https://www.youtube.com/watch?v=Vd_RC89xYeg
Printable View
NT's penchant for comedy relief!
மெல்லமெல்ல ஓர் உற்சாகம் நம்மைப் பற்றிக் கொள்வதாக உணருவீர் !!
Enjoy this super comedy scenes in his acting pinnacle Deiva Magan, showing NT's flair for comedy his way!
https://www.youtube.com/watch?v=gltmsQjWz-I
https://www.youtube.com/watch?v=V_Ntwjckp6o
https://www.youtube.com/watch?v=JBl4tb0flFI
இதுபோல் ஒரு திரைப்படம் தரணியில் இவர் போல் ஒரு நடிக மேதையால் செதுக்கப்பட்ட சிற்பமாக இனி வருமா?
TRIBUTE TO AC THRILOKACHANDER
https://www.youtube.com/watch?v=7_h74wf_UOk
This song sivaji manerisams copied by rajinikanth and one more song oonjalukku poo sudi song also rajini copied sivaji manerisms
http://www.youtube.com/watch?v=xbSZJeC4pAU
Dear All,
Please refrain from posting so many videos in the main thread. As I have said umpteen times it slows down the thread and people find it very difficult to even open the thread.
Senthil Sir,
You have been doing a great job in making people understand how NT outperforms everybody by posting the comparative videos of NT with that of Hollywood actors. At the same time too much videos will make people skip the post.
Let us also admit another fact. Most of the readers are reading, viewing this thread from their respective offices and at all offices the intranet will definitely firewall the videos. Even if not, we all know that it is impossible to watch videos in office. So the whole purpose of uploading videos is defeated. When such is the scenario, we need to restrict the no of videos.
And to cap it all (and this I am telling it to everyone) please bear it in mind that ours is neither a video thread nor a photo exhibition thread. Let us not rush pages. People are here to read good quality stuff on NT. Don't be concerned about no of pages or related matters.
Just writing this on a elaborate note so that everybody is on the same page.
Thanks for your understanding,
Regards
PS: Today, I have moved some song videos posted in the main thread to Padalgal Palavidham - பாடல்கள் பலவிதம் thread.
கடந்த வெள்ளிக்கிழமை நவம்பர் 14 முதல் சென்னை மகாலட்சுமியில் திரையிடப்பட்ட நடிகர் திலகம் - ஏ.பி.நாகராஜன் - ஜெமினி வாசன் கூட்டணியில் உருவான விளையாட்டுப் பிள்ளை மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. ஒரு வாரத்தை நிறைவு செய்த படம் வினியோகஸ்த நண்பருக்கு மகிழ்ச்சிக்குரிய லாபத்தை பெற்று தந்திருக்கிறது. விஷயத்தை கேள்விப்பட்டு நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சீனிவாசா மற்றும் கிருஷ்ணவேணி அரங்குகள் இந்தப் படத்தை அவர்களது அரங்கில் திரையிடுவதற்கு ஆர்வம் காண்பித்திருக்கின்றன. இந்த படமெல்லாம் எங்கே ஓடப் போகிறது என்று வழக்கம் போல் மீரான் சாஹிப் தெருவில் கிண்டலடித்தவர்கள் இப்போது வாய் மூடி மௌனம் காக்கிறார்கள். சென்னையில் விளையாட்டுப் பிள்ளையின் வசூலைப் பார்த்த மற்ற மாவட்ட விநியோகஸ்தர்கள் அவர்கள் ஏரியாக்களில் படத்தை வெளியிட முனைப்பு காட்டுகின்றனர்.
விளையாட்டுப் பிள்ளை படத்தை சென்னையில் திரையிட்ட JRL combines அடுத்தபடியாக நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளை காவியமான இரு மலர்கள் படத்தை திரையிடுகின்றனர். அதன் பிறகு நீலவானம் வெளியாகும் என தெரிகிறது.
கோவை மாநகரில் டிலைட் திரையரங்கில் வெள்ளிக்கிழமை நவம்பர் 21 முதல் வெளியாகி இருக்கும் நடிகர் திலகத்தின் அண்ணன் ஒரு கோவில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. முதல் இரண்டு நாட்களில் படம் வந்த ஆட்களைப் பார்த்து விட்டு அரங்க உரிமையாளர் ஆச்சரியப்பட்டு போனாராம். படத்திற்கு வந்த High class audience அவரின் ஆச்சரியத்திற்கு ஒரு காரணம் என்றால் தியேட்டருக்கு வந்த கணிசமான பெண்கள் கூட்டம் மற்றொரு காரணம். அதிலும் ஒரு நான்கு பேர் 15 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ஊரிலிருந்து இந்த படம் பார்க்க வேண்டும் என்று வந்திருக்கிறார்கள். மொத்தம் விற்பனையான டிக்கெட்களில் 25 சதவீதம் பெண்கள் என்பது தனிச் சிறப்பு.
சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
One more "Pandora's Box" getting opened ?!Quote:
by Thiru. Yukesh Babu.Quote:
Quote:
This song sivaji manerisams copied by rajinikanth and one more song oonjalukku poo sudi song also rajini copied sivaji manerisms
Dear Yokesh Babu Sir. Thank you for your good intentions in projecting NT as a role model to Rajini or for that matter any other generations' actors. At the outset it is apparently true that Nadigar Thilagam Sivaji Ganesan, hailed as the 'Suymbulingam' of acting could shape up and refine his acting career by trial and error process without copying any other actor in this world be it his contemporaries like Marlon Brando or Charlton Heston...like that. However, NT had resorted to give life to his characterization by way of getting inspired by some people in real life whom he admired, like the Kaanchi Periyavar for his role in Thiruvarutchelvar, TVS Krishna (?) for his Gowravam Barister Rajinikanth role... like that. In Pudhiya Paravai too NT's Paarththa Gyaapagam illayo intro scene is an inspiration from Bond/Connery's intro DrNo tuxedo get-up and cigarette/drinks handling styles. ...Inspiration is little bit different from xeroxing!
(RKS Sir had already posted in this thread some comparative photograph gallery corroborating NT's inspiration and character polishing approach)
As far Tamil Cinema is concerned, NT has made such a terrible impact as the dictionary of acting for the successive generations of actors to follow his foot prints. That is why any actor when he performs in an exemplary way, it appears to our eyes that this actor tries to copy NT. Kamal Haassan or Rajini Kanth are no exceptions, even though they have reached their present day ultimatum by way of their hard work stemming as inspiration from NT's guidelines.
What you feel may be correct as regards the initial years of Kamal and Rajini's attempts to establish their image in the minds of people. Kamal got inspired both by NT and GG while Rajini totally by NT, but as an inevitable starting trouble for them to anchor their roots in Tamil Cinema.But over years, both of them could come out of the shadows of NT and now they have their own originality to be emulated by their next generation, acting traits by Kamal in the NT pattern and style patents with punch dialogues by Rajini in the mould of sheer MGR pattern entertainment arena!
Let us say, Rajini or Kamal had been impressed by NT's acting school of thought and inspired by his immortal acting presentations, rather than merely 'copying' NT!!! But Mu.Ka. Muthu an ardent follower of MGR at that time simply resorted to copying his icon's mannerisms!!!
But Mu.Ka. Muthu, the then upcoming youngster star also has contributed some pleasing and energetic song sequences, though he failed to anchor his roots in the minds of movie goers!(Stars inspired by NTcould reach their top while a mere copying MGR youngster could not make it!)
https://www.youtube.com/watch?v=_4D6tUVyVc4
https://www.youtube.com/watch?v=xZtTPdMHU2c
Dear Yukesh Babu sir, inspiration is the polished usage of words rather than copying, in my opinion!! Rajini's style base is derived as an inspiration from Uththamapuththiran's Yaaraadi Nee Mohini mannerisms of NT (and to some extent the dancing style movements of Ravichandran too! For cigarette handling style Rajini's inspiration was Shatrughan Sinha who only first introdured that style of spinning cigarette to reach lips!!) and his do-gooder image from MGR formula inspired by Errol Flynn's Robin Hood type roles!!For Kamal, needless to say as all NT movies are inspirational guides to him Legends always live and guide us even as generations are consistently changing.
My humble request Yukesh Bab(y)u sir. Let us not hurt the feelings of our youner generation Rajini and Kamal fans as we already had some surges regarding such 'Pandora's Box opening' issues.
நடிகர்திலகத்தை சந்தித்த அனுபவம் :
எனது கல்லூரி நாட்களில் சென்னையில் சிவாஜி மன்றம் நடத்திய பிரம்மாண்டமான மாநாடு நடந்தது. அந்த ஊர்வலத்தை மயிலை
நவசக்தி விநாயகர் கோவில் அருகே நடிகர்திலகம் திரு குண்டு ராவ் அவர்களுடன் பார்வையிட்டு கொண்டு இருந்தார்.
அந்த ஊர்வலம் மாநாடு நடந்த இடமான ராஜா அண்ணாமலைபுரம் அடைந்த போதும் அது துவங்கிய இடமான தீவு திடல் அருகே இன்னும் ரசிகர்கள் வந்து கொண்டு இருந்தார்கள்.
நான் மைலாப்பூர் நவசக்தி விநாயகர் கோவிலருகே ஒரு ஓரத்தில் நின்று கொண்டு
நடிகர்திலகத்தை கண்டு கிளம்பி சென்றேன்.
சென்னை மாநகரம் அது போன்று ஒரு ஊர்வலத்தை இன்று வரை கண்டது இல்லை இனிமேலும் காண போவதும் இல்லை.
Regards
Female singers who helped glorify NT's movies and his stardom!! :
Part 4 : நடிகர்திலகத்தின் புகழ்மகுடத்தில் மின்னும் பாடகியர் ரத்தினம் ! :: திரை கானங்களின் Sparrows and Parrots இசைக்குயில்கள் P. லீலா, ஜமுனாராணி மற்றும் M.S. ராஜேசுவரி
இசைக்குயில்கள் P. லீலா, ஜமுனாராணி மற்றும் M.S. ராஜேசுவரி ஆகியோரும் குறிப்பிடத்தக்க பாடல்கள் பங்களிப்பினை நடிகர்திலகத்தின் சாதனைப் பாதையில்
மலர்படுக்கைப் பூக்களாக சமர்ப்பித்து மணம் பெறச் செய்தவர்களே! (ராஜேசுவரியும் ஜமுனாராணியும் தங்கள் தனித்துவமிக்க 'மழலை' குரலாலும் புகழ் பெற்றவர்கள் !) நம் நன்றிகளுக்கும் வணக்கங்களுக்கும் உரியவர்களே
1. P. லீலா :
நடிகர்திலகத்தின் மிகச்சிறந்த காதல் காட்சியமைப்பினை நல்கிய இரும்புத்திரையில் வைஜயந்தியின் கரும்புக்குரல்...பி லீலா !
https://www.youtube.com/watch?v=q48ihhHK5kg
நடிகர்திலகத்தின் இரட்டை வேட கல்வெட்டான உத்தமபுத்திரனில்.....குரலினிமையின் தேன்சிட்டு....பி லீலா !
https://www.youtube.com/watch?v=XEmF9jzEwCI
2. ஜமுனாராணி
நடிகர்திலகத்தின் பாசமலரின் நறுமணம் நம் மனதை விட்டகலாத ஜமுனாராணியின் பரவசமான பாடல் !
https://www.youtube.com/watch?v=G2B97RTcB3E
3. M.S. ராஜேசுவரி
நடிகர்த்திலகப்புயலின் முதல் பிரவேசத்திலேயே அவரது முதல் நாயகி பண்டரிபாயின் தென்றல் குரல் ராஜேசுவரி !
https://www.youtube.com/watch?v=PGBryGdL0FQ
நாம் ரசிக்கும் சாதனைச் சீமானின் ரசனையை சிலாகித்த குமாரி கமலாவின் சாகச குரல் பனிக்குழைவு ராஜேசுவரி !
https://www.youtube.com/watch?v=3w4MAmf7Pog
தூக்குதூக்கியில் கண்வழி புகுந்து கருத்தினில் கலந்த ராஜேசுவரியின் கானம் !
https://www.youtube.com/watch?v=PefB_A5c6xc
Quote:
NT comes back for a thanks giving to KBS (கொடுமுடி கோகிலம் K.B. சுந்தராம்பாள் ) for her immortal contributions in Thiruvilayaadal to epitomize NT as Sivaperumaan, the original!
சிவாஜி செந்தில் சார்,
நடிகர்திலகத்தின் திரைப்படங்களில் எஸ்.ஜானகி பங்களிப்பு நல்ல தொகுப்பு. இன்னுமொரு சூப்பர் ஹிட் பாடல், எம்.எஸ்.வி. இசையில் நெஞ்சிருக்கும் வரை படத்தில் இடம்பெற்ற
நினைத்தால் போதும் பாடுவேன்
அணைத்தால் கையில் ஆடுவேன்
சலங்கை துள்ளும் ஓசையில்
கலங்கும் கண்ணை மாற்றுவேன்
Female singers who helped glorify NT's movies and his stardom!! :
Part 5 : நடிகர்திலகத்தின் புகழ்மகுடத்தில் மின்னும் பாடகியர் ரத்தினம் ! :: கொடுமுடி கோகிலம் என்று அறியப்பட்ட வெண்கலக்குரல் K.B. சுந்தராம்பாள் !
நடிகர்திலகத்தின் திருவிளையாடல் படத்தின் வெற்றிக்கு ஆணிவேரான பாடல்களை பங்களித்தவர் கந்தன் கருணை மற்றும் மகாகவி காளிதாஸ் படங்களிலிருந்தும் அவரது பங்களிப்பின் ஆழத்தை உணர முடியும். நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்அம்மையீர் !
அவ்வையார் படத்திற்கு சாதனையாக உயரிய சம்பளத்தைப் பெற்றதோடல்லாமல் வரும் காலங்களிலும் திரையில் அவ்வை முத்திரையைப் பதித்த பெருமாட்டியின் என்றும் வாழும் பாடல்கள் இன்றும் இனியும் நம்நெஞ்சங்களை விட்டு நீங்காது
திருவிளையாடலின் முத்திரைப் பாடல் பழம் நீயப்பா !
https://www.youtube.com/watch?v=KDNSM0RyUa8
ஞானப்பழத்தை பிழிந்து ....
https://www.youtube.com/watch?v=mDxaW8RvbII
காலத்தில் அழியாத நடிகர்திலகத்திற்கு விடையளிக்கிறார் சுந்தராம்பாள்
https://www.youtube.com/watch?v=Oc_uJWPSlaQ
https://www.youtube.com/watch?v=l1kYJFo-uBU
Courtesy Nostalgia on KBS who graced NT's movies :
(FROM THE PAST K. B. Sundarambal, M. K. Radha, L. Narayana Rao, T. V. Kumudhini, M. S. Sundari Bai, Gemini Ganesan, ‘Baby’ Sachhu, Kushalakumari, K. Balaji,
One of the classics the Indian movie mogul S. S. Vasan produced was Avvaiyar (1953). Only a fistful of folks are aware Vasan had this project on his mind even when he established the Gemini Studios way back in 1941...
Vasan decided that the only actor who could portray the role of Avvaiyar with conviction would be the celebrated stage and film actor, Carnatic musician K. B. Sundarambal. It is interesting to note that Sundarambal more or less matched the image of what was in the public eye about the poet! This masterstroke of casting by Vasan helped him and the movie in great measure.) Ref : Wikipedia
Quote:
Quote:
NT returns to honor his male playback singers Chidhambram Jayaraman, TMS, Jesudas, SPB, Malaysia Vasudeven....AMRaja and PBS...and Seerkaazhi Govindharajan..!!
Thanks to Mr Neyveli Vasudevan
மெனக்கெடல் : பாபு, தெய்வமகன், தங்கமலை ரகசியம், திருவருட்செல்வர் 'அப்பர், (அப்பருக்கு நான்கு மணிநேர ஒப்பனை சற்றும் செயற்கைத்தனங்கள் இல்லாத இயற்கையான வயதான ஒப்பனை) 'பாபு'வில் வயதான வேடத்திற்காக ஒப்பனைக்குப் பட்ட நரகவேதனை.(எந்த வசதிகளும் இல்லாத காலகட்டத்தில். ஸ்பெஷல் டாக்டர்கள் முன்னிலையில் ஊசிகள் மூலமாக முகத்தில் தைத்து ரண வேதனைகளுடன் சுருக்கங்களை வரவைத்ததாக அப்போதைய ஒரு பத்திரிகையில் படித்திருக்கிறேன்) 'சவாலே சமாளி'யில் தந்தையாக நடித்த வி.எஸ்.ராகவனிடம் காட்சியின் தத்ரூபத்திற்காக வேண்டி நிஜமாகவே சாட்டையடிபட்டு ஒருநாள் முழுக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிஜ அர்ப்பணிப்பு...
(வெளிவராத உண்மைகள்) என்று எவ்வளவோ அடுக்கிக்கொண்டே போகலாம்.
தரமான நடிப்பு: இதற்கு விளக்கம். தேவையா?
தொழில்நுட்பத் திறன்: காமெராவைக் கையில் தூக்கிக்கொண்டு, டைரக்டர் விசிலை வாயில் வைத்துக் கொண்டு, 'டிராலி பேக்' என்று கத்திக் கொண்டு முதன் முதல் அந்தக் காமிராவினால் எடுக்கப்பட்டது. இந்தக் காமிராவினால் எடுக்கப்பட்டது... இதுவரையில் வராத புதுமை சவுண்ட் டிராக்.... ஒரிஜினலாக புதுக்கார்கள் ரெண்டை வாங்கி வெடிக்க வைத்து ஆகாயத்தில் தூக்கி வீசப்பட்டது.... என்பதெல்லாம் இல்லாமல் காமெராவுக்கு முன்னால் (எது தேவையோ அது) எப்படி அற்புதமாகச் செயல்படுவது என்பது நடிகர் திலகத்திற்கு தெரிந்த அளவிற்கு வேறு யாருக்காவது தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை என்று பழுத்துக் கொட்டை போட்ட பல காமெரா மேதைகள் கூறியிருக்கிறார்கள். தான் நடிப்பது மட்டுமல்லாமல் தன்னுடன் நடிக்கும் மற்றவர்களையும் காமிராவுக்கு தக்கபடி வளைத்துக் கொண்டு வந்து நிற்க, குறிப்பாக நடிக்க வைப்பதில் அவர் பலே கில்லாடி! அதே போல நிறைய பிலிம் ரோல்களை விழுங்கியவர் நடிகர் திலகம். என்ன ஆச்சர்யமாக உள்ளதா? மற்றவர்களைப் போல நடிக்கத் தெரியாமல் அல்ல. தன்னுடைய நடிப்பில் மெய்மறந்து காமிராவை நிறுத்தாமல் ஓடவிட்டு தன்னையே, தன் நடிப்பையே வாய்பிளந்து பார்க்கும் காமெராமேனை சத்தம் கொடுத்து, "ஷாட் முடிந்து விட்டது. என்ன தூங்கி விட்டாயா? காமிராவை முதலில் அணை" என்று நடிகர் திலகம் கூக்குரலிட்ட பிறகே பல ஒளிப்பதிவாளர்கள் சுயநினைவுக்கு வந்தது நாடறிந்ததே! உலகில் வேறு யாருக்கும் இந்தப் பெருமை இருந்ததாக இருப்பதாகத் தெரியவில்லை
அதே போல 'புதிய பறவை'யின் "எங்கே நிம்மதி?' பாடலில் அவர் காட்டிய அசாத்திய திறமை. நான் சொல்வது நடிப்பில் அல்ல. தொழில் நுட்பத்தில். காமிராக் கோணங்கள்... லைட்டிங் அரேஞ்ச்மென்ட்ஸ், காட்சிகளின் பின்னணியில் தெரியும் அந்த இலைகளற்ற பட்ட மரங்கள், சப்பாத்தி,கள்ளிச் செடிகள் அனைத்தும் நடிகர் திலகத்தின் கற்பனை வளத்தில் உருவானதுதான். ஆனால் அதை அவர் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. அதை அவர் விரும்புவதும் இல்லை. ஆனால் பின்னாட்களில் அவருடன் பழகியவர்கள் இந்தக் கருத்துக்களையெல்லாம் தொலைக்காட்சிகளின் வாயிலாகவும் பத்திரிகைகள் வாயிலாகவும் தாங்களே மனமுவந்து மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்கள்.
பன்மொழி ஆற்றல்: மிக அழகாக ராகவேந்திரன் சார் இதற்கு விளக்கமளித்திருக்கிறார். மனோகரா இந்தியில் 'மனோகர்' என்று நேரிடையாக எடுக்கப்பட்டபோது அவர் இந்தியில் மிக அற்புதமாகப் பேசி ஆச்சர்ய அலைகளை உருவாக்கினார். (இயக்குனர் திரு எல்வி. பிரசாத் இதை ஒருமுறை பத்திரிகை பேட்டி ஒன்றில் சிலாகித்துக் கூறியிருந்தார்) ஆனால் என்ன காரணத்தினாலோ படத்தில் அவருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுக்கப்பட்டது. 'ஸ்கூல் மாஸ்டர்" கன்னடத்தில் அருமையாக கன்னடம் பேசியும் அசத்தியிருப்பார். அதே படம் இந்தியில் வந்த போது சொந்தக் குரலில் அசத்தியிருப்பார்.
நடிகர் திலகத்தால் முடியாதது என்று எதுவுமே இல்லை. எல்லாவற்றிலும் அவர் ஒரு பிறவி மேதை. நல்லதொரு குடும்பத்திற்குக் கூட அவர் குடும்பத்தைத்தான் அனைவரும் உதாரணமாகக் கூறுவார்கள்.
இறுதியாக ஒன்றை குறிப்பிடுகிறேன்.
உலகத்தின் சிறந்த ஒரு அரசியல்வாதியை விடவும் வேறு ஒருவர் உருவாகி விட முடியும் .
ஒரு கிரிக்கெட் வீரரின் சாதனையை இன்னொரு கிரிக்கெட் வீரர் முறியடித்து விட முடியும்.
ஒரு இலக்கியவாதியை விட வேறொரு இலக்கியவாதி வந்து ஜொலிக்க முடியும்.
ஒரு எழுத்தாளனை பீட் செய்ய பல எழுத்தாளர்கள் வருவார்கள். வந்திருக்கிறார்கள்.
ஒரு விஞ்ஞானியின் சாதனைகளை பின்னுக்குத் தள்ளி அடுத்த விஞ்ஞானி அவதாரம் எடுக்கக் கூடும்.
ஒரு நல்ல தலைவரை விடவும் வேறு சிறந்த தலைவன் உருவாகி உலகை வழிநடத்தவும் முடியும்.
ஒரு இசை மேதையின் புகழை விடவும் வேறொரு இசை மேதை புகழ் பெறக்கூடும்
இவ்வளவு ஏன்?... உலகில் எவரை மாதிரியும், எவரும் உருவாக முடியும். எவரையும் உருவாக்கவும் முடியும்...ஒருவரின் சாதனையை ஒருவர் விஞ்ச முடியும்.... வெல்ல முடியும். ஆனால் ஒரே ஒரு சாதனையாளரைத் தவிர....
'சிவாஜி' என்ற அந்த மகா கலைஞனை கடந்த காலங்களிலும் சரி! அவருடைய சம காலங்களிலும் சரி! நடந்து கொண்டிருக்கும் காலங்களிலும் சரி! நடக்கப் போகும் காலங்களிலும் சரி!
இனி ஒருவர் விஞ்சவோ, மிஞ்சவோ, முந்தவோ முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
அந்தப் பெருமை நடிகர் திலகத்துக்கு மட்டுமே!
அதனால் பெருமை சிவாஜி ரசிகனுக்கு மட்டுமே!
கமல் சொன்னது போல அந்த chair இனி நிரந்தரமாக காலி chair தான். அதன் காலடியைத் தொட்டு வணங்கி, அதன் கீழே அமர்ந்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம் என்பதே மற்ற கலைஞர்களுக்கு என்றும் மாறாத பெருமை.
உலகில் யாருக்குமே வாய்க்காத பெருமையை எங்களுக்கு தேடித்தந்த நடிகர் திலகமே! நல்லவர்க்குத் திலகமே!
உன்னைத் தவிர எங்களுக்கு வேறு கடவுள் உண்டோ!
கோபால் சார் மிக அழகாகக் கூறியிருந்தார்.
"இன்னொரு கடவுளோ, தேவ தூதனோ உலகில் மீண்டும் தோன்ற வாய்ப்புண்டு. இன்னொரு நடிகர்திலகம், தோன்ற வாய்ப்பே இல்லை"
(பொன்னெழுத்துக்களில் பொறித்து ஒவ்வொரு நடிகனும் தங்கள் கழுத்தில் மாட்டிக் கொள்ள வேண்டிய டாலர்)
ஒவ்வொரு வினாடியும் உன் திறமையில் பிரமித்துப் போய் நிற்கும் கோடானு கோடி ரசிகர்களில் ஒருவனான
நெய்வேலி வாசுதேவன்.
கோவை மாநகரில் டிலைட் திரையரங்கில் இன்று அண்ணனுக்கு அமோக வரவேற்பு.
இன்று மாலைக் காட்சி எப்படி களை கட்டப்போகிறது என்பதன் அறிகுறி மதியக் காட்சியிலே தெரிந்து விட்டதாம். மதியக் காட்சிக்கு நல்ல கூட்டம் என்றால் மாலைக் காட்சி அமர்களப்படுத்தி விட்டதாம். பால்கனி ஹவுஸ் புல். இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகள் புஃல். முதல் வகுப்பு கிட்டத்தட்ட நிறைந்து விட்டனவாம். டிலைட் அரங்கில் வெகு நாட்களுக்கு பிறகு ஹை கிளாஸ் பால்கனி டிக்கெட்டுகள் முழுமையாக விற்பனையாகி இருக்கிறது. ஒரே காட்சிக்கு பால்கனியும் இரண்டாம் வகுப்பும் நிறைவது வெகு நாட்களுக்கு பிறகு நடக்கிறதாம். இன்றைய மாலைக் காட்சிக்கு மட்டும் 30 சதவீதம் பெண்கள் வந்திருக்கின்றனர். அதில் முக்கால்வாசிப் பேர் family audience. முதல் இரண்டு நாட்களில் மொத்தம் எத்தனை பேர் பார்த்தார்களோ அதையும் தாண்டிய எண்ணிக்கையில் இன்றைய தினம் audience வந்திருக்கிறார்கள்.
மிகவும் சந்தோஷம் அடைந்துள்ள அரங்கத்தை லீசிற்கு எடுத்து நடத்துபவர் இப்போது அனைத்து அரங்க உரிமையாளர்களும் சொல்லும் அதே வார்த்தையான அடுத்த மாதம் இன்னொரு சிவாஜி படத்தை திரையிடுங்கள் என்று படத்தை வெளியிட்டவரிடம் சொல்லியிருக்கிறார்.
சென்னை திருச்சியை தொடர்ந்து இப்போது கோவையிலும் சாதனை படைத்திருக்கிறார் Dr. ரமேஷ். அவரின் திக்விஜயம் மேலும் தொடரும்.
சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
இன்று கிடைத்த தகவல்படி வரும் டிசம்பர் 5 வெள்ளி முதல் நெல்லைக்கு சிபிஐ ஆபீசர் ராஜன் விஜயம் செய்கிறார். ஆம், நெல்லை சென்ட்ரலில் தங்கசுரங்கம் வெளியாகிறது.
Thanks to Mr Neyveli Vasudevan
நம் ராஜா நடித்த 'ராஜா' கடலூர் நியூசினிமாவில் வெளியானது. அண்ணா மேம்பாலத்திற்குக் கீழே அதாவது கடிலம் ஆற்றுப் பாலத்தின் இறககத்தில் அமைந்துள்ள பழமையான அரங்கு நியூசினிமா. இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. 'ராஜா' ரிலீஸுக்கு முன்னால் வரை நியூசினிமா திரை அரங்கில் தரை மற்றும் பெஞ்ச் டிக்கெட் எடுக்க கவுண்டர்கள் ஓப்பனாக இருக்கும். வெயில்,மழை இவற்றை பொருட்படுத்தாமல் வெட்டவெளியில் மணிக்கணக்கில் கியூவில் நின்றுதான் டிக்கெட் எடுக்க வேண்டும். அரங்கு நிறைந்து விட்டால் அடுத்த ஷோவிற்கு கூட்டம் எங்கும் போகாமல் அப்படியே நின்றவாக்கிலேயே தொடரும். ஒருவரையொருவர் விடாமல் கைகளோடு அணைத்துக் கொண்டு மற்றவர்கள் குறுக்கே நுழைந்துவிடாத வகையில் நிற்பார்கள். தரை டிக்கெட் ஐம்பது காசுகள். பெஞ்ச் டிக்கெட் ரூபாய் 1.10. தியேட்டரின் மெயின் கேட்டிற்கு உள்ள நுழைந்தால் அங்கு first class மற்றும் செகண்ட் கிளாஸ் டிக்கெட் கவுண்ட்டர்கள் இருக்கும். அங்கு நமக்கு வேலையே இல்லை. அதனால் தியேட்டர் நிர்வாகம் தரை பெஞ்ச் டிக்கெட் வாங்குபவர்களுக்காக வேண்டி roof உடன் கூடிய நீண்ட கவுண்டர் சுவர்களை 'ராஜா' படத்திற்காகவே புதிதாக ஸ்பெஷலாகக் கட்டியது. ராஜாவின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டவுடன் பரபரப்பு மிக அதிகமாக எல்லோரையும் தொற்றிக்கொள்ள அதிகமாக பரபரப்பானது தியேட்டர் நிர்வாகம். கடலூர் முனிசிபாலிட்டி சேர்மன் தங்கராஜ் முதலியார் அவர்களின் கைவசம் தியேட்டர் இருந்தது. ராஜாவிற்காக திரையரங்கு ஓரளவிற்கு புதுப்பிக்கப்பட்டது. அதில் முக்கியமானது நான் மேலே குறிப்பிட்ட தரை டிக்கெட், மற்றும் பெஞ்ச் டிக்கெட் எடுப்பதற்கான புது கவுண்ட்டர்கள் கட்டப்பட்டதுதான். தரை டிக்கெட் கவுண்டர்களை இரண்டு வளைவுகளாகச் சென்று திரும்பி டிக்கெட் எடுக்கும்படி கட்டியிருந்தார்கள். 26.01.1972 அன்று 'ராஜா' ரிலீஸ்.
ஆனால் கடலூர் சில விஷயங்களில் சாதனை படைத்தது. 'ராஜா' தமிழ்நாடெங்கும் 1972 குடியரசு தினத்தன்று ரிலீஸ் என்றால் எங்கள் கடலூரில் 25-1-1972 அன்று அதாவது ஒரு தினம் முன்னதாகவே ரிலீஸ் ஆகி விட்டது. (இது போல எனக்குத் தெரிந்து கௌரவம்,வெள்ளை ரோஜா இரு படங்களும் ரிலீஸுக்கு முந்தின நாளே கடலூரில் வெளியாகி விட்டன. இதில் விசேஷம் என்னவென்றால் நான் குறிப்பிட்ட மூன்று படங்களும் கடலூர் நியூசினிமாவில்தான் ரிலீஸ் ஆயின) 'ராஜா' 25-1-1972 இரவு சிறப்பு ரசிகர் காட்சியாகத் திரையிடப்பட்டு விட்டது. அதனால் ரசிகர் மன்றத்தினர் அனைவரும் முன்தினம் இரவே ராஜாவைக் கண்டு களித்து விட்டனர். படத்தின் ரிசல்ட் 'ஓகோ'வென இருந்தது. ராமாபுரத்தில் இருந்து ரசிகர்கள் பலர் சைக்கிளில் கடலூர் சென்று ரசிகர் ஷோ பார்த்து விட்டு திரும்பி படத்தின் வெற்றியை கொண்டாட ஆரம்பித்து விட்டனர். அடுத்த நாள் (26.01.1972) காலை நான் அம்மாவுடன் பஸ்ஸில் கடலூர் நியூசினிமா சென்று விட்டேன். முதல் நான்கு நாட்களுக்கு ஐந்து காட்சிகள் என்று ஞாபகம். முன்தினம் பார்த்த ரசிகர்கள் அடுத்தநாளும் கடலூர் நோக்கி படையெடுத்தனர். படம் பிரம்மாண்ட வெற்றி என்ற செய்தி வேறு பரவி விட்டது. சென்னை சாந்தி தியேட்டரில் அனைவரையும் வசீகரித்த அதே தலைவரின் ஸ்டைல் கட் அவுட் தியேட்டரின் மெயின் கேட்டிற்கு மேலே ஏற்றப் பட்டிருந்தது. பிரம்மாண்டமான பஞ்சு மாலைகள் தலைவரின் கழுத்தை அலங்கரித்தன. தலைவரின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் அந்த ஸ்கார்ப் அப்படியே தத்ரூபமாக காற்றில் பறப்பது போன்றே இருந்தது. கடலூர் மெயின் சாலையில் தியேட்டர் அமைந்திருந்ததால் அனைவர் கண்களும் ராஜாவின் மீது. கட்டுக்கடங்காத கூட்டம். ஜனம் அலைமோதுகிறது. டிக்கெட் கிடைக்குமா கிடைக்காதா என்ற குரல்கள்தான் எங்கும் எதிரொலிக்கின்றன. அன்று ஐந்து காட்சிகள். அப்போதெல்லாம் காலை ஒன்பது மணி காட்சிக்கு பெண்கள் அதிகமாக வரவே மாட்டார்கள். ஒரு பத்து பதினைந்து பெண்கள்தாம். அதனால் டிக்கெட் கண்டிப்பாகக் கிடைத்துவிடும். பெண்கள் டிக்கெட் ஆண்களுக்கு செல்லாது. சிறுவர்களுக்கு செல்லும். பெண்கள் டிக்கெட் கொடுத்து முடிந்ததும் சிறிது நேரம் வெயிட் செய்து பார்த்து விட்டு பின் மீதி டிக்கெட்களை ஆண்களுக்கு கொடுத்து விடுவார்கள். நான் அம்மாவுடன் பெண்கள் கவுண்ட்டரில் நின்று நடப்பதையெல்லாம் ஒன்றுவிடாமல் கவனித்துக் கொண்டிருந்தேன். அரங்கின் வெளியே முழுக்க கொடிகளும், தோரணங்களுமாகவே தெரிந்தன. போலீஸ்காரர்கள் மூன்று நான்கு பேர் இருக்கும். சமுத்திரம் போன்ற கட்டுக்கடங்காத ரசிகர்களை கட்டுப்படுத்த பிரம்மப்பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார்கள் அவர்கள். ரசிகர்களின் உற்சாகம் எல்லை மீறத் துவங்கியது. மணி சரியாக எட்டு இருக்கும்.
திடீரென்று ஒரே மேளதாள சப்தம். கூடவே வானவேடிக்கை வேறு. வெடிச் சப்தங்கள் காதைக் கிழிக்க ஒரு இளைஞர் பட்டாளம் தியேட்டரில் புயலெனப் புகுந்தது. ஒரு ஐம்பது பேருக்கு மேல் இருக்கும். ஒரு வண்டியில் மூட்டைகளாக அடுக்கப்பட்டு அதன் பின்னாலே சிலர் வந்தனர், பின் மூட்டைகளை இறக்கி அவிழ்த்தனர். பார்த்தால் அவ்வளவு ஆப்பிள் பழங்கள். வந்த கோஷ்டி சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்தது. சிலர் கோணி ஊசிகளை எடுத்து ஆப்பிளின் உள்ளே செருக, சிலர் சணல் கொண்டு தைத்து ஆப்பிள்களை மிகப் பெரிய மாலையாக அரைமணி நேரத்தில் தொடுத்து விட்டனர். இப்போது பிரம்மாண்டமான ராட்சஷ ஆப்பிள் மாலை தயார். அதிர்வேட்டுகள் முழங்க தலைவரின் கட்-அவுட்டிற்கு ஆப்பிள் மாலை சாத்தப்பட்டது. அப்போது இந்த அலங்காரமாலை எல்லோருக்கும் ரொம்பப் புதுசு. "ஆப்பிள் மாலை டோய்" என்று பலர் அதிசயத்தில் வாயைப் பிளந்தனர். கொஞ்ச நேரத்தில் அந்த ஆப்பிள் மாலை அனைவரையும் கவர்ந்து விட்டது. தலைவரின் கட்-அவுட் மேலும் அழகுடன் பரிமளித்தது.
முதன் முதலில் ஒரு கட் அவுட்டிற்கு ஆப்பிள் மாலை சாத்தப்பட்ட பெருமையை ராஜா பெற்றார். (இது கடலூர் சினிமா ரசிகர்கள் இன்றளவும் பெருமையாக பேசி மகிழும் விஷயம்) பின் ஒரே கூச்சலும் குழப்புமாகவே இருந்தது. நான் அம்மாவை விட்டு விட்டு வந்து இந்த வேடிக்கை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மாவோ என்னை விட வில்லை. கூட்டத்தில் ஏதாவது ஆகிவிடுமோ என்று பயம் அவர்களுக்கு. நான் ஒரு ஓரமாக நின்று பார்த்து விட்டு வருகிறேன் என்று அடம் பிடித்து வந்து ஒரு இடத்தில் safe ஆக நின்று கொண்டேன்.
சரியாக ஒன்பதரை மணிக்கெல்லாம் டிக்கெட் கொடுப்பதற்கான பெல் கொடுத்து விட்டார்கள். அவ்வளவுதான். கூட்டம் நிலைதடுமாற ஆரம்பித்தது. அதுவரை ஓரளவிற்கு கட்டுக்கோப்பாக நின்றிருந்த கியூ கண்மண் தெரியாமல் சிதறியது. ஒருவர் மேல் ஒருவர் ஏறிக் குதித்து டிக்கெட் கவுண்ட்டரை நெருங்க முண்டியடித்தனர். போலீஸ்கார்களால் சமாளிக்க முடியாமல் லத்தியைக் கையில் எடுத்து கண்ட மேனிக்கு சுழற்ற ஆரம்பித்து விட்டனர். ஒரே அடிதடி. துணி அவிழ்ந்தது கூடத் தெரியாமல் டிக்கெட் எடுக்க சில பேர் தாவிக் குதித்தனர். நிற்பவர்கள் தலை மேல் கால்வைத்து பலர் ஓடினர். கீழே இருப்பவர்கள் வலி தாங்காமல் அவர்களைத் திட்டித் தீர்த்தனர்.
அப்போதுதான் கட்டியிருந்த புதிய கவுண்ட்டர் சுவர் சரியாகக் காயாமல் வேறு இருந்ததால் நெரிசலின் காரணமாக அப்படியே பெயர்த்துக் கொண்டு இடிந்து விழுந்தது. சிலருக்கு நல்ல காயம். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கூட்டம் நெருக்கித் தள்ளியது. இதையெல்லாம் கண்டு மிரண்டு போன நான் பயந்து போய் அம்மாவிடம் ஓடி வந்து விட்டேன். அம்மா அதற்குள் டிக்கெட் எடுத்து விட்டார்கள். பெண்கள் கவுண்ட்டரை சுற்றி பயங்கரமான ஆண்கள் கூட்டம் டிக்கெட்டுக்காக வெயிட் செய்தது. (கவுண்ட்டர் சுவர் முதன் முதல் கூட்ட நெரிசலால் இடிந்து உடைந்து விழுந்த பெருமையும் ராஜாவிற்கே சொந்தம்)
இதற்குள் டிக்கெட் எடுக்காத ஒரு கூட்டம் மெயின் கேட்டின் மேல் ஏறித் தாவி குதிக்க வேறு ஆரம்பித்து விட்டது. தியேட்டர் ஊழியர்கள் ஆளுக்கொரு கழியை எடுத்துக் கொண்டு இரும்பு கேட்டின் மேல் ஏறிக் குதிப்பவர்களை வாங்கு வாங்குவென்று வாங்கினர். அதில் சிலர் அவர்களிடமிருந்தே கழியைப் பிடுங்கி தியேட்டர் சிப்பந்திகளை பதம் பார்த்தனர். யாரையும் கட்டுப்படுத்த முடியவில்லை. அம்மா மிகவும் மிரண்டு போய் என் கையை பத்திரமாகப் பிடித்துக் கொண்டு பெண்கள் அமரும் இருக்கைக்கு சென்று விட்டார்கள். அதற்குப் பிறகு வெளியே என்ன நடந்தது என்று தெரியாது. டிக்கெட் கிடைத்த சந்தோஷத்தில் கூக்குரலிட்டு விசிலடித்தபடி பலர் தரை டிக்கெட்டுக்கான சாயும் வசதிகள் இல்லாத மூட்டைப் பூச்சிகளின் மூர்க்கத்தனமான கடிகள் கொண்ட மொட்டை பெஞ்ச்களில் தங்கள் நண்பர்களுக்காக துண்டுகளை விரித்து இடம் போட்டனர். வேறு யாராவது வந்து உட்கார்ந்தால் மவன் தொலைந்தான்.
படம் போட்டதும் கடலின் பேரிரைச்சல் போல அப்படி ஒரு இரைச்சல். தலைவரின் அறிமுகக் காட்சியில் ஆர்ப்பாட்டம். ஆரவாரம். கூடை கூடையாய் பூக்களின் உதிரிகள் பறக்கின்றன. விசில் ஒலிகளும், கைத்தட்டல்களும் காதைக் கிழித்தன. தியேட்டர் முழுதும் ஒரே ஜனக்கடலாகக் காட்சியளித்தது. உட்கார்ந்து பார்த்தவர்கள் அளவிற்கு நின்றவாறே பலர் நம் ராஜாவின் ஸ்டைல் ரகளைகளைக் கண்டு மகிழ்ச்சித் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தனர். அதிலும் குறிப்பாக ரந்தாவாவுடனான அந்த ஈடுஇணையில்லாத சண்டைக்காட்சியின் போது முன் இருக்கைகளை எட்டி உதைத்து சிதைத்து ரசிகர்கள் காட்டிய உற்சாக மிகுதியின் மகிழ்வான உணர்வுகளின் வெளிப்பாட்டை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது தலைவரின் நடிப்பைப் போல. அதற்குப் பிறகு உள்ளே நடந்த அமர்க்களத்தை சொல்லவும் வேண்டுமா?! படம் பார்த்தவர்களில் பாதி பேருக்கு மேல் ஆளுக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட வழங்கப்பட்டது. (இதுவும் ஒரு சாதனை) காலை ஒன்பது மணி காட்சி முடிந்து திரும்பும்போது நண்பகல் 12 மணி காட்சிக்கு காலையில் இருந்தது போல இருமடங்கு கூட்டம் அலைமோதிக் கொண்டு நின்றது.
கடலூர் நியூசினிமாவில் ஒரு மாதத்துக்கு ஓடி வசூலில் தன்னிகரில்லா சாதனையைப் படைத்தார் ராஜா. பிறகு மறு வெளியீடுகளிலும் கடலூரில் ராஜாவின் சாதனை எவரும் விஞ்ச முடியாதது.
நமது NT FAnS அமைப்பின் சார்பில் கடந்த வாரம் நடைபெற்ற நவராத்திரி திரையிடலுக்கு ஒரு சிறப்பு விருந்தினர் வருகை புரிந்தார். சரியாக சொல்ல வேண்டுமென்றால் வருகை புரிந்தனர். காரணம் படத்தின் ஒளிப்பதிவாளர் மறைந்த திரு W R சுப்பாராவ் அவர்களின் புதல்வர்களும் புதல்வியரும் வருகை தந்து சிறப்பு செய்தனர்.
வந்தவர்களில் மூத்தவர் திருமதி ரேவதி கிருஷ்ணமூர்த்தி. அவர்தான் அன்று பேசினார். எவரும் எதிர்பார்க்காத வகையில் மிக மிக அழகாக, தெளிவாக அவர் பேசியது அனைவர் கருத்தையும் கவர்ந்தது,
இந்தப் படம் படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருக்கும்போது அவர் ஒரு மாணவியாக இருந்தது பற்றி குறிப்பிட்ட அவர் படப்பிடிப்பு காண சென்றதை விவரித்தார். அவரின் தந்தையார் சாதாரணமாக படப்பிடிப்புத் தளங்களுக்கு அழைத்து செல்ல மாட்டார் என்றும் அன்றைய தினம் அபூர்வமாகவே தன்னையும் தன மூத்த சகோதரியையும் அழைத்து சென்றதை பற்றி குறிப்பிட்ட அவர் தன தந்தையார் தங்கள் இருவரையும் நடிகர் திலகத்திடம் அறிமுகப்படுத்தி வைத்ததையும் தன் மூத்த சகோதரியை நடிகர் திலகம் கிண்டல் செய்ததையும் பிறகு அவரே மிகுந்த அன்புடன் பேசியதையும் நினைவு கூர்ந்த திருமதி ரேவதி அன்றைய தினம்தான் நடிகர் திலகம் Dr கருணாகரன் வேடத்தில் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தன என்ற தகவலையும் சொன்னவர் அதன் பிறகு மற்றொரு விஷயத்தையும் பகிர்ந்துக் கொண்டார்.
தங்களோடு வெகு ஜாலியாக பேசிவிட்டு சென்றவர் கேமரா ஓட ஆரம்பித்தவுடன் அப்படியே மாறிப் போனதை ஒரு மாஜிக் போல உணர்ந்தோம் என்றார். குரலில் நடையில் உடல் மொழியில் அவர் கொண்டு வந்த மாற்றம் அப்படியே கண் முன்னரே நிகழ்ந்ததை இன்று விவரிக்கும்போதும் அன்று இருந்த அதே மாஜிக் இப்போதும் மனதை விட்டு நீங்கவில்லை என்றார்.
படம் வெளிவந்தவுடன் தன் கூட படித்தவர்கள் இறுதிக் காட்சியில் எப்படி ஒரு ஷாட்டில் 4 சிவாஜியையும் அடுத்த ஷாட்டில் 3 சிவாஜியையும் உங்கள் அப்பா காட்டினார் என்று கேட்க கேட்டுச் சொல்கிறேன் என்று வீட்டில் வந்து தந்தையிடம் கேட்டதையும் அவர் மாஸ்க் ஷாட் மூலமாக என்று விளக்கியது அன்றைய வயதில் டெக்னிகலாக புரியாவிட்டாலும் கூட மறுநாள் பள்ளி தோழியரிடம் அது மாஸ்க் ஷாட்டில் எடுத்தார்களாம் என்று பெருமையாக சொல்லிக் கொண்டதை நகைச்சுவையாக பகிர்ந்து கொண்டார் திருமதி ரேவதி.
இந்தப் படம் வெளிவந்த பிறகு ஒரு பத்திரிக்கை நிருபர் தன் தந்தையாரை பேட்டி எடுக்க வந்தபோது இந்த மாஸ்க் ஷாட்டை குறிப்பிட்டு நன்றாக செய்திருப்பதாக பாராட்ட அதற்கு தன் தந்தையார் அந்த மாஸ்க் ஷாட் இந்த அளவிற்கு பேசப்படுகிறது என்றால் அதற்கு நடிகர் திலகம்தான் காரணம் என்றாராம். போலீஸ் ஆபீசர் ரோலில் இருக்கும் சிவாஜியை பார்த்து நாடக நடிகன் சிங்காரம் வணக்கம் சொல்ல அதை முதல் முறை கவனிக்காமல் இரண்டாம் முறை மீண்டும் சிங்காரம் கை கூப்பும்போது கவனித்து தலையை மட்டும் லேசாக அசைத்து அதை acknowledge செய்யும் போலீஸ் ஆபீசர் அந்த டைமிங்கை பாருங்கள். அதுதான் சிவாஜியின் திறமை என்று தன் தந்தை சொன்னதை திருமதி ரேவதி நினைவு கூர்ந்தபோது அரங்கம் கைதட்டல்களால் அதிர்ந்தது.
தமிழ் சினிமாவில் சில முக்கிய மைல்கல்கள் என்று சொல்லபப்டுகின்ற முதல் கேவா கலர் படம் [அலிபாபா] முதல் டெக்னிக் கலர் படம் கட்டபொம்மன் முதல் சினிமாஸ்கோப் படமான ராஜ ராஜ சோழன் ஆகிய அனைத்து படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் பாக்கியம் பெற்றவர் தங்கள் தந்தையார் என்று சொல்லி மகிழ்ந்த திருமதி ரேவதி இந்த நேரத்தில் தன் தந்தைக்கு ஒளிப்பதிவு தொழிலில் உதவியாளராக இருந்து பணியாற்றிய கர்ணன் அவர்களையும் நினைவு கூர்ந்தார்.
தங்கள் தந்தையார் தங்களை படப்பிடிப்புதளத்திற்கு அழைத்து செல்ல மாட்டார் என்பதனால் படத்தின் இயக்குனர் அருட்செல்வர் ஏ பி நாகராஜன் அவர்களிடம் அனுமதி பெற்று ஷூட்டிங் பார்த்ததையும் நன்றியோடு நினவு கூர்ந்தார்.
படத்தின் ஒளிப்பதிவாளரின் மகள், மகன் என்ற முறையில் படம் பார்க்க வரவில்லையென்றும் சிவாஜி ரசிகர்களாக இந்த படத்தை பார்க்க தங்கள் குடும்பத்தினர் வந்திருப்பதை பெருமையுடன் குறிப்பிட்ட திருமதி ரேவதி தங்களை அழைத்ததற்கும் நினவு பரிசு வழங்கியதற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டு தன் உரையை நிறைவு செய்தார்.
அனைவரையும் அற்புதப்படுத்திய அவரின் சரளமான உரைக்கு நன்றி தெரிவித்து படத்தை திரையிட்டோம்.
http://i1146.photobucket.com/albums/...ps0bda3d45.jpg
http://i1146.photobucket.com/albums/...ps0dabf220.jpg
வெளிச்சம் சரியாக இல்லாதிருந்த காரணத்தினால் புகைப்படங்கள் சற்றே மங்கலாக தெரிகின்றது
அன்புடன்
அலைகள் தலை விரித்தாடிய கலைப்பயணத்தில் எந்த வலையிலும் சிக்காமல் நடிகர்திலகத்தின் விலைமதிப்பற்ற குரலாகவே மாறி நம்மை வாயடைத்த சிலைகளாக்கி மலைக்கவைத்த பாடகர் தி(மிங்கி)ல(க)ங்கள்!
திலக குரல்1. இசைச்சித்தர் சிதம்பரம் ஜெயராமனார்
நடிகர்திலகத்தின் முதல் பாடல் குரல் ! அந்தக் கடினமான தடிமனான வெற்றிலை குதப்பிய 'குதம்பாய்' குரலுக்கும் ஏற்றபடி தனது முகபாவங்களையும் உதட்டசைவுகளையும் மாற்றிப் பிரமிக்க வைத்த நடிப்புச்சித்தரின் பெருமைக்கு வித்திட்டவருக்கு எங்கள் முதல் வணக்கம். பராசக்தி பாடல் காட்சிகளில் இன்றும் நம் பிரமிப்பு அலைகள் ஓயவில்லையே !
https://www.youtube.com/watch?v=eCVQAzG8_14
https://www.youtube.com/watch?v=H2kPbPF7dIE
https://www.youtube.com/watch?v=JgUOyi2TWyo
மீன்கள் கடலிலே துள்ளிப் பார்த்திருக்கிறோம் கடற்கரையிலே துள்ளும் காதல் மீன்களையும் பார்த்து ரசிப்போமே ! விண்ணோடும் மண்ணோடும் கலந்துவிட்ட கலைப்புதையல் நடிகர்திலகம் !!
https://www.youtube.com/watch?v=W8YG0Xsrkz8
கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி மானே .... மறக்க முடியாத தங்கப்பதுமை !
https://www.youtube.com/watch?v=F2cIi1Q1CPg
அன்பாலே தேடிய அறிவுச்செல்வமே தெய்வப்பிறவி சிவாஜி கணேசன் !
https://www.youtube.com/watch?v=shPRgjoiJhw
Quote:
Quote:
NT returns to thank and honor his alter ego tone TMS!!
நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமா சரித்திரத்தில் ஒரு நடிகரின் நூறாவது படம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது என்றால் அந்தப் பெருமை இருவருக்கு மட்டுமே சாரும். நடிகர் திலகத்தின் நவராத்திரியின் மிகப் பிரம்மாண்டமான வெற்றியை குமுதம் பத்திரிகை இருட்டடிப்பு செய்துள்ளது வியப்பாக உள்ளது.
நவராத்திரி திரைக்காவியம் சென்னையில் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் நூறு நாட்கள் ஓடி வெற்றி பெற்றுள்ளது.
http://i1110.photobucket.com/albums/...GEDC4962-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC4963-1.jpg
...
தனது நூறாவது திரைப்படத்தை பிரம்மாண்டமான வெற்றிப் படமாகப் பெற்ற இன்னோர் நடிகர் விஜயகாந்த் அவர்கள்.
கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தின் வெற்றி அனைவரும் அறிந்ததே..
குமுதம் பத்திரிகைக்கு யாராவது தமிழ்த் திரைப்படத்தின் வரலாற்றைப் புரிய வைத்தால் நல்லது.
... நவராத்திரி நூறாவது நாள் வெற்றி நிழற்படங்களுக்கு நன்றி ஆவணத் திலகம் பம்மலார் அவர்கள்..
நிழற்படங்களின் அருமையைப் புரிய வைத்த பம்மலாரின் பங்களிப்பு நடிகர் திலகம் திரிக்கு உயிர் நாடி என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளப்படும் என நம்புகிறேன். நம்முடைய திரியில் பதியப்படும் நிழற்படங்கள் பக்கங்களை நிரப்புவதற்காக அல்ல என்பதையும் அவை ஒவ்வொன்றும் கூறும் அர்த்தங்கள் ஆயிரம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டிய நமது திரி நண்பர்கள் இனியாவது புரிந்து கொள்வர் என நம்புகிறேன்.
Dear Raghavendera sir,
I too pointed out the mistake and mentioned it in Facebook of Vijaykanth group , it is really sad that a reputed weekly magazine has forgot to include the records of a doyen nadigar thilagam
Quote:
பாடகர் தி(மிங்கி)ல(க)ங்கள்!
அருமை..!
குமுதம் பத்திரிகை அந்தக் காலத்திலிருந்தே தப்பும் தவறுமாக செய்திகளைத் தருவதில் பிரசித்தி பெற்றது.
அத்துடன் அங்கு பணிபுரியும் சுனில் ஒரு அரைவேக்காடு.
"Mr.Mahendra" | Full Tamil Movie | Jaya Pradha | …: http://youtu.be/6ftl1v1T4PA
மிஸ்டர் மகேந்திரா
தெலுங்கு டப்பிங் படம்
அலைகள் தலை விரித்தாடிய கலைப்பயணத்தில் எந்த வலையிலும் சிக்காமல் நடிகர்திலகத்தின் விலைமதிப்பற்ற குரலாகவே மாறி நம்மை வாயடைத்த சிலைகளாக்கி மலைக்கவைத்த பாடகர் தி(மிங்கி)ல(க)ங்கள்!
திலக குரல் 2 தெய்வத்திருமிகு T.M. சௌந்திரராஜன்
M.K. தியாகராஜ பாகவதரின் எதிரொலியாக ஆரம்பித்த இசைப்பயணம் நடிகர்திலகத்தின் பின்னணி குரலொலியாக நிலைபெற்றது.
நிலத்தியல்பால் நீர் திரிந்தற்றாகும். நடிகர்திலகம் என்னும் கவின்மிகு மழைமேகம் சுமந்து பொழிந்திட்ட தூய்மையான மழைநீரே TMS ! நடிகர்திலகத்தின் குரலாக வாழ்ந்தவர். மழைநீர் தனது தன்மையை நீரின் நிலப்பரப்பு மற்றும் நிலத்தடி ஓட்டங்களில் மண்ணின் தன்மைக்கேற்ப சுவை மாற்றுவது போல பிற நடிகர்களுக்கும் ஏற்ற மாதிரி ஆற்று நீராகவும் ஊற்று நீராகவும் கிணற்று நீராகவும் கடல் நீராகாவும் குரலை மாற்றி பன்முக குரல் மன்னனாக வளர்ந்தவர். நடிகர்திலகத்தின் மறுபக்கமாகவே அவரது நடிப்புச்சூழல், முகபாவனைகளின் எற்ற இறக்கங்கள், உடல் மொழிக்குத் தகுந்தபடி ஒரு திறமையான சர்க்கஸ் சாகசக்காரரைப் போல நடிகர்திலகத்தின் பிரதிபலிப்பாக நம் உள்ளங்களை கொள்ளை கொண்ட பாடகத் திலகத்திற்கு எமது நெஞ்சம் நிறைந்த நினைவாஞ்சலிகள்!
கலகல குளுகுளு சுறுசுறு மொறுமொறு படபட குடுகுடு சலசல விறுவிறு ......இரட்டைக்கிளவி போல நடிகர்திலகமும் பாடகர்திலகமும்!!
My personal Choice of Top 10 TMS voiced NT songs!
1.நடிகர்திலகத்தின் பாடல் குரலாக தூக்கோதூக்கென்று தூக்கி வைத்த தூக்குத்தூக்கி !
https://www.youtube.com/watch?v=0B2wSmSp_Oc
2.இப்புவி சுழலும் வரை நடிகர்திலகத்தின் அடையாள பாடல் the Signature song of NT ! : புதிய பறவை
https://www.youtube.com/watch?v=___CnUWEADk
3. தமிழ் திரையுலகைப் பொறுத்த மட்டில் எம் நடிக வேந்தரின் திருவிளையாடல் நீக்கமற நிறைந்த பாட்டும் நீங்களே பாவமும் நீங்களே
https://www.youtube.com/watch?v=xg_hBWlR3h0
4.பாடல்களில் மாணிக்கக்கல் நீங்களே ஆலயமணியின் ஒப்புதல் ஓசை எம் நடிப்புக் கடவுளின் அசத்தல் வாயசைப்பில் !
https://www.youtube.com/watch?v=RzSTszcoqm0
5. வாழ்க்கை என்பது ஊதி ஊதி பெரிதாக்கப்பட்ட பலூன் அல்லது பஞ்சுமிட்டாய் விருந்தே என்பதை உரைக்கும் உன்னத தத்துவ மருந்து : பாலும் பழமும்
https://www.youtube.com/watch?v=CDjDXY4248Y
6. ஆற்றொணாத் துயர் வரினும் ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளையும் ஆறு !
https://www.youtube.com/watch?v=Ohh1B0SquPM
7. நடிகர்திலகத்தின் படப்பாடல்களின் கெளரவம் உங்களாலேயே
https://www.youtube.com/watch?v=HEaY_qGscLo
8. ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் No peace of Mind ! ஞான ஒளி படுமா?
https://www.youtube.com/watch?v=wfEPBX1mdVU
9. மரணம் என்னும் தூது மங்கையின் வடிவில்தானா வரவேண்டும் வசந்த மாளிகை வாயிலாய் !
https://www.youtube.com/watch?v=DDP0_Mpqd80
10. நடிகர்திலகத்தின் குரலாய் எவர் வரினும் நீங்களே உங்களுக்கு நிகரானவர் TMS ஐயா !!
https://www.youtube.com/watch?v=b3ku7VgUi30
நடிகர்திலகத்திற்காக TMS பாடிய எல்லாப் பாடல்களுமே எப்பக்கமும் இனிக்கும் வெல்லக்கட்டிகளே ! எதைத்தான் விடுவது.....நேரம் கருதி....
Quote:
Quote:
NT returns on his duty to acknowledge the contributions of Bala Murali Krishna, TR Mahalingam , Seergaali Govindharaajan, PBS, SPB, Jesudas ....Mothi, VN Sundaram.... and Tiruchi Loganathan in gracing his movies!
பிரபல இதய மருத்துவர் திரு சொக்கலிங்கம் அவர்களின் வீடியோ .. முகநூலில் (facebook ???) கிடைத்தது ...
உங்கள் பார்வைக்கு...
https://www.youtube.com/watch?v=HXufIj6-yIc
Dr. Chockalingam had retired from service as a cardiologist, Professor& Head of the department of cardiology in the Government General Hospital, Chennai. Chockalingam got the first rank in MBBS graduating from Madras University. When he was doing his MD, he was chosen for government scholarship. He is a many-time gold medalist. Right from the beginning.In an occasion He states some thing Interesting about Nadigar thilagam.....Pl watch Dont Ignore...special share on this great day....
https://www.facebook.com/video.php?v...ages_video_set
Thanks to Mr Neyveli Vasudevan
என் தெய்வம் வழங்கிய
'ஞான ஒளி'
முக்காலமும் உணர்ந்த ஞான நடிகரின் 'ஞான ஒளியை' கதையை மூன்று பகுதிகளாகப் பிரிப்போம். மூன்றும் வெவ்வேறு பரிணாமங்களைக் கொண்டவை. மூன்று பகுதிகளிலும் ஏகபோகச் சக்கரவர்த்தி நம் அன்பு நாயகர்தான். "அவனன்றி ஓர் அணுவும் அசையாது" என்பார்கள். அது உண்மையோ பொய்யோ! ஆனால் ஆண்டனி இன்றி வாசுதேவன் உயிர் அசையாது. அருணின்றி அவன் அக, புற வாழ்க்கை இனிக்காது. இப்போது ஞாலத்துக்கே நடிப்பொளி வழங்கிய நாயகன் வாழ்ந்த 'ஞான ஒளி'யின் கதை. (இணையத்து இளைஞர்களுக்காகவும், என்னுடன் இணைந்திருக்கும் அனைத்து நண்பர்களுக்காகவும்)
முதல் பகுதியாக (அப்பாவி இளைஞன் ஆண்டனி)
ஆண்டனி என்ற அனாதை முரட்டு இளைஞன் "பூண்டி' என்ற கிராமத்து மாதா கோவிலில் மணியடித்து, சவப்பெட்டி செய்தல், கல்லறை வெட்டுதல் போன்ற சிறு தொழில்கள் செய்து, தன்னை எடுத்து வளர்த்த பாதிரியாரின் மேல் கொண்ட கண்மூடித்தனமான அன்பு வெறியை வெளிப்படுத்தி, விளையாட்டுப் பிள்ளையாய் கவலை இன்னதென்று அறியாமல் சிறு சிறு அடிதடி கேஸ்களில் (நியாயமான விஷயங்களுக்காக) சிக்கி, பாதிரியாரால் அடிக்கடி ஜாமீன் எடுக்கப்பட்டு, தன் குணத்தையொத்த ஒரு பெண்ணை அவளை சீண்டியபடியே காதலித்து, பாதிரியாரின் ஆசியால் அவளை மணமும் புரிந்து, இனிமையான இல்லற வாழ்க்கையில் அவளும் கர்ப்பமுற்று, ஒரு அழகான பெண் குழந்தையை இவனுக்குத் தந்து, பிரசவத்தின் போதே அந்தப் பேதை உயிர் துறக்க, அனாதையான ஆண்டனி எப்படி அவளால் சொந்தம் ஏற்பட்டு குடும்பம், சொந்தம் என்று ஆனானோ அவளே போய்விட்ட பிறகு மீண்டும் அனாதையாகி அவள் பெற்றுத் தந்த செல்வத்தைப் பாதுகாக்க தந்தை என்ற ஸ்தானத்திற்கு சொந்தக்காரனாகிறான். இப்போது அவன் அனாதை இல்லை.
இரண்டாவது பகுதியாக (பாசமுள்ள முரட்டுத் தந்தை)
தன்னுடைய கிராமத்தில் பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி, அனாதை விடுதி கட்ட வேண்டும் என்ற இயலாமை ஆசையிலே வாழும் பாதிரியார். அதற்காகவே அருமை மகளை அரும்பாடுபட்டு படிக்க வைக்கும் ஆண்டனி. பாதிரியாரால் வளர்க்கப்பட்ட இன்னொரு அனாதை சிறுவன் சிறு வயது ஆண்டனியின் நெருங்கிய நண்பன் லாரன்ஸ்... இப்போது படித்து வளர்ந்து அதே ஊரிலேயே இன்ஸ்பெக்டர். நண்பர்கள் இருவரும் நீள் பிரிவிற்குப் பின் சந்தித்து அடயாளம் கண்டு, பழைய நட்பை நினைவு கூர்ந்து, மீண்டும் நெருங்கிய நட்பு கொள்கிறார்கள்..
படிப்பின் போது கயவன் ஒருவனை காதலித்து லீவில் ஊருக்கு திரும்பும் மகள் மேரி ஒரு இடிமழை இரவில் சொந்த ஊரிலேயே அவனிடம் சோரம் போகிறாள். மகளைக் காட்ட நண்பன் லாரன்ஸை ஆசையுடன் தன் வீட்டுக்கு அழைத்து வரும் ஆண்டனி மகள் நாசமாவதை நேரே கண்டு விடுகிறான். கொதிப்பும், ஆங்காரமும், அதிகோபமும் அடைகிறான். பொங்கு கடலாய்க் கொந்தளிக்கிறான். லாரன்ஸ் நண்பனின் கோபத்தைக் கட்டுப் படுத்தி. மேரிக்கு அங்கேயே அவள் காதலனுடன் மோதிரம் மாற்றி மணமுடித்து வைக்கிறான். தன் வாழ்க்கையையே ஒரு வினாடியில் வெட்டிச் சாய்த்த மகளின் செய்கையில் கொந்தளித்து தன்னுடைய தோட்டத்து வாழைகளை வெட்டி சாய்த்து வெறிதீர்க்க முயன்று தோற்கிறான் ஆண்டனி.
பாதிரிக்கு விஷயம் போக, முறைப்படி இருவருக்கும் கல்யாணம் செய்து வைப்பதுதான் ஒரே வழி என்று சொல்ல, மான, அவமானத்திற்கு பயந்து, மேரி காதலித்த பையனை தேடிச் செல்லும் ஆண்டனி அவன் ஒரு நயவஞ்சகன்... பெண்களை ஏமாற்றும் காமாந்தகன் என்று தெரிந்து கொள்கிறான். இருந்தாலும் அவனைத் தேடிக் கண்டு பிடித்து தன் மகளுக்கு வாழ்வு தரச் சொல்லி மன்றாடுகிறான். அவன் காலைப் பிடித்துக் கதறுகிறான். ஆனால் அந்த நயவஞ்சகனோ கல்யாணத்துக்கு மறுத்துவிடுவதோடு மட்டுமல்லாமல் மேரியைப் பற்றி அவதூறாகவும் பேசிவிடுகிறான்.
அவனால் வெகுவாக அவமானப் படுத்தப்பட்ட போதும், மகளுக்காகப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஆண்டனி ஒரு கட்டத்தில் கோபம் எல்லை மீற, ஆத்திரத்தில் அவனை முரட்டுத்தனமாக ஒரே ஒரு அடி அடித்து விட, ஆண்டனியின் இரும்புக்கை தாக்குதலில் பந்து போலத் துள்ளி விழுந்து உயிரை விடுகிறான் மேரியின் காதலன். இது அறியாத ஆண்டனி அவனை தூக்கிக் கொண்டு பாதிரியிடம் சேர்க்கிறான். பிறகுதான் தெரிகிறது மாப்பிள்ளையாய் வர இருந்தவன் மாமனாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவரம்.
போலீஸ் நண்பன் தன் கடமையை செய்கிறான். யாருமே இல்லாமல் கற்பிழந்து ஆதரவற்று அனாதையாக நிற்கிறாள் மேரி. சிறைவாசத்தில் ஆயுள்தண்டனையில் ஆண்டனி. எதுவும் செய்ய முடியாத நிலையில் பாதிரியார். சிறையில் இருக்கும் ஆண்டனிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி... மகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு விட்டாள் என்று. மீண்டும் அனாதையாகிறான் ஆண்டனி.
பாதிரியாருக்கு அதிக வயதாகி விட்டது. மரண வாசலை நெருங்கும் நேரம். தன் அன்பு ஆண்டனியைப் பார்க்க ஆசை. இன்ஸ்பெக்டர் லாரன்ஸிடம் தெரிவிக்கிறார். பாதிரியாரின் இறுதி ஆசை என்பதால் லாரன்ஸும் தன் சொந்தப் பொறுப்பில் சிறையிலிருந்து பரோலில் ஆண்டனியை பாதிரியாரிடம் அழைத்து வருகிறான். இரு தூய்மை உள்ளங்களும் உண்மையான அன்பின் உணர்வுகளின் சங்கமத்தால், உணர்ச்சிப் பெருக்கால் போராடுகின்றன. தன் ஆசைகள் எதுவுமே நிறைவேறாமல் தன் உயிர் பிரியப் போவதை எண்ணி பாதிரியார் கண்ணீர் விட, அதையே தன் மகள் மூலம் நிறைவேற்றுவதாய் வாக்குக் கொடுத்திருந்த ஆண்டனி அது பலிக்காமல் போனதை எண்ணி வேதனையுறுகிறான்.
தான் ஜெபம் செய்யும் புனிதமான மெழுகுவர்த்தியை ஆண்டனியிடம் தந்து ஆண்டனியை லாரன்சிடம் ஒப்படைத்து அவனை மனிதனாக்கும்படி கூறி பாதிரியார் கண் மூடுகிறார். ஊருக்கெல்லாம் சவப்பெட்டி செய்த ஆண்டனி தன் தெய்வத்திற்கான ஈமச் சடங்குகள் செய்ய லாரன்ஸிடம் பெர்மிஷன் கேட்க அவனோ மறுக்கிறான். வழக்கம் போல கோபமுறும் ஆண்டனி லாரன்ஸை அடித்துப் போட்டு விட்டு பாதிரியாரின் கனவுகளை நனவாக்குவதற்காகவே அங்கிருந்து தப்பித்து விடுகிறான்.
இனி மூன்றாவது பகுதி (பரிதாபத்துக்குரிய கில்லாடி மில்லியனர் அருண்)
தப்பித்த ஆண்டனி வெளிநாடு சென்று மிகப் பெரிய பணக்காரனாகி நீண்ட இடைவெளிக்குப் பின் தன் சொந்த கிராமத்துக்கு வருகிறான். இப்போது அவன் ஆண்டனி அல்ல. மில்லியனர் அருண். பாதிரியாரின் கனவுகளை நனவாக்கவே அருண் தன் சொந்த மண்ணுக்கே திரும்புகிறார். ஆனால் அவர்தான் ஆண்டனி என்று ஒரு பயலுக்கும் தெரியாது. அருணுக்கு இன்னொரு இன்ப அதிர்ச்சி. இறந்து விட்டதாக சொல்லப்பட்ட மகள் ஒரு ஏழை ஆசிரியையாக இப்போது அவர் கண் முன்னாலேயே உயிரோடு. தன்னையே நம்ப முடியவில்லை. மகளுக்கே தந்தையை அடையாளம் காண முடியாத அளவுக்கு அருணின் தோற்றம். மாற்றம். மகளிடமே தன்னைத் தெரியப்படுத்திக் கொள்ள முடியாத துர்ப்பாக்கிய சூழ்நிலையில், கண்கொத்திப் பாம்பாக லாரன்ஸ் அலைய, எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே அடிமனதில் அழுகிறான் ஆண்டனி. மகளுக்கே மகள் வேறு. பேத்தி. மறுபடியும் சொந்த பந்தங்கள். தான் கடவுளாக நேசித்த பாதிரியாரின் ஆசைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற ஆரம்பிக்கிறார் அருண். ஊராரின் உன்னத அன்புக்கும் பாத்திரமாகிறார் அவர்களுக்கு தான் பழைய ஆண்டனி என்பது தெரியாமலேயே அல்லது காட்டிக் கொள்ளாமலேயே.
இதன் நடுவில் வஞ்சம் வைத்த புலியாக வாழ்நாள் சபதமெடுக்கிறான் லாரன்ஸ். ஆண்டனியால் தன் பதவிக்கும், தனக்கும் ஏற்பட்ட களங்கத்தை, இழுக்கை சரி செய்யத் துடிக்கிறான். வேண்டுமென்றே நண்பனைத் தப்பிக்க வைத்தவன் என்ற இழிசொல்லை இல்லாமல் செய்ய இரை தேடும் சிங்கமாக மீண்டும் அந்த ஊருக்கே மாற்றலாகி வருகிறான். மீண்டும் நண்பர்கள் சந்திக்கின்றனர். ஆனால் நண்பர்களாக அல்ல. எதிரிகளாக.
அருண்தான் ஆண்டனி என்பதை பல சந்தர்ப்பங்களில் உணர்ந்து, தெரிந்து கொண்ட லாரன்ஸ் அதை நிரூபிக்க ஆதாரம் இல்லாமல் தவிக்கிறான். ஆண்டனியோ வித்தகனுக்கு வித்தகனாக எந்த ஆதாரத்தையும் விட்டு விடாமல், தன் மகள் மீதான அதீத பாசத்தையும் மறைத்துக் கொண்டு, லாரன்ஸ் தரும் சித்திரவதை தொல்லைகளையும் தாங்கிக் கொண்டு, ஒவ்வொரு முறையும் லாரன்ஸ் விரிக்கும் வலைக்குள் சிக்காமல் குள்ள நரியாக அவனிடமிருந்து தப்பித்துக் கொண்டே இருக்கிறான்.
மேரியின் மகள் லாரன்ஸின் மகனைக் காதலிக்க, கல்யாணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமணப் பத்திரிக்கையை மேரி அருணிடம் கொடுக்கப் போகும் சந்தர்ப்பத்தில் தன் மகளிடமே பரிதாபமாக தன்னை அவள் தந்தை ஆண்டனிதான் இந்த அருண் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறான் ஆண்டனி. ஆடிப் போகிறாள் மகள். இத்தனை நாள் பிரிந்திருந்த மொத்தப் பாசத்தையும் அவள் மீது அந்தக் கண நேரத்தில் கொட்டுகிறான் ஆண்டனி. அப்பாவைப் பார்த்த சந்தோஷத்தை விட அப்பாவின் எதிர்காலம்... அதை நிர்ணயிக்கப் போகும் லாரன்ஸ்... இவைதான் மேரி நெஞ்சில் இப்போது அதிகம் நிழலாடுகின்றன. பேத்தியின் கல்யாணத்தை ஜாம் ஜாமென்று நடத்தப் போவதாகக் மேரியிடம் கூறுகிறார் அருண். ஆனால் மேரி தடுத்து விடுகிறாள். தன் தந்தையை பிடிப்பதையே வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டுள்ள தன் வருங்கால சம்பந்தி இன்ஸ்பெக்டர் லாரன்ஸிடம் தன் தந்தை மாட்டாமல் இருக்க வேண்டுமானால் வெளி உலகத்திற்கு தங்களது தந்தை மகள் உறவு தெரியக் கூடாது என்று ஆண்டனியிடம் இறைஞ்சுகிறாள் மேரி. அதுமட்டுமல்ல தந்தையை திரும்ப வெளிநாட்டுக்கே சென்று விடும்படியும் வேண்டுகிறாள். அனலிடை புழுவாக துடிக்கிறார் அருண். மகள், பேத்தி பாசம் ஒருபுறம்.... தன்னை வேட்டையாடவே அவதாரம் எடுத்திருக்கும் லாரன்ஸ் ஒரு புறம்... பாதிரியாரின் கனவுகள் ஒருபுறம்.
சித்ரவதை சிறகுகளுக்குள் சிக்கி, உள்ளுக்குள் உடைந்து, ஊமையாய் அழுது, துன்பங்களில் துவள்கிறார் ஆண்டனி இல்லை இல்லை அருண்.
அருணை ஆண்டனி என்று நிரூபிக்க எந்த வழியிலும் வெற்றி அடைய முடியாத லாரன்ஸ் இறுதியாக ஒரு வழியைத் தேர்ந்தெடுக்கிறான். அதைத் தன் மகனின் (அருணின் பேத்தியின்) கல்யாணத்தின் போது பயன்படுத்திக் கொள்கிறான். கல்யாணத்தை நடத்திக் கொடுக்க வரும் அருண் முன்னாலேயே தன் சம்பந்தியான மேரியின் கடந்தகால வாழ்க்கையைக் கூறி அவள் நடத்தை கெட்டவள் என்று ஊரார் முன் அவளை வேண்டுமென்றே அவமானப் படுத்துகிறான் லாரன்ஸ். (அப்போதுதான் அருண் மகள் மேல் உள்ள பாசத்தால் தன்னை ஆண்டனி என்று நிச்சயம் அடையாளம் காட்டிவிடுவான் என்ற நம்பிக்கை கொண்டு) அவளுடைய கணவன் யார் என்று கேலி பேசுகிறான் தான் அவளுக்கு செய்து வைத்த கல்யாணத்தை மறைத்தே. மேரியின் மகளுக்கான தகப்பன் யார் என்று சொற்சவுக்கால் அடிக்கிறான். உண்மையை மேரி உரைத்தால்தான் இந்தக் கல்யாணம் நடக்கும் என்றும் பயமுறுத்துகிறான்.
தன் அருமை மகள் தன் கண் முன்னாலேயே லாரான்ஸால் ஊரார் முன் அவமானப்படுவதை சகிக்க முடியாத அருண் தன் நிலை இழக்கிறான். வெறி கொண்ட வேங்கையாகிறான். மேரிக்கு லாரன்ஸ்தான் மோதிரம் மூலம் திருமணம் செய்து வைத்தான் என்று தன்னையறியாமல் உண்மையை உடைக்கிறான். பழைய ஆண்டனியின் முரட்டுக் குணத்தைக் காட்டி, உச்ச கோபத்தில் லாரன்ஸை பாதிரியார் தந்த மெழுவர்த்திக் கேண்டிலால் அடிக்கக் கை ஓங்கி தன்னை அடையாளம் காட்டி விடுகிறான். அதைத்தான் லாரன்ஸும் எதிர்பார்த்தான். அவன் நினைத்தபடியே நடந்து விட்டது. பல வழிகளில் முயன்றும் அருணை ஆண்டனி என்று அடையாளம் காட்ட முடியாமல் தோல்வியுற்று துவளும் லாரன்ஸ் பாசம் என்ற தூண்டிலுக்குதான் ஆண்டனி மாட்டுவான் என்பதை வகையாகப் பயன் படுத்திக் கொண்டு அதில் வெற்றியும் அடைகிறான். அருணை அவர் வாயாலேயே ஆண்டனி என்று அனைவர் முனனால் சொல்ல வைக்கிறான்.
அருண் தான் தான் ஆண்டனி என்று அனைவர் முன்னும் ஒத்துக் கொண்ட பிறகு தன் முறையற்ற செயலுக்காக அவனிடம் மன்னிப்பு கோருகிறான் லாரன்ஸ். அவனைப் பிடிக்க வேறு வழி தெரியாததால்தான் தான் மேரியை அவமானப்படுத்த நேர்ந்தது என்றும் வருத்தப்படுகிறான். மேரி நல்லவள்தான் என்று ஊரார் முன் நிஜத்தை எடுத்துரைக்கிறான். தான்தான் மேரிக்கு கல்யாணம் செய்து வைத்தவன் என்ற உண்மையையும் கூறுகிறான். ஆண்டனி சாந்தமடைகிறான்.
தந்தை மாட்டக் கூடாது என்று நினைத்த மகளுக்கு ஏமாற்றமே!
பாதிரியாரின் ஆசைகளை நிறைவேற்றி விட்ட திருப்தி, மகளின் மானம் நண்பனால் சீண்டப்பட்டு பின் அவனாலேயே காக்கப்பட்ட கண்ணியம், பேத்தியின் கல்யாணம் என்ற சந்தோஷங்களில் மனம் லேசாக, முழு திருப்தியோடு தன்னை ஆண்டனி என்ற பழைய கைதியாக லாரன்ஸ் வசம் சந்தோஷமாக ஒப்படைக்கிறான் அருண் சிறைக் கதவுகளை எதிர்நோக்கியபடி.
'ஒளி' உலகுள்ளவரை வீசிக் கொண்டே இருக்கும்.
ஆண்டனி அனைவரையும் ஆட்டுவித்துக் கொண்டே இருப்பான்
அருண் அனுதினமும் அவரை நினைக்கச் செய்து கொண்டு தான் இருப்பார்.
இந்த விதி மாற்ற முடியாதது.
இனி....
'ஞான ஒளி' யில்
'நம் ஆண்டவனின் அரசாட்சி'
விரைவில் தொடரும்.
ஒளித் தாக்குதலில் சிக்குண்டு, சிதறிக் கிடக்கும்
வாசுதேவன்..
Thanks to Mr Neyveli Vasudevan
'சவாலே சமாளி' (கிணற்று சீன்)
'சவாலே சமாளி' யின் அந்த பாப்புலரான கிணற்று சீன் பலநாள் என் தூக்கத்தைக் கெடுத்த பெருமை உடையது. ஜெயலலிதா உயிரை மாய்த்துக் கொள்ளப் போகும் அந்த இடம்தான் படத்தின் உயிர்நாடியே! நடிப்பின் உயிர்நாடியும் கூட. ஜீவனுள்ள இக்காட்சி ஜீவன் உள்ளவரை மறக்காது.
தேர்தல் பந்தயத்தில் பண்ணையாரிடம் ஜெயிக்கும் மாணிக்கம் பந்தய பொருளாக அவர் மகள் சகுந்தலாவை பெற்று ஊரார் முன்னிலையில் தாலி கட்டி விடுகிறான் அவள் விருப்பமில்லாமலேயே. பணக்கார சகுந்தலாவுக்கும், ஏழை விவசாயி மாணிக்கத்திற்கும் பொருத்தமே இல்லாத திருமணம். பணக்காரத் திமிர் கொண்ட மனைவியை ஏழை மாணிக்கம் அடக்கி ஒடுக்க நினைக்கிறான் அவள் தனக்கேற்றவாறு இருக்க வேண்டும் என்று எண்ணி. தன் நிலத்து வேலைகளையும், வீட்டு வேலைகளையும் அவளைச் செய்யச் சொல்லி ஆணையிடுகிறான். முதலிரவில் கூட தொட அனுமதிக்காத சகுந்தலா கணவன் (இல்லை அவளைப் பொருத்தவரை அவன் கயவன்) இடும் பழக்கமில்லாத வேலைகளில் மனம் நொந்து போகிறாள். ஆனால் மாணிக்கத்திற்கோ உள்ளுக்குள் அவள் மீது உயிர். அவன் வெளிக்காட்ட மாட்டான். அவளுக்கோ அவன் ஒரு வஞ்சகன், பழி உணர்ச்சி கொண்டவன். அவனைப் பழிவாங்கவோ அல்லது தன மனதிற்குப் பிடிக்காதவனோடு வாழப் பிடிக்காமலோ அவள் தன் உயிரை தோட்டத்துப் பக்கம் உள்ள கிணற்றில் குதித்து மாய்த்துக் கொள்ள முற்படுகிறாள். மனைவியைப் பற்றி நன்கறிந்த மாணிக்கம் கண்கொத்திப் பாம்பாக அவளைக் கவனித்து அவளை காப்பாற்றுகிறான். தன்னவள் தன்னைப் பற்றி தெரிந்து புரிந்து கொள்ளாமலேயே உயிரை விட எத்தனித்து விட்டாளே... நமக்கு பழிபாவத்தைச் சேர்க்க இருந்தாளே என்று மனம் வெதும்பி அவளுக்குத் தன் நிலையை விளக்குகிறான். மனம் விட்டு தன் உள்ளத்தில் பொங்கும் உணர்ச்சிகளை அருவியாய் வார்த்தைகளில் அவளிடம் கொட்டித் தீர்க்கிறான். தான் குற்றமற்றவன்...அவள் மேல் தீராத அன்பு கொண்டவன் என்பதை அவளுக்குத் தன்னாலான மட்டில் புரிய வைக்க முயல்கிறான்.
இதுதான் சிச்சுவேஷன். மாணிக்கமாக மாசில்லாத நம் நடிப்புலக மாணிக்கம். மனைவி சகுந்தலாவாக ஜெயா மேடம்.
ஆஹா! எப்பேர்பட்ட பங்களிப்பு நடிகர் திலகத்துடையது.! கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளப் போகும் நேரத்தில் கயிற்றால் ஜெயலலிதாவை பிடித்து இழுத்துக் காப்பாற்றப் போகும் போது நடத்த ஆரம்பிக்கும் நடிப்பு சாம்ராஜ்யம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து எல்லைகளின்றிப் பரவி ஆக்கிரமிக்கும் அதிசயத்தை என்னவென்று சொல்ல!
கயிற்றால் ஜெயலலிதாவை கட்டி இழுத்துக் காப்பாற்றும் போது அவரது கண்களில் தெரியும் ஆழம் அளவுகோல் இல்லாதது. (எனக்குத் தெரியாம நீ எதுவும் செஞ்சுடுவியா...செய்யத்தான் விட்டுடுவேனா? உன் இஷ்டத்திற்கு நீ ஆட்டம் போடுவே! நான் பார்த்துகிட்டு சும்மா இருக்கணும்! ம்.... )
கயிற்றால் ஜெயா இவரை அடிக்க அடிக்க கயிற்றின் ஒவ்வொரு பகுதியாக பிடித்தபடி சிரிக்கும் சிரிப்பு. (பார்த்தியா! இங்கேயும் ஜெயிச்சது நான்தான்)
ஜெயலலிதா இவரை திட்டித் தீர்த்தவுடன் (ஒரு பெண்ணுங்கிற இரக்கம் கூட இல்லாம இப்படி அரக்கத்தனமா நடந்துக்குற நீங்க மனுஷனே இல்ல!) என்று குமுறி அழும் போது
"அழு... நல்லா அழு... வாய்விட்டுக் கதறு.... அப்பத்தான் உன் வெறி அடங்கும்...உன் சந்தோஷத்தையெல்லாம் குழி தோண்டிப் பொதச்சவன் நான். நான் உயிரோட இருக்கிற வரைக்கும் அது உனக்குக் கிடைக்காது... அதுதானே உன் குற்றச்சாட்டு.... சரி! உன் சந்தோஷத்தை யெல்லாம் அழிச்ச நானே அழிஞ்சி போயிட்டா....உனக்கு அது திரும்ப கிடைச்சுடுமில்லையா?" என்றபடி வயிற்றுப் பகுதியில் கைகளைக் கட்டியபடியே சாவின் வாயிலிலும் நிற்கும்போது கூட நிற்கும் அந்த ஆண்மை நிறைந்த கம்பீர போஸ்.
ஒன்று இரண்டு மூன்று எண்ணி பத்தைத் தொடும் போது கைகள் இவரைத் கிணற்றில் தள்ளத் தயார் நிலையில் இருந்தும் மனம் மறுத்த காரணத்தால் ஜெயலலிதா தோற்றுவிட நடிகர் திலகம் கீழே இறங்கி
"உனக்கு அந்த துணிச்சல் இல்ல. உன் மனசுல பலவீனம்தான் மண்டிக் கிடக்குது அதனாலதான் சாகத் துணிஞ்ச"..... என்று பேசிக் கொண்டே வருவார்.
"நீ என்கூட வாழ்ந்துதான் தீரணும்னு உன்னை நிர்ப்பந்தப்படுத்துறது உன் கழுத்துல கிடக்கிற இந்த மஞ்சக் கயிறுதானே! நான்தானே அதை உன் கழுத்தில கட்டினேன். இப்ப ஒரு நிமிஷம்... ஒரு நிமிஷம் உன்னைத் தொடரத்துக்கு அனுமதி கொடுத்தீனா நானே அந்தக் கயித்த அறுத்து எறிஞ்சிட்டுப் போறேன். அதுக்கப்புறம் உன் இஷ்டப்படி எப்பிடி வேணும்னாலும் வாழலாம்...என்று சொல்லி திரும்பவும்
'எப்பிடி வேணும்னாலும்'
என்று இரண்டாம் முறை அழுத்தம் கொடுப்பார். தான் அப்படி வழங்க இருக்கும் அனுமதியை ஆணித்தரமாக கூறுவதாக அர்த்தம் தொனிக்கும்படி வசங்களை டெலிவிரி செய்வார்.
"நீ எனக்கேத்த மனைவியாய் வாழணும்ங்கிற ஆசையினால உனக்குப் பழக்கமிலாத வேலைகளை செய்யச் சொல்லி உன்னைக் கட்டாயாப் படுத்தினேன். அது உனக்குக் கொடுமையாப் பட்டுது. நீ நெஞ்சு வெடிச்சு கதறி அழுகிறத பார்க்கும் போது உன்னைப் போலவே எனக்கும் கதறி அழுகணும் போல தோணுது... என்ன செய்யிறது? நான் ஆம்பிளயாச்சே! அதனாலதான் மனசுல இருக்கிற வேதனைகளையெல்லாம் வெளியே சொல்ல முடியாமே அப்படியே வாய்க்குள்ளேயே போட்டு மென்னு முழுங்கிக்கிறேன்.... முழுங்கிக்கிறேன்" என்று மனக்குமுறல்களைக் கொட்டித் தீர்ப்பார்.
இந்தக் காட்சியில் வசனங்கள் மிகப் பெரிய பலம். வசனங்களைச் சொல்லாமல் இந்தக் காட்சியை விவரிக்க இயலாது.
"உன்னதான் தொட முடியல்ல...உன் மனசையாவது தொடலாம்னு பாக்குறேன்". சொல்லி நிறுத்துவார். முடியல்ல என்பதை கைகளைக் கொட்டி உணர வைப்பார். ஒரு விசும்பு விசும்புவார்.
"நீ உன் மனசுல இருந்ததையெல்லாம் ஒளிவு மறைவு இல்லாம கொட்டித் தீர்த்த மாதிரி நானும் என் மனசுல இருந்ததையெல்லாம் ஒளிவு மறைவு இல்லாம கொட்டித் தீர்த்துட்டேன். ஒருவேளை உன்னை என்னால காப்பாத்த முடியாம போய் இருந்தா நான் உன்னப் பத்தி என் மனசுல நினச்சுக்கிறதெல்லாம் உன்கிட்ட விளங்க வைக்க முடியாமலேயே போயிருக்கும்". (உதடுகளை அவ்வளவு அழகாகக் குவித்து சோகத்தையும், துயரத்தையும் கண்களில் தேக்கிக் காண்பிப்பார்)
ஜெயலலிதாவிடம் முழுவதுமாகத் தன் நிலையை விளக்கிவிட்டு புயல் அடித்து ஓய்ந்து போன சூழ்நிலையைக் காண்பிப்பார். பேசி முடித்த பின் கிணற்றின் மேல் கால்களுக்கிடையில் கைகளை கொடுத்து அப்படியே ஒடுங்கிப் போய் உட்கார்ந்திருப்பார். ("இதுக்கு மேலே உனக்கு விளக்க என்னாலாகாது தாயே! புரிஞ்சா புரிஞ்சுக்கோ! இல்லைன்னா உன் இஷ்டம்" என்பது போல.)
போகும் போது,
" நீ செஞ்ச இந்த பைத்தியக்கரத்தனமான காரியத்தை நான் யாருகிட்டேயும் சொல்லல.... நான் வீட்டுக்குப் போறேன்...நீ வரற்தா இருந்தா வரலாம்" (இடது கை காது மடல்களை பிடித்து திருவியபடி ஒரு அற்புதமான மானரிசத்தைக் காட்டுவார்)
என்று சொல்லி விட்டு விரக்தியுடன் செல்லுவார்.
வாவ். என்ன ஒரு காட்சி. ஜெயலலிதாவிடம் கோபமாக வாதம் தொடக்கி, பின் ஜெயாவை பேச முடியாதபடி வாயடைக்கச் செய்து, கோப வார்த்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி. மனைவி மேல் கொண்ட உண்மையான அன்பை கனிவான வார்த்தைகளில் கொட்டி. அவள் புரிந்து கொள்ளாத நிலையை குரல்கள் உடைந்து நா தழுதழுக்க விளக்கி, அதுவரை அழாதவர் அதிகமாக அழுது புரளாமல் தேவையான அழுகையை மட்டுமே சிந்தி, அவ்வளவுதான் நம் விதி என்ற விரக்தியோடு இறுதியான ஒட்டிக் கொண்டிருக்கும் சிறு நம்பிக்கையில் 'அவள் திருந்தி வந்தால் வரட்டும்... இல்லையென்றால் அவள் இஷ்டம்' என்ற வெறுப்பு கலந்த விரக்தி சூழ்நிலையைக் காட்ட நம் நடிக தெய்வத்தைத் தவிர எவரால் முடியும்?
ஒரு நடிகன் என்பவன் நடித்து விட்டு சென்று விடுவான்.. அந்த நேரம் நாம் அவனைப் பார்ப்போம். அத்தோடு மறந்து விடுவோம். ஆனால் இந்த நடிகன் அப்படியா?
பாத்திரத்தை உணர்ந்து நடிப்பவனே மகாநடிகன்.
அந்த பாத்திரத்தின் தன்மையை பார்க்கிறவர்களுக்குப் புரிய வைக்கும் காரியத்தையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கிறானே... அவன் உலக மகா நடிகன்.
அது மட்டுமல்ல. அந்த உணர்வை உயிருள்ள வரையில் நம் தசை நாளங்களில் பரவச் செய்து நம்மை உணர்வுகளின் சங்கமம் என்ற கயிற்றில் பின்னிப் பினைக்கிறானே... அவன்... அவனை என்னவென்று சொல்வது?!
அவரைத்தான்
நடிகர் திலகம் என்ற நடிப்பு மகான் என்கிறோம்.
காட்சி குறித்த நல்ல கருத்துரை.. பாராட்டுகள்..
காட்சிப்புலத்தில், உரையாடல், ஜெயாவின் ரீ-ஆக்*ஷன் ( நடிகர்திலகத்தின் படங்களில் மட்டும் தன் உச்ச திறமையை வெளிப்படுத்துவது ஜெயாவின் சிறப்பம்சங்களில் ஒன்று ) ஒளிப்பதிவு மற்றும் கவனமாகத் தேர்வுசெய்யப்பட்ட கேமரா கோணங்கள், நெறியாள்கை உள்ளிட்ட பிறவும் நடிகர் திலகத்தின் நடிப்புத்திறனுக்கு ஈடுகொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
'கல்நாயக்'- பெயருக்கு முன்னாடி ஒரு பட்டமும் வேணாஞ்சாமி!!! வா...வா...ம்பாரு ஒருத்தரு. போனா 'நேருக்கு நேராய் வரட்டும்'-னவரு 'இது எங்க ஏரியா. இன்னாத்துக்கு இங்க வரீக?'-ம்பாரு. அப்புறம் எங்கேயும் கிடைக்காத 'பின்'னை நாமதான் வாங்கிட்டோம். வாங்கிட்டோம்பாங்க. நமக்குத் தேவையா?
Playback Singers who graced NT's movies, though not singing for NT!
திலக குரல்3.
தனது கந்தர்வக்குரலால் நடிகர்திலகத்தின் திரைப்பட பங்களிப்பில் நம்மைக் கட்டிப்போட்ட 'செந்தமிழ் தேன்மொழியாளர்...' T.R. மகாலிங்கம் அவர்கள்.!
Our fond remembrance with gratitude of participatory support in NT's movies!
https://www.youtube.com/watch?v=HdhAu6fbeIA
https://www.youtube.com/watch?v=q09dYjrH2LU
https://www.youtube.com/watch?v=HCm1GVhixQI
Playback Singers who graced NT's movies, though not singing for NT!
திலக குரல் 4. Dr. Balamurali Krishnaa sir.
பாட்டும் நானே (நவரச நடிப்பின்) பாவமும் நானே என்று நடிகர்திலகம் கோலோச்சியதிருவிளையாடலில் பாட்டும் தானே பாவமும் தானே என்று 'மதுரைக்கு வந்த சோதனை'யான அகந்தைப் பாடகரைக் கண்முன்னே நிறுத்திப் பெருமை சேர்த்த பாலையா அவர்களின் பொருத்தமான குரலாய் பெருமை பெற்ற பாடக வால்நட்சத்திரம் பாலமுரளி கிருஷ்ணா அவர்களுக்கு எமது நன்றியும் வணக்கமும் !
Our heartfelt thanks for rocking Thiruvilayadal movie with this inimitable song,
https://www.youtube.com/watch?v=D0wLIArAayY
His best remembered off screen rendition
https://www.youtube.com/watch?v=sYD_Iw77mT4
திலக குரல் 5. A.M.ராஜா
சிம்மக் குரலையும் மென்மைப் படுத்திய மேன்மைப் பாடகர் 'ஜெமினியின் எதிரொலி ' A.M.ராஜா !
இனிய குரலோட்டம்,,,,,,, ஆனால் கணேசன்தான் மாறிவிட்டார் ஜெமினியிலி ருந்து சிவாஜிக்கு !
Evergreen softie A.M. Raja's Gemini voice for NT! NT justified ..but when you hear this song closing your eyes .. GG only pops up!! Our thanks to AMR for his trial to befit NT's voice
https://www.youtube.com/watch?v=7svF84dnMpI
https://www.youtube.com/watch?v=Z8f3IAZ3GY0
திலக குரல் 6. திருச்சி லோகநாதன்
கல்யாண சமையல் சாதம்...காய்கறிகளும் பிரமாதம்.....ஆனால்....நடிகர்திலகம் தான் சாப்பிடாது ரசிகர்களுக்குப் பரிமாறவே முடிந்தது
Trichy Loganathan famous for his 'varai nee vaarai..(Manthiri kumari)' and 'Kalyaana samaiyal saadham (Maaya Bazaar) honoured Karnan to honor himself! Thanks to this soul stirring song voiced by him!
https://www.youtube.com/watch?v=GvTuUhcqEaw
ஈங்கிவரை நடிகர்திலகமாக நாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம் என்று தமிழ்த் திரையுலகின் சாதனைக் காவியம் கர்ணனின் உயிரோட்டப் பாடலுக்கு உயிர் கொடுத்த உன்னதமான உயரழுத்த மின்காந்தக் குரல் !
திலக குரல் 7.சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்
Our heartfelt thanks to Seergaali Sir for this signature song that got immortalized by the screen presence and the best of NT's absorbing portrayals in his life time with his silent but powerful depictions of death pains before the Lord !
Seergaazhi Govindarajan's Song of this Century that blessed and graced NT's Karnan character to linger!
https://www.youtube.com/watch?v=QroxeC_HQ6k
Seerghazhi Govindharajan also made an impressive value addition to Padikkadha Medhai Sivaji's role by his mind voice song 'Engirundho vandhaan ...' through Rangarao!
https://www.youtube.com/watch?v=rV8yRtU8jmo
https://www.youtube.com/watch?v=vVffTg8AoWY
https://www.youtube.com/watch?v=pbte64aTKPA
http://oi57.tinypic.com/mnez6.jpg
எட்டாவது அதிசியம் அல்ல,
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
திலக குரல் 8. P.B. ஸ்ரீனிவாஸ் :
P.B. Srinivas aka PBS (aka Play Back Singer)!
Another softie whose voice could never match NT's simmakkural! However, in combination with TMS, he could make memorable contributions and value additions to NT movies like Paar Magale Paar, Pandha Paasam, Paavamannippu, Paasamalar....with his co-stars like GG or Muthuraman ....Hats off to PBS for gracing our NT's movies!
https://www.youtube.com/watch?v=UvmgYkgg3o8
https://www.youtube.com/watch?v=P9GHMCQGlV8
https://www.youtube.com/watch?v=JK3XMj44Vv8
https://www.youtube.com/watch?v=hQjCTpgfaqw