Originally Posted by Shakthiprabha
Feb 24th
________
இன்னார் இறந்து விட்டார் என்றால், ஏதோ ஒன்று, இன்னாரின் உடலில் இருந்து பிரிந்து செல்கிறது. இன்னார் என்று இதுவரைக் கூறிவந்தது அவர் உடலை. ஆனால் அந்த "ஏதோ ஒன்று" பிரிந்து சென்றதும், உடலுக்கு அங்கு மதிப்பு இல்லை. "அது" பிணம் என்ற அஃரிணைக்கு தள்ளப்பட்டுவிடுகிறது. அதனால் x அல்லது y அல்லது Z அவரவர் உடல் அல்ல. அதிலிருந்து பிரிந்து செல்லும் கண்ணுக்குப் புலப்படாத பொருள்.
அதை "உயிர்" என்று வைத்துக்கொள்வோம். உயிர் என்றால் என்ன? உயிர் என்றால் இதயத்துடிப்பு என்று மீண்டும் உடலுடன் தொடர்பு படுத்திப்பார்ப்பது அறிவீனம். உயிர் என்றால் மூளை என்போமேயானால், ppl who are declared brain dead sometimes exist in coma state, i.e indicating that 'life-force' has not departed. உயிர் என்பது இதயத்துடிப்பு என்றால், இதய்மாற்று அறுவைசிகிச்சை செய்தால், அவ்வுடலில் புதிதாய் உருவெடுத்திருப்பது வேறொருவனா?
உயிர் என்றால் செயலாற்றல், உயிர் என்றால் இயக்கம். அப்படியெனில் உயிர் என்றால் என்ன? life force. ஆன்மா அல்லது soul என்றும் சோல்லலாம். ஆன்மா என்பது எங்கும் பரவி வியாபித்திருக்கும் ஒன்று என்றால், ஒவ்வொரு தனிமனித உடலில் மாயையால் கட்டுண்டு, ஆசைகளின் தொகுப்புக்களைச் சேமித்து, வெவ்வேறு உடல் தாங்கி பிறந்தும் இறந்தும் கிடப்பது ஜீவ-ஆத்மா (ஜீவனின்/மனிதனின் ஆத்மா). மாயின் சாயை இன்றி எங்கும் சிதறிக்கிடப்பது நிறைந்திருப்பது பரமாத்மா (the brahman)
ஆக ஒரு மனிதன் இறந்தால், அவன் தரித்திருந்த உடலினின்று பிரிந்து செல்வது "ஜீவாத்மா". எதற்கு இந்த வியாக்கியானம்!