எருமையைக் கருமை என்பார்
..எமனவன் ஊர்தி என்பார்
சிறுமைகள் மனதில் கொள்ளா
..ஜடமென உலகை ப் பார்த்தே
வெறுமையாய் நிற்கும் ஆங்கே
..வேற்றுமை தெரிந்திடாமல்
பெருமையின் அர்த்தம் என்றும்
..பேதைகள் அஃதறி யாதே..!
ஹை..குட்டீக் கவித எழுதிப் பார்த்தேனே :)
க்ருஷ்ணா ஜி.. வியட்னாம் வீடுல ந.தி பொண்ணா வாடி ரமணி போடி ரம்ணின்னு போன்ல பேசுமே..அவங்களப் பத்தி இங்க பேசியாச்சா (பொழுது போலைன்னா என்னபண்ணனும்..பத்த வைக்கணும் :) )