கரெக்ட்....Quote:
Originally Posted by Madhu Sree
பார்க்கிறவங்க மட்டும் 'ஷாக்' ஆனா போதுமா?. படிக்கிறவங்களும் 'ஷாக்' ஆகட்டுமேன்னுதான், சஸ்பென்ஸை இரண்டாவது போஸ்ட்டில் போட்டேன்.
நான் நினைச்ச மாதிரியே 'ஷாக்' ஆயிட்டீங்க மது...
Printable View
கரெக்ட்....Quote:
Originally Posted by Madhu Sree
பார்க்கிறவங்க மட்டும் 'ஷாக்' ஆனா போதுமா?. படிக்கிறவங்களும் 'ஷாக்' ஆகட்டுமேன்னுதான், சஸ்பென்ஸை இரண்டாவது போஸ்ட்டில் போட்டேன்.
நான் நினைச்ச மாதிரியே 'ஷாக்' ஆயிட்டீங்க மது...
:) aamaaa nejamaave shock thaan :D episode-ee izhakka ipdi laam panraanga :x :sigh2: .....
Oh Saradha mam, :omg:
Even i was shocked., heard from my friend that Kolangal will be over by a month or two., but never expected this twist, the way u have described was awesome mam . :lol: :D
தொல்ஸ் யை விட நீங்கள் இயக்குனராகலாம் போல.....Quote:
Originally Posted by saradhaa_sn
இப்படி முடிக்கலாமென தொல்ஸ் யோசித்தாரோ என்னவோQuote:
Originally Posted by saradhaa_sn
பின் :banghead: :banghead:
அதுதானேQuote:
Originally Posted by saradhaa_sn
தொல்ஸ் சின் ஆயுள்கால திட்டம் அல்லவா :lol:
மது மட்டுமில்லீங்கQuote:
Originally Posted by saradhaa_sn
'அப்பா வந்துட்டாரா அபி?'
'இன்னும் இல்லம்மா, இப்போ வந்திடுவார்'.
'அக்கா இதையேதான் நீயும் ரொம்ப நேரமா சொல்லிக்கிட்டே இருக்கே, ஆனா அவர் வந்தபாடில்லையே. அழைக்கப்பட்டவஙளெல்லாம் வந்துட்டாங்க. ஆனா இன்னும் அவரைக்காணோமே'
'பயப்படாதே ஆர்த்தி, நிச்சயம் வந்திடுவார்'.
'ஒரு காண்டாக்ட் நம்பரும் கொடுக்காம, இருக்கிற இடத்தையும் சொல்லாமல் என்ன மனுஷன் இவர்?'
'கோபப்படாதே ஆனந்தி, எனக்கு நம்பிக்கையிருக்கு. வந்திடுவார்'.
'அதுக்கில்லை அக்கா, நேரம் ஆக ஆக ஒருவேளை அவர் வராமல் போய் விடுவாரோன்னு பயம் வர ஆரம்பிச்சிடுச்சு' என ஆர்த்தி சந்தேகத்தை துவக்கி வைக்க.
'ஆமா அபி, அவள் பயப்படுறதும் சரிதானே, இன்னும் அவரைக்காணோமே' என்று கற்பகமும் கலங்க, அந்நேரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வர.
'அபி கொஞம் வரீங்களா?. உங்க கிட்டே தனியா பேசணும்'
'வாங்க இன்ஸ்பெக்டர்'
'எதுவும் பிரச்சினையில்லையே?. அப்படி ஏதும் பிரச்சினைகள் வந்தால் உடனே எனக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க'
'சரி சார்'.
'அபி இப்போ எதுக்கு போலீஸ் வந்திருக்கு?'
'பயப்படாதே அம்மா, அந்த ஆதியால் ஏதும் பிரச்சினை வந்துவிடக்கூடாதுன்னு ஒரு பாதுகாப்புக்கு வரவச்சிருக்கேன், அவ்வளவுதான்'.
அப்போது கோபத்துடன் திருமண மண்டபத்துக்குள் நுழைந்து நேராக இவர்கள் இருக்கும் இடத்துக்கு வரும் காஞ்சனா....
'அபி, நீ பண்றது உனக்கே நல்லாயிருக்கா?' என்று மண்டபனே இரண்டு பட கத்த, எல்லோருக்கும் அதிர்ச்சி. பார்வையாளர் கவனம் மொத்தமும் காஞ்சனா பக்கம் திரும்புகிறது.
ஆனந்தி மெதுவான குரலில், 'அக்கா இப்போ எதுக்கு இந்த பொம்பிளை இங்கே வந்திருக்காங்க?' என்று கேட்க, அபி அதே தாழ்ந்த குரலில், 'நாம் ஒண்ணும் பேச வேண்டாம். வேணும்னே பிரச்சினை பண்ண வந்திருக்காங்க'
வந்திருக்கும் பார்வையாளர்கள் பக்கம் திரும்பும் காஞ்சனா, 'ஏங்க இவங்கதான் விசேஷம் அது இதுன்னு கூப்பிட்டா உங்களுக்கு அறிவு வேண்டாம்?. தாலி கட்டிய மனைவி நானிருக்க என் புருஷனோடு தன் அம்மாவுக்கு சஷ்டியப்த விழா நடத்துறா இந்த அபி. அதுக்கு நீங்களும் வந்திட்டீங்க'.
இப்போது சாரதா குறுக்கிட்டு, 'ஏம்மா, நீங்க தாலி கட்டின மனைவின்னா அப்ப இவங்க யாரு?. உங்களுக்கு முன்னாலேயே அவருக்கு மனைவி ஆனவங்க. தெரியுமா?'
'சும்மா நிறுத்துங்க, இவள் அவருடைய மனைவிங்கறதுக்கு என்ன ஆதாரம்?. என்னோடு திருமனம் நடந்ததுக்கு எல்லா ஆதாரமும் இருக்கு, அதுமட்டுமல்ல எங்க மேரேஜை ரிஜிஸ்ட்டர் பண்ணியிருக்கோம். என்னை கல்யாணம் பண்ணிக்கொள்ளும் முன்னர் இவள் அவருடைய தொடுப்பா இருந்திருக்கலாம். அதுக்காக உரிமையுள்ளவங்க ஆயிட முடியுமா?'
இப்போது அனைவரும் திடுக்கிடுகின்றனர். கற்பகம், அபி, ஆனந்தி, ஆர்த்தி, சாரதா, கிருஷ்ணன், ராஜேஷ், தோழர் என எல்லோர் முகத்திலும் கோபத்தின் கொந்தளிப்பு. கோபத்துடன் கொந்தளிக்கும் அபி...
'நாக்கை அடக்கிப் பேசுங்க... எங்க அம்மாவைப்பத்தி இனிமேலும் ஒரு வார்த்தை சொன்னீங்க, அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன்'.
'சும்மா நிறுத்துடி, பெரிசா பேசுறியே... நீ சொல்றது உண்மையா இருந்தா இப்போ இந்த விசேஷத்துல இருக்க வேண்டிய என் கணவர் இப்போ எங்கே சொல்லு?. ஏன் அவர் வரலை?. அவர் எங்கே இருக்கார்ங்கிறதாவது உங்களுக்கெல்லாம் தெரியுமா?. அவர் என் வீட்டில் உட்கார்ந்து டிவி.பார்த்துக்கிட்டு இருக்கார். (எல்லோர் முகத்திலும் சுனாமியின் தாக்குதல்) சந்தேகமா? இதோ நீயே பேசு'
நம்பரை டயல்பண்ணி அபி கையில் கொடுக்க, மறுமுனையில் ஈஸ்வரன்....
'அப்பா, ஏம்ப்பா இன்னும் வரலை?, நாங்க எல்லோரும் உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்கோம். எல்லோரும் வந்திட்டாங்க. இப்போ நீங்க வரலைன்னா எங்களுக்கு ரொம்ப அவமானமா போயிடும்பா'
அபி பேசுவதை எல்லோரும் மிக உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். அவள் பேசப்பேச அவள் முகத்தில் சுரத்து இறங்கி ஏமாற்றம் படர்வது அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கிறது....
'என்னை மன்னிச்சிடு அபி, இப்போ நான் வர முடியாது' (அவருக்கு என்ன நிர்ப்பந்தமோ, என்ன மிரட்டலோ) என்ற ஈஸ்வரனின் பதில் அபியை இடியாகத்தாக்க, 'என்ன அபி, அவர் வருகிறாரா?' என்று கேட்கும் கற்பகத்திடம் 'இல்லை' என்று சோகமாக தலையாட்ட.... எல்லோர் முகத்திலும் ஏமாற்றம் மற்றும் கொந்தளிப்பு. அபியின் கையிலிருந்து தன் போனை வெடுக்கென்று பிடுங்கும் காஞ்சனா, கூட்டத்தினரைப் பார்த்து...
'என்னமோ பெரிசா பேசினாளே இந்த அபி, இப்போ தெரிஞ்சுபோச்சா?. இதுதான் இந்த மானங்கெட்ட குடும்பத்தின் லட்சணம். இவங்க கூப்பிட்டாங்கன்னு நீங்களும் வந்திட்டீங்களே. போங்க, போங்க... போய் உங்க வேலைகளைப்பாருங்க'.
கூட்டம் மொத்தமும் ஏதோ முணுமுணுத்தவாறு கலைந்துபோக, அதில் சிலர் இவர்கள் காதுபட மோசமாக பேசிக்கொண்டுபோக அவமானத்தின் உச்சத்தில் அபியின் குடும்பம்.
'நினைத்ததை நடத்தியே முடிப்பவள் நான் நான் நான்' என்று பாடாத குறையாக மண்டபத்தில் இருந்து காஞ்சனா வெளியேற, வாசலில் காரில் வந்திறங்கும் ஆதி 'நீங்க எப்படிம்மா இங்கே?' என்று கேட்க...
'ஆமா உன்னை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லைன்னுதான் நான் வந்தேன். அந்த சஷ்டியப்த விழா நடக்காமல் நான் நிறுத்திட்டேன்' என்று கூறும் அம்மாவைப்பார்த்து 'எப்படீம்மா?' என்று கேட்க 'வா... காரில் போகும்போது சொல்கிறேன்' என்று அழைத்துப்ப்போகிறாள். (எப்படீன்னு தெரிஞ்சுக்க இன்னும் ரெண்டு நாளாகும்).
'இனிமேல் என்னடி இருக்கு? வாங்கடி எல்லோரும் சேர்ந்து செத்துப்போயிடுவோம்' கற்பகத்தின் கண்களில், நிரம்பி வழியும் மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட வெள்ளமாக கண்ணீர் பெருக்கெடுக்க, ஆனந்தியும் ஆர்த்தியும் செய்வதறியாது திகைத்து நிற்க, அம்மாவை அணைத்துக்கொள்ளும் அபியின் இமைக்காத கண்களில் சோகமில்லை, அதிர்ச்சியில்லை, ஆனால் கோபம் நிறைந்த தீர்க்கமான ஆவேசம் நிறைந்திருக்க.......
இந்தக் கண்ணகியின் கோபத்தில் எந்த மதுரை எரியப்போகிறதோ......
Eswaran's voice in dubbing ????? ......
May be Eswaran will given an entry now.
சுதா...Quote:
Originally Posted by sudha india
வெறுமனே அவர் குரலை மட்டும் கேட்டிருந்தால் நீங்கள் சொல்வதுபோல நடக்க சான்ஸ் உண்டு. ஆனால் ஈஸ்வரன் பேசுவதை கேமரா வழியே நேரிலேயே நமக்கு காண்பித்தார்களே. ஒருவேளை இந்த விசேஷத்தில் கலந்துகொண்டால் கற்பகத்தையோ அல்லது அபியையோ கொன்று விடுவோம் என்று ஈஸ்வரனை மிரட்டியிருக்கக் கூடும்.
(டப்பிங் கலையும் மிமிக்ரி கலையும் அபாரமாக வளர்ந்துவிட்ட இக்காலத்தில் ஆடியோ கேஸட் ஆதாரங்களை கோர்ட்டில் சாட்சிகளாக ஏற்றுக்கொள்வதில்லை என்பது உண்மைதான்).