:ty: Sarathaa
its a very long project for Thols
mmm
:banghead:
Printable View
:ty: Sarathaa
its a very long project for Thols
mmm
:banghead:
OK Sarada.... I did not see the serial. Ellam unga post padithu ezhudhinathuthan.Quote:
Originally Posted by saradhaa_sn
Indeed, its VERY LONG project for Thols. :banghead: :banghead: :banghead:Quote:
Originally Posted by aanaa
ஆதியுடன் காரில் இருந்து இறங்கும் காஞ்சனா, அவன் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு நேராக தன் வீட்டுக்குள் சென்று ஒரு அறையைத்திறந்துகாட்ட, உள்ளே ஈஸ்வரன், சுற்றிலும் ரவுடிகள் பாதுகாப்பில் இருக்க, அவரைப்பார்த்ததும் ஆதிக்கு உற்சாகம்.
‘இந்த ஆள் எப்படி இங்கே?. எப்படிம்மா இவரைக் கண்டுபிடிசீங்க?.’
‘ஆதி, இதுக்கு நாம் மனோவுக்குத்தான் நன்றி சொல்லணும்’.
ஃப்ளாஷ்பேக் விரிகிறது…….
அம்பாஸிடர் கார் ஒன்றில் மண்டபத்துக்கு ஈஸ்வரன் வந்துகொண்டிருக்கும்போது வழியில் கார் ரிப்பேராகி நின்றுவிட, டிரைவர் இறங்கி செக் பண்ணிப்பார்த்து பெல்ட் அறுந்துவிட்டதாகச் சொல்ல, வேறு ஏதேனும் ஒரு வண்டிக்காக காத்திருக்கும்போது மனோவின் கார் வந்து நிற்க…. ‘மனோ நீ எப்படிடா இங்கே?’
‘என்னப்பா நீங்க, அங்கே எல்லோரும் மண்டபத்தில் காத்திருக்காங்க, ரொம்ப லேட்டா வரீங்களே. சீக்கிரம் என் வண்டில ஏறிக்குங்க’.
காரில் ஏறப்போகும் ஈச்வரன், உள்ளே ரவுடிகள் இருப்பதைப்பார்த்து திடுக்கிட… ‘அப்பா எல்லாம் உங்க சேஃப்டிக்குதான்’.
கார் நேராக காஞ்சனாவின் வீட்டுக்கு போய் நிற்க… ‘டேய் மனோ இங்கே ஏண்டா அழைச்சிக்கிட்டு வந்தே?’.
‘ஒழுங்கா மரியாதையா இறங்கி வாங்க, இல்லேன்னா இழுத்துக்கிட்டூப்போக வேண்டியிருக்கும்’. ‘டேய், நான் வரமுடியாதுடா?’ (சுற்றிலும் ரவுடிகள் இருப்பதைப்பார்த்தபின்னும், தன்னால் ஒண்ணும் பண்ண முடியாது என்ற நிலையிலும் எப்படித்தான் இப்படி வீர வசனம் வருகிறதோ?. சினிமாக்களிலும் இப்படித்தான், சுற்றிலும் குண்டர்கள் கைகளில் உருட்டுக்கட்டைகளுடன் நிற்க, கைகால்கள் கட்டப்பட்டிருக்கும் கதாநாயகன், பிரதான வில்லன் முகத்தில் காறித்துப்பிவிட்டு மேற்கொண்டு ‘அடிஷனலாக’ நாற்பத்தேழு அடிகளை வாங்கிக் கட்டிக்கொள்வார். திருந்த மாட்டானுங்களே..)
காஞ்சனாவுக்கு சொல்லணுமா…”ஏன்யா, என்னோடைய சொத்து சுகங்களை வச்சு ரொம்ப சொகுசா வாழ்ந்துட்டு எனக்கு பிள்ளைகளையும் கொடுத்திட்டு, இப்போ அவளோடு சஷ்டியப்த பூர்த்தி கொண்டாட போறியா?. அப்படீன்னா இதுவரை என்னோடு வழ்ந்தது போலி வாழ்க்கையா?. விட மாட்டேன்ய்யா. அந்த விழாவை நடக்க விட மாட்டேன். நீ போனால்தானே விழா நடக்கும். உனக்கு பதிலா நான் போறேன்’…… பீரோவைத்திறந்து துப்பாக்கியைக் கையிலெடுத்தவள்…. ‘இதோ பார், நான் அங்கே போயி அங்கிருந்து உனக்கு போன் பண்ணுவேன், நீ வரமாட்டேன்னு அந்த அபி கிட்டே சொல்லணும். மாத்தி சொன்னாலோ அல்லது இங்குள்ள சூழ்நிலையைச்சொன்னாலோ அந்த அபி, கற்பகம், ஆனந்தி, ஆர்த்தி எல்லோரையும் சுட்டுத்தள்ளி விடுவேன்’ (அட.. இந்த சாரதா சொன்ன மாதிரிதான் ஆயிடுச்சு…!!!)
‘காஞ்சனா நீ பண்றது கொஞ்சம் கூட நியாயமில்லை, என்னை அங்கே போகவிடு’ என்னமோ காஞ்சனாவும் ஆதியும் இவருடைய அறிவுரையைக் கேட்டு அப்படியே நடப்பது போல இவர் கீதோபதேசம் செய்ய… காஞ்சனா போயே விட்டாள். (அதற்குப்பிறகு நடந்ததுதான் நமக்குத் தெரியுமே)
ஃபிளாஷ்பேக் முடிந்ததும், ஆதி மகிழ்ச்சியுடன் மனோவைக் கட்டிக்கொள்கிறான், கூடவே அப்பாவின் பக்கம் திரும்பி… ‘பார்த்தியாய்யா, நாங்க நினைப்பதுதான் நடக்கும். என்னமோ பெரிசா கிழிச்சுடுவேன்னாளே அந்த அபி, இப்போ என்ன ஆச்சு பார்த்தியா?. அபியுடைய மொத்தக்குடும்பமும் அவமானப்பட்டு நிற்குது. இப்பவாவது நாங்க யாருன்னு அவங்களுக்கு தெரியட்டும். உன்னைக் கடத்திக்கிட்டு வந்த வேலை முடிஞ்சிடுச்சு, இனி நீ எங்களுக்கு தேவையில்லை, வீட்டை விட்டு வெளியில போய்யா’ ஆதியின் கத்தலைத் தொடர்ந்து காஞ்சானவின் முறை….
‘ஆமாய்யா, நாங்க ஒண்ணும் உன்னை எங்களோடு வச்சுக்கணும்னு நினைச்சு கடத்திக்கிட்டு வரலை. உன்மேல இருந்த பாசமெல்லாம் எப்பவோ போச்சு. இனிமே நீ எங்களுக்கு தேவையில்லை. போ வெளியே’
அபியின் வீடு…….
சோகமே உருவாக எல்லோரும்… மனதில் கொந்தளிப்பும் முகத்தில் வருத்தமுமாக எல்லோர் கோபமும் ஈஸ்வரன் மீதுதான்….
‘அக்கா அப்பவே நான் சொன்னேன், இவரை நம்பி எதிலும் இறங முடியாதுன்னு. மனுஷனா இவர்? நீ எல்லா எற்பாடுகளையும் செஞ்சதால்தான் நான் ஒண்ணும் பேசாமல் இருந்தேன்’
‘நான் என்ன பண்னுவேன் ஆனந்தி? இந்த ஆளு இப்படிப்பண்ணுவார்னு நானும் நினைச்சேனா, இப்படி நம்ப வச்சு கழுத்தறுத்துட்டார்’
‘ஆமா அக்கா, இனிமே அந்த ஆளுக்கும் நமக்கும் எந்த ஒட்டும் உறவும் கிடையாது, அந்த ஆள் செத்தால் கூட அம்மா தாலி அறுக்கக் கூடாது’ ஆனந்தியின் இந்த கோபாவேசப் பேச்சுக்கு அதிசயமாக யாரிடமிருந்தும், குறிபாக கற்பகத்திடம் இருந்து எந்த எதிர்ப்போ ரியாக்ஷனோ வரவில்லை. வழக்கமாக அழுத்து குவிக்கும் கற்பகத்தின் முகம் நேற்று, பாறையாக இறுகிக்கிடந்தது.
அபி, ஆனந்தி மட்டுமல்லாது ஆர்த்தி, சாரதா, கிருஷ்ணன் என்று எல்லோரும் ஈஸ்வரனைத் திட்டித்தீர்க்கிறார்கள், கற்பகம் மட்டும் மௌனமாக விரக்த்தியின் எல்லையை அடைந்ததுபோல் இருக்க….
‘இந்த வீடுதாம்பா, நிறுத்து’ ஆட்டோவில் இருந்து இறங்கி பரபரப்பாக ஈஸ்வரன் வீட்டுக்குள் வர….. அபியின் குரல் 1000வாலா பட்டாசாக வெடிக்கிறது…
‘நில்லுங்க, எங்கே வந்தீங்க? நாங்கல்லாம் இருக்கோமா செத்துட்டோமான்னு பார்க்க வந்தீங்களா?. என்ன உரிமைல இந்த வீட்டுக்குள் நுழையறீங்க?. நாங்க பட்ட அவமானமெல்லாம் போதாதா, அந்த காஞ்சனாவோடும், ஆதியோடும் சந்தோஷமா இருக்கிறதை விட்டுட்டு எதுக்காக இங்கு வந்தீங்க?. எங்களுக்கு இன்னும் என்ன அவமானம் மிச்சம் இருக்கு? உங்களை நம்பித்தானே இத்தனை ஏற்பாடும் செஞ்சோம். முதல்லேயே மறுக்க வேண்டியதுதானே, எதுக்காக ஒத்துக்கிட்டீங்க? ஊரையே கூட்டிவச்சு இப்படி அவமானப்பத்திட்டீங்களே. ஒரு பத்து நிமிஷம் மட்டும் வந்திட்டு போயிடுங்கப்பான்னு போன்ல எவ்வளவு கெஞ்சினேன்?’
‘அபி நான் சொல்ல வர்ரதைக் கொஞ்சம் கேளும்மா’
‘பேசாதீங்க, நீங்க பேசி நாங்க கெட்டதெல்லாம் போதும். கோயிலில் பிச்சைக்கார கோலத்தில் பார்த்த உங்களை அப்படியே விட்டுத் தொலைச்சிட்டு வந்திருக்கணும். அப்படிச்செய்யாமல் அப்பான்னு மதிச்சு எங்க கூடவே கூட்டிக்கிட்டு வந்தது என் தப்புதான். இன்னும் ஏன் நிற்கிறீங்க? போங்க இங்கிருந்து. இனி எங்க வீட்டு வாசற்படியை மிதிக்காதீங்க, இனி உங்களுக்கும் எங்களுக்கும் எந்த ஒட்டும் உறவும் கிடையாது. இனிமேல் உங்களை எந்த நிலையிலும் நான் சந்திக்க விரும்பலை, நீங்க செத்துட்டீங்கன்னு நினைச்சுக்கிறோம்…. போங்க வெளியே’
‘அபி நான் சொல்ல வர்ரதைக் கொஞ்சம் கேளும்மா’
‘வெளியே போங்கன்னு சொல்றேன்’
வீட்டிலிருந்து கேட்டுக்குப்போகும்வரை சுமார் இரண்டு நிமிடங்கள் வரை அவர்களை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே போகிறார் ஈஸ்வரன்.
ஆக இரண்டு வீட்டில் இருந்தும் விரட்டியடிக்கப்பட்டு விட்டார். ஆதி வீட்டில் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது.. ஆனல் அபி வீட்டில்…..??????????????.
இப்போ தப்பு யார் மீது?. நிச்சயமாக ஈஸ்வரன் மீதுதான்…..
‘அபி நான் சொல்ல வர்ரதைக் கொஞ்சம் கேளும்மா’
‘அபி நான் சொல்ல வர்ரதைக் கொஞ்சம் கேளும்மா’
‘அபி நான் சொல்ல வர்ரதைக் கொஞ்சம் கேளும்மா’
‘அபி நான் சொல்ல வர்ரதைக் கொஞ்சம் கேளும்மா’
‘அபி நான் சொல்ல வர்ரதைக் கொஞ்சம் கேளும்மா’
‘அபி நான் சொல்ல வர்ரதைக் கொஞ்சம் கேளும்மா’
‘அபி நான் சொல்ல வர்ரதைக் கொஞ்சம் கேளும்மா’
என்று இருபத்தைந்து தடவை சொல்லிக்கொண்டிருப்பதைவிட….., அதில் பத்தில் ஒரு பங்கு நேரத்தில்….
‘அந்த காஞ்சனா உங்களையெல்லாம் சுட்டுக் கொன்னுடுவேன்னு மிரட்டினதினாலதான் நான் போனில் வரமுடியாதுன்னு சொன்னேன்’ என்று ஒரே வரியில் சொல்லிவிட்டுப்போயிருக்கலாம்.
அதிலும், வீட்டிலிருந்து ‘கேட்’டுக்குப்போகும்போது எல்லோரும் கோபத்துடன், அதே நேரம் அமைதியாக அவரைப்பார்த்துக்கொன்டிருக்க, அந்த நீண்ட இடைவெளியில் ஒரு பெரிய லெக்சரே பண்ணலாம், அவ்வளவு நேரம் இருக்கிறது…..
ஆனால் ஒரு விஷயம், அப்படியெல்லாம் சட்டு புட்டுனு விஷயங்களைப்போட்டு உடைச்சிட்டா இன்னும் 749 எபிசோட்களுக்கு இழுத்துச்செல்ல முடியாது….
749 எபிசோட ... :lol: :rotfl:Quote:
Originally Posted by saradhaa_sn
:rotfl:
:rotfl:
:rotfl:
தொல்ஸிடம் நிறையவே விடயம் இருக்கும் ..
ஆனால்
எல்லா முட்டைகளையும் ஒரு கூடைக்குள் திணிக்க முயல்கிறார்
அனுபவங்கள் என நேற்று....
dock dock dock...
Saratha ...
no updates :huh:
indha serial innum mudiyalaya :shock: :shock:
No and it won't be for a long time.Quote:
Originally Posted by great