https://uploads.tapatalk-cdn.com/201...022c95e92d.jpg
https://uploads.tapatalk-cdn.com/201...1bad4fec8b.jpg
https://uploads.tapatalk-cdn.com/201...43ff9b8239.jpg
Printable View
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 160– சுதாங்கன்.
http://www.dinamalarnellai.com/site/...nam_poster.jpg
தயாரிப்பாளர், நடிகர் கே. பாலாஜி எடுத்த `தங்கை’ படம்தான் சிவாஜி, பாலாஜி இணைப்பில் உருவான முதல் படம்!
சிவாஜியும், கே.ஆர். விஜயாவும் ஜோடி! படத்திற்கு இசை எம்.எஸ். விஸ்வநாதன்!
பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன்!
வழக்கம் போல் பாடல்களும் படத்தின் பெயரை சொன்னது!
படமும் சென்னையில் அப்போதிருந்த சித்ரா தியேட்டரில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.
1968ல் வந்த சிவாஜியின் படங்கள் ‘திருமால் பெருமை’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘என் தம்பி’, ‘தில்லானா மோகமாம்பாள்’, ‘எங்க ஊரு ராஜா’, ‘லட்சுமி கல்யாணம்’, ‘உயர்ந்த மனிதன்’.
தன் புராணப் படங்களில் சைவத்திற்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் ஏ.பி. நாகராஜன் என்ற குற்றச்சாட்டை மறைக்க வைணவத்திற்காக அவர் எடுத்த படம் தான் திருமால் பெருமை!
திருமாலின் பெருமைகளையும், குறிப்பாக ஆழ்வார்களின் பெருமைகளை சொன்ன படம் இது!
சிவாஜியின் தொழில் அர்ப்பணிப்பைப்பற்றி பலர் சொல்லியிருக்கிறார்கள்.
இந்த படத்தில் திருமாலாக வந்த நடிகர் சிவகுமார் சிவாஜியின் ஈடுபாட்டை தன்னுடைய `இது ராஜபாட்டை அல்ல’ புத்தகத்தில் பதிவு செய்திருப்பார்.
இந்த படத்தில் சிவாஜிக்கு ஒரு பாத்திரம் திருமங்கை ஆழ்வார்!
அரங்கனுக்கு கோயில் கட்ட தன் செல்வத்தை எல்லாம் செலவழிப்பான் திருமங்கை மன்னன்!
பொருள் குறைந்த போது அரங்கனுக்காக கொள்ளையடிக்கவும் திருமங்கை மன்னன் தயங்கவில்லை.
திருமங்கை மன்னனை நல்வழிப்படுத்த திருமால் ஒரு திருமண கோலத்தில் வருவார், ஒரு எளிய மனிதனாக, மாப்பிள்ளையாக!
அந்த திருமண கோஷ்டியை வழிமறித்து கொள்ளையடிப்பான் திருமங்கை மன்னன்! அவர்களிடமிருந்து எல்லாப் பொருட்களையும் கொள்ளை யடிப்பான்! ஆனால் மாப்பிள்ளை காலில் போட்டிருந்த மெட்டியை மட்டும் கழற்ற வராது.
மாப்பிள்ளையாக வந்திருந்த திருமால், முடிந்தால் நீயே கழற்றி எடுத்துக்கொள் என்பார்.
கையால் கழற்ற முடியாதபோது அந்த மாப்பிள்ளையின் காலைத் தான் வாயில் வைத்து தன் பல்லால் அந்த மெட்டியை கழற்ற முயல்வான் திருமங்கை மன்னன்!
இந்த காட்சியை சென்னை பல்லாவரம் அருகே உள்ள திருநீர்மலைப்பகுதியில் படமாக்கினார் ஏ.பி.என்.
அசுத்தமான வெட்டவெளி பகுதியில் படப்பிடிப்பு! சிவகுமார் தன்னைவிட வயதில் மிகவும் இளைய நடிகர்! அந்தக் காட்சியை டூப் போட்டு கூட எடுத்திருக்கலாம். ஆனால் சிவாஜி அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவேயில்லை.
வெறுங்காலோடு அந்த அசுத்தமான வெட்டவெளியில் நடந்து வந்த சிவகுமாரின் காலை எடுத்து தன் வாயில் வைத்துக் கொண்டு இயல்பாக கடிக்க ஆரம்பித்தாராம் சிவாஜி கணேசன்!
சிவாஜி தன் காலை தொட வருகிறார் என்றதும் சிவகுமார் பதறிப்போனாராம்.
`டேய்! இது நடிப்புடா! அப்படி நடிச்சாத்தான் இயல்பா இருக்கும்’ என்று தைரியம் சொன்னாராம் சிவாஜி!
சைனா யுத்த நிதிக்காக நட்சத்திர இரவு நடத்தி நிதி வசூலிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதற்காக சிவாஜி, ஸ்ரீதரை அணுகினார்கள்.
`நிகழ்ச்சி என்ன?’ என்பதைப் பற்றி சிவாஜியும், ஸ்ரீதரும் பேசினார்கள்.
சிவாஜி, ஜெமினி, ஏவி.எம். ராஜன், முத்துராமன், வி.கே.ஆர், நாகேஷ், கே.ஆர். விஜயா, சவுகார் ஜானகி, ஜெயலலிதா, சாவித்திரி, மணிமாலா, மனோரமா, சந்தியா என்று ஒரு பெரிய பட்டியல்.
இவர்கள் எல்லோரும் பங்குபெறும் ஒரு மணி நேர நாடகம் வேண்டும். பத்மினி நடனம். எம்.எஸ். விஸ்வநாதன் இன்னிசைக் கச்சேரி. ஜெமினி, சாவித்திரி பங்குபெறும் ஓர் இருபது நிமிட நாடகம்.
இப்படி நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஸ்ரீதர் தன் உதவியாளர் கோபுவை அழைத்தார். `நீ இன்னும், இரண்டு மூன்று நாட்கள் இந்த பக்கம் தலை காட்டக்கூடாது. இந்த எல்லா நடிகர்களையும் வைத்து ஒரு மணி நேரத்தில் நகைச்சுவை நாடகம் எழுதிக் கொண்டு வா. அப்படியே ஜெமினி, சாவித்திரிக்கு ஒரு சின்ன நாடகம் தயார் செய்து கொண்டு வந்து கொடு’ என்றார்.
உடனே கோபு திருவல்லிக்கேணியில் இருந்த தன் மாமனார் வீட்டு மொட்டை மாடியில் உட்கார்ந்து நாடகம் எழுத ஆரம்பித்தார்.
ஒரு தகப்பனுக்கு நான்கு பெண்கள். இரண்டாவது பெண்ணை அவள் காதலன் (கதாநாயகன்) பெண் கேட்டு வர, மற்ற பெண்களுக்கும் வரம் தேடி வந்தால்தான் அவர்களது கல்யாணம் நடக்கும் என்று உறுதியுடன் கூறுவார் பெண்ணைப் பெற்றவர்.
காரணம் நாகு பெண்களுக்கும் ஒன்றாக ஒரே பந்தலில் கல்யாணத்தை நடத்துவதாக திருப்பதி பெருமாளிடம் வேண்டிக் கொண்டதாகக் கூறுகிறார். நான்கு பெண்கள், அவர்களின் அப்பா, அம்மா, நான்கு மாப்பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து பத்து நடிகர்களுக்கு பாத்திரங்கள் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் ஒரே மூச்சில் எழுதினார் கோபு!
`கலாட்டா கல்யாணம்’ நாடகம் முழுமையாக அமைந்துவிட்டது.
ஜெமினி, சாவித்திரிக்கு நவீன ‘துஷ்யந்தன் சாகுந்தலை’ நாடகம் எழுதி எடுத்துக்கொண்டு சிவாஜி, ஸ்ரீதரிடம் படித்துக் காண்பித்தார் கோபு.
சிவாஜி நன்றாக ரசித்தார். அவருக்கு நாடக அனுபவம் அதிகம் என்பதால், எல்லா நடிகர், நடிகைகளையும் நன்கு வேலை வாங்கி ஒத்திகையில் நன்றாக நடிக்க வைத்தார். நட்சத்திர இரவு ஊர் ஊராக நடக்க ஆரம்பித்தது.
முதலில் `கலாட்டா கல்யாணம்’ நாடகத்துக்கு பெரிய கைதட்டல்!
திருச்சியில் அதைவிட அதிகம்!
சேலத்தில் பட்டையை கிளப்பி விட்டார்கள்! அவ்வளவு அப்ளாஸ்!
சேலத்தில் அந்த நாடக இடைவேளையின்போது சிவாஜி, கோபுவிடம், ‘இந்த நாடகத்தை என் சொந்த கம்பெனி மூலமாக திரைப்படமாக எடுக்கப்போகிறேன். கதை உரிமையை யாருக்கும் கொடுத்து விடாதே’ என்றார்.
நட்சத்திர இரவு இப்படி இனிதே முடிந்த பிறகு, சிவாஜியின் தம்பி சண்முகம் `கலாட்டா கல்யாணம்’ படப்பேச்சை கோபுவிடம் எடுத்தார்.
`பி.மாதவனை டைரக்ட் செய்ய சொல்கிறேன். திரைக்கதைக்கு தகுந்த மாதிரி கதையை தயார் செய்து கொள்’ என்றார்.
கோபு சண்முகத்திடம், `மாதவனும் என் நண்பர்தான். இருந்தாலும் நானும் சி.வி. ராஜேந்திரனும் இரண்டு படங்கள் ஒன்றாகச் செய்திருக்கிறோம். நீங்கள் தைரியமாக ராஜேந்திரனையே டைரக்ட் செய்ய சொல்லுங்கள். நகைச்சுவை கெடாமல் படம் எடுத்துத் தருவார்’என்றார்.
சிவாஜியும் ` அந்த பயகிட்ட எனக்கும் நம்பிக்கை இருக்கு’ என்றார்.
`கலாட்டா கல்யாணம்’ சிவாஜி பிலிம்ஸ் கண்காணிப்பில், ராம்குமார் பிலிம்ஸ் தயாரித்து சிவாஜி, நாகேஷ், ஏவி.எம்.ராஜன், கோபாலகிருஷ்ணன், ஜெயலலிதா, தங்கவேலு, சுந்தரிபாய், சோ, வி.எஸ்.ராகவன், சீதாலட்சுமி என்றொரு பெரிய நடிகர் பட்டாளமே படத்தில் நடித்தது.
இந்த படத்தில்தான் சிவாஜியும், ஜெயலலிதாவும் முதல் முறையாக ஜோடியாக நடித்தார்கள்.
(தொடரும்)
அன்புள்ள செந்தில்வேல் சார்,
சங்கிலி, ரிஷிமூலம், திரிசூலம் மற்றும் நடிகர்திலகத்தின் திரைப் படங்களின் விளம்பர வரிசை செம அட்டகாசம். அதிலும் ரிஷிமூலம் விளம்பரமெல்லாம் ரொம்ப ஆவலுடன் எதிர்பார்த்தவை. நம் திரியில் இதுவரை அறவே இடம் பெறாதவை. பதித்தமைக்கு மிக்க நன்றி.
இதுபோலவே நம் திரி அறவே கண்டிராத விளமபரம் 1975 துவக்கத்தில் வெளியான 'மனிதனும் தெய்வமாகலாம்' மற்றும் 1977 -ல் வெளியான 'நாம் பிறந்த மண்'. இவை உங்களிடம் இருந்தால் கண்டிப்பாக பதிவிடவும்.
மிக்க நன்றிகளுடன்
ஆதி.
http://i1028.photobucket.com/albums/...ps1vxgvr2c.jpg
நாங்கள் அரங்கம் சென்று ஆர்ப்பாட்டத்துடன் காண விரும்பிய அய்யனின் காவியங்களை
அரங்கமைத்துக் காண வைக்கிற
"நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பு"க்கு அதன் ஆறாம் பிறந்தநாளில்
அன்பான நன்றி.
"அய்யா நடிகர் திலகத்தை
இல்லத்தில் படமாக வைத்திருக்கிறோம்.
உள்ளத்தில் பாடமாக வைத்திருக்கிறோம்."
- என்று நான் வெள்ளைத் தாளில் எழுதியதை
உள்ளத் தாளில் நிரந்தரமாய் எழுதிக் கொண்ட
எமது வழிகாட்டிகள்...
அய்யா திரு. ஒய். ஜி. மகேந்திரா,
அய்யா திரு. முரளி ஸ்ரீநிவாஸ்,
அய்யா திரு. ராகவேந்திரா...
ஆகியோர் உள்ளிட்ட அய்யனின் பக்தர்களுக்கு
நன்றி.
அருமையான விழாவை அய்யனுக்கு அர்ப்பணித்த
சிவாஜி பக்தன் அண்ணன் குரு அவர்களுக்கு
நன்றி.
தந்தை சொல் மந்திரமென,
அய்யனை நினைந்துருகும் நாமே அன்புச் சொந்தங்களென...
உயர்வு வாழ்க்கை வாழும் தங்கத் தளபதி அண்ணன் ராம்குமார் அவர்களுக்கு நன்றி.
பொன்விழாப் பூரிப்பில் புனிதர் நடிகர் திலகத்தை நினைந்துருகிய அய்யா சி. வி. ராஜேந்திரன் அவர்களுக்கு நன்றி.
*****
சந்தர்ப்பவசத்தால் குடித்து விட்டுப் பாடுவதாய்
ஒரு காலத்தில் வெண் திரைகள் காட்டிய கதாநாயகர்களில் நல்லவர்களைத் தேடினோம்.
"அந்த ஊரில் பிறந்தேன், இந்த ஊரில் வளர்ந்தேன்" என்றொரு கதாநாயகர் பாடினார்.
'இதற்கு மேல் நடிப்பை யாரும் இம்சை செய்ய முடியாது' என்று நம்மை எண்ண வைக்கும் அந்த
வாயசைப்பையும் சகித்து, அவர்தான் நல்லவரென்று நினைத்திருந்தோம்.
பிறகொரு கதாநாயகரை வெண்திரை காட்டியது.
போலியோ சொட்டு மருந்து போல் இரண்டு சொட்டு மதுத் திரவம் குடித்து, அது உள்ளே போய்
உறங்கும் மனசாட்சியை எழுப்பி விட, எழும்பிய
மனசாட்சி ஏழெட்டு உருவமாய்ப் பிரிந்து...
"குடிக்கலாமா.. நீயெல்லாம் மனுஷனா..? இது தகுமா? உருப்படுவியா?" என்று வண்ண வண்ணமாய்க் கேள்வி கேட்க..
வாழ்வின் தளங்களில் இயல்பாய் இயங்குகிற
மனிதனுக்கும், தனக்கும் சந்திரமண்டல தூரம்
இடைவெளி வைத்திருந்த அந்த கதாநாயகரே
நல்லவரென்று நினைத்துக் கொண்டோம்.
ஒரு இயக்குநர் வந்தார்.
அனுதினமும் குடித்தாலும், விலை மாதுவோடு ஆட்டம் போட்டாலும், வாழ்வின் விரைவுப் போக்கோடு தன்னையும் இழைத்துக் கொண்டு
ஒரு முரட்டு வாழ்க்கை வாழ்கிற "ராஜா" என்கிற
மனுஷனுக்குள்ளிருக்கும் உன்னதமான மனசை,
நல்லதையே சுட்டிக் காட்டும் அவன் மனசாட்சியை
நமக்கெல்லாம் எடுத்துக் காட்டி, இவன்தான் நல்லவன் எனும் நீதி தந்தார்.
ஆம். "நீதி" தந்தார்... திரு. சி. வி. ராஜந்திரன்.
தன்னுள் 'சி'வாஜியை 'வி'தைத்துக் கொண்ட
ராஜேந்திரன்.
*****
வெற்றி சிம்மாசனங்களுக்குப் பிரியப்பட்டு அதை அடைந்து ஆட்சி செய்த திறமை இயக்குநர்கள் உண்டு.
அமர்ந்திருக்கும் நாற்காலியையே சிம்மாசனமாக்கிக் கொள்ளும் திறமை அய்யா
சி. வி .ஆர் அவர்களைப் போன்ற சிலருக்கே உண்டு.
*****
அய்யனுக்கு ரசிகராயிருந்து, அவரது திறமை புரிந்து படம் தந்தவர்கள் பலருண்டு.
ஆனால், அய்யனின் ரசிகராகயிருந்து அவரது
ரசிகர்களுக்கெனவே படம் தர ஒரே ஒரு சி. வி. ஆர் மட்டுமே உண்டு.
*****
ஒரு அழகான இளம்பெண் வயிற்றுப் பிழைப்பிற்காக ஒரு படம் காட்டும் கருவியில் படம்
காட்டிக் கொண்டு ஆடிப் பாடுகிறாள்.
அய்யா சி. வி. ஆர் அசட்டையாய் அணுகியிருந்தால் அதில் தேவையற்ற குப்பையைக் காட்டியிருக்கலாம்.
ஆனால், அவர் தேவையுள்ள தூய்மையைக் காட்டினார்.
கர்மவீரர் காமராஜர் எனும் தூய்மையைக் காட்டினார்.
"கர்மவீரர் பக்கம் நிற்கும் சிவாஜி பாருங்க" என்று
நம் தலைவனைக் காட்டினார்.
அழகு கூட்டினார்.
*****
"என் மகன்" வந்த பிறகு எத்தனையோ அரசியல் காட்சிகள் மாறி விட்டன.
ஆனால், எல்லாக் காலங்களிலும், எல்லா மேடைகளிலும்...
நல்லவர்களின் விரக்திக் கண்ணீர் துடைக்க வல்ல வெற்றி விரலாக...
அரசியல் பொய்களையெல்லாம் பொசுக்க வந்த
ஒரு நெருப்புக் குரலாக...
"நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா ?" தான்.
மாறவேயில்லை.
*****
"உனக்காக நான்" படத்தில் ஒரு கட்டம்.
தானும், தன் நண்பனும் ஒரே மாதிரியான உடை
அணிந்திருக்கும் ஆச்சரியத்தைத் தொடரும்
உரையாடலில், அய்யா நடிகர் திலகம் கைக்கடிகாரத்தின் முட்களை உதாரணம் காட்டி
ஒரு அருமையான தத்துவம் சொல்வார்.
நண்பரான ஜெமினி கிண்டலாகக் கேட்பார்.. "இதை நீயா சொல்றியா.. இல்ல.. யாருகிட்ட இருந்தாவது காப்பியடிச்சியா?"
ஒரு குறும்பான கோப விழி உருட்டலோடு அய்யா
நடிகர் திலகம் சொல்வார்... "யாரு.. நானா?.. போடா.. நான் எந்தப் பயலையும் காப்பியடிக்க மாட்டேன்".
" நான் எந்தப் பயலையும் காப்பியடிக்க மாட்டேன்"
என்று எங்களய்யன் உச்சரிக்கும் தொனியில்
" எல்லாப் பலரும் என்னைத்தான் காப்பியடிக்கிறான்" என்பது ஒளிந்திருக்கும்.
அய்யா சி. வி. ஆருக்கும், நமக்கும் மட்டுமே
அது புரிந்திருக்கும்.
*****
அய்யா சி. வி. ஆருக்கும், அவரது ஐம்பதாண்டுத்
திறமைக்கும் நன்றி.
அய்யனோடு அவர் கொண்ட சிநேகிதத்துக்கு
நன்றி.
அய்யனின் ரசிகனென்று வெளிப்படுத்தத் தயங்காத அந்த வெள்ளை மனசுக்கு நன்றி.
எல்லாக் காலங்களிலும் எங்கள் உற்சாகத்திற்கும்,
உத்வேகத்திற்கும், மன நிறைவுக்கும் காரணமாய்த் திகழும் எங்கள் நடிகர் திலகத்திற்கு
நன்றி.
http://i58.tinypic.com/o0ov20.jpg
அன்பு நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. நமது மய்யம் இப்போது பழையபடி நேரிடையாக ஓப்பன் ஆகிறது. நம் நண்பர்கள் பலர் நேரிடையாக வர இயலாததால் மய்யம் சற்று பொலிவிழந்து காணப்பட்டது. இப்போது நிலைமை சரியாகிவிட்டது போல் தெரிகிறது. வழக்கம் போல பழையபடியே நேராக மய்யத்தில் இணையலாம்.
அனைத்து நண்பர்களும் பழையபடி கலந்து கொண்டு நம் இறைவனின் புகழ் பாடும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி!
வாசு சார்பழையபடி மய்யம் இணையதளத்திற்கு வருகை தரக்கூடிய வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. ஆனால் இங்கு எங்களுக்கு இன்னும் சரியாகவில்லை. விரைவில் இது சரியாகி விடும் என நம்புகிறேன்.
ஆதவன் ரவிதங்களைப் பாராட்ட வேண்டும். ஆனால் எப்படி.. மொழி தெரியாமல், வார்த்தை கிடைக்காமல் தவிக்கிறேன். மிக அருமை. நிகழ்ச்சியின் தொகுப்புரையா அல்லது சுவாரஸ்யமான இலக்கியமா எவ்வாறு பாராட்டுவது..ஒரே வார்த்தை. அருமை.
மோட்டார் சுந்தரம் பிள்ளை- 26/01/1966.
ஒரு லாரி டிரைவர் ,அமெரிக்காவில், இரு குடும்பங்களை இரு நகரங்களில் ,ஒருவருக்கு தெரியாமல்,மற்றதை வைத்திருந்து, அவர் ஒரு விபத்தில் இறந்து விட,இரு மனைவியரும் ,இழப்பீடு கோரி ,காப்பீட்டு நிறுவனத்தை அணுகிய பிறகே உண்மை தெரிந்தது என்ற பர பரப்பான உண்மை கதையை, "The Remarkable Mr .Penny Packer" என்ற பெயரில் நாடகமாகவும்,பிறகு இதே பெயரில் ஹாலிவுட் படமாகவும் வந்து வெற்றி கண்டது.
வேப்பத்தூர் கிட்டு என்ற ஜெமினி கதை இலாகா எழுத்தாளர், இதை வாசனுக்கு சிபாரிசு செய்து, திரைக்கதை அமைத்தார். இதில் நடிக்க ,நடிகர் திலகமே சரியானவர் என்று முடிவு செய்து,அவரை 1962இல் அணுகிய போது ,என்ன காரணத்தாலோ மறுத்து விட்டார். வாசன் வேறு வழியின்றி, அசோக் குமாரை வைத்து, க்ருஹஸ்தி என்ற பெயரில் ஹிந்தியில் படமாக்கி வெற்றி கண்டார்.இந்த படத்தை பார்த்த சிவாஜி ,இதில் நடிக்க ஒப்புதல் கொடுக்க மளமளவென்று ,ஜெமினி நிறுவன தயாரிப்பாக ,அவர் மகன் எஸ்.எஸ்.பாலன் இயக்கத்தில், வளர்ந்து 1966 இல் வெளியாகி, வெற்றி கண்டது. சிவாஜி,சற்றே உடல் நிலை சரியின்றி,ஓய்வு எடுத்து,துரும்பாக இளைக்க தொடங்கிய 1966 இல் வந்த நான்கே படங்களில் ஒன்றானது.
ஒரு கார் garage வைத்திருக்கும் சுந்தரம் பிள்ளை தன் பழைய vintage காரிலேயே பயணிக்கும் பெரிய குடும்பஸ்தர். மனைவி மீனா, பிள்ளைகள் பாபு,விஜி,ராஜி,லல்லி,நிர்மலா,மாலா,விமலா,கமலா , அக்கா, அக்கா மகன் சாம்பு என அழகான குடும்பம். வெள்ளி இரவு வீடு வந்து, மனைவி மக்களுடன் தங்கி ,திங்கள் காலை தன் தொழிற்சாலை வேலைக்கு பட்டணம் செல்லும் குடும்பஸ்தர். மென்மையான, அதிர்ந்தும் பேசாத நற்பண்பாளர்,அனைவராலும் மதிக்க படும் பெரிய மனிதர், பல உதவிகள் சமூகத்துக்கு புரிபவர். மூத்த பெண் கமலா கல்யாணம் ஆகியும், கணவர் படித்து கொண்டிருப்பதால் ,புகுந்த வீட்டின் நிர்பந்தத்தின் பேரில், பிறந்த வீட்டிலேயே ,தாம்பத்யம் துறந்து ,தங்கியுள்ளாள்.அந்த ஊர் ஸ்டேஷன் மாஸ்டர் பையன் சேகரை, இரண்டாவது பெண் விமலா காதலிக்கிறாள் . சேகரின் தங்கை ரேவதியை சாம்பு விரும்புகிறான். மூன்றாவது பெண் மாலா ,principal பையன் மோகனை விரும்புகிறாள். இதற்கிடையில், மீனா கற்பமாகி, சுந்தரம் பிள்ளைக்கு ஒன்பதாவது குழந்தை பிறக்கிறது.கமலாவின் கணவன் கோபால் அப்பாவுக்கு தெரியாமல், சுந்தரம் பிள்ளை வீட்டுக்கு வந்து ,மனைவி கமலாவுடன் தங்கி செல்கிறான்.
பெண்களின் விருப்பம் அறிந்த சுந்தரம் பிள்ளை , principal ,ஸ்டேஷன் மாஸ்டர் வீடு சென்று சம்பந்தம் பேசி முடித்து, நிச்சயதார்த்த நாளை குறித்து,
நாளும் வருகிறது.
சம்பந்திகள் கூடி இருக்கும் போது ,சுந்தரம் பிள்ளைக்காக அனைவரும் காத்திருக்க, கண்ணன் என்ற விடலை சிறுவன் வீட்டுக்கு வந்து சுந்தரம் பிள்ளைதான் தன தந்தை என்றும்,அவசரமாய் school fees காட்ட பணம் வேண்டியிருப்பதால், factory சென்று அங்கும் இல்லாததால், விலாசம் விசாரித்து இங்கு வந்ததாக சொல்ல வீடே அல்லோல கல்லோல பட்டு நிச்சயதார்த்தம் நிற்கிறது. வீடு வரும் சுந்தரம் பிள்ளை கண்ணனை அன்போடு உபசரித்து பணம் கொடுத்து ,விடை கொடுக்கிறார். மொத்த குடும்பமே ,சுந்தரம் பிள்ளைக்கு எதிராக திரள, சுந்தரம் பிள்ளை வீட்டை விட்டு கிளம்புகிறார்.பிறகு,குடும்பத்தினர் வற்புறுத்தலால் திரும்பி வந்து, எல்லோரையும் சமாதான படுத்துகிறார். மீனா ஒருநாள், கணவனின் அடையாறு வீட்டின் தகவல் தெரிந்து அங்கே செல்ல, அங்கே தாயிழந்து தனித்து வாழும் லீலா,ரமேஷ்,கண்ணன்,சாந்தி என்ற நான்கு குழந்தைகளும் தன கணவன் குழந்தைகளே என்றறிந்து, இறந்த தாயில் படத்தை பார்த்து மயங்கி விழுகிறாள்.இதற்கிடையில் , கணவன் படிப்பு முடிந்து கமலா புகுந்த வீடு சென்று, அங்கே அவள் ஏற்கெனெவே கற்பம் என்ற உண்மை தெரிந்து திருப்பி கொண்டு விட படுகிறாள்.அங்கு ஏற்கெனெவே சுந்தரம் பிள்ளை வேண்டி வற்புறித்தி வர வழித்த ஸ்டேஷன் மாஸ்டர், பிரின்சிபால் இவர்களுடன் மூத்த சம்பந்தியும் அமர வைக்க பட்டு ,தன கதையை சொல்கிறார்.
மாமா வீட்டில் வளரும் சுந்தரம் பிள்ளை மாமாவின் இளைய பெண் மரகதத்தை விரும்ப, மாமா தன மூத்த பெண் மீனாவை அவள் விருப்பபடிsundaram உடன் கல்யாணம் செய்ய திட்டமிடுகிறார். அக்கா விருப்பமறிந்து ,மரகதம் ,காதலை விட்டு கொடுத்து அந்த திருமணத்தை நடத்தி வைக்கிறாள்.சுந்தரம் தன அக்கா கணவர் வேலை வாங்கி கொடுக்க ,குடும்பத்துடன் ரங்கூன் செல்கிறான்(யுத்த காலம்) அங்கு ஒரு விபத்தில் ,மனைவி, அக்கா குடும்பம் இறந்து விட்டதை எண்ணி, திரும்பி ஊர் வந்து சேர்கிறான். தன தவறையுணர்ந்த மாமா வற்புறுத்தலின் பேரில் மரகதத்தை மீண்டும் மணக்கிறான். திடீரென்று, அக்கா,அவள் மகன் சாம்பு, மீனா அனைவரும் உயிரோடு திரும்புவதாக சேதி வர, மாமாவின் கடைசி ஆசை படி, இருவருக்கும் பாதகம் வராமல், இருவரோடும் ஒருவர் அறியாமல் இன்னொருவரோடு குடும்பம் நடத்துகிறான்.கடைசியில் எல்லோரும் உண்மையறிந்து ,சமாதானமாகி சுபமாய் முடியும்.
நடிகர்திலகத்தின் மிக சிறந்த படங்களில் ஒன்றாக ,பல விமரிசகர்கள் இதை கொண்டாடுகிறார்கள். நடிகர்திலகத்தின் நடிப்பும் மிக மிக சிலாகிக்க படுகிறது. நடிகர்திலகம்,ஒரு இடத்தில் கூட குரலையே உயர்த்த மாட்டார். உடலசைவுகள் பத்திரத்தை ஒட்டியே இருக்கும். பின்னால் அவரின் கதாநாயகிகளாய் வலம் வந்த ஜெயலலிதா, காஞ்சனா ஆகியோருக்கு அப்பாவாக. அதுவும் ,அவர்கள் இருவருடனும் முதல் படம். அகில இந்தியாவிலும், இந்த தைரியம் , இமேஜ் என்பதை நடிப்பு திறமையால் உடைக்கும் திறமை, ரசிகர்களுடன் உள்ள நம்பிக்கை ,எவனுக்கும் இன்று வரை கிடையாது.
குழந்தைகள் ,மனைவி ஆகியோருடன், subtle demonstrative பாணியில் தன் வாஞ்சை,பாசம் ஆகியவற்றை வெளிபடுத்தும் அழகு. வாரம் ஒரு முறை குடும்பத்துடன் கழிக்கும் ,தலைவன் பாத்திரத்துக்கு அவ்வளவு மெருகு சேர்க்கும். இந்த பாத்திரத்தில், ஒரு குற்ற உணர்ச்சியில்லாத , எச்சரிக்கையான ஒரு உணர்வினை படம் முழுதும் தேக்கி ,தனது அசைவுகள் வசனம் பேசும் முறை அனைத்திலும் காட்டுவார். குழந்தை பிறக்க போகும் செய்தியை ஒரு மென்மையான கூச்சத்துடன்,இயல்பாய் அணுகும் கட்டம் இருக்கிறதே ,அடடா. வீட்டுக்கு வந்து,குழப்பத்துக்கு காரணமான மகனுக்கு, துளிகூட ,வேண்டா விருந்தாளி என்ற உணர்வோ, அல்லது குற்ற உணர்வோ எழ கூடாது, என்று அழகாய் உபசரணை செய்து, அனுப்பிய பிறகு, சிறிது uneasiness காட்டுவார். குடும்பத்தினருடன், பிடிபட்ட உணர்வு இன்றி, அவர்கள் நம்பிக்கையை தெரிந்து கொள்ளும் காட்சி, சிறியது ஏமாற்றத்துடன் வெளியேறும் காட்சி, பிறகு தான் தவறு செய்தவன் அல்ல என்ற ரீதியில் எல்லாரையும் பேச்சாலும்,செயலாலும் அணைத்து செல்லும் காட்சிகள்.(எவ்வளவு வேறுபாடு காட்டுவார் ,முன்னாள் வந்த பார் மகளே பார், வர போகும் உயர்ந்த மனிதன் சாயல்கள் துளியும் வராமல்)முரண்டும், சுந்தரராஜன்(சம்பந்தியை) உட்கார வைத்து உண்மையை உணர்த்த , ஒரு சில decibel கண்டிப்போடு உயர்த்தி பணிய வைப்பாரே!!!flashback காட்சியில் சைக்கிள் ஓட்டி வரும் காட்சியில், சிறிது இளைக்க ஆரம்பித்து,இளமையும்,அழகும்,துறுதுறுப்பும் மின்ன அவ்ளோ அழகுனா அப்படி ஒரு அழகு. ஒவ்வொரு வேறு பட்ட உறவுகள் ,நண்பர்களுடன் வேறு பட்ட சூழ்நிலைகளில் பேசும் போது ,subtle acting முறையில் staleness வர வாய்ப்புள்ளது. ஆனால் நடிகர்திலகம்,அதை handle செய்திருக்கும் விதம், ஏன் இன்று வரை இத்தனை கோடி பேர் உலக நடிப்பு மேதைகளில் முதல்வர் என்று கொண்டாடுகிறோம் என்ற காரணம் விளங்கும்.
supporting cast ,நிறைய கூட்டமாக வர வேண்டியிரு ப்பதால் ,NT தவிர யாருக்குமே தனி கவனம் போகாவிட்டாலும், சௌகார், பண்டரி பாய், மணிமாலா மனதில் நிற்பார்கள்.(சரோஜாதேவிக்கு பின் பின்னழகு ராணி என்றால் மணி மாலாதான்). எல்லாரும் ,அவரவர் பங்கை நன்கு பண்ணியிருப்பார்கள். crowded shots ,அபார கவனத்துடன் கையாள பட்டிருக்கும். ரவிச்சந்திரன்,சிவகுமார்,சுந்தரராஜன்,ஜெயலலிதா, காஞ்சனா எல்லோருக்கும் நடிகர்திலகத்துடன் முதல் படம்.
நகைச்சுவை காட்சிகள்,ஆனந்த விகடனில் தொடராக வந்த,தேவன் அவர்களின் துப்பறியும் சாம்பு ,நகைச்சுவையை ஒட்டி அமைந்திருக்கும்.(நாகேஷ் பெயரும் சாம்பு) கதையின் போக்கை ரொம்ப நெருடாமல், சுமாராக இருக்கும். வித்தியாசமான இந்த கதைக்கு, சுவாரஸ்யம் கெடாமல்(அத்தனை பாத்திரத்துக்கும் தேவையான spacing ,காட்சிகள் கொடுத்து) கம்பி மேல் நடக்கும் வித்தையை நன்றாக கையாண்டு,இயல்பான ,உயிரோட்டமான, பாத்திரத்தின் தன்மைக்கு இடைஞ்சல் தராத வசனங்களையும் அமைத்திருப்பார் வேப்பத்தூர் கிட்டு. (கிட்டு, கே.ஜே .மகாதேவன், கொத்த மங்கல ம் சுப்பு போன்றோரை தமிழ் பட உலகம் இன்னும் நன்றாக பயன் படுத்தி இருக்கலாம்).எஸ்.எஸ்.பாலன் இந்த படத்தை மிக நன்றாக ,தந்தை மேற்பார்வையில் கையாண்டிருப்பார். அந்த நாய்க்குட்டியை அழகாக பயன் படுத்தியிருப்பார்.குழந்தையை காட்ட ,எல்லோரும் பார்க்க முந்தும் காட்சியில் ,நாய் குட்டியும் முண்டியடித்து பார்க்கும். சிவாஜிக்கு எதிராக குடும்பமே அம்மா பக்கம் நிற்கும் போது ,நாய் குட்டியும் அம்மா பக்கம் போகும் அழகு.(நீயுமா என்று சிவாஜி செல்லமாக வெதும்புவார்).
சிவாஜி-மணி மாலாவிற்கு ஒரு நல்ல duet கொடுத்திருக்கலாம். காத்திருந்த கண்களே ,MSV இசையில் super -hit பாடல்.ரவிச்சந்திரன்-ஜெயலலிதா ஜோடி கண் படும் அளவு அவ்வளவு பொருத்தம்.மற்ற பாடல்கள் ஓகே ராகம்.(துள்ளி துள்ளி விளையாட, மனமே முருகனின், ஜிகு ஜிகு ஜிகு , காதல் என்றால் என்ன)MSV க்கு வாழ்க் கை படகு அளவு scope உள்ள படமல்ல.
மற்ற படி ஜெமினி நிறுவங்களின் பிரம்மாண்ட படங்களை விடவும்,இன்றளவும் பேச படுகிற படம் இது. (மற்றவை சந்திரலேகா ,ஒளவையார்,வஞ்சிகோட்டை வாலிபன்,இரும்புத்திரை ).
ராஜா-26/01/1972.
சிவாஜியே இப்படத்தில் சொல்வது போல ராஜான்னா ராஜாதான். நம் ரசிகர்கள் மற்றுமல்ல, பொதுமக்கள்,மாற்று அணியினர் எல்லோரும் ஈர்த்து லயித்து ,ரசித்த படம். இது ஒரு jamesbond action movie genre என்றாலும் ,நேரடியாக ரெயின் கோட் போட்டு கொண்டு, கருப்பு கண்ணாடி மாட்டி கொண்டு (குல்லா), துப்பாக்கி தூக்கி ,வில்லன்களுடன் நேரடியாய் மோதி,ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை சல்லாபிக்கும் வழக்கமான jamesbond அல்ல. The departed என்ற ஆஸ்கார் பரிசு பெற்ற படத்தில் , வில்லன்களின் பாசறையில் போலிஸ் ஆள் ஒருவரும், போலிஸ் பாசறையில் வில்லன் ஆள் ஒருவரும் ஊடுருவி ஒருவர் யார் என்று மற்றவருக்கு தெரியாமல் , திரைக்கதை ஜாலம் புரிந்து எனது favourite இயக்குனர் Scorcese அதகளம் புரிவார் எனது அபிமான நடிகர்கள் matts Damon ,Decaprio போன்றோரை வைத்து.
வில்லன் பாசறையில் ஊடுருவி(Mole), அங்கு எல்லோர் அபிமானத்தையும் பெற்று முன்னேறி ,கடைசியில் போலிஸ் கஸ்டடி யில் இருந்து வெளியேறும் வில்லன் ஆள் ஒருவன் இந்த உண்மை தெரிந்து ,பிறகு உச்ச காட்சியில் ஒருவரை ஒருவர் போட்டு கொடுத்து விஞ்ச பார்க்கும் ,மிக சிறந்த ,சுவாரஸ்யமான ,ட்விஸ்ட் நிறைந்த,roller coaster ride போன்ற உச்ச கட்ட காட்சியுடன் முடியும் மிக மிக சுவாரஸ்யமான இளமை ஸ்டைல் திருவிழா இந்த படம். ஹிந்தி மூலம் நாராயணன் என்ற கதாசிரியர் எழுதியது.தமிழ் வசனம் வேறோர் நாராயணன்.
சி.வீ.ராஜேந்திரன் படம் என்றாலே இளசுகளுக்கு கொண்டாட்டம்.(இந்த படம் வந்த போது பதிமூன்று வயசு இளசுதானே) அப்போது படித்த இளைஞர்களின் கனவு நாயகன் ,திராவிட மன்மதன் நடிகர்திலகம் ,கலை செல்வியுடன், பாலாஜி தயாரிப்பில், சின்னி சம்பத் நடனம்,மாதவன் சண்டை,ராமகிருஷ்ணன் உடை,மஸ்தான் கேமரா ,மெல்லிசை மன்னர் இசை என்று பக்கா வின்னிங் டீம். எதிர்பார்ப்புக்கு கேட்கவா வேண்டும்? எதிர்பார்ப்பை மீறியே, எல்லா தரப்பினருக்கும் கல்யாண விருந்து போல தீனி கொடுத்த அற்புதம் ராஜா....
இந்த படத்தை பொறுத்த அளவில் நான் உள்ளே நுழைந்து உளவியல்,நடிப்பின் நுணுக்கம் என்றெல்லாம் உங்களை சோதிக்க மாட்டேன். ஏனெனில்,படம் முழுக்க இளமை,சுவாரஸ்யம்,ஸ்டைல்,energy மட்டுமே.
பாச மலர் ராஜசேகரன் ,தில்லானா சண்முகம்,திருவருட்செல்வர் அப்பர்,தெய்வ மகன் கண்ணன், வியட்நாம் வீடு பத்மநாபன்,பாபு என்று திராவிட மன்மதன், தான் சுந்தர புருஷனாக மட்டுமே தோன்றி ரசிகர்களை வசீகரிக்க எண்ணியதில்லை.எல்லா பாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து ,தன் இளமை,அழகு இவற்றை மறைத்து பாத்திரத்திற்கேற்ப தோன்றிய நடிகர்திலகம் தன் முழு இளமை, ஆண்மை, அழகு, வசீகரம் எல்லாவற்றையும் குறையாமல் நமக்கு வழங்கிய படங்கள் கலாட்டா கல்யாணம்,தங்கச்சுரங்கம்,நிறை குடம்,தெய்வ மகன்(விஜய்),சிவந்த மண்,எங்க மாமா, சுமதி என் சுந்தரி, ராஜா,வசந்த மாளிகை போன்றவை.இதிலும் ராஜா ஒரு குறிஞ்சி மலர்.
என்னத்தை சொல்ல!!! அழகென்றால் அப்படி ஒரு அழகு, இளமைஎன்றால் அப்படி ஒரு இளமை, ஸ்டைல் என்றால் அப்படி ஒரு ஸ்டைல்,துறுதுறுப்பென்றால் அப்படி ஒரு துறுதுறுப்பு, சுறுசுறுப்பென்றால் அப்படி ஒரு ஒரு சுறுசுறுப்பு அதுவரை திரையுலகம் பார்வைக்கு பார்வை,நடைக்கு நடை,காட்சிக்கு காட்சி அப்படி ஒரு வசீகரம் நிறைந்த இளமை துள்ளும் (என்ன ஒரு energy level )ஸ்டைல் ஆன ஒரு நாயகனை கண்டதில்லை.
இந்த படம் மிக பெரிய வெற்றி பெற்றும் நடிகர்திலகம் திரும்பி திரும்பி இதே மாதிரி படங்களில் சிக்கி கொள்ளவும் இல்லை என்பதே நடிகர்திலகத்தை வித்யாசம் காட்டியது.
உடைகளை பற்றி சொல்ல வேண்டுமென்றால்....
பொதுவாக அவர் trend setter .well dressed man of indian screen என்ற விருதை ஒரு வடக்கிந்திய பத்திரிகை 1958 இல் அவருக்கு அளித்து மகிழ்ந்தது.
அந்த சுந்தரனுக்கு எல்லா வித வேடங்களும் பொருந்தியது போல எல்லா வகை உடைகளும் பொருந்திய அழகை என் சொல்ல?வேட்டி சட்டை,ஜிப்பா,சுரிதார்,சட்டை,பேன்ட் ,கோட் சூட்,அரச உடைகள், இதிகாச புராண உடைகள்,படு படு ultra modern உடைகள் எல்லாமே கன கச்சிதமாக பொருந்தியது அந்த திராவிட ஆண்மை நிறை அழகனுக்கு.
இந்த படத்தில் ஜெர்கின் எனப்படும் ஜாக்கெட், கோட், tie ,மற்றும் scarf போன்ற உடைகள்.
முதல் காட்சியில் ஆரம்பிக்கும் ராஜாவின் ராஜாங்கம்.விஸ்வத்தின் அடுத்த அறையில் அடை பட்ட அழகான ஜெர்கின் அணிந்த ராஜா.சிகெரெட் lighter உடன் விஸ்வம் போலிசோடு அதிக சண்டையும் வச்சிக்காதே ,அதிக தொடர்பும் வச்சிக்காதே ,பொறுமையாய் இரு என்று லேசான தலையாட்டலுடன் ,எவ்வளவு நாளா நடக்குது என்று கேட்கும் விஸ்வத்திடம் நாலு நாளா என்று கூல் தொனியில் சொல்வது, நம்பிக்கையான ஆள் கேட்கும் விஸ்வத்திடம் ஆழமான குறுகுறு பார்வையுடன் ,தன் மேல் நம்பிக்கை வைக்க சொல்வது என்று முதல் காட்சியிலேயே தன்னுடைய வித்தியாச வேடத்துக்குள் அனைவரையும் ஈர்த்து கட்டி போட்டு விடுவார்.
ராதாவை ,ஹோட்டல் அறையில் சந்திக்கும் முதல் காட்சி டீசிங் கலந்த காதல் அறிமுக ஆரம்ப காட்சியில் நடிக்க விரும்புவோருக்கு இளமை பாடமே நடத்த பட்டு விடும்.ராதாவின் அழகை வியப்பு விழிகளால் பருகி ,பொய் ஆச்சர்யம் காட்டி அழகை விமர்சிக்கும் ஆரம்பம், indifference காட்டும் ராதாவிடம் ஜாலியாக credibility நிரூபிக்கும் cuteness ,பார்க்க மாட்டேங்களா வைரங்களை எனும் ஸ்டைல்,தன் பெயரை வித விதமாக சொல்லி கடி ஜோக் அடித்து தானே ரசிப்பது, முடிவில் கிளம்பும் போது ஆப்பிளை ஒரு அவசரம் கலந்த விழைவுடன் கடித்து விடை பெறுவது-இளமை குறும்பின் உச்சம் தொடும்.
நீ வர வேண்டும் பாடல் ராஜா சொல்லும் ஸ்டைல் களை கட்டி விடும்.அதிலும் முகம் தடவும் கையை ராதா தட்டி விட ,போலிசை காட்டியதும் அவர் கையை எடுத்து முகத்தில் வலுகட்டாயமாய் தேய்த்து கொள்ளும் இளமை டீசிங் குறும்பு.
பாபுவிடம் கூட்டி சென்றதும் அவரை கட்டி வைத்து விசாரிக்கும் காட்சி . ஈர்ப்பு நிறைந்த கிண்டலின் உச்சம். குமாரிடம் ஒவ்வொரு முறை அடிபடும் போதும் வித விதமான ஜாலி கமெண்ட் .முகத்தை கெடுத்துடாதே என்று சொன்னாரில்லை மடையா... ஏண்டா அடிக்கரத்துக்குன்னே சம்பளமா... அதே மாதிரி ராதாவுடன் சந்திப்பை இதயம் அடித்த அழகை கண்ணை அடித்து குதூகலிக்க வைப்பார்.(தடக் தடக்).முடிந்து தன் கயிற்றை அறுத்து வில்லன்களை அட்டாக் பண்ணி, surprise கொடுத்து lighter இல் போட்டோ எடுக்கும் லாவகம்... வேறு ஒரு நடிகன் கனவு கூட காண முடியாத நடிப்பு.
குமாரின் துரோகம் பற்றி பாபுவிடம் சொல்லி ,அவர் தூக்கி எரியும் சாவியை expert என்று இடது கையால் பிடிக்கும் ஸ்டைல்.பாபுவை தாக்கி விட்டு தப்பியோட பார்க்கும் குமாரை ,ஸ்டைல் ஆக சிகெரெட் தனது ஆள்காட்டி கட்டை விரலில் குவித்து கீழ் விட்டு தேய்க்கும் அழகு. பிறகான அற்புத சண்டை காட்சி.
ஒரு நேருக்கு நேர் சண்டை காட்சியில் நீங்கள் என்ன எதிர்பார்ப்பீர்கள்? ஒரு சமமான அல்லது மிகை பலம் கொண்ட வில்லன். சம யுத்தம். சம வாய்ப்பு. சிறிதே திட்டமிடல். சவால் விடும் gestures . சுறுசுறுப்பு நிறைந்த rhythmic manly Grace ,நல்ல கட்டமைப்பு இவைதானே? இவை அத்தனையும் கொண்ட சண்டை காட்சிதான் குமாருடன் ராஜா மோதும் சுவாரஸ்ய குதூகல சண்டை காட்சி.முதல் பாய்ந்து இரு முறை அட்டாக் பண்ண சுலப வாய்ப்பு எதிரிக்கு கொடுக்கும் போது முகத்தில் ஒரு scheming look தெரியும்.பிறகு லாவகமாய் நகர்ந்து அட்டாக் ஆரம்பிக்கும் போது ஒரு aggression தெரியும். எதிரெதிரில் குறி பார்க்கும் போது ஒரு cautious anticipation தெரியும்.எதிரி குறி வைக்கும் போது அந்த அடி பட்டால் எப்படி இருக்கும் என்ற உணர்வை react செய்து உணர்த்துவார்.(அடி படும் போது வலி வேதனை ) ஒரு பம்பரம் போல் சுழன்று சுழன்று திரும்பி graceful stylish சுறுசுறுப்பு காட்டும் நேர்த்தி.கண்ணை அடித்து ,ஒரு கூல் பார்வையுடன் எதிரியை challenge பண்ணுவார். ஒரு சண்டை காட்சியில் கூட தன்னை மீற யாருமில்லை என ஓங்கி சொன்ன அற்புத காட்சி.
அதே போல ராதா தன் அம்மாவிடம் பேசுவதை ஒட்டு கேட்கும் போது ராதாவிடம் துப்பாக்கி முனையில் உள்ளே வரும் போது அம்மாவிடம் விசாரிப்பு, பிறகு ஒரு பொய்யை சொல்லும் போது நேர்பார்வை தவிர்த்த ,கையை தனது வாயை மறைக்கும் தோரணையில் வைத்து பேசும் இடம் உளவியல் அறிஞர்கள் ,பொய் சொல்வர் செய்யும் சில செயல்களை படித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் உளவியல் நடிப்பதிசயம்.
பாபு நம்மை தொடர்கிறார் என்று அறிவிக்கும் ராதாவிடம் ,அதை கவனித்து பின் romance பண்ணுவது போல் நடிக்கும் நுணுக்கம்.(பாபு சந்தேகம் தவிர்க்க). ஜம்பு வந்ததும் ஹூம் ஹூம் என்று ஸ்டைல் ஆக கை காட்டும் ஆமோதிப்பு,தங்கத்தை தொட்டதும் கையை தட்டி விடும் அவசர அலட்சிய எச்சரிக்கை , தொடரும் விறுவிறுப்பான சண்டை காட்சி ,ஜம்புவிடம் கத்தியை காட்டி ஓடுடா என்ற மிரட்டல் தொனியில் காட்டுவது.
தொடரும் ramantic marvel கல்யாண பொண்ணு lead scene (அப்புறம்தான்....).நீ வெக்கத்தோடு என்னை ஒர கண்ணால் பார்க்க (ராதா முறைக்க)சரி நான் பாக்கிறேன்னு வெச்சிக்க.
சிவாஜியின் நடன காட்சிகளில் ஒரு அபாரமான டான்சர் grace , கடின movements , ஸ்டைல்,சுறுசுறுப்பு,professionalism மிளிரிய கால கட்டம். கல்யாண பொண்ணு அதற்கு அற்புத உதாரணம்.ஒரு back and sideways ஸ்டெப்ஸ் போட்டு துவங்குவாறே அதை சொல்வதா ,கைகளை விரித்து hop step பாணியில் ஒன்றை செய்வாரே அதை சொல்வதா, தெய்வத்தால் எதுதான் முடியாது?
இன்ஸ்பெக்டர் உடை அற்புதமாக இருக்கும். அந்த காட்சியில் stiffness காட்டி எல்லோரையும் குழப்பி பிறகு போலிசை விரட்டும் நயம்.
தொடர்ந்த நாகலிங்கத்தை சந்திக்கும் காட்சியில் தாராவை கண்டதும் காட்டும் கண நேர சங்கடம் கலந்த முகபாவம்..(தாராவின் நிலைக்கு ராஜாவும் காரணமே)
இரண்டில் ஒன்று காட்சி ஊடல் கலந்து காதல் விருந்து. திராட்சை நிற உடையில் (திராட்சை ஆணின் காம விழைவையும்(libido&virility), பச்சை நிறம் பெண்ணின் அழைப்பை ஏற்று பிள்ளை பெறும் விழைவையும் (Fertility)குறிக்கும். சி.வீ.ஆர் கலர் psychology )அழகு கொண்ட இளமை குறும்புடன் ,கண்ணில் தெறிக்கும் கிண்டலுடன் அவர் ஒவ்வொரு ஜன்னலாக எட்டி பார்க்கும் அழகு. ஒரு bull fight gesture கொண்டு அறைக்குள் நுழைந்து, அணைக்கும் போது செல்ல நிமிண்டல், என்று இரண்டில் ஒன்றல்ல ஒன்றே ஒன்று என நாம் குதூகலிக்கும் ஒரே காட்சி.
இறுதி காட்சி நடிகர்திலகம் நினைத்தாலும் அவருடைய திறனை கட்டு படுத்த முடியாது என்று அவர் காட்டும் சுவாரஸ்ய வெளியீடு.
இந்த காட்சி முழுதுமே வில்லனை பிடிக்க திட்டமிட்டு ,அது விஸ்வம் தலையீடு மற்றும் அம்மாவின் கடத்தல் என்பதினால் மாற்று திட்டமிடல் என்பதை முன்னிறுத்தி ,விஸ்வத்தின் எதிர்பாராத நடவடிக்கை அதனை கெடுக்கும் போதும் ,சுதாரிக்க வேண்டிய அவசரம். சிவாஜியின் முகபாவங்களில், ஒரு ஆசுவாசம் (திட்ட படி),அவசரம், குழப்பம் (நிலைமை எல்லை மீறும் போது),குறிப்புகள் (எல்லாம் கட்டுக்குள் என்று நண்பர்களுக்கு உணர்த்துவது),சமாளிக்கும் அவசரம், மற்றோரை குறிப்புணர்த்தி தன்னோடு தொடர சொல்லும் அவசரம் நிறைந்த எச்சரிக்கை தொனிக்கும் timing கொண்ட சமாளிப்புகள் .இந்த கட்டத்தில் அவர் முக பாவங்களை தொடருங்கள். பல ஆச்சரியங்கள் காத்திருக்கும்..
அவர் அன்னை சித்திரவதை படுத்த படும் போது , அதை தாங்கி கொள்ளவும் முடியாமல்,தடுக்கவும் முடியாமல்,வேதனையை வெளிக்காட்டவும் முடியாமல்,ஆத்திரத்தை கட்டு படுத்தவும் முடியாமல் துடித்து ,எதிரிகளுக்காக சிரித்து சமாளிப்பது போல அவர் காட்டும் நடிப்பு. (ஆம்.நடிப்பது போன்ற நடிப்பு).
இதை பற்றி குறிப்பிடாத விமரிசனங்களே வெளி வந்ததில்லையே?
http://i1028.photobucket.com/albums/...psw68s35gj.jpg
ஞாயிறன்று நடந்த விழாவில், "பராசக்தி"யை முதல் நாள்,முதல் காட்சியில் தரிசித்த பெருமைக்குரிய, நீண்ட காலமாக நான் சந்திக்க வேண்டும் என்று எண்ணியிருந்த பெரியவர் அய்யா திரு. நடராஜன் அவர்களைச் சந்தித்து ஆசி பெறும் பாக்கியம் பெற்றேன்.
அவரும், நானும் அய்யா சி. வி. ஆர் அவர்களுடன்
இணைந்து நின்று சில புகைப்படங்கள் எடுத்துக்
கொண்டோம்.
இன்னும் ஒரு புகைப்படம் வேண்டும் போல் தோன்றிற்று எனக்கு. அய்யா சி. வி. ஆரிடம்
" சார்... இன்னும் ஒரே ஒரு போட்டோ சார்!?" என்றேன். " சார்.. எடுத்துக்குவோம் சார்!" என்று என் தொனியிலேயே புன்னகையுடன் சம்மதம்
சொன்னவர், அருகில் நின்ற எனது தோளின் மீது
தன் கையைத் தவழ விட்டுக் கொண்டார்.
அந்த ஸ்பரிசம் தந்த புல்லரிப்பில் ஒரு
உண்மையையும் சந்தோஷமாக உணர்ந்தேன்...
"அய்யன் நடிகர் திலகத்தின் திருக்கரம் பற்றிய
சாதனைக் கரமல்லவா இது !?"
கோபால்!
https://i.ytimg.com/vi/O9qM-WVcUcU/hqdefault.jpg
வார்ரே வா! கலக்கி விட்டீர்கள். என்ன ஒரு அழுத்தமான 'ராஜ' ஆய்வு. மூன்று முறை படித்து விட்டேன். 'ராஜா' என்றால் அப்படியே 'சுர்ர்' என்று ஏறுகிறது. ஆதிராம் சார் சொன்னது போல அட்சயப் பாத்திரம் கொண்டவன் ராஜா. எடுக்க எடுக்க சுரந்து கொண்டே இருக்கும். அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி. வந்து கொண்டே இருக்கும்.
//பொறுமையாய் இரு என்று லேசான தலையாட்டலுடன்//
ஆஹா! அந்த ஒரு அலட்டாத தலையாட்டலில் தரணியே அடிமைப்பட வேண்டும். 'பொறுமையா இரு' என்பதற்கு பொருத்தமான தலையாட்டல். சைட் போஸ்கள் வர்ணிக்க முடியாத அழகு அம்சங்கள்.
'சாதாரண கான்ஸ்டபிக்கிட்டே நான் பேசறதில்லேன்னு உனக்குத் தெரியுமில்லே' என்று சந்திரபாபுவிடம் அலட்சியமாக சொல்லும்போது ஒரிஜினல் ராஜாவின் குணத்தையும், திருடனாக நடிக்கும் ராஜாவின் குணத்தையும் ஒரு சேர காட்டி அற்புதமாக வியக்க வைப்பார். இது அதிகாரி ராஜாவுக்கும் பொருந்தும். நடிப்புக் 'கள்ளன்' ராஜாவுக்கும் பொருந்தும்.
//LIghter இல் போட்டோ எடுக்கும் லாவகம்... வேறு ஒரு நடிகன் கனவு கூட காண முடியாத நடிப்பு.//
வாயில் ஸ்டைல் சிகரெட்டுடன் எதிராளிகள் உணராவண்ணம்... அவர்கள் நம்பும் வண்ணம் அதே சமயம் செய்யும் வேலையை நீங்கள் சொல்வது போல லாவகமாக, சாமர்த்தியமாக செய்வதோடு பார்வையாளர்களுக்கு இது வில்லன் கோட்டையில் 'ராஜா'வின் கள்ளத்தனமான நடிப்பு என்பதையும் புரியவைத்து விடுவார். அந்த சமயத்தில் எதிரிகளுக்கு சந்தேகம் வராத சிரிப்பை உதிர்ப்பார். அந்த சிரிப்பில் ஜாக்கிரதை உணர்வும் இருக்கும். போட்டோ எடுக்கும் போது எச்சரிக்கையாக எடுப்பார். இரண்டு மூன்று snaps எடுத்தவுடன் அந்த சிரிப்பில் வெற்றிப் பெருமிதம் ஜொலிப்பதை புரிந்தவர்கள் வெகு இலகுவாக உணர முடியும். சந்தேகக் கோடு பரவா வண்ணம் அடியாளை பின்புறம் சிரித்தபடி தட்டிக் கொடுத்து அடுத்த ஸ்டெப் முன்னேறுவது அபாரம். Flash பண்ணும் போதும் ஸ்டைல் கொப்பளிக்கும். Handling அருமையாக இருக்கும். கட்டை விரலுக்கும், ஆட்காட்டி விரலுக்கும் இடையே லைட்டரை வைத்து அற்புதமாக சில தடவை ஷேக் செய்வார். Focus பண்ணுவதும் அற்புதமாகத் தெரியும். இவையனைத்தும் சில வினாடிகள்தாம்.
உலகில் நம் ரசிகர்களை போல கொடுத்து வைத்தவர்கள் எவரும் இல்லை. ருசிக்க ருசிக்கத் தந்தவன் நம் ராஜா.
//தங்கத்தை தொட்டதும் கையை தட்டி விடும் அவசர அலட்சிய எச்சரிக்கை//
அற்புதம்...நான் என்னென்ன நினைக்கிறேனோ அது அப்படியே உங்கள் எழுத்தில் வந்து விழுந்து என்னை பிரமிக்க வைக்கிறது. ஜம்பு தங்கத்தைத் தொட்டதும் படுஅவசரமாக 'வெடுக்'கென்று தட்டி விடுவார். அது போல அபின் பெட்டியை முகர்ந்து smell செய்யும் அழகே அழகு.
பாலாஜி இருக்கும் போதே ஜெயாவை ஜாலியாக சைட் அடிப்பது ஜோரான ஜோர். பாலாஜி அதை அதிகமாக கண்டு கொள்ளாமல் காட்டிக் கொள்வது சூப்பர். (பாஸிற்கு விசுவாசம், கொடுக்கும் வேலையை எப்பாடு பட்டும் முடித்து பெயர் வாங்கும் கொத்தடிமை வில்லன். ராஜா மூலமோ அல்லது யார் மூலமோ காரியம் நடந்ததும் அப்படியே கழற்றி விட்டு செல்லும் பாஸ் பக்தி என்று பாலாஜியும் ரகளை...'ராஜாவுக்கு உன் மேல ஒரு கண் இல்லே' என்ற ராஜாவின் காதலை ராதாவிடம் கேட்டு அதை அப்படியே தனக்கு சாதமாக்கிக் கொள்ளும் எத்தன். எல்லாவற்றையும் பாஸிற்காக செய்யும் பரிதாப பாபு. இறுதியில் அதே பாஸ் 'அவன் துரோகின்னா அவனை இங்க ஏண்டா கூட்டிகிட்டு வந்தே?' என்று விஸ்வத்தை அழைத்துச் செல்லும் பாபுவிடம் புத்திசாலித்தனம் கலந்த நியாயமான கேள்வியைக் கேட்டு பாபுவையும் நம்மையும் அதிர்ச்சிக்குள்ளாக்குவது ஏக களேபரம். அத்தனை நாள் பாபுவின் பாஸ் விசுவாசம் ஒரே நொடியில் தவிடுபொடியாகும்.
//ஜம்புவிடம் கத்தியை காட்டி ஓடுடா என்ற மிரட்டல் தொனியில் காட்டுவது//
சண்டையின் இறுதியில் உத்திரத்தைப் பிடித்து தொங்கி, எம்பி, இரு கால்களாலும் எதிரி வில்லனுக்கு kick கொடுப்பது டாப் ஸ்டைல்.
//தொடரும் ramantic marvel கல்யாண பொண்ணு lead scene (அப்புறம்தான்....)//
நிற்கவே மாட்டார். 'துறுதுறு'என்று சுழன்று கொண்டே இருப்பார். பாடலின் முடிவில் (லா லா லலல்லா) ஜெயாவை இழுத்துக் கொண்டு ஆடிக் கொண்டே செல்பவர் ஒரு கட்டத்தில் இடது புறமாக அடுத்த ஸ்டெப்பை வைப்பார் என்று நாம் நினைக்கும் மாத்திரத்தில் இனிமையாக ஏமாற்றுவார். எதிர்பாராமல் சடுதியில் வலது பக்கம் மூவ்ஸ் தருவார். அற்புதமாக இருக்கும். சி.வி.ஆர் பாடலோடு 'இடைவேளை' தந்து குதூகலப் படுத்துவார். Boat இல் பின்புறம் பறக்கும் அந்த கத்தரிப்பூ வண்ணக் கோட் அவ்வளவு அழகு. எனக்கு மிகவும் பிடித்த ஷாட்.
//இன்ஸ்பெக்டர் உடை அற்புதமாக இருக்கும். அந்த காட்சியில் stiffness காட்டி எல்லோரையும் குழப்பி பிறகு போலிசை விரட்டும் நயம்.//
துப்பாக்கியை முகத்தருகே வைத்தபடி உணர்த்தி ஜெயாவிடம் தான் உண்மையான போலீஸ் அதிகாரிதான் என்று சிறு தலையசைவில் அருமையாக உணர்த்துவார்.
//தொடர்ந்த நாகலிங்கத்தை சந்திக்கும் காட்சியில் தாராவை கண்டதும் காட்டும் கண நேர சங்கடம் கலந்த முகபாவம்..(தாராவின் நிலைக்கு ராஜாவும் காரணமே)//
சொல்ல வார்த்தைகள் வரவில்லை. அந்த ஒரு வினாடியில் திகைப்பு, குற்ற உணர்வு, 'இவள் எப்படி இங்கே?!' என்ற ஆச்சர்யம் என்று ஓராயிரம் பாவங்கள் காட்டி விடுவார்.
//இரண்டில் ஒன்று காட்சி ஊடல் கலந்து காதல் விருந்து//
'மெத்தை போடும் தேவன் என்று என்னைச் சொல்லம்மா' வரிகளின் போது முழங்கால்களை கொஞ்சம் மடக்கி கைகளை முழங்கால்களில் பதித்து வலது குதிகாலை சற்றே பின்பக்கம் உயர்த்தி ஜெயாவை நோக்கி நடந்து வரும் அழகில் அள்ளிக் கொண்டு போவார். எப்படித்தான் செய்கிறார் என்று ஆச்சர்யம் நம்மிடம் மேலோங்கியபடியே இருக்கும். ஷூவுக்கும், அந்த திராட்சை நிற உடைக்கும் அடடா! எப்படிச் சொல்ல!
கிளைமாக்ஸ் ரகளைகளைப் பற்றி ஒரு பட்டி மன்றமே நடத்தலாம். என்னைப் பொறுத்தவரை இப்படத்தின் கிளைமாக்ஸ் என்னைக் கவர்ந்தது போல வேறு எதுவுமே இல்லை என்பேன். இதே சிக்கல் கிளைமாக்ஸை சி.வி.ஆர் 'சங்கிலி' யிலும் தொடர்வார்.
'ராஜா' என்பதால் எவ்வளவோ வேலைகளுக்கிடையில் உங்கள் அற்புதப் பதிவிற்கு பின்னூட்டம் அளித்து விட்டேன். ராஜா பற்றி முழு விவரங்களையும் ரத்தினச் சுருக்கமாக ஒன்று விடாமல் நான் அணுஅணுவாக ரசித்த காட்சிகளை ரகளையான வார்த்தைகளில் எழுதி ஜமாய்த்து விட்டீர்கள். ரசனையில் இருவர் உள்ளமும் ஒன்றே! விரித்து விவரித்து எழுத ஆர்வமே! முயல்கிறேன்.
அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...96&oe=591F3502
இன்றை தினத்தில் வெளிவந்த
நடிகமன்னனின் திரைக்காவியங்கள்
மோட்டார் சுந்தரம் பிள்ளை(1966),
ராஜா(1972),
சிவகாமியின் செல்வன்(1974),
தீபம்(1977),
அந்தமான் காதலி(1978),
ரிஷிமூலம்(1980),
ஹிட்லர் உமாநாத்(1982),
நீதிபதி(1983),
பந்தம்(1985),
மருமகள்(1986),
குடும்பம் ஒரு கோவில்(1987)
படம் - சிவகாமியின் செல்வன். -26 ஜனவரி 1974.
பாடல்- எத்தனை அழகு கொட்டி கிடக்குது.
பாடலாசிரியர்- புதுமை பித்தன்
இசையமைப்பு- மெல்லிசை மன்னர்.
நடிப்பு- சிவாஜி-வாணிஸ்ரீ.
இயக்கம்- சீ .வீ.ராஜேந்திரன்.
நான் பதினைந்து வயது வயதுக்கு வந்த விடலையாய் ,மீசை முளைக்கும் பருவத்தில், இனம் பிரியா குழப்ப இன்ப உணர்வுகள் வாட்டி வதைத்த போது ,நான் மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்ந்த படம் (குடந்தை நூர்மஹாலில் வரிசையாய் ஐந்து நாட்கள்,பிறகு விரல்கள் போதாது)
அதிலும், என் விருப்பமான ஜோடியின் எத்தனை அழகு பாடலுக்காக மட்டும்(amatory மூட்,erotic arousal எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள்)இத்தனை முறை!!!!????
ஆனால் அதே பாடலை, உலகத்தில் இன்பங்கள் பாக்கி உண்டா என்ற பருவத்தில் பார்க்கும் போதும், ஒரு உருது கவிதை, ஒரு erotic சிற்பம் (அ )சித்திரம் பார்க்கும் புத்துணர்வை தருகிறது என்றால் எழத பட வேண்டியதே.
பொதுவாக சிவாஜி,பெண்களை விட ,பெண்களின் அம்மாக்களையே குறி வைத்தவைத்த முதல் அறுபதுகளில் இருந்து விடு பட்டு, பெண்களையும்,வாலிபர்களையும் ஈர்க்க தொடங்கி ,வசந்த மாளிகையில் ராஜாவாய் சுமதி சுந்தரியுடன் , இளைய மன்மதனாக ஜொலித்த கால கட்டம். வேறெந்த நடிகையுடன் நடித்ததை விட, வாணிஸ்ரீ.யுடன் அவர் நெருக்கம் உயர்ந்த மனிதனில் தொடங்கி நல்லதொரு குடும்பம் வரை தொடர்ந்தது.
காதல் காட்சி என்ற போதும் பொத்தாம் பொதுவாக நடிக்காமல், பாத்திர இயல்பு படி,வித்தியாசம் காட்டி ,சூழ்நிலை, கதையமைப்பு புரிந்து நடிக்கும் சுவை ஆஹா!! அதிலும் எத்தனை variety !!!எவன் எவனையோ காதல் மன்னன் என்று அழைக்கிறோமே?இவனல்லவோ காதல் பேரரசன் என்று தோன்றும்.
பொதுவாக erotism என்பது நமது கோவில்கள்,மத நூல்களில் கொண்டாட பட்ட போதும் ,british inhibitions காரணமாய் ,sexual slavery and deprivation இல் அகப்பட்டு, நல்ல hightened aesthetics என்று சொல்ல படும் erotic sensual intense romance என்று சொல்ல படும் காட்சிகளே எந்த இந்திய படங்களிலும் இல்லை.(அப்படியே ஒன்றிரண்டு வந்தாலும், காஞ்ச மாடு கம்பங்கொல்லையில் புகுந்த case தான்). எனக்கு தெரிந்த வரை இந்த Erotic genre இலும் முழு மதிப்பெண் நம் நடிகர் திலகத்துக்கே.நெஞ்சத்திலே நீ-சாந்தி, மெல்ல நட-புதிய பறவை,பலூன் காட்சி-சுமதி என் சுந்தரி, plum கடிக்கும் வசந்த மாளிகை என்று ஆயிரம் இருந்தாலும் ,இந்த குறிப்பிட்ட பாடல் erotic திலகம்.
எத்தனை அழகு பாடலில்(ஒரே டேக்கில் படமாக்க பட்டதாம்.hats off ! ஒரு சப்பை முத்த காட்சியை 20 டேக் எடுக்கும் கலிகாலம்) முதலில் களம். தங்களுக்குள் மண பந்த ஒப்பந்தம் புரிந்த(மற்றவர்கள் அறியாமல்) ஒரு ஜோடி ஒரு மழை நிறைந்த குளிர் இரவில்,ஒரு அறைக்குள் மாட்டி, தங்களை இழக்கும் காட்சி. அவனுக்கோ இன்பத்தை சோதிக்கும் ஆர்வமும், சுவைக்க துடிக்கும் அவசரமும்,தன்னை மறந்த நிலை. அவளுக்கோ, தயக்கம் கலந்த சம்மதம், தவிக்க விடும் நாணம்,உரிமையரியா உறவின் அறியா அச்சம் என இந்த ஜோடியின் தவிப்பை, சிவாஜியும் ,வாணிஸ்ரீ யும் அற்புதமாய் expressions ,body language ,suggestive movements என்று பின்னியிருப்பார்கள்.
முதலில் இந்த பாடலில் சி.வீ.ஆரின் colour sense and psychology யை பாராட்டியே ஆக வேண்டும்.(இதை அவர் சுமதி என் சுந்தரியிலேயே அற்புதமாக கையாண்டிருப்பார்) வாணிஸ்ரீ முதலில் ஒரு பிங்க் நிற புடவை அணிந்து அறைக்குள் வருவார். பிங்க் ஒரு வளர் சிறுமியின் பெண்மை குறியீடு. பிறகு சிவப்பு வண்ண அவசர ஆடைக்கும் மாறுவார்.சிவப்பு feeling of intense excitement ,romantic warmth ஐ enhance பண்ணும் நிறம்.ஆணுடையது வெளிர் பச்சை நிறம்.fertility ,bodily functional assurance குறிப்பது. இந்த இரண்டு நிறங்களின் இணைப்பே பாதி mood elater ஆக காரணியாகும்.
இதை விட hero -heroine physical ஆன எவ்வளவோ சிவாஜி பாடல்கள் கூட உண்டு. ஆனால், இந்த காட்சி தந்த intensity எந்த காட்சியும் தந்ததில்லை.
ஒரு இள விமானியை, ஒரு target நோக்கி படையெடுக்கும் adventurism ,experimentation முதலிய உணர்ச்சிகளுடன்,ஒரு அவசரம் கலந்த காம விழைவை அற்புதமாய் பிரதிபலிப்பார் NT .வாணிஸ்ரீ (AVM ராஜன் சொல்வது போல சிவாஜிக்காக பிரம்மா ஸ்பெஷல் ஆய் படைத்த கருப்பழகி) சிவாஜியுடன் இழைந்தும், தயங்கியும், உணர்ச்சி வசபட்டும், சூழ்நிலையறிந்து விலகுவதும், இறுதியில் தொடர் தூண்டுதலால் இணங்குவதும் என அற்புதமாய் NT க்கு ஈடு கொடுத்திருப்பார்.
தன இடத்திலிருந்து எழுந்த உடன் சிவாஜி தன pant அய் suggestive ஆக கையால் சிறிதே உயர்த்தும் காட்சி(ஆண்டவன் கட்டளை அழகே வாவிலும் இது உண்டு) , பிறகு ஒரு இலக்கில்லாமல் விலகும் வாணிஸ்ரீயை ஒரு குறிப்பின்றி தடவுவார். பிறகு ஒரு இலக்கில்லா passionate முத்தங்கள்(ஒரு awkward அவசரம் தெரியும்),பிறகு குறிப்பை உணர்த்தும் coat -stand காட்சி, திரை காட்சி என அவசர தூண்டல் ,ஓரு அனுபவமின்மையின் awkward desperation ஐ மிக அழகாக உணர்த்துவார். இதில், வாணிஸ்ரீயின் திரையை இறுக்கும் கைகள்,என்று எல்லாமே suggestive erotism .physical ஆக மிக குறைவான ,தேவையான அணைப்புகள் மட்டுமே இருக்கும்.
பிறகு மஞ்சத்தில் ஓரளவு தயார் நிலைக்கு ஆளானாலும் ,பிறகு அரை மனதுடன் தயங்கி விலகி, தலையணையை மார்புடன் வைத்து காத்து கொள்ள எண்ணும் வாணிஸ்ரீயை ,ஒரு இரையை குறி வைக்கும் இறுதி ஆவேசத்துடன் சிவாஜி அணைத்து இணங்க வைப்பார்.
ஆபாசம், கவர்ச்சிக்கு விடை தெரியாமல் இன்றும் முழிக்கும், நம் தமிழ் நாட்டு தாய்,தந்தை குலங்களுக்கு, இந்த காட்சியின் அழகும்,அமைப்பும், erotic hightened emotional aesthetics புரியாமல்,இந்த படத்தை கை விட்டனர்.இந்த காட்சியில்,மற்ற காதல் காட்சிகளில் இல்லாத, எந்த மிகையும் இருக்காது. சம்பத்த பட்டவர்களின் உணர்வு மிகு நடிப்பாற்றல்,அழகுணர்ச்சி மிகுந்த suggestive shots &gestures தவிர.,
அந்த இளம் ஜோடி எதிர்பாராத விதமாக மாலை மாற்றிக்கொண்டு கிட்டத்தட்ட கணவன்-மனைவியாகி விட்ட நிலையில் ,தனியறையில்.
பக்கத்து இலையில் பாயசம் ஏராளம் என்பது போல மற்றுமோர் இளம்ஜோடியின் கொஞ்சல் மறு அறையில்.
அந்த இளம் விமானி இவற்றில் தூண்ட பட்டு தன் காதலியை புதிதாக பார்க்கிறான்.அந்த பார்வை என்ன சொல்கிறது? அவள் அழகை ரசிக்கிறதா? தனக்கு கிடைத்த புதிய உரிமையில் அழகை விழுங்கி களிக்கிறதா? மெல்லிய அழைப்பு விடுகிறதா? தன் புணர்ச்சி வேட்கையை பறை சாற்றுகிறதா?அந்த காதலியோ ,இணங்கும் ஆசையிலா, புதிய உணர்வின் ,சூழ்நிலையின் பயம் கலந்த நாணமா,விழைவுக்கு பதில் விழைவா,அழைப்பிற்கு தூது விடும் கண்களா?
எழும் நாயகன் தன்னுடைய ஆண்மையின் எழுச்சியையும் குறிப்பால் உணர்த்தி கைகளில் முத்தமிட ,ஏற்றாலும் சிறிதே விலகும் பயம் கலந்த நாணம்.எத்தனை அழகு கொட்டி கிடக்குது,எப்படி மனதை தட்டி பறிக்குது ,அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது ஆனாலும் அச்சம்தான் தடுக்குது என்ற வரிகள் மௌனமான காதலர்களின் உடன் மொழியில் பாவத்தில் ,கண்களின் காவிய மொழியில் ,அனுசரணையான இணைவு நடிப்பில் அப்படியே நமக்கு இந்த காட்சியின் மிச்சத்தை கோடிகாட்டும்.
முதல் அனுபவம் பெற்றவர்களுக்கு புரியும். காதலர்கள் முதலில்
தொடு உணர்வு,தடவல், சிறிதே முன்னேறி முத்த பரிமாற்றம், இவற்றில் தயக்கம்,தடுமாற்றம்,சிறிதே awkwardness கலந்த அவசரம் பிறகு இணையை தூண்டும் காம இச்சை வெளியிடும் அழுத்தமான பிடிப்புகள்,ஆவேசம், பின் காம கட்டிப்பிடித்தல் ,பின்புறமாக கட்டி முத்தமிடும் முயல்வு ,காதலி காதலன் கையை விரும் இடத்திற்கு நகர்த்தல்,கடைசியில் உணர்ச்சி வயப்பட்டு புணர்ச்சிக்கு இயைதல் என்றுதான் போகும். அதை அப்படியே இந்த காதலர்கள் ,பல காதல்களுக்கு முன்னோடியான பாலபாடமாக்குவார்கள்.
அவனோ ,அவளை கால் முதல் தலைவரை தொட்டு தடவி, அவளின் நாணி விலகும் முயற்சியால் சிறிதே குறி தவறுவான்.தினம் வந்து கொஞ்சும் மலர்கொண்ட மஞ்சம் இதழ் கேட்கும் நெஞ்சம் இருந்தாலும் அஞ்சும் ,என்ற மஞ்சத்தில் பின்புற அணைப்பில் இதழை கேட்பான். இருவருக்குமே தயக்கம். கைகளை பிணைக்கும் போதும் இசைவின்மை தெரியும் சிறிதே முறுக்குவது போல.
பிறகு முகத்தை கைகளில் ஏந்தி முத்த பரிமாறல் .coat stand அருகில் எதிர்பார்ப்போடு நிற்கும் காதலியை பதமாக முத்தமிடும் முயல்வு. சிறிதே துணிவுடன் அவள் இடையின் முற்புறத்தில் விழைவின் இறுக்கத்தை விரலில் தேங்கிய தேய்த்தணைப்பு,திரைக்கு ஓடும் காதலியை ,தன்னுடைய வல்லணைப்பால் இடையின் பின்புறத்தின் கீழே இறுக்கி தன்னுடன் பிணக்கும் இறுக்கம்.தயங்கி விலகும் காதலியின் மார்பை தூண்டும் முயல்வு. பிறகு இறுக்கி அணைத்து ஆவேச முத்தம்.உதட்டு கனிக்குள் இருக்கும் சிவப்பு ,விழிக்குள் நடக்கும் விருந்தை படைக்கும். செந்தாழம்பூ மலரவும் ,சிந்தாமல் தேன் பருகவும் ஒரே சுகம் தினம் தினம்.
மஞ்சத்தில் சரியும் அவளோ ,இனி என்னால் விலக முடியாது என்று சரணாகதி பார்வை பார்க்க ,அவனோ படுக்கையில் சரியும் அவளை ஆவேச பின்புற அணைப்பில் இளக்குவான்.தலையணையை மார்புக்கு காவலாகவோ ,அல்லது இதமாகவோ அணைக்கும் அவளை, நானிருக்க இது ஏன் என்று தலையணை பிரித்து, நாயகியே அவன் கைகளை மார்புக்கு அணையாக கொண்டு செல்லும் நிலைக்கு சென்று ,இறுதி உணர்ச்சி வச பட்ட ஆவேச அணைப்பில் நெருப்பு பற்றி கொழுந்து விட்டு எரிந்து ,காதலர்களின் புணர்ச்சி என்ற காம காவியம் இறுதி காணும்.அணைத்து சுவைக்கும் நினைப்பில் துடிக்கும் ......
ஆனந்தோ காமம் கரை கண்டவன். அவன் நினைத்தால் நொடியில் அரங்கேற்றி விடுவான் ஆசையை,ஆனாலும் அதற்கு அணை போட்டு விழைவை சொல்வான். இந்த அசோக் அனுபவமற்றவன். சந்தர்ப்ப சூழ்நிலையால் காதலியுடன் உணர்ச்சி வச பட்டு காம சோதனையின் துடிப்பான பயத்துடன் அணையை உடைத்து காமம் வெல்வான்.
இது இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை சிவாஜியும் ,வாணிஸ்ரீயும் நடித்து காட்டும் விந்தையை ரசியுங்கள். மெல்லிசை மன்னர் காட்சிக்குரிய தயக்கம், தூண்டல் ,அவசரம், ஆவேசம் இவற்றை தனது பாடல் மற்றும் பின்னணியில் தரும் அதிசயம், எஸ்.பீ.பீயின் இச்சை நிறைந்த இளம் குரல் என்று என் மதிப்பில் ரூப்பு தெரா வை விட இந்த சூழ்நிலைக்கு மேலான பாடல் எத்தனை அழகே.
https://www.youtube.com/watch?v=q21g7kBJLnA
தீபம்- 26/01/1977- சில நினைவுகள்.
உனக்காக நான் - அரசியல் சூழ்நிலையால் சுமாரான வெற்றியை ஈட்டியது. 1976 -உத்தமன் தவிர மற்ற படங்கள் superhit range இல் இல்லை. தீக்கனல் என்ற மலையாள படத்தின் உரிமையை வாங்கிய பாலாஜி (கே.ஜீ .ஜார்ஜ் - ஸ்ரீவித்யா கணவர் அல்ல)அன்னகிளி யை super ஹிட் ஆக்கி இருந்த தேவராஜ்-மோகனை அணுக, அவர்கள் மறுக்க, ஆஸ்தான இயக்குனர் சி.வீ.ராஜேந்திரனிடம் கேட்க, subject பிடிக்கவில்லை (????) என்று அவரும் மறுக்க, ஏற்கெனவே காவல் தெய்வத்தில் இயக்குனராய் இருந்து, என்.வீ.ராமசாமி புண்ணியத்தில் ரோஜாவின் ராஜாவில் ஒப்பந்தம் செய்ய பட்டிருந்த கே.விஜயனுக்கு அடித்தது யோகம்.
சிவாஜிக்கு, விஜயனுக்கு பெரிய திருப்பு முனையாய் அமைந்த 1977 இல், சிவாஜியின் மாபெரும் வெற்றி சரித்திரத்தின் ஆரம்பமாய் அமைந்த நல்ல படம். நடிகர்திலகத்தின் அற்புதமான நடிப்பு ,படத்தின் range எங்கேயோ கொண்டு போய் விட்டது.
சுஜாதாவை கடலை போடும் காட்சி.பேச்சு கொடுத்து, அவர் எதில் impress ஆவார் என்று தேடி, பேச்சை வளர்க்கும் காட்சி.
அதே போல தன் வீட்டு guest house வந்து போகும் சுஜாதாவை பார்த்து பொறாமையும்,ஆற்றாமையுமாய் அவர் சுஜாதா அப்பா சுப்பையாவிடம் பொருமல்,ஆத்திரம்,ஆங்காரத்துடன் பேசும் கட்டம்.
சத்யப்ரியாவை piece piece ஆக்கும் ஆழமான ,குரூரம் நிறைந்த சத்தமில்லா மிரட்டல்.
இருதலைக்கொள்ளி எறும்பாய் அவர் சுஜாதா, விஜயகுமார் இவர்களிடம் தனி தனியாகவும் ,சேர்ந்தும் தன்னை புரியவைக்க முயலும் காட்சிகள்.
நடிகர்திலகம் நடிகர்திலகம்தான்.
ராஜபார்ட் ரங்கதுரை வெற்றி அடைய வாழ்த்துக்கள். நடிகர்திலகத்தின் அபூர்வ வித்தியாச நடிப்பிற்காகவே பார்த்தே ஆக வேண்டிய படம்.
ராஜபார்ட் ரங்கதுரை -1973(22 nd Dec 43 Years Completed).
ராஜபார்ட் ரங்கதுரை பற்றி நிறைய முறை எழுத நினைத்து தள்ளி சென்று கொண்டிருந்தது. இப்போது வலை பூ மற்றும் ராகவேந்தர் தயவில் ஊக்கம் கிடைத்து விட்டது.
முதலில் கதை பயணிக்கும் திசைகள்......
ரங்கதுரை இளமை பருவம் ,ஆதரவற்ற நிலை (தம்பி,தங்கை),நாடக ஆசிரியர் ஆதரவு.
ரங்கதுரை நாடக நடிகன் ஆவது, சில பல நாடக காட்சி பதிவுகள்.
ரங்கதுரை திருமண பிரச்சினை ,அதை மீறி நடக்கும் திருமணம், தங்கையின் வாழ்க்கை (திருமண) அது சார்ந்த போராட்டங்கள். தம்பியின் தகுதி மீறிய ஆசை,அது சார்ந்த பொய்மை நிறைந்த பிரச்சினைகள் (நன்றி மறத்தல்).
ரங்கதுரை எதிர்கொள்ளும் எதிர்ப்புக்கள், சில பல வில்லன்கள் (கொலை வரை செல்வது)
இதில் முன் நிற்பது நடிகர்திலகம்.
அவருடைய அமெரிக்கையான நடிப்பு முறை. தொழில் சார்ந்த நடிகர்கள் யாரையும் பகைக்கவோ, யாரிடமும் குரல் உயர்த்தவோ இயலாது. அதனால் ஆதரவு வேண்டும் குரலிலேயே அவர் பாத்திர படைப்பு கையாள படும். ஒரு இறைஞ்சும் மெல்லிய குரலில். நடையிலும் ஒரு மென்மையான பெண்மை கலந்த அமெரிக்கை வெளிப்படும். அவரே பாய்ஸ் கம்பெனி நடிகர் என்பதால் இதில் போய் நடிக்கவா வேண்டும்? வாழ்ந்திருப்பார்.
ஒரு அற்புத விந்தை, அவர் எந்த இடத்திலும் உணர்ச்சிகளை ஓங்கியே வெளிபடுத்த மாட்டார். தனக்கு வசனங்கள் தேவையேயில்லை என்று பல காட்சிகளில் உணர்த்தி அதிசயம் படைப்பார். சுருங்க சொல்ல வேண்டுமென்றால் ,தன் தங்கையின் கணவன் ,இரண்டாம் திருமண காட்சி. சுமார் நான்கு நிமிடங்கள் எந்த வசன துணையுமின்றி ,அவர் பார்க்கும் பார்வை.ஒவ்வொரு பார்வையாளருக்கும் ஒவ்வொரு அர்த்தம் கொடுக்கும். அதில் தெரிவது விரக்தியா,இறைஞ்சலா,எதிர்பார்ப்பா,மிரட்டலா,கொந ்தளிப ்பா, உதாசீனமா,தன்னிரக்கமா,தவிப்பா, ஊமை கதறலா,உண்மை பாசமா,கோழைக்கு விடுக்கும் சவாலா என்று இனம் காண முடியாத ஒரு புதிர்த்தன்மை நிறைந்த நடிப்பின் உச்ச சாதனை. ஒரு எழுத்தாளர் கூட வார்த்தை துணையுடன் ,இந்த உணர்ச்சி கொந்தளிப்பை ,குவியலை கொண்டு வருவது மகா கடினம்.
அதே போல தங்கை இறந்த செய்தி கிடைத்து, அவர் கோமாளி வேடத்தில் நடித்தே ஆக வேண்டிய இடத்தின் சிரித்தே வெளியிடும் ஊமை துயர கதறல்.
தங்கையின் கணவனை (இறந்த பிறகு)பார்த்து நீயெல்லாம் மனுஷனா ரீதியில் உதாசிக்கும் சீ போடா .
தம்பியிடம் உணர்ச்சியை வெளியிட முடியாது,தவிப்புடன் (தகிப்புடன்) பாடும் அம்மம்மா.....
நாடகம் சார்ந்த காட்சிகள் என்றால் நடிகர்திலகத்திற்கு கேட்கவா வேண்டும்? இதில் முக்கியமாக குறிக்க வேண்டியவை பகத் சிங். இதில் கைகள் கட்ட பட்ட நிலையில்,அதன் துணையின்றி நேர்காட்சி,பின் காட்சி,பக்க வாட்டு காட்சிகள் என உடல் மொழி,முகபாவம் ,நடை தாளம்(திமிறி) கொண்டு அவர் வெளியிடும் உசுப்பேற்றும் வீர சுதந்திர உணர்வு. (இதுதான் ஒரிஜினல் action hero .போலி சண்டை காட்சிகள் தேவையில்லை).
அவரின் ஹாம்லெட் நாடக காட்சி ,ஒரு ஷேக்ஸ்பியர் பள்ளிக்கு பாடமாக செல்ல வேண்டிய அதிசயம்.
ஹாம்லெட் ,தன் தந்தையை கொன்று தாயை மணந்த சதிகாரன் சித்தப்பன் கிளாடியஸ் என்பவனை பழிதீர்க்க ,தந்தையின் ஆவியின் வற்புறுத்தலால் மன சாட்சியுடன் உரையாடும் (காதலி ஒபிலியாவிடம் காதலை முறி க்குமுன்பு), காட்சி. வாழ்வதா சாவதா என்ற மன சாட்சி போராட்டம் ,வாழ்வின் அவலங்கள்,சாவுக்கு பின் என்ன எனும் கேள்விகள் என்று மனதத்துவ சிக்கல்கள் நிறைந்த Nunnery Scene என்று connoiseurs குறிக்கும் Act 3 Scene 1.முதல் வியப்பு உலகத்தின் அத்தனை விதமான பாத்திரங்களும் பொருந்தும் முக அமைப்பு.இரண்டாவது வியப்பு ஒதெல்லோ,ஹாம்லெட் பாத்திரங்களுக்கு மற்றவர் குரல் கொடுத்தாலும் அவர் உள்வாங்கி நடித்த சிறப்பு.
ஹாம்லெட் பாத்திர காட்சி சிறிதே சிக்கலான monologue .(இதே மன போராட்ட காட்சி சாந்தி படத்தில் வேறு வடிவில்),வாழ்வதா சாவதா, சாவுக்கு பின் என்ன என்ற மன போராட்டம்.வாழ்க்கை பற்றிய கேள்விகள். Odipus Complex கொண்டு தன் அன்னையிடம் வெறுப்பு கலந்த நேசம் ,இரண்டாம் தந்தையை (சித்தப்பன்)பழிவாங்கும் உணர்வு, தந்தையின் ஆவியால் துன்புற்று, காதலியை துறக்க முயலும் சிக்கல். வெறித்த விழிகளோடு , கத்தியுடன் stylised முறையில் சிந்தனை கலந்த நடையில் அவர் திரும்பும் விதம் இந்த காட்சிக்கு புத்துயிர்ப்பு கொடுக்கும்.இதற்கு குரல் கொடுத்த பேராசிரியர் சுந்தரம் இந்த பாணியில் இந்த காட்சி நடிக்க பட்டதே இல்லையென்றும் ,வசனங்களை காட்சியுடன் இணைக்க மிகவும் பிரயத்தனம் எடுத்ததாகவும் வியந்து பாராட்டி உள்ளார்.
இந்த படத்தின் பலம் சிவாஜி,சிவாஜி,சிவாஜி,சிவாஜி,சிவாஜி(எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதி கொள்ளுங்கள்).அதனை தவிர இதன் நற்தன்மை,நன்னோக்கம்,கண்ணியமான படமாக்கம். ஒன்றிரண்டு பாடல்கள் அம்மம்மா, மதன மாளிகையில்.
பலவீனம் என்றால்,
அலுப்பு தட்டும் திரைக்கதை , தட்டையான பாத்திர வார்ப்புக்கள்.இதில் வரும் பாத்திரங்கள் நல்லவர்-அல்லாதவர் என்ற பகுப்பு. வாத்தியார் வீ.கே.ஆர் பாத்திரத்தில் சுத்தமாக உண்மை தன்மை இன்றி நல்லவராக மட்டும் glorify பண்ண பட்டுள்ளார்.(சிவாஜியின் உண்மை கதை படிப்போருக்கு இந்த பாத்திரம் மிக தட்டையான ஒற்றை பரிமாணம்.அந்த கால படங்களின் glorification ).எல்லா பாத்திரங்களுமே உண்மை தன்மை இல்லாதது. Plastic Characters .
இதில் கூத்து கலை பற்றி,அதில் இருக்கும் நடிகர்களின் வாழ்க்கை பற்றி எந்த ஆழமான பதிவுகளும் இல்லை.
குடும்ப பிரச்சினைகளை எடுத்தாலும், ஒரு பீம்சிங் கால படங்களை போல பிரச்சினைகளில் ஒரு புத்திசாலித் தன வித்தியாச பாத்திர சிக்கல்கள் இல்லை. வெளிப்படையான ,சுவாரஸ்யமற்ற சிக்கல்கள். வெறும் உருக்கம் மட்டுமே கொண்டது.
மற்ற பாத்திரங்கள் miscast என படும் தவறான தேர்வு. முக்கியமாக உஷாநந்தினி, ஸ்ரீகாந்த். நவராத்திரி,தில்லானா எடுபட்டதென்றால் ஏ.பீ.என் , அவருடைய troupe ,சாவித்திரி போன்ற சக நடிகர்களின் பங்களிப்பு.இதில் உஷா நந்தினி போன்ற பதுமைகளோ,மாதவன் போன்ற இயக்குனரோ அந்த மாயத்தை சாதிக்க முடியவில்லை. விஸ்வ நாதனிடம் ,கே.வீ.எம் இன் authentic period music கிடைக்கவில்லை. ஆத்மார்த்தமான நிஜமான பங்களிப்பு ஏ.பீ.என்,கே.வீ.எம் கூட்டணிக்கே சாத்தியம்.
நாடக நடிகனை பற்றிய கதை,சுவையற்ற ,ஜீவனற்ற துணுக்கு கூத்துக்களை தொகுத்தளித்தாலும் ,நாடக நடிகனின் வாழ்கை பற்றி பேசவேயில்லை. மாறாக ,இதன் கதாநாயகன் எந்த தொழில் சேர்ந்தவனாக இருந்தாலும் ,இந்த கதை சொல்ல பட்டு விடலாம் என்பது முக்கிய பலவீனம். பாலமுருகன்-மாதவன் கூட்டு ,இந்த கதைக்கு வலு சேர்க்கவே இல்லை.
ராஜபார்ட் ரங்கதுரை சிவாஜியை மட்டுமே நம்பியது. சிவாஜியால் மட்டுமே வெற்றி பெற்றது. இதற்கு உரிய கவனம் கொடுத்து செதுக்க பட்டிருந்தால் ,மகா வெற்றி பெற்றிருக்க கூடிய சாத்தியகூறுகள் கொண்ட கரு.
வாசு,
எப்போதுமே நமக்குள் ஒரு பந்தம். நான் திருக்குறள் போல் காட்சிகளை சுருக்க, நீ பரிமேலழகராய் விரிக்கும் அழகு அலாதி.
ராகவேந்தர் காலை வணக்கம் சொல்லி அட்டெண்டன்ஸ் போட,முரளி நேரமில்லாமல் தவிக்க, க்ரிஷ்ணாஜி,சாரதி,போன்றோர் காணாமல் போக, கார்த்திக்,சாரதா கௌரவ நடிகர்களாய் கண்ணா மூச்சி காட்ட, புதிய பதிவர்கள் தன திருப்திக்காக கர மைதுனம் மட்டுமே புரிய,திரி பொலிவிழந்து தள்ளாடுகிறது.செந்தில் வேல்,சிவா, Barani,ஆதவன் ரவி,போன்றோர் சிறப்பாக பங்காற்றியும் ,அவர்களுக்கும் போதிய ஊக்கம் வழங்க ஆளில்லை. ஆதவன் ரவியின் அற்புதமான சி.வீ.ஆர் பதிவுகளை ரசித்தேன். தற்செயலாய் என் பங்குக்கு 26 ஜனவரி அமைய ராஜாவும்,சிவகாமியும் சி.வீ.ஆருக்காய் சமர்ப்பணம்.
எழுத வேண்டும் .எல்லோரும் எழுத வேண்டும். யார் முதலில் ஆரம்பித்தார்களோ அவர்களையே அடுத்த திரியை ஆரம்பிக்க சொல்ல வேண்டும்.அதில் பங்கெடுத்தவர்களை மீண்டும் எழுத சொல்ல வேண்டும்.
நம் மக்கள் மாதிரி யாரால் எழுத முடியும்?அந்த சிறப்புக்கு என்ன காரணம்.
"அவர் ஒருவரே."
எழுதுபவர்கள் எல்லோரும் ஜாம்பவான்கள்.ஏதோ என்னால் முடிந்தது, நானும் எழுதலாம் என்று தான் அவ்வப்போது மூளையை கசக்குகிறேன்.அதற்குள் பொக்கிஷம் போல் ஆவணங்கள் வந்து சேர்கின்றன.அவற்றை தவிர்க்க இயலுமா? நாளை எவ்வகையிலேனும் அது பயன்படலாம்.ஒரு விளம்பரத்தை பார்க்கையில் அதன் வரலாறு வந்து போகின்ற நினைவுகள் பெரும் சுகமாகவும், அதே சமயம் கிளர்ச்சியையும் உண்டாக்குகின்றது.இந்த ஆவணப்பதிவுகள் நாளைய வரலாற்றின் தொடர்ச்சிக்காகவும் பயன்படலாம் என்பதற்காககவும் தான்.யாருக்கேனும் இது சோர்வைத் தருமாயின் பொறுத்தருள்க!
நன்றி!