http://i60.tinypic.com/24v89sj.jpg
Printable View
அன்பார்ந்த திரு.ரவி அவர்களுக்கு,
தங்களது வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி. அன்பின் மிகுதியால் நீங்கள் பாராட்டினாலும் அந்த தகுதி எனக்கு இல்லை. உங்களைப் போல அமைதியாக, பொறுமையாக இருக்கும் பக்குவம் எனக்கு இன்னும் வரவில்லை.
சொல்வதற்கு வெட்கமாக இருந்தாலும் மனதில் இருப்பதை சொல்லி விடுகிறேன். இங்கே திரு. ரவிரவி என்ற நண்பர் சில பதிவுகளுக்கு லைக் போட்டிருக்கிறார். திரு.வெங்கிராம் என்ற நண்பர் சமீபத்தில் ஒரு பதிவு போட்டார். நடிகர் திலகம் திரியிலும் இவர்கள் இருவரும் பதிவிட்டிருக்கின்றனர். இவர்கள் திரு.கமல்ஹாசன் அவர்களின் ரசிகர்கள். இவர்களின் பதிவுகளைப் பார்த்த பிறகுதான் நம்மையும் இவர்கள் கவனிக்கிறார்கள் போலிருக்கிறது என்று தெரிந்து கொண்டேன்.
திரு.கமல்ஹாசனின் ரசிகர்கள் என்றால் நமக்கு அடுத்த தலைமுறை ரசிகர்கள். நம்மை விட இளையவர்களாகத்தான் இருப்பார்கள். அதே போல திரு.ரஜினிகாந்த் அவர்களின் ரசிகர்களும் நம்மை கவனிக்கக் கூடும். இவர்களுக்கெல்லாம் வழிகாட்டிகளாக, முன்மாதிரிகளாக இருக்க வேண்டிய mt, nt திரிகளின் நண்பர்கள் சச்சரவுகளில் ஈடுபடுவதை பார்த்து அவர்கள் என்ன நினைப்பார்கள்? என்று நானும் சிந்தித்தேன். அவர்கள் இப்படி சச்சரவுகளில் ஈடுபடுவதாகத் தெரியவில்லை. என் முகம் தெரியாவிட்டாலும் வெட்கமாகத்தான் இருக்கிறது.
சர்ச்சைகளால் என் சிந்தனை ஓட்டமும் பாதிக்கப்படுகிறது. நியூட்ரினோ திட்டம் குறித்து எழுதினேன். அடுத்து, மீத்தேன் எரிவாயு திட்டம் குறித்து எழுதலாம் என்று யோசித்தால், அதைப் பற்றி சிந்திக்க முடியாதபடி சூழ்நிலைகள்.
எனக்கும் தெரிகிறது சார். ‘கலைவேந்தன் ஒரு முட்டாள், ஒழிக..’ என்று யாராவது என்னைத் திட்டி பதிவு போட்டால், நானும் பதிலுக்கு ‘அப்படி பதிவு போட்டவர்கள் வாழ்க...’ என்று பதிவிட்டு போய் விடுவேன். ஆனால், நினைவு தெரிந்த நாள் முதல் ஊனோடும் உயிரோடும் கலந்து விட்ட பொன்மனச் செம்மலை விமர்சிக்கும்போது மனம் கேட்க மாட்டேன் என்கிறது.
இதில் எதேச்சையாக அமைந்த ஒன்றை கவனித்தீர்களா? இரு திரிகளிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் ரவிக்குமார் என்ற பெயர் தாங்கிய இந்துவான உங்களின் அந்தப் பதிவு எண், இஸ்லாமிய சகோதரர்கள் வணங்கும் எண்ணான 786. இதுவே, நல்லிணக்கத்தை உண்மையாக நேசிக்கும் உங்கள் நல்ல மனத்துக்கு சான்று. நீங்கள் விரும்பும் அந்த நல்லிணக்கத்துக்கு எங்கள் ஒத்துழைப்பு எப்போதும் உண்டு.
கடுமையான பணிச்சுமைகளால் வர முடியவில்லை என்று கூறியிருந்தீர்கள். இருந்தாலும் எனது அன்பு வேண்டுகோளுக்கு இரங்கி இரவு 12 மணி அளவில் கூட, சிரமம் பாராது பதிவிட்டிருக்கும் உங்கள் பெரிய மனதுக்கும் அன்புள்ளத்துக்கும் நன்றி. பணிச்சுமை இருந்தாலும் விடுமுறை நாட்களிலாவது இங்கே தொடர்ந்து பதிவிடுங்கள் என்று சிரம்தாழ்த்தி வேண்டுகிறேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
எனக்கு வாழ்த்து தெரிவித்த அன்பு சகோதரர் பேராசிரியர் திரு.செல்வகுமார், 1000 பதிவுகளை விரைவில் இடுவதற்கு ஊக்கமளிக்கும் வகையில் வாழ்த்திய சகோதரர் திரு.லோகநாதன் ஆகியோருக்கு பணிவு கலந்த நன்றிகள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
*** 15வது பாகத்தை துவக்கி வைத்து வழிநடத்தும் மூத்த சகோதரர் குமார் அவர்களுக்கு என் பணிவான வாழ்த்துக்கள். ராமருக்கு உதவிய அணில்போல் இந்த ராமச்சந்தரரின் திரிக்கு எனது கடமை தொடரும்..வாழ்க தலைவரின் புகழ் வளர்க்க அவரின் பக்தர்கள்..***** [/U]
http://i58.tinypic.com/10rk1s4.jpg