http://i1170.photobucket.com/albums/...ps278f0561.jpg
Printable View
ஏ.எல்.சீனிவாசன்(கண்ணதாசனின் சகோதரர்), பாக்கெட் மார்' என்ற இந்திப் படத்தை எம்.ஜி.யாருக்கு காட்டி அந்தப் படத்தின் கதையைத் தழுவி தமிழில் படமெடுக்க விரும்புவதாகவும் அதில் " நீங்கள் தான் கதாநாயகனாக நடிக்க வேண்டும் " எனவும் , எம்.ஜி.யாரிடம் கேட்டிருக்கிறார்
அதற்கு எம்ஜியார் " என்னைக் கதாநாயகனாக போட்டு நீங்க இந்தப் படம் எடுக்குறதிலே எனக்கு ரொம்ப மகிழ்ச்சி, ஆனால் படம் வேகமாக வளரவேண்டும் என்றால் , கதாநாயகி வேடத்துக்கு விளம்பரமான பெரிய நடிகையரைப் போட்டால் சரிவராது..கால்ஷீட் பிரச்சினை வரும்" எனக் கூறியிருக்கிறார்.
அதற்கு ஏ.எல்.சீனிவாசன் " முதல்ல கதாநாயகி வேஷத்துக்கு யாரைப் போடலாம்... சொல்லுங்க... புதுமுகமே போடலாம்னாலும் போடுறேன் " என்று கூறியிருக்கிறார்.
அப்போது இயக்குநர் நீலகண்டன் குறுக்கிட்டு " ஒண்ணு செய்யலாமே..பத்மினி பிக்சர்ஸ் தங்கமலை ரகசியம் படத்துக்காக ஒரு குரூப் டான்ஸ் காட்சியை
நான் இயக்கினேன்... அதுல ஆடுன ஒரு பெண் நல்லாவே இருந்தது.. இந்தப் பக்கம் பாத்தா வைஜெயந்தி மாலா மாதிரி இருக்கு... அந்தப் பக்கம் பாத்தா பத்மினி மாதிரி இருக்கு.... தாய் மொழி கன்னடம் , தமிழ் அவ்வளவாகத் தெரியாது.
ஆனால் நாளடைவில் பேசிப் பேசி பழக்கிடலாம் ! ஒரு நல்ல கதநாயகியா அந்தப் பெண்ணை ஆக்கிடமுடியும்" என்று கூறவும் அனைவரும் அதை ஏகமனதாக ஒத்துக் கொண்டனர்
திருடாதே படத்தின் நாயகியானார் சரோஜாதேவி.
இன்று பிறந்த நாள் காணும் கன்னடத்துப் பைங்கிளிக்கு எனது வாழ்த்துக்களாகட்டும் இந்தப் பதிவு
( கட்டுரையின் செய்தி ஆதாரம் : எம்.ஜி.ஆர் எழுதிய நான் ஏன் பிறந்தேன் தொடர்)
http://i61.tinypic.com/2eamfdy.jpg
Thanks to Sri. Vivekanandan Krishnamoorthy.
http://i62.tinypic.com/156crqf.jpg
Thanks to Sri. Vivekanandan Krishnamoorthy