https://www.youtube.com/watch?v=SDdNnRM1O94
thanks sailesh sir
Printable View
https://www.youtube.com/watch?v=SDdNnRM1O94
thanks sailesh sir
தரை டிக்கெட்டில் அமர்ந்து
“சின்ன வயதில், எம்.ஜி.ஆர். படம் பார்த்து ரசித்தவன், நான்”
மயில்சாமி அண்ணாதுரை பேச்சு
சென்னை, ஜூலை.22-
‘‘சின்ன வயதில், தரை டிக்கெட்டில் அமர்ந்து எம்.ஜி.ஆர். படம் பார்த்து ரசித்தவன், நான்’’ என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
பாடல் வெளியீட்டு விழா
காமராசு, அய்யாவழி ஆகிய படங்களை டைரக்டு செய்த நாஞ்சில் பி.சி.அன்பழகன் அடுத்து, ‘நதிகள் நனைவதில்லை’ என்ற புதிய படத்தை தயாரித்து டைரக்டு செய்திருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடந்தது. விழாவில், விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு பாடல்களை வெளியிட, வேளாண் விஞ்ஞானி பவித்ரா பெற்றுக்கொண்டார். விழாவில், மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:-
‘‘நான், சினிமா படவிழாக் களில் கலந்து கொண்டதில்லை. பெரிய பெரிய இடங் களில் இருந்தெல்லாம் எனக்கு இதற்கு முன்பு அழைப்பு வந்தது. அந்த அழைப்புகளை எல்லாம் நிராகரித்து விட்டேன். நாஞ்சில் பி.சி.அன்பழகன், ‘செல்போனில்’ என்னை அழைத்த விதம் பிடித்து இருந்தது. முதல் முறையாக படவிழாவுக்கு வந்து இருக்கிறேன்.
எம்.ஜி.ஆர்-ரஜினி படங்கள்
அறிவியலின் இன்னொரு அம்சம்தான், சினிமா. இந்த விழா மேடையில் அமர்ந்திருந்தபோது, சின்ன வயதில் தரை டிக்கெட்டில் உட்கார்ந்து எம்.ஜி.ஆர். படம் பார்த்த நினைவு வந்தது. ரஜினிகாந்த் நடித்த ‘முரட்டுக்காளை’ படம் பார்த்த நினைவு வந்தது. ‘நதிகள் நனைவதில்லை’ பாடல்களை கேட்டபோது, இசை மழையில் நனைவது போல் இருந்தது.
‘மங்கள்யான்’ சாதனையில் கூட்டு முயற்சி இருந்தது. அதுபோல் சினிமாவும் பலருடைய கூட்டு முயற்சிதான். விஞ்ஞான வளர்ச்சி, சினிமாவிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
ராக்கெட் வேகம்
விண்வெளிக்கு முதல் ராக்கெட் 400 கிலோ மீட்டர் வேகத்தில் பயணப்பட்டது. பின்னர் 800 கிலோ மீட்டர் ஆனது. அதன்பிறகு 1,200 கிலோ மீட்டர், 35 ஆயிரம் கிலோ மீட்டர், 2 லட்சம் கிலோ மீட்டர் என படிப்படியாக வேகம் அதிகரித்து, இப்போது 4 லட்சம் கிலோ மீட்டர் வேகத்துக்கு போக முடிகிறது.
மருத்துவம், கலை, அறிவியல் என எல்லா துறைகளுமே மனித இனத்துக்கு வெவ்வேறு வகையில் பயன் அளிக்கிறது. செய்யும் தொழிலை தெய்வமாக கருத வேண்டும். இந்த படத்தை அனைவரும் தியேட்டர்களில் போய் பார்த்து வெற்றி பெற செய்ய வேண்டும்.’’
இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.
எஸ்.பி.முத்துராமன்
விழாவில் வேளாண் விஞ்ஞானி பவித்ரா, டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் டி.சிவா, டிஜிட்டல் பட அதிபர்கள் சங்க தலைவர் ‘கலைப்புலி’ ஜி.சேகரன், நடிகர் பாலாசிங், ஸ்டண்ட் மாஸ்டர் தவசி, ஒளிப்பதிவாளர் கார்த்திக்ராஜா, பேராசிரியர் சிவகுமார் ஆகியோரும் பேசினார்கள்.
டைரக்டர்-தயாரிப்பாளர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் நன்றி கூறினார்.
Courtesy: Today Daily Thanthi
மெல்லிசை மன்னர்களின் இசையில் பல புதுமையான இசையும் , காட்சிகளும் இடம் பெற்ற மக்கள் திலகத்தின் படங்கள் .
ரகசிய போலீஸ் 15
அன்பே வா
பறக்கும் பாவை
படகோட்டி
எங்க வீட்டு பிள்ளை
ஆயிரத்தில் ஒருவன்
குடியிருந்த கோயில்
ஒளிவிளக்கு
நம்நாடு
ரிக்ஷாக்காரன்
ராமன் தேடிய சீதை
சிரித்துவாழ வேண்டும்
இதயக்கனி
மீனவநண்பன்
அருமையான இசை , பாடல்களின் பின்னணி என்று பிரமாதமாக இருந்தது .