Quote:
சதி வலையில் செல்லம்மா...!
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர், செல்லம்மா.
இழந்த சொத்துக்களை ஆறு மாதத்திற்குள் மீட்பேன் என்று சபதம் போட்ட செல்லம்மா, அதில் ஜெயிப்பதற்காக அல்லும் பகலும் அயராமல் உழைக்கிறாள். தற்போது கர்ப்பவதியாக இருக்கும் செல்லம்மாவை கணவன் வடமலை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்கிறான்.
இந்நிலையில் கடற்கரையின் மகள் ரத்னா பூப்பெய்திய செய்தி கிடைக்க, அத்தை என்ற முறையில் அவளுக்கு சீர்வரிசை செய்கிறாள் செல்லம்மா! அதை கடற்கரையின் மனைவி முத்தழகி ஏற்க மறுத்து தகராறு செய்கிறாள்! அந்த ஆத்திரத்தில் செல்லம்மாவின் கர்ப்பத்தை கலைக்க சிவசு, சிவா இருவரையும் ஏவிவிடுகிறாள் முத்தழகி!
இந்நிலையில் மனைவி மதுமிதாவுக்காக ஜெயிலுக்கு போன ஏ.கே. ஜாமீனில் வெளிவருகிறார். முதல்காரியமாக கல்லூரி நிர்வாக பொறுப்பில் இருந்து மதுமிதாவை நீக்குகிறார். அதற்கெல்லாம் காரணம் செல்லம்மா தான் என்று நினைத்த மதுமிதாவும் சிவசு, சிவா மூலமாக செல்லம்மாவை விஷம் வைத்து கொல்ல சதி திட்டம் தீட்டுகிறாள். இந்த சதியில் இருந்து செல்லம்மா மீண்டாளா? பரபரப்பான திருப்பங்கள் காட்சிகளை தடதடக்க வைக்கும்.
தொடரில் ராதிகா சரத்குமார், டெல்லி கணேஷ், ரவிகுமார், ராதாரவி, அவினாஷ், நந்தகுமார், வெங்கட், சாக்சி சிவா, ராஜ்காந்த், மாளவிகா, மகாலட்சுமி, காவ்யா, நீலிமாராணி, கன்யா, சினேகா நம்பியார் நடிக்கிறார்கள்.
திரைக்கதை: ராஜ்பிரபு. வசனம்: சபரிநாதன். இசை: கிரண். டைரக்ஷன்: விக்ரமாதித்தன்.