Dear Ragavendar sir, Mr.Murali sir, Pammalar sir and saaratha madam 1974இல் வந்த தாய் படம் பற்றிய திறனாய்வு செய்யும் படி வேண்டுகிறேன்.
படம் பார்த்து பல வருடம் ஆகிவிட்டது
கிட்டத்தட்ட மறந்து போன நிலைமை .
இதன் DVD கூட கிடைக்கவில்லை
Printable View
Dear Ragavendar sir, Mr.Murali sir, Pammalar sir and saaratha madam 1974இல் வந்த தாய் படம் பற்றிய திறனாய்வு செய்யும் படி வேண்டுகிறேன்.
படம் பார்த்து பல வருடம் ஆகிவிட்டது
கிட்டத்தட்ட மறந்து போன நிலைமை .
இதன் DVD கூட கிடைக்கவில்லை
டியர் முரளி சார்,
அன்னையின் ஆணை திறனாய்வு அருமை, இதை படிக்கும் போது Y.G.Magendiren அவர்களின் பேட்டி நினைவுக்கு வருகிறது, அவர் NTஅவர்களிடம் சாவித்திரியை துண்டால் அடிக்கும் சீன் அருமை என்று பாராட்டி இருக்கிறார் , அதற்க்கு NTஅவர்கள் எங்கோ பார்த்த ஒரு OBSERVATION தான் காரணம் என்று கூறி இருக்கிறாரர் .
THAT IS NADIGAR THILAGAM
இன்று நவம்பர் 7.
சரியாக இன்றைய தேதிக்கு 49 ஆண்டுகளுக்கு முன் [07.11.1961] அது வரை மக்கள் பத்திரிகைகளில் மட்டுமே படித்து தெரிந்து கொண்ட ஒரு சுதந்திர போராட்ட தியாகியை திரையில் தரிசித்தனர். அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக பல வகை போராட்டங்கள் பலரால் நடத்தப்பட்டது. வியாபாரம் செய்வதற்கு கிழங்கிந்திய கம்பெனி என்ற பெயரில் இந்தியா வந்தவர்கள் பின் இந்தியாவை தங்கள் வசம் ஆக்கிக் கொண்டார்கள். வியாபாரம் செய்வதற்கு வந்தவர்களை அதே வியாபாரத்தில் போட்டியிட்டு தோற்கடிக்க தமிழகத்தின் தெற்கு பகுதியில் ஒரு வீரன் தோன்றினார். அதற்காக சுதேசி கப்பல் ஒன்றையே வாங்கி அதன் மூலம் சுதந்திர போராட்டத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்து சென்றார். அதனால் சிறையில் அடைக்கப்பட்டு செக்கிழுக்க வைக்கப்பட்டார்.
அப்பெருமகனாரின் வாழ்க்கை கப்பலோட்டிய தமிழன் என்ற பெயரில் செல்லுலாயிடில் சித்திரமாக செதுக்கப்பட்டது பந்துலுவின் மூலமாக. வ.ஊ.சிதம்பரனாராக நமது நடிகர் திலகம் வாழ்ந்து காட்டினார். சிதம்பரனாரின் மகன் படத்தைப் பார்த்து விட்டு என் தந்தையை மீண்டும் பார்த்தேன் என சொல்லியதை தனக்கு கிடைத்த மிகப் பெரிய பாராட்டாக நடிகர் திலகம் கருதினார்.
அப்படிப்பட்ட ஒரு உன்னத படத்தின் பொன் விழா ஆண்டு இன்று தொடங்குகிறது. உண்மையும் நேர்மையும் தியாகமும் சீலமும் நிறைந்த தேசியம் கோலோச்சிய தமிழகத்தில் மீண்டும் அந்த பொற்காலம் வர வேண்டுவோம். இத்தகையான வரலாற்றுகளை நாம் என்று நினைவில் கொள்ள வழி வகுத்த நடிகர் திலகத்திற்கு நன்றி சொல்லுவோம்.
அன்புடன்
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 155
கே: "சிவாஜி கணேசன் நடித்த படங்களில் உங்களை மிகவும் கவர்ந்த படம் எது?" என்று கேட்டால், உங்களால் பதில் கூற முடியுமா? (மு.சுகுமார், எலந்தம்பட்டு)
ப: முடிந்திருக்கிறதே, முடிகிறதே, முடியுமே! "கப்பலோட்டிய தமிழன்" படம் என்று. அன்றும் கூறினேன், இன்றும் கூறுகிறேன், என்றும் கூறுவேன்.
(ஆதாரம் : பேசும் படம், அக்டோபர் 1971)
இன்று 7.11.2010 தேசிய திலகத்தின் "கப்பலோட்டிய தமிழன்" திரைக்காவியத்தினுடைய பொன்விழா ஆண்டின் தொடக்கம்.
அன்புடன்,
பம்மலார்.
கலைதெய்வம் பாராட்டிய கலைஞானி
"என் மடியில் குழந்தையாகத் தவழ்ந்தவன் கமல். இன்று உலகம் போற்றும் நிலைக்கு உயர்ந்திருக்கிறான். விகாரமாக முகத்தை வைத்துக் கொண்டு நடித்து, உலகைக் கவர்பவன் தான் மிகச் சிறந்த கலைஞன். அந்த வரிசையில் கமலஹாசன் முன்னிலை வகிப்பவன். கமல் அழகானவன். என் மனதிலும், என் இதயத்திலும் இருப்பவன். அப்படிப்பட்ட கமல் பல்லாண்டு வாழ்ந்து, கலையுலகுக்கு நல்ல நடிகன் என்ற பெருமையை பெற்றுத் தர வேண்டும்."
- 30.4.1997 புதனன்று சென்னையில் நடைபெற்ற "அவ்வை சண்முகி" வெற்றி விழாவில் நடிகர் திலகம்.
இன்று 7.11.2010 கலையுலக மன்மதன் கமலஹாசன் அவர்களின் 57வது பிறந்த தினம்.
HAPPY BIRTHDAY KAMAL! MANY MORE HAPPY RETURNS!
அன்புடன்,
பம்மலார்.
நமது உயிரினுமினிய தேசத்தின் பெயர் பாரதம்.
வடபுலங்களில் இன்றும் நமது தேசம் அழைக்கப்படுவது பாரத் என்று.
அது போல் நமது அன்பிற்கினிய நெஞ்சில் நிறைந்த புரட்சிக்காரன் பாரத்.
வெளி நாடுகளில் வாழும்போது நமது தேசத்தையே நினைத்தவன் பாரத்.
நாட்டிற்கு வந்த போதோ எதேச்சதிகார ஆட்சியை வீழ்த்த போராடியவன் பாரத்.
மகிழ்ச்சி பீறிடும் உற்சாகத்தின் விளிம்பையும் தீமைக்கு எதிரான கோவத்தின் உச்சக்கட்டதையும் நம்மை உணர வைத்தவன் பாரத்,
ஒரு திரையரங்கின் சுற்றுப்புறங்களில் பார்க்கக் கூடிய அதிகபட்ச மக்கள் வெள்ளத்தை நான் கண்டதும் பாரத் மூலமாகத்தான்.
வாழ்நாளில் நான் என்றுமே மறக்க முடியாத அந்த 1969 நவம்பர் 9ம் தேதியையும் மதுரை சென்ட்ரல் சினிமாவையும் பற்றிய இனிய நினைவுகளையும் மீண்டும் அசை போட வாய்ப்பு கொடுத்த இன்றைக்கு 41 வயதை நிறைவு செய்யும் பாரத் மேலும் பல்லாண்டு வாழட்டும்!
வெள்ளித்திரை மூலமாக இது போல் எத்தனை முறை நம்மை வசீகரித்திருக்கும் நமது அன்புக்குரியவரைப் பற்றி பேச ஆரம்பித்தால் நம்மால் நிறுத்தவும் முடியுமா?
எப்போதும் அந்த இனிய நினைவுகளோடு!
அன்புடன்
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 156
கே: "சிவந்த மண்" படப்பிடிப்புக்காக வெளிநாடுகள் சென்ற நடிகர் திலகம் அங்கிருந்து வாங்கி வந்தவை என்ன? (ப.பூலோகநாதன், சென்னை-1)
ப: திறமைக்குப் பாராட்டு.
(ஆதாரம் : பேசும் படம், நவம்பர் 1969)
இன்று 9.11.2010, சிங்கத்தமிழனின் "சிவந்த மண்" திரைக்காவியத்தின் 42வது ஆண்டு ஆரம்ப தினம். ஆம், பார் போற்றும் 'பாரத்'துக்கு 42வது ஜெயந்தி.
HAPPY BIRTHDAY & MANY MORE HAPPY RETURNS, Mr.BHARAT!!!
அன்புடன்,
பம்மலார்.
Dear Mr.Murali Srinivas/Mr.Pammalar
Thanks for the news that Mr.Bharath is celebrating his 42nd birthday today. On the other side, its really awesome to know that 41 years have passed since this movie was released. Even today if we see the movie, its like a new movie, with our NT in all his glowing style and dress with original hair, MSV's all time great hits, splendid foreign locations and an action packed story.
Thanks once again for the same.
Shiv.
Happy (42nd) Birthday to 'Sivandha Mann' BHARATH.
Discussions about Sivandha Mann scenes here:
http://forumhub.mayyam.com/hub/viewt...asc&start=1425
(pages 96, 97, 98 & 99)
Dear Mr.Ragavendar
I just happened to see Nadigar Thilagam MP4 in yor website. Hats off to you for posting the same. Beginning with Mr.Prabhu playing the sax, various shots of NT's close ups & walks from his all time great movies were shown in clippings with the song from "Asal" in the background.
It really made me emotional.....
Was this done by Mr.P.Anand whose name appears at the end?
Dear NT fans
The above MP4 in www.nadigarthilagam.com is a must view for all our fans brethen. Pl view, enjoy and relieve your emotions.
Shiv.