அன்புள்ள வாசுதேவன் சார்,
தங்கள் மகத்தான வரவேற்புக்கு மிக்க நன்றி. நீங்கள் குறிப்பிட்டதுபோல நான் வீறுகொண்டெல்லாம் வரவில்லை. அடிபட்டு நொந்துபோய் நொண்டிக்கொண்டு வந்திருக்கிறேன். அப்படி வந்தவனுக்கு இளைப்பாறக் கிடைத்த திண்ணைகளாக ஜெய், ரவி, முத்து, மற்றும் மதுரகானம் திரிகள் கிடைத்தன. இங்கு இருக்க விட்டார்களென்றால் இருப்பேன். இல்லையென்றால் மீண்டும் நொண்டிக்கொண்டு வீடு நோக்கிப்போய் சேருவேன்.
இதயம் நிறைந்த வார்த்தைகளால் வரவேற்ற தங்களுக்கும், ராகவேந்தர் சாருக்கும், வினோத் சாருக்கும் நன்றி.