:ty: சாரதாQuote:
Originally Posted by saradhaa_sn
தொல்ஸ்-ஸின் பாணியே அதுதானே - நீங்கள் முன்பு சொன்ன ( எழுதிய) மாதிரி
Printable View
:ty: சாரதாQuote:
Originally Posted by saradhaa_sn
தொல்ஸ்-ஸின் பாணியே அதுதானே - நீங்கள் முன்பு சொன்ன ( எழுதிய) மாதிரி
emm pin thOdara... neengaL thOdarungaL :D
:lol:Quote:
Originally Posted by Arthi
விடிந்தால் சஷ்டியப்த பூர்த்தி விழா.......
நல்ல பெரிய மன்டபம்தான் பிடித்திருக்கிறார்கள். இரவில் மண்டபத்தின் அலங்கார வேலைகளைக் கவனித்துக்கொன்டிருக்கும் அபி, மற்றவர்களுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துக்கொண்டிருக்கிறாள். கூடவே ஆர்த்தியும் கிருஷ்ணனும். (சரி, ஆர்த்தி இதில் மும்முரமாக ஈடுபட்டிருப்பது தெரிந்தால் அவருடைய "ஆதியண்ணா" கோபித்துக்கொள்ள மாட்டாரா?). ஒரு காரில் வந்திறங்கும் தேவராஜின் ஆட்கள் ஈஸ்வரனைத்தேடும் பணியில் இறங்குகின்றனர். அவர்களில் ஒருவன் சமையல்காரன் போலவும், இன்னொருவன் எலெக்ர்டீஷியன் போலவும் மண்டபத்துக்குள் நுழைகிறார்கள். அவர்களுடைய நடவடிக்கைகலைப் பார்த்தால் அவர்கள் போலி என்பதை சின்னப்ப்பையன் கூட கண்டுபிடித்து விடுவான். அந்தளவுக்கு அமெச்சூர்தனம். இருவரும் அபியின் சந்தேகப்பார்வைக்கும் ஆளாகின்றனர்.
சற்று நேரத்தில் போலீஸ் வர, இவர்கள் ஒளிந்துகொள்கின்றனர். விழாவில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடப்பதுபோல தெரிந்தால் தனக்கு தகவல் தெரிவிக்கும்படி இன்ஸ்பெக்டர் சொல்லிப்போகிறார். போலீஸ் போனதும் மண்டபத்தின் பின் வழியாக உள்ளே நுழௌந்து தேடும் இவர்கள் கண்ணில் ஈஸ்வரன் மட்டுமல்ல, ஒரு ஈ, காக்காய் கூட அகப்படவில்லை. மறுநாள் காலை விழா நடக்கும் இடம்போலவே தெரியவில்லை.
வீட்டில் அபி, ஆனந்தி, சுமதி இவர்கள் மத்தியில் கற்பகம் தன்னுடைய பழைய கதைகளைச்சொல்லி சந்தோஷப்பட, மூவரும் ஆர்வமும் சிரிப்புமாக கேட்டுக்கொண்டிருக்கின்றனர்....
'ஏம்மா, உன் கல்யணத்துக்கு முன் அப்பாவைப் பார்த்தியா?'
'அதெப்படிடீ பார்க்க முடியும்?. கல்யாணம்னு சொன்னாங்க நானும் சம்மதிச்சுட்டேன். கல்யாணத்தன்னைக்குதான் பார்த்தேன்'.
'ஒருவேளை முன்னாடியே பார்த்திருந்தா அப்பாவை வேணாம்னு சொல்லியிருப்பே இல்லையா?'
'ஏன்டி அவருக்கு என்ன குறை?, நல்ல அழகு, நல்ல கலர், நல்ல உயரம்'
'அய்யோ அம்மாவுக்கு வெட்கத்தைப்பாரு... அம்மா நீ வெட்கப்பட்டு இன்னைக்குத்தான் பார்க்கிறேன். அப்பாவுடைய திருட்டு முழியை விட்டுட்டியே. அது ஆர்த்திக்குத்தான் அப்படியே வந்திருக்கு'.
'அய்யோ இல்லை இல்லை'.
'ஏண்டி அப்படி சொல்றே.. அவருடைய முழி, நிறம், உயரம் எல்லாம் உனக்குத்தாண்டி வந்திருக்கு'
மகள்களோடு கற்பகம் ரொம்ப சந்தோஷமாக சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கிறாள். (நேற்று தமிழ் நாட்டில் பலத்த மழை. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிப்பு, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை)
இடையே உள்ளேயிருந்து வரும் ராஜேந்திரனும் இவர்களுடைய சந்தோஷத்தில் கலந்துகொள்ள, அப்போது வீட்டுக்குள் நுழையும் திருவேங்கடத்தைப் பார்த்து அபி... 'வாங்க'
'அதானே பார்த்தேன்... அபி அன்னைக்கு என் வீட்டுக்கு வந்த உன்னை நான் திட்டி அனுப்பினாலும் நீ இப்போ என்னை வரவேற்கிறே பாரு... ஒரு எம்.எல்.ஏ.யின் தயவு எப்பவும் வேணும்னு நினைக்கிறே இல்லையா?. அது தப்பில்லை அபி'
'நீங்க பதவியில் இல்லாவிட்டலும் நான் வரவேற்கத்தான் செய்வேன் சித்தப்பா'.
'சரி அதை விடு அபி, நான் அண்ணன் கிட்டே பேசணும். கொஞ்சம் கூப்பிடுறியா...?'
அபியின் சந்தேக முகம் குளோஸப்பில்....
wow ,typical Karpagam's dialog... cld imagine how she wld have delivered those diaglogs :PQuote:
Originally Posted by saradhaa_sn
was it because of Karpagam's change in nature??? :roll:Quote:
Originally Posted by saradhaa_sn
:ty: சாரதா
:rotfl:Quote:
Originally Posted by Arthi
enna... post-ku post sirippu adhigamaagikitE pOgudhu :P :)Quote:
Originally Posted by aanaa
a serial goes for more than 4 years
then what we do ...
'இப்போ எதுக்காக அப்பாகிட்டே பேசணும்'
'என்ன அபி, விடிஞ்சா அவருக்கு சஷ்டியப்த பூர்த்தி விழா. அதுக்காக அவரைப்பார்த்து பேசணும்'
'அவர் இப்போ வீட்டில் இல்லை'
'ஓ... அப்படீன்னா மண்டபத்தில் இருக்காரா?. அங்கே பார்த்து பேசிக்கிறேன்'.
'அவர் அங்கேயும் இல்லை. இப்போ எதுக்காக அவரைத்தேடுறீங்க?. என் கிட்டே விஷயத்தைச்சொல்லுங்க'
'சரி சொல்றேன்..., அபி, உங்க அப்பா எப்பவோ அண்ணியை விட்டுட்டு போயிட்டார். அப்புறம் அவர் வாழ்ந்ததெல்லாம் அந்த காஞ்சனாவுடன்தான். அப்போ அவங்கதானே கொண்டாடணும்?. நீங்க எதுக்கு கொண்டாடறீங்க?'
'சித்தப்பா... எல்லாம் எங்களுக்கு தெரியும். நீங்க இப்போ போறீங்களா?'
'அப்பா உங்க மரியாதை கெட்டுப்போகும் முன் போயிடுங்க'
'இதோ பார் சுமதி, மரியாதையெல்லாம் எதிர்பார்த்தா அரசியலில் இருக்க முடியுமா?'
காஞ்சனா வீடு....
'எல்லாரும் இப்படி நின்னுக்கிட்டு இருந்தா எப்படி?. விடிஞ்சதும் அங்கே விசேஷம் நடந்துவிடும். அதுமட்டும் நடந்துட்டா நான் தூக்கில தொங்கிடுவேன்'
'அம்மா, அப்படி சொல்லாதீங்கம்மா'.
'பின்னே என்ன செய்யச்சொல்றே?. அந்த அவமானத்தை தாங்கிகிட்டு என்னால வாழ முடியாது'
'பொறுங்கம்மா, அப்பாவைக்கண்டு பிடிச்சதும் தேவராஜன் போன் பண்ணுவார். அதுக்காகத்தான் வெய்ட் பண்ணுறேன்'.
அப்போ திருவேங்க்டம் வருகிறார்... 'என்ன எல்லாரும் ரொம்ப சோகமா இருக்கீங்க?. அஙே என்னடான்னா அபி காலில் சக்கரம் கட்டிக்கிட்டு பறந்திகிட்டு இருக்கா'
'இப்போ எதுக்காக இங்கே வந்தீங்க?'
'கோபப்படாதே ஆதி, நியாயமா இது உங்க அம்மாவுடன்தான் நடக்கணும்னு எனக்கும் தெரியும். அதனால் என்னா, நாமும் ஒரு விழா இதைவிட கிராண்டா நடத்திடலாம்'
'இப்போ நீங்க வெளியே போறீங்களா?'
'அட அபியும் இதையேதான் சொன்னாள். அடடே மனோவும் இங்கேதான் இருக்கியா?. ஆமாம் நமக்கு எது ஆதாயமோ அங்கேதான் இருக்கணும்'
'சித்த்ப்பா, நான் எந்த ஆதாயத்துக்காகவும் இங்கே வரலை'
'கரெக்ட், இதே மாதிரி அப்பப்ப அறிக்கைகளும் விடணும்'
'முதல்ல நீங்க போங்க இங்கிருந்து'
அபி வீடு.... மீண்டும் வழக்கம்போல கற்பகம் சோகமாக.... இப்போ அபி இல்லை... ஆர்த்தியும் ஆனந்தியும் மட்டும்தான்...
'ஏம்மா சோகமா இருக்கே?'
'இல்லை ஆனந்தி, தப்பு பண்ணினது உங்க அப்பா. அதுக்கு அந்த காஞ்சனா என்ன பண்ணுவாள்?. அவள் நிலையை நீங்க நினைச்சுப் பார்த்தீங்களா?.'
'அம்மா, அந்த காஞ்சனாவையும் ஆதியையும் பத்தி உனக்கு தெரியாதா?. இதே மாதிரி ஒரு விசேஷம் அங்கே நடந்தால் அவங்க உன்னை நினைச்சுப்பார்த்திருப்பாங்களா?. கஷ்ட்டப்பட்டு இவ்வளவு ஏற்பாடும் செஞ்ச அக்கா காதில் இது விழுந்தா எவ்வளவு வருத்தப்படும் தெரியுமா? காலைல விசேஷம், நீ மனதைப்போட்டு குழப்பிக்காதே. அக்காவுக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படும்'.
ஆதியின் வீட்டு காம்பவுண்ட்... ஆதியும் கிரியும் காத்திருக்க, தேவராஜனும் ஆட்களும் காரில் வந்திறங்க...
'என்ன ஆச்சு தேவராஜன், எங்க அப்பாவை கண்டுபிடிச்சிட்டீங்களா?'
'இல்லை ஆதி, உங்க அப்பா மண்டபத்தில் இல்லை. நம்ம ஆளுங்க நல்லா தேடிட்டாங்க. எங்கோ வெளியில தங்கி, காலைலதான் வருவார் போலிருக்கு. கவலைப்படாதீங்க, அவர் மண்டப வாசலுக்கு வந்ததும் நம்ம ஆளுங்க ஒரே அமுக்கா அமுக்கி, இங்கே கொண்டுவந்திடுவாங்க'.
'சும்மா சொன்னா போதாது தேவராஜ், சொன்ன மாதிரி செய்யணும், சரி எல்லோரையும் போய் ரெடியா இருக்கச்சொல்லுங்க'.
இவங்க சொன்ன மாதிரி எல்லாம் நடக்கணுமே என்ற சிந்தனையில் ஆதி மூழ்க.....