திரு. மணியரசன் குடும்பத்தினருடன் திரு.பிரதீப் பாலு, திரு. பி.எஸ். ராஜு
http://i60.tinypic.com/i1l1fd.jpg
Printable View
திரு. மணியரசன் குடும்பத்தினருடன் திரு.பிரதீப் பாலு, திரு. பி.எஸ். ராஜு
http://i60.tinypic.com/i1l1fd.jpg
திரு. மணியரசன் குடும்பத்தினருடன் திருவாளர்கள்:பிரதீப் பாலு, பி.எஸ். ராஜு,
http://i60.tinypic.com/ztyjwy.jpg
திரு. மணியரசன் குடும்பத்தினருடன் திருவாளர்கள்:பிரதீப் பாலு, பி.எஸ். ராஜு
http://i60.tinypic.com/2mmvk7l.jpg
திரு. மணியரசன் குடும்பத்தினருடன் திருவாளர்கள்:பிரதீப் பாலு, பி.எஸ். ராஜு,
லோகநாதன்.
http://i57.tinypic.com/2hzgu8h.jpg
சிறப்பு அலங்காரத்துடன் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படம்.
http://i60.tinypic.com/k3pqbl.jpg
http://i57.tinypic.com/27y92fc.jpg
திரு. மணியரசன் குடும்பத்தினருடன் திரு. பிரதீப் பாலு, திரு. பி.எஸ். ராஜு
திரு. மணியரசன் குடும்பத்தினருடன் திருவாளர்கள் :சதீஷ், பி.எஸ். ராஜு , பிரதீப் பாலு, லோகநாதன் .
http://i57.tinypic.com/2d1usrc.jpg
புகைபடத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் உருவத்துடன், திரு. மணியரசன்
குடும்பத்தினர்.
http://i62.tinypic.com/wtev61.jpg
மன்னாதி மன்னன் - 8
‘நன்றிக்கோர் நாயகர்’
மன்னாதி மன்னன் நிகழ்ச்சியில், நடிகர் திரு.மோகன்ராம் கூறிய கருத்துக்கள் தலைவரின் நன்றி மறவா குணத்தை எடுத்துக் காட்டுவதாக இருந்தது. தனது தாத்தா திரு.ஏ.வி.ராமன் அவர்களுக்கும் தலைவருக்கும் உள்ள நெருக்கத்தை எடுத்துக் கூறினார். அதற்கு அவர் கூறிய உதாரணமே திரு.ஏ.வி.ராமன் அவர்களுக்கு தலைவர் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை விளக்கும்.
தலைவரின் ‘நான் ஏன் பிறந்தேன்?’ சுய சரிதையில் முதல் அத்தியாயத்தில் தனது தாயார் அன்னை சத்யாவைப் பற்றி கூறியிருப்பார். அதையடுத்து, இரண்டாவது அத்தியாயத்தில் திரு.ஏ.வி.ராமன் அவர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளதை திரு.மோகன்ராம் சுட்டிக் காட்டினார். கண்ணதாசன் பதிப்பகத்தின் சார்பில் இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ள அந்த புத்தகத்தையும் கையில் எடுத்துக் காட்டினார் அவர்.
திரு.மோகன்ராமின் வீட்டுக்கு ஒரு நாள் தலைவர் சென்றிருக்கிறார். அங்கு மாட்டப்பட்டிருந்த திரு.ஏ.வி.ராமன் படத்தை பார்த்திருக்கிறார். இவருக்கு இந்த படம் போதாது. பெரிய உருவப் படம் வைத்து வணங்க வேண்டும் என்று கூறி அந்த படத்தை தன்னுடன் எடுத்துச் சென்றிருக்கிறார் தலைவர். இரண்டு வாரங்களில் திரு.ஏ.வி.ராமனின் பெரிய உருவப் படத்தை தலைவருடன் வந்த உதவியாளர்கள் தூக்கி வந்து மோகன்ராமின் வீட்டில் சரியான இடத்தில் அவர்களே மாட்டியுள்ளனர். அந்தப் படத்துக்கு மாலை அணிவித்து விட்டு 15 நிமிடம் படத்துக்கு முன் அமைதியாக உட்கார்ந்திருக்கிறார் தலைவர்.
அந்த அளவுக்கு திரு.ஏ.வி.ராமன் மீது தலைவர் மரியாதையும் அன்பும் வைத்திருந்ததற்கு காரணம்.... தனது தாய் சத்யா அம்மையாருடன் தான் குடியிருந்த வீட்டை சொந்தமாக, தலைவரே வாங்கிக் கொள்ள காரணமாக இருந்தவர் திரு.ஏ.வி.ராமன். அந்த உருவப்படம் இன்னும் தன் தம்பியின் வீட்டில் இருப்பதாக குறிப்பிட்ட திரு. மோகன் ராம், தான் பிறந்தபோது தனக்கு தலைவர் வெள்ளி பால் கிண்டி கொடுத்ததையும் தனது திருமணத்தின்போது வெள்ளிப் பாத்திரம் கொடுத்ததையும் நன்றியுடன் நினைவு கூர்ந்து, சுருக்கமாக ‘புரட்சித் தலைவர் எனக்கு சேச்சா (சித்தப்பா)’ என்றார்.
தலைவரின் படங்களை மட்டுமே திரையிட்டு வரும் ஸ்ரீ முருகன் தியேட்டர் உரிமையாளரும் சுரோத்தியம்தார் திரு. பரமசிவ முதலியாரின் மகனுமான திரு.பாலசுப்பிரமணியம், ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை தங்களது திரையரங்கில் 100க்கும் மேற்பட்ட முறை திரையிட்டதாகவும் ஒவ்வொரு முறையும் வசூலை அள்ளும் என்றும் கூறியதோடு, தலைவர்தான் வசூல் சக்ரவர்த்தி என்பதை பதிவு செய்தார்.
திரு.சின்னப்பா தேவரின் மருமகன் திரு. தியாகராஜன் படங்களில் தலைவரின் ஒத்துழைப்பு, உதவி குறித்து கூறினார்.
‘இதயக்கனி’ விஜயன், ‘தலைவரின் திரைப்படங்களையும் சாதனைகளையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்’ என்று கூறினார்.
(திரு.பாலசுப்பிரமணியன், திரு. தியாகராஜன், திரு.விஜயன் ஆகியோர் மிகவும் குறைவாகவே பேசினர். மேலும் பேசியிருக்கலாம். அவர்கள் பேசவில்லையா? அல்லது எடிட் செய்யப்பட்டதா? என்று தெரியவில்லை.)
இந்த நிகழ்ச்சி ஒளிப்பதிவின்போது கலந்து கொண்ட சகோதரர் திரு.லோகநாதன் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல, இயக்குநர் திரு.ஞானராஜசேகரன், மாற்றுத் திறனாளி ஒருவருக்கு உதவி கோரி போஸ்ட் கார்டில் தலைவருக்கு தான் எழுதி அனுப்பியதையும், யார், என்னவென்றே தெரியாவிட்டாலும் அதற்கு கூட முக்கியத்துவம் கொடுத்து, அந்த மாற்றுத் திறனாளிக்கு தலைவர் தொடர்ந்து உதவித் தொகை அனுப்பியதையும் குறிப்பிட்டு வள்ளலின் பெருமையை எடுத்துரைத்தார்.
திரு.மோகன் ராம் கூறியதில் கவனிக்க வேண்டிய அம்சம் ஒன்று இருந்தது. தனது தாத்தாவுக்கும் தலைவருக்கும் உள்ள நெருக்கத்தை அவர் கூறியது இருக்கட்டும். தலைவர் நன்றிக்கோர் நாயகன் என்பதற்கு அவர் கூறிய ‘நறுக்’ கருத்து சான்று. தலைவர் மிகப் பெரிய மனிதாபிமானி என்றும் அவரது ‘பவர்’ தெரியவேண்டுமானால், அவரால் தூக்கிவிடப்பட்ட கலைவாணர் குடும்பத்தினரையும் கே.ஆர்.ஆர். (நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி) குடும்பத்தினரையும் கேட்டுப் பாருங்கள். வேறு எதுவும் தேவையில்லை என்று உணர்ச்சிகரமாக கூறினார். தலைவர் நன்றிக்கோர் நாயகர் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் அசோகனிடமிருந்து மஞ்சுளாவையும் தன்னையும் தப்பிக்க உதவிய லதாவைப் பார்த்து தலைவர் கூறுவார். ‘‘லில்லி, சந்தர்ப்பம் வரட்டும். நிச்சயம் இதற்கு கைமாறு செய்தே தீருவேன்’ என்பார். அவரது தனிப்பட்ட பண்பு நலன்களே அவரின் திரைப்பட பாத்திரங்களிலும் எதிரொலித்தன.
அரசியலிலாகட்டும், திரைப்படத்துறையிலாகட்டும், சொந்த வாழ்க்கையிலாகட்டும், அவர் யாருக்கும் எந்தக் கடனையும் வைக்கவில்லை. நன்றிக் கடன் உட்பட.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு. மணியரசன் குடும்பத்தாருடன் திருவாளர்கள்:பிரதீப் பாலு, பி.எஸ். ராஜு
லோகநாதன்.
http://i62.tinypic.com/117e07r.jpg