http://i67.tinypic.com/qz3zeu.jpg
Printable View
எம்ஜிஆர் 100
எதையும் கொடுத்தே பழக்கம்!
m.g.r. படங்களில் ரசிகர்கள் மிகவும் விரும்புவது சண்டைக் காட்சிகள். சிலம்பம், வாள்வீச்சு, சுருள் கத்தி சுழற்றுதல் போன்ற சண்டைக் கலைகளை எம்.ஜி.ஆர். முறைப்படி பயின்றவர். அவர் படங்களில் சண்டைக் காட்சிகளில் வன்முறை, ரத்தம் இருக்காது. சிரித்துக் கொண்டே எதிரிகளை பந்தாடுவதில் எம்.ஜி.ஆருக்கு நிகர் அவர்தான். அதனால்தான் இன்றும் அவர் படங்களின் சண்டைக் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன.
சண்டைக் காட்சிகளை படமாக்கும்போது படத்தின் ‘ஸ்டன்ட்’ இயக்குநரைவிட எம்.ஜி.ஆர். அதிக அக்கறை எடுத்துக் கொள்வார். உடன் நடிக்கும் கலைஞர்களுக்கு ஆலோசனை கள் சொல்வார். கேமராவை வேகமாக ஓடவிட்டு, திரையில் பார்க்கும்போது சண்டை வேகமாக நடப்பது போன்ற ‘டெக்னிக்’ எல்லாம் கிடையாது. முழு வேகத்துடன் எம்.ஜி.ஆர். சண்டையிடு வார். அவரது வேகத்துக்கு உடன் நடிப் பவர்களால் ஈடுகொடுக்க முடியாது. ‘மருதநாட்டு இளவரசி’ படத்தில் அவரது வாள் வீச்சின் வேகம் எப்படி இருந்ததோ, அதே வேகம் அவரது கடைசி படமான ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ படத்திலும் இருந்தது.உடன் நடிக்கும் கலைஞர்களுக்கு காயம் ஏற்படக் கூடாது என்பதில் எம்.ஜி.ஆர். எச்சரிக்கையாக இருப்பார்.
அதையும் மீறி சில நேரங்களில் அசம் பாவிதம் ஏற்பட்டு விடும். ‘அன்னமிட்ட கை’ படத்தில் ‘ஸ்டன்ட்’ கலைஞர்களோடு எம்.ஜி.ஆர். மோதும் சிலம்ப சண்டைக் காட்சி மைசூர் அருகே பாண்டவபுரம் என்ற இடத்தில் படமாக்கப்பட்டது. முன்னதாக, தன்னுடன் சண்டையிடும் கலைஞர்களுக்கு எம்.ஜி.ஆர். ஆலோசனைகளை கூறினார்.
காட்சியை படமாக்க இயக்குநர் ‘ஸ்டார்ட்’ சொன்னதும், எம்.ஜி.ஆர். கையில் இருந்த கம்பு எட்டுதிசைகளிலும் மின்னலாய் சுழன்றது. குச்சியை சுழற் றிக் கொண்டே எம்.ஜி.ஆர். நகர்ந்து வரும் போது, அதைத் தடுத்து சண்டை போட்ட திருமலை என்ற ‘ஸ்டன்ட்’ கலைஞர் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்து விட்டார். இதில் அவரது கட்டை விரலில் பலத்த அடிபட்டு விட்டது. உடனே, படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, அங் கிருந்த தனது குடும்ப டாக்டர் பி.ஆர். சுப்பிரமணியத்தை எம்.ஜி.ஆர். அழைத்து திருமலைக்கு சிகிச்சை அளிக்கச் செய்தார்.
சிலம்பத்தில் முக்கியமானது ‘மாடி’ என்று கூறப்படும் மான் கொம்பு சுழற் றும் கலை. அதிலும் எம்.ஜி.ஆர். தேர்ந்த வர். ‘உழைக்கும் கரங்கள்’ படத்தில் மான் கொம்பு சண்டை அதற்கு உதா ரணம். ஸ்டன்ட் நடிகர்கள் ஜஸ்டினும் மாடக்குளம் தர்மலிங்கமும் எம்.ஜி.ஆருடன் மோதுவார்கள். அவர் களது சிலம்பாட்டத்தை மான் கொம்பால் எம்.ஜி.ஆர். அனாயசமாக தடுத்து விளை யாடுவார்.
இந்தக் காட்சியின் ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு கோணமும் எம்.ஜி.ஆரால் தீர்மானிக்கப்பட்டு படமாக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். சண்டையிடும்போது, ஒட்டு மொத்த தியேட்டரும் எழுந்து ஆரவாரம் செய்யும். படம் வெளியானபோது பல இடங்களில் ரசிகர்கள் உற்சாக மிகுதியால் தியேட்டருக்குள்ளேயே வெடி வைத்த நிகழ்ச்சிகளும் உண்டு. இந்தப் படத்தைபோல மான் கொம்பு சண்டைக் காட்சி வேறு எந்தப் படத்திலும் இடம் பெறவில்லை.
சென்னை ஜெமினி ஸ்டுடியோவில் ‘நீரும் நெருப்பும்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. மணிவண்ணன், கரிகாலன் என்று எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். இரண்டு எம்.ஜி.ஆரும் பிச்சுவா கத்தி மூலம் மோதிக் கொள்ளும் சண்டைக் காட்சி படத்தின் ‘ஹைலைட்.’ இரண்டு பாத்திரங்களும் கத்தியை வீசும் ஸ்டைலே வெவ்வேறு மாதிரி இருக்கும். இந்தக் காட்சியை அற்புதமாக படமாக்கம் செய்ததோடு, காட்சியின் விறுவிறுப்பு மேலும் அதிகரிக்கும்படி ‘எடிட்’ செய்தார் எம்.ஜி.ஆர்.
இந்தக் காட்சி படமாகிக் கொண்டிருந்தபோது, ஜெமினி ஸ்டுடியோ வந்த பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா, படப் பிடிப்பை காண ஆசைப்பட்டார். விஷயம் கேள்விப்பட்டு தர்மேந்திராவை வரச் சொன்ன எம்.ஜி.ஆர்., அவரை வரவேற்று பேசிக் கொண்டிருந்தார். பின்னர், தர்மேந்திராவின் விருப்பத்தை அறிந்து படப்
பிடிப்பை பார்க்க மகிழ்ச்சியுடன் எம்.ஜி.ஆர். அனுமதி அளித்தார். சண்டைக் காட்சியில் எம்.ஜி.ஆரின் வேகத்தை பார்த்து பிரமித்துப் போய்விட்டார் தர்மேந்திரா. எம்.ஜி.ஆர். பயன்படுத்திய பிச்சுவா கத்தியை தொட்டுப் பார்த்து, ‘‘நிஜக் கத்தியிலேயே ஃபைட் பண்றீங்களே’’ என்று ஆச்சரியப்பட்டார். எம்.ஜி.ஆர். படங்களில் சண்டைக் காட்சிகள் மட்டுமல்ல, காட்சியின்போது வரும் வசனங்களும் பெரிதும் பேசப்படும். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் ‘க்ளைமாக்ஸ்’ காட்சிக்கு முன் கடற்கரை ஓரத்தில் மலைப்பாங்கான இடத்தில் எம்.ஜி.ஆருக்கும் நம்பியாருக்கும் கத்திச் சண்டை நடக்கும்.
‘‘இரண்டில் ஒன்று பார்த்து விடுவோம்’’ என்றுகூறி, எம்.ஜி.ஆரை நம்பியார் சண்டைக்கு அழைப்பார். மோத தயாராகும் எம்.ஜி.ஆரை, பூங்கொடி என்ற பாத்திரத்தில் நடிக்கும் கதாநாயகி ஜெயலலிதா பயந்து தடுப்பார். அவருக்கு தைரியம் சொல்லும் வகையில், ‘‘இரு பூங்கொடி, சற்று விளையாடிவிட்டு வருகிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். சொல்லும் பதிலால் தியேட்டரே உற்சாகத்தில் அலறும்.
இந்தியில் தர்மேந்திரா நடித்த ‘யாதோன் கி பாராத்’ படம்தான் தமிழில் ‘நாளை நமதே’ ஆனது. படத்தில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். ஒரு காட்சியில் சங்கர் என்ற பாத்திரத்தில் வரும் எம்.ஜி.ஆரை, நம்பியாரின் மகனாக நடிக்கும் நடிகர் அறைந்து விடுவார். தியேட்டரில் ரசிகர்கள் ஆவேசப்படுவார்கள். அடுத்த சில விநாடிகளில் அந்த ஆவேசம் உற்சாக பெருவெள்ளமாய் மாறும்.
காரணம், பதிலுக்கு அந்த நடிகரை எம்.ஜி.ஆர். அடிப்பார் என்பது மட்டுமல்ல, அதற்கு முன் அவர் சொல்லும் வார்த்தைகள்…. ‘‘எனக்கு கொடுத்துதான் பழக்கம் வாங்கிப் பழக்கம் இல்ல’’ உண்மைதான். எம்.ஜி.ஆருக்கு கொடுத்தே பழக்கம்;
சிலம்பத்தில் முக்கியமானது ‘மாடி’ என்று கூறப்படும் மான் கொம்பு சுழற் றும் கலை. அதிலும் எம்.ஜி.ஆர். தேர்ந்த வர். ‘உழைக்கும் கரங்கள்’ படத்தில் மான் கொம்பு சண்டை அதற்கு உதா ரணம். ஸ்டன்ட் நடிகர்கள் ஜஸ்டினும் மாடக்குளம் தர்மலிங்கமும் எம்.ஜி.ஆருடன் மோதுவார்கள். அவர் களது சிலம்பாட்டத்தை மான் கொம்பால் எம்.ஜி.ஆர். அனாயசமாக தடுத்து விளை யாடுவார்.
இந்தக் காட்சியின் ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு கோணமும் எம்.ஜி.ஆரால் தீர்மானிக்கப்பட்டு படமாக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். சண்டையிடும்போது, ஒட்டு மொத்த தியேட்டரும் எழுந்து ஆரவாரம் செய்யும். படம் வெளியானபோது பல இடங்களில் ரசிகர்கள் உற்சாக மிகுதியால் தியேட்டருக்குள்ளேயே வெடி வைத்த நிகழ்ச்சிகளும் உண்டு. இந்தப் படத்தைபோல மான் கொம்பு சண்டைக் காட்சி வேறு எந்தப் படத்திலும் இடம் பெறவில்லை.
https://youtu.be/7lEo9cJZbXE
சென்னை ஜெமினி ஸ்டுடியோவில் ‘நீரும் நெருப்பும்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. மணிவண்ணன், கரிகாலன் என்று எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். இரண்டு எம்.ஜி.ஆரும் பிச்சுவா கத்தி மூலம் மோதிக் கொள்ளும் சண்டைக் காட்சி படத்தின் ‘ஹைலைட்.’ இரண்டு பாத்திரங்களும் கத்தியை வீசும் ஸ்டைலே வெவ்வேறு மாதிரி இருக்கும். இந்தக் காட்சியை அற்புதமாக படமாக்கம் செய்ததோடு, காட்சியின் விறுவிறுப்பு மேலும் அதிகரிக்கும்படி ‘எடிட்’ செய்தார் எம்.ஜி.ஆர்.
இந்தக் காட்சி படமாகிக் கொண்டிருந்தபோது, ஜெமினி ஸ்டுடியோ வந்த பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா, படப் பிடிப்பை காண ஆசைப்பட்டார். விஷயம் கேள்விப்பட்டு தர்மேந்திராவை வரச் சொன்ன எம்.ஜி.ஆர்., அவரை வரவேற்று பேசிக் கொண்டிருந்தார். பின்னர், தர்மேந்திராவின் விருப்பத்தை அறிந்து படப்
பிடிப்பை பார்க்க மகிழ்ச்சியுடன் எம்.ஜி.ஆர். அனுமதி அளித்தார். சண்டைக் காட்சியில் எம்.ஜி.ஆரின் வேகத்தை பார்த்து பிரமித்துப் போய்விட்டார் தர்மேந்திரா. எம்.ஜி.ஆர். பயன்படுத்திய பிச்சுவா கத்தியை தொட்டுப் பார்த்து, ‘‘நிஜக் கத்தியிலேயே ஃபைட் பண்றீங்களே’’ என்று ஆச்சரியப்பட்டார். எம்.ஜி.ஆர். படங்களில் சண்டைக் காட்சிகள் மட்டுமல்ல, காட்சியின்போது வரும் வசனங்களும் பெரிதும் பேசப்படும். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் ‘க்ளைமாக்ஸ்’ காட்சிக்கு முன் கடற்கரை ஓரத்தில் மலைப்பாங்கான இடத்தில் எம்.ஜி.ஆருக்கும் நம்பியாருக்கும் கத்திச் சண்டை நடக்கும்.
https://youtu.be/i8hovmJnAEQ
MGR படங்களில் ரசிகர்கள் மிகவும் விரும்புவது சண்டைக் காட்சிகள். சிலம்பம், வாள்வீச்சு, சுருள் கத்தி சுழற்றுதல் போன்ற சண்டைக் கலைகளை எம்.ஜி.ஆர். முறைப்படி பயின்றவர். அவர் படங்களில் சண்டைக் காட்சிகளில் வன்முறை, ரத்தம் இருக்காது. சிரித்துக் கொண்டே எதிரிகளை பந்தாடுவதில் எம்.ஜி.ஆருக்கு நிகர் அவர்தான். அதனால்தான் இன்றும் அவர் படங்களின் சண்டைக் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன.
https://youtu.be/jFVkRODvS7Y
எம்ஜிஆர் 100 | 35 -
எம்.ஜி.ஆருக்கு முதுகிலும் கண்!
M.G.R. எந்தப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் தன்னைச் சுற்றி நடப்பதை உன்னிப்பாக கவனித்தபடி இருப்பார். அவர் கவனிப்பது பிறருக்குத் தெரியாது. சில நேரங்களில் தெரிந்தது போல காட்டிக் கொள்ளவும் மாட்டார். ஆனால், தனக்குத் தெரியும் என்பதை பின்னர் பூடகமாக வெளிப்படுத்திவிடுவார். அவரது கூரிய பார்வையில் இருந்து எதுவும் தப்பாது.
திரையுலகில் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரம் மிகவும் கண் டிப்பானவர். அவரிடம் பேசவே பிறர் பயப்படுவார்கள். அப்படிப்பட்டவரிடம் முன்னணிக்கு வந்து கொண்டிருந்த நடிகராக இருந்தபோதும் தனக்கு சரி என்று பட்டதை எம்.ஜி.ஆர். தயங்காமல் சொல்வார். மாடர்ன் தியேட்டர்ஸ் தயா ரித்த ‘சர்வாதிகாரி’ படத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகன். அந்தப் படம் ‘தி கேலன்ட் பிளேடு’ (The gallant blade) என்ற ஆங் கிலப் படத்தின் தழுவல். அதற்கு ‘வீர வாள்’ என்று முதலில் பெயரிடப்பட்டது. கதைக்குப் பொருத்தமாக படத்தின் பெயரை ‘சர்வாதிகாரி’ என்று மாற்றி யதே எம்.ஜி.ஆர்.தான். அதை டி.ஆர். சுந்தரமும் ஏற்றுக் கொண்டார்.
இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் அஞ்சலி தேவி நடித்தார். நடிகை அஞ்சலி தேவி மீது எம்.ஜி.ஆருக்கு மதிப்பு உண்டு. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவ ராக இருந்த நடிகை என்ற பெருமை அஞ்சலி தேவிக்கு உண்டு. அவர் தலை வராக வருவதற்கு எம்.ஜி.ஆர். முக்கிய காரணம். எம்.ஜி.ஆருக்குப் பிறகு 1959-ம் ஆண்டில் நடிகர் சங்கத் தலைவரானார் அஞ்சலி தேவி. ‘சர்வாதிகாரி’ படப்பிடிப் பின்போது ஒரு பாடல் காட்சியில் அஞ்சலி தேவி பம்பரமாக சுற்றிச் சுழன்று தரையில் விழ வேண்டும். அதன்படியே, நடித்து முடித்தார். எல்லாருக்கும் காட்சி திருப்தியாக இருந்தது. டைரக்டரும் ஓ.கே.சொல்லிவிட்டார்.
ஆனால், எம்.ஜி.ஆர். மட்டும் ‘‘மறுபடி யும் ஒரு ‘டேக்’ எடுங்க’’ என் றார். காட்சி நன்றாகத் தானே வந்திருக் கிறது, எதற்காக மறுமுறை எடுக்கச் சொல்கிறார்? என்று யாருக்கும் புரிய வில்லை. எம்.ஜி.ஆரின் வற்புறுத்த லால் காட்சி மீண்டும் படமாக்கப்பட் டது. மறுபடியும் அஞ்சலி தேவி அதேபோல நன்றாகவே நடித்தார். இம் முறை எம்.ஜி.ஆருக்கும் திருப்தி. காட்சிக்கு அவரும் ஓ.கே. சொன்னார். இரண்டு ‘டேக்’கிலும் ஒரே மாதிரிதானே அஞ்சலி தேவி நடித்தார்? எதற்காக மறுபடியும் ‘ரீ டேக்’ எடுக்கச் சொன் னார்? என்று எல்லோரும் எம்.ஜி.ஆரை பார்த்தனர்.
எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே, ‘‘முதல் முறை அஞ்சலியம்மா பம்பரம் போல சுற்றி வரும்போது அவரது பாவாடை குடை போல விரிந்து முழங்கால் வரை ஏறிவிட்டது. படத்தில் விரசமாகத் தெரியும் என்பதால்தான் காட்சியை மறுமுறை எடுக் கச் சொன்னேன்’’ என்று விளக்கம் அளித்தார். எம்.ஜி.ஆரின் கண்ணியத்தை அறிந்து அஞ்சலி தேவி நெகிழ்ந்து போனார். ஒரு காட்சி படமாக்கப்படும்போது நடிகர்களின் நடிப்பு மட்டுமின்றி, கேமரா கோணம், ஒளி அமைப்பு, ஒப்பனை, உடை அமைப்பு என எல்லாவற்றையும் எம்.ஜி.ஆர். நுட்பமாக கவனிப்பார்.
‘மீனவ நண்பன்’ படத்தில் இயக்குநர் ஸ்ரீதரிடம் எம்.ஜி.ஆரின் ஒப்பனையாளர் பீதாம்பரத்தின் மகனும் பிரபல இயக்கு நருமான பி.வாசு உதவி இயக்குநராக பணியாற்றினார். படத்தில் எம்.ஜி.ஆருக் கும் நடிகை லதாவுக்கும் டூயட் பாடலான ‘கண்ணழகு சிங்காரிக்கு விழியிரண்டில் கண்ணி வைத்தேன்...’ பாடல் காட்சி கர்நாடக மாநிலம் மங்களூர் கடற்கரை யில் எடுக்கப்பட்டது. படப்பிடிப்பின் போது பாடலில் ஒரு வரிக்கு எம்.ஜி.ஆர். சரியாக வாயசைக்கவில்லை என்று உதவி இயக்குநர் பி.வாசுவுக்கு தோன்றி யது. இயக்குநரான ஸ்ரீதர் அதை கவனிக்க வில்லை. காட்சியை எடுத்து முடித்ததும் ஸ்ரீதர் ஓ.கே.சொல்லிவிட்டார். ஆனால், பி.வாசுவுக்கு இதில் திருப்தி இல்லை.
எம்.ஜி.ஆருக்கு பின்னே நின்றிருந்த அவர், இயக்குநர் ஸ்ரீதருக்கு ஜாடை காண்பித்து ‘பாடல் வரிகளுக்கு எம்.ஜி.ஆரின் உதட்டசைவு சரியில்லை’ என்று சைகையில் விளக்கினார். ஸ்ரீதர் புரிந்துகொண்டார். எம்.ஜி.ஆரிடம் வந்து, ‘‘அந்தக் காட்சியை மீண்டும் ஒருமுறை படமாக்க வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார். ‘‘எதற்காக?’’ என்று விளக்கம் கேட்டார் எம்.ஜி.ஆர்.!
பலர் முன்னிலையில் மிகப் பெரிய நடிகரான எம்.ஜி.ஆரைப் பார்த்து, ‘உங் கள் வாயசைப்பு சரியில்லை என்று தோன்றுகிறது. அதனால் மீண்டும் ஒரு முறை...’ என்று சொன்னால் நாகரிகமாக இருக்காது. எம்.ஜி.ஆரும் தவறாக நினைத்துவிட்டால் என்ன செய்வது? என்று தயங்கிய ஸ்ரீதர், ‘‘கேமரா ரிப்பேர், காட்சி சரியாக பதிவாகவில்லை’’ என்று சொல்லி சமாளித்தார்.
மீண்டும் குறிப்பிட்ட அந்தக் காட்சியை எம்.ஜி.ஆர். நடித்துக் கொடுத்தார். ஸ்ரீதர், பி.வாசு உட்பட அனைவருக்கும் திருப்தி. அப்போதுதான் எதிர்பாராமல் அந்தக் கேள்வியை எம்.ஜி.ஆர். கேட்டார்.
பி.வாசுவைப் பார்த்து ‘‘என்ன வாசு? காட்சி ஓ.கே.வா? திருப்தியா?’’ என்று சிரித்துக் கொண்டே கேட்டார். வெலவெலத்துப் போய்விட்டார் வாசு. தான் ஸ்ரீதரிடம் ஜாடை காண் பித்தது எம்.ஜி.ஆருக்கு எப்படியோ தெரிந்துவிட்டதே என்று வாசுவுக்கு தர்மசங்கடம். ஸ்ரீதருக்கு வாசு ஜாடை காட் டியதை பக்கவாட்டில் திரும்பியபடி ஓரக்கண்ணால் எம்.ஜி.ஆர். கவனித் திருக்கிறார். அவரது கேள்விக்கு ‘‘ஓ.கே. சார்’’ என்று வாசுவும் வெட்கப் புன்னகையுடன் பதிலளிக்க, அவரைப் பார்த்து மீண்டும் சிரித்தார் எம்.ஜி.ஆர்.!
காட்சி ஏன் மீண்டும் படமாக்கப்படு கிறது என்ற நிலைமையைப் புரிந்து கொண்டு, இயக்குநர், உதவி இயக்குநர் ஆகியோருக்கு திருப்தி அளிக்கும் வகையில் முழு ஒத்துழைப்பு அளித்து மீண்டும் நடித்துக் கொடுத்ததுடன், நடந்தது தனக்கும் தெரியும் என்பதை சூசகமாக பி.வாசுவுக்கு எம்.ஜி.ஆர். உணர்த்திவிட்டார்.
இப்போதெல்லாம் படங்களில் பஞ்ச் டயலாக் என்று பரபரப்பாக பேசப் படுகிறது. பஞ்ச் டயலாக் பேசுவதற்கு முன்னோடியே எம்.ஜி.ஆர்.தான். ‘மர்மயோகி’ படத்தில் எம்.ஜி.ஆர். ஏற்ற பாத்திரத்தின் பெயர் கரிகாலன்.
படத்தில், ‘‘கரிகாலன் குறிவைத் தால் தவற மாட்டான். தவறுமானால் குறிவைக்க மாட்டான்’’ என்று எம்.ஜி.ஆர். பஞ்ச் டயலாக் பேசுவார். சினிமாவிலும் அரசியலிலும் எம்.ஜி.ஆர். வைத்த குறி தவறியதே இல்லை!
http://s30.postimg.org/cn6u6tkj5/FB_...ed_Picture.jpg
Courtesy - Mr.Major Dasan.
THE HINDU
2.4.2016
Dheiva Thaai (1964)
M.G. Ramachandran, B. Saroja Devi, S.V. Sahasranamam, Pandari Bai, S.A. Asokan, C.K. Nagesh, S.N. Lakshmi
One of the biggest hit of 1964, Dheiva Thaai was based on a story idea by Hindu filmmaker Nanabhai Bhatt. The film revolves around MGR, who portrays the role of a CID officer, Maran (this role was inspired by 1960s James Bond film, Dr. No). His widowed mother (Pandari Bai) undergoes many problems, and sacrifices her married life in order to keep a secret. Maran, meanwhile, is working hard, to hunt down a notorious criminal called Baba. It turns out that the criminal he is searching for is, in fact, his own father Karunakaran (S. A. Asokan). His father, previously an inveterate gambler, has taken on the name Baba under various circumstances, and becomes a crook. Baba is also not aware that the officer searching for him is indeed his son, with whom he has lost touch for years. Maran’s mother also does not reveal the secret. It is only in the climax that Maran comes to know the real identity of Baba, and that he is his father. Nambiar portrays the role of a criminal associate of Baba. Comic relief is provided by Nagesh, who plays the role of a talentless musician, trying to teach the art to his students, and also helps the hero in getting information on wanted criminals. The film is loaded heavily with ‘mother sentiment’. Saroja Devi plays the hero’s lover. The screenplay was written by R. M. Veerappan and T. N. Balu, and the dialogue was by a newcomer, destined to create history in Indian cinema: K. Balachander.Music for this film was composed by Viswanathan-Ramamurthi, with many songs becoming hits. Popular numbers include ‘Moondrezhuthil en moochirukkum’ (T. M. Soundararajan), ‘Indha punnagai enna vilai’ (TMS and P. Susheela), ‘Vannakkili’ (TMS and P. Susheela), ‘Oru pennai paarthu’ (TMS) and ‘Kaathalikkathey’ (P. Susheela). Lyrics were by Vaali and Aalangudi Somu.
Interestingly, Joseph Krishna, later the associate of Viswanathan-Ramamurthi in composing, worked as a choreographer-assistant in this film. MGR excelled in his portrayal as the affectionate son and sincere CID officer. Equally impressive was Pandari Bai as the sacrificing mother. S. V. Sahasranamam, noted stage and film star and also producer, plays the senior police officer who takes care of the suffering mother.
Remembered for: The melodious music of Viswanathan-Ramamurthi, impressive performances from MGR, Pandari Bai, and Saroja Devi, and Nagesh for his comedy.
the hindu - 3.4.2016
former admk misiter thiru r.m. Veerappan interview
திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர். திரைத்துறையிலும் அரசியலிலும் எம்ஜிஆரின் நிழலாக இருந்தவர். அரசியல்வாதி, அமைச்சர், சினிமா தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் ஆர்.எம்.வீரப்பன். திறமை யான நிர்வாகி என்று பலராலும் பாராட்டப்பட்ட இவர், அரசியலில் உச்சத்தையும் அதல பாதாளத்தையும் பார்த்த பழுத்த அனுப வசாலி. எம்ஜிஆர் கழகத்தின் தலைவராக இருக்கும் ஆர்.எம்.வீரப்பனை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினோம். அன்றைய அரசியல், இன்றைய அரசியலின் போக்கு, சட்டப்பேரவைத் தேர்தல் நிலவரம் என பல விஷயங்களை முன்வைத்தோம். அவரது விரிவான பேட்டியில் இருந்து..
திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் நீங்கள். திராவிட இயக்கத்தோடு உங்களுக்கு தொடர்பு ஏற்பட்டது எப்படி?
பெரியாரின் ‘குடிஅரசு’ பத்திரிகைக்கு முகவராக இருந்தேன். பெரியாரோடு தொடர்பு ஏற்பட்டு அவருடன் பயணம் செய்தபோது பயணச் செலவு, புத்தகங்கள் விற்ற பணம் ஆகியவற்றை கணக்கு எழுதி மீதி இருந்த 1,100 ரூபாயை பெரியாரிடம் கொடுத்தேன். அந்த காலத்தில் அது பெரிய தொகை. என்னை ஏற, இறங்க பார்த்த பெரியார், ஈரோட்டுக்கு அழைத்தார். அதை ஏற்று அங்கு சென்று பணியாற்றினேன்.
நாடகத்தின் மீது உள்ள ஈடுபாடு காரணமாக கே.ஆர்.ராமசாமியின் நாடகக் கம்பெனியில் சேர விரும்பினேன். பெரியாரிடம், என் பெற்றோருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறிவிட்டு தஞ்சாவூர் சென்று நாடகக் கம்பெனியில் போய் சேர்ந்துவிட்டேன். கே.ஆர். ராமசாமியின் நாடகக் கம்பெனிக்காக அண்ணா எழுதிய ‘ஓர் இரவு’ நாடகத்தை நான்தான் காஞ்சிபுரம் சென்று அண்ணாவிடம் இருந்து வாங்கி வந்தேன். அண்ணா அடிக்கடி தஞ்சாவூர் வருவார். அப்போது அவரிடம் நெருக்கம் உண்டானது. பின்னர், எம்ஜிஆரோடு தொடர்பு ஏற்பட்டு அவரோடு இணைந்தேன்.
அன்றைய அரசியலுக்கும் இப்போதைய அரசியலுக்கும் என்ன வித்தியாசத்தை பார்க்கிறீர்கள்?
காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், போன்றவர்கள் நெறிசார்ந்த அரசியல் நடத்தினர். காமராஜர் கடும் உழைப்பாளி. அண்ணா மனிதநேயம் மிக்கவர். எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் குணம் கொண்டவர். தன் கட்சித் தொண்டர்களை சகோதர பாசத்தோடு ‘தம்பி’ என்று அழைத்த தலைவர் அண்ணா.
எம்ஜிஆர் சிறந்த மனிதாபிமானி. கொடை உள்ளம் கொண்டவர்.
நீங்கள் எம்ஜிஆரோடு நெருக்கமாக இருந்தவர். இப்போது, விஜயகாந்தை கறுப்பு எம்ஜிஆர் என்று கூறுகிறார்களே, அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
எம்ஜிஆர் மக்கள் செல்வாக்கு பெற்ற நடிகர். திமுகவில் சேர்ந்து அக்கட்சிக்காக உழைத்து படங்களில் திமுக கொடியையும் சின்னத்தையும் காட்டி மக்கள் மனதில் பதிய வைத்தார். ஒருமுறை திருநெல்வேலி பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எம்ஜிஆரின் 2248 என்ற பதிவு எண் கொண்ட பிளைமவுத் காரில் அண்ணா சென்றார். முன் சீட்டில் அண்ணாவும் பின் சீட்டில் எம்ஜிஆரும் அமர்ந்திருந்தனர். கோவில்பட்டியில் டீ குடிப்பதற்காக ஒரு கடை முன்பு கார் நின்றது. காரையும் காரில் பறந்து கொண்டிருந்த திமுக கொடியையும் பார்த்த மக்கள், உள்ளே அண்ணா இருப்பதை அறியாமல் ‘எம்ஜிஆர் கொடி... எம்ஜிஆர் கொடி..’ என்று கோஷமிட்டு காரை சூழ்ந்துகொண்டனர்.
பின்னர், அண்ணாவிடம் ஒரு நண்பர் இதுபற்றி குறைபட்டபோது, ‘‘புரியாமல் பேசறீங்களே. இவ்வளவு பாப்புலாரிட்டியும் எம்ஜிஆர் மூலம் திமுகவுக்குத்தானே வருது? லாபம் கட்சிக்குத்தானே’’ என்றார்.
1967-ல் அண்ணா தலைமையில் திமுக வெற்றி பெற்றபோது தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று எம்ஜிஆர் கூறியதால் அவரை சிறுசேமிப்புத் துறை தலைவராக நியமித்தார். அந்த அளவுக்கு அண்ணாவிடமும் மக்களிடமும் செல்வாக்கு பெற்றவராக எம்ஜிஆர் விளங்கினார்.
நான் தயாரித்த ‘ரிக் ஷாக்காரன்’ படத்தின் மூலம் எம்ஜிஆருக்கு இந்தியாவிலேயே சிறந்த நடிகர் என்ற ‘பாரத்’ விருது கிடைத்தது. எம்ஜிஆரின் மறைவுக்குப் பின் அவரது சேவைகளுக்காக ‘பாரத ரத்னா’ பட்டமும் வழங்கப்பட்டது. இந்த இரண்டு விருதுகளையும் பெற்ற ஒரே நடிகர் எம்ஜிஆர் தான். எம்ஜிஆருக்கு யாருமே நிகராக முடியாது. விஜயகாந்த்தை கறுப்பு எம்ஜிஆர் என்று அவர்களாக சொல்லிக் கொள்கிறார்களே தவிர, அவர் எம்ஜிஆர் ஆக முடியாது.
‘‘எம்ஜிஆர் புரியாமல் பேசியதை மக்கள் ஏற்கவில் லையா? அதுபோல விஜயகாந்த் பேசுவதையும் மக்கள் ஏற்பார்கள்’ என்று பொதுக்கூட்டம் ஒன்றில் பிரேமலதா பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளது பற்றி?
எம்ஜிஆருக்கு தொண்டையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் குரல் பாதிக்கப்பட்டது. என்றாலும் கடுமையான பயிற்சிகள் எடுத்துக்கொண்டு பெருமளவில் பேச்சுத் திறனை பெற்றார். அதன் பிறகும் பல படங்களில் நடித்து அவை வெற்றிகரமாக ஓடின. 1971-ம் ஆண்டு தேர்தலில் திமுகவுக்கு பிரச்சாரம் செய்தார். பின்னர், தனியாக கட்சி தொடங்கி கூட்டங்களில் பேசி 3 முறை ஆட்சியை பிடித்தார். அவரது பேச்சை புரிந்துகொண்டுதான் மக்கள் அவருக்கு ஆதரவாக இருந்து வெற்றி பெறச் செய்தனர். எம்ஜிஆருக்கு ஏற்பட்ட குரல் பாதிப்பையும் விஜயகாந்த் பேசுவதையும் ஒப்பிடக்கூடாது.
கடந்த 30/03/2016 (புதன்கிழமை ) அன்று காலை 8 மணி அளவில் , திருவள்ளூர்
துளசி அரங்கில் , 25ம் ஆண்டு துவக்க விழாவில் ,மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த
"குடும்பத்தலைவன் " திரைப்படம் இலவசமாக காண்பிக்கப்பட்டது.
அது பற்றிய சுவரொட்டி விளம்பரம் நண்பர்களின் பார்வைக்கு
கடந்த 25 ஆண்டு காலமாக ,திருவள்ளூர் துளசி அரங்கில் ஆண்டு விழாவின்போது
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படம் இலவசமாக திரையிடப்படுவது
வழக்கமாக அரங்க நிர்வாகிகள் கடைபிடித்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது .
தகவல் மற்றும் சுவரொட்டி உதவி :ஓட்டேரி திரு.பாண்டியன் .
http://i66.tinypic.com/1z3mbsw.jpg
http://i66.tinypic.com/2jbpk5v.jpg
சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் படங்கள் ஒளிபரப்பு
நேற்று (02/04/2016) காலை 11 மணிக்கு நிருத்திய சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். நடித்த
"பாக்தாத் திருடன் "
http://i63.tinypic.com/2dv0s50.jpg
இன்று காலை 11 மணிக்கு (03/04/2016) மக்கள் திலகம் எம்.ஜி;ஆர். நடித்த
"கண்ணன் என் காதலன் "
http://i63.tinypic.com/2j5bcw4.jpg
இன்று இரவு 7 மணிக்கு நடிக மன்னன் எம்.ஜி.ஆர். நடித்த "மன்னாதி மன்னன் "
http://i64.tinypic.com/rk1m6q.jpg
இன்று (03/04/2016) சன் டிவியில் பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பான " நட்சத்திர
சங்கமம் " நிகழ்ச்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பற்றி நடிகர் /நடிகைகள்
புகழாரம் .
நடிகை சரோஜாதேவி : மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களுடன் அவருடைய
நடிப்புக்கு ஏற்ப பல வெற்றிப்படங்களில் ஈடு கொடுத்து நடித்து புகழ் பெற்றேன்.
மனிதராக அவதரித்து , நடித்து பின்,தமிழக முதல்வராகி செல்வாக்கு மிக்க
தலைவராகி, தெய்வமாக ஆகிவிட்டார்.
நடிகை சாரதா : மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுடன் ஒரே படமான
" நினைத்ததை முடிப்பவன் " திரைப்படத்தில் நடித்தேன் . அதில் இடம் பெறும்
"பூமழை தூவி " பாடல் , இன்றும் திருமண நிகழ்ச்சிகளில் பாடப்பட்டு ரசிகர்களை
கவர்ந்து வருகிறது . அவருடைய தங்கையாக இந்த படத்தில் நடித்ததை
நான் பெருமையாக கருதுகிறேன் .
நடிகை விஜயகுமாரி : மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுடன் பல படங்களில்
ஜோடியாக நடிக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் என் தம்பி எஸ்.எஸ்.ஆர். மனைவியுடன் ஜோடியாக நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார் .
ஆனால் பல படங்களில் அவருக்கு தங்கையாக நடித்துள்ளது எனக்கு கிடைத்த
பாக்கியம் .
நடிகர் வடிவேலு : அன்பே வா திரைப்படத்தில் லவ் பேர்ட்ஸ், தாயை காத்த
தனயன் படத்தில் - காவேரி கரை இருக்கு , நீதிக்கு பின் பாசம் படத்தில் - மானல்லவோ கண்கள் தந்தது , உரிமைக்குரல் படத்தில் - விழியே கதை எழுது
ஆகிய பாடல்களை பாடி, அபிநயம் பிடித்து , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படத்தின்
பாடல்கள் உருவான விதம்,இசைஅமைப்பு . நடித்த விதம் குறித்தும் சிலாகித்து
பேசினார்.
மக்கள் திலகத்துடன் இணைந்தும் மற்ற கதா பாத்திரத்தில் நடித்த அந்த கால நடிகைகள் திரளாககலந்து கொண்ட நட்சத்திர சங்கமம் என்ற நிகழ்ச்சியை சன் டிவியில் இன்று ஒளி பரப்பினார்கள்
இன்று நடிகைகளின் தோற்றம் வயதாகிவிட்டதின் விளைவாக உருவத்தில் மாற்றம் இருந்தாலும் உள்ளதால் இளமையாக இருப்பதை காண முடிந்தது . குறிப்பாக நடிகைகள் சரோஜாதேவி -விஜயகுமாரி - சாரதா மூவரும் மக்கள் திலகத்தை பற்றி உயர்வாக குறிப்பிட்ட விதம் எல்லோரையும் மனம் கவர்ந்தது .நடிகைகளை நடிகர் வடிவேலு பேட்டி கண்டு மக்கள் திலகத்தின் பாடல்களை பாடிய விதம் வெகுவாக கவர்ந்தது .
நிகழ்ச்சியை காணும் போது மக்கள் திலகத்துடன் நடித்த கீழ் கண்ட நடிகைகள் இடம் பெற்ற படங்கள் நினைவிற்கு வந்தது . இனிமையான காட்சிகள் பாடல்கள் மறக்க முடியாதது .
எம்.என் ராஜம் - நாடோடி மன்னன்
சரோஜாதேவி - நாடோடி மன்னன்
விஜயகுமாரி - காஞ்சித்தலைவன்
ஜோதிலட்சுமி - பெரிய இடத்து பெண்
ஷீலா - பாசம்
பாரதி - நாடோடி
வாணிஸ்ரீ - கண்ணன் என் காதலன்
லதா - உலகம் சுற்றும் வாலிபன்
ஜெயசித்ரா - நவரத்தினம்
சாரதா - நினைத்ததை முடிப்பவன்
காஞ்சனா - பறக்கும் பாவை
சி ஐ டி சகுந்தலா - இதய வீணை
வெண்ணிற ஆடை நிரமலா - ரகசிய போலீஸ் 115