-
நன்றாக மோகனமாக இருக்கிறதுஎல்லா அலசல்களும்.. சேகர் பற்றிய விவரங்கள் ப்ரபாகரனின் புகைப்படம் (ஹீம்..காலம் செய்யும் கோலமடி) சுமதி தான் தங்கையா என்ற கேள்வி(உண்மையாவா..) இன்ஃபர் மேடிவ்வாக இருக்கிறது..
மஞ்சள் முகமே வருக படம் போஸ்டர் கூடப் பார்த்த்தாக நினைவில்லை..எப்படி விட்டேன் :) அதே டைப் பெண்ணைச் சொல்லிக் குற்றமில்லை என்று ஒரு படம் சென் ட்ரலில் பார்த்த நினைவு..சிவகுமார் ஸ்ரீகாந்த் ஒய் விஜயா என..
//(மைனஸ் மொக்கை சுதாகர் சுபாஷினி )// நல்ல கமெண்ட் ஹி ஹி க்ருஷ்ணா சார்..
-
வாசு சார்
மாஸ்டர் பிரபாகர் இப்ப ஏதோ xerox போடோகாபி கடை ஒன்று வைத்து உள்ளதாக எபோதோ படித்த நினவு
பேபி இந்திராவின் தங்கை தான் ராசி (நடிகை )
சத்யா படத்தில் கமல் தங்கை ஆகா வருவர்
அறுவடை நாள் படத்தில் பிரபு ஜோடினு நினவு
-
மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்கும் சில பாடல்கள்..
கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்..லலிதா - சுமி கமல் என நினைவு.. மஞ்சள் கலைந்தால் திலகம் கலைந்தால் வாழ்வை இழந்தாரென்பார் பள்ளியறையில் இரண்டும் கலைந்தால் பாவை வாழ்ந்தாரென்பார்..பள்ளிக் கூடம் தானாக முடியும் பள்ளி முடியாதன்றோ..ம்ம் ம்ம்ம்.. வாணி? நல்லபாட்டு
கல்யாணக்கோவிலில் தெய்வீகக் கலசம் - கமல் ஜெய்சித்ரா(?) அழகுப் பாடடு..ம்ம்
-
அறுவடை நாள் பிரபு பல்லவியோன்னோ..(புதுமுகம் அறிமுகம்)
-
இன்னொன்னு ஸ்வீட்டான பாட்டு லிரிக்ஸ் தேடினேன் கிடைக்கலை.. வாசு சார் அலசலாம்..அம்மானை அழகு மிகும் கண்மானை ஆடி வரும் பெண்மானை தேடி வரும் பெருமானே..
-
பல்லவியும் உண்டு
பல்லவி தான் ஜோடி
இந்த ராசியும் உண்டு
பிரபு இந்த ராசி வயசுக்கு வந்த போது பூக்குள் வைத்து தாலியை கட்டி விட்டதாக பிரபுவின் அப்பா விஸ்வம் செய்யும் setup நினவு உண்டு
-
மீண்ட சொர்க்கம் ..என்.எஸ்.கே மறைவிற்குப் பிறகு டி.ஏ.மதுரம் தயாரித்தபடம் என நினைக்கிறேன்..படம் பார்த்து வெகு நாள் ஆனதால் கதை புகையாய்த் தான் நினைவில்..ஒரு பெண்ணை பரத நாட்டியம் ஆட வைத்து உச்சத்திற்குக் கொண்டு போகும் ஹீரோ எனப் போகும் கதை..பிற்காலத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்த தாள் கூட இதே கதை அமைப்பு என நினைக்கிறேன்..
ஆனால் பாடல்கள்.. மிக அழகு..அருமை
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நான் இல்லையே ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆஆ
மாலையிலும் அதிகாலையிலும் ஆஆஆஆஆஆஆஆஆஆ
மலர் மேலும் சிலை மேனியிலும் ஆடிடும் அழகே
ஆடிடும் அழகே அற்புத உலகில்
நீ இல்லையேல் நான் இல்லையே
கோவில் கண்டேன் அங்கு தெய்வமில்லை
ஓடி வந்தேன் இங்கே நீ இருந்தாய்
பாவமும் ராகமும் தாளமும் நீயே
சலபதி ராவ் இசை கண்ணதாசன் ஏம்ராஜா சுசீலாம்மா.. மிக இனிமையான பாட்டு..
ஆடும் அருள் ஜோதி (பத்மினியின் நாட்டியப் பாட்டு)
ஏ.எம் ராஜா பிசுசீலா இன்னொரு டூயட்..மறக்க முடியுமா..ஜெமினி.. கண்களால் கனவு நெய்யும் பப்பி..
துயிலாத பெண்ணொன்று கண்டேன் எங்கே? இங்கே - எந்நாளும்
துயிலாத பெண்ணொன்று கண்டேன்
அழகான பழம் போலும் கன்னம் - அதில்
தர வேண்டும் அடையாளச் சின்னம்
பொன் போன்ற உடல் மீது மோதும் - இந்த
கண் தந்த அடையாளம் போதும் - இந்த
கண் தந்த அடையாளம் போதும்
மாலைக்கு நோயாகிப் போனேன் - காலை
மலருக்குப் பகையாக ஆனேன்
உறவோடு விளையாட எண்ணும் - கண்கள்
உறங்காது உறங்காது கண்ணே
மணமேடை தனில் மாலை சூடும் - உங்கள்
மன மேடை தனிலாட வேண்டும் - நெஞ்சம்
பிறர் காண முடியாத மேடை - அதில்
நடமாடிப் பயனேதும் இல்லை - அதில்
நடமாடிப் பயனேதும் இல்லை
ம்ம் கண்ண தாசன்..
**
ஸோலோ சுசிலா தானே
மன நாட்டிய மேடையில் ஆடினேன்
கலை காட்டிய பாதையில் வாடுகிறேன்..
இந்த வாழ்க்கையின் முடிவெங்கே என்னும் சோகப் பாடல்..
*
படம் தோல்விப் படம் என்று கேள்வி..பார்த்தது அந்தக் கால மதுரை சாந்தி தியேட்டரில்..அதன் பின்னர் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை..நகைச்சுவையும் எதுவும் இல்லை என நினைவு..
*
-
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் உறவினிலாட..என்ன படமாக்கும் ..பாட்டு நன்னாயிட்டு இருக்கும் டிக் டிக் டிக்னு சத்தம்.. சிலோன் ரேடியாவில் கேட்ட நினைவு..
-
some of the songs that have made an emotional impact on us
ஓர் தாலாட்டு பாடலில் ஒரு திரைபடத்தின் கதையை கூறமுடியுமா
இந்த பாடல் ஒரு இரவின் மடியில்
அவர்கள் படத்தில் கவர்ந்த இரண்டாவது பாடல்
கதாநாயகி அனு தன குழந்தையை தூங்க வைக்கவும் அதே நேரத்தில் தன கதையை தன முன்னாள் காதலனிடம் தெரிவிக்கவும் டைரக்டர் KB இந்த பாடலை மிக அழகாக கையாண்டு இருப்பார்
இது ஒரு இசை தாலாட்டு
மன்னரின் அருமையான புல்லாங்குழல் இசை தான் பாட்டில் ஊடே மிக அதிகமாக வரும் .சில இடங்களில் வயலின் இசை சற்று மெல்லிசாக
வரும்
இப்படி ஓர் தாலாட்டு பாடவா
அதில் அப்படியே ஏன் கதையை கூறவா
அதில் அப்படியே ஏன் கதையை கூறவா
கைபிடித்த நாயகனும் காவியத்து நாயகனும்
எப்படியோ வேறுபட்டார் என மடியில் நீ விழுந்தாய்
தனக்கும் தன முன்னாள் கணவன் ராமநாதனுக்கும் இடையில் இருந்த இருக்கும் உறவின் நிலையை கதாநாயகி வாயிலாக வெளிபடுத்துகிறார் கவிஞர்
நீல வானம் கோவம் கொண்டு நிலவு தெரிந்தது
கண்ணா நேரம் பார்த்து மறுபடியும் ஏன் வளர்ந்தது
இடைனிலே இன்னிலவு எங்கிருந்தது
அது இருண்டிருந்த வீட்டினிலே தங்கிருந்தது
தன காதல் தோற்றதை
அன்றொரு நாள் மீராவும் கண்ணனை நினைத்தாள்
ஏனோ அவளுடைய தலைஎழுத்து மன்னனை மணந்தாள்
அது வரை தான் அவள் கதையை என்னிடம் சொன்னாள்
நான் அதில் இருக்கும் என் கதையை உன்னிடம் சொன்னேன்
தான் ஏன் முன்னாள் காதலனின் அன்பு பிடியில் மீண்டும் சிக்கினேன்
என்பதை பாடல் வரிகளாலே கவிஞர்
கண்ணனவன் கையினிலே குழல் இருந்தது
அந்த கானம் தானே மீராவை கவர்ந்து வந்தது
இன்று வரை அந்த குழல் பாடுகின்றது
அந்த இன்னிசையில் என் குழந்தை தூங்குகின்றது
பின்னாட்களில் இது போன்ற ஒரு பாடல்
பூமணி படத்தில் இளையராஜா இசையில் அவரே பாடும் ஒரு பாடல்
கிட்டத்தட்ட இந்த பாடலை நினைவுபடுத்தும்
(இசையில் அல்ல )
"என் பாட்டு பாட்டு நெஞ்சில் நிற்கும் பூங்காத்து
தாலாட்டு தாலாட்டு தாவிவரும் தேன் ஊத்து
உன் பொழுது போகணும் எனக்கோ பொழப்பை பார்க்கணும்
உன்னை பழுது பாக்கணும்
அடி மானே என் நெஞ்சை துவைக்கிற ராகம் இது "
-
chinna kannan sir
adhu "uravadum nenjam "
sivakumar chandrakala
devaraj mohan
ilaya raja
rajavin 3vadhu padam