http://i62.tinypic.com/20r6a8p.jpg
Printable View
காட்சிப் பிழை - ஆகஸ்ட் 2015- தமிழ் திரைப்பட ஆய்விதழ்.
-----------------------------------------------------------------
பாடல் பெறாத பாடலாசிரியர்கள் .
------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு மருதகாசி , சபாஷ் மாப்பிள்ளை, மாடப்புறா என
நிறையப் படங்களுக்கு பாடல்கள் எழுதினார் .
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், நாடோடி மன்னன், திருடாதே, அரசிளங்குமரி
போன்ற படங்களுக்கு பாடல்கள் இயற்றினார்.
திருடாதே படத்தில் , கண்ணதாசன், பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்,கு.சா.கிருஷ்ணமுர்த்தி ,கு.மா. பாலசுப்ரமணியம், முத்துக்கூத்தன் ,எம்.கே. ஆத்மநாதன், பழனிச்சாமி என்று பலர் பாடல்கள்
எழுதியுள்ளார்கள்.
தொழிலாளி படத்தில் , "கலை வந்த வேதம் கேளு கண்ணே " பாடல் எழுதியவர்
திரு.கூத்தன் பூண்டி சுந்தரம்.
குடியிருந்த கோயில் படத்தில் , "குங்கும பொட்டின் மங்கலம் " பாடலை பெண் கவிஞர் ரோஷனாரா பேகம் எழுதினார் .
மலைக்கள்ளன் படத்தில் இடம் பெற்ற , "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் " பாடலை எழுதியவர் கோவை ஆனைமுத்து. ஆனால் படத்தில் இவர் பெயர் இடம்பெறவில்லை.
நாடோடிமன்னன் படத்தில் , " உழைப்பதில்லா உழைப்பில் " பாடலை எழுதியவர்
கவி. இலக்குமணதாஸ் . இந்தப் பாடலை இன்னும் சிறப்பாக, பிரமாதமாக எழுதுங்கள் என எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்டார். அண்ணே , இதுக்கு மேல். என்னால் எழுத முடியாது என்று சொல்லும் அளவிற்கு எழுத வைத்தாராம்.
பாடல் திருப்தியாக வந்ததும், கவிராயர் அப்படியே உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர்
மல்க நின்றாராம். அவரே, " நாடோடி மன்னன் " வெற்றி விழா மலரில் இதைச்
சொல்லி இருக்கிறார். நாடோடி மன்னனை வாழ்த்திப் பாடும், திராவிடப் பாடலான
நான்கு மொழிப் பாடலில் மலையாளம் பாஸ்கரன், தெலுங்கு நாராயண பாபு,
கன்னடம் விஜயராகவலு , தமிழ் சுரதா ஆகிய கவிஞர்கள் எழுதி இருப்பார்கள்.
நீரும் நெருப்பும் படத்தில் வரும் பல மொழிப் பாடல்களில் முறையே வயலார்,
கொசராசு, விஜய நரசிம்ஹா ஆகியோர் எழுதி உள்ளார்கள்.
தமிழ் நாட்டின் முதல் அரசவைக் கவிஞரான நாமக்கல் வெ. ராமலிங்கம் பிள்ளை
எழுதிய பாடல் , மலைக்கள்ளன் படத்தில் "தமிழன் என்றொரு இனம் உண்டு "
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு அணுக்கமானவரான வித்வான் வே. லட்சுமணன்
சத்யா மூவிஸ் படங்களுக்கு உரையாடலும், பாடலும் எழுதி உள்ளார். அதைவிட
எம்.ஜி.ஆருக்கு ஆஸ்தான ஜோசியரும் கூட
புதிய பூமி படத்தில், "நான் உங்கள் வீட்டுப் பிள்ளை " பாடல் எழுதியவர் பூவை
செங்குட்டுவன்.
நடிகர்களில் பாடல்கள் எழுதியதில் கே.டி.சந்தானம் என்பவர்."ரகசிய போலிஸ் 115"
நினைவில் நிற்கும் படம்.
ராண்டார் கய் , இதயக்கனி படத்தில் " ஹலோ மிஸ்டர் " என்கிற ஆங்கிலப் பாடலை பாடகி உஷா உதூப் பாடும் வகையில் எழுதி இருந்தார்.
ஆலங்குடி சோமு, தொழிலாளி படத்தில் : ஆண்டவன் உலகத்தின் முதலாளி "
பாடலையும், குடியிருந்த கோயில் படத்தில் " ஆடலுடன் பாடலை கேட்டு " பாடலையும் எழுதி புகழ் பெற்றார்.
---------------------------------------
31.8.1961
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த நல்லவன் வாழ்வான் - 54 ஆண்டுகள் நிறைவு .
https://youtu.be/Xu3FIaYF1RY
video courtesy- sailesh sir
31.8.1962
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த பாசம் - 53 ஆண்டுகள் நிறைவு .
https://youtu.be/soyB-Lnpwa8
இரண்டு படங்களிலும் மக்கள் திலகம் மாறு பட்ட நடிப்பில் சிறப்பாக நடித்திருந்தார் .
காட்சியும், கற்பனையும்.
----------------------------
கல்கி, சாண்டில்யன் எழுத்துக்களால்
http://i57.tinypic.com/67jshu.jpg
http://i60.tinypic.com/2ng8xau.jpg
ஒரு சமயம் எகிப்து நாட்டுக்கு என் நாடோடி மன்னன் படத்தை அனுபசொல்லி இந்திய வெளிவிவகாரத்துறை மந்திரியிடமிருந்து எனக்கு ஒரு தந்தி வந்தது. டெல்லியில் போட்டுக்காட்டினேன். நாடோடி மன்னன் ஆக்ஷ்ன் படம். அதனால் அதுதான் வேண்டும் என்றும் படத்தின் நீளத்தை மட்டும் குறைத்து தர வேண்டும் என்றார். 12 ஆயிரம் அடி குறைத்து தந்தேன். ஆனால் என்ன நடந்ததோ அது தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் அதுபற்றி நான் பேசியிருக்கிறேனா?
1971 புரட்சித்தலைவர் பாராட்டுவிழாவில் பேசியது.
The above is for info. only. Please do not start another disgusting argument.
கலை எப்போதும் இருக்கும். ஆனால், கலைஞ்ர்கள் இருக்கமாட்டார்கள்.
- புரட்சித்தலைவர்
நான் அபிநய சரஸ்வதி சரோஜா தேவி அவர்களை ஒரு முறை சந்தித்த போது ....,
பெற்றால் தான் பிள்ளையா.....? படம் குறித்து எங்கள் பேச்சு விரிய...., அவர் சொன்ன விஷயம் என்னை மெய் சிலிர்க்க வைத்தது.....
அதில் கை குழந்தை ஒன்றை எம்.ஜி.ஆர். பாசத்துடன் வளர்ப்பார்.... அதில் வரும்..,
"செல்ல கிளியே மெல்ல பேசு.... தென்றல் காற்றே மெல்ல வீசு.... " என்கிற பாடல் காட்சியின் படப்பிடிப்பின் போது அந்த கை குழந்தைக்கு உடம்பு முடியாமல் இருக்க அடிக்கடி மூக்கு ஒழுகி கொண்டே இருந்தது...
அந்த படத்தின் படப்பிடிப்பின் போது எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் கொஞ்சம் மனஸ்தாபம் ... நாங்க பேசிக்க மாட்டோம்...சண்டைக்கி நான் தான் காரணம் ரொம்ப சின்ன புள்ள மாதிரி எதுக்காச்சும் நான் சண்ட போட்டுக்கிட்டே இருப்பேன்..... ஆனா படத்துல அது தெரியாம பாத்துக்கிட்டோம்.... அதுக்கும் எம்.ஜி.ஆர் தான் காரணம் என் உதவியாளர் கிட்டே அவர் சொல்லி விட்டார்.... "
உங்க மேடத்தோட கோபத்த ஷூட்டிங் ஸ்பாட்ல காமிக்க வேணாம்னு சொல்லுங்க......" என்று சொல்லி விட்டார்.... அதே போல நானும் நடந்து கொண்டேன்.....
அந்த குழந்தைக்கு ஜலதோஷம் புடிச்சு இருந்ததால அது மூக்கு ஒழுகிகிட்டே இருந்துச்சு.... எம்.ஜி.ஆர் குழந்தையோட அம்மாகிட்டே "ஷூட்டிங்கை ரெண்டு நாள் கழிச்சு வச்சுக்கலாமா.....?" னு
கேட்டார் ...
அந்த அம்மா பதறி போய்..."அதெல்லாம் வேணாம்! "னு சொல்லீடுச்சு....
"இந்த குழந்தைக்காக ஷூட்டிங்கவா கேன்சல் பண்ணுறது.....னு" நான் கூட யோசிச்சேன்..... அந்த அம்மாவும் என் கிட்டே அப்படித்தான் சொல்லுச்சு..... என்ன போலவே யோசிச்சு இருக்கும் போல.... கடைசில அந்த பாட்டு ஸீன் சூட் பண்ணுனப்ப அந்த பாப்பா மூக்கு ரொம்பவே ஒழுக ... எம்.ஜி.ஆரே அந்த பாப்பாவுக்கு 2 - 3 வாட்டி மூக்கை கிளீன் பண்ணி விட்டார்.....
எனக்கு அது கூட அப்போ பெருசா தெரியல...... ஆனா நான் என்னோட அடுத்த தெலுங்கு சூட்டுக்கு போய் இருக்க அங்கே இதே போல ப்ராப்லம்... அந்த ஹீரோ குழந்தையை திட்டி அந்த பேபியை மாத்த சொல்லீட்டார்..... எனக்கு ஒரே ஆச்சர்யம் .... நம்ம எம்.ஜி.ஆர் எப்படியாப்பட்ட மனுஷன் னு நெனைச்சேன்..... நாங்க சேர்ந்து நடிச்ச அடுத்த பட ஸ்பாட்ல இத பத்தி நான் கேக்க..... அவர் சொன்னார்.....,
"குழந்தைக்கு தனக்கு என்ன செய்யுதுன்னு சொல்ல தெரியாது..... அதான் நான் அவங்க அம்மாகிட்டே ஷூட்டிங் கேன்சல் பண்ணலாமான்னு கேட்டேன்..... அந்த அம்மா ஒரு குழந்தைக்காக ஷூட்டிங் கேன்சல் ஆகரத விரும்பல..... அதான் நான் நடிச்சேன்.... ஆனா எனக்கு அதுல உடன்பாடே இல்ல.... என்னை பொறுத்த வரை ஆர்டிஸ்ட் ஆரோக்கியமா இருக்கணும் அது குழந்தைனா கூடுதல் கவனமா கையாளனும் ...." னு சொன்னார்.....
நான் தெலுங்கு மேட்டரை சொன்னேன்..... வியப்போடு கேட்டார்.... கூடவே இன்னொரு விஷயம் சொன்னார்....
"நீ இதை எல்லார்கிட்டயும் சொல்லி வைக்காதே..... அப்புறம் உனக்கு பட வாய்ப்பு இல்லாம போய்டும்" னு சொன்னார்..... என்னோட பட வாய்ப்பு பற்றியும் கவலைப்பட்டார் அவர்..... அதுதாங்க எம்.ஜி.ஆர்.!!!
Thanks to Sri. Mayil Raj
30/8/1971 black day.
ஒரு அபூர்வ பாடல் - வெளிவராத படம் - மாடி வீட்டு ஏழை - மக்கள் திலகத்தின் பாடல் - கேட்டு மகிழ
https://www.youtube.com/watch?v=RcNGg7mEk8c
எம்.ஜி.ஆர் என்ற
சொற்கேட்டால் காதினிக்கும் அந்த பேரை ஒருவர்
சொல்ல்கேட்டல் உளமிணிக்கும் மீண்டும் மீண்டும்.
http://i160.photobucket.com/albums/t...psuhxmvf0v.jpg
A chapter about MGR in 10th std Tamil Textbook... Happy that Future generation will also know about him... Thanks to Government of Tamil Nadu... !!
அனைவருக்கும் வணக்கம் அதிக வேலையினால் நீண்ட இடைவெளிக்குப்பிறகு திரியில் வருகிறேன்
http://i57.tinypic.com/6jlswn.jpg
பிரபல சினிமா பத்திரிகையாளர் " குமுதம்" S .தேவாதிராஜன் என்கிற மேஜர்தாசன்-செண்பகலட்சுமி தம்பதியின் மகள் D .அனுஷா விற்கும்
கோவை S .ஸ்ரீனிவாசன்--S .சுந்தரி தம்பதியின் மகன் SV .வனமாலிதேவ் விற்கும் கடந்த 21-8-2015 வெள்ளிக்கிழமை அன்று சென்னை குரோம்பேட்டையில் திருமணம் நடந்தது..முதல்நாள் 20-8-2015 அன்று நடந்த வரவேற்பு நிகழ்சிக்கு ஏராளமான திரையுலகப்பிரமுகர்களும்,பத்திரிகையாளர்களும்,கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.வந்தவர்களில் பழம் பெரும் நடிகர் ஏவிஎம்.ராஜன்,குமாரி சச்சு,வெண்ணிறஆடை நிர்மலா, A.R.S என்கிற A.R..ஸ்ரீனிவாசன்,Yee.G. மகேந்திரன்,ரமேஷ்கண்ணா,உதயா, பாண்டு,பிரமிட் நடராஜன்,,பிரபலஜோதிடர் A.M.R .என்கிற A.M.ராஜகோபால், நக்கீரன் கோபால்,ஜோதிடர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன்,டாக்டர் அமுதகுமார்,பட்டுக்கோட்டை பிரபாகர்,சுபா,லேனாதமிழ்வாணன், பாமாகோபாலன்,வேதாகோபாலன்,இயக்குநர்கள் முக்தாஸ்ரீநிவாசன்,S .P.முத்துராமன், ,T.P. கஜேந்திரன்,லிங்குசாமி,...முக்தாசுந்தர்,மேஜர்சுந்தர ்ராஜன் குடும்பத்தினர், ரவிச்சந்திரன் குடும்பத்தினர்,உபன்யாசகர் நாகைமுகுந்தன்,கவிஞர் முத்துலிங்கம்,கவிஞர் பூவைசெங்கூட்டுவன்,,மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். பக்தர்கள்,சிவாஜி ரசிகர்கள்,நண்பர்கள்,உறவினர்கள்,..என்று ஏராளமானவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
-
மக்கள் திலகம் எம்,. ஜி. ஆர். பக்தர்கள் சார்பில், வண்ண பதாகைகள் வைக்கப்பட்டன. பொன்மனசெம்மலின் பக்தர்கள் நான் உட்பட, பேராசிரியர் திரு. செல்வகுமார், திரு. ஏ. ஹயாத், திரு. பாபு, திரு. நாகராஜன், மின்னல் பிரியன் மற்றும் இதர அன்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அது தொடர்பான நிழற் படங்கள், திரி நண்பர்கள் பார்வைக்கு :
http://i59.tinypic.com/nci8vq.jpg
மணமக்களுக்கு, மக்கள் திலகம் எம். ஜி. ஆர். பக்தர்கள் சார்பில், அவர் வாழ்த்தும் மிகப்பெரிய அளவிலான புகைப்படம் ஒன்று பரிசளிக்கப்பட்டது.
http://i62.tinypic.com/egztrn.jpg
திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பித்த கவிஞர்கள் திரு. பூவை செங்குட்டுவன் மற்றும் திரு. முத்துலிங்கம் அவர்களுடன் மக்கள் திலகத்தின் பக்தர்கள்
http://i61.tinypic.com/23wo01f.jpg
திருமண வரவேற்புக்கு வருகை தந்த திரு. நக்கீரன் கோபாலுடன், மக்கள் திலகத்தின் பக்தர்கள் !
http://i61.tinypic.com/15g8c5i.jpg
Wish you a very happy and peaceful retired Life Sivajisenthil Sir:
https://www.youtube.com/watch?v=4AByGEZD5UM
https://www.youtube.com/watch?v=mCKd-TMaJgQ
அந்தி மழை - ஆகஸ்ட் 2015
http://i61.tinypic.com/1037q6x.jpg
http://i61.tinypic.com/o0w5qu.jpg
முடியாது
http://i62.tinypic.com/6gk093.jpg
http://i61.tinypic.com/ehdqpx.jpg
fade in, fade out முறையில் அருமையாக நான் ஆணையிட்டால் படத்தின் எனது பதிவுகளை வீடியோ மூலம் பதிவு செய்த எஸ்வி சார் அவர்களுக்கு என் நன்றி..super...
கலைவாணர் வார்த்தைக்கு மறுவார்த்தை சொல்லமாட்டார்"மக்கள் திலகம் " எம்.ஜி.ஆர். .....heart emoticon
சிவாஜிகணேசன் இரட்டை வேடத்தில் நடிக்கும் உத்தமபுத்திரன்.. என்ற அரைப்பக்க விளம்பரம் பிரசுரமான அதே நாளில்,
"எம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் நடிக்கும் உத்தமபுத்திரன்" என்ற அரைப்பக்க விளம்பரம் வேறு பக்கத்தில் பிரசுரமாகியது! இந்தப் படத்தை "எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்" தயாரிக்கப் போவதாகவும் அந்த விளம்பரம் கூறியது. அதாவது எம்.ஜி.ஆரின் சொந்தப்படம்!
இதைப் பார்த்த ரசிகர்கள் வியப்பும், திகைப்பும் அடைந்தனர். திரை உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. "சிவாஜி, எம்.ஜி.ஆர். இடையே பெரும் மோதல் உருவாகி விட்டது" என்று எல்லோரும் நினைத்தனர். ஏற்கனவே இருதரப்பு ரசிகர்களும் மோதிக்கொண்டிருந்த நேரம் அது.
இந்த விவகாரத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தலையிட்டார். எம்.ஜி.ஆருக்கு போன் செய்து, "நீங்கள் ஏற்கனவே நாடோடி மன்னன் படத்தை தயாரித்து வருகிறீர்கள். அதில் இரட்டை வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள். சிவாஜி கணேசன் வளர்ந்து கொண்டிருக்கும் பிள்ளை. உத்தமபுத்திரனை சிவாஜிக்கு விட்டுக்கொடுங்கள்" என்று கூறினார்.
கலைவாணரிடம் அளவு கடந்த மதிப்பும், மரியாதையும் உடையவர் எம்.ஜி.ஆர். கலைவாணர் வார்த்தைக்கு மறுவார்த்தை சொல்லமாட்டார். எனவே, போட்டியில் இருந்து அவர் விலகிக் கொண்டதாக, அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
[நன்றி :மாலைமலர்]
செப்டம்பர் மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள்
பைத்தியக்காரன்
சர்வதிகாரி
தாய்க்கு பின் தாரம்
ராஜ தேசிங்கு
தொழிலாளி
கன்னித்தாய்
தனிப்பிறவி
காவல்காரன்
ஒளிவிளக்கு
அன்னமிட்ட கை
நம்பிக்கை எதன்மீது ஏற்பட்டாலும் சரிதான், அது உண்மையில் நபிக்கைக்கு உரியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி கிட்டும்.
- புரட்சித்தலைவர்
தமிழுக்கு எம்.ஜி.ஆர் சொந்தம்
தருகின்றார் நாளும் வசந்தம்.
அமிழ்திறனும் உயரிய எம்.ஜி.ஆர்
ஆம், இந்த நாட்டின் சொந்தம்.