is this available online? any one got online videos?Quote:
Originally Posted by HARISH2619
Printable View
is this available online? any one got online videos?Quote:
Originally Posted by HARISH2619
I Could only see 5 minutes.Quote:
Originally Posted by tacinema
Murali Sir,
Neenga participate pannathu coming week aa ?
டியர் முரளி,
நடிகர்திலகத்தின் திரைப்படங்களின் 'ஓப்பனிங் ஷோ' பற்றிய ஓப்பனிங்கே களைகட்டுகிறது. நிச்சயம் எங்களுக்கு அடுத்த விருந்து காத்திருக்கிறது என்று உணருகிறோம். இனி, இன்னும் கொஞ்சநாட்களுக்கு நாங்களெல்லாம் மதுரை திரையரங்குகளின் முன் நின்று, ஓப்பனிங் ஷோக்களை அனுபவிப்போம் என்று எண்ணுகிறோம்.
நண்பர் ராகவேந்திரன் சொன்னதுபோல, பழைய இனிய நினைவுகளை அசைபோடுவதே இன்பம். அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வது பேரின்பம்.
தொடரட்டும் உங்களின் அரும்பணி....
முரளி சார்,
'ராஜா' பட முதல்நாள் அனுபவங்களை எழுதுமுன், முன்னோட்டமாக உங்கள் இளமைக்கால நினைவுகளைச் சொல்லியிருப்பது, எங்கள் நினைவலைகளையும் கிளறிவிட்டன. உங்களைப்போலவே நானும் பிறப்பிலிருந்தே (அதாவது, விவரம் தெரிந்த நாளிலிருந்தே) நடிகர்திலகத்தின் ரசிகன். அவர் படங்களின்மீது எப்போதுமே மிகுந்த ஈடுபாடு. சில படங்கள் சரியாக ஓடாவிட்டால் வருத்தம் என்று இரண்டறக் கலந்தவர்களில் ஒருவன்.
ஆகவே நீங்கள் எழுதும் ஒவ்வொன்றும் எங்களுக்கு சுவையானதாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. குறிப்பாக, பட வெளியீட்டன்று நடந்த சுவையான அனுபவங்கள், என்றைக்கும் நினைத்து நினைத்து மகிழத்தக்கவை.
(முன்னொருமுறை நானும் தியாகம், கவரிமான் படங்களின் சென்னை ஓப்பனிங் விழாக்களைப்பற்றி எழுதியிருந்தது நினைவிருக்கலாம். பகுதி நான்கில் என்று நினைக்கிறேன்).
செந்தில், ராகவேந்தர் சார், tac, சாரதா மற்றும் கார்த்திக் -அனைவருக்கும் நன்றி. உங்கள் பாராட்டுகள் எனக்கு மேலும் உற்சாகமளிக்கிறது.
Thiru,
Yes, the coming Sunday will feature us.
All others,
We (Myself and Ragavendar Sir) had participated in Rasigan Programme in Kalaignar TV. That will be telecast coming Sunday morning 11 AM. But overall, we were disappointed. I have already explained about what happened in our episode in another thread. The link for the same is here.
http://forumhub.mayyam.com/hub/viewt...=asc&start=150
சாரதா,
குலமகள் ராதை பற்றி ஒன்றுமே எழுதவில்லையே?
tac, நீங்கள் மதுரையில் குலமகள் ராதை பார்த்த தகவலை சொல்லுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.
அன்புடன்
PS: இன்று [ஜனவரி 27] திரிசூலம் வெளியாகி முப்பது வருடங்கள் முழுமையடைகிறது. [1979 -2009]
அந்த நாள் ஞாபகம்
அதற்கு பிறகு வரிசையாக நடிகர் திலகம் படங்களை பார்க்க ஆரம்பித்தேன். திருமால் பெருமை, கலாட்டா கல்யாணம் போன்றவைக்கு பிறகு பார்த்த என் தம்பி அந்த அடி மனதில் இருந்த ஆசையை வெளிக்கொண்டு வந்தது. காரணம் அதில் இடம் பெற்ற தெருக்கூத்து பாடல். அதில் நடித்து கொண்டிருக்கும் நடிகர் திலகம் பாடுவதாக அமையும்
தெற்கத்தி கள்ளனடா
தென் மதுரை பாண்டியனடா
தென்னாட்டு சிங்கம்டா
சிவாஜி கணேசனடா !
நான் பார்த்தது மூன்றாவது நாள். அப்போதே தியேட்டரில் எழுந்த ஆரவாரம் அளவிட முடியாதது. அப்படியென்றால் ஓபனிங் ஷோ எப்படியிருந்திருக்கும்? என்ற எண்ணம் தோன்றியவுடன், அப்படிப்பட்ட ஓபனிங் ஷோ பார்க்க வேண்டும் என்று மனது ஆசைப்பட ஆரம்பித்தது. அடுத்தது தில்லானா முதல் நாள் கூட்டம் அந்த ஆசையை அதிகரித்தது. அடுத்து வந்த எங்க ஊர் ராஜா, லட்சுமி கல்யாணம் மற்றும் உயர்ந்த மனிதன் இவை எல்லாமே முதல் வாரத்தில் பார்த்தேன் என்றாலும் ஓபனிங் ஷோ ஆசை நடக்கவில்லை. இவ்வளவு ஏன் ஓபனிங் டே கூட பார்க்க முடியவில்லை. காரணம் சிறு வயது + கூட்டம் அதிகமாக இருக்கும்.அதனால் வேண்டாம் என்ற வீட்டார் முடிவு.
அடுத்த காலண்டர் வருடம் [1969] ஆரம்பம். ஜனவரி 1 அன்றே அன்பளிப்பு ரிலீஸ். ஆனால் வழக்கம் போல் மூன்றாவது நாள் தான் பார்த்தேன். அடுத்தது தங்க சுரங்கம் மார்ச் மாதம். Annual எக்ஸாம் டைம். எனவே பார்க்க முடியவில்லை. தொடர்ந்து காவல் தெய்வம், குருதட்சணை, அஞ்சல் பெட்டி 520, நிறை குடம் எல்லாம் முதல் வாரம் ஆனால் முதல் நாள் கிடையாது. அடுத்து தெய்வ மகன் ரிலீஸ் செப் 5 அன்று. வழக்கம் போல் மூன்றாவது நாள் ஞாயிற்றுக்கிழமை. [இந்த மூன்றாம் நாளின் காரணம் என்னவென்றால், நாங்கள் ஆரப்பாளையத்தில் குடியிருந்தோம். சனிக்கிழமை மதியம் [ஹாப் டே ஸ்கூல்] டவுனில் இருக்கும் தாத்தா வீட்டிற்கு போவேன். ஞாயிறு மாலை வரை அங்கே வாசம். பிறகு திரும்பி ஆரப்பாளையம். எனவே படங்கள் சனிக்கிழமை மாலை,இரவு அல்லது ஞாயிறு காலை, மதியம் இதில் ஏதாவது ஒரு காட்சி என்னை என் கஸின் கூட்டிக்கொண்டு போவான்]. அடுத்த ஒரு மாதத்தில் திருடன் ரிலீஸ். அதுவும் அப்படியே.
இந்த நிலையில் தீபாவளி வருகிறது. எல்லோரும் வெகு ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் சிவந்த மண் வெளியாகப் போகிறது. படத்தை பற்றி ஏராளமான செய்திகள்.
எக்கச்சக்க எதிர்பார்ப்புகள். பாடல்கள் ரெகார்ட் வெளி வந்துவிட்டது. அது வரை எந்த தமிழ் படத்தின் பாடலுக்கும் செய்யாத வகையில் பட்டத்து ராணி பாடலுக்குத்தான் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டது என்ற உற்சாக செய்தி உலவிக்கொண்டிருக்கும் போது மற்றொரு செய்தி வருகிறது. தீபாவளிக்கு வெளியாகும் நம் நாடு படத்தில் இடம் பெறும் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் பாடலுக்கு அதிகமான இசைக்கருவிகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்ற செய்தி. வழக்கம் போல் இரு தரப்பு ரசிகர்களும் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட, எங்கே திரும்பினாலும் ஒரு பக்கம், ஒரு ராஜா ராணியிடம் மற்றும் பட்டத்து ராணி பாடல்கள் ஒலிப்பெருக்கியில் முழங்க, மற்றொரு பக்கம் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நானும், வாங்கய்யா வாத்தியாரய்யாவும் அலற, மதுரையே குலுங்குகிறது.
நவம்பர் 7 வெள்ளி, நம் நாடு ரிலீஸ். மறுநாள் 8ந் தேதி தீபாவளி. 9ந் தேதி ஞாயிறன்று சிவந்த மண் ரிலீஸ். தீபாவளியன்று மாலை தாத்தா வீட்டிற்கு வந்தாகி விட்டது. அன்று மாலையே படம் ரிலீஸ் ஆகும் சென்ட்ரல் தியேட்டர் முன்னாள் கூட்டம் கூட்டமாக ரசிகர்கள். படத்தை பற்றிய பல்வேறு செய்திகளை பேசிக்கொண்டு நிற்கிறார்கள். மறு நாள் காலை விடிகிறது. எப்படியிருந்தாலும் படம் பார்க்க முடியாது. ஆனால் தியேட்டர் எப்படியிருக்கிறது என்று பார்க்க காலை 7.45 மணிக்கே நானும் என் கஸினும் போகிறோம். மேல மாசி வீதியில் இருந்த வீட்டிலிருந்து தட்டாரச் சந்து வழியாக கோபால கொத்தன் தெருவில் வலது பக்கம் திரும்பி சென்றால் சென்ட்ரல் சினிமாவை அடையலாம். தியேட்டருக்கு எதிரே ரத்தினசாமி லாட்டரி கடை அருகே நிற்கிறோம். 10.30 மணிக்கு ஆரம்பமாக போகும் காட்சிக்கு அந்த நேரத்திலேயே கட்டுங்கடங்காத மக்கள் வெள்ளம். படத்தின் பானர் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டு விட்டது. பட்டத்து ராணி பாடலில் வரும் அரபி ஷேக் வேடத்தில் சாட்டையுடன் நிற்கும் நடிகர் திலகத்தின் கட் அவுட் மிகப்பெரிய மாலையை தாங்கி நிற்கிறது. அந்த நேரத்திலேயே கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் லாட்டி வீசுகிறது. அந்த இடத்தை விட்டு விலக மனமில்லாமல் விலகி வருகிறோம். மாலை வீட்டுக்கு திரும்பி போக வேண்டும். மாலை 5 மணி அளவில் என்னை சைக்கிளில் வைத்து கஸின் தியேட்டர் வழியாக கூட்டி போகிறான். காலையில் பார்த்ததை விட அதிகமான மக்கள் வெள்ளம். தியேட்டர் வாசலில் ஆரம்பித்து டெல்லி வாலா ஸ்வீட் ஸ்டால் வரை ஒரு வரிசை. மற்றொன்று அதே போல் கவுண்டரில் ஆரம்பித்து டவுன் ஹால் ரோடு திரும்பி மீண்டும் மேல அனுமந்தராயன் கோயில் தெருவில் திரும்பி பின்னால் திண்டுக்கல் ரோடு வரை நிற்கிறது. மற்றொரு வரிசை தியேட்டர் வாசலில் ஆரம்பித்து, டவுன் ஹால் ரோடு ஸ்போர்ட்ஸ் சாதனங்கள் விற்கும் பாப்லி பிரதர்ஸ் கடை தாண்டி, பாட்டா வையும் கடந்து, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் கடையையும் தாண்டி, மேல மாசி வீதி திரும்பி அதே சென்ட்ரல் சினிமாவின் பின்புற கேட் இருக்கும் சந்து வரை நீண்டு நின்றது.[மதுரை தெரிந்தவர்களுக்கு நான் சொல்வதன் மூலம் எந்தளவிற்கு கூட்டம் இருந்தது என்பதை புரிந்து கொள்ள முடியும்].இன்றும் மனக்கண் முன்னே அந்த காட்சி அப்படியே நிற்கிறது. படமே ஞாயிறன்றுதான் ரிலீஸ் என்பதால் அடுத்த வாரம் ஞாயிறுதான் பார்க்க முடிந்தது.
(தொடரும்)
அன்புடன்
அந்த நாள் ஞாபகம்
இப்படியாக 1969 முடிந்து 1970 ஆரம்பித்தது. நாட்கள் செல்ல செல்ல இந்த ஆசையும் அதிகரித்தது. பொங்கலன்று (ஜனவரி 14 ) எங்க மாமா ரிலீஸ். இந்த படத்தையாவது முதல் நாள் பார்க்க வேண்டும் என்று நானும் என் கஸினும் முடிவு செய்தோம். எங்களுக்கு வசதியாக எங்க மாமா தங்கம் தியேட்டரில் ரிலீஸ் ஆனது. ஆசியாவின் மிகப பெரிய அரங்கமானதால் டிக்கெட் கிடைப்பதில் பிரச்சனை இல்லை. வீட்டில் ஒரு வாரத்திற்கு முன்பே சொல்லி, சொல்லி ஒரு சின்ன வாக்குறுதி வாங்கினோம். முதல் நாள் இரவு மறுபடியும் தடை. "பொங்கலன்னிக்கு சினிமா தியேட்டருக்கு போய் உட்காருவாங்களா? வேண்டாம்". மறுபடியும் பேசி, பேசி ஒரு வழியாக நைட் ஷோ போகலாம் என்று முடிவானது. பொங்கலை விட டைம் எப்போது நைட் ஆகும் என்பதிலேயே இருந்தது. ஒரு வழியாக போய் டிக்கெட் வாங்கி உள்ளே நுழையும் வரை நம்பிக்கை இல்லை.
தியேட்டருக்குள் நுழைந்து காலை உள்ளே வைத்தால் ஏதோ குவியலுக்குள் கால் வைப்பது போல தோன்றியது. குனிந்து பார்த்தால் காகித குவியல். ஒரு வழியாக உள்ளே போய் உட்கார்ந்தோம்.
படம் ஆரம்பித்த போது பயங்கர த்ரில் மனதில். பொதுவாக முதலில் படத்தில் டைட்டில் வரும். பிறகு நடிகர் திலகத்தை காட்டுவார்கள். ஆனால் எங்க மாமா படத்தில் முதலில் நடிகர் திலகம் வருவார். அதன் பிறகே டைட்டில் ஓட ஆரம்பிக்கும் அவர் முகத்தை திரையில் காண்பித்தவுடன் திரையே தெரியாத அளவுக்கு பேப்பர்மாரி பொழிந்தது. கைதட்டல் காதை கிழித்தது. ஒரு விதமான பிரமிப்புடன் இதை பார்த்துக் கொண்டிருந்தோம். நான் தன்னந்தனி காட்டு ராஜா. சொர்க்கம் பக்கத்தில் பாடல்களில் வரும் ஸ்டைல்களுக்கு ஆரவாரம் என்றால், செல்லக்கிளிகளாம் பள்ளியிலே பாடலில் அந்த இந்த இளமையான க்ளோஸ் அப் காட்சிக்கு செம அப்ளாஸ்.
என்னங்க சொல்லுங்க பாட்டுக்கு மறுபடியும் அலப்பறை. ஆனால் மொத்த தியேட்டரும் ஆர்ப்பரித்தது எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் பாடலில் நடிகர் திலகம் கண்களில் கண்ணீரை அடக்கி கொண்டு பாடும் அந்த நடிப்புக்கே. இது தவிர அன்றைய சூழலை ஒட்டி எழுதப்பட்ட சில வசனங்களுக்கு ஏகப்பட்ட வரவேற்பு. சண்டைக் காட்சிகளுக்கும் அது போல ஆரவாரம். மொத்தத்தில் படம் முடிந்து வரும் போது எதோ பெரிதாக சாதித்து விட்டது போல ஒரு பீலிங்.
அடுத்து விளையாட்டு பிள்ளை பிப் 6 வெள்ளிக்கிழமை ரிலீஸ். எனவே மறு நாள் நைட் ஷோ தான் பார்க்க முடிந்தது. வியட்நாம் வீடு ஏப்ரல் 11 அன்று ரிலீஸ். எக்ஸாம் நேரம். முதல் வாரம் தான் பார்த்தேன். அடுத்த படம் எதிரொலி ஜூன் 27 சனிக்கிழமை ரிலீஸ், அதே தங்கத்தில். அதற்கு நைசாக பேசி பெர்மிஷன் வாங்கி முதல் நாள் ஈவினிங் ஷோ பார்த்தோம். ஆனால் படமே சீரியஸ் கதை என்பதால் பெரிய அளவில் ரசிகர்கள் கொண்டாட முடியவில்லை. உங்க நல்ல மனதுக்கு ஒரு குறையுமில்லே பாடலுக்கு மட்டுமே ஆரவாரமான கைதட்டல்.
அடுத்த படம் ராமன் எத்தனை ராமனடி ஆகஸ்ட் 15 நியூ சினிமாவில் வெளியானது. ஆனால் முதல் நாள் பார்க்க முடியவில்லை. மூன்றாவது நாள் திங்களன்று [என் நினைவு சரியாக இருக்குமானால் அன்று கோகுலாஷ்டமி அதனால் ஸ்கூல் லீவ்] பார்த்தேன். மூன்றாவது நாள் பார்க்கும் போதே முதல் நாள் போல தியேட்டர் சூழ்நிலை நிலவியது. சாப்பாட்டு ராமன் விஜயகுமாராக மாறும் சீன் தொட்டு அரங்கமே அதிர ஆரம்பித்தது. சத்ரபதி சிவாஜியாக நடிகர் திலகம் வசனம் பேசும் போது உச்சக்கட்ட அலப்பறை. அதிலும் "நான் அரசியல் தெரியாதவனா? அரசு வித்தைகள் புரியாதவனா?" என்ற வரிகளை பேசும் போது தியேட்டரில் எழுந்த உணர்ச்சிமயமான வாழ்க கோஷங்களும் (வேறு சில கோஷங்களும் எழுந்தன) இன்றும் நினைவில் நிற்கிறது.
இந்த நேரத்தில் முதன் முறையாக அந்த வருடம் அக்டோபர் 1 நடிகர் திலகத்தின் 42-வது பிறந்த நாளை மிக பெரிய அளவில் கொண்டாடுவது என்று அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றம் முடிவு செய்து, இரண்டு நாள் மாநாடாக அக்டோபர் 1 மற்றும் 2 தேதிகளில் சேலத்தில் நடை பெற்றது. லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்ட அந்த மாநாட்டு செய்திகள் எல்லா ரசிகர்களுக்கும் மிக பெரிய உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. இதன் பின்னால் தீபாவளி திருநாள் அக்டோபர் 29 அன்று. ரசிகர்களுக்கு மேலும் இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுக்க இரண்டு படங்கள் எங்கிருந்தோ வந்தாள் மற்றும் சொர்க்கம் ரிலீஸ்.
இந்த சமயத்தில் முதன் முறையாக மதுரையில் மன்றம் மூலமாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் டிக்கெட்கள் முதல் நாள் அனைத்து காட்சிகளுக்கும் வழங்கப்படும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ரிசர்வேஷன் போன்ற வசதிகள் இல்லாமல் இருந்த அன்றைய காலக்கட்டத்தில் டிக்கெட் விலையை விட ஒரு ரூபாய் மட்டுமே அதிகமாக கொடுக்க வேண்டும் என்பதால் ரசிகர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாய் அமைந்தது. மன்றத்தில் உறுப்பினராக இல்லாதவர்களுக்கும் இந்த டிக்கெட் வழங்கப்படும் என்ற செய்தி எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. காரணம் நாங்கள் மன்ற உறுப்பினர்கள் இல்லை. இப்படி டிக்கெட் கிடைக்கும் என்பதால் ஓபனிங் ஷோ பார்க்கும் வாய்ப்பும் ஆசையும் அதிகரித்தது. ஆனால் தீபாவளியன்று காலையில் சினிமா போக அனுமதி கிடைக்காது. மாலைக் காட்சி மட்டுமே சாத்தியம். வெளியாகும் இரண்டு படங்களில் எதை பார்ப்பது என்ற Dilemna. கடைசியில் சொர்க்கம் போவது என்று முடிவானது. சென்ட்ரல் சினிமாவில் மாலை காட்சி டிக்கெட்டும் வாங்கியாகி விட்டது. என் கஸின் ஸ்ரீதேவியில் எங்கிருந்தோ வந்தாள் ஓபனிங் ஷோவிற்கும் டிக்கெட் வாங்கி விட்டான். காலையில் ஆரப்பாளையத்தில் எங்கள் வீட்டில் தீபாவளி கொண்டாடும் போதும் மனதில் எங்கிருந்தோ வந்தாள் ஓபனிங் ஷோ பற்றிய நினைவே. மாலை தாத்தா வீடு வந்து அவனை பார்த்து படம் எப்படியிருக்கிறது என்று தான் முதலில் கேட்டேன். இரண்டு படமும் டாப் [அந்த காலக்கட்டத்தில் சூப்பர் என்ற தூய தமிழ் வார்த்தை அகராதியில் இடம் பெற்றிருக்கவில்லை] என்ற மகிழ்ச்சியான செய்தியை அவன் எனக்கு சொன்னான்
(தொடரும்)
அன்புடன்
நம்முடைய இணைய தளத்தில் வாரம் ஒரு படம் பகுதியில் தற்பொழுது சாந்தி பிலிம்ஸ் அன்புக் கரங்கள் இடம் பெற்றுள்ளது
Enjoying the series Mr.Murali :thumbsup:
Murali-sar, you made this thread more meaningful.
I have never seen any NT films, pre-1980s on big screen. My dad and his side of relatives being big MGR film fans, my experience has mostly been watching them...though the reception is more muted compare to what happened (and still happening) in TN.
So, your post really puts us back to how it was at that time, how huge NT was (and is), how wonderful the viewing experience is, before and after.
Awaiting your next posts.
நடிகர்திலகத்தின் படங்களை பார்ப்பது ஒரு பரவசமென்றால் அதைவிட பரவசம் தியேட்டர்களில் ரசிகர்கள் செய்யும் ஆரவாரம்,அலப்பரை.முரளி சார் அதை இங்கே நேரடி ஒளிபரப்பு செய்துகொன்டிருக்கிறார்.அந்த இனிய நினைவுகளை கண்முன்னே கொன்டுவந்ததற்க்காக நடிகர்திலகத்தின் ரசிகர்கள் உஙகளுக்கு என்றென்றும் கடமைபட்டிருக்கிறோம் :notworthy:
Thanks Prabhu. Hope Madurai is recreated in your mind. I was wondering and was about to ask you why you have not posted anything about the two movies. I know that even if the discussed films are not your cup of tea, you would still not hesitate to say that.
Rakesh, thank you. I should thank tacinema for making me write.
Thanks Senthil.
Regards
அந்த நாள் ஞாபகம்
மாலை தியேட்டருக்கு போகிறோம். சென்ட்ரல் சினிமா வாசலில் திருவிழா கூட்டம். மன்ற டோக்கன் வைத்திருப்பவர்கள் பின் பக்க வாசல் வழியாக வர வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அங்கே சென்றால் அதை விட கூட்டம். பெண்கள் செல்லும் வழி வேறு. அந்த சின்ன சந்தில் குவிந்த ரசிகர்களை உள்ளே அனுமதிக்க ஒரு சரியான ஏற்பாடு செய்யப்படாததால், ஒரு குழப்பமான சூழ்நிலை. நேரம் ஆக ஆக கூட்டம் பொறுமையை இழக்க, போலீஸ் ரசிகர்களை கட்டுப்படுத்த லாட்டி வீச, ரசிகர்கள் மிகுந்த கோபம் அடைந்தார்கள். அதற்கு காரணம் இருந்தது. சேலம் மாநாடு வெற்றிகரமாய் நடந்து முடிந்த பிறகு, சென்னையில் சாந்தி தியேட்டரின் மீது தாக்குதல் நடந்தது. அந்த நேரத்தில் போலீஸ் அதை கண்டும் காணாமல் நடந்து கொண்டது.[இதை பற்றி ஏற்கனவே நடிகர் திலகத்தின் அரசியல் பயணத்தில் எழுதியிருக்கிறேன்]. கொந்தளித்த ரசிகர்களை நடிகர் திலகம் அமைதிப்படுத்தியிருந்தார். எனவே போலீஸ் லாட்டி வீச ஆரம்பித்தவுடன் ரசிகர்கள் ஒன்று திரண்டு போலீசை சுற்றி வளைத்து "உங்களுக்கு கணேசன் ரசிகர்கள்னா இளிச்சவாயங்களா தெரியுதா?" என்று தகராறு செய்ய ஆரம்பிக்க நிலைமை ரசாபாசம் ஆவதற்குள் உள்ளே அனுமதித்து விட்டார்கள்.
படம் ஆரம்பிக்கும் முன் எங்கிருந்தோ வந்தாள் படத்தை பற்றிய செய்திகளை [அங்கே வந்திருந்த பெரும்பாலோர் பார்த்து விட்டவர்கள். காரணம் ஷோக்கள் நடந்த விதம் அப்படி. சொர்க்கம் 4 காட்சிகள். எங்கிருந்தோ வந்தாள் 5 காட்சிகள்.காலை 9 மணி அல்லது பகல் 12 மணி காட்சி EV பார்த்து விட்டு மாலை இங்கே வந்து விட்டார்கள்] அவர்கள் சொல்ல சொல்ல எதிர்பார்ப்பு எகிறியது. இங்கே படம் ஆரம்பிக்க டைட்டிலுக்கு முன்பே முதல் காட்சி. அதில் நடிகர் திலகம் தோன்ற தியேட்டரில் ரணகளம். பொன்மகள் வந்தாள் பாட்டு ஸினெல்லாம் பார்க்கவே முடியவில்லை. சீட் மேல் ஏறிக்கொண்டு டான்ஸ். ஒவ்வொரு ஸ்டைலுக்கும் அலப்பறை. ஒரு முத்தாரத்தில் பாடலில் வரும் நடைக்கும், "நீலவானம் மெல்ல மெல்ல சிவந்து போனதேன்" வரிகளில் கண்கள் சிவந்த நடிகர் திலகத்தின் க்ளோஸ் அப் ஷாட்க்கும் செம கிளாப்ஸ். நடிகர் திலகத்தின் திரைப்படங்களில் இடம் பெற்ற மிக சிறந்த சண்டை காட்சிகளில் ஒன்று சொர்க்கம் படத்தில் வந்த ஓடும் ரயிலில் நடக்கும் சண்டை. அந்த நேரத்தில் தியேட்டரே இரண்டு பட்டது. [சில பல உணர்ச்சிவசமான முழக்கங்கள்]. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். படம் முடிந்தது. ரொம்ப சந்தோஷமாக வெளியே வந்தோம்.
அடுத்த மூன்று நாட்களில் ஞாயிறன்று மாட்னி எங்கிருந்தோ வந்தாள் பார்த்தேன். இந்த படங்கள் வெளிவந்து ஒரு மாதத்திற்குள்ளாக நவம்பர் 27 வெள்ளி அன்று பாதுகாப்பு தங்கம் தியேட்டரில் வெளியானது. அதை வழக்கம் போல் மூன்றாவது நாள் பார்த்தேன்.
1970-ல் முதல் நாள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்து. ஆகவே அடுத்த வருஷம் ஓபனிங் ஷோ பார்த்து விடலாம் என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் விதி சதி செய்தது.1971 -ல் முதல் படம் இரு துருவம். பொங்கலன்று நியூசினிமாவில் வெளியானது. பொங்கல் என்பதால் போக முடியவில்லை. மூன்றாவது நாள் தியேட்டர் விஜயம். அடுத்த படம் தங்கைக்காக. பிப் 6 அன்று ஸ்ரீதேவியில் ரிலீஸ். உடல் நிலை சரியில்லாததால் போக முடியவில்லை. மூன்று வாரங்களுக்கு பிறகே பார்க்க முடிந்தது. அந்த வருடத்தின் மூன்றாவது படம் அருணோதயம். மார்ச் 5 வெள்ளியன்று நியூசினிமாவில் வெளியானது. அன்று தமிழக சட்டசபைக்கும் இந்திய நாடாளுமன்றத்திற்கும் பொதுத் தேர்தல். எனவே போகவில்லை. ஞாயிறன்று சென்றேன். அந்த மாதத்திலே 26ந் தேதி ஸ்ரீதேவியில் குலமா குணமா ரிலீஸ். ஆனால் பரீட்சை. பதினைந்து நாட்களுக்கு பிறகே பார்க்க முடிந்தது. லீவ் விட்டவுடன் ஒரே நாளில் அதாவது ஏப்ரல் 14 அன்று இரண்டு படங்கள் வெளியாகியும் எதுவுமே பார்க்க முடியவில்லை. சுமதி என் சுந்தரி அலங்கார் தியேட்டரிலும், பிராப்தம் (சென்ட்ரல் சினிமா) இரண்டு படங்களையும் முதல் வாரத்தில் பார்த்தேன்.
இப்படியிருக்க நடிகர் திலகத்தின் 150-வது படம் சவாலே சமாளி ஸ்ரீதேவியில் ஜூலை 3 சனிக்கிழமை வெளியாகிறது. ஓபனிங் ஷோ பார்க்கவேண்டும் என்று மிகுந்த முயற்சி எடுத்தும் ஸ்கூல் இருந்ததால் போக முடியவில்லை. முதல் வாரம் பார்த்தேன். அடுத்த படம் தேனும் பாலும் அதே மாதம் (ஜூலை) 22 அன்று சிந்தாமணியில் வெளியானது. இந்த படம் வெகு நாட்களாக தயாரிப்பில் இருந்ததால் பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லை. நான் ரிலீஸ் தியேட்டரில் படம் பார்க்கவில்லை. ஷிப்டிங் தியேட்டரில் தான் பார்த்தேன். அடுத்த மாதம் ஆகஸ்ட் 14 சனியன்று மூன்று தெய்வங்கள் ஸ்ரீமீனாட்சியில் ரிலீஸ். இரண்டாவது நாள் பார்த்தோம். அந்த வருடத்தின் கடைசி படம் பாபு அக்டோபர் 18 தீபாவளியன்று ஸ்ரீதேவியில் வெளியானது. இந்த முயற்சியும் தோல்வி அடைய சில நாட்கள் சென்ற பிறகே பாபு பார்க்க முடிந்தது. மொத்தத்தில் 1971-ல் ஓபனிங் டே அன்று கூட பார்க்க முடியவில்லை என்கிறபோது ஓபனிங் ஷோ எங்கே பார்ப்பது.
(தொடரும்)
அன்புடன்
டியர் முரளி,Quote:
Originally Posted by Murali Srinivas
மிக சுவாரசியம் மற்றும் அருமையான NT movies opening show பற்றிய எழுத்தோட்டம்.
Your style of writing makes it more interesting. I am grateful that you remembered my small request and giving us opening show bonanza.
நான் கேட்டதோ NT's RAJA opening show பற்றி. தாங்களோ ராஜா பற்றியும் அந்த நேரத்தில் வந்த மற்ற படங்களை பற்றியும் மிக ரசனையுடன் விவரித்து ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சிக்கு கொண்டு செல்கிறீர்கள். Beautiful flow - please continue.
Again thanks for mentioning my name during this NT opening show blast!
Murali,Quote:
Originally Posted by Murali Srinivas
It looks like this dual release Sorgam & EV did better than his other dual OVUrava & Iru malargal (??). what is your view here?
That was one huge, fire brand NT festival crowd - my guess would be at least 50,000+ fans must have waited for ticket during that show. One thing I hated in Sivantha mann is NT's introduction - it would be sudden without any build up. I don't know how fans reacted during its release.Quote:
Originally Posted by Murali Srinivas
Again, in Sorgam, NT's introduction was very ordinary and director could have done a better job.Quote:
Originally Posted by Murali Srinivas
சொர்க்கத்தில் வரும் ஷேக்ஸ்பியர் நாடகம் பற்றி தாங்கள் விவரிக்க இல்லையே!?. என்ன ஒரு கம்பீரமான நடை!!! I watched Sorgam during its re-release at New cinema on Saturday night: அந்த சீன் ஆரம்பம் - அது வரை மிக அமைதியாக பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள், NT shoe சத்தம் கேட்டவுடன் எழுப்பிய கரகோஷம் இருக்கிறதே - simply unbelievable.
surprising Meenakshi had NT movie releases. I thought Meenakshi theater was mostly known for MGR-centric movies.Quote:
அடுத்த மாதம் ஆகஸ்ட் 14 சனியன்று மூன்று தெய்வங்கள் ஸ்ரீமீனாட்சியில் ரிலீஸ். இரண்டாவது நாள் பார்த்தோம். அந்த வருடத்தின் கடைசி படம் பாபு அக்டோபர் 18 தீபாவளியன்று ஸ்ரீதேவியில் வெளியானது. இந்த முயற்சியும் தோல்வி அடைய சில நாட்கள் சென்ற பிறகே பாபு பார்க்க முடிந்தது. மொத்தத்தில் 1971-ல் ஓபனிங் டே அன்று கூட பார்க்க முடியவில்லை என்கிறபோது ஓபனிங் ஷோ எங்கே பார்ப்பது.
(தொடரும்)
அன்புடன்
tac,Quote:
Originally Posted by tacinema
Murali sir covered upto BABU.
So, next will definitely be RAJA..... :D
Malaysian hubbers - don't miss 'Marakka MudiyumA' program (part 10) tomorrow at 9.30 PM in Kalaingar TV. :)
Bro, mana ada Kalaingar TV? You mean Vanavil?Quote:
Originally Posted by Thalafanz
Sorry, my bad. It's Kalaingar TV there. For us, it's Vanavil (201). :)Quote:
Originally Posted by groucho070
tac... you are right.
NT's many films, including Sivandha Mann, Sorkam, Sumadhi en Sundhari, Needhi etc. having very very ordinary introductions. Not giving more chances for fans' alapparai.
No doubt, the introductions in Dheiva magan, Raja are some among the bests.
Especially in Raja.... the introduction of all charectors, such as Balaji, Ranga Rao, K.Kannan, Major Sundhar Rajan, Manohar, Chandra Babu all over. Fans will be waiting 'Ivar eppO varuvAr... eppO varuvAr' (except those who watched Hindi Johny mera nAm, because they know when he will appaear)
But when he appear in the lock-up with musical lighter, and the dialogue 'pOlicekAranai virOdham paNNikkAthE. naNbanAgavum pazhagAthE. poRumaiyA iru' fans applause and wistle reach the peak. (But this dialogue I heared only in second watch of the film. because in first day, I cant hear it because of the 'alapparai' of fans in Chennai Devi Paradise).
Rajini & Kamal looked upto him for style!
Overacting has been one thing that the legend of Tamil cinema has been often accused of. Even you might have heard such a thing from someone or might have even thought so yourself. It is not really surprising that many of today’s youngsters and those accustomed to new age cinema find Sivaji Ganesan as one who went overboard with his expressions. It is a classical example of the generation gap, the present not being able to digest or accept what was considered great in the past. There can be no two opinions about the fact that Chevalier Sivaji Ganesan is a legend. But there are many who see chinks in that legacy. I believe it is a case of not being able to understand the great man and the times that he was part of.
Coming from a theater background (he acquired the title Sivaji from theater), expressing in a very pronounced manner came naturally to him. Being subtle was not the flavor of those days and if you watch cinema of the early Sivaji era, you will see that what many call overacting now was the norm in those days. Cinema had not evolved
enough to accommodate subtle expressions. It was more or less a theater setting with the camera being kept straight and the actors being asked to perform within the frame, the occasional close up shot being given for the expression of surprise, shock, romance or whatever. Even the dialogues were theatrical. All techniques like bottom and top angle cuts, lighting that suited the situation, precise make-up that enhance cinema so much were non-existent. Sivaji Ganesan began and for a large part, worked in such an era as an actor who excelled in emotional roles. He just kept along with his times.
The greatness of Sivaji Ganesan comes to light when we look at the range of roles that he has done in his career and the range of styles that he adopted in each of his movies. Not many actors of our times have shown the courage that he has. To do a full fledged hateful negative role while you are still a leading hero takes a lot of confidence and Sivaji Ganesan showed that in Andha Naal. Actors of our times have shown a liking to the negative role, but not the totally despicable type. Even if they have, they have also chosen to have the security of playing a double role with one character being a do-gooder. Andha Naal had Sivaji Ganesan as a completely unscrupulous person who would not even stop short of treason to make money. His detractors (though few and oblivious of his greatness) should take a look at this performance. They also should take a look at Uthama Puthiran where one can see upon close observation, a striking similarity to Rajnikanth’s famous brisk walk. Then, there is that famous scene from Thiruvilayaadal where he runs towards the shore after slaying a shark, very similar to what Superstar does. Even Kamal once said in a function that actors of all ages have taken something out of Sivaji Ganesan’s book, be it style or acting skills. What Sivaji did so many years back is adopted and replicated by so many contemporary stars- a compliment to his greatness.
And if any of you still doubt whether the great man was overdoing it, then take a look at some of his films in the 90s. Cinema had evolved and he had understood the change. His performance in Thevar Magan must count as one of the finest in Tamil cinema, please go back and see the scene where he and Kamal Haasan talk in the courtyard, discussing about the hotel that Kamal proposes to build in the city. Such performances can come only from an actor of brilliance of the highest order, only a true genius can adjust to changing times and Sivaji Ganesan was one.
Once the famous journalist and cartoonist Madan was asked, ‘Who is the better actor, Marlon Brando or Sivaji Ganesan?’ He said, ‘Marlon Brando is an actor who delivers to perfection what the director asks of him but Sivaji Ganesan used to do more than just that, he used to analyze and add to the character and performance. So, Sivaji is greater.' Do we need to say more? Another interesting fact is that in a survey conducted long back it was found that Sivaji Ganesan had a greater female fan following than the great M.G.R. Not because he always did emotional family subjects, but because they liked his style. If anyone still feels that the great man did more than what was required of him, then they are in the clutches of ignorance. Perceptions change with time. What was right then need not necessarily be right now and what we celebrate as acts of genius today may be ridiculed upon tomorrow. Wonder how youngsters thirty years from now will react to the patent star mannerisms, intro songs and one liners that we enjoy so much at present. The greatness of Sivaji Ganesan must never be subject to scrutiny. Seldom do men like him grace the screen.
(By Sudhakar, with inputs from Arun Gopinath.)
VERSATILITY OF NADIGARTHILAGAM
http://ahambaavam.blogspot.com/2007/...i-ganesan.html
Here is some sloppy job done by thamizh nation!
They give list of nadikar thilagam movies! The lis thas "engaL thangkam"!!! :lol: !
They also left out pattikkAda pattaNama in the seventies list! :shock:
How can one leave out that movie??
This list has been given by some "uneducated" person I suppose!
It is best a sivaji fan gives such important data! Not some half-boiled! :twisted:
http://www.tamilnation.org/hundredtamils/sivaji.htm
Seventies
1970 - Vilaiyaattu Pillai
1970 - Vietnam Veedu
1970 - Engal Thangam
1970 - Enga Mama
1970 - Paadhugaappu
Dear Thamizh,Quote:
Originally Posted by thamiz
You have come to the right point. And precisely this was one of the foremost reasons for the launch of Nadigar Thilagam website. In fact in another website, they included all films starting with letter pa in Nadigar Thilagam list, like Panakkara Kudumbam, Padha Kanikkai, etc. Only after seeing all these, the thought of the website striked in me and now you have touched the point.
Raghavendran.
tac,
Thanks. It is my pleasure to include your name. நான் ராஜா ஓபனிங் ஷோ பற்றி எழுதத்தான் நினைத்தேன். ஆனால் எப்படி அந்த எண்ணம் வந்தது என்று சொல்ல விரும்பினேன். அது 1967 முதல் 1971 வரை நீண்டு விட்டது. அது படிக்க சுவையாக இருப்பதில் சந்தோஷம்.
Sivandha Man crowd was one of the biggest, I have ever seen in my life. People were literally crazy to get the ticket. On the first day, the black marketers had a field day. The Rs 1.15 p ticket was sold for Rs 50/-. Rs 1.70p for Rs 75/- and the Rs 2.50p was Rs 100/-
I still remember even after 50 days, there were black market tickets on Saurdays and Sundays.
Compared to OVU & Iru Malargal, EV and Sorgam were bigger success. EV & Sorgam celebrated 100 days in four centres.
Chennai
Madurai
Tiruchy
Salem.
I had said in sadhanai pattiyal, this is simply unbrokable. EV in addition to the above 4 centres, also ran for 100 days in Coimbatore. Sorgam at Coimbatore after completing 75 days was shifted for releasing Iru Dhuruvam. In the same manner, Sorgam in addition to the above 4 centres ran for 100 days in Tirunelveli. There (Tirunelveli) EV was removed after 75 days to accomdate Iru Dhuruvam. So by all means EV and Sorgam enjoyed better success rate.
As you said, intro scenes were pretty ordinary in certain movies and Sivandha Man is one among them.
Sorry, I didn't mention about Julius Ceaser. As you said it was received with thunderous ovation. குறிப்பாக கத்திகுத்து வாங்கி இறக்கும் சீன். அது போல குடித்து விட்டு வந்து மாடிப்படியில் உட்கார்ந்து கே.ஆர்.விஜயாவிடம் போதையில் பேசும் காட்சியும் பயங்கர கைதட்டலை பெற்ற காட்சிகளாகும்.
Meenakshi had few NT releases like Galatta Kalyaanam, Moondru Deivangal, Chitra Pournami and Pattakathhi Bairavan.
Regards
அந்த நாள் ஞாபகம்
மருத்துவர்கள் (Physiatrist), obsessive compulsive disorder என்று ஒரு நிலைமையை குறிப்பிடுவார்கள் அதாவது ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப செய்து கொண்டிருப்பதை இப்படி குறிப்பிடுவார்கள். எனக்கு அதற்கு நேர்மாறான நிலை. ஒன்றை செய்ய வேண்டும் என்று பல முறை முயற்சித்தும் முடியாத நிலைமை. கிட்டத்தட்ட ஓபனிங் ஷோ பார்க்க வேண்டும் என்று ஒரு obsession மனதுக்குள் உருக் கொண்டு விட்டது. 1972 பிறக்கிறது. பாலாஜி நடிகர் திலகத்தை வைத்து ராஜா படம் தயாரித்துக் கொண்டிருக்கிறார். அது ஜானி மேரா நாம் என்ற இந்தி படத்தின் ரீமேக். அந்த படம் மதுரையில் வெளியானது. தேவ் ஆனந்த், ஹேமமாலினி நடித்த அந்த படத்தை பார்த்தேன். ரசிக்கும்படியாக இருந்தது. ராஜா 1971 வருடம் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கியது. முதல் காட்சி நடிகர் திலகம் டென்னிஸ் ராக்கெட்டை எடுத்துக் கொண்டு ஹோட்டல் ரூமுக்கு வந்து ஜெஜெ-வை சந்திக்கும் காட்சி படமாக்கப்பட்டது. நடிகர் திலகம் டென்னிஸ் ராக்கெட்டுடன் ஸ்டைலாக நிற்கும் போஸ் பத்திரிகைகளில் வெளியானது. தொடர்ந்து படப்பிடிப்பு பற்றி பல செய்திகள். இது எல்லாம் படத்தை பற்றிய எதிர்பார்புகளை தூண்டி விட்டு கொண்டிருந்தன. படம் வெளியாவதற்கு பத்து நாட்கள் முன் படத்தின் பாடல்கள் அடங்கிய இசைத்தட்டு வெளியானது.
அந்த நேரத்தில் மதுரையில் டவுன் ஹால் ரோட்டில் உள்ள தாஜ் ஹோட்டலில் ஜுக் பாக்ஸ் வைக்கப்பட்டது. இது பற்றி அனேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதில் சேகரித்து வைத்திருக்க கூடிய பாடல்களில் நமக்கு தேவையான பாடலை பணம் கொடுத்து கேட்கலாம். அன்றைய காலத்தில் இருபத்தஞ்சு காசுகள் கொடுத்தால் போதும். அதை சாதாரணமாக ஹோட்டலுக்கு சாப்பிட வருபவர்கள் பயன் படுத்துவார்கள்.
ஆனால் ராஜா பட பாடல்கள் அதில் இருக்கிறது என்று தெரிந்தவுடன் ரசிகர் கூட்டம் படையெடுக்க ஆரம்பித்து விட்டது. ஆனால் இவர்கள் சாப்பிட செல்லாமல் பாட்டை மட்டும் கேட்க செல்ல ஆரம்பித்தனர். முதலில் வருமானம் என்று நினைத்து அனுமதித்த ஹோட்டல் நிர்வாகம், குவிய ஆரம்பித்த கூட்டத்தையும் பார்த்து விட்டு, அவர்கள் திரும்ப திரும்ப இந்த ஒரு பட பாடல்களை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்ததால் ஜுக் பாக்ஸ் ரிப்பேர் என்று போர்டு எழுதி மாட்டி விட்டார்கள்.
சென்ட்ரல் சினிமாவில் ராஜா வெளியாவதாக இருந்தது. அப்போது ஓடிக் கொண்டிருந்த படத்தின் இடைவேளையில் ராஜா படத்தின் பாடல்களும் சில வசனங்களும் ஒலிப்பரப்பட, அதை கேட்பதற்காக சென்ட்ரல் சினிமா அருகில் இருக்கும் சின்ன சந்தில் இடைவேளை நேரத்தில் ஏகப்பட்ட கூட்டம். என் கஸினின் நண்பன் வீடு தியேட்டர் அருகில் இருந்தது. நாங்கள் அங்கே சென்று கேட்டோம். ஆனால் தெளிவாக காதில் விழவில்லை. ஆனால் அதுவே மேலும் ஆவலை கிளப்பி விட்டது. படம் எப்படியும் ஓபனிங் ஷோ பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தோம். வீட்டில் ஒரு வழியாக அனுமதி வாங்கினோம். நாள் நெருங்க நெருங்க டென்ஷன். இந்த நேரத்தில் மதுரை ஸ்ரீதேவியில் 89 நாட்கள் ஓடிய பாபு பொங்கலன்று வெளியான அகத்தியருக்காக மாற்றப்பட்டபோது ரசிகர்கள் மிகுந்த கோபமும் வருத்தமும் அடைந்தார்கள். சென்னையில் ஜனவரி 25 அன்று பாபு 100 நாட்களை கடக்கிறது. ரசிகர்கள் அதை மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள்.
ராஜா போஸ்டர்கள் ஒட்டப்பட்டு விட்டன. ஒரே கலரில் பாண்ட் ஷர்ட் அணிந்து கழுத்தில் ஸ்கார்ப் கட்டிய நடிகர் திலகம். வாவ்! ஜனவரி 26 புதன்கிழமை. ஸ்கூலில் நெருங்கிய நண்பர்களிடம் ஓபனிங் ஷோ போவது பற்றி பெருமையுடன் சொல்லியாகி விட்டது.[எங்க மாமா ஓபனிங் டே பார்த்ததையே ஒரு இமாலய சாதனையாக சொல்லியாகி விட்டது. முதல் நாள் சிவாஜி, எம்.ஜி.ஆர் படம் பார்ப்பது என்பது ஒரு பெரிய விஷயமாக இருந்த அந்த காலக்கட்டத்தில், நான் ஒரு ஹீரோ போல் பார்க்கப்பட்டேன்].
முதல் நாள் இரவெல்லாம் சரியாக தூங்கவில்லை. காலையில் வெகு சீக்கிரமாகவே எழுந்து விட்டேன். குளித்து ரெடியாகி கிளம்பி விட்டோம். காலை 8 மணிக்கெல்லாம் தியேட்டர் பக்கம் போயாகி விட்டது. கஸினின் Friend வீட்டுக்கு போய் விட்டோம். காலை 9 மணிக்கு தியேட்டருக்கு கிளம்பி விட்டோம். மெயின் கேட்டில் பயங்கர கூட்டம் என்பதால் பின் பக்க கேட் வழியாக போகலாம் என்று அங்கே போய் விட்டோம். சொர்க்கம் போல் அவ்வளவு பிரச்சனைகள் இல்லை. உள்ளே சென்று டிக்கெட்டை வாங்கி கொண்டு அரங்கத்தில் நுழைந்த போது அடைந்த மகிழ்ச்சி இருக்கிறதே, விவரிக்க முடியாத சிறு வயது சந்தோஷங்களில் ஒன்று.
10.30 மணிக்கு பெல் அடிக்கிறது. விளம்பரங்களோ, இந்தியன் நியூஸ் ரிவியு குறிப்பாக தமிழக அரசின் செய்தி துறை செய்திகள் எதுவும் இல்லாமல் எடுத்தவுடன் படம். சுஜாதா சினி ஆர்ட்ஸ் எம்ப்ளம் அப்படியே முன்பக்கமாக திரும்ப பின்னணியில் பல்வேறு கலர்கள் பளிச்சிட[ஏற்கனவே எங்கிருந்தோ வந்தாளிலேயே இது வந்திருந்தாலும்] அதகளம் ஆரம்பமானது. இது ஒரு மூவி மேக்கர்ஸ் கவுன்சில் சித்திரம் என்ற கார்ட் முதலில் வந்தது.[இந்த அமைப்பு பாலாஜி, ஸ்ரீதர், திருலோக்சந்தர், மாதவன், முக்தா ஸ்ரீநிவாசன் போன்றவர் சேர்ந்து உருவாக்கியது].
அது வரை தமிழ் படங்களில் பார்க்காத டைட்டில். எழுத்துகளின் பின்னணியில் வித விதமான டிசைன்கள், கலர்கள். [அது நாள் வரை டைட்டில்களை சாதாரணமாக பார்த்த ரசிகர் கூட்டம் இந்த படத்தின் டைட்டில்களுக்காகவே மீண்டும் மீண்டும் பார்த்தனர்]. நடிகர் திலகத்தின் பெயர் காண்பித்த போது திரையே தெரியாத அளவிற்கு பேப்பர்மாரி. என் தலையில் ஒரு கூடை பேப்பர். சில டிசைன்கள் மிக பெரிய ஆரவாரத்தை ஏற்படுத்தியது. மெல்லிசை மன்னரின் பெயர் வரும் போது ஒரு வளையம் மற்றொரு வளையத்திலிருந்து வெளியேறுவது போல அமைக்கப்பட்டிருந்தது அதில் ஒன்று. டைட்டில் முடிய படம் ஆரம்பிக்கிறது
முதலில் சிறுவர்களாக இருக்கும் சகோதரர்கள் போட்டியில் பங்கு பெறுவது இடம் பெறும் அதைப் பற்றி விலாவாரியாக எழுத தேவையில்லை. காரணம் அனைவருக்கும் கதை தெரியும் மேலும் இந்த படத்தை பற்றி மிக விளக்கமாக சாரதா இந்த திரியிலே எழுதியிருக்கிறார். நான் சொல்ல வந்தது என்னவென்றல் இந்தி படம் பார்த்த எங்களை போன்றவர்களுக்கு நடிகர் திலகம் திரையில் தோன்றுவதற்கு சிறிது நேரம் ஆகும் என்று தெரியும். ஆனால் அது தெரியாத ரசிகர்கள் எப்படி ரீயாக்ட் பண்ணுவார்கள் என்று ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால் இயக்குனர் சி.வி.ஆர் அந்த எண்ணமே தோன்ற விடாமல் விறுவிறுப்பாக கொண்டு செல்வார். மூத்த மகன் பெரியவனாகி பாலாஜியாவது, விஸ்வம் சிங்கப்பூரிலிருந்து வைரங்களோடு கிளம்பியிருப்பான் என்று சொல்வது, மனோகர் வருவது, காரில் ஏறப்போகும் அவரிடம் சிவப்பு விக் அணிந்த கையாள் உதடே அசையாமல் போலீஸ் அந்த காரிலே உன்னை பாலோ பண்ணுது என்று சொல்லிவிட்டு போவது, மனோகர் டென்னிஸ் ராக்கெட்டை கிளப்-ல் மாற்றுவது, மது விலக்கு சட்டதின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு மேஜர் அவரை மடக்குவது என்று படு சுவராஸ்யமாக படம் போக, செல்லில் அடைக்கப்படும் மனோகர் சிகரெட்டை பற்ற வைக்க லைட்டரை தேட, கோட் அணிந்த ஒரு கை லைட்டரோடு நீள, தியேட்டரில் இடி மின்னல் பிரளயம். சேரில் உட்கார்ந்திருந்த மொத்த மக்களும் இப்போது அதன் மேல் ஏறி நிற்க, அடுத்த சில நிமிடங்களுக்கு யாருமே படத்தில் என்ன நடந்தது என்று பார்க்க முடியவில்லை என்பது தான் உண்மை. நடிகர் திலகத்தின் அறிமுக காட்சி அதற்கு முன்பு அவ்வளவு அமர்க்களமாக அமைந்ததில்லை. அந்த காட்சியின் தொடர்ச்சியாக இரண்டு மூன்று ஜெயில் காட்சிகள் வரும். அடுத்து சின்ன சண்டை காட்சி. மறுபடியும் இங்கே அதகளம்.
(தொடரும்)
அன்புடன்
Thanks Harish, that was a very insightful article, though saying NT is a great actor is like saying the sky is blue. NT is greater than what is written there as we see from posts in this thread.Quote:
Originally Posted by HARISH2619
But I am intrigued by the comparison between Brando and NT. I am a huge fan of Brando, having read close to five biographies and one autobiography (Songs My Mother Taught Me), and own most of his important films.
They both existed at the same time. Both kickstarted their career at the same time, though Brando’s involvement in the stage was in the 1940s. Both brought in fiery new acting style to the fore. Brando’s style picked up from his teacher Stella Adler, who is an advocate of Stanilavskian school of Method acting (Russian cinema is a major influence over the more artistic auteurs of Indian cinema of that time, I think). While NT just picked it up from where he could (this is where I’d discuss with Joe, where the heck did he learn acting that way…if it’s the stage, so were the other actors of that time, but why aren’t they as powerful as NT?).
Alas the similarities of their career ended in the sixties, where Brando got lazy. He picked up his hat again with powerhouse performance in The Godfather, appeared to be interested in Apocalypse Now (1978, my favourite Hollywood flick), and then was in just whenever he needs cash. (He notoriously appeared like 10 minutes in 1978 Superman and pocketed US$10 million).
In other words Brando was never interested in movies after the seventies. But one thing is indisputable, he brought in a new force in screen performances, that allowed his peers like Montgomery Clift, Paul Newman and James Dean (whom I think was overrated, boosted by his early demise), and later whole new generations of inspired performers like Hoffman, Hackman, Pacino, De Niro, Nicholson, who sired many other wonderful actors.
But NT is not like that. His dedication and love for the industry is stuff of legend. Brando was a prankster and his discipline wavers according to the mood and he can be a terror too (because of disagreement, he reportedly dragged a directors collar and threw him out of the set…I believe this was in Mutiny On The Bounty).
That leaves us with technique. Brando’s, as mentioned, was Method where you immerse yourselves inside the character. It can be pretty annoying to the director and crew members as they would wait for you to “be in the right frame of mind and mood”. But Brando delivered, and he was wanted by everyone. The result, four straight years of Oscar nomination and finally a win…and this is really his first four or five years in the industry (doing one movie per year average).
But what is NT’s technique? Again, Joe and I would discuss this time and time again. What is the framework, what is the architecture behind NT’s performance. NT is like Lord Laurence Olivier like that, just go and do it.
While, Brando inspired his own peers (Newman went on to have a fine body of films, in a way that he should have got more accolades than Brando), and inspired generations of actors, NT only inspired few.
The one that really made it was Kamal and Rajini. Why? The others look up on him, but they failed to pick up the trick of the trade. Why? Because only NT knows. He may have did his best to help children (as he puts it, “namma pillaingga” ) on set or when asked for advice, but still it never rubbed on them.
While Kamal was absorbing influences from abroad, notably Hollywood, it was only Rajini who took whatever he can take from NT and flew to superstardom with it.
But it stopped there. Prabhu inherited a little, and he worked with his own charm. The others, here and there. And it stopped. Performaces from actors debuting 90s onwards…I better not talk about it, this is not the thread to discuss that.
Is NT greater than Brando? Sure, why not. Are there actors on par with NT in this world, maybe, I don’t know. Who knows what’s has been happening in the Chinese world? Or the European cinema. I dare not say. But I know a bit of Hollywood and Tamil film industries, and I would say in terms of dedication and number of roles played and body of quality films, NT beats Brando flat. (Comparison with Newman is worth analyzing, but I will do it on my own). But saying that, I hope NT fans remember that Brando was great on his own, before leaving he left behind two generations of actors who owe to him.
As for NT…I don’t know. I am still figuring out the brain behind the talent, the talent behind the man. We saw him only on screen. Occasional interviews. Biographies here and there that judges his performance, but no analysis of the hard work behind it. I am hoping to get his autobiography, which Joe says have some information on the mechanics of an actor named Nadigar Tilagam Sivaji Ganesan.
I am wandering…but hope you go the point.
An anecdote that would strike the similarity between NT and Oliver:
Dustin Hoffman in Marathon Man
Dustin Hoffman often took method acting to incredible extremes. In order to appear more tired for a scene in Marathon Man, he stayed awake - for several days.
Laurence Olivier (Hofmann's co-star in the film) later offered him a word of advice: "You should try acting, my boy," he said. "It's much easier."
Murali-sar,
Sorry for the side-tracking, just I love that comparison made with Brando.
I am following your piece and intrigued by the intro reaction. Here I am, at home, impatient, with my remote at hand. You can safely bet that I'd forward till the kids grow up.
But nothing beats the experience you are sharing. Again, great post, sir.
Thanks Raghavendra! I have not spent much time in NT's website but I will pretty soon. :-)Quote:
Originally Posted by RAGHAVENDRA
Murali sir,
A very nostalgic & excellent trip down memory lane !
Thoroughly enjoying the series though am not able to spend more time in the hub.
Amazing opening show info's about Thiruvilayadal, Ooty varai uravu, iru malargal, raja.....(thalayil paper vizhuvadhu, poo mari pozhivadhu pola irukkum !!!) - adhu oru thani sugam.
Madurai maanagaril mattume indha thiruvizha kolam matrum galatta endral, moththa tamizhnadum eppadi irundhirukkum ???
நடிகர் திலகத்தின் காவிய பயணத்தில் ஒன்றாக பயணித்து காலத்தால் மறக்க முடியாத கலை வடிவங்களில் நடிகர் திலகத்தோடு இணைந்து மிளிர்ந்த மாபெரும் நடிகர் நாகேஷ் மறைந்தார் .
:cry: நடிகர் திலகம் ரசிகர்கள் அவர் நினைவைப் போற்றுவோம். :(
கேள்வி : சார், திருவிளையாடல் படத்தில சிவாஜி அவர்களை நடிப்பில் முந்திட்டீங்களே?
நாகேஷ்: அது உங்க அபிப்பிராயம். அவரை அடிக்கிறதுக்கு யாராலயும் முடியாது. நடிப்புக்குன்னே பிறந்த ஒரு பெரிய மேதைன்னு சொன்னாக்க அது சிவாஜி கணேசன் அவர்கள் தான்.
ஏன்னா படம் முடிஞ்சதுக்கப்புறம் அதை டப் பண்ணுறதுக்காக டப்பிங் பேசுறதுக்காக திரையிட்டுக் காட்டப்பட்டது, டைரக்டர் ஏ.பி.நாகராஜன் அவர்களால். அப்ப என்னுடைய பாத்திரத்தைப் பார்த்தவுடன் சிவாஜிசார் முகமே கொஞ்சம் மாறினமாதிரி இருந்திருக்கு டைரக்டருக்கு. ஏதாவது சொல்லிடப் போறார், இதை எடுத்திடுங்க.... நான் இருக்கிற இடமே தெரியல...அப்படிங்கிறமாதிரி நினைச்சுடப் போறார்னு பயந்துகிட்டு இருக்கிறபோது..."ஏ.பி.என். இன்னொருதரம் அந்த சீனைப் போடு" ன்னு சிவாஜி கேட்டார். அப்ப பயம் இன்னும் ஜாஸ்தியாப் போச்சு.
மறுபடியும் போட்டாங்க. போட்டவுடன் "ஏ.பி.என் நான் இருக்கிறதே தெரியலியே, நகேஷ்தானே இருக்காப்பல இந்த சீன்ல" அப்படின்னவுடன்...எனக்கு உயிரே இல்லை. அப்புறம் சிவாஜி அவர்கள் சொன்ன வார்த்தைகள்...இந்தப் படம் ஓடணும்னா தயவுசெய்து இந்தப் படத்தில் தருமி வேஷத்துல நாகேஷ் நடிச்சதுல ஒரு foot கூட - ஒரு அடி கூட - நீ கட் பண்ணாம அப்படியே வாஇகக்ணு; அப்பத்தான் இந்தப்படம் ஓடும்னு" சொன்னதுக்கபுறம் தான். அவர் நடிகர் மாத்திரமல்ல அவர் பெரிய ரசிகர்னு சொல்ல ஆசைப்படறேன்.
அதே போர்ஷனை இன்னிக்கு வந்த ஹீரோ யார் கூடாவாவது நான் நடிச்சிருந்தேன்னா சத்தியமா தமிழ் மக்கள் யாருமே என்னை தருமி வேஷத்தில பார்த்திருக்க முடியாது. ஆகையினால, அவர் நடிகர் மட்டுமல்ல, பெரிய ரசிகர் ; அவர் சீன்னு வரும்போது அது யாராராயிருந்தாலும் சரி, அவர் மிதிச்சுத் தள்ளுவாரு. அதே சமயத்தில் அவரை விட நல்லா யாராவது பண்ணினாங்கன்னா அதை மதிக்கத் தெரிஞ்ச ஒரே ஆள், என்னைப் பொறுத்தவரைக்கும் சிவாஜி கணேசன் அவர்கள்தான்.
http://radiospathy.blogspot.com/2009...g-post_31.html
:bow:
Rakesh,
Where is the need for asking my permission? All sorts of discussions are the highlight of this thread and as many would point out that this is the thread everyone likes.
In fact I love to read such comparisons. Somewhere down the line in the late 70s, I lost interest in Hollywood flicks[though for no specific reason] and therefore such write ups interest me.
Yes, you are right. the intro scene in Raja was something special. Even after 9 years, in 1981 when it was re- released, we used to wait [I was watching the movie for the 10th time] with bated breath for that moment and when the theatre explodes my day was made.
Thanks Mohan. As I told tac, the experience of having watched the opening shows are still vivid in memory. My satisfying moment is when I am told that everybody enjoys the writing.
ஜோ, நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. நடிகர் திலகத்தின் படங்களில் நாகேஷ் அடைந்த முக்கியத்துவம் அதிகமானது. தனது வாழ்க்கை அனுபவங்களை எழுதியுள்ள நாகேஷ் அதில் திருவிளையாடல் பற்றி சொல்லும் போது நீங்கள் எழுதியுள்ள விஷயங்களை தவிர வேறொன்றும் சொல்கிறார். நடிகர் திலகம் ஏபிஎன்னிடம் "இந்த பய இருக்கானே, அவன் நல்ல பண்ணுவான். ஆனால் டப்பிங்க்லே சரியா பேச மாட்டான். இந்த ஸினுக்கு அவன் டப்பிங் பேசும் போது நீ கூடவே இரு" என்றாராம். நடிகர் திலகம் மறைந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு ராஜ் டிவி நடத்திய இமயத்திற்கு அஞ்சலி நிகழ்ச்சியில் நாகேஷ் சொன்னது "ஆயிரம் படத்திலே நடிச்சிருக்கேன். ஆனால் இந்த ஒரு படத்தை தான் எங்கே போனாலும் சொல்றாங்க". அது போலவே சவடால் வைத்தி. மறக்கவே முடியாது. இந்த படங்களின் மூலமாக அவர் வாழ்ந்து கொண்டே இருப்பார்.
அன்புடன்
காலம் உள்ளவரை கலைஞனுக்கு அழிவி்ல்லை. அப்படி காலத்தை வென்ற கலைஞனாக நடிகர் திலகத்துடன் இணைந்து விட்ட நாகேஷின் உடலுக்கு மட்டும் தான் இங்கு மரணம். உள்ளமும் உயிரும் தமிழ் மக்களின் நெஞ்சில் என்றும் சிரஞ்சீவியாய் நிலைத்திருக்கும்.
நடிகர் திலகத்துடன் நாகேஷ் இணைந்த திரைப் படங்கள்
1. நான் வணங்கும் தெய்வம்
2. குங்குமம்
3. ரத்த திலகம்
4. அன்னை இல்லம்
5. பச்சை விளக்கு
6. புதிய பறவை
7. முரடன் முத்து
8. நவராத்திரி
9. பழநி
10.அன்புக்கரங்கள்
11.சாந்தி
12.திருவிளையாடல்
13.நீலவானம்
14.மோட்டார் சுந்தரம் பிள்ளை
15.சரஸ்வதி சபதம்
16.செல்வம்
17.கந்தன் கருணை
18.பேசும் தெய்வம்
19.தங்கை
20.பாலாடை
21.திருவருட்செல்வர்
22.இரு மலர்கள்
23.ஊட்டி வரை உறவு
24.திருமால் பெருமை
25.கலாட்டா கல்யாணம்
26.என் தம்பி
27.தில்லானா மோகனாம்பாள்
28.எங்க ஊர் ராஜா
29.தங்க சுரங்கம்
30.காவல் தெய்வம்
31.அஞ்சல் பெட்டி 520
32.தெய்வ மகன்
33.திருடன்
34.சிவந்த மண்
35.வியட்நாம் வீடு
36.எங்கிருந்தோ வந்தாள்
37.சொர்க்கம்
38.இரு துருவம்
39.தங்கைக்காக
40.குலமா குணமா
41.பிராப்தம்
42.சுமதி என் சுந்தரி
43.சவாலே சமாளி
44.தேனும் பாலும்
45.மூன்று தெய்வங்கள்
46.பாபு
47.தர்மம் எங்கே
48.வசந்த மாளிகை
49.கௌரவம்
50.எங்கள் தங்க ராஜா
51.மன்னவன் வந்தானடி
52.டாக்டர் சிவா.
53.உனக்காக நான்
54.சத்யம்
55.உத்தமன்
56.சித்ரா பௌர்ணமி
57.இளைய தலைமுறை
58.நாம் பிறந்த மண்
59.தியாகம்
60.அமர காவியம்
61.கல்தூண்
62.மாடி வீட்டு ஏழை
63.படிக்காதவன்
64.நட்சத்திரம்
Good List Raghavendhar sir...
we have Nagesh in Dheepam also (driver Raheem Bhai).
The list clearly shows, when 'thEgAi' Srinivasan started to join with NT again from Anna oru kOyil, Nagesh was slowly sidened. From that onwards 'thEngAi' acted in almost all NT films, particularly in main rolls.
அந்த நாள் ஞாபகம்
அதன் பிறகு ஒவ்வொரு காட்சிக்கும் விசில் பறக்கிறது. ஒவ்வொரு ஸ்டைல் போஸிற்கும் ஆரவாரம். ஹோட்டல் ரூமில் டென்னிஸ் ராக்கெட்-ஐ கொடுக்க செல்லும் போது வரும் கிண்டல், நீ வர வேண்டும் பாடலில் வரும் விளையாட்டுகள், ஏர்போர்ட்-ல் போலீஸ் அழைத்து செல்ல அங்கே வைத்து தான் சிவாஜி ஒரு ரகசிய போலீஸ் அதிகாரி என்பது தெரிய வரும் அழகான ட்விஸ்ட் இவை எல்லாமே ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன. மேஜர் கொடுக்கும் சிகரெட் லைட்டர் கேமரா, மைக்ரோபோன் போன்றவை அன்று ஒரு புதுமையாக இருந்தது.
விமானத்தில் கொச்சி செல்லும் போது வருவார் இரண்டாவது சந்திரபாபு. அவர் பேசும் ஒரு வசனத்திற்கு மட்டும் பலத்த எதிர்ப்பு கூக்குரல்கள் எழுந்தன [நீரும் நெருப்பும்]. கொச்சி ஏர்போர்டில் போலீஸ், டைரியை சோதனையிட அதில் இருக்கும் நீளமான சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டே நடிகர் திலகம் போலீசிற்கு ஆஃபர் செய்யும் இடம் செம கிளாப்ஸ்.
நான் முன்பே சொன்னது போல படம் விறு விறு. ஆகவே சிவாஜியை கட்டி வைத்து பாலாஜி கேள்வி கேட்கும் இடம், மயிலாப்பூரில் சென்று செக் பண்ணுவது என்று படம் படு ஸ்பீட். இந்த நேரத்தில் பின்னணி இசை பற்றி குறிப்பிட வேண்டும். அதுவரை தமிழ் சினிமாவில் வராத முறையில் கார்கள் செல்லும் போது இசை+ பின்னணி குரல் ஒலித்த விதம் ரசிகர்ளை வெகுவாகவே கவர்ந்தது. மெல்லிசை மன்னர் பிரமாதப்படுத்தியிருந்தார்
ஆனால் தியேட்டரே எழுந்து ஆடியது ரந்தாவா சண்டைக்காட்சியின் போதுதான். அதிலும் நடிகர் திலகம் கதவில் சாய்ந்து நின்று கொண்டு சிகரெட்டை கடைசி பப் எடுத்துவிட்டு கீழே போட்டு நசுக்கி விட்டு "நான் எப்பவும் கடன் வச்சுகிறதிலே" என்று ஆரம்பிக்கும் போது சேரில் எழுந்து நிற்க ஆரம்பித்த மக்கள் சண்டை முடிந்து தான் கீழே இறங்கினார்கள்.
அதன் பிறகு சிவாஜி ரங்கராவ் சந்திப்பு பிறகு பத்மா கண்ணாவின் கண்களை கொண்டு வா டான்ஸ் எல்லாம் கொஞ்சம் அமைதி. மறுபடியும் கவர்ச்சி வில்லன் கண்ணனோடு சண்டை காட்சி வர சூடு பிடித்தது. அதிலும் கண்ணன் மாற்று முகாமை சேர்ந்தவர் என்பதால் சூடு + கோஷங்கள் அதிகமாகவே ஒலித்தது. அது முடிந்து கல்யாண பொண்ணு பாடல். மறுபடியும் ஸ்டாண்ட் அப் ஆன் த பெஞ்ச். பெரியவர்களுக்கே மறைக்கும். எனக்கு சுத்தம். நான் என் கஸினிடம் "என்ன இது ஆ ஊ -ன்னா சேர் மேல ஏறிறாங்க" என்று கேட்க அவன் ரொம்ப சிம்பிளா "ஓபனிங் ஷோ-ன்னா அப்படிதான் இருக்கும்" என்றான். பாட்டோடு இன்டெர்வல். வெளியில் வருகிறோம். அடுத்த ஷோவிற்கு அப்போதே வரிசை நிற்கிறது. படம் ஓஹோ என்று இங்கிருந்து சொல்ல வெளியே சர வெடிகள் தெருவையே ஒரு வழி ஆக்கியது.
இடைவேளை முடிந்து மீண்டும் படம் ஆரம்பித்தது. நடிகர் திலகத்தை சோதனை செய்து பார்க்க வேண்டும் என்று ஜெஜெ சொல்வதற்கு ஏற்ப பாலாஜி செயல்படுவார். பிறகு அந்த கோவில் நகைகளை கொள்ளை அடிக்கும் திட்டத்தை பாலாஜி போடுவார். சிறிது நேரத்திற்கு சிவாஜி இல்லாமலே காட்சிகள் ஓடும். கங்கையிலே ஒடமில்லையோ பாடல் காட்சியில் எல்லாம் தியேட்டர் அமைதியாகவே இருந்தது. அந்த காட்சியின் முடிவில் போலீஸ் யூனிபார்ம் அணிந்து நடிகர் திலகம் தோன்றிய போது மறுபடியும் தியேட்டரில் பயங்கர ஆரவாரம்.
இதன் பிறகு தான் கதையின் முக்கிய திருப்பமாக மனோகர் வந்து பாலாஜியை சந்திக்கும் காட்சி. உண்மைகளை ஒவ்வொன்றாக மனோகர் உடைத்து கடைசியாக "பாபு, இந்திய மாப்-லே தெற்கு கூர்மையா இருக்கு. தெற்கே இருக்கும் போலிஸாருக்கும் அறிவு கூர்மை" என்று சொல்லும் காட்சியில் பலத்த கைதட்டல். சிவாஜி - பாலாஜி சண்டை, பிறகு பாலாஜியை மேஜரிடம் கூட்டிக் கொண்டு போய் நம்ம சந்தர் என்று அறிமுகப்படுத்துவது, ரங்கராவ் போட்டோவை பார்த்து விட்டு ராஜா இவன்கிட்டே தீர்க்க வேண்டிய பழைய கணக்கு ஒண்ணு இருக்கு" என்று மேஜர் சொன்னவுடன் நடிகர் திலகம் போட்டோவை குத்தும் காட்சிக்கும் ஒரே அப்ளாஸ்.
இதற்கு பிறகு படம் பயங்கர ஸ்பீட். இரண்டில் ஒன்று பாட்டில் ஒவ்வொரு கதவு, ஒவ்வொரு ஜன்னல் வழியாகவும் நடிகர் திலகம் உள்ளே நுழைய பார்க்க அது ஆரவாரமாக வரவேற்கப்பட்டது. அடுத்து கிளைமாக்ஸ். தமிழ் பட வரலாற்றிலே ராஜாவில் வந்தது போல அவ்வளவு நீண்ட கிளைமாக்ஸ் (கிட்டத்தட்ட 20- 25 நிமிடங்கள்) இடம் பெற்ற படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் கொஞ்சம் கூட தொய்வு இல்லாமல் (இன்று பார்த்தால் கூட) இருக்கும். பணடரிபாயை மனோகர் சாட்டையால் அடிக்க நடிகர் திலகம் கர்சிஃபை பல்லில் கடித்தபடி தொடர்ந்து சிரிப்பார். கண்களில் கண்ணீர் கட்டி நிற்கும். அதை அடக்கி கொண்டு அவர் சிரிக்க சிரிக்க இங்கே தியேட்டரில் ரசிகர்களின் உணர்ச்சி அணை உடைத்து பாய்ந்தது.
படம் முடிய ரசிகர்களுக்கு பயங்கர சந்தோஷம். ஒரே சுரத்தில் அனைவரும் படம் பிடித்திருப்பதாக சொல்ல, வெளியே வருகிறோம். பின் பக்க கேட் வழியாக வர வேண்டும். அந்த இடத்தில் சர வெடிகளை தொடர்ந்து கொளுத்த, நடிகர் திலகத்தை வாழ்த்தி கோஷங்கள், கைதட்டல், டான்ஸ், ஆரவாரம் என்று கூட்டம் மேலமாசி வீதி முழுக்க ஆடிப்பாடிக்கொண்டே போனது. ஒரு பகுதியினர் முன்பக்க கேட் பக்கம் வந்து அதே போல கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அந்த மூன்று மணி நேர நினைவுகளை அசை போட்டுக்கொண்டே நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம்.
என்னைப் பொருத்த வரை நான் முதலில் சொன்னது போல என்றென்றும் மனதில் சேகரித்து வைத்திருக்கும் சில சிறு வயது சந்தோஷங்களில் ஒன்று இந்த அனுபவம். நண்பர் tacinema மூலமாக அதை மீண்டும் இங்கே நினைவு கூற ஒரு வாய்ப்பு கிடைத்தது. இது போல மனதில் உள்ள வேறு சில அனுபவங்களை சந்தர்ப்பம் வரும் போது பகிர்ந்து கொள்கிறேன்.
அன்புடன்
முரளி சார்,
ராஜா திரைப்படத்தை ஓபனிங் ஷோ பார்த்த ஒரு உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள்.
இதேபோல் நீங்கள் பார்த்த நடிகர்திலகத்தின் படங்களிலேயே (வெளியீட்டின் போதாகட்டும்,அல்லது மறுவெளியீட்டின்போதாகட்டும்)தியேட்டரில் அதிக அளவில் அலப்பறை நடந்தது எந்த படத்துக்கு என்பதையும் அந்த அனுபவத்தையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்