ஏழு ஸ்வரஙகள் ஒரு ராகம் ...ஒருமுறை தான் வரும்...ம்ம்ம்ம் அந்த ...காதல்வரும்..என்பது போல் ஒரு பாட் இருக்கு தேடினா கிடைக்கலை :)
Printable View
ஏழு ஸ்வரஙகள் ஒரு ராகம் ...ஒருமுறை தான் வரும்...ம்ம்ம்ம் அந்த ...காதல்வரும்..என்பது போல் ஒரு பாட் இருக்கு தேடினா கிடைக்கலை :)
ஏழு மணிக்கு மேல நானும் இன்ப லட்சுமி
மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிப் போனபின்னும் சோறு தண்ணி வேண்டிடத்தான் தோணல்ல
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ..
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தனோடு..ஓ..இது திருப்பாவைப் பாட்டு.. :)
ஏழி சை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே ----
அருமையான பாடல் , இசை , ஜேசுதாஸின் குரல் - இந்த பாடல் நம்மை , நெய்வேலி , கோவை , muscat , USA இவைகளைத்தாண்டி எங்கோ அழைத்துச்செல்லக்கூடியது
https://www.youtube.com/watch?v=XB8KfKmPTB4
Here's the Mallu version of "ஏழிசை கீதமே ...", awfully presented in a comedy movie (சிரியோ சிரி - 1982)!
https://www.youtube.com/watch?v=yDpWf7t8gVU
ரவி சார்
காலம்தவறாமை எப்படி நடிகர் கர்ணனின் கவசகுண்டலமோ அதுபோல ஈடுபாடு பகுப்புடன் கூடிய தொகுப்பு உங்களின் உடன்பிறந்த குணாதிசயமே ! திருக்குறள் சார்ந்த பதிவுகள் ...நான் கிரகித்துக் கொள்ளவே பிர்மிப்பானவை!
சீரான பதிவுகளில் வேரான கருத்துக்களை நேராக அலசும் தங்கள் பாணி முன்பு நான் நிராயுதபாணியே !!
செந்தில்
சி க
எங்கிருந்து பிடித்தீர்கள் இந்த மாதிரி சிரி தடவிய பொரி பாணியை?
இமிடேட் பண்ண இயலவில்லையே!
3000 முடிக்கும்போது ஓரளவு உங்களையும் வாசுவையும் ரவியையும் மதுஜியையும் ராஜ்ராஜையும் அனேகமாக பதிவுத் தரத்தில் நெருங்கி துரோணர்களின் ஏகலைவனாகி விடுவேன், கட்டைவிரலைக் காப்பாற்றிக்கொண்டுதான்!!
செந்தில்
எட்டுக்கால் சிலந்தியின் வலைப்பின்னலாய் எட்டுக்கை ஆக்டோபஸின் அலைமின்னலாய் நம்மை அணைக்கும் எண் எட்டு!
Quote:
வாகன ஓட்டிகளுக்கு எண் எட்டு ராசியில்லாததாகக் கருதப் படும் நான்சென்சு ... ..ஆனால் அதைப் போட்டால்தான் கிடைக்குமாம் டிரைவிங் லைசென்சு!
திரைப்படங்களுக்கு டைட்டில் வைப்பதிலும் எட்டு ராசி பார்க்கப் படுகிறது !
கல்யாண பரிசு....வாழ்க்கை படகு ....ராமன் தேடிய சீதை....தங்க சுரங்கம்.....
வாழ்க்கையை எட்டு எட்டாய் பிரித்து பிரித்து கொட்டு வைத்தவர்களுக்கு ஷொட்டு ! கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும் எட்டு நாளிலே டக்குமுக்கு!!
எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த காதல் தலைவர் ஏன் விட்டுவிட்டு சென்றாரோ ?
https://www.youtube.com/watch?v=YpS9AkgHCo0
எட்டு எட்டா எட்டாத வாழ்க்கை ..
https://www.youtube.com/watch?v=dO7iFsiFbAM
சின்னா!
அது
7 தினங்கள் ஒரு வாரம்
7 சுரங்கள் ஒரு ராகம்
7 முறைதான் பிறவி வரும் அந்த
7 லும் நமக்குக் காதல் வரும்.
'மனசாட்சி' படத்தின் தூள் பாட்டு. 'சந்தன மேடையில்' என்று ஆரம்பித்து தன் காந்தக் குரலால் கலக்கி எடுத்து விடுவார் 'பாடகர் திலகம்'.
https://youtu.be/5cqCLTqvXxw
என் பாட்டை விட்டுட்டீங்களே! அதுக்குள்ளே மறந்தாச்சா?:)
http://cdn.spicyonion.com/cache/imag...on-225x300.jpg
'ஏழு தலைமுறையில் முன்பிருந்ததொரு
எங்கள் வம்ச மகன் நட்ட வேல்'
'கல்தூண்' படத்தின் கல்தூண் பாடல்.
இன்னும் பத்தே தாண்டலையே.. எப்போது 50 வந்து, நூறு வந்து... ஐநூறு வந்து...
ஹ்ம்.. எண்ணூறாம் நம்பர் பாட்... டு போடலானு பாத்தா ... இப்போதைக்கு முடியாது போலிருக்கே...
யாரோ ஒருத்தர் ஏழு வயசிலே எளநி வித்தாங்களாமே... யாருக்காச்சும் தெரியுமா... அப்படி ஒரு பாட்டிருந்தா போடலாமே...
ம்.ம்... ஐம்பதாம் நம்பருக்கும் பாட்டிருக்கு.. எப்போ வருமோ..
மனுஷன் வீடு கட்டறதுக்கு ஆபீஸ் கட்டறதுக்கு வாஸ்து பாப்பாங்க.. இங்கோ ஒருத்தர் கோவிலில் சாமி இருக்கிறதுக்கே வாஸ்து பார்க்கிறார்..
எட்டடி கோயிலிலே நீ வசிக்க இடமொண்ணு இருக்குதய்யா..
ராணி லலிதாங்கி படத்தில் தலைவரின் சூப்பர் பாட்டு..
https://www.youtube.com/watch?v=GeqtqTaCTeM
எட்டு ஏழு ஆறு
ஓர் எட்டு ஏழு ஆறு
மூணு நம்பர்களையும் ஒண்ணா சொல்லி டி.ஏ.மதுரம் மதுரக் குரல்ல பாடுறாரே!
https://youtu.be/THpHQM26F60?list=PL...H61gNGFP-reZCg
ரவி ஜி...
தெய்வம் என்றால் அது தெய்வம் என்ற குட்டிக்கண்ணனின் சின்னக் கதை ( சின்னக் கண்ணனின் குட்டிக் கதை அல்ல ) மனதை மயக்கி விட்டது. நான் ஒரு கண்ணதாசன் :)
இறைவன் இருக்கின்றானா என்ற கேள்விக்கு இவர் ஒரு பதில் தருகிறார் கேளுங்க
https://www.youtube.com/watch?v=Ry7xzM477BI
எட்டு மடிப்பு சேல
இடுப்பில் சுத்தப்பட்ட ஒரு சோல
பட்டம் கொடுத்தது எனக்கு
இன்னும் பாதியில் நிக்குதே வழக்கு
நல்ல பாடல்.
https://youtu.be/aGxJeJssNE8
எட்டுத் திசையும் சுத்தி வரவா
அட மாமா நீயே என் கூடக் கொஞ்சம் வா வா வா வா ----பொழுது விடிஞ்சாச்சு
ஒரு எட்டு முழ வெட்டி கட்டி
அடி ஏன் புருஷன் நடக்கையிலே
பாதி பல்லு போனக் கிழவிகளும்
நெஞ்சு படபடத்து துடிப்பாங்க ---- பட்டணந்தான் போகலாமடி
இவளொரு அழகிய பூஞ்சிட்டு
வயசு ஈரொம்போது பதினெட்டு
இவருக்கு வயசு மூவெட்டு
பொங்கி இளமை சதிராடும் உடற்கட்டு
ஏழு கடல் நாயகியே ( பைரவி )
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே ( ரம்பம்பம் ஆரம்பம் - மை.ம.கா.ரா )
வானவில்லின் வர்ணங்கள் ஏழு ( என் வாலிபமென்னும் - பால்குடம் )
மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜன்மம்தான் ( ஆடியிலே சேதி - என் ஆசை மச்சான் )
ஏழு கடல் தாண்டிதான் ஏழு மலை தாண்டிதான் ( உருகுதே மருகுதே -வெயில் )
என்னை ஏழு கலர் லுங்கியா மடிச்சுபுட்டாளே ( மெரசலாயிட்டேன் - ஐ )
எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள் ஏழு ஸ்வரங்களில் ( முத்தான முத்தல்லவோ )
ஏழு என்கிறாய் என் ஏழு சுரம் அவன் ( பத்துக்குள்ளே - வசூல் ராஜா )
ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் ( கண்ணன் ஒரு கைக்குழந்தை - பத்ரகாளி )
ம்ம்ம்.. இன்னும் கண்டிப்பாக இருக்கும்
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே
உன் மீது ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே
செந்தில் சார் - இந்த ஒரு பாடல் உங்கள் எண்ணிக்கை முழுவதையும் பூர்த்தி செய்யக்கூடிய ஒன்று - எதிர்காலத்தில் செந்தில் என்பவர் மதுரகான திரியில் வருவார் - திறமையில் ஒன்று , இரண்டு என்று விரல் விட்டு எண்ணக்கூடியவர்களில் அவரும் ஒருவர் என்று எண்ணியோ, என்னவோ அன்றே நடிகர் திலகம் இந்த பாடலை உங்களுக்காக பாடி உள்ளார் .
https://youtu.be/YofxxvjzSLM
வாசு - நான்கு சுவர்கள் - பாலாவின் பாடல் - அன்றே நான்கு சுவர்களுக்குள் அடங்காமல் பட்டி தொட்டியெல்லாம் அலறிய பாடல் - நடையா ? இது நடையா என்ற பாடலைப்போல மிகவும் பிரபலமான பாடல் ... இந்த பாடல் உங்கள் வரிசையில் வரக்கூடம் என்று யூகித்தேன் - கண்ணை திறந்து பார்க்கும் முன் பதிவு செய்து விட்டீர்கள் - மிகவும் நன்றி .
எட்டு வகைத் திருமகளும் ஒட்டு மொத்தமாக அரண்மனையில் குடிபுகுந்தாஆஆஆஅர்....
மனோரமாவுக்காக பி.சுசீலா குரல் கொடுக்க ஒய்.ஜி.எம்முக்கு எஸ்.பி.பி... பாலூட்டி வளர்த்த கிளி
https://www.youtube.com/watch?v=wKBFpO1mL1A
மீண்டும் மீண்டும் விவசாயிகள் தற்கொலை என்ற ஒரே ஆயுதத்தையே உபயோகித்து வருகின்றனர் . தெலுங்கானாவில் நேற்று பல இடங்களில் தற்கொலையின் மொத்த எண்ணிக்கை பத்து - மனம் உருகியதில் உதித்த கவிதை இது ( படித்ததில் பிடித்த ஒன்று )
நிலங்கள் வீடு ஆயின
களங்கள் காடு ஆயின
விவசாயி விண்ணோடு போறான்
விவசாயம் மண்ணோடு போகிறது.....
உரிமைக்காக பிச்சை எடுத்தோம்
இருநூறு ஆண்டு _ இனி
உணவுக்காக பிச்சை எடுப்போம்
எத்தனை ஆண்டோ ?.....
பல கிராமத்தில் பலரை காணோம்
பல இடதில் கிராமத்தை காணோம்_ பூமி
யாரையும் கைவிடாத தாயானவள்_ இன்று
யாராலும் கைவிடப்பட்ட சேயானாள்.....
சிற்பங்கள் அழிந்துவிட்டால்
கோயிலுக்கு சிறப்பில்லை
சிற்பிகளே அழிந்துவிட்டால்
கோயிலுகே பிறப்பில்லை.....
விவசாயி அழிந்துவிட்டால்
உண்ணகூட வழியில்லை
விவசாயம் அழிந்துவிட்டால்
வருந்தி பின் பயனில்லை.....
நிதிநிலை அறிக்கையில்
அரசின் அறிவின்மை
எதிரி அழிய எண்பதாயிரம் கோடி
நாம் வாழ நாலாயிரம் கோடி.....
கரும் மேகங்கள் காணவில்லை
கால் நடைகள் பேனவில்லை
நாளை வரும் பசி போக்க
நாகரிகம் உதவவில்லை.....
ஏறு போன நிலங்கள் _ இன்று
கூறு போன மனைகள்
பருப்பு கொடுத்த சோலைகள்_இன்று
செருப்பு தொழில்சாலைகள்.....
நிலத்தை வித்து பணத்தை போட்டால்
வங்கி பணம் வட்டி தரும் _ வாய்
பசிக்கு ரொட்டி தருமா ?.....
பணத்தை மட்டும் அறுவடை
பண்ண முடிந்தால்_ அம்பானியும்
அரசியல் வாதியும் ஆடு மாடு
மேயித்து விவசாயி ஆகி இருப்பான்.....
iPodடை'யும் Androidடை'யும் தின்னமுடியாது
Windowsஐ'யும் Vistaவை'யும் உன்ன முடியாது
மதுவை மட்டும் தாகதிற்கு குடிக்க முடியாது
பசிக்காத போல் பல நாட்கள் நடிக்க முடியாது.....
விஞ்ஞான வளர்ச்சியில் வசதிகள் வரும்
வயிறு நிரம்புமா.....?
விவசாயத்தை துறந்த நாடும்
விவசாயியை மறந்த நாடும்
உருப்பிட முடியாது _
-உண்மை இன்று புரியாது.
https://www.youtube.com/watch?v=i7wZg2jW2ag
ஏழெட்டு பெண்கள் எந்தன் பக்கம்
ஈரெட்டு வயதினில் நிற்கும்
மான் வண்ணமென தேன் கிண்ணமென
வேறே ஏது சொர்க்கம்----பதிலுக்கு பதில்
https://youtu.be/K6BG05uMXHk
மதுண்ணா! ரவி சார்!
மாலை வணக்கம். இன்று மார்னிங் ஷிப்ட். அதான் வரமுடியல.
மது சார் , முன்பு கருக்குள் கரு பதிவுகள் போடும் போது பல பாடல்கள் சேர்த்து வைத்தேன் - அதில் பல என்னிடம் சொல்லிக்கொள்ளாமல் நெய்வேலி பக்கம் சென்று விட்டன - இன்றும் இந்த நிலைமை தொடர்கிறது - பாருங்கள் பெட்டியில் பூட்டிவைத்து , நாளை போடலாம் என்று நினைத்த பாடல் என்னிடம் " போய் வருகிறேன் " என்று ஒரு வார்த்தை கூட சொல்லிக்கொள்ளாமல் உங்களிடம் தஞ்சம் புகுந்து விட்டதே !!! நன்றி சார் - இந்த பாடலின் விளக்கம் நாளை தருகிறேன் , என் பாணியில் .....
From KalyaaNam PaNNip Paar
Yezhumalai AaNdavane VenkataramaNaa.....
http://www.youtube.com/watch?v=jnKdguYYMug
ரவி ஜி..
ஆஹா... மன்னித்து விடவும். மு.கொ. தனமாக பதிந்து விட்டேனா ? இனிமேல் கொஞ்சம் வெயிட் செய்யுறேன்... இப்போது வெயிட் செய்வது உங்கள் அழகான விளக்கத்துக்காகவும் தான்..!
மதுண்ணா!
ராட்சஸியின் அதிகம் பிரபலமாகாத வித்தியாச ரேர் சாங்.
நானொரு பட்டுப் பூச்சி
ஈரெட்டு வயசாச்சு (அப்பாடி! இதிலும் எட்டு வந்துடுச்சி)
நாளொரு கேலிப் பேச்சு
இளவட்ட மனசாச்சு
'படாபட்' செம கிளாமர். ஒருத்தர் உடனே லைக் போடுவார் பாருங்கள்.:)
அவர் 'உறவுகள் என்றும் வாழ்க':)
https://youtu.be/FO6hM1LKHV8
வாசு ஜி..
ஈரெட்டு வயதினில் வேர் விட்டு மனதினில் கர்வத்தைத் தூண்டுமம்மா என்ற சொல்லத்தான் நினைக்கிறேன் பாட்டும் இருக்குதே !
( பல்லவியைச் சொன்னால் பதினாறாம் நம்பர் இன்னும் வரலேன்னு சிக்கா கோவிப்பார் )
8X2=16
https://youtu.be/KtoChKlYSk8
//8X2=16//
shame shame pappi shame:) thothuttoam.:)
ஸ்ரீகாந்த் அலெக்சாண்டர் ரேஞ்சுக்கு உட்கார்ந்து பாடி பயமுறுத்த, ஒய்.விஜயா பரதம் ஆடி அதைவிட பயமுறுத்த
சிவசிதம்பரம் அப்பா மாதிரி பாட முயற்சிக்க வித்தியாசமாய் இருக்கிறது இந்தப் பாடல்.
மன்மதன் கைக்கரும்பின் மலர்க்கணையே
இந்த மன்னவன் துயில் கொள்ளும் மலரணையே
ஆமாம்! என்ன படம்?
https://youtu.be/eCu8v2La2J8
செந்தில் - உங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என்று தோன்றியது - ரொம்ப யோசித்ததில் உங்கள் சார்பில் இரண்டு பாடல்கள் பதிவிடலாம் என்று நினைக்கிறேன் - இந்த எண்களுக்குள் இடையே வரும் எண்களை நீங்கள் பார்த்துக்கொள்வீர்கள் என்று எனக்குத்தெரியும் ... ம்ம்ம் --- இதற்குப்போய் நன்றி எல்லாம் வேண்டாம் சார் - இது என் கடமை .
எண் 100
https://www.youtube.com/watch?v=gZLrOhpwbnA
எண் 1000
https://www.youtube.com/watch?v=Wt6A8uxdZD0
ரவிஜி
பத்துவரை மட்டுமே நான் பதிவிடுவேன்
பின்பு எல்லாம் திரியின் ஜாம்பவான்கள் இந்திரஜித்துக்கள் சித்தர்கள் கையில்தான்!!
மதுண்ணா!
'ஒன்னு ரெண்டு மூணு....நாலு அஞ்சு ஆறு... எல்லா ஆடும் இருக்குதான்னு எண்ணிப் பார்ப்போம் வாடா' என்று ஒரு பாடல் 'கண்ணில் தெரியும் கதைகள்' படத்தில் உண்டு. ஆடு மேய்த்துக் கொண்டே பிள்ளைகள் பாடுவதாக வரும் என்று நினைவு. இப்பாடலுக்கு இசை யார்?
இளையராஜா, சங்கர் கணேஷ், ஜி.கே.வெங்கடேஷ், கே.வி.மகாதேவன், அகத்தியர் என்று இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்தவர்கள் மொத்தம் 5 பேர். பாடகர் ஏ.எல்.ராகவன் தயாரித்த படம் இது.
சடுகுடு வலையிலே ரெண்டானை
தவறி விழுந்தது கிழட்டானை
தூக்கி விட்டது இளவட்டம் இளவட்டம் இளவட்டம்
மணி போட்ட கறுப்பாடு குதிச்சாடுது
அந்த மறையாடு கெடாயோட வெளயாடுது
அருமை மதுண்ணா! ஷைலஜாவும், சசிரேகாவும் பாடியிருப்பது போல தெரியுது. ரொம்ப நாளா இப்பாட்டின் மீது ஒரு ஆசை. வீடியோ ப்ளீஸ். ஆமாம்! அகத்தியர் வேறு என்ன படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்?
பாடலின் முக்கியத்துவத்திற்காக கலர் கொடுத்திருக்கேன். வேற ஒண்ணுமில்ல. ஹி..ஹி..ஹி..
ஒன்பது என்னும் எண் பன்முகம் கொண்டது
முதன்மை இடம் நவராத்திரி பாடலுக்கே !Quote:
நவக்கிரகங்கள் நவரசங்கள் நவராத்திரி ........
சிலசமயம் ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத தன்மைக்கும் ஒரு குறியீடாக ...சுருளி தயவில்!
https://www.youtube.com/watch?v=hFozV-8o0Fo
ஒருவன் மனது ஒன்பதடா .....அதில் ஒளிந்து கிடப்பது....?
https://www.youtube.com/watch?v=V3atPjx5_VI
இது ஓட்டை வீடு ஒன்பது வாசல் ....மாலை நேரத்து மயக்கம்...
[url]https://www.youtube.com/watch?v=8d_xbq3xFtE