I think they wont finish this serial since this is the only serial i guess is popular now in sun tv all others are dumb than this
Printable View
I think they wont finish this serial since this is the only serial i guess is popular now in sun tv all others are dumb than this
its cheaper to have the known devil
That's true. SunTV wouldn't have let this run this long, if it wasn't popular.Quote:
Originally Posted by kameshratnam
வைரஸ் காய்ச்சல் பத்துநாட்கள் படுக்கையில் சாய்த்துவிட்டது. தொடரை தொலைக்காட்சியில் பார்க்க முடிந்ததே தவிர பதிப்பிக்க முடியவில்லை. ஆகவே இடையே நடந்தவை சுருக்கமாக மட்டும்.....
அபியால் விரட்டியடிக்கப்பட்ட ஈஸ்வரன், சாலையில் போகும்போது மயக்கமடைந்து கீழே சாய, அவ்வழியே போகிறவர்கள் உதவிக்கு வருகின்றனர். அப்போது அங்கு ஆட்டோவில் வரும் தொல்காப்பியன் ஈஸ்வரனைக்கொண்டுபோய் மருத்துவமனையில் சேர்த்து, உஷாவுக்கு தகவல் சொல்ல உஷா பெற்றோருடன் அங்கு வருகிறாள். ஈஸ்வரனை சோதித்த மருத்துவர், அவருக்கு பக்க வாதம் அடித்துவிட்டதாகவும், ஒரு கை, ஒரு கால் விளங்காமல் போய்விட்டதாகவும் சொல்ல அவர்களுக்கு அதிர்ச்சி.
அசோஸியேஷன் தலைவர் தேர்தலில் போட்டியிட வேண்டாமென நினைத்திருந்த அபி, இப்போது முழு முச்சாக போட்டியில் இறங்கபோவதாக சொல்ல, ஆர்த்திக்கு மனதில் ஒரு அச்சம். அவளுடைய "ஆதியண்ணா" வை எதிர்த்து நிற்பது அவளுக்கு விருப்பமில்லை. ஆனால் அபி, ஆதிக்கு ஒருமுறையாவது பலத்த அடி கொடுக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறாள்.
ஈஸ்வரன் பக்கவாதத்தால் பாதிக்கப்ப்ட்டிருப்பதை முதலில் தொல்காப்பியன் அபியை நேரில் சந்தித்து சொல்லியும், உஷா மீண்டும் ஒருமுறை சொல்லியும் அபியின் மனம் மாறவில்லை. ஈஸ்வரன் மீதான வெறுப்பில் உறுதியாக இருக்கிறாள்.
கீழக்கரையில் இருந்து சென்னை வரும் தொல்ஸின் நண்பர் அன்வர்பாய், தொல்காப்பியனை சந்தித்து அவர் வீட்டில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு, போகும்போது ஒரு டைரியைக் கொடுத்துவிட்டுப்போகிறார். போட்டோக்கடை வைத்திருந்த பாய் இறந்துவிட்டதாகவும், அவர் இறக்கும் தறுவாயில் தன்னிடம் அந்த டைரியைக்கொடுத்து தொல்ஸிடம் சேர்ப்பிக்கச் சொன்னதாகவும் சொல்லி அதைக்கொடுத்துவிட்டுப்போகிறார். அதைப்பிரித்துப்படிக்கும் தொல்காப்பியனுக்கு மீண்டும் பழைய நினைவுகள்.
வீட்டை விட்டு விரட்டிய ஈஸ்வரனை மீண்டும் கண்டுபிடித்து அழைத்து வருமாறு காஞ்சனா சொல்ல, அவரைத்தேடிக் கொண்டிருக்கும் வேளையில், ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வரும் உஷாவைப் பார்க்கும் கிரி, அவள் சென்றபின் அங்கு விசாரித்து, ஈஸ்வரன் அங்குதான் இருப்பதையும், அவருக்கு ஒரு கை ஒருகால் விளங்காமல் போய்விட்டதையும் தெரிந்துவந்து ஆதியிடமும் காஞ்சனாவிடமும் சொல்கிறான். ஈஸ்வரனைக் அழைத்துக்கொண்டுவரப்போகும் ஆதிக்கும், உஷாவுக்கும் மருத்துவமனையில் சண்டை மூள, அங்கு வரும் டாக்டர், ஆதி கலாட்டா செய்தால் போலீஸில் புகார் செய்வதாகச் சொல்ல, ஆதி வெளியேறுகிறான். ஆனால் வராண்டாவில் அபியைப்பார்த்ததும் அவனுக்கு அதிர்ச்சி. அபியும் உஷாவும் தன்னிடம் நாடகம் ஆடுவதாகவும் அவர்களுக்கு தான் யார் என்பதை விரைவில் காண்பிப்பதாகவும் எச்சரிக்கை செய்துவிட்டுப்போகிறான்.
அபியை அங்கு எதிர்பார்க்காத உஷாவுக்கு ஆச்சர்யம், ஆனால் அது விரைவிலேயே காணாமல் போகிறது. காரணம், அபி ஈஸ்வரனைப்பார்க்க வரவில்லை. தன் பொறுப்பில் வளரும் மஞ்சுளாவின் பிள்ளைகளை செக் பண்ணிவிட்டுப்போகவே வந்திருக்கிறாள்.
டைரியைப்படித்துவிட்டு அம்மாவின் நினைவுகளோடு, தன்னுடைய கடலோர கிராமத்துக்கு வரும் தொல்காப்பியன், அங்கு முன்னர் ஆன்டனியால் சீரழிக்கப்பட்ட பொன்னுத்தாயி என்பவளைச் சந்திக்க, அவள் செல்லமாவைப் பற்றி விசாரிக்கிறாள். செல்லமா இறந்த செய்தி அவளுக்கு அதிர்ச்சியளிக்கிறது. பொன்னுத்தாயி மூலமாக தாஸய்யா, அவரது மகன் ஆண்டனி ஆகியோரின் அடாவடித்தனங்கள் தொல்காப்பியனுக்கு தெரிய வருகின்றன. அவளுடைய உதவியோடு ப்ஞ்சாயத்துபோர்டு அலுவலகத்தில் இருந்து ஆண்டனியின் பழைய போட்டோவைப் பெற்றுக்கொண்டு வருகிறான். இவர்கள் பேசிக்கொண்டிருப்பதை வெளியில் இருந்து ஒருவன் சந்தேகத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறான்.
நீண்ட காலத்துக்குப்பின் அப்பாவின் சமாதியில் பூஜை செய்யும் ஆண்டனியிடம், மேற்படி ஆள், செல்லம்மாவின் மகன் தொல்காப்பியன் வந்து ஆண்டனி குடும்பத்தைப்பற்றி விசாரித்து, அவனுடைய போட்டோவையும் வாங்கிப்போனதைச்சொல்ல, தொல்காப்பியனைக்கொல்ல கையில் துப்பாக்கியோடு ஓடும் ஆன்டனி, தான் வருவதற்குள் அவன் படகில் ஏறிச்சென்று விடுவதைப்பார்க்கிறான்.
சென்னை வரும் ஆண்டனி தொல்ஸின் வீட்டைத் தெரிந்துகொண்டு அவனது வருகைக்காக தெருவில் காத்திருக்க, அங்கு வரும் சித்ரா அவனிடம் பேச்சுக்கொடுக்கும்போது அவனிடம் இருக்கும் துப்பாக்கியைப் பார்த்து சந்தேகப்பட்ட்டு விசாரிக்க, ஆண்டனி சுதாரித்துக்கொண்டு ஓடி தலைமறைவாகிறான். இவர்கள் சண்டையில் சித்ராவின் தலையில் அடிபடுகிறது. சிறிதுநேரம் கழித்துவரும் தொல்ஸ், சித்ராவின் காயத்துக்கு மருந்துபோட, அவனுக்கு தெரியாமல் ஆண்டனியின் போட்டோவைப் பார்த்துவிடுகிறாள்.
தொல்காப்பியனும் உஷாவும் வரும்போது அவர்களைசந்திக்கும் வீட்டுக்காரர், தொல்காப்பியனைத்தேடி சந்தேகத்துக்கு உரிய நபர்கள் எல்லாம் வருவதாகவும், ஆகவே அவன் உடனடியாக அங்கிருந்து காலி செய்ய வேன்டும் என்றும் சொல்ல, அவருக்கும் உஷாவுக்கும் வாதம் முற்ற, தொல்காப்பியனை அங்கிருந்து காலிபண்ணி தன் வீட்டுக்கு அழைத்துவருகிறாள் உஷா. தொல்ஸ் உறங்கிக்கொண்டிருக்கும்போது, உஷா "அந்த" டைரியை உஷா படிக்கத்துவங்குகிறாள்....
நலமே இருக்க வாழ்த்துக்கள்
நன்றி வாழ்த்துக்கள்
take care of ur health saradha madam :D
தொல்ச் கொஞ்சம் economics் படித்திருந்தால் நல்லதுபோல.
இந்த நாடகத்தைப் பார்க்க
பார்க்காதவர்கள் - அப்படி யாரும் விரும்பமாட்டார்கள் - இருந்தும்
/cassette/CD/DVD எடுத்துப் பார்க்க வாய்ப்பே இல்லை.
சின்ன நடகங்களை மக்கள் கொப்பி எடுத்துப் பார்ப்பதுண்டு.
இங்கு ....
எத்தனை ஆயிரம் கொப்பிகள் எடுத்துப் பார்ப்பது ???
பாவம் தொல்ஸ் :-(
மீண்டும்Quote:
Originally Posted by aanaa
:huh:
Take care saradha madam :D