது.
இந்த விஷயத்தை தனது உதவியாளர் மூலம் போனில் சொல்லியிருக்கலாம்...!!!
ஏன் செய்யவில்லை...???
தான் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பதையும் மறந்து தன்னை ஒரு சராசரி பிரஜையாகவும், காணும் தவறை சுட்டுவது ஒரு பிரஜையின் தலையாய கடமை என்றும் கருதியதன் நிகழ்வு தான் இது...
இதுபோல இனி ஒரு அவதார புருஷர் நமக்கு கிடைப்பாரா ???
-
13.4.2020
At 11 am
Sunlife tv
ராமன் தேடிய சீதை
-
அனைவருக்கும் நெஞ்சார்ந்த இனிய காலை வணக்கத்துடன்....
மக்கள் கவிஞர் "பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்" அவர்களின் பிறந்ததினம்.....
1930ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்... 13ஆம் நாளன்று பிறந்தார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது 29ஆம் வயதிலேயே பாடல் வரிகள் மூலம் கம்யூனிஸ்ட் கொள்கை கூறி புரட்சி ஏற்படுத்தினார்....
1977ஆம் ஆண்டு "புரட்சி தலைவர்" முதல்வராக பொறுப்பேற்ற பொழுது "நான் இன்று முதல்வராக பதவி ஏற்கிறேன் என்றால் அதற்கு முக்கிய காரணங்களில் முக்கியமானது மறைந்த புரட்சி கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பாடல் வரிகள் என்று கூறனால் அது மிகையாகாது.
ஆகையால் நான் அமரும் இந்த முதல்வர் நாற்காலியில் ஒரு கால் திரு. மக்கள் கவிஞர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுடையது என்று கூறினார்..
அவர் பிறந்த நாளான இன்று அவரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்....
"ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி
உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
காலம் தரும் பயிற்சி
உன் நரம்போடு தான் பின்னி வளரனும்
தன்மான உணர்ச்சி தன்மான உணர்ச்சி"...
--- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்....... Thanks.........