இத்திரியில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும்
இந்த திரியில் நான் பங்குகொள்வதற்கு காரணம், மக்கள் திலகத்தின் மீது உள்ள மரியாதயினாலும் அபிமானத்தினாலும் தான். ஆகையால் தான் நான் அவரிடம் எனக்கு பிடித்த விஷயங்களை இங்கே இடுகிறேன் !
திரு.வாசுதேவன், ராகவேந்திர சார், பம்மலர் போல நானும் நடிகர் திலகத்தின் மீது அதீத பற்று கொண்டவன்.
அதே சமயத்தில் கண்மூடித்தனமாக சப்போர்ட் செய்பவன் அல்ல என்பதை கூறவிரும்புகிறேன்.
எதையும் நடுநிலையோடு காண்பதே என்னுடைய அன்றும் இன்றும் என்றும் நோக்கம் ஆகும்.
உங்களில் சிலர் நான் என்னமோ மக்கள் திலகத்தை குறைத்து எழுதி நடிகர் திலகத்தின் புகழை உயர்த்த முயற்சிபதாக சந்தேகம் கொண்டால் அது உங்கள் எண்ணமே அல்லாமல் உண்மை என்றாகிவிட முடியாது...
ஒருவன் புகழை ஒருவன் மறைத்து உயரும் வரலாறில்லை என்ற பாடலுகேற்ப யார் புகழையும் யாராலும் மறைக்க முடியாது என்பது உலகறிந்த உண்மை. அந்த உண்மை முற்றிலும் அறிந்தவன், ஆதரிப்பவன், நம்புபவன் நான்..
இதற்குமேலும் என்ன சொல்வது ?

