ஓ தாங்க்ஸ் க்ருஷ்ணா சார்..
அவர்கள் சுஜாதா, கமல் விட ரஜினியே என்னைக் கவர்ந்தார்..க்ளைமாக்ஸ் ஏதோ பொயட்டிக் ஜஸ்டிஸ் கொடுப்பதாக நினைத்து கில்லி கண்ணாடியில் படுவது..என்னவோ என் மனதில் ஒட்டவில்லை..கொஞ்சம் செயற்கையாய்ப் பட்டது அன்றும் இன்றும்..
Printable View
ஓ தாங்க்ஸ் க்ருஷ்ணா சார்..
அவர்கள் சுஜாதா, கமல் விட ரஜினியே என்னைக் கவர்ந்தார்..க்ளைமாக்ஸ் ஏதோ பொயட்டிக் ஜஸ்டிஸ் கொடுப்பதாக நினைத்து கில்லி கண்ணாடியில் படுவது..என்னவோ என் மனதில் ஒட்டவில்லை..கொஞ்சம் செயற்கையாய்ப் பட்டது அன்றும் இன்றும்..
கரெக்ட் சின்ன கண்ணன் சார்
அவர்கள் படம் end சரி இல்லை தான்
படம் ஆரம்பமே பிளாஷ் back
kb யோட problem படத்தை எப்படி முடிப்பது என்பது தான்
அதை "அங்கும் இங்கும் பாதை கண்டு " பாடலிலே கவிஞர் மூலமாக
சொல்லுவர்
"கதை எழுதி விட்டாள் முடிக்க மட்டும் தெரியவில்லை "
காதலின் ஜாதியெல்லாம் கன்னழகிலே
கோவிலின் தேரழகோ முன்னழகிலே
கனியே மனம் .. மயங்க மயங்க
தருவாய் சுவை பெருக பெருக
இளமையின் கடிதமே
இனிமையின் உருவம் மலர மலர
வா பொன்மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை
கண்மணி
வா பொன்மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
பூந்தளிர் (வண்ணகுழந்தை)
சிவகுமார் சுஜாதா ஜோடி
தேவராஜ் மோகன் direction
இளையராஜா இசை
ஒரு அருமையான பாட்டு
ஓவர் lighting
படம் பப்படம்
அழகான பாட்டு க்ருஷ்ணா சார்.. அண்ட் ஷார்ட் அண்ட் க்யூட் விமர்சனம் :)
மயிலே மயிலே உன் தோகை எங்கே.. ஜென்சி கீச்சுக் குரல்..(?) பாட்டும் நினைவுக்கு வருகிறது
பாலச்சந்தரின் கல்யாண அகதிகள் படத்தில் ஒரு பாட்டு..
மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்.. (இவர் மனசுக்குள்ள உட்கார்ந்து மணியடிச்சா எவ்ளோ பெரிய மனசு அவருக்கு என ஜோக்கும் வரும்)
ck சார்
மயிலே மயிலே உன் தொகை எங்கே
ஒயிலே ஒயிலே ஒன ஊஞ்சல் எங்கே
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ
மயிலே மயிலே
தென்றல் தாலாட்ட தென்னை இருக்க
அது தன்னை மறக்க
நீ அணைக்க நான் இருக்க
நாள் முழுக்க தேன் மணக்க
பனி வாய் மலரே பல நாள் நிலவே
வரவா தரவா பெறவா நான் தொடவா
மயிலே மயிலே
பாலா ஜென்சி குரல்
மிக அழகான பாடல் .
நயம் அக்மார்க் ஹம்சத்வனி என்ற ராகத்தின் அடிப்படையில் அமைந்த பாடல் .
கடவுள் அமைத்து வைத்த மேடை
சிவகுமார் உழக்கு சுமி ஜோடி 3 இன்ச் பாதரக்ஷகலு
இளையராஜா தபேல பின்னி எடுத்து இருப்பார்
இடையில் கிடார் violin என்று கலந்து கட்டி இருப்பார்
படம் ஊஊ sangu
//நயம் அக்மார்க் ஹம்சத்வனி என்ற ராகத்தின் அடிப்படையில் அமைந்த பாடல் . // அது என்னவாக்கும் நயம்..அக்மார்க்க்னு பேர் :)
சிவகுமார் உழக்கு சுமியோட இன்னொரு பாட்டு.. நினைவுக்கு வருதா..
தமன்னா நிலாவுக்கு இன்று ஒரே சுகம் இது முதல் இரவு முதல் கனவு..திரு நாள் தொடரும் தொடரும்..ம்ம்ம் ஊ ஊ ஊஊஉ...
(தமன்னா கலர் மஞ்சளோன்னோ ஹி ஹி :) )
ck சார்
அது நயம் அக்மார்க் ஹம்சத்வனி னா
வேறு எந்த ராகமோ அல்லது வெரி எந்த ஸ்வரங்களோ சேராமல் ஹம்ச்ட்வனியை ராகத்தை அப்படியே நகல் எடுத்த பாடல்
இந்த மாதரி ராகத்தை நேரிடையா use செய்த பாடல்கள் கம்மி
வெரி rare composition
தேடி எடுக்கிறேன்களே சார் முதல் இரவு பாடலை
கே சீ films (கோவை செழியன் தயாரிப்பு நம்ம உவஉ,குமரி கோட்டம்,உழைக்கும் கரங்கள் போன்ற படங்களை தயாரித்தவர் தான்
இந்த படத்தையும் தயாரித்தார்
அதே சிவகுமார் சுமி ஜோடி
bgm ட்ரைன் சவுண்ட் கொஞ்சம் different ஆக இருக்கும்
தமன்ன கோபுரம் மஞ்சளனா
நக்மா என்ன மஞ்சள் சார் (மஞ்ச பை யா)
//நக்மா என்ன மஞ்சள் சார் (மஞ்ச பை யா)// ம்ஹீம் இவங்க கிட்ட நான்கலர் லாம் பார்த்ததில்லை ...
பிஜிஎம் ட்ரைன் சத்தம் தான்..ஆனா பாட்டுல ட்ரைனோட சுவடே தெரியாதுன்னு நினைவு..
ஓ..அப்படியா...
இந்தப் படத்த ப் பத்தி இருவரிக் கமெண்ட் இல்லியே...
ஆமா ஆங்கிலம் கலந்த அந்தக்காலப் பாட்டுன்னு பார்த்தா எனக்கு ஊஞ்சல் தான் நினைவுக்கு வருது..அப்புறம் ப்ளாக் அண்ட் ஒயிட் ப்ரெட்டி ஸ்ரீதேவி..வணக்கத்துக்குரிய காதலியே
ஸ்விங்க் ஸ்விங்க் உனது ஊஞ்சல் நான்
ஸ்விங்க் ஸ்விங்க் உனது பாடல் நான்..
ஸ்வீட் ஸ்வீட் ஸ்வீட் உனது அழகுதான்..
அப்புறம் ..பாட்டுல ஜோடி நன்னா இருக்கும்..