அமுதசுரபி டாக்டர் எம்.ஜி.ஆர். உதவும் அறக்கட்டளை நிறுவனர் திரு.கா. நா. பழனி சிறப்புரை
http://i68.tinypic.com/27xib77.jpg
http://i64.tinypic.com/2e1zlzn.jpg
Printable View
அமுதசுரபி டாக்டர் எம்.ஜி.ஆர். உதவும் அறக்கட்டளை நிறுவனர் திரு.கா. நா. பழனி சிறப்புரை
http://i68.tinypic.com/27xib77.jpg
http://i64.tinypic.com/2e1zlzn.jpg
அ.தி.மு.க. மாநில முன்னாள் செயலாளர் (கர்நாடக மாநிலம் ) திரு.கிருஷ்ணராஜ் பேசும்போது
http://i64.tinypic.com/bj5tsl.jpg
திரு.நெல்சன் முருகன் (மலேசிய தொழில் அதிபர் ) உரையாற்றியபோது
http://i65.tinypic.com/21ziih.jpg
http://i66.tinypic.com/9jf5va.jpg
மேடையில் மலேசிய இசை குழுவினர் நிகழ்ச்சி தொடங்கும் முன்பு
http://i68.tinypic.com/2qxnyag.jpg
மேடையில் திரு.மேகநாதன் பாடும்போது
http://i64.tinypic.com/wpeg5.jpg
http://i67.tinypic.com/2eohbq1.jpg
திரு.மதியழகன் பாடும்போது
http://i63.tinypic.com/k1wi0k.jpg
http://i68.tinypic.com/25rcoki.jpg
http://i68.tinypic.com/2pobqq1.jpg
http://i64.tinypic.com/11v2nuw.jpg
திருமதி பார்வதி / திரு. மேகநாதன் பாடும்போது
திரு.சிவா / திரு.மேகநாதன் பாடும்போது
http://i63.tinypic.com/mizy8m.jpg
விழா சிறப்பு விருந்தினர்கள் திரு.நெல்சன் முருகன் (மலேசிய தொழில் அதிபர் )
திருநங்கை கீதம்மா நாயக் (சமூக சேவகி ) ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு
http://i63.tinypic.com/a3o75z.jpg
http://i67.tinypic.com/20z4rww.jpg
http://i66.tinypic.com/1zn06k0.jpg
பெங்களூரு, மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து வருகை புரிந்த பக்தர்களுக்கு சிறப்பு செய்யும் காட்சிகள் .
http://i65.tinypic.com/259zy1g.jpg
http://i63.tinypic.com/rsudk4.jpg
விழாவில் சிறப்பாக பாடிய திரு.மேகநாதன் அவர்களுக்கு திரு.லோகநாதன்
சென்னை எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பில் பொன்னாடை அணிவித்து பாராட்டும்
காட்சி.http://i67.tinypic.com/vy4hur.jpg
http://i66.tinypic.com/wnqc2.jpg
http://i64.tinypic.com/2zzhic2.jpg
விழாவில் சிறப்பாக பாடிய திரு.மேகநாதன் அவர்களுக்கு திரு.கணபதி தாஸ்
கோவை எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பில் பொன்னாடை அணிவித்து பாராட்டும்
காட்சி.
http://i65.tinypic.com/30tgned.jpg
http://i66.tinypic.com/fc1uab.jpg
#நேரில் #வந்த #தெய்வமே.....!
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
M.G.R. தனது #ரசிகர்கள், #தொண்டர்களின் #சந்தோஷத்துக்காக தன்னை #வருத்திக் கொள்ளவும், சிரமம் எடுத்து பயணம் மேற்கொள்ளவும் தயங்காதவர்.
நடிகர் ரசிகர் என்ற தொடர்பையும் தாண்டி தனது #ரசிகர்களின் #உணர்வுகளுக்கு மதிப்பளித்தவர்.
புதுச்சேரியில் மீனவர் குப்பத்தைச் சேர்ந்த இளைஞர் கோவிந்தசாமி. எம்.ஜி.ஆரின் ரசிகர் என்பதைவிட வெறியர். தனது திருமணத்தை எம்.ஜி.ஆர். நடத்தி வைக்க வேண்டும் என்று கோவிந்தசாமிக்கு ஆசை.
இது சம்பந்தமாக கோவிந்தசாமி எம்.ஜி.ஆருக்கு சிலமுறை கடிதம் எழுதினார். எம்.ஜி.ஆரின் உதவியாளர் களே கடிதத்தைப் பார்த்துவிட்டு, ‘புதுச் சேரியில் மீனவர் குப்பத்தில் இருக்கும் யாரோ ஒருவரின் திருமணத்தை நடத்தி வைக்க எம்.ஜி.ஆரால் போகமுடியுமா? ’ என்று நினைத்தார்களோ என்னவோ? கடிதம் எம்.ஜி.ஆரின் பார்வைக்கே போகவில்லை.
ஒருநாள் கோவிந்தசாமியின் பெற் றோரும் உறவினர்களும் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு வந்துவிட்ட னர். தன்னை பார்க்க காத்திருந்தவர்களை ஒவ்வொருவராக சந்தித்த எம்.ஜி.ஆரிடம் விஷயத்தைக் கூறினர். ‘‘நாங்க எழுதின கடிதத்துக்கு உங்களிடம் இருந்து பதில் இல்லாததால் கோவிந்தசாமி பித்துப் பிடிச்சவன் போல இருக்கிறான்.
கடலில் மீன் பிடிக்கவும் சரியாக போவதில்லை. நீங்கதான் கோவிந்தசாமியின் திரு மணத்தை நடத்திவெச்சு அவனைக் காப் பாத்தணும்’’ என்று உருக்கமாக கோரினர்.
இது எம்.ஜி.ஆரை வெகுவாக பாதித்து விட்டது. ‘‘விரைவிலேயே புதுச்சேரிக்கு சுற்றுப் பயணம் வர இருக்கிறேன். நீங்கள் அப்போது அங்கு வந்து என்னை சந் தியுங்கள். உங்கள் மகன் திருமணத்தை நடத்தி வைக்கிறேன்’’ என்று அவர்களை எம்.ஜி.ஆர். சமாதானப்படுத்தினார்.
அந்த மீனவர்கள் நம்பிக்கையுடன் சென்றனர்.
சில நாட்கள் கழித்து புதுச்சேரிக்கு எம்.ஜி.ஆர். சுற்றுப் பயணம் சென்றார். அவர் தங்கியிருந்த இடத்துக்கு மீனவர் குப்பத்தைச் சேர்ந்தவர்கள் வந்தனர். விஷயம் எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்கப் பட்டது. ‘‘திருமணத்தை நடத்தி வைத்து விட்டு கூட்டத்துக்கு போகலாம். மணமக் களையும் உறவினர்களையும் கூப்பிடுங்கள்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார்.
மண மக்களை அழைத்துவர எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் சென்றபோதுதான் அவர்களுக்கு விஷயமே தெரிந்தது.
கோவிந்தசாமியின் உறவினர்கள் தயங்கியபடியே, ‘‘மன்னிக்கணும். எங்க குப்பத்துக்கு எம்.ஜி.ஆர். நேரில் வந்து தாலி எடுத்துக் கொடுத்தால்தான் திருமணம் பண்ணிக்கு வேன் என்று கோவிந்த சாமி பிடிவாதம் பிடிக்கிறான்’’ என்று மென்று முழுங்கி தெரிவித்தனர்.
உதவியாளர் களுக்கு கோபம் வந்துவிட்டது. ‘‘அது எப்படி முடியும்? கடற்கரையோரம் உள்ள குப்பத்துக்கு மணலிலே வரணும். அங்கேயெல்லாம் வண்டி வராது’’ என்று சத்தமாக தெரிவித்தனர். பதிலுக்கு, ‘‘பாதையிலே மணலில் நாங்க செடி, தழைகளை போடுறோம். அதுமேல, வண்டி ஓட்டிக்கிட்டு வந்துடுங்க’’ என்று மீனவர்கள் கெஞ்சினர்.
வெளியே நடந்து கொண்டிருந்த கசமுசா, எம்.ஜி.ஆரின் காதுகளில் விழுந் தது. உதவியாளர்களை அழைத்து விவரம் கேட்டார். அவர்கள் சொன்னதும் சில விநாடிகள் யோசித்துவிட்டு, ‘‘சரி, போகலாம்’’ என்றார்.
உதவியாளர்கள் பதறிப்போய், ‘‘நாங்கள் விசாரிச்சோம். கடற்கரை மணலில் வண்டி நின்று விட்டால் நடந்துதான் போகணும். அவங்க குப்பம் இரண்டு கிலோ மீட்டருக்கு மேலே தூரமாக உள்ளது. நீங்கள் போக வேண்டாம்’’ என்றனர்.
எம்.ஜி.ஆர். கோபத்துடன், ‘‘என்ன பேசறீங்க? #என்னோட #ரசிகன். அவனுக்கு நான் எந்த உதவியும் செய்யலே.
அவனை நான் பார்த்தது கூட இல்லே. ஆனாலும் என் மேலே வெறித்தனமான அன்போட இருக்கான். நான் வந்து நடத்தினால்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு பித்துப் பிடிச்சா மாதிரி இருக்கான்.
நான் போய்த் தான் ஆகணும். வண்டி நின்னுபோனா நடந்து போறேன். போய் ஏற்பாடு பண் ணுங்கய்யா’’ என்றார்.
அடுத்த விநாடி, மீனவர் குப்பத்துக்கு எம்.ஜி.ஆர். செல் வதற்கான ஏற்பாடுகள் தொடங்கின.
மணலிலும் பாதுகாப்பாக செல்லும் வகையில் ஃபோர் வீல் டிரைவ் எனப் படும் நான்கு சக்கரங்களும் ஒன்றாக இயங்கும் ஜீப்பில் எம்.ஜி.ஆர். சென்றார்.
கடலை ஒட்டிய மணல் பகுதியில் வழிநெடுக மீனவர்கள் திரண்டு நின்று எம்.ஜி.ஆர். தங்கள் குப்பத்துக்கு வரு வதை பிரமிப்பு நீங்காமல் பார்த்தபடியே அவரை வாழ்த்தி கோஷமிட்டனர்.
பாதி வழியில், உதவியாளர்கள் பயந்த படியே திடீரென மணலில் ஜீப் சிக்கிக் கொண்டது. டிரைவர் எவ்வளவோ முயன் றும் நின்ற இடத்திலேயே சக்கரங்கள் சுற்றிச்சுற்றி மணலை தோண்டியதே தவிர, நகரவில்லை. எம்.ஜி.ஆர். ஜீப்பை விட்டு இறங்கிவிட்டார்.
பாதையில் நின்றிருந்த மீனவர்கள் உதவிக்கு ஓடிவந்தனர். பலர் ஒன்று சேர்ந்து ஜீப்பை ‘அலாக்’காக தூக்கி வேறு இடத்தில் வைத்தனர். மீனவ மக்களின் ஆரவாரத்துக்கிடையே, எம்.ஜி.ஆர். தலைக்கு மேல் கைகளை உயரே தூக்கி வணங்கியபடி மீண்டும் பயணத்தைத் தொடங்கினார்.
கோவிந்தசாமியின் மீனவ குப்பத்தை ஜீப் அடைந்தபோது பெரிய கூட்டம் ஓடிவந்து வரவேற்றது. அதில் முதலில் ஓடிவந்தவர் இளைஞர் கோவிந்தசாமி.
‘எம்.ஜி.ஆர். வரும்வரை தாடியை எடுக்க மாட்டேன்’ என்ற சபதம் காரணமாக நீண்டு வளர்ந்திருந்த அடர்த்தியான தாடியுடன் கண்களில் நீர்வழிய, ‘‘#எனக்காக #நேரில் #வந்த #தெய்வமே’’ என்று #கதறியபடி எம்.ஜி.ஆரின் காலில் விழுந்தார் கோவிந்தசாமி.... அவரை #வாரி #அணைத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.!
பக்கத்திலேயே மேடான இடத்தில் சிறிய பந்தல் போடப்பட்டிருந்தது. பதினைந்து நிமிடத்தில் மணமக்கள் தயாராகி வந்தனர். எம்.ஜி.ஆர். தாலி எடுத் துக் கொடுக்க, மணமகள் கழுத்தில் கட்டினார் கோவிந்தசாமி. ‘‘இனிமே ஒழுங்கா குடும் பத்தையும் தொழிலையும் கவனி’’ என்று கோவிந்தசாமியிடம் கூறிய எம்.ஜி.ஆர்., மணமக்களிடம் தனித்தனியே கனமான கவர்களை பரிசளித்தார்.
மீனவர்கள் கொடுத்த கோலி சோடாவை மரியாதைக்காக சிறிது குடித்துவிட்டு ஜீப்பில் ஏறி நாலாபுறமும் திரும்பி கையசைத்தபடி எம்.ஜி.ஆர். விடைபெற்றபோது, கடல் அலைகளின் பேரிரைச்சலையும் அடக்கிவிட்டு, விண்ணை முட்ட எழுந்தது கோஷம்...
‘‘புரட்சித் தலைவர் வாழ்க!’’
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌.............. Thanks wa.,
அமுதசுரபி டாக்டர் எம்.ஜி.ஆர். உதவும் அறக்கட்டளை நிறுவனர் திரு.கா. நா. பழனி அவர்கள் சிறப்பாக விழாவை ஏற்பாடு செய்தமைக்கு சென்னை எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பில் திரு.லோகநாதன் பொன்னாடை அணிவித்து பாராட்டுதல் .
http://i67.tinypic.com/23wo9zl.jpg
http://i63.tinypic.com/2a7igsx.jpg
திரு.கா. நா. பழனியுடன் உடன் இருப்பவர்கள் திரு.நெல்சன் முருகன் (மலேசியா ), திரு.தமிழ்நேசன் (மதுரை ), மற்றும் மலேசிய இசை குழுவினர்
http://i68.tinypic.com/qxnm34.jpg
http://i64.tinypic.com/nvtgtf.jpg
திருவாளர்கள் : கணபதி தாஸ் (கோவை ),சரோஜ்குமார் (திரைப்பட இயக்குனர் ),கா. நா. பழனி, சம்பங்கி, நெல்சன் முருகன்
http://i64.tinypic.com/69fe5i.jpg
அமுதசுரபி டாக்டர் எம்.ஜி.ஆர். உதவும் அறக்கட்டளை நிறுவனர் திரு.கா. நா. பழனி அவர்கள் சிறப்பாக விழாவை ஏற்பாடு செய்தமைக்கு மதுரை எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பில் திரு.தமிழ் நேசன் பொன்னாடை அணிவித்து பாராட்டுதல் .
http://i63.tinypic.com/25uis6b.jpg
அ. தி.மு.க. மாநில முன்னாள் செயலாளர் திரு.கிருஷ்ணராஜ் அவர்களுக்கும்
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, சென்னையை சார்ந்த திரு.லோகநாதன் அவர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில் 25000 பதிவுகள் நிறைவு செய்ததற்கும் பாராட்டு தெரிவிக்கும் வகையில் பொன்னாடை, மாலைகள் அணிவித்து மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். உருவச்சிலையுடன் பாராட்டு சான்றிதழ்
அமுதசுரபி டாக்டர் எம்.ஜி.ஆர். உதவும் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது .
அருகில் திருவாளர்கள் ;நெல்சன் முருகன்,(தொழிலதிபர் ) சரோஜ்குமார் (திரைப்பட இயக்குனர் ), கா. நா. பழனி
http://i65.tinypic.com/2dr9xl3.jpg
http://i66.tinypic.com/jkymg5.jpg
http://i67.tinypic.com/3023td1.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் பாடும் பக்தர்கள் திரு.தமிழ்நேசன், மதுரை,
திரு.சரோஜ்குமார் (திரைப்பட இயக்குனர் ), திரு.சம்பங்கி, ஆகியோருக்கு நினைவு பரிசு, பாராட்டு சான்றிதழ் ஆகியன வழங்குதல்
அருகில் திரு.நெல்சன் முருகன், திரு.கா. நா. பழனி
http://i65.tinypic.com/296lo92.jpg
http://i66.tinypic.com/246we8j.jpg
பெங்களூரு எம்.ஜி.ஆர். பக்தர் திரு.ஏழுமலை அவர்களுக்கு திரு.நெல்சன் முருகன்
(தொழிலதிபர் ) பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல் .
http://i64.tinypic.com/2qao1lg.jpg
சென்னை முகப்பேர் சங்கர் அவர்களுக்கு திரு.நெல்சன் முருகன் நினைவுப்பரிசு வழங்குதல் . அருகில் திரு.கா. நா. பழனி .
http://i67.tinypic.com/wl9gdf.jpg
விழாவிற்கு பெங்களுருவில் இருந்து வருகை புரிந்து சிறப்பித்த பக்தர்கள் திரு.சி.எஸ். குமார், திரு.வினோத், திரு.கஜநாத் .
http://i68.tinypic.com/2namq6v.jpg
http://i63.tinypic.com/j5h0ys.jpg
மதுரை திரு.தமிழ்நேசன்
http://i66.tinypic.com/nfs7kx.jpg
மதுரை திரு.தமிழ்நேசன், திரு.மதியழகன் (மலேசியா )
http://i67.tinypic.com/2jg80zl.jpg
திரு.மதியழகன் (மலேசியா ) திரு.லோகநாதன் .
http://i65.tinypic.com/5dl3dj.jpg
திரு.மதியழகன் (மலேசியா ) திரு.லோகநாதன் .
மலேசிய இசை குழுவினருக்கு அமுதசுரபி டாக்டர் எம்.ஜி.ஆர். உதவும் அறக்கட்டளை சார்பில் பொன்னாடை , மாலைகள் அணிவிக்கப்பட்டு, நினைவுப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்குதல்
http://i66.tinypic.com/14kwahd.jpg
http://i64.tinypic.com/2hqqa8m.jpg
நக்கீரன் வார இதழ்
http://i67.tinypic.com/xl9chx.jpg
நடிகை வசந்தா மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் கணவன் திரைப்படத்தில் தங்கையாக நடித்துள்ளார் .
இன்று ஈஸ்டர் பண்டிகை திருநாள். இயேசு பிரான் உயித்தெழுந்த நாள்
அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள் .
http://i66.tinypic.com/2cwojli.jpg