http://i1065.photobucket.com/albums/...psy8canovy.jpg
Printable View
இரண்டு உருவங்களுக்கும் எத்தனை வித்தியாசம் http://i1065.photobucket.com/albums/...psms6d5ins.jpg
சிவாஜி ரசிகன்
http://i1065.photobucket.com/albums/...pszzaeyljf.jpg
http://i1028.photobucket.com/albums/...s5qvvr3ae.jpeg
திருச்சியைச் சேர்ந்த அன்புச்
சகோதரர்.திரு. பொன்.ரவிச்சந்திரன் அவர்கள் எழுதி,
எனக்கு அனுப்பி வைத்த கவிதை இது.
"நான் சுதந்திர இந்தியாவின் சொத்து"
-ஆரம்ப உண்மையே அமர்க்களப்படுத்துகிறது.
"நான் ஆனைகள் வழங்கி ஆலயம் தொழுதவன்."
-நிஜமான நிஜம் நெகிழ வைக்கிறது.
"அந்நியன் எனக்கு அநீதி இழைத்தது கயத்தாறில்"
-என்று கட்டபொம்மன் கவலை பேச..
"என் மக்களே எனக்கு அநீதி
இழைத்தது திருவையாறில்."
-என்று நம்மவர் சொல்வதாய்
வரும் இடத்தில் கண்களின்
ஓரத்தில் கண்ணீர் துளிர்க்கிறது.
"கட்டபொம்மனாக மட்டுமே
நான் வாழ்ந்தேன்"என கட்டபொம்மன் மார்தட்ட..
"கட்டபொம்மனாகவும் நான்
வாழ்ந்தேன்"என நம்மவர் பூர்த்தி செய்யும் போது நாம்
அனுபவிக்கும் ஆனந்தக் காற்று
அந்தக் கண்ணீரை உலர வைக்கிறது.
நல்ல கற்பனை.
அது,மிகையாகப் போய்விடாமல் அழகான கவி வடிவத்திற்குள் அடக்கிய் திறமை.
நன்று.
அவருக்கெனது வாழ்த்துகளும், நன்றிகளும்.
--------
கொஞ்ச நேரத்துக்கு முன்
என்னோடு அன்போடு அலைபேசியில் உரையாடிய்
திரு.பொன் .ரவிச்சந்திரன் அவர்கள், திருச்சியில் நேற்று நடிகர் திலகத்தின் பிறந்த தின விழா சிறப்புடன் நிகழ்ந்ததை
மகிழ்வுடன் தெரிவித்தார்.
நடிகர் திலகத்திற்கென நேரம் ஒதுக்கி, அவர் புகழ் பரப்ப நாமெல்லாம் கடமைப்பட்டவர்கள் என்று
பெருமிதப்பட்டு பேசினார்.
"இரண்டு கைகள் நான்கானால்"
என்கிற தலைவரின் உத்வேகப்
பாடல் உள்ளத்தில் ஓடுகிறது.
எங்களால் இயன்ற வகையில்
தலைவனின் புகழ் பரப்பும் பணியினைச் சிறப்புறச்
செய்வோமெனும் நம்பிக்கை
பிறக்கிறது.
----------
"அமுத சுரபி"கட்டுரை குறித்த
எனது பதிவிற்குப் பேருதவி
புரியும் விதத்தில்..
நடிகர் திலகத்திற்காக அமரர்.
மலேஷியா வாசுதேவன் பாடிய
மேலும் மூன்று பாடல்களை
சிபாரிசு செய்திருக்கிறார்.
1. ஒரு கூட்டுக் கிளியாக..
-படிக்காதவன்.
2. மாடப்புறாவோ-இமைகள்.
3. யாவும் நீயப்பா-வாழ்க்கை.
"யாவும் நீயப்பா"-பாடலை
எழுத வேண்டும் என்கிற ஆவலை அதிகமாக்கி விட்டார்.
நன்றிகள் அவருக்கு.
Sent from my GT-S6312 using Tapatalk
பேசும்படம் இதழில் வந்த கட்டுரை http://i1065.photobucket.com/albums/...psuoop4lnc.jpg
Contd...
தம்பி செந்தில்வேல்,
என்னவென்று சொல்வது உங்கள் அருமைப் பதிவுகளை? லட்டு மாதிரி எடுத்துக் கொண்டேன். குறிப்பாக 'மூன்று தெய்வங்கள்' பாடலுக்கேற்ற விளம்பரப் பதிவு ஜோர். எல்லாமே அற்புதம். அதுவும் என் மனம் கவர்ந்த 'ராமன் எத்தனை ராமனடி'காவிய விளம்பரங்கள் ரகளை. நன்றிகள் ஆயிரம் தங்களுக்கு. 'நடப்பது சுகமென நடத்து' பாடல் பாராட்டிற்கும் சேர்த்து.
தம்பி செந்தில்வேல்,
பேசும் படம் 'எல்லாம் வல்லவர்' கட்டுரை அற்புதம். 'நடிகர் திலகம்' பட்டம் தந்தற்கு பெருமைப்பட்ட 'பேசும்படம்' என்றும் நம் நெஞ்சில் நிரந்தரக் குடியிருக்கும். அருமையான பதிவிற்கு நன்றி.
1500 விலை மதிக்க முடியாத பொக்கிஷப் பதிவுகளை அளித்த செந்தில்வேல் சிவராஜ் அவர்களுக்கு அனைத்து நடிகர் திலகத்தின் ரசிகர்களின் சார்பாக மனமுவந்த வாழ்த்துக்களும், நன்றிகளும்.
தங்களுக்கு என் அன்புப் பரிசு
http://i1087.photobucket.com/albums/...31355/3-68.jpg
Now Running KTV Ple. Watch My NT Fr.
http://i57.tinypic.com/3446r12.jpg
http://i62.tinypic.com/98ftog.jpg http://i59.tinypic.com/vpxiqc.jpg http://i59.tinypic.com/261ltt4.jpg
முத்தையன் அம்மு அவர்களே
தங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி!
மேலும்.
தங்களுடைய உழைப்பும் மிகவும் பாராட்டத்தக்கது.
இது போன்று தொடர்ச்சியான படப்பதிவுகளை தொடர்ச்சியாக
பதிவு செய்யும் நபர் நீங்கள் ஒருவரே.அதிலும் நேர்த்தியான பதிவுகள்.ஏற்கெனவே கோபால் சார் சொன்னதுபோல் (நான் என்ன ஸ்டில்லை மனதில் நினைக்கிறேனோ அந்த ஸ்டில் தவறாமல் வந்து விழும் )அதே
எண்ணமும் தான் எனக்கும்.
உங்கள் முயற்சி தொடரட்டும்.
உங்களுக்காக இதோ...
http://i1065.photobucket.com/albums/...psmp43hmj5.jpg
வாசு சார்
உங்களுக்காக
http://i1065.photobucket.com/albums/...psmqnylyxc.jpg
ஒரு திரைப்படத்திற்கு உண்டான வர்ணனையை இந்த ஒரு படம் சொல்கிறதே.எழுதுங்கள் உங்கள் பாணியில்.,
அது தான் சிவாஜி
சவாலே சமாளி சூட்டிங் ஸ்பாட் http://i1065.photobucket.com/albums/...psogzlw9xz.jpg
மன்னவன் வந்தானடி
சூட்டிங் ஸ்பாட் http://i1065.photobucket.com/albums/...pshwwxcu7p.jpg
சத்தியவான் சாவித்திரி நாடக மேடை
http://i1065.photobucket.com/albums/...psbbcmzsuv.jpg
குமாரி பத்மா நாட்டிய அரங்கேற்றத்தின் போது
http://i1065.photobucket.com/albums/...ps9layth7h.jpg
வியட்நாம்வீடு
பட பூஜை
எவ்வளவு சிம்பிள்?
http://i1065.photobucket.com/albums/...psz3nkdpou.jpg
பள்ளிசிறுவர் சிறுமிகளின்நாடக விழா ஒன்றில்
http://i1065.photobucket.com/albums/...ps5xosflzj.jpg
ராகவேந்திரா சார்
இவர்களில் எவரையேனும் தெரியுமா?
http://i1065.photobucket.com/albums/...psmkcea23q.jpg
இருமலர்கள் படமாக்கலின்போது http://i1065.photobucket.com/albums/...psiprpdot3.jpg
நடிகர்திலகத்தின் பின்னால் நிற்கும் சிறுமியைப் பாருங்கள்
http://i1065.photobucket.com/albums/...psmdkysfyj.jpg
http://i1028.photobucket.com/albums/...pspvozikod.jpg
அரங்கம் ஆலயமாக..
அன்றொருநாள் ஒலித்தது இந்த
ஆன்மிகக் குரல்.
கலை தெய்வத்தை தரிசிக்கப்
போன இடத்தில், காது குளிர்வித்தது இந்த தெய்வீக
கானம்.
பாடும் திறமையுடைய என்
நண்பனுடைய பக்திப் பாடல்
தொகுப்பிற்காக நான் எழுதிக்
கொடுத்த ஒரு பாடலினூடே
எழுதியிருந்தேன்.
"கல்லுக்குள்ள சாமிய வச்சது
நம்பிக்கைதானம்மா!"-என்று.
ஆழ்ந்து மனம் ஒன்றி இறை
வணங்கும்போதெல்லாம்,
இந்த நம்பிக்கையை நான்
உணர்ந்தேன்.
..கிறேன்.
...வேன்.
------
"எங்கும் இனிதாக,
எல்லாமும் நலமாக,
பொங்கும் அருட்கடலே..
புண்ணியனே அருள்புரிவாய்.
கண்ணுள் ஒளியானாய்.
கனிவின் வடிவானாய்.
ஹரிசிவன் மகனே நீ
கரையேற வரம் தருவாய்."
-அருளே வடிவான அய்யப்பனில் கரைந்துருகி ஒரே ஒரு முறை நானும் சபரிமலைக்கு விரதமிருந்து சென்றதுண்டு.
களைக்கக் களைக்கக் கல்லிலும்,முள்ளிலும் நடந்து
சென்று கடவுள் அய்யப்பனைக்
கண்ட போது அடைந்த பேரின்பத்தை விட, மாலை அணிந்த நாள்தொட்டு தினமும்
கோயிலில் மாலை நேரத்தில்
நடக்கும் பஜனையின் போது
நானடைந்த பரவசம் அதிகம்.
இறைவனை அடைய செல்லும்
வழிகளில் இசையின் வழியே
சிறப்பென்றுணர்ந்த சிலிர்ப்பான
தருணங்கள் அவை.
"வாழ்க்கை" திரைப்படத்தில் வரும் இந்தப் பாடலைக் கேட்கவும், பார்க்கவும் நேர்ந்த
தருணங்களிலும் அது மாதிரியான சிலிர்ப்பை உணர்ந்திருக்கிறேன்.
காவி வேஷ்டியும், கருப்புச் சட்டையும், இடை இறுக்கிய
சிவப்புத் துண்டுமாய்..
நம் நடிகர் திலகம்-
கடவுளை வணங்கும் கடவுள்
போல் ஒரு கம்பீர அமர்வு.
முன்னே துணி விரித்து, முடியாத பிள்ளையைக் கிடத்தியிருக்க..
சேர்த்த கரம் பிரிக்காது சேவித்திருப்போர் கூட்டத்தின்
இசை உருக்கம்...
இதயத்துள் இறை நிறுவும்
இசைஞானி...
பாட்டு வரிகளால் மனம்
நிறைகிற அய்யா.பஞ்சு.அருணாசலம்..
அய்யா நடிகர் திலகத்தின் இசைக் குரலாகவே மாறி நின்ற
அமரர். மலேஷியா வாசுதேவன்
...
எல்லோரும்..
மறக்க முடியாதவர்கள்.
மறக்கக் கூடாதவர்கள்.
---------
"சும்மா ஒரு வாயசைப்புதானே"
என்கிற அசட்டை கிடையாது.
கதைச் சூழலைத் தாண்டிய
சுய திறமை வெளிப்பாடு
கிடையாது..நம்மவரிடம்.
நன்றாகக் கவனித்தால் தெரியும்.
கதைப்படி அத்தனை
மருத்துவர்களும் கைவிட்டு விட்ட தன் பிஞ்சு மகனின்
உயிர் பிழைப்பை கடவுளிடம்
மட்டுமே எதிர்நோக்கியிருக்கிற
ஒரு அபாய சூழல். அம்மாதிரிச்
சூழலில் ஒரு அழுத்தமான சோகம் ஒரு தகப்பனைக் கவ்விக் கொள்வது தவிர்க்கவே
முடியாதது.
பாடலை முழுமையாக கவனித்துப் பாருங்கள்.
கண்களில் நிரந்தரமாய்ப்
படிந்திருக்கும் கவலையும்,
ஆண்டவனை இறைஞ்சிப்
பாடும் அவரது முகத்தில்
சூழலின் இறுக்கமும்..
அழுது வீறிட்டுக் குழந்தை பிழைக்கும் வரைக்கும் மாறவே
மாறாது.
------
நமக்குப் பழகிய கலையின்
தெளிவு விரவிய முகம் பக்கவாட்டில் பிரம்மாண்டமாய்
காட்டப்பட ..நம் நடிகர் திலகம்
வாயசைத்துப் பாடிக் கொண்டிருக்கிறார்.
அவரை வியக்கும் நம் உள்ளமோ..அந்தப் பாடலின்
வரிகளைக் கொண்டே அவரைப் பாடிக் கொண்டிருக்கிறது.
"உயிருக்குள் உயிராக
விளையாடும் ஜோதி.
உலகத்தின் அசைவுக்கு
நீதானே ஆதி."
(நல்ல சமயத்தில் பாடலை நினைவூட்டிய, நட்புமிகு திருச்சி.திரு.பொன்.ரவிச்சந்திரன் அவர்களுக்கு
நன்றி.)
https://youtu.be/Bahd1mbA5SQ
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...psb345iusn.jpg
"கலியுக நந்தி
முத்துராக்கண்ணன்
ஒரு தவிலு."-என்றதும்
மேள முழக்கத்துடன்
காட்டப்படும்
அமரர் பாலையாவின்
குலுங்கும் மார்புகள் தவிர
படத்தில் வேறு
கவர்ச்சி கிடையாது.
அர்த்தமற்ற
மசாலாக்கள் கிடையாது.
அழகழகாய் பெண்களுண்டு.
அணுவளவும்
ஆபாசம் கிடையாது.
இசையுண்டு.
காதுகளுக்கு
ஆபத்து கிடையாது.
காதல் உண்டு.
காமம் கிடையாது.
இதில் வரும்
நாகேஷ் போல
சிரிப்பு மூட்டுகிற
வில்லன்
எந்தப் படத்திலும்
கிடையாது.
நம்பியார் இருக்கிறார்.
கை பிசைந்து,
முகம் உருட்டும்
கெட்டதனம் கிடையாது.
நாட்டியப் பேரொளியின்
நடனப் பாதங்கள்
வேறெவர்க்கும்
கிடையாது.
நடிகர் திலகம்-
நாதஸ்வரம் போல.
அவரின்றி
இந்தப் படமே
கிடையாது.
நம்
இதயத் திரையில்
அடிக்கடி ஓடும்
"தில்லானா
மோகனாம்பாள்"
திரைப்படத்தை,
இன்று
இன்னுமொருமுறை
ஓட விட்ட
கே. டி.வி.க்கு
நன்றி சொல்லாவிடில்..
எனக்கு
மோட்சமே
கிடையாது.
Sent from my GT-S6312 using Tapatalk
http://i1028.photobucket.com/albums/...pswhyvjc5h.jpg
Sent from my GT-S6312 using Tapatalk
Wonderful comedy by three great stars of the Tamil film industry.
https://www.youtube.com/watch?v=WT_NBeBMDHA
These three legendary actors are irreplaceable.