டியர் ஜேயார் சார்,
நமது நடிகர் திலகத்தின் கௌரவ வேட படப்பட்டியலை தொடங்கி வைத்த பெருமைக்குரிய திரைப்படம் "மர்ம வீரன்".
நடிகர் திலகத்தின் அருமை நண்பர், நடிகர் ஸ்ரீராம் இப்படத்தின் தயாரிப்பாளர் & ஹீரோ.
அன்புடன்,
பம்மலார்.
Printable View
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களின் மனம் திறந்த பாராட்டுக்கு எனது மனமார்ந்த நன்றி !
'திரைவானம்' "மன்னவன் வந்தானடி" [ஜூலை 1975] சிறப்பு மலர் பக்கங்கள் ஒவ்வொன்றும் பொக்கிஷம் ! இங்கே பதிவிட்டமைக்கு நெஞ்சார்ந்த நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
அண்ணலின் ஆகஸ்ட் அற்புதங்கள்
மன்னவன் வந்தானடி : [2.8.1975 - 2.8.2011] : 37வது திக்விஜயம்
பொக்கிஷப் புதையல்
அட்டைப்படம் : திரைவானம் : நவம்பர் 1972
[உதவி : நல்லிதயம் திரு.ஜி.மாணிக்கவாசகம்]
http://i1094.photobucket.com/albums/...EDC4268a-1.jpg
படத்துவக்கவிழாக் காட்சிகள் : பேசும் படம் : நவம்பர் 1972
http://i1094.photobucket.com/albums/...EDC4267a-1.jpg
படம் வெளிவரும் செய்தி : மதி ஒளி : 7.3.1975
http://i1094.photobucket.com/albums/...EDC4265a-1.jpg
அட்டைப்பட விளம்பரம் : பேசும் படம் : ஜூலை 1975
http://i1094.photobucket.com/albums/...EDC4266a-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
Thanks Pammalar and Ragavendran sir for every day treat... Hats off to you guys for your dedication to make us happy.
Cheers,
Sathish
Dear Raghavendra sir and Pammal sir
you are really great i have no words to praise you, everyday i love to see about different news on my NT, keep it up.
Raghavendra sir/ pammal sir
by any chance u have the video coverage of Ponvila, savalasamale function, Chavlier functions videos sir
kumareshan prabhu
hi shek
nice to hear on kumbakonam statue
Dear Sathish, Kumaresh Prabhu and friends,
Thank you all for the support and encouragement, which makes us more energetic and enthusiastic to dedicate ourselves to glorify NT.
Regards,
Raghavendran
http://cdn1.supergoodmovies.com/File...c64b46fe20.jpg
(source: http://www.supergoodmovies.com/13344...d-news-Details)Quote:
The veteran actor of 60 years stay in theatre and 50 years in cinema MS Umesh is known for his simplicity and humbleness. He has taken a strong step to politely hand over one and half acre of land presented to him by producer of ‘Hori’ Kannada film Linge Gowda.
I am not able to maintain this piece of land in Mandya district given to me at the audio release of ‘Hori’ Kannada film. I am staying in Bangalore and leading a life of hand to mouth. How can I till the land or develop it at this stage. So I have decided to give back the land. I am not expecting anything and in case they think of alternative I welcome it said MS Umesh. Explaining further MS Umesh who is really in financial constraints said it is appropriate to get first for the work done and secondly it is right to maintain the house I have in Bangalore.
M.S. Umesh was introduced as the child artiste in the film Makkala Rajya (Pillalu Techina Chellani Rajya in Telugu, Kuzandaigal Kanda Kudiyarasu in Tamil), NT in Guest appearance.
Makkala Rajya was released on 05.08.1960 and enters 52nd year on 05.08.2011.
http://cdn1.supergoodmovies.com/File...8ec77663ad.jpg
http://www.hindu.com/fr/2010/11/12/i...1250870301.jpg
Quote:
M.S. Umesh, who followed Puttanna to Madras to play a part in “Makkala Rajya” produced by Padmini Pictures, was directed by B.R. Pantulu. M.V. Rajamma, B.R. Pantulu, Nadigar Tailagam Sivaji Ganesan, Narasimharaju, Kala, Balakrishna, Kanchana, Dikki Madhava Rao and Lakshmidevi were also part of the film.
Source:The Hindu)Quote:
“Makkala Rajya”, a film in which children played the lead roles, was a huge hit in the sixties and got appreciation from all quarters.
For those who are well informed of Kannada cinema, please point out any correction or mistake. Thank you.
Raghavendran
The super hit song from Makkala Rajya sung by Jikki and A.P. Komala, penned by K.P. Sastri and composed by T.G. Lingappa:
Aaduva Aasaiya
சமீபத்தில் படித்த ஒரு செய்தி
தினமணி மற்றும் வண்ணத்திரை மற்றும் சினிமா எக்ஸ்பிரஸ் உதவி ஆசிரியர் திரு தமிழ்மகன் அவர்கள் கூறியது
அந்திமத்தில் அணையும் விளக்குகள்
நடிகர் சிவாஜி கணேசனோடு எனக்கு நீண்ட சம்பந்தம் உண்டு. அவ்வளவு நேரடியானதாக இல்லையென்றாலும் சுற்றி வளைத்தவாக்கிலோ பக்க வாக்கிலோ இந்தத் தொடர்புகள் ஏற்பட்டிருந்தன. 87,88 வாக்கில் சிவாஜி கணேசன் நடித்த ஒரு படத்துக்குத் தோழர் சுபவீரபாண்டியன் வசனம் எழுதினார். அது பின்னர் 'முதல்குரல்' என்ற பெயரில் வெளியானது. நான், கவிதாபாரதி, இயக்குநர் செல்வபாரதி ஆகியோர் வசனத்தில் உதவி என்ற அளவில் பணியாற்றினோம். சிவாஜி பேசிய வசனத்தில் நான் பகிர்ந்து கொண்ட வாக்கியம் ஏதேனும் இடம்பெற்றிருக்கலாம். ('பத்திரிகைகாரன் நினைச்சா எதையும் சாதிக்க முடியும்' டைப்பில்). ஏதோ அப்படிச் சம்பந்தம் இருக்கிறது.
நான் பத்திரிகை நிருபரானபோது பல திரைப்படப் படப்பிடிப்பில் அவரைச் சந்திக்க முடிந்தது. குறிப்பாக 'ஒன்ஸ்மோர்', 'என் ஆச ராசாவே', 'பூப்பறிக்க வருகிறோம்', 'மன்னவரு சின்னவரு,' 'படையப்பா' போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போது படப்பிடிப்பிலேயே பார்க்கிற பேசுகிற வாய்ப்புகள் கிடைத்தன. பெரும்பாலும் 'அலை ஓசை' மணி, 'குமுதம்' செல்லப்பா, 'தேவி' மணி போன்றவர்களிடம்தான் கிண்டலாக ஏதாவது பேசுவார். நாங்கள் ஏதாவது கேட்டாலும் ஏடாகூடமாக பதில் வரும். (அந்தக் காலத்தில் நடித்த படத்துக்கும் இப்போது நடிப்பதற்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்...? பதில்: "தெரிஞ்சு என்ன பண்ணப்போறே?'') கும்பலாகச் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்பவர்களைப் பார்க்கும்போது அவருக்கு எப்படி இருந்ததோ? அலுப்பாகவோ அசட்டையாகவோ பதில் சொல்லுவார். உங்களுக்குப் பிடித்த வெளிநாட்டு நடிகர் யார் என்றெல்லாம் கேட்பதில் ஏற்படும் எரிச்சலாகக்கூட இருக்கலாம். நாம் ரொம்பவும் ரசித்த பெரிய மனிதர் என்பதற்காகவே அவர் சொல்லுவதற்கெல்லாம் சிரிப்போம்.
இது தவிர அவருடைய பிறந்த நாள், திருமண நாள் சமயங்களில் அவர் வீட்டில் விருந்து வைப்பார். பத்திரிகைக்காரர்கள் அவரைச் சுற்றி அமர்ந்து பேசிக் கொண்டிருப்போம். அவருக்கு நிருபர் கூட்டத்தின் மீது கொஞ்சம் அன்பும் அலட்சியமும் இருப்பதைக் காணமுடியும். எல்லோரும் சாப்பிட்டாச்சா என்று தனித்தனியே விசாரிப்பதில் அன்பு. "சாப்பிட்டோம் சார்'' என்றால் "ஆமா. அதை முடிக்கணும் முதல்ல'' என்பதில் கிண்டல்.
ஆனால் நானும் நண்பர் இளையபெருமாளும் தினமணி தீபாவளி மலருக்காக சிவாஜிகணேசனைப் பேட்டி கண்டோம். அதில் வழக்கமான சிவாஜி இல்லை. தனிப்பட்ட முறையில் எங்களை மிகவும் விசாரித்தார். டேப் ரெகார்டரை ஆன் செய்வதற்கு முன்பும் ஆஃப் செய்த பின்னும் வெகுநேரம் பேசினார். கலைஞர், ஜெயலலிதா, பெரியார், தினமணி, பிரபு, வளர்ப்பு மகன், இதயம் பேசுகிறது மணியன் என்று பல விஷயங்கள் குறித்துப் பேசினார். அதையெல்லாம் வெளியே சொல்வதற்கான நேரம் இன்னும் வரவில்லை. பல உள்ளக் குமுறல்களை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் ஒரு குடும்பத் தலைவராகத் தெரிந்தார். சுமார் மூன்றரை மணி நேரப் பேட்டி. சாப்பிட்டுவிட்டுத்தான் போக வேண்டும் என்று வற்புறுத்தினார். வேண்டாம் என்று கூறிவிடவே "நம்ம வீட்டு காபி சாப்பிட்டிருக்கீங்களா நீங்க?'' என்றார். "உங்க பிறந்த நாளுக்கு வந்தபோது சாப்பிட்டோம் சார்'' என்றேன். "அதெல்லாம் ஓட்டல்ல ஆர்டர் பண்ண காபி.'' என்றபடி கமலம் அம்மாவை அழைத்து "பசங்க நம்ம வீட்டுக் காபி சாப்பிட்டதில்லையாம்'' என்றார். சிறிது நேரம் கழித்து மற்றொரு காபிக்கு ரெடியா என்றார். நாங்கள் வேண்டாம் என்றதும் மனைவியை அழைத்து "இவங்களுக்கு உன் காபி பிடிக்கலை போல இருக்கு. ஜூஸ் ஏதாவது குடு'' என்றார். ஜுஸ் கொண்டு வந்த முருகனை "நல்லா சூடா இருக்கா?'' என்று வம்பு செய்தார்.
பேசிவிட்டு வெளியேறும்போது எங்களை எழுந்து நின்று வழியனுப்பினார். நாங்கள் வெளி வாசலைக் கடக்கும் வரை அந்த இடத்திலேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தார். எதற்காக நின்று கொண்டிருக்கிறார், நாங்களும் தயங்கித் தயங்கி நகர்ந்து கொண்டிருந்தோம். பிறகு நிதானமாக ஃபேன், ட்யூப் லைட் ஸ்விட்சுகளை நிறுத்திவிட்டு எல்லாம் அணைந்துவிட்டதா என்று அண்ணாந்து பார்த்துவிட்டு உள்ளே போனார். ஏனோ கண்கள் பனித்தன.