-
கடந்த அக்டோபர் மாதம் நடிகர் திலகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு சில ரசிகர்களால் இதய ராஜா என்ற இதழ் வெளியிடப்பட்டதும், அதன் விற்பனை மூலம் கிடைக்கும் தொகையை மண் வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் நலனுக்கு வழங்கப்படுகிறது என்பதையும் இங்கே குறிப்பிட்டிருந்தோம். அந்த இதழை படித்து பார்த்த போது பளிச்சென்று கண்ணில் பட்டது ஒரு விளம்பரம். அது ஞான ஒளி படத்தின் விளம்பரம்.
[html:6bd24a9878]
http://farm6.static.flickr.com/5161/...cc1f8d91_z.jpg
[/html:6bd24a9878]
நடிகர் திலகம்தான் பாக்ஸ் ஆபீஸ் கிங் என்பதை பலமுறை பல ஆதாரங்களோடு சொல்லியிருக்கிறோம். இதோ மேலும் ஒரு சாதனை சான்று.
நடிகர் திலகத்தின் BO சாதனைகளைப் பற்றிய ஆதாரங்களைப் பற்றி பேசும் போது இப்போதும் சிலர் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள் அல்லது, வேறு சிலர் படங்களை விட சிவாஜி படங்கள் வசூல் சாதனை புரிந்தது என்பதை நம்ப முடியவில்லையே என்பார்கள். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லும் முத்தாய்ப்பான ஆதாரமாக இந்த விளம்பரம் உதவும் என நினைக்கிறேன்.
விளம்பரமே self explanatory என்றாலும் சில தகவல்கள். இந்த விளம்பரம் 1972 ஏப்ரல் மூன்றாம் வாரம் சென்னை பதிப்பில் வெளியானது. சென்னை நகரிலும் சுற்றுப்புறங்களிலுமாக நடிகர் திலகத்தின் சுமார் 20 படங்கள் திரையிடப்பட்டு ஓடிக் கொண்டிருந்த சூழலிலும் ஞான ஒளி சென்னை பிளாசா திரையரங்கில் தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளில் ஓடியிருக்கிறது [ஞான ஒளி மட்டுமே பிளாசா தவிர மேலும் 4 திரையரங்குகளிலும் ஓடிக் கொண்டிருந்தது]. இது தவிர சென்னை சபாக்கள் தங்கள் உறுப்பினர்களுக்காக மிக அதிகமாக சிறப்பு காட்சிகள் [55 காட்சிகள்] நடத்திய படமும் ஞான ஒளிதான். இவற்றையெல்லாம் தாண்டி இந்தப் படம் இப்படிப்பட்ட சாதனை புரிந்திருக்கிறது என்றால் நடிகர் திலகத்தின் BO பவருக்கு இதை விட ஆதாரம் வேண்டுமா என்ன?
வழக்கம் போல் விளம்பர பிரதியை ஸ்கேன் செய்து அனுப்பியது அன்பு சகோதரர் சுவாமிநாதன் அவர்கள்தான். அவருக்கு நமது மனமார்ந்த நன்றி.
அன்புடன்
-
"அடாது மழை பெய்தாலும் விடாது வித்யாபதியை வரவேற்போம்"
தற்பொழுது திண்டுக்கல் நகரின் என்.வி.ஜி.பி. திரையரங்கில், தினசரி 4 காட்சிகளாக, கலைமகளின் மானுட வடிவமான நமது நடிகர் திலகத்தின் "சரஸ்வதி சபதம்" திரையிடப்பட்டு, கடும் மழையிலும் வசூல் மழை பொழிந்து, பெரும் வெள்ளத்திலும் மக்கள் வெள்ளத்தை பெற்று ஜெயக்கொடி நாட்டி வருகிறது.
பெருமிதத்துடன்,
பம்மலார்.
-
பழனி தாலுகாவில் உள்ள புதுஆயக்குடி என்கின்ற சிற்றூரில் இருக்கும் கோமதி டூரிங் டாக்கீஸில், நேற்று 13.12.2010 திங்கள் முதல், தினசரி 2 காட்சிகளாக, கலையுலக மன்னர்மன்னனின் 286வது திரைக்காவியமான "மன்னவரு சின்னவரு" திரையிடப்பட்டு மகத்தான வரவேற்பைப் பெற்று வருகிறது. பப்ளிசிடிக்காக ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களில், அர்ஜுனும், சௌந்தர்யாவும் வட்டங்களுக்குள் சிறிதாக இருக்கிறார்கள். அதே சமயம் அந்த போஸ்டர்களில் நமது நடிகர் திலகம் Full Standingல் பெரிதாக, பிரதானமாக காட்சியளிக்கிறார்.
இனிக்கும் இத்தகவலை எமக்கு வழங்கிய சிவாஜி மன்ற பேச்சாளர் திரு.தி.அய்யம்பெருமாள் அவர்களுக்கு எமது இதயபூர்வமான நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
-
சென்னை திருவல்லிக்கேணி 'ஸ்டார்' திரையரங்கில், இன்று 17.12.2010 வெள்ளி முதல், தினசரி பகல் 11:30 மணிக் காட்சியாக, கலையுலக மகானின் "சரஸ்வதி சபதம்" திரைக்காவியம் திரையிடப்பட்டு வெற்றிநடைபோட்டு வருகிறது.
இத்தகவலை எமக்களித்த ரசிக நல்லிதயம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
-
கோவை 'டிலைட்' திரையரங்கில், கடந்த வெள்ளி (17.12.2010) முதல் திங்கள் (20.12.2010) வரை,
ஸ்ரீ சிவாஜி பெருமானின் "திருவிளையாடல்", தினசரி 3 காட்சிகளாக திரையிடப்பட்டு, நல்லதொரு வரவேற்பைப் பெற்றுள்ளது.
இத்தகவலை வழங்கிய ரசிக நல்லிதயம் திரு.வெள்ளியங்கிரி அவர்களுக்கு கனிவான நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
-
மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் உள்ள 'லட்சுமி' திரையரங்கில், 17.12.2010 வெள்ளி வைகுண்ட ஏகாதசி முதல் நேற்று 22.12.2010 புதன் வரை ஆறு நாட்களுக்கு, கலையுலக சொக்கநாதரின் "திருவிளையாடல்" திரைக்காவியம் வெளியாகி வெற்றி நடை போட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று சிறப்பு நள்ளிரவுக் காட்சியும் நடைபெற்றுள்ளது.
நாளை 24.12.2010 வெள்ளி முதல், சென்னை மண்ணடி 'பாட்சா' திரையரங்கில் (பழைய 'மினர்வா'), தினசரி பகல் 11:30 மணிக் காட்சியாக, வாழ்வியல் திலகத்தின் "எங்க மாமா" திரைக்காவியம் திரையிடப்படுகிறது.
இனிக்கும் இந்த இரு தகவல்களை வழங்கிய ரசிக நல்லிதயம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு நன்றிகள் பற்பல !
அன்புடன்,
பம்மலார்.
-
சேலம் 'ஸ்ரீசரஸ்வதி' திரையரங்கில், 25.12.2010 சனிக்கிழமை முதல், தினசரி 4 காட்சிகளாக, கலைக்கடவுளின் "ஆலயமணி" திரைக்காவியம் திரையிடப்பட்டு வெற்றி நடைபோட்டு வருகின்றது. இன்று 27.12.2010 திங்கட்கிழமையும் தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வருகின்றது.
இத்தகவலை எமக்கு வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு கனிவான நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
-
மதுரை கீரைத்துறை பகுதியில் உள்ள 'நியூடீலக்ஸ்' திரையரங்கில், சனி(25.12.2010), ஞாயிறு(26.12.2010) இரண்டு நாட்கள் மட்டும், தினசரி 3 காட்சிகளாக, நமது நடிகர் திலகத்தின்
"இருவர் உள்ளம்" திரைக்காவியம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இத்தகவலை வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
-
தற்பொழுது, திண்டுக்கல் 'என்விஜிபி' திரையரங்கில், தினசரி 4 காட்சிகளாக, நமது நடிகர் திலகத்தின் "இருவர் உள்ளம்" திரைக்காவியம் திரையிடப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
இத்தகவலை எமக்கு வழங்கிய சிவாஜி மன்ற பேச்சாளர் திரு.தி.அய்யம்பெருமாள் அவர்களுக்கு கனிவான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
மதுரை ஸ்ரீமீனாக்ஷி திரையரங்கில், நமது இதயதெய்வத்தின் "அவன் தான் மனிதன்", இன்று 7.1.2011 வெள்ளி முதல், தினசரி 4 காட்சிகளாக திரையிடப்படுகின்றது.
தித்திக்கும் இத்தகவலை வழங்கிய மதுரை நல்லிதயம் திரு.வேலாயுதம் அவர்களுக்கு நன்றிகள் பற்பல !
அன்புடன்,
பம்மலார்.
-
மதுரை கீரைத்துறை 'நியூடீலக்ஸ்' திரையரங்கில், கடந்த புதன்(12.1.2011) மற்றும் வியாழன்(13.1.2011) ஆகிய இரு தினங்கள் மட்டும், வாழ்வியல் திலகத்தின் "விளையாட்டுப் பிள்ளை" திரைக்காவியம் தினசரி 3 காட்சிகளாக வெளியாகி நல்லதொரு வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
திரையரங்கில் இக்காவியத்தைக் கண்டு களித்து முடித்து விட்டு வெளியே வந்த ஒருவர், "இப்பெல்லாம் நூறு ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி படம் பாத்தாக் கூட இந்த மாதிரி நல்ல படங்கள பாக்க முடியலையே" என்று தனது ஏக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இத்தகவல்களை அளித்த மதுரை அன்புள்ளம் திரு.வேலாயுதம் அவர்களுக்கு கனிவான நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
-
http://www.mayyam.com/talk/images/misc/quote_icon.png Originally Posted by Murali Srinivas ராஜா படத்தைப் பற்றி இங்கே பலமுறை பேசும் போது, அந்த படம் 1972 ஜனவரி 26 அன்று வெளியானது என்று சொல்லியிருக்கிறோம். மதுரையில் சென்ட்ரலில் வெளியானது என்று சொல்லியிருக்கிறோம். 39 வருடங்களுக்கு பிறகு அதே ஜனவரி 26, அதே சென்ட்ரலில் விழா கொண்டாட நடிகர் திலகம் வருகை புரிகிறார். ஆம், நாளை முதல் மதுரை சென்ட்ரலில் ராஜா வெளியிடப்படுகிறது. அரங்கம் மீண்டும் விழாக்கோலம் காண விழைவோம்.
அன்புடன்
இன்று 21.1.2011 வெள்ளி முதல், மதுரை சென்ட்ரல் சினிமாவில் தினசரி 4 காட்சிகளாக, ஸ்டைல் சக்கரவர்த்தியின் "ராஜா".
அன்புடன்,
பம்மலார்.
-
http://www.mayyam.com/talk/images/misc/quote_icon.png Originally Posted by Murali Srinivas
http://www.mayyam.com/talk/images/misc/quote_icon.png Originally Posted by Murali Srinivas
ராஜா படத்தைப் பற்றி இங்கே பலமுறை பேசும் போது, அந்த படம் 1972 ஜனவரி 26 அன்று வெளியானது என்று சொல்லியிருக்கிறோம். மதுரையில் சென்ட்ரலில் வெளியானது என்று சொல்லியிருக்கிறோம். 39 வருடங்களுக்கு பிறகு அதே ஜனவரி 26, அதே சென்ட்ரலில் விழா கொண்டாட நடிகர் திலகம் வருகை புரிகிறார். ஆம், நாளை முதல் மதுரை சென்ட்ரலில் ராஜா வெளியிடப்படுகிறது. அரங்கம் மீண்டும் விழாக்கோலம் காண விழைவோம்.
அன்புடன்
நீ வர வேண்டும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்காக வெள்ளியன்று வெள்ளித்திரையில் வருகை புரிந்த ஸ்டைல் சக்கரவர்த்தி ராஜா-வை வெள்ளியன்றே வரவேற்ற மதுரை சென்ட்ரல்!
வெள்ளியன்று காலையிலே இந்த வரவேற்பு என்றால் இன்று ஞாயிறு மாலை எப்படியிருந்திருக்கும்!
அன்புடன்
HOT FLASH : "ராஜா ராஜா தான்"
"ராஜா"வின் ரசிக ரோஜாக்கள் இன்று 23.1.2011 ஞாயிறு மாலைக் காட்சியில் கோயில் மாநகரின் சென்ட்ரல் சினிமாவில் திருவிழாக் கொண்டாடி தூள் கிளப்பி விட்டார்கள். படம் தொடங்குவதற்கு முன்பு அரங்க வாயில் முகப்பில் உள்ள போஸ்டர் கட்-அவுட்டுக்கு மாலை அலங்காரங்களும், கற்பூர ஆராதனைகளும் விமரிசையாக நடந்தேறின. பின்னர் படம் தொடங்கியதும், திலகத்தின் ஒவ்வொரு அசைவுக்கும், ஸ்டைலுக்கும், பாட்டுக்கும், Fightக்கும் அரங்கம் அதிர்ந்திருக்கிறது.
"வித்தை ஒன்றை கற்றுக் கொள்ள வாத்தியாரம்மா... நீ கற்றுக் கொள்ள என்னை விட்டால் வேறு யாரம்மா" பாடல் வரிகள் லேசாகத் தான் காதில் விழுந்ததாம். அந்த அளவுக்கு விசில் ஒலிகள் அந்த வரிகளுக்கு விண்ணைப் பிளந்திருக்கிறது.
"கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா" பாடல் அளப்பரையின் உச்சம். அரங்கத்தின் கூரைக்கு மட்டும் பேசும் சக்தி இருந்தால்
"தப்பித்தேன்...பிழைத்தேன்..." என்று கூறுமாம்.
மொத்தத்தில், மாலை 5:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை, சென்ட்ரல் சினிமா அரங்கத்தையே ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார்கள் நம்மவர்கள்.
Gross Collection Report (approx.)
முதல் நாள் வெள்ளிக்கிழமை(21.1.2011) : ரூ.11,600/- [ரூபாய் பதினொன்றாயிரத்து அறுநூறு]
இரண்டாம் நாள் சனிக்கிழமை(22.1.2011) : ரூ.10,900/- [ரூபாய் பத்தாயிரத்து தொள்ளாயிரம்]
இன்று மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை(23.1.2011) : ரூ.11,500/- [ரூபாய் பதினொன்றாயிரத்து ஐநூறு] (மாலைக் காட்சி வரை)
ஞாயிறு மாலைக் காட்சி வரை, மூன்று நாள் மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.34,000/- என்பது விண்ணை அளக்கும் சாதனை.
நமது நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி, ஸ்டைல் சக்கரவர்த்தி, சாதனைச் சக்கரவர்த்தி, வசூல் சக்கரவர்த்தி !!!
சுவையான இத்தகவல்களை சுடச்சுட வழங்கிய அன்புள்ளம், மதுரை அரசமரம் செவாலியே டாக்டர் சிவாஜி குரூப்ஸ் நிர்வாகி திரு.ஏ.என்.குப்புசாமி அவர்களுக்கு உளப்பூர்வமான நன்றிகள் !
பெருமிதத்துடன்,
பம்மலார்.
-
-
-
HAPPY 40th BIRTHDAY TO THE RAJA OF BOX-OFFICE Mr. RAJA : [26.1.1972 - 26.1.2011]
MANY MANY MORE HAPPY RETURNS OF THE DAY !!!
[26.1.1972 : புதன்கிழமை, இன்று 26.1.2011 : புதன்கிழமை, என்னே ஒரு மகத்தான கிழமை ஒற்றுமை !]
இன்று 26.1.2011 குடியரசுத் திருநாளன்று, தனது 40வது பிறந்த நாளை மதுரை சென்ட்ரல் சினிமாவில் ரசிக ரோஜாக்கள் புடைசூழ மங்களகரமாகக் கொண்டாடினார் ராஜா ! இன்றைய வசூல் விவரங்கள் சில தினங்களில் !
ஞாயிறு (23.1.2011) மாலைக்காட்சி வரை மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.34,000/-. ஞாயிறு இரவுக்காட்சி அளித்த மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ,2,000/-. ஆக, ஞாயிறு (23.1.2011) வரை "ராஜா" ஈட்டிய மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.36,000/-.
நேற்று(25.1.2011) மற்றும் முந்தைய நாள்(24.1.2011) மொத்த வசூல் விவரங்கள்: (சற்றேறக்குறைய)
24.1.2011 : திங்கள் : ரூ.7,200/- [ரூபாய் ஏழாயிரத்து இருநூறு]
25.1.2011 : செவ்வாய் : ரூ.7,000/- [ரூபாய் ஏழாயிரம்]
ஆக மொத்தம், முதல் ஐந்து நாட்களில் மட்டும் "ராஜா" அள்ளி அளித்துள்ள மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.50,200/-.
பழைய பட வசூல் வரலாற்றில், இது ஒரு அசுர சாதனை.
சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !
விவரங்களை வழங்கிய மதுரை நல்லிதயம் திரு.ஏ.என்.குப்புசாமி அவர்களுக்கு வளமான நன்றிகள் !
பெருமிதத்துடன்,
பம்மலார்.
-
புதுமைச் சக்கரவர்த்தியின் "புதிய பறவை" திரைக்காவியம், கடந்த வெள்ளி(21.1.2011), சனி(22.1.2011), ஞாயிறு(23.1.2011) ஆகிய 3 நாட்களுக்கு மட்டும் மாம்பழத்து மாநகரின் 'அலங்கார்' திரையரங்கில் தினசரி 4 காட்சிகளாக திரையிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இத்தகவலை அளித்த ரசிக அன்பு நெஞ்சம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு நயமிகு நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
Real Vasool "RAJA"
ஆரவாரம் ! மகிழ்ச்சி !! சந்தோஷம் !!! ஆம்,
மதுரை சென்ட்ரல் சினிமாவில், 21.1.2011 வெள்ளி முதல் 27.1.2011 வியாழன் வரையிலான ஒரு வார காலகட்டத்தில், தினசரி 4 காட்சிகளில், வசூல் சக்கரவர்த்தியின் "ராஜா" அள்ளி அளித்துள்ள மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ.64,200/- [ரூபாய் அறுபத்து நான்காயிரத்து இருநூறு].
பழைய பட வரலாற்றில், பண்டிகை-விடுமுறை வாரம் என சிறப்பான காரணம் எதுவும் இல்லாமல், ஒரு சாதாரண வாரத்தில், இத்தனை வசூல் என்பது விண்ணை முட்டும் சாதனை. இக்காவியத்தை வெளியிட்டவர் ரூ.50,000/- வந்தாலே பரம திருப்தி என்றாராம். இப்பொழுது அவருக்கு பரிபூரண திருப்தி.
புதன்(26.1.2011) மற்றும் வியாழன்(27.1.2011) வசூல் விவரங்கள்: (சற்றேறக்குறைய)
26.1.2011 : புதன் : ரூ.7,500/- (ரூபாய் ஏழாயிரத்து ஐநூறு)
27.1.2011 : வியாழன் : ரூ.6,500/- (ரூபாய் ஆறாயிரத்து ஐநூறு)
ஒரு வார (21.1.2011 - 27.1.2011) மொத்த வசூல் (சற்றேறக்குறைய) : ரூ.64,200/- [ரூபாய் அறுபத்து நான்காயிரத்து இருநூறு]
சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !
வசூல் விவரங்களை வழங்கிய மதுரை நல்லிதயம் திரு.ஏ.என்.குப்புசாமி அவர்களுக்கு கனிவான நன்றிகள் !
பெருமிதத்துடன்,
பம்மலார்.
-
கும்பகோணத்துக்கு அருகே திருவிடைமருதூரில் உள்ள 'கமலா' டூரிங்கில், தங்கத்தமிழ்த்திருமகனின் "தங்கப்பதுமை" திரைக்காவியம் 2.2.2011 புதன் முதல் திரையிடப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது.
இத்தகவலை வழங்கிய குடந்தை அன்புள்ளம் திரு.ராமலிங்கம் அவர்களுக்கு குதூகலமான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
It's RAJA all the way
கும்பகோணத்துக்கு அருகாமையில் தாராசுரத்தில் உள்ள 'சூரியகாந்தி' டூரிங்கில், 18.2.2011 வெள்ளி முதல் இன்று 20.2.2011 ஞாயிறு வரை, தினசரி 2 காட்சிகளாக [மாலை மற்றும் இரவு], ஸ்டைல் சக்கரவர்த்தியின் "ராஜா" திரையிடப்பட்டு வெற்றி வாகை சூடியிருக்கிறது. இன்றைய[20.2.2011] மாலைக் காட்சியில் மட்டும் சற்றேறக்குறைய 200 பேர் இக்காவியத்தைக் கண்டு களித்திருக்கின்றனர். ஒரு டிக்கெட்டின் விலை பத்து ரூபாய். மாலைக் காட்சி வசூல் மட்டும் சற்றேறக்குறைய ரூ.2,000/-. இன்றைய காலகட்டத்தில், டூரிங் டாக்கீஸுகளை பொறுத்தமட்டில், இது சிகர சாதனை.
தித்திக்கும் இத்தகவல்களை வழங்கிய குடந்தை அன்புள்ளம் திரு. ராமலிங்கம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
பழனியில் உள்ள 'சந்தானகிருஷ்ணா' திரையரங்கில், கடந்த 28.1.2011 வெள்ளி முதல் 31.1.2011 திங்கள் வரை நான்கு நாட்களுக்கு, தினசரி 4 காட்சிகளாக, தங்கத்திருமகனின் தன்னிரகற்ற திரைக்காவியமான "திரிசூலம்" திரையிடப்பட்டு பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இச்செய்தியை வழங்கிய சிவாஜி மன்ற பேச்சாளர் திரு.தி.அய்யம்பெருமாள் அவர்களுக்கு கனிவான நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
-
எனக்கு, 1981 -இல் இருந்து ஒரு புதிய நண்பன் அறிமுகம் ஆனான். அவன் என்னை விட 5 வயது மூத்தவனாயிருந்தாலும், ரொம்பவே நெருக்கம் என்பதால், உரிமையோடு ஏக வசனத்தில் அழைக்கிறேன். அவனும் நடிகர் திலகத்தின் பக்தன் தான். நாங்கள் சேர்ந்து பார்த்த முதல் படம் "இருவர் உள்ளம்". அதற்கு முன், அந்தப் படத்தை நான் பார்த்ததில்லை. நடிகர் திலகம் நடித்த 1967 -க்கு முன் வந்த படங்களை 1978 - க்கு மேல் தான் ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்தேன். அது ஒரு working week. மேலும், காலைக் காட்சி, ஆனால், திரை அரங்கம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. இருவர் உள்ளம் அப்போது (1982 -83 என்று நினைவு) சென்னையில் மறு வெளியீடு செய்யப்பட்டு நூறு நாட்களை ஷிப்டிங் முறையில் கடந்து சென்னையையே உலுக்கி விட்டது. இத்தனைக்கும், ரஜினி, கமல் மற்றும் இளைய தலைமுறை நடிகர்கள் அநேகமாக தங்களை establish செய்து விட்டிருந்தனர்.
பலரும், படம் ஆரம்பித்து விட்டதா என வினவிக் கொண்டே அவசர அவசரமாக அரங்கத்தினுள் நுழைந்து கொண்டிருந்தனர். படம் தொடங்குவதற்கு முன்னர், அநேகமாக ஒருவர் கூட விடாமல், அனைவரும் அரங்கத்தினுள் நுழைந்து விட்டனர். எனக்கு புரியவில்லை. என் நண்பன் சொன்னான் "இந்தப் படம் மற்றும் வசந்த மாளிகை-ஐயும் பார்த்து தான் நான் நடிகர் திலகத்தின் பக்தனானேன் என்று கூறி, இந்த இரண்டு படத்திலும், முக்கியமாக, இருவர் உள்ளம் படத்தில், டைட்டில் காட்சியிலிருந்தே, நடிகர் திலகத்தின் ஆட்சி ஆரம்பமாகி விடும். பார்த்து ரசி என்றான். (இரண்டு படங்களும் அநேகமாக ஒரே ஸ்டோரி லைன் தான்). டைட்டில் ஓட ஆரம்பித்தவுடன், காரில் அமர்ந்து கொண்டே, நடிகர் திலகம் படா ஸ்டைலாக, தன் தலையிலிருந்து தொப்பியை எடுத்து, அரங்கத்தில் இருப்பவர்களைப் பார்த்து "ஹலோ" என்று அறிமுகப் படுத்திக் கொள்வது போல் ஆரம்பித்த உடனே எழுந்த ஆரவாரம், பாடல் முடிவடையும் வரை அடங்காமல் அதிகரித்துக் கொண்டே போனது இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. அதுவும் அந்தப் பாடலின் கடைசி சரணத்தில், "இரவு பகல் என்று எதுவுமில்லை இங்கு.." என்று ஆரம்பிக்கும்போது, தனது தொப்பியைப் பிடித்துக் கொண்டே அவர் ஒரு நடை நடப்பார். எனக்குத் தெரிந்து, ஆபரேடர் கூட படத்தை ஓட்ட மறந்து, கை தட்டி ஆர்ப்பரித்திருப்பார். அதற்குப் பின், இருவர் உள்ளம் படத்தை குறைந்தது இருபது முறை பார்த்திருப்பேன். இந்தப் படத்தில் உள்ளது போன்ற ஒரு flow -வை அதற்கு முன்னரும் பின்னரும், இது வரையிலும், தில்லானா மோகனாம்பாள் தவிர்த்து வேறெந்தப் படத்திலும் கண்டதில்லை. இந்தப் படத்தின் DVD சற்று முன்னர்தான் வெளியிடப் பட்டது.
அன்புடன்,
பார்த்தசாரதி
http://www.mayyam.com/talk/images/misc/progress.gif
-
http://www.mayyam.com/talk/images/misc/quote_icon.png Originally Posted by parthasarathy http://www.mayyam.com/talk/images/bu...post-right.png இருவர் உள்ளம் அப்போது (1982 -83 என்று நினைவு) சென்னையில் மறு வெளியீடு செய்யப்பட்டு நூறு நாட்களை ஷிப்டிங் முறையில் கடந்து சென்னையையே உலுக்கி விட்டது.
1992 -ல் நான் திருச்சியில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது யாரும் எதிர் பாராத வகையில் புதிய படங்கள் வெளியாகும் ஸ்டார் திரையரங்கில் இருவர் உள்ளம் திரையிடப்பட்டது ..நடிகர் திலகத்தின் படங்களை பார்க்க திருச்சியின் இண்டு இடுக்குகளில் உள்ள பழைய திரையரங்குகளிலேயே ஆஜராகும் நான் இந்த வாய்ப்பை விடுவேனா ? சுமாரான கூட்டத்தை எதிர்பார்த்து சென்ற எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது . புதிய படத்துக்கு நிகரான கூட்டம் , அரங்கு நிறைந்தது ..ஆரவாரத்துக்கும் குறைவில்லை.
joe
-
விரைவில் வருகிறது
சென்னை 'சாந்தி சினிமாஸ்'ஸில்
கலையுலக மகானின் "திருவருட்செல்வர்"
அரங்க வளாகத்தில் இக்காவியம் வெளிவரப்போவதைக் குறிக்கும் வண்ணம் மூன்று டிசைன்களில் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன.
பொதுமக்களும், ரசிகர்களும் மலைப்புடன் பார்த்து செல்கின்றனர்.
சிவபெருமானின் நாயன்மார்களை வரவேற்க சிவாஜி பெருமானின் நாயன்மார்கள் காத்திருக்கின்றனர்.
பக்தியுடன்,
பம்மலார்.
-
-
மற்றும் பிரம்மாண்டமான அளவில் இடம் பெற்றிருக்கும் நடிகர் திலகத்தின் பேனர்
http://i872.photobucket.com/albums/a...andingpose.jpg
raghavendra
-
நாஞ்சில் நகரின் 'பயோனீர்முத்து' திரையரங்கில், கடந்த 7.3.2011 திங்கள் முதல் 10.3.2011 வியாழன் வரை - நான்கு நாட்களுக்கு தினசரி 4 காட்சிகளாக - புரட்சித்திலகத்தின் முழுமுதற்காவியமான "பராசக்தி" வெளியிடப்பட்டு வெற்றி வாகை சூடியிருக்கிறது.
நமது மாடரேட்டர் திரு.நௌ அவர்கள் சில மாதங்களுக்கு முன்னர் தமிழகம் வந்திருந்த போது ஸ்ரீவில்லிபுத்தூரில் "பராசக்தி" ஓடுவதை பார்த்து வியந்து அத்தகவலை 'பராசக்தி போஸ்டர்' புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். [பதிவிட்ட தேதி : 10.11.2010]. அந்த சுவரொட்டியில் 'எழுத்தின் சூப்பர் ஸ்டாரும் நடிப்பின் சூப்பர் ஸ்டாரும் இணைந்து படைத்த' போன்ற அருமையான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த வாசகங்களைக் கொண்ட அதே டிசைன் போஸ்டர்கள் தற்பொழுது நாகர்கோவிலின் பிரதான இடங்கள் எங்கும் காணப்படுகிறது.
இனிக்கும் இத்தகைய மிட்டாய் தகவலை வழங்கிய ரசிக நல்லிதயம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு ஸ்வீட் தேங்க்ஸ் !
அன்புடன்,
பம்மலார்.
-
ஹாப்பி! நாளை முதல் ஹாப்பி!
நடிகர் திலகத்தின் எவர் கிரீன் வெற்றி சித்திரம் ஊட்டி வரை உறவு கிறிஸ்துமஸ் தினமான நாளை முதல் [25.12.2014] கோவை டிலைட்டில் வெளியாகிறது.
நான் பிறந்த நாட்டிற்கு எந்த நாடு பெரியது?
நடிகர் திலகத்தின் ஜேம்ஸ் பாண்ட் வெற்றி சித்திரம் தங்கச்சுரங்கம் கிறிஸ்துமஸ் தினமான நாளை முதல் [25.12.2014] நெல்லை சென்ட்ரலில் வெளியாகிறது
Choudary will never fail!
நடிகர் திலகம் காவல் துறைக்கு ஈந்த காணிக்கையாம் வித்தகத்திலும் வர்த்தகத்திலும் ஒரே போல் வெற்றி பெற்ற காவியம் தங்கப்பதக்கம் நாளை மறுநாள் முதல் [26.12.2014] சென்னை மகாலட்சுமியில் வெளியாகிறது
சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்
அன்புடன்
-
கிருஸ்துமஸ் & புத்தாண்டை முன்னிட்டு மக்கள் தலைவர், வசூல் சக்கரவர்த்தி நடிகர்திலகம் வெற்றிவிஜயம்.
கோவை டீலைட் தியேட்டரில்
http://i1369.photobucket.com/albums/...ps2e36f95c.jpg
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
SUNDARAJAN
-
கிருஸ்துமஸ் & புத்தாண்டை முன்னிட்டு மக்கள் தலைவர், வசூல் சக்கரவர்த்தி நடிகர்திலகம் வெற்றிவிஜயம்.
நெல்லை சென்ட்ரல் தியேட்டரில்
http://i1369.photobucket.com/albums/...psc140d4d2.jpg
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம். SUNDARAJAN
-
சென்னை பெரம்பூரில் உள்ள 'மஹாலக்ஷ்மி' திரையரங்கில், கடந்த 18.3.2011 வெள்ளி முதல், முற்பகல் 11:30 மணிக் காட்சியாக, கலையுலக ஆண்டவரின் "ஆண்டவன் கட்டளை" வெளியிடப்பட்டு வெற்றி வாகை சூடி வருகின்றது.
இத்தகவலை வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு கனிவான நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்
-
மதுரையம்பதியின் 'சென்ட்ரல் சினிமா' திரையரங்கில்,1.4.2011 வெள்ளி முதல், தினசரி 4 காட்சிகளாக, சிங்கத்தமிழனின் "சிவகாமியின் செல்வன்".
சாக்லெட் தகவலை வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கும், மதுரை நல்லிதயம் திரு.வேலாயுதம் அவர்களுக்கும் ஸ்வீட் நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
எத்தனை வசூலை அள்ளிக் குவிக்குது
மதுரை 'சென்ட்ரல் சினிமா' [தினசரி 4 காட்சிகள்]
சிங்கத்தமிழனின் "சிவகாமியின் செல்வன்"
கலெக்ஷன் ரிப்போர்ட்
1.4.2011 : வெள்ளி : ரூ.10,082/-
2.4.2011 : சனி : ரூ.7,192/-
3.4.2011 : ஞாயிறு : ரூ.10,961/- [மாலைக் காட்சி வரை]
1.4.2011 முதல் இன்றைய [3.4.2011] மாலைக் காட்சி வரை "சிவகாமியின் செல்வன்" அள்ளி அளித்துள்ள மொத்த வசூல் ரூ.28,235/-.
படத்தில் எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது; படமோ எத்தனை வசூலை வாரிக் குவிக்குது.
2011 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் இந்நேரத்தில் இது போன்ற கலெக்ஷன் எல்லாம் சாதனைகளின் சிகரம்!
அதனால் தானே கூறுகிறோம்,
"சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே" என்று.
பெருமிதத்துடன்,
பம்மலார்.
-
கர வருட தமிழ்ப் புத்தாண்டு தினம் மற்றும் சித்திரைத் திருநாளான 14.4.2011 வியாழன் முதல், சென்னை 'சாந்தி' காம்ப்ளெக்ஸில், கலையுலக மகானின் "திருவருட்செல்வர்" திரைக்காவியம் திரையிடப்பட உள்ளது.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இவ்வார இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது.
இந்த அருமையான செய்தியை அளித்த அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு கனிவான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
சென்னை சாந்தி திரையரங்கில் வரும் 14.04.2011 முதல் திரையிடப் படவுள்ள திருவருட் செல்வர் திரைப்படத்தின் நிழற்படங்கள் திரையரங்கின் முகப்பில் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன. இதோ அவை நம் பார்வைக்கு
http://i872.photobucket.com/albums/a...tillShanti.jpg
அன்புடன்
raghavendra
-
அன்பு நண்பர் மோகன்,
நேற்று முற்பகல் முதல் மாலை சுமார் 4 மணி வரையிலும் நான் சாந்தி திரையரங்கில் தான் இருந்தேன். அங்கு நம் இணைய தளம் சார்பாக ஒரு சிறிய எளிய பதாகையினை வைத்து விட்டு, அவசர வேலை நிமித்தமாக உடனே வீடு திரும்பி விட்டேன். உங்களையெல்லாம் சந்திக்க முடியாதது வருத்தம் தான். என்றாலும் நாம் அனைவரும் ஞாயிறு மாலை சந்திப்போம் என்ற ஆவல் எனக்கு ஆறுதல். தாங்களும் பார்த்திருப்பீர்கள். நீங்கள் திரும்புகின்ற திசையெல்லாம் நடிகர் திலகத்தின் திருவுருவம் தான் காட்சி யளிக்கும் என்பது போல் சகோதரி கிரிஜா அவர்கள் அட்டகாசமாக அலங்கரித்துள்ளார். அவற்றையெல்லாம் என்னுடைய கீழ்க்காணும் வலைப்பதிவில் காணலாம்.
http://ntfilmschennai2011.blogspot.com/
அங்கே வைக்கப் பட்டிருக்கும் நம் இணைய தள பதாகை
http://2.bp.blogspot.com/-b-bOo9ECOl...idisplay08.jpg
அன்புடன்
raghavendra
-
என்னுடைய கீழ்க்காணும் வலைப்பதிவில் காணலாம்.
http://ntfilmschennai2011.blogspot.com/
raghavendra
சென்னை சாந்தியில் 03.06.2011 முதல் தினசரி 4 காட்சிகளாக நடிகர் திலகத்தின் 167வது திரைப்படமான ராஜபார்ட் ரங்கதுரை வெளியிடப்பட்டது. ஞாயிறு 05.06.2011 அன்று மாலைக் காட்சி ரசிகர்களின் ஆரவாரமான வரவேற்புடன் கொண்டாடப்பட்டது. அன்றைய காட்சிகளின் சில படங்கள் உங்கள் பார்வைக்கு.
http://i872.photobucket.com/albums/a...rgarlanded.jpg
பாரதமே என்னருமை தாயகமே என்று இறுதி வரை வாழ்ந்து காட்டிய தேசிய திலகம், விடுதலை வீரர்களை நமக்கு அறிமுகப்படுத்தும் போது நாமும் தேசீய உணர்வுடன் அல்லவா பொங்கி எழுகிறோம்.
http://i872.photobucket.com/albums/a...fansgala10.jpg
அம்மம்மா தம்பி என்று நம்பி அவர் நம்மை வளர்த்தார். தாயென்றும் தந்தையென்றும் அவர் நம்மை வளர்த்தார். அவர் நமக்காக வாழ்கின்ற உள்ளம் அல்லவோ என்று ரசிகர்கள் உள்ளம் உருகி உணர்ச்சிப் பெருக்குடன் ஆர்ப்பரிக்கும் காட்சி
http://i872.photobucket.com/albums/a...fansgala08.jpg
மதன மாளிகையில் மந்திர மாலைகளாம் - உதய காலம் வரை உத்தமர் சேவைகளாம் என்று ரசிகர்கள் அரங்கினுள் ஆர்ப்பரிக்கும் காட்சிகள்
http://i872.photobucket.com/albums/a...fansgala03.jpg
http://i872.photobucket.com/albums/a...fansgala04.jpg
http://i872.photobucket.com/albums/a...arations01.jpg
அலங்காரம் கலையாத மலர் மாலை இங்கே - அணிவிக்க அழைக்கின்றோம் அண்ணனை - எங்கே என்று கூறாமல் கூறும் மாலைகள் தயாராக...
http://i872.photobucket.com/albums/a...nigarlands.jpg
-
மக்கள் வெள்ளம்
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3705.jpg
சென்னை மாநகரில் 03.06.2011 அன்று ஒரே நாளில் நடிகர் திலகத்தின் 3 திரைப்படங்கள் திரையிடப் பட்டுள்ளன. முன்னர் மினர்வா என்றழைக்கப்பட்டு, தற்போது பாட்சா என்ற பெயரில் இயங்கும் திரையரங்கில் முற்பகல் 11.30 மணி காட்சியில் பச்சை விளக்கு திரைக்காவியமும், மேற்கு மாம்பலம் ஸ்ரீநிவாசா திரையரங்கில் தினசரி 3 காட்சிகளாக புதிய பறவை திரைக்காவியமும், சாந்தி திரையரங்கில் தினசரி 4 காட்சிகளாக ராஜபார்ட் ரங்கதுரை திரைக்காவியமும், வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளன. அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் நமது நன்றிகளும் வாழ்த்துக்களும். அதே போன்று மூன்று திரைக்காவியங்களையும் வெற்றி பெற வைத்து விநியோகஸ்தர்களுக்கு மென்மேலும் நடிகர் திலகத்தின் திரைப்படங்களைத் திரையிட ஆர்வம் உண்டாக்கும் வகையில் திரளெனத் திரண்டு வந்து ஆதரிக்குமாறு ரசிகர்களிடமும் பொது மக்களிடமும் நமது வேண்டுகோளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
http://3.bp.blogspot.com/-AU28FQfGJd...osterRRD01.jpg
http://1.bp.blogspot.com/-CK0tFzLaAg...00/fcbnr01.jpg
http://3.bp.blogspot.com/-G8KopVsmNS...0/BnrFront.jpg
Posted by sivajifan at 6:04 PM
-
-