http://i1039.photobucket.com/albums/...psnf0jd4d9.jpg
http://i1039.photobucket.com/albums/...psf00u99fo.jpg
Printable View
என் அன்புமிக்க திரு.முரளி சார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கள் நல்ல உடல் நலத்தோடு நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்
c.ramachandran
அனைவருக்கும் வணக்கம்.
நடிகர் திலகத்தை நேரில் சந்தித்து உரையாடி அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நிறைவேறா விருப்பத்தை நனவாக்கிய ராகவேந்தர் சார் அவர்களே, பெருந்தலைவரும் நடிகர் திலகமும் இணைந்து ஆசி வழங்குவது போல் பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய உங்களுக்கு மனமார்ந்த நன்றி.
திருக்குறளாக ஈரடியில் வாழ்த்துக் கூறிய ஆதவன் ரவி, [அலைபேசியிலும் வாழ்த்து தெரிவித்தார்]
ஆசி கூறிய பெரியவர் ராமஜெயம் சார்.
வாழ்த்து தெரிவித்த அன்பு நண்பர் சித்தூர் வாசு,
வாழ்த்திய அருமை நண்பர் மஸ்கட் வாழ் சங்கர்,
வாழ்த்து தெரிவித்த அருமை நண்பர் சிவாஜிதாசன்,
தன் வழக்கமான பாணியில் அருமையான பாடல்களை வழங்கி மனமார வாழ்த்திய மூத்த சகோதரர் Dr சிவாஜி செந்தில்,
வாழ்த்திய இளைய ஆவண திலகம் செந்தில்வேல்,
வாழ்த்து தெரிவித்த அருமை நண்பர் வளைகுடா வாழ் பரணி,
அருமையான படத்தோடு வாழ்த்திய அருமை நண்பர் வாசு,[உங்கள் வருகையே எங்களுக்கு எவ்வளவு உவகையாக இருக்கிறது!]
வாழ்த்து தெரிவித்த மூத்த சகோதரர் கனடா வாழ் சிவா,
வாழ்த்து தெரிவித்த இளைய சகோதரர் எங்கள் மதுரையின் மைந்தன் சுந்தர்ராஜன்,
வாழ்த்திய அன்பு நண்பர் சுந்தர பாண்டியன் [sss]
வாழ்த்து தெரிவித்த அருமை நண்பர் பெங்களூர் வாழ் பாலா என்ற பாலகிருஷ்ணன்,
வாழ்த்து தெரிவித்த அருமை நண்பர் திருச்சி ராமச்சந்திரன்,
உங்கள் அனைவருக்கும் என் சிரந்தாழ்ந்த நன்றி!
இது தவிர அலைபேசியில் வாழ்த்து தெரிவித்த எங்கள் மதுரையின் மற்றுமொரு மாணிக்கம் VCS, அருமை நண்பர் கோபால், ஆவண திலகம் சுவாமி, அன்பு நண்பர் பார்த்தசாரதி, மூத்த ரசிகர் தூத்துக்குடி நடராஜன் சார், அன்பு இளவல் பெங்களூர் செந்தில், கோவை நண்பர் Dr ரமேஷ் பாபு அன்பு நண்பர் சாந்தி ராமஜெயம், நமது மையத்தின் நெறியாளர் அன்பு நண்பர் திருமாறன்
இவர்களுக்கும் என் சிரந்தாழ்ந்த நன்றி!
அன்புடன்
ஓரிரு நாட்களுக்கு முன், ஒரு திருமண விழாவிற்காக கோவை செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சந்தர்ப்பத்தில் கிடைத்த சமயத்தில் திரு செந்தில்வேல் அவர்களை சந்தித்தேன். என்ன ஒரு அருமையான நிகழ்வு. அவருடைய சகோதரர் மற்றும் அவருடைய நட்பு வட்டாரத்தைப் பற்றியும் அவர்கள் நடிகர் திலகத்தின்பால் கொண்ட ஆழ்ந்த அன்பையும் பற்றி அருமையாகச் சொன்னார். தன்னிடமிருக்கக் கூடிய ஆவணங்களை எடுத்துக் காட்டி வியப்பில் ஆழ்த்தினார். பெரும்பாலானவற்றை அவர் முன்னமே பகிர்ந்து கொண்டு விட்டார். இன்னும் சில உள்ளன.
அவருடைய முனைப்பும் இளம் வயதில் அவர் நடிகர் திலகத்தின் பால் வைத்திருக்கும் அளவற்ற பாசமும் அனைவருக்குமே ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கின்றன.
திரு கோவை செந்தில்வேல் அவர்களுக்கு என் உளமார்ந்த நல்வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் கூறிக்கொள்கிறேன்.
அன்புடன் உபசரித்தமைக்கு உளமார்ந்த நன்றி செந்தில்வேல்
http://i1028.photobucket.com/albums/...psxvyh5fd7.jpg
"தங்கைக்காக"
பார்த்து வந்தேன்-
தலைவனுக்காக.
மதியம் என்ன சாப்பிட்டோம்?
என்று இரவில் மறந்து போகிற
மனித மறதி யதார்த்தம் தகர்த்து, மாசற்ற கலைஞனை
ஒரு நொடியும் மறவாத
மக்களின் கடல் அலையடித்தது
மதுரை சென்ட்ரலில்-
தலைவனுக்காக.
அரங்கத்தின் உள்ளிருந்து
ஆர்ப்பரிக்கும் கூட்டத்திற்கு
இணையாக, அரங்கத்தின்
வெளியிலிருந்து ஒரு கூட்டம்
பாடுபட்டதெல்லாம்-
தலைவனுக்காக.
கலையை உயரத்திற்குக்
கொண்டு போன
காவியக் கலைஞனின்
உருவப் படத்தில்
மாலைகள் சூட்ட
உயிர்ப் பயம் மறந்து
உயரத்தில் ஏறி நின்ற
ரசிகனின் துணிச்சல்-
தலைவனுக்காக.
கலையின் மறுவடிவத்தைத்
தமது கந்தகக் குரலால் சத்தமாய் வாழ்த்தி, அரங்க வாசலில் வெடிகள் பேசியதெல்லாம்-
தலைவனுக்காக.
நடிகர் திலகம் பால்
கொண்ட அன்பால், பருத்திப்பால் வியாபாரி ஒருவர்
தனது தள்ளுவண்டியை
அய்யனின் படங்களாலேயே
அலங்கரித்து, அய்யனின் படப்
பாடல்களையே அதனுள்
ஒலிக்கச் செய்து, உண்மை
ரசிகனுக்கு உதாரணமாய்
அரங்கத்தின் எதிரே நின்றது-
தலைவனுக்காக.
திரைப்படம் துவங்குவதைத்
தெரிவிக்க மணிச்சத்தம்
ஒலித்ததும், ஓங்கிக் குரலெடுத்து கூட்டம் மகிழ்ந்தது-
தலைவனுக்காக.
"நடிகர் திலகம் சிவாஜி கணேசன்" என்று
திரையில் ஓடிய எழுத்துக்களை
எல்லோரும் இதயத்துக்குள்
ஒரு முறை ஓட விட்டது-
தலைவனுக்காக.
மிக எளிமையான, அடுத்தடுத்து
எப்படி காட்சிகள் அமையுமென்று எவரும்
யூகித்து விட முடியும் ஒரு
திரைப்படம், ஒரு பிரம்மாண்ட
ரசாயனம் பூசிக் கொண்டது-
தலைவனுக்காக.
அண்ணன்- தங்கை பாசக் கதை
என்றாலே அழத் தயாராகும்
கண்களில், இந்தப் படம் பார்த்து
மகிழ்ச்சி துளிர்க்கிறது-
தலைவனுக்காக.
கண்களை மூடிக் கொண்டு,
கைநீட்டி நம்மவர் நடந்து
வரும் அறிமுகக் காட்சியை,
கண்கொட்டாமல் ரசிக்கும்
கூட்டத்தின் சந்தோஷம்-
தலைவனுக்காக.
ஓட்டுநர் சீருடை அணிந்து,
பூட்ஸ் சப்திக்க, நம்பியாரை
நோக்கி நடக்கும் அந்த ராஜநடை கண்ட ரசிகர்கள்
கூவல்-
தலைவனுக்காக.
தன்னைத் தாயாகவும், தந்தையாகவும் பாவித்துத்
தங்கை பாட, இதழ்களும்,
கண்களும் சிரிக்க, கன்னத்தில்
கை பொருத்திக் காட்டும்
பேரழகை, கலையன்னை
ஒருவருக்குத்தான் தந்தாள்-
தலைவனுக்காக.
"உன்னோட பொன்னான
கைக்கு தங்க வளையல்
போடப் போறேம்மா" மிகச்
சாதாரண தமிழ் வார்த்தைகள்,
தம்மைப் பேசிக் கௌரவப்படுத்தக் காத்திருந்தன-
தலைவனுக்காக.
------------------------
பாலையாவிடம் ஒரு காட்சியில் சொல்கிறார்..
"எனக்கு வண்டி ஓட்டத் தெரியும்..வாங்க." என்று.
ஒரு வசனமாக ஒப்பிக்காமல்,
தனக்குத் தெரிந்ததை,தெரியும்
என்று சொல்லும் மனிதராய்
வாழ்ந்து நகரும் போது
எனக்குள் நிகழ்ந்த ரசனை
மேம்பாட்டை..
ஆயிரம் அலைச்சல்களுக்கும்,
அலுப்புக்குமூடே என்னையும்,
என் கவிதையையும் நலம்
விசாரித்த திரு.சுந்தரராஜன்,
அன்பு மாறாத திரு.V.C.S,
எப்பவும் போல் சுறுசுறுப்பாய்
திரு.வெங்கடேஷ், முதன்முறையாய் நேரில்
சந்தித்த திரு.கார்த்திகேயன்,
அருகிருந்து அன்பு பாராட்டி,
பின்னிரவில் சிற்றுண்டியோடு
என்னை உடன் வந்து வழியனுப்பி வைத்த
திரு.குமார்..
இவர்கள் காட்டிய அப்பழுக்கற்ற பேரன்பை..
நன்றிகளோடு
சமர்ப்பிக்கிறேன்..
நம் தலைவனுக்காக.
மாலை மயங்கும் நேரம். மாநகரிலே மிகப் பெரிய அரங்கம். அரங்கத்தினுள்ளில் நீள மேடை. ஒளிர்ந்து கொண்டிருக்கும் விளக்குகள் அணைகின்றன. மேடையின் நடுவில் ஒரு வெண் திரை உயிர் பெறுகிறது.
பனிமலைகள் மூடிய இமயம். தங்கள் தவ வலிமையினால் ஈசனை நேரில் காணும் பாக்கியம் பெற்ற சிவனடியார்கள் ஓர் இடத்தில குழுவாக நின்று சிவன் நாமத்தை உச்சரிக்க, மற்றொரு இடத்தில சுடுகாட்டு புலையனின் தொண்டர் படையாம் பூதகணங்கள் தாளத்திற்கேற்றவாறு ஆடிக் கொண்டே மத்தளம் வாசிக்கிறார்கள். இந்த தாள லயங்களின் ஓசைக்கு நடுவே ஒரு தம்பூரா ஒலி உரத்துக் கேட்க பிரம்மபுத்திரன் தன் கம்பீரக் குரலில் சம்போ மகாதேவனை விளிக்க நந்தி தேவன் மிருதங்கம் வாசிக்க அங்கே பக்தி பரவச நிலை.
சுற்றிலும் புகை சூழ ஒரு குழுவாய் கூடி தேவ கன்னியர் நடனமாட, புகை விலக, உலகாளும் உமையவள் அன்னை மலைமகள் பச்சை நிற மேனி கொண்ட சக்தியவள் கண் மூடி கரம் குவித்து பூவிதழ்கள் எடுத்து நமச்சிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க என்று உலகநாதனை தன் சரிபாதியை பூஜிக்க,
சிவனடியார்களும் பூதகணங்களும் நந்தி தேவரும் மகரிஷி நாரதனும் பார்வதி தேவியோடு சேர்ந்து உருகி தாழ் பணிய எங்கும் புகை சூழ்ந்து அனைவரையும் மறைக்க புகை விலக அங்கே புலித்தோல் ஆசனத்தில் அமர்ந்த உலகாளும் ஐயன் சர்வேஸ்வரன், கழுத்திலே நாகத்தை ஆபரணமாய் அணிந்து, கங்கையை தலையிலே சுமந்த பரம்பொருள் பரமசிவன் தன் கரம் உயர்த்தி உலக மக்களுக்கு ஆசி கூற அப்படியே திரை நிச்சலனமாக, மேடையிலும் புகை சூழ " உங்களையெல்லாம் 1965 ஜூலை மாதம் 31-ந் தேதிக்கு கூட்டிக் கொண்டு போய் விட்டோம் பார்த்தீர்களா" என்று அசரிரீயாய் ஒரு குரல் ஒலிக்க தங்கள் நாதனை கண்ட அபிமானிகள் கைத்தட்டலால அதை ஆமோதிக்க, அவர்களில் பக்தி முற்றிய சிலர் கைலாயம் சென்று தங்கள் சிவா[ஜி] பெருமானை நேரில் கண்ட ஆனந்தத்தில் கண்களில் கண்ணீர் நிறைந்து நிற்க,
இப்படியாகத்தானே தமிழ் திரையுலகத்தின் வரலாற்றை புரட்டிப் போட்ட புராண இதிகாச காவியமாம் திருவிளையாடல் திரைக்காவியத்தின் 50-வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டம் இனிதே துவங்கியது!
(தொடரும்)
அன்புடன்
http://i1028.photobucket.com/albums/...psnpbpllv2.jpg
Dear all,we are glad to inform you,2nd movie of SIVAJI FILM CLUB is LOVE THRILLER "PUDHIYA PARAVAI"on 14.02.2016 at 5pm at Sruthi hall,sankaranpillai road near SRC. Annadurai,akila indhiya sivaji mandram.
இன்று மாலை, என் அலைபேசிக்கு இப்படி ஒரு குறுஞ்செய்தி...
"சிவாஜி ஃபிலிம் கிளப்"பின்
இரண்டாம் திரைப்படமாக,
வருகிற 14.02.2016 அன்று
திருச்சியில் "புதிய பறவை"
என்று.. அகில இந்திய சிவாஜி
மன்றத்தின் சிறப்பு அழைப்பாளர் திரு.அண்ணாதுரை அவர்களிடமிருந்து.
குறுஞ்செய்தி அனுப்பிய
கொஞ்ச நேரத்தில் அவரே
தொடர்பு கொண்டு பேசினார்.
திருச்சி மாநகரில்
சீரும் சிறப்புமாய் சிவாஜி ஃபிலிம் கிளப் துவக்கி,
கௌரவமான முதல் படமாய்
"கௌரவம்" படத்தையே
திரையிட்டு பதினான்கு நாள்
இடைவெளியில் அடுத்த
படத்தை திரையிட ஆயத்தமாகி
விட்டவரின் குரலில் கொஞ்சமும் அலுப்பில்லை.
உழைக்கத் தயங்காத அவரிடம்
ஒரு துளி சலிப்பில்லை.
அய்யன் நடிகர் திலகத்தின்
மீதான அவரது பக்தி அவரது
ஆர்வக் குரலில் தொனிக்கிறது.
இந்தத் திரைத் திருவிழாவை
அவர் தொடர்ந்து நடத்துவார்
எனும் நம்பிக்கை நமக்குப்
பிறக்கிறது.
---------------------------
இக்காலத் திரையரங்குகள்
புதிய தொழில்நுட்பத்தின்படி அமைக்கப்பட்டுள்ளதால், நடிகர் திலகத்தின் திரைப்படங்களை
ஆளும்,பேருமாய் திரையரங்குகளில் போய்ப்
பார்த்து மகிழ்கிற பொன்னான
வாய்ப்பை நாம் இழந்திருக்கிறோம்.
திரு.அண்ணாதுரை, திருச்சி வாழ் ரசிகர்களுக்கு அந்த பொன்னான வாய்ப்பை
மீட்டுக் கொடுத்திருக்கிறார்.
ரசிகர்களெல்லோரும் ஓரிடத்தில் சேர்ந்து மகிழவும்,
எண்ணங்கள் பரிமாறவும்,
நடிகர் திலகத்தைக் கொண்டாடவும் அவர் பேருதவி
செய்திருக்கிறார்.
-------------------------
காதலர் தினத்தன்று, காதலைக்
கலையோடு பேசி வென்ற
"புதிய பறவை"யைத் திரையிடும் "சிவாஜி ஃபிலிம்
கிளப்" தொடர்ந்து வெல்லட்டும்.
உலகம் முழுசும் கேட்கும்படி,
உத்தமரின் புகழை அது உரக்கச்
சொல்லட்டும்.
Unsung talent behind the screen singing for NT!! The mimicry artiste Sadhan graced by NT!!
Watch from 6:45 to 10:15Quote:
திறமை உள்ளவர் எவரெனினும் தன்னுடன் இணைந்து பணியாற்றும்போது தகுந்த விதத்தில் அவர்களைப் பெருமைப் படுத்துவதில் பெருந்தன்மையாளர் நடிகர் திலகமே ! சதன் அந்தக் கால கட்டத்தில் ஒரு பலகுரல் விற்பன்னராக(Mimicry artiste and yodelling expert like singer Kishore Kumar!) வலம் வந்தவர். நிறைய நடிகர் திலகத்துடன் பணியாற்றும் வாய்ப்பு பெற்றவர்!!
நீலவானம் திரைக்காவியத்தில் ஒரு நீச்சல்குள பாடல் காட்சியில் பெண்மைக் கீச்சுக் குரலில் சதன் பாடும் ஓ லக்ஷ்மி ஓ மாலா ஓ நீலா .. பாடலுக்கு வாயசைத்துபெருமைப் படுத்துகிறார் நடிகர்திலகம்!
https://www.youtube.com/watch?v=Ju_EXaGVg6g
இருமலர்கள் திரைப்படத்திலும் வென்ட்ரிலாக்கிசம் என்னும் பொம்மை வழியே பேசும் பாடும் காட்சியில் நடிகர்திலகத்திற்கு சதன் குரல்கொடுத்திருப்பார்.
ராமன் எத்தனை ராமனடி சதனின் பங்களிப்பு மகத்தானது சொர்க்கம் திரைப்படத்தில் நடிகர் திலகத்தின் கார் டிரைவராக தோன்றுவார் படித்தால் மட்டும் போதுமாவில் இவ்வகைக் கலைஞர்களுடன் சதனுக்கும் ஒரு முழுநீள ஆடல் பாடல் காட்சியில் வாய்ப்பளித்து பெருமைப்படுத்தினார் நடிகர்திலகம் !
https://www.youtube.com/watch?v=s0Qt6uD8CZQ
https://www.youtube.com/watch?v=Eeod3MiL-YQ
http://www.thehindu.com/multimedia/d...601_51679e.jpg
எங்கிருந்தாலும் வாழ்க என்று அண்ணா நடிகர் திலகத்தை வாழ்த்தினார். எங்கிருந்தால் என்ன நான் உன்னை மறவேன் என தானும் வாழ்நாள் முழுதும் அண்ணாவைப் போற்றினார் நடிகர் திலகம்.
உண்மையான நட்பின் அடையாளச் சின்னங்கள்...
மனிதரில் மாணிக்கம்-1973.
என்னுடைய அத்தை கணவர் ,கன்னடத்தில் எடுத்த படம் அருணோதயா.(இவர்தான் பெல்லி மோடா படம் மூலம் புட்டண்ணா வை இயக்குனராக அறிமுகம் செய்தவர்)
இதை தழுவி தமிழில் எடுக்க பட்ட படம் மனிதரில் மாணிக்கம்.
படம் என்னவோ சோதனையே. ஆனால் கௌரவ நடிகரான ஜோடியில்லாத சிவாஜியை ,சி.வீ.ராஜேந்திரன் ஒரு surprise package ஆக பயன் படுத்தி படத்திற்கு புதிய ஒளி பாய்ச்சியிருந்தார். காமெடி கலந்த eccentric Doctor பாத்திரத்தில் நடிகர்திலகம் பின்னியிருப்பார்.
இந்த பாத்திரம் நான் நிஜமாகவே வாழ்வில் சந்தித்த மூன்று மருத்துவர்களை நினைவு படுத்தியது.(இதை என்னுடைய பத்து நண்பர்கள் அவர்கள் வாழ்க்கையோடு இணைத்து உறுதி படுத்தினர்).கதையின் இழையோடு பயணிக்கும் இந்த பாத்திரம் ,நடிகர்திலகத்தின் நடை முறை வாழ்க்கையில் வினோத மனிதர்களின் சாயலை சித்திரித்ததுடன். comedy sense &timing பிரமாதமாக கலந்திருக்கும். அவ்வளவு delightful &Enjoyable Character . அப்பப்பா என்ன மகா நடிகனையா !!!எங்கள் தங்கராஜா,கெளரவம்,ராஜபார்ட் ரங்கதுரை ,மனிதரில் மாணிக்கம் என்று ஒன்றுக்கொன்று தொடர்பேயில்லாத வேறு பட்ட பாத்திரங்கள்!!!!உலகில் இனி இப்படி ஒருவர் பிறக்க சாத்தியமேயில்லை.
ஆரம்ப அறிமுகமே ஜோர். கிறுக்கு தனமான ,பேஜார் நகைச்சுவை உணர்வுடன் மனிதாபிமானம் மிக்க டாக்டர்.
ஏழை நோயாளியிடம் காட்டும் எள்ளல் மிகுந்த அனுதாபம், ராஜனுடன் ஆரம்ப காட்சிகள்,பிரமிளாவுடன் (மனோரமா) I will sing for you என்று வித வித நடன கூத்தடிப்பு. (படு ஜாலியான performance .என்றும் ரசிக்கலாம்),கடைசி கடத்தல் காட்சியில் காமெடியன் இல்லாத குறையை போக்கி பின்னி விடுவார்.(இதே பாத்திரம் சற்றே மாற்றத்துடன் அபூர்வ ராகங்களில் நாகேஷ் செய்தார்).
என்ன சொல்ல? சிவாஜி என்ற நடிப்பு தெய்வம், வளர வளர என்னுள் வியாபித்து என்னை ஆச்சர்ய படுத்தி,பக்தியில் மேலும் மேலும் திளைக்கவே வைக்கிறது.
திரு முரளி சார்,
அமர்க்களமான ஆரம்பம்,அதிக இடைவெளி இல்லாமல் தொடரவேண்டும் என்பது எங்களது ஆசை
நடிகர்திலகம் நடிப்பை வித விதமாக அலசி ஆகி விட்டது. ஆனாலும் புதிது புதிதாக ஏதாவது தோன்றிய படியே இருக்கும். நண்பர் வாசுதேவனுடன் ,இதை பற்றி அடிக்கடி பேசியிருக்கிறோம்.
ஒரு எதிர்பாரா தன்மை ,அல்லது அசைவுகள் அல்லது நடிப்பின் பாணி ,கதாபாத்திரத்தை ஒட்டி அமையும்.
சிறு வயதில் தீபாவளிக்கு ராக்கெட் விட்டிருக்கிறீர்களா?
நாங்கள் பால் வாங்கும் கண்ணாடி குடுவையில் வைப்போம். அதில் வித விதமாக ராக்கெட் தன்னை நிறுத்தி கொள்ளும். சில நேரம் பற்ற வைத்த பிறகும். சில நேரம் எதிர்பார்த்தது போல செங்குத்தாக மேலே. சில நேரம் பக்கத்து வீட்டு ஜன்னல். சில நேரம் ,நம் முகத்திற்கு நேரே . என்று .கிட்டத்தட்ட ,நடிகர்திலகம் இதை போல நமக்கு கடைசி நிமிட ஆச்சர்யம் தந்த படங்களுக்கு குறைவேயில்லை.
ஆரம்ப உதாரணங்கள்--
1)பராசக்தி படத்தில் பாட்டில், கட்டி அழும் போது என்று ஒருவரை கட்டி அழுவது போல பாவித்து, நைஸ் ஆக மூக்கை சிந்தி துடைப்பார்.
2)நிறை குடம் படத்தில் கண்ணொரு பக்கம் பாட்டில் ,மேலே நிற்கும் வாணிஸ்ரீயை அணுக ஒரு படிகட்டு வழியாக போவார் என்று நினைக்கும் போது ஸ்டைல் ஆக திரும்பி,இன்னொரு படிகட்டு வழி மேலேருவார்.
3)அன்னையின் ஆணை படத்தில் கட்டி போட பட்டிருக்கும் ரங்கா ராவ் ,தன்னை அவிழ்த்து விட சொல்லி ,தனிக்கு தனி மோதலாம் என்று சொல்ல ,கைகளை நெட்டி முறிக்கும் போது ,அதை ஏற்பதாக தோன்ற வைக்கும். ஆனால் அம்புகளை ,வேடம் ஏன் துறக்க வேண்டும் என்று கிண்டலாக முடிப்பார்.
4)வசந்த மாளிகை படத்தில் அருகருகே சிவாஜி முன் புறம் திரும்பியிருக்க ,வாணிஸ்ரீ பின் புறம் காட்டி நிற்க ,மயக்கமென்ன பாட்டில் , இடது கையை சிறிதே வளைத்து ,இடையை இழுப்பார்.
5)அதே படத்தில் குடிமகனே பாட்டில், கீழே கிடக்கும் சகுந்தலாவை கை கொடுத்து தூக்கு முன் ஒரு செல்ல உதை காலால்.
இன்னும் எல்லோரும் தனக்கு தெரிந்ததை எழுதுங்கள்.சுவாரச்யமாக்கும்.
அண்ணா.
எங்கள் இதயங்களில் நீங்காத இடம் பெற்ற தலைவர். இன்னும் கொஞ்ச நாட்கள் உயிரோடு இருந்திருந்தால் , காமராஜர் மறக்கடிக்க படும் அளவு சாதித்திருப்பார்.
இவரிடம் நான் மதிக்கும் அம்சங்கள்.
1)அழகாக தன்னை புதிப்பித்து முன்னேறிய அரசியல்வாதி.பெரியாரின் யூத பாணி (முதல் உலக போர்)கொள்கையிலிருந்து அழகாக கழட்டி கொண்டது (பெரியார் அரசியலில் நேரடியாக ஈடு படாமல்,எந்த அரசு வதாலும் தன கொள்கைகளை சாதிக்க நினைத்தவர். ), திராவிட நாடு கொள்கையில் இருந்து மாற்றம், ராஜாஜியிடம் உறவு,பதவிக்கு வந்ததும் பெரியாருடன் நெருக்கம்)இப்படி.
2)அரசியல் ,நிலசுவாந்தாரர்கள்,உயர்ஜாதி மக்களால் பீடிக்க படாமல் ஜனநாயக படுத்தியவர்.
3)சிறந்த சிந்தனையாளர் ,படிப்பாளி,பேச்சாளர் என்று ஆயிரம் இருந்தும்,பாமரர்கள் நாடி பிடித்து அரசியல் நடத்தியவர்.உண்மையான மக்கள் தலைவர்.
4)தமிழை உரிய பீடத்தில் அமர்த்தி ,ஹிந்தி பேயை விரட்டியவர்.
5)அவர் அரசு நடத்தியவரை, அதிகார மட்டத்தில் தலையீடோ,பெரும் ஊழலோ அண்டாமல் பார்த்து கொண்டார். குடும்பத்துக்காக கூட எதையும் சேர்த்ததில்லை.
6)நடிகர்திலகம் இவர் ஆதரவில்தான் ,நாடக ,சினிமா துறைகளில் வளர்ந்தார். சிவாஜிக்கு தென்னக மார்லன் பிராண்டோ பட்டம் கொடுத்தவர். திமுகவிலிருந்து விலகிய பின்னும் அன்பு காட்டியவர். நடிகர்திலகத்தின் படங்களை எங்கேயிருப்பினும் முதல் நாளே பார்க்கும் அளவு ஆத்மார்த்த ரசிகர். அண்ணா கலந்து கொண்ட இறுதி கூட்டம் சிவாஜியின் 125 ஆவது பட விழா.(காமராஜரின் கடைசி சிவாஜி வீட்டுக்கு சென்று பிறந்த நாள் வாழ்த்து கூறியது)
7)நடிகர்திலகம் தான் நடித்த தில்லானா மோகனாம்பாள் படத்தில் கண் பட்டதால் வரிகளை ,மருத்துவமனையில் போராடி கொண்டிருந்த அண்ணாவை நினைத்தே ஐடம் பெற செய்தார் .அண்ணா இறந்த பிறகு தெய்வ மகனில் ,தெய்வமே பாட்டில் அண்ணா என்று கதறி உருகியதும் இந்த மக்கள் தலைவனுக்காகவே.
From facebook
அன்புள்ள மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே, மதுரை சென்ட்ரல் தியேட்டரில் 29.01.2016 அன்று நமது தலைவரின் தங்கைக்காக திரைப்படம் வெளியானது. மதுரையில் தொடர்ந்து சிவாஜி படங்களை வெளியிட்டு வரும் மதுரை சிவா மூவீஸ் இந்தப் படத்தையும் வெளியிட்டது, மதுரை சிவா மூவீஸ் தான் தற்போது தலைவரின் சிவகாமியின் செல்வன் திரைப்படத்தை டிஜிட்டலில் உருவாக்கியுள்ளது. எப்போது நமது மக்கள்தலைவரின் படம் போட்டாலும் ஒரு கூட்டம் இந்தப் படம் ஓடாது என்று தியேட்டர் முதலாளிகளிடம் கூறுவர். இந்த தாக்குதலுக்கு தங்கைக்காக திரைப்படமும் தப்பவில்லை.
தங்கைக்காக திரைப்படத்தின் போட்டோ கார்டு 23.01.16 அன்று தியேட்டரில் வைக்கபட்டது. அன்று முதலே அதைப் பார்த்தவர்கள் அவசியம் இந்தப் படம் பார்க்கவேண்டும் என்று சிலரும், இந்தப் படம் நான் பார்த்ததேயில்லை அவசியம் பார்க்கவேண்டும் என்று சிலரும் பேசிக் கொண்டதை கேட்க நேர்ந்தது, அன்றே படத்தின் வெற்றி நிர்ணயிக்கபட்டது. கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக படத்திற்கான போஸ்டர்கள் அனைத்தும் வித்தியாசமாகவும், அதே நேரத்தில் சூப்பராகவும் இருந்தது.
படத்தின் முதல் நாள் வசூல் 15,000 ஐ தாண்டியது. தியேட்டர் மேலாளரும் மற்ற விநியோகஸ்தர்களும் வியப்படைந்தினர். ஒரு சிலர் சிவா மூவீஸ் நிர்வாகிகளிடம், இவ்வளவு வசூல் ஆகும் என்று யாரும் நினைக்கவேயில்லை, இந்த வசூல் நீங்கள் இந்த படத்தை விளம்பரப்படுத்திய விதம் தான் இந்த வெற்றிக்கு காரணம் எனத் தெரிவித்தனர். படத்தின் வசூல் படத்திற்காக உழைத்த எனக்கு, பழனி, வெங்கடேஷ், பாண்டி, குமார், ராஜன் அனைவருக்கும் மிகவும் சந்தோசமாக இருந்தது. 31.1.16 ஞாயிற்றுக் கிழமை வசூல் எப்படி இருக்கும் என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், சனிக்கிழமையும் வசூல் 12,300 ஐ தொட்டது.
நாங்கள் எதிர்பாா்த்திருந்த ஞாயிறு மாலைக் காட்சி வந்தது. மாலை 5 மணியிலிருந்தே ரசிகர்கள் வரத் தொடங்கினர். நான் 5.30 மணிக்கு தியேட்டர் வாசலைத் தொட்ட போது ரசிகர்கள் கூட்டம் தியேட்டர் முழுவதும் கூடி இருந்தது. மக்கள்தலைவரின் சாதனைகள் விளக்கும் சுவரொட்டிகளை அகிலஇந்திய சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் சுந்தராஜன், ரமேஷ்பாபு, சோமசுந்தரம், பழனிச்சாமி மற்றும் இன்பா அவர்களின் சார்பிலும், சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் பாண்டி அவர்கள் ஒட்டிய பிரமாண்ட போஸ்டர் மற்றும் வெங்கடேஷ், ராஜன், குமார் ஆகியோர் சார்பில் வைக்கப்பட்ட முன்றாண்டு சாதனைகளை விளக்கும் பேனர் மற்றும் சென்ட்ரல் தியேட்டரில் வெளியான நமது மக்கள்தலைவரின் படங்கள் ஓடிய நாட்கள் தாங்கிய பேனர் ஆகியவற்றைப் படிப்பதெற்கென்றே ஒரு கூட்டம் வந்திருந்தது.
தியேட்டர் வாசலில் ரசிகர் ஒருவர் விடாமல் வெடி வெடித்துக் கொண்டிருந்தார். தியேட்டரில் சிவா மூவீஸ் சார்பில் வைக்கப்பட்டிருந்த தலைவரின் படத்திற்கு மாலைகள் குவிந்த வண்ணம் இருந்தது. ரசிகர் ஒருவர் உயரத்தில் ஏறி வருகின்ற மாலைகளை வாங்கி தலைவருக்கு அணிவித்துக் கொண்டிருந்தார். 6 மணி அளவில் தியேட்டர் முதலாளி உள்ளே வந்தார், அவர் ரசிகர்களின் கூட்ட நெரிசலைத் தாண்டி தான் உள்ளே வர முடிந்தது.
சமீப காலமாக ஒரு படத்தைத் தவிர அனைத்துப் படங்களும் ஞாயிறு வசூல் 10,000 தொடுவதற்கு தயங்கிக் கொண்டிருந்த நேரத்தில், நமது மக்கள்தலைவரின் படங்களில் எந்த விதமான சிறப்புக்களையும் பெறாததோடு மட்டுமல்லாமல் கருப்பு வெள்ளைப் படமான தங்கைக்காக 11,500 ஐ தொட்டது. வந்திருந்த விநியோகஸ்தர்கள் அனைவரும் மூக்கின் மேல் விரல் வைத்து யோசிக்க ஆரம்பித்தனர். சாதாரண படமே இந்த வசூலை தருகிறது என்றால், இதை விட நல்ல படங்கள் போட்டால் வசூல் இன்னும் அதிகமாக வரும் என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டனர்.
துாத்துக்குடியிலிருந்து வடிவேல் அவர்கள் நமது தலைவரின் ரசிகர்களுடன் வந்திருந்து ஞாயிறு மதியக் காட்சி பார்த்து விட்டுச் சென்றார். நமது மக்கள்தலைவரை கவிதை மழையில் நனைய வைக்கும் கவிதைத் திலகம் ஆதவன் ரவி அவர்கள் அற்புதமான ஒரு கவிதையை எழுதி வாசிக்கலாம் என்று வந்திருந்தார், வாய்ப்பு அமையாததால் அதை வாங்கி அடுத்து வெளிவரும் தலைவரின் படத்தின் போது பேனர் வைப்போம் என்று அந்த கவிதையை வாங்கி வைத்துள்ளோம்.
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களின் வேண்டுகோளுக்கிணங்க, எதையும் தாங்குவேன் தங்கைக்காக பாடல் இருமுறை திரையிடப்பட்டது.
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் படங்களை வெளியிடத் தயங்கிய நேரத்தில் என்று சிவாஜி படத்திற்கு மக்களிடம் மாபெரும் வரவேற்பு என்றைக்கும் இருக்கும் நமது தலைவரின் படங்களை தொடர்ந்து வெளியிட்டு, என்றுமே கலையுலக வசூல் சக்கரவர்த்தி சிவாஜி தான் என்று நிரூபித்துக் கொண்டிருக்கும் மதுரை சிவா மூவீஸுக்கு நமது நன்றியைக் காணிக்கையாக்குவோம்.
இன்று மதுரை விநியோகஸ்தர்கள் வரிசைக் கட்டிக் கொண்டு சிவாஜி படம் போட எங்களுக்கும் தேதி வேண்டும் என்று போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
சென்ட்ரல் தியேட்டரில் விநியோகஸ்தர்கள் தேதி கேட்டிருக்கும் மக்கள்தலைவரின் வெற்றிக் காவியங்கள்.
வசந்த மாளிகை
கெளரவம்
தியாகம்
உட்டி வரை உறவு
தஙகப்பதுமை
இது போக மதுரை சிவா மூவீஸ் சார்பில் திரையிடப்பட இருக்கும் திரைப்படங்கள்
உயர்ந்த மனிதன்
வாணி ராணி
சொர்க்கம்
பாா்த்தால் பசி தீரும்
பச்சை விளக்கு
மீண்டும் வைர நெஞ்சம்.
இனி இரண்டு வருடத்திற்கு மக்கள்தலைவரின் மதுரை இதயங்களுக்குக் கொண்டாட்டம் தான்.
தங்கைக்காக திரைப்படத்திற்கு சென்ட்ரல் தியேட்டரில் மக்கள்தலைவரின் அன்பு இதயங்களின் கோலாகலக் கொண்டாட்டஙகள்
http://sivajiganesan.in/Images/030116_1.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.