-
நண்பர் வாசு அவர்கள் தமிழ் ஹிந்து செய்தித்தாள் வெளியிட்டு இருந்த திரு மானா பாஸ்கர் அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்றை நமது திரியில் பதிவு செய்து இருந்தார். இது சம்பந்தமாக எனது நண்பர் திரு எஸ் வி வேணுகோபால் என்பவரிடம் பேசி கொண்டு இருந்தேன். இன்று காலை எனக்கு அவர் அனுப்பிய மின் அஞ்சல் இது. திரு எஸ் வி வேணுகோபால் அவர்கள் நிறைய வார,மாத இதழ்களில் பங்கு எடுத்து வருபவர். வங்கி ஊழியர்.சென்னையில் வசிக்கிறார் .சென்னையில் நடைபெறும் அனைத்து கலை இலக்கிய சம்பந்தமான நிகழ்சிகளில் பங்கு எடுத்து வருபவர் .
இனி அவர் மின் அஞ்சல்
அன்பின் மானா பாஸ்கரன் அவர்களுக்கு
உங்களது கட்டுரையை ரசித்து வாசித்தேன்...
http://tamil.thehindu.com/opinion/co...cle6493465.ece
நானும் சிவாஜி கட்சிதான்....
உங்களுக்கு சீனியர் மெம்பர் அந்தக் கட்சியில் என்பதைப் பணிவோடு சொல்லிக் கொள்ள விரும்பும் அதே நேரத்தில்.....அடடா..கட்சி என்றாலே ஒரே பேச்சு பாணிதான் தமிழ்நாட்டில்..
நினைவுக்கு எட்டாத காலமுதல் சிவாஜியைப் படத்தில் பார்க்க ஆரம்பித்தாலும், முறைப்படி சிவாஜி கட்சியில் சேர்ந்தது நான் எட்டாவது படிக்க பாட்டன் வீடு இருந்த காஞ்சிபுரம் சென்ற 1971ல் தான். என் அண்ணன்கள் படித்த பச்சையப்பன் கல்லூரியில் காங்கிரஸ், தி மு க மாணவர் அமைப்புகள் வன்முறையோடு மோதிக் கொண்டிருந்த காலம் அது. சினிமா, சினிமா இசை, ஸ்டண்ட், காதல் எல்லாம் புரியாமலே புரிய ஆரம்பித்த பருவம். வாராந்தரி ராணி வாசிக்க ஆரம்பித்த நேரம் எப்படி இருக்கும்...
ராஜா படம் ரிலீஸ் ஆன முதல் காட்சிக்குப் போக என் அண்ணன், சித்தப்பா மகனிடம் கெஞ்சிக் கேட்டிருந்தேன். இரண்டு கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் டபுள்ஸ் போகவும், டிக்கெட் வாங்கிப் பார்க்கவும். காட்சி நேரம் எட்டரை ஆக இருக்கக் கூடும் என்பதாலும், முதல் ஷோ கியூவில் முன்பாகவே சென்று நிற்கவேண்டும் என்றும் என் அண்ணன் ஆறரை மணிக்கே சைக்கிளை எடுத்து வாசலில் வைத்தான். அம்மா வழி பாட்டி, எதுவும் உணவு உட்கொள்ளாமல் வீட்டைத் தாண்ட விட மாட்டார்...பழைய சாதம் எடுத்து மோர் போட்டு சாப்பிடும்போது, அண்ணன் முரளி வாசலில் பேச சத்தம் கொடுத்தார்..அப்படியே அலறி அடித்துக் கொண்டு ஓடி தியேட்டரில் போயிறங்கும்வரை அவன் அடித்த அத்தனை கலாய்ப்பு வேலைகளையும் தாங்கிக் கொண்டு, அதில் ஒன்றுதான், டபுள்ஸ் பிரச்சனை...விஷ்ணு காஞ்சி போலிஸ் ஸ்டேஷன் நெருங்கும்போது சைக்கிளில் இருந்து குதித்து ஓடவேண்டும்....அரை கிலோமீட்டர் தள்ளி சைக்கிள் புறப்படுமுன் ஓடிச் சென்று கேரியரில் அமர்ந்துவிட வேண்டும், இல்லாவிட்டால் அண்ணன் போய்விடுவான்...
இப்படியாக தியேட்டர் சென்று பார்த்தால் காஞ்சிபுரம் சிவாஜி பக்தர்கள் முழுக்க திருவிழா கூட்டம் போல் செர்ந்திருந்ததைப் பார்த்ததும் உயிரே போனது.
என் அண்ணன் திடீரென்று, ஆஹா...சிவாஜியே தியேட்டருக்கு வந்திருக்காரு என்று குரல் கொடுக்க, நம்பிய கூட்டம் கலைந்துசென்று சிவாஜியைத் தேட அதற்குள் நாங்கள் முன்னேறிப் போய், டிக்கெட் எடுத்துவிட்டோம். எந்தத் திருட்டு மூதேவியோ வதந்தி கிளப்புறச்சி க்யூவில் இடம் போச்சு என்று ஒரு கும்பலே அவனைத் தேடிக் கொண்டிருக்கும்போது சத்தம் போடாமல் நாங்கள் தியேட்டருக்குள் இருந்தோம்....
எத்தனை எத்தனை படங்கள்.....பாபுவின் ஒவ்வொரு காட்சியும் எங்களுக்கும் மனப்பாடம் தான். பாலாஜி வீட்டில் மழையின் நனைந்த தனது சட்டையைப் பிழிவார் சிவாஜி. பிரித்துப் பார்த்தால் கிழிந்திருக்கும்...என்ன மேன் இது என்பார் பாலாஜி. முன்னாடி சட்டை, இப்போ ஓட்டை என்பார் சிவாஜி....பிறகு குடிசை வீட்டில் குழந்தை நட்சத்திரம் ஸ்ரீதேவியிடம் இது நாயோட தட்டு, நாயோட பெட்டி, இது நாயோட சங்கிலி என்று அந்தப் பெண் குழந்தையின் கைகளைத் தனது கழுத்தைச் சுற்றிக் கட்டிக் கொள்வோர்....நாய் எங்கே என்று அவள் கேட்கும்போது....அடடா..அடடா...
பிறகு நாங்கள் சிவாஜியை தேசிய நடிகர் என்றே அழைக்கத் தொடங்கினோம். சிவாஜி சொல்லிக் கொடுத்த மாதிரி சசி குமார் தேசிய நடிகர் ஆனார்...அவர் மறைந்தபோது நாங்களும் அஞ்சலி தெரிவித்தோம். தீவிர ஸ்தாபன காங்கிரஸ் தொண்டர்களானோம்.
வீட்டில் கஷ்டப்பட்டு ஸ்டூல் போட்டு ஏறி சுவரில் நடிகர் திலகம் வாழ்க என்று வாட்டர் கலரில் எழுதி தேசியக் கொடி வரைந்தேன் நான்.
கொஞ்சம் வருத்தமாகத் தான் இருந்தது,
ஏனென்றால்,
என் இரண்டாவது வயதிலேயே நான் எம் ஜி ஆர் கட்சியின் அடிப்படை உறுப்பினன் ஆக இணைந்திருந்தேன். கையில் கிடைக்கும் பெட்டியை எல்லாம் எடுத்துக் கொண்டு புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது என்று பாடித் திரிந்த எனக்கு, இந்தக் கட்சி மாற்றத்தால், கடமைகளின் தன்மை மாறிவிட்டிருந்தது. இரண்டு மனம் வேண்டும், இந்த மாளிகை வசந்த மாளிகை...என்று அழுகைப் பாடல்கள், தத்துவ பாடல்கள்... எல்லாம் வரப்படுத்த வேண்டி இருந்தது. ஆனால் அவற்றின் செழுமையான மரபு இலக்கணம், எதுகை, மோனை இவற்றில் என் கவனம் மாறத் தொடங்கிய காலமும் இதுவே...
அனாலும் என்றைக்காவது மீண்டும் எம் ஜி ஆர், சிவாஜி சேர்ந்து நடித்த படம் ஒன்று வராமலா போய்விடும் என்று நெடுநாள் நம்பிக் கொண்டிருந்தேன்...
ரஜினியும், கமலும் சேர்ந்து நடித்த இளமை ஊஞ்சலாடுகிறது படத்தைப் பார்க்கும்போது எனக்கு தெளிவு எட்டியிருந்தது.
இவர்களும் விரைவில் பிரிந்து போய்விடுவார்கள் என்று.
நன்றி பாஸ்கரன்....
எஸ் வி வேணுகோபாலன்
அடடா...மிக மிக முக்கியமான செய்தியொன்றை எழுத மறந்திருக்கிறேன்...
பத்தாம் வகுப்பில் பரமசிவன் கழுத்தில் இருந்து பாடலைப் பாடியும், மிகவும் பாராட்டிவிட்டு மூன்றாம் பரிசு தான் கொடுத்தனர்.. அடுத்த ஆண்டு பள்ளி இறுதித் தேர்வு வகுப்பில், சோதனை மேல் சோதனை பாடலை எடுத்துப் பாடினேன்...முதல் பரிசு கிடைக்கச் செய்த சிவாஜிக்கு எப்படி நன்றி தெரிவிப்பது!
-
உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சித்தூர் வாசு சார்
-
வாசு ஜி
இதோ அருமையான ஒரு சங்கீத மழை இசையரசியும் கண்டசாலாவின் குரலில்
http://www.youtube.com/watch?v=qz68ElqPL4Q
-
2000 பதிவுகள் இலக்கை கடந்த திரு ராஜேஷ் அவர்களுக்கு உளங்கனிந்த வாழ்த்துகள்
தொடரவேண்டும் உங்கள் பணி
-
கிருஷ்ண சார்,
சற்றே ஒரு சிறு இடைவெளிக்குப் பின் வருகை புரிந்திருக்கிறீர்கள். வருக! வருக! தங்கள் மூத்த மூத்த மகள் செல்வி அவர்கள் எல்லா வளமும் பெற்று உயர் நிலையை அடைய மனமார வாழ்த்துகிறேன். அவர்களுக்கு என் நல்லாசிகள்.
-
ராஜேஷ் சார்,
காலை வணக்கம். தங்கள் 2000 பதிவுகளுக்கு பதிவுகள் அல்ல... தகவல் களஞ்சியங்களுக்கு என் சந்தோஷமான வாழ்த்துக்கள். இது எப்போதும் தொடர வேண்டும்
http://cafeipiti.files.wordpress.com...2000-posts.jpg
-
ராஜேஷ் சார்,
எங்கே இரண்டு நாட்களாக ஆளையே காணோம்? வெளியூர் பயணமா அல்லது தீபாவளி ரெஸ்டா?
-
சமீபத்தில் நீண்ட நாட்களுக்கு பின் சென்னையில் இருந்து திருக்கடையூர் (கார் பயணம்) செல்லும் போது நல்ல பல பாடல்களை கேட்டு இன்புற்று கொண்டு மகிழ்ந்தோம். முதலில் கார் ஓட்டுனர் ரஹ்மான் அவர்கள் இசையில் வெளி வந்த ஜீன்ஸ்,திருடா திருடா,ரோஜா போன்ற பாடல்களையும் பின்னர் சமீபத்திய இசை அமைப்பாளர்கள் இசை அமைத்த பாடல்கள் எல்லாம் கொண்ட ஒரு CD இயக்கினார். சிறிது நேரத்தில் பயணம் சற்று நெருடல் ஆக தோன்ற ஆரம்பித்த வேளை .
ஏனென்றால் உடன் பயணித்தவர்கள் பல்வேறு வயது வகுப்பினர் 25 வயது முதல் 55 வயது வரை கொண்ட ஆண்கள் மட்டுமே மொத்தம் 7 அல்லது 8 பேர் இருந்த நினைவு .எல்லோருமே சற்று கோரஸ் ஆக 'போர் அடிக்கிறது வேறு பழைய பாடல்கள் இருந்தால் நன்றாக இருக்கும் ' என்று கூறினார்கள். ஓட்டுனரிடம் இருந்த பாடல்கள் வரிசை எல்லாமே புதிய படங்கள்.அந்த நேரத்தில் என் உடைய கைபையை தோண்டி பார்த்ததில் ஒரு பழைய CD கிடைத்தது.அனைத்தும் பழைய பாடல்கள் .CD தரம் வேறு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.இருந்தாலும் பரவாய் இல்லை என்று ஓட்டுனரிடம் கொடுத்து ப்ளே செய்ய வைத்தோம். இறுதியில் சென்னை வந்து சேரும் வரை கிட்டத்தட்ட 12 மணி நேரம் CD பிளேயர் நிறுதபடவே இல்லை. தொடர்ச்சியாக பாடல்கள் . அனைத்தும் 60,70,80 களில் வந்த பாடல்கள். அனைவருமே ரசித்த பாடல்கள். இறுதியில் அனைவருக்கும் ஒரு CD காபி கொடுக்க வேண்டி விண்ணப்பம் வந்து விட்டது என்றால் பார்த்து கொள்ளுங்களேன். இரண்டு பாடல்கள் மீண்டும் மீண்டும் ஒன்ஸ் மோர் கேட்கப்பட்டன
http://www.youtube.com/watch?v=BqeX54Wmvgw
http://www.youtube.com/watch?v=dbxkdDjOBN4
-
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி வாசு சார்
-
ஹாய் குட்மார்னிங்க் ஆல்
ஹாய் க்ருஷ்ணா ஜி..வெல்கம் பேக்.. உங்கள் மகள் செல்வி அவர்களுக்கு எனது என் மனைவியின் வாழ்த்துக்கள் + ஆசிகள்..
ஹாய் ராஜேஷ் ஜி.. கங்க்ராட்ஸ் ஆன் ரீச்சிங்க் 2000.. எங்கே ஒரு ஹேவர்ட்ஸ் அதே எண் எடுங்கப்பா!!
ஹாய் வாசு சார்..உங்களின் சிவாஜி நினைவுகள் மிக அழகு.. நேற்றேசொல்ல இயலவில்லை.. இன்னும் அப்பப்ப எடுத்து விடுங்கள் நிறைய விஷயங்களை..ஆவலாக இருக்கிறது..
ஆல்ஸோ..ஆமாம் ரூபிணி எஸ்வி சேகர் ஜோடி கொஞ்சம் ஸோ ஸோ தான்..
ம்ம் சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து ஆடலுடன் பாடலைக் கேட்டு இளைய தலைமுறையை க் கவர்ந்திருப்பதில் மகிழ்ச்சி ம் நல்ல பாடல்கள் தான் .. நைஸ் க்ருஷ்ணா ஜி..திருக்கடையூர் போனதில்லை போகவேண்டும்..
இன்று கொஞ்சம் வெளியில் வேலை..எனில் ஈவ்னிங்க் வருவேன்.. வரட்டா..