Wonder why SPB didn't sing for Kamal in a while. I cant seem to recall his last song for kamal .. They had/have such a great relationship.
Wonder why SPB didn't sing for Kamal in a while. I cant seem to recall his last song for kamal .. They had/have such a great relationship.
There was this song ' Mouname' sung by SPB in Anbe Sivam. But the song was completely unused in the movie.
In Mumbai Express telugu version(2005). SPB sang for Kamal.
விஸ்வரூபத்தைத் தொடர்ந்து 'மூ' படம் இயக்கும் கமல்!
'விஸ்வரூபம் 2 ' விரைவில் திரையைத் தொடவேண்டும் என்று இறுதிக்கட்டப் பணிகளில் அதிதீவிரமாக கவனம் செலுத்திவருகிறார் கமல்.
இதற்கடுத்து லிங்குசாமியின் தயாரிப்பில் கமல் நடிப்பதாக சொல்லப்பட்டது.
தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் லிங்குசாமி தயாரிக்கும் கமல் படத்தை இதுவரையில் ரமேஷ்அரவிந்த் இயக்குவதாகத்தான் இருந்தது.
இப்போது திடீர்மாற்றம். 'சார் நீங்களே டைரக்ஷனும் செய்துவிடுங்களேன் 'என்று லிங்கு அன்புக்கட்டளை போட சிரித்துக் கொண்டே ஓ.கே சொல்லி விட்டாராம், கமல்.
மூன்று மொழிகளிலும் உருவாகவிருக்கும் படத்துக்கு இயக்கம் ப்ளஸ் நடிப்பு இரண்டும் கமல்தான். ஆனால், ஒவ்வொரு மொழியிலும் பிரபலமான முன்னணி நடிகர்கள் பலர் கமலுடன் இணைந்து நடிக்கிறார்கள்.
கமல் படத்துக்கு 'மூ'என்று ஒற்றை எழுத்தில் உற்சாகமாகப் பெயர்சூட்டி இருக்கிறார்கள்.
'விஸ்வரூபம் 2' படம் ரிலீஸான பிறகே 'மூ' படம் குறித்துப் பேச வேண்டும் என்று இருக்கிறாராம் கமல்.
In one of his interviews along with SPB aired sometime in '09, he takes a dig at his own singing in comparison with the legend SPB. I'm not sure if any of you guys have seen it - He says 'Ivaru saendhu paadalam saendhu paadalamnnu soluvaaru ... saendhu paadnna appdae pottu merrichivaaru!' SPB was giggling in the side for that comment ...
I feel Kamal's singing talent is itself very underrated ... I recently heard his 'Kaadhal piriyaamal kavithai thondradhu' from Panchathantiram. He navigates ups and downs very nicely with decent 'gamagams'.
Kamal and SPB
http://www.youtube.com/watch?v=XXGJ2...880D1EA64E9251
Kamal - Raja - SPB : The three people who taught me Tamil :)
Producers Council election - " We need a proactive president # Kamal Haasan
http://www.youtube.com/watch?v=WbxpnCk9jbQ&feature=youtu.be
Real life Saket Ram?
When I saw this pic a few days back, I was very surprised with the similarity the man in this pic shares with the Saket Ram character. The hairdo, the stare, the spectacles, the jaw... replace it with a twirled moustache, and the man in the pic looks so similar to Saket Ram's final get up (the assassin part) in Hey ram. His real life too bears a few similarities with Saket ram's. any idea who is this gentleman? :-)
மகாகவி பாரதியின் நினைவு தினம் இன்று..
கமல் நடித்த வறுமையின் நிறம் சிவப்பு திரைப்படத்தில் இடம்பெற்ற பாரதியின் பாடல்..
http://www.youtube.com/watch?v=hdsCcPw4hqQ
கமல்ஹாசன் நினைத்தாலே இனிக்கும் டிரெய்லரை வெளியிடுகிறார்.
டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்ட நினைத்தாலே இனிக்கும் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி வருகிற வெள்ளிக்கிழமை(13.09.13) சத்யம் திரையரங்கில் காலை 9.30 மணிக்கு நடைபெறவிருக்கிறது.
சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக பதவியேற்ற கே.ஆர் தலைமை வகிக்க, இயக்குனர் அமீர், இயக்குனர் சங்கத் தலைவர் விக்ரமன் முன்னிலையில் கமல்ஹாசன் டிரெய்லரை வெளியிடுகிறார். தமிழ்த் திரையுலக ஜாம்பாவான்களின் கூட்டணியில் உருவாகியிருந்த நினைத்தாலே இனிக்கும் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
நினைத்தாலே இனிக்கும் திரைப்படத்தில் மற்றொரு ஹீரோவாக நடித்த ரஜினி இவ்விழாவிற்கு வருகிறாரா? இல்லையா? என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. கே.பாலச்சந்தர், கமல்ஹாசன் என தனக்கு நெருங்கியவர்களுடன் நடித்த திரைப்படத்தின் நிகழ்ச்சிக்கு ரஜினி வருவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்பது கோடம்பாக்கத்து தகவல்.
http://i1366.photobucket.com/albums/...ps1dbc56c8.jpg
(Padmashree Dr.Kamal Haasan FB)
Now see this, its not like other awards/rakings without reasoning! It clearly says the logic! and also look ma, with whom he is clubbed into! ;)
Mumbai Film Fest’s Lifetime Achievement award to Costa-Gavras, Kamal Haasan
http://dearcinema.com/news/mumbai-film-fests-lifetime-achievement-award-costa-gavras-kamal-haasan/5711
Sakalakalakalaa Vallavar, if you permit me, just a few sentences about the French filmmaker Costa-Gavras who is going to share the award with Kamal.
I will start by saying : ippo thaan ivangalam (including Kamal) ivanga kannu-ku theriyudha ?
Just 2 movies of Costa-Gavras that may be of interest (but all his movies are very good)
1/ Le Couperet (meaning "Chopping Knife" not an accurate translation though) : What extent can you go to find a job, moreover get recruited
2/ Le Capital : Banker - "We are the new Robinhoods, We take from the poor and give to the rich."
Kamal acheivements-ku "bravo" pottu pottu, these 5 letters have faded out in my keypad. So vara edhachi word use panalam : super-ma.
Speaking about Kamal Haasan, Shyam Benegal said, “He is a legend in every sense of the term. He is a writer, singer, director, lyricist and an actor par-excellence. We are extremely honored to present the Lifetime Achievement Award to Shri Kamal Haasan.”
http://i1366.photobucket.com/albums/...psc38d4cc3.jpg
Stupid Shyam benagal, he doesn't know how to decide a legend! He shud actually ask a person whom i know! ;) Is there anything he doesn't know or is there anyone who knows more?! Talk me! ;))))
:clap: Nice, let us be happy that KH is being recognized and given this Life Time Achievement award !!
why do we need to bother much if some tv is not recognizing him as a legend ...
Santhanam as Vishwaroobam Kamal Haasan In Singam 2
http://www.youtube.com/watch?v=DEVVKsA2Nx0
Thats a soora mokkai scene in Singam 2. Naanum yedho perisa kalaaikka poraaro nenachu paathen.
Kamal is releasing Ninaiththale Inikkum trailer today...
http://i1366.photobucket.com/albums/...psccc52aa4.jpg
Ninaithale Inikkum Trailer
http://www.youtube.com/watch?v=BD6pbNw836Q#t=23
Thanks for posting Ninaithaale Inikkum trailer release information and also the trailer.
கமலை பார்த்துதான் சினிமாவை கற்றுக்கொண்டேன்: ‘நினைத்தாலே இனிக்கும்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அமீர் பேச்சு
http://i1366.photobucket.com/albums/...ps1a397dff.jpg
1979-ம் ஆண்டு கமலஹாசன், ரஜினிகாந்த் நடிப்பில் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘நினைத்தாலே இனிக்கும்’. எம்.எஸ்.விஸ்வநாதன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். கவியரசு கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருந்தார். தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து வெளிவந்த இந்த படம் அந்த காலக்கட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருந்தது.
இந்த படத்தை தற்போது டிஜிட்டல் முறையில் மாற்றி, மீண்டும் வெளியிடவிருக்கின்றனர். இதற்காக இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில், கே.பாலசந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன், நடிகர் கமலஹாசன், அமீர், கே.ஆர்., சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட சினிமாத் துறையைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
விழாவில், அமீர் பேசும்போது,
இந்த விழாவுக்கு நான் உலகநாயகன் கமலஹாசனின் ரசிகனாக வந்துள்ளேன். பார்க்க சுவாரஸ்யமானது என்பதற்கு இந்த விழா ஒரு முக்கியமான உதாரணம். நான் கண்டிப்பான குடும்பத்தில் பிறந்தவன். என்னுடைய அப்பா 1977-ஆம் ஆண்டு இறந்து விட்டார். முஸ்லீம் சமுதாயத்தில் பிறந்ததால் என்னுடைய அம்மா வீட்டை விட்டு வெளியே வரமாட்டார். அதனால், அப்பாவின் மரணத்திற்கு பிறகு நான் சுதந்திரமானவன் ஆகிவிட்டேன்.
அப்படியொரு நாள் பள்ளிக்கூடத்தை கட் அடித்துவிட்டு பார்த்த படம்தான் ‘நினைத்தாலே இனிக்கும்’. நான் உலகநாயகனின் ரசிகன் என்று சொல்வதைவிட வெறியன் என்றுதான் சொல்லவேண்டும். அவருடைய சினிமாக்களைப் பார்த்துதான் நான் சினிமாவைக் கற்றுக்கொண்டேன் என்று சொன்னால் அது மிகையாகாது.
நான் ‘பிறவிக் கலைஞன் கமல்ஹாசன்’ என்ற பெயரில் நற்பணி மன்றம் ஒன்றையும் தொடங்கினேன். அவரை நிறைய முறை நேரில் சென்று பார்க்க என்னுடைய நண்பர்கள் அழைத்தாலும், அவரை தூரத்தில் நின்றே ரசிக்கவேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் என் மனதில் இருந்தது. அவருடன் சேர்ந்து பல இடங்களில் போட்டோ எடுத்திருந்தாலும், அவருடைய ரசிகனாக, என் மேல் அவர் கை போட்டு எடுத்த போட்டோ இதுவரை ஒன்றுகூட என்னிடம் இல்லை என்பதுதான் உண்மை.
இந்த படத்தில் பாலச்சந்தர் அவர்களின் திரைக்கதை ரொம்பவும் அருமையானது. எல்லா காலகட்டத்திலும் பார்க்கக்கூடிய படம் இது. ரசிக்கக்கூடிய இசை இப்படத்தில் உள்ளது. 300 வருடங்கள் கடந்தாலும், சினிமா என்று ஒன்று இருக்கும்வரை பாலச்சந்தர் அவர்களுடைய சாதனையை யாராலும் தொடமுடியாது என்பது மறுக்கமுடியாது உண்மை.
இவ்வாறு அவர் பேசினார்.
Kamal Haasan at Ninaithale Inikkum Trailer Launch
http://www.youtube.com/watch?v=CP0v_-TZ-MA
It may be good to put KB's speech as well
http://www.youtube.com/watch?v=y3VCfFJoiJ8
Kamal's Ninaithale Inikkum Trailer Release - FULL VIDEO
http://www.youtube.com/watch?v=bajr7pPvX7A
Balram Naidu Kamal..
http://i1277.photobucket.com/albums/...psd5b1ecd3.jpg
(Legend Dr.Kamal Haasan FB)
‘‘நானும், கே.பாலசந்தரும் இணைந்து நடிக்க வேண்டும்’’ பட விழாவில், கமல்ஹாசன் பேச்சு
‘‘நானும், கே.பாலசந்தரும் இணைந்து நடிக்க வேண்டும். பாலசந்தரின் அனுமதிக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்’’ என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
‘நினைத்தாலே இனிக்கும்’
34 வருடங்களுக்கு முன் ரஜினிகாந்த்–கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணைந்து நடித்து, கே.பாலசந்தர் டைரக்டு செய்த படம், ‘நினைத்தாலே இனிக்கும்.’ இந்த படம் நவீன தொழில்நுட்பங்களுடன் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திரைக்கு வர இருக்கிறது. இதன் ‘டிரைலர்’ வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது.விழாவில் கமல்ஹாசன் கலந்துகொண்டு ‘டிரைலரை’ வெளியிட, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைவர் கேயார் பெற்றுக்கொண்டார்.
விழாவில், கமல்ஹாசன் பேசியதாவது:–
தனித்தனியாக...
‘‘சகோதரர் ரஜினிகாந்த் சார்பில் நான் இங்கு வந்து இருக்கிறேன். அவர் இந்த விழாவுக்கு வர இயலவில்லை. நான் வரவில்லை என்றால் என் சார்பில் அவர் வருவார். எங்கள் இருவருக்கும் இடையே அந்த அளவுக்கு நெருங்கிய நட்பு இருந்து வருகிறது.
34 வருடங்களுக்கு முன்பு இந்த படத்தில் நடித்தபோதுதான் நாங்கள் இருவரும் இனிமேல் இணைந்து நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தோம். இனிமேல் நாம் இருவரும் ஒரே சம்பளத்தை பங்கு போட்டுக் கொள்ள வேண்டாம். தனித்தனியாக படங்களில் நடிக்கலாம் என்று நான் சொன்னேன். அதை ரஜினியும் ஏற்றுக்கொண்டார்.
இளமை ரகசியம்
கே.பாலசந்தரை பார்த்துதான் எனக்கு டைரக்ஷன் ஆசை வந்தது. இந்தியாவிலேயே சிறந்த டைரக்டர் என்று என்னை இங்கே குறிப்பிட்டார்கள். அதற்கு காரணம், கே.பாலசந்தரிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட பால பாடம்தான்.என் இளமை ரகசியம் பற்றி கேட்டார்கள். அதை சொல்ல வேண்டாம் என்று ரசிகர்கள் பக்கம் இருந்து குரல் வந்தது. இந்த இளைஞர்களுடன் நான் பழகும் வாய்ப்பு ஏற்பட்டதுதான் என் இளமைக்கு காரணம்.
ஆரம்ப காலத்தில், நான் நடிகன் ஆவேன் என்று நினைக்கவில்லை. டைரக்டர் ஆகவேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தில் நடித்தபோது ஒருநாள் கே.பாலசந்தர் என்னை அழைத்தார். இனிமேல் என்ன செய்யப்போறே? என்று கேட்டார். டைரக்டர் ஆகப்போகிறேன் என்றேன். அந்த பாதையில் போனால், நீ பஸ்சில்தான் வரவேண்டியிருக்கும். உன்னிடம் நடிப்பு திறமை இருக்கிறது என்று வழிகாட்டியவர், கே.பாலசந்தர்.
வேகத்தடை
‘நினைத்தாலே இனிக்கும்’ படம் வெற்றி பெற்றதால் அவர் ஜெயித்து விட்டதாக இங்கே கூறினார். என்றைக்குமே நீங்க (கே.பாலசந்தர்)தான் ஜெயிப்பீங்க. நீங்க ஜெயித்தால், நான் ஜெயித்த மாதிரி.எனக்கு வேகத்தடை போட வேண்டும் என்று ஒருமுறை அவர் சொன்னார். அந்த வேகத்தை நான் கற்றுக்கொண்டதே அவரிடம் இருந்துதான்.
இணைந்து நடிக்க வேண்டும்
அவர் டைரக்ஷனில் 36 படங்களில் நான் நடித்து இருக்கிறேன். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். கே.பாலசந்தர் ஒரு சிறந்த நடிகர். நன்றாக நடித்துக் காட்டுவார். நல்லவேளை, அவர் நடிக்க வரவில்லை. அவருடைய அந்த திறமையை பயன்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கிறேன். அவரும், நானும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும். இதற்காக அவருடைய அனுமதிக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.’’இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
கே.பாலசந்தர்
விழாவில் டைரக்டர் கே.பாலசந்தர், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைவர் கேயார், செயலாளர் டி.சிவா, பொருளாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் அமீர், டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார், பேராசிரியர் ஞானசம்பந்தம், பட அதிபர்கள் கே.முரளிதரன், புஷ்பா கந்தசாமி, கே.ராஜன், ஏ.எல்.அழகப்பன், பிரமிட் நடராஜன், பிலிம்சேம்பர் துணைத்தலைவர் தேவராஜன், பொருளாளர் கே.எஸ்.சீனிவாசன், நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோரும் பேசினார்கள்.பட அதிபர் சித்ரா லட்சுமணன் வரவேற்று பேசினார். ராஜ் டி.வி. ராஜேந்திரன் நன்றி கூறினார்.
(Dailythanthi)
The trailer of K Balachander’s super hit classic, Ninaithale Inikkum, starring the biggest superstars of Tamil Cinema, Kamal Haasan and Rajinikanth was released recently in a grand event.
The event boasted the presence of Kamal Haasan, K Balachander, MS Vishwanathan, S Ve Shekar, Ameer, KS Ravikumar and many others.
Fans, who were expecting to see Kamal Haasan and Rajinikanth on the same dais, were partly disappointed by the absence of the latter. But the disappointment vanished when the highly eloquent Kamal Haasan began his speech saying, “I’m here to represent my brother, Rajinikanth. And hadn’t I made it to this event, he would have for sure represented me. That is the bond we share.”
The Vishwaroopam star added, “We began our journey as brothers and until today, we share the same relationship.”
“It was during the shoot of the song Engeyum Eppodhum, from this movie, we agreed to start doing films individually, as we had been getting half the salary back then. Ours is the story of two brothers who understood the necessities of each other and took the paths that suited each other”, narrated Kamal Haasan about the nostalgic journey that he shared with Rajinikanth.
http://behindwoods.com/tamil-movies-...ajnikanth.html
Kamal Haasan on 100 Years of Indian Cinema Celebration
http://www.youtube.com/watch?v=2mhNm6G9ab0&feature=youtu.be
A lucky fan got this poster signed by Kamal Haasan
http://i1277.photobucket.com/albums/...ps52890eb4.jpg
(Diehard Kamalians Group FB)
கடவுளே இல்லை என்று சொல்லும் என்னை கடவுள் என்பதா? ரசிகர்களை ஆப் பண்ணிய கமல்!!
Kamal adviced his fans
கடவுள் நமபிக்கை, நல்ல நேரம், கெட்ட நேரம் போன்றவை நிறைந்தது சினிமா உலகம். படத்திற்கு பூஜை போடுவதில் இருந்து, படப்பிடிப்பு தொடங்கி கடைசியில் பூசணிக்காய் உடைக்கிறது வரைக்கும் இதையெல்லாம் சரியாக கடைபிடிப்பார்கள். ஆனால், அப்படிப்பட்ட சினிமாவில் இது எதையும் பார்க்காமல் தனது திறமை, முயற்சி, உழைப்பு இவற்றையே மூலதனமாகக்கொண்டு இன்று வரை வெற்றி மேல் வெற்றி பெற்று வருகிறார் கமல். குறிப்பாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர்.
ஆனால், அப்படிப்பட்ட கமல், ரீ ரிலிசாகும் நினைத்தாலே இனிக்கும் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தபோது., அவரது ரசிகர்களும் பெருந்திரளாக கூடியிருந்தனர். கமலின் பெயரை மேடையில் பேசுவோர் உச்சரிக்கும்போதெல்லாம் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த நேரத்தில் சிலர், ஆழ்வார்பேட்டை ஆண்டவா என்றும் அவ்வப்போது குரல் கொடுத்தனர்.
இதை மேடையில் அமர்ந்திருக்கும்போது கேட்ட கமல் அவ்வப்போது ரசிகர்களை மெளனமாக இருக்குமாறு கைசைகையில் கேட்டுக்கொண்டு வந்தார். ஆனால், அந்த ஆழ்வார்பேட்டை ஆண்டவா மட்டும் ரசிகர் கூட்டத்தில் இருந்து ஒலித்துக்கொண்டேயிருந்தது. அதுவும் கமல் மைக் முன்னே பேச வரும்போது இன்னும் வேகமாக ஒலித்தது.
இதனால், ரசிகர்களைப்பார்த்து, நான் கடவுளே இல்லன்னு சொல்லிக்கிட்டிருக்கேன். நீங்க என்னேயே கடவுளுங்கிறீங்களா என்று ரசிகர்களைப்பார்த்து லேசாக சிரித்தபடி சொல்ல, அதோடு ஆப்பாகி விட்டனர். அதன்பிறகு அந்த ஆழ்வார்பேட்டை ஆண்டவா சத்தம் அரங்கில் ஒலிக்கவேயில்லை.
(http://cinema.dinamalar.com/tamil-ne...d-his-fans.htm)