சிவாஜி ஒரு கோயில் திருவிழா புகைப்படங்கள்
http://i1369.photobucket.com/albums/...ps097cdb32.jpg
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
Printable View
சிவாஜி ஒரு கோயில் திருவிழா புகைப்படங்கள்
http://i1369.photobucket.com/albums/...ps097cdb32.jpg
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
சிவாஜி ஒரு கோயில் திருவிழா புகைப்படங்கள்
http://i1369.photobucket.com/albums/...psf465a1a4.jpg
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
சிவாஜி ஒரு கோயில் திருவிழா புகைப்படங்கள்
http://i1369.photobucket.com/albums/...psc9f87b8a.jpg
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
சிவாஜி ஒரு கோயில் திருவிழா புகைப்படங்கள்
http://i1369.photobucket.com/albums/...ps1e3f1537.jpg
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.[/quote]
திரு.சுந்தர்ராஜ் அவர்களே
தங்களுடைய பதிவுகளுக்கு மிக்க நன்றி. பழைய படத்திற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா - இவ்வளவு அலங்காரங்களா என அனைவரும் விய்க்கும் வண்ணம் செய்துள்ளீர்கள். மதுரை ரசிகர்கள் ஈடு இணையில்லாதவர்கள் என நிருபித்துள்ளீர்கள். அடுத்த படத்திற்கு திருச்சி ரசிகர்கள் இங்கு பிரபலமான பேப்பர் மாலையுடன் அங்கு வந்து படம் பார்க்க உள்ளோம். மதுரை ரசிகர்களுக்கு மீண்டும் எங்கள் நன்றி
http://i1170.photobucket.com/albums/...ps115efa10.jpg
Andha Naal was a Tamil crime mystery film produced by AVM in 1954. This was the first Tamil film to be made without songs, dance and stunt scenes. The story is set during the World War II period and is about the murder of a radio Engineer Rajan(Sivaji Ganesan).#AVMproductions
தற்போது சன் லைப் சேனலில் சாந்தி ஒளிபரப்பி கொண்டு இருக்கிறார்கள். நாளை பகல் 11 மணிக்கு குங்குமம் ஒளி பரப்ப உள்ளார்கள். எங்கும் சிவா ஜி மயம்.
சிவாஜி ஒரு கோயில் திருவிழா புகைப்படங்கள்
http://i1369.photobucket.com/albums/...psfaa07690.jpg
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
சிவாஜி ஒரு கோயில் திருவிழா புகைப்படங்கள்
http://i1369.photobucket.com/albums/...ps1c4b837f.jpg
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
சிவாஜி ஒரு கோயில் திருவிழா புகைப்படங்கள்
http://i1369.photobucket.com/albums/...psa5e26d09.jpg
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
சிவாஜி ஒரு கோயில் திருவிழா புகைப்படங்கள்
http://i1369.photobucket.com/albums/...pse70a6630.jpg
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
சிவாஜி ஒரு கோயில் திருவிழா புகைப்படங்கள்
http://i1369.photobucket.com/albums/...ps44dacd13.jpg
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
அன்பு நண்பர் சுந்தர்ராஜன் அவர்களுக்கு
அண்ணனுக்கு அருமையான வரவேற்பை தந்து அசத்தி விட்டிர்கள். மிக்க நன்றி.
Regards
இன்னும் எத்தனை வருடமானாலும் அண்ணனை தரிசிக்க அன்பு ரசிகர் கூட்டம் ஆர்பரித்து வரும் என்பதற்கு மதுரையில் கிடைத்துள்ள வரவேற்பு ஒரு சான்று...
முதல் வெளியீடாக இருந்தாலும் மறு வெளியீடாக இருந்தாலும் தான் ஒரு மகா சக்கரவத்தி என்பதை பறை சாற்றி உள்ளார்...ஒவ்வொரு முறையும்...
அசத்தல் படங்களை வெளியிட்டு எல்லோரும் இன்புற செய்த சகோதரர் சுந்தர்ராஜன் அவர்களுக்கு நன்றி...
http://sridharsubramaniam.org/wp-con...Mariyadhai.jpg
Sivaji had a special walk that he used on screen and it wasn't a conscious thing. The minute he heard the word "action", he would automatically transform his entire body language - instinctively.
During the filming of MUDHAL MARIYAADHAI, Bharathiraja was trying to get him to walk like he did off camera but each time Bharathiraja shouted "Action", Sivaji would do his on-screen walk.
http://sridharsubramaniam.org/wp-con...arathiraja.jpg
Bharathiraja then asked him to walk towards Radha and stop until they changed the reflectors and camera positions. When Sivaji reached Radha, Bharathiraja shouted "Cut" and Sivaji immediately relaxed and walked back to his spot, ready for the 2nd take. What Bharathiraja didn't tell him was that he had quietly asked cameraman B.Kannan to keep the camera rolling even after hearing the word "Cut". The result is Sivaji's natural walk captured on film for the first time in this scene in MUDHAL MARIYAADHAI.
When Bharathiraja meekly told Sivaji what he had done, expecting an explosion, Sivaji burst out laughing, calling Bharathiraja "Badavaa" and saying that he had tricked him properly.
Everyone on set could not believe how graciously Sivaji accepted this - One of many, many anecdotes that prove that Sivaji Ganesan was more than an amazing actor, he was an extraordinary human being!
மதுரையில் இன்றும் Dr.ரமேஷ் அண்ணனுக்கு வரவேற்பு குறையாமல் தொடர்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை மதுரை நண்பர்கள் பகிர்ந்துக் கொண்டனர். வேலை நாளான போதிலும் மக்கள் இன்றும் சென்ட்ரல் திரையரங்கிற்கு கணிசமான அளவில் வந்திருந்தனர் என்று சொன்னார்கள். இந்த வரவேற்பு இனி வரும் நாட்களிலும் தொடரும் என்ற நம்பிக்கை செய்தியையும் அவர்களிடமிருந்து கிடைத்தது.
சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்
அன்புடன்
Quote:
Quote:
NT rises back to view his flamboyant flora !
நடிப்புச் சூரியனின் ஒளியால் வளம் கண்டு பூத்துக் குலுங்கி நடிப்பு நறுமணம் பரப்பிய பசுமைப் பூந்தோட்டங்கள் ! நடிப்புத் தெய்வத்தின் வழிபாட்டுக்கு உகந்த நடிப்பு மலர்கள் !! மலர் மாலைகள்!!!
கதாநாயகரின் கதாநாயகியர்
சூரியகாந்திப்பூ மலர்மாலை 13 ஜெயலலிதா
நடிப்புப் பகலவனின் கதிரொளியில் மின்னிய நடிகர்திலகத்தால் தங்கச்சிலை என்று வர்ணிக்கப்பட்ட ஜெயலலிதா நடிப்புச்சூரியன் போன திசையிலெல்லாம் வளைந்த, வெளிப்பார்வைக்கு மலரென்றாலும் திறமைவித்துகள் பொதிந்து மறைந்த சூரியகாந்திப்பூவே! சரோஜாதேவி போலவே மக்கள்திலகம் எம்ஜிஆரின் பாசறை ஆஸ்தான நடிகையென்றாலும் நடிப்பு ராமன் (எத்தனை ராமனடி!) பாதம் பட்டு விமோசனம் அடைந்து உயிர்பெற்றெழுந்த அகலிகை போல இவருள் உறங்கிக்கிடந்த நடிப்புத்திறமை விழித்தெழுந்து படிப்படியாக சுகந்தம் பரப்பியது நடிப்புக்கடவுளின் வழிபாட்டுக்குரிய படங்களில் நடிக்கத் தொடங்கிய பின்னரே!!
நடிகமேதையின் வளர்ந்த மகளாக மோட்டார் சுந்தரம் பிள்ளையில் ஆரம்பித்து கலாட்டா கல்யாண கதாநாயகியாக மலர்ந்து எங்கிருந்தோ வந்தாளில் நடிகர்திலகத்திற்கே இணையான முதிர்ந்த நடிப்பினை வெளிப்படுத்தி நடிப்புச்செல்வியாக பரிணாம மாற்றம் பெற்றார். நடிகர்திலகத்தின் இணைவில் எங்க மாமா, சுமதி என் சுந்தரி தெய்வமகன், சவாலே சமாளி, ராஜா, அவன்தான் மனிதன், பாதுகாப்பு மற்றும் பட்டிக்காடா பட்டணமா குறிப்பிடத்தக்கவை. நடிப்புச்சூரியனாரின் காந்த அலைவட்டத்துக்குள் அவர் சென்ற திசையெல்லாம் திரும்பி சிறப்பித்தமைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!
நடிகர்த்திலகத்துடன் ஒரு நல்ல இடம்,,,நீங்கள் வந்த இடம்...மகாராணி!
https://www.youtube.com/watch?v=G9BPzusiYJY
https://www.youtube.com/watch?v=NaeKkH0hPus
நான் உன்னை அழைக்கவில்லை...எங்கிருந்தோ வந்த என் உயிரை அழைக்கிறேன்!
https://www.youtube.com/watch?v=XNOjcAZJoSM
கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன்.....அது கடலாக வந்தாலும் தடை போடுவேன்...
https://www.youtube.com/watch?v=vo00ogHbydI
கலைநிலவுடன் கலைச்செல்வி நடிகர்திலகத்தின் மகளாக....!
https://www.youtube.com/watch?v=oRS_BNiuWcA
Signature song of Jayalalitha from Aayiraththil Oruvan!
https://www.youtube.com/watch?v=WtlfSOQ4fv0
Quote:
Quote:
உதிரிப்பூக்களும் வழிபாட்டுக்கு உகந்தவையே !NT returns for his glimpses with gratitude on Ambila, Raadha, Raadhikaa, Saridhaa and Sreepriyaa
உயர்ந்த மனிதன்- 1968 தெய்வத்தின் 125 ஆவது சித்திரம்.(29th Nov- 45 Years completed)
சிலருக்கு மட்டும் வாழ்க்கை வச படுவதில்லை. ஆணாக(பணக்கார??) பிறந்தாலும் ,பலன் பூரணமாய் அனுபவிக்க படுவதில்லை.சூழ்நிலை கைதி -அதுவும் ராஜலிங்கம் போல் எல்லோருக்கும் நல்லவனாக வாழ விரும்பும் உயர்ந்த மனிதனுக்கு....
எல்லோருக்கும் எதிர்காலம் குறித்து குழப்பம் உண்டு.நிகழ் காலம் குறித்து அதிருப்தி உண்டு. ஆனால் ராஜுவுக்கோ எதிர்காலம் சூன்யம்.நிகழ்காலம் தண்டனை.கடந்த காலமோ குழப்பம். அவன் அறிவு,விருப்பம் எதுவும் பயன் படாமல் அவன் நாட்கள்.... பாரம்பரியம்,கெளரவம்,மனசாட்சி எல்லாவற்றையும் கேள்வி குறியாக்கி கேலி செய்கிறது.அவன் சுதந்திரம் பெற்ற மனிதனாக வாழவே இல்லை.
பார் மகளே பார் படத்தில் NT கதாபாத்திரம்தான் உயர்ந்த மனிதனில் NT தந்தை பாத்திரம் -சங்கரலிங்கம்.தன் அந்தஸ்துக்கு குறைந்த எதுவுமே துச்சம்.அடுத்தவர் சுதந்திரத்தை பிடுங்கி (மகன் ஆனாலும்) அடிமை படுத்தும் சுயநல மூர்க்கன்.எல்லாவற்றையும் வாய் மூடி மௌனியாய் சகித்து வாழும் ராஜு தான் விரும்பிய ஏழை பெண்ணை மணந்து சில காலம் வாழ்கிறான். ஆனால் கண்ணெதிரே தந்தையால் அவள் எரிக்க பட்டு, ஒரே மாதத்துக்குள் மருமணம் புரிய நிர்பந்திக்க பட்டு, ஒட்டாமல் அமைதி வாழ்க்கை வாழும் அவன் வாழ்க்கையில், சத்யா என்ற அநாதை ஒருவன் வேலையாளாய் நுழைந்து ,அன்பிற்கு பாத்திரமாகி,சோதனை கடந்து ,இறுதியில் சத்யா தன் மகனே என்ற உண்மை தெரிந்து சுபம்.
உருவம்,உள்ளடக்கம் எதிலும் சோதனை முயற்சி செய்யாமல் , சில பாத்திர வார்ப்புகள்,சில பாத்திர திரிபுகள், நேர்மையான ஆற்றோட்டமாய் திரைகதை. அற்புதமான வசனங்கள். மிக மிக நேர்த்தியான நடிப்பு, இவற்றை வைத்து அற்புதமான படத்தை கொடுத்தனர் கிருஷ்ணன்-பஞ்சு,மற்றும் ஏ.வீ.எம்.(உபயம்-உதர் புருஷ்-பெங்காலி)
காட்டாற்று வெள்ளமாய் ஓடிய சிவாஜியின் 68 ஆம் வருடத்திய நடிப்பில் அணை போட்டு வரம்பில் நிறுத்திய இரு படங்கள் தில்லானாவும்,உயர்ந்த மனிதனும்தான். இதில் அவர் பங்கு தில்லானாவை விட காம்ப்ளெக்ஸ் ஆனது. அவர் விரும்பாத பாத்திரம்.(விரும்பியது டாக்டர் பாத்திரம்).வேறு எந்த படத்திலாவது அவர் பாத்திரம் படத்திலேயே இந்த அளவு சுய விமரிசனத்திற்கும் ,பிறர்(முக்கியமாய் நெருங்கிய நண்பன்) விமர்சனத்திற்கும் ஆளாகி இருக்குமா என்பது சந்தேகம்.
கோழை,சில உயர்ந்த மனிதர்கள்,சூன்யமாய் பொய் வாழ்க்கை, சுமைதாங்கி,தியாகி,தனது சுய துக்கம் சுகம் நினையாத பொதிமாடு,என்று சுயமாகவும்,
கோழை,சுயநலக்காரன்,அப்பனை சமாளிக்க முடியாதவன்,தன்னை நம்பியவர்களை காப்பாற்ற முடியாதவன்,என்று டாக்டரும்,
ஜென்டில்மன்,பொய்யன்,காட்டுமிராண்டி என்று மனைவியும்,
உதட்டில் ஒன்று உள்ளத்தில் ஒன்று என்று சுந்தரம் மகள் கவுரியாலும்
விமரிசிக்க படும் இந்த ராஜு யார்?
சுருக்கமாக சொன்னால் ,தன சுயத்தை இழந்து வாழ்பவன். அதனால்,பிறரால்,அவரவர் சௌகரியத்திற்கு விமரிசிக்க படுபவன். இப்போது புரிந்திற்குமே சிங்கத்திற்கு சற்றே தீனி கிடைத்திருக்கும் என்று?
உ.ம வை வித்தியாசமான படமாக்குவது டாக்டர் பாத்திரம். நண்பன் என்றாலே,பின்னால் விரோதியாக போகும் இந்நாள் alter -ego என்ற சம்பிரதாயத்தை முறியடித்து, ஒரு தாட்சண்யம் இல்லாத மனசாட்சி,இங்கிதமற்ற இரக்கமற்ற உறுத்தி கொண்டே இருக்கும் அனுகூல சத்ரு, சங்கீதத்தில் கவுன்ட்டர்-பாயிண்ட் என்று சொல்லும் படியான அபஸ்வர இசைவு . தனக்கு சொந்தமில்லாத பொருளை ,விட்டு கொடுத்து விட்ட பாவனையில்,தானும் அந்த அசம்பாவித சம்பவத்தில் கூட இருந்தும் தன்னாலும் தான் ஆசை பட்டவளை காப்பாற்ற முடியாத உண்மையை வசதியாக மறந்து,கல்யாணமும் செய்து கொள்ளாமல் எல்லா சந்தர்பங்களிலும் ராஜுவை இடித்து கொண்டே இருக்கும் ஒரு பாத்திரம்.ஆனால் மக்களின் மனதில் ராஜுவை விட அதிக இடம் பிடிக்கும் வாய்ப்பு. ராஜு அபார சுய இரக்கம்,சுய வெறுப்புக்கு ஆளாகி ஒருவித துறவு நிலை குற்ற உணர்வுடன் இந்த சித்ரவதை நண்பனை விரும்பி ஏற்கும் மேசொகிஸ்ட்(Masochist) ஆன மனநிலையை வெளிபடுத்துவான் நட்பின் உயர்வை காட்ட ஒரு காட்சியும் வலிந்து இருக்காது.
இதன் protoganist ஆக வந்த நடிப்பு கடவுளின் படம் நெடுக மிளிரும் நடிப்பை விவரிக்க இந்த பகுதி சமர்ப்பணம்.
இந்த படத்தின் அழகே,அவர் வசனம் பேசும் காட்சிகளை விட reaction காட்டும் காட்சிகள் அதிகம். சிவாஜியின் மேதைமை ஜொலிக்கும்.
முதல் காட்சியிலேயே அந்தந்த பத்திர வார்ப்புகள் சித்திரிக்க படும்.நாடகத்தனம் கொஞ்சம் இருந்தாலும் சிவாஜியின் magic அதனை சமன் செய்யும்.
ரொம்ப uneasy restraint என்று சொல்லப்படும் பாணியில் தந்தை எதிரே நடப்பதில் ஒட்டாமல், நடப்பதை மனதளவில் அங்கீகரிக்காமல் ஆனால் எந்த வெளிப்படையான எதிர்ப்பும் காட்டாமல் கடந்து செல்வார். தனது சம நண்பன் கோபாலுடன் சமமில்லாத பால்ய நண்பன் சுந்தரத்திற்கு நேர்ந்த ஒரு அநீதியை கூட ஒட்டாமல் துறவு நிலையாய் விளக்குவார். பிறகு சிறிது குற்ற உணர்வு உறுத்த நான் உன்னை சம நிலையில் அங்கீகரிக்கிறேன் என்ற தேற்றலோடு, சிகரெட் கொடுத்து சமாளிப்பார். அனால் ராஜு ,கோபால்,சுந்தரம் உடன் பழகும் விதம் சமூக நிர்பந்த நியதிற்குட்பட்டே (சமம், சமமின்மை )இருக்கும்.பின்னால் ராஜுவின் எந்த act of commission ,omission எல்லாவற்றுக்கும் இந்த ஒரு காட்சியே நம் மனநிலையை தயார் செய்து விடும்.
கதையின் நாயகி,பார்வதியிடம் பழகும் போது inhibition துறந்து உரக்க பேசுவார்,நையாண்டி செய்வார்,இயல்பை மீறி நடப்பார்.பார்வதி அந்தஸ்தில் குறைந்திருப்பதும்,சுந்தரத்திற்கு கொடுக்க இயலாத முக்கியத்துவத்தை இந்த உறவிற்கு கொடுக்க முடிவதும், ஒரு அசட்டு தைரியத்தையும் அவருக்கு அளிக்கும்.(தந்தையை மீறியும் ,சமாளிக்கலாம் என்று) ஒரு liberated மனநிலையில் இருப்பார். இந்த மனநிலை பின்னால் ஒரே ஒரு காட்சியில் வெளிப்படும்.அதை பிறகு பார்க்கலாம்.
ஆனால் மனைவி எரிபடும் காட்சியில், ஒரு ஊமை புலம்பலோடு,ஒரு குழந்தையின் இயலாமை கதறலோடு முடிப்பார். பிறகு தந்தை தன்னை மறுமணத்திற்கு ,துப்பாக்கியை வைத்து தற்கொலை மிரட்டலோடு ,மன்றாடும் போது, கோபம்,அதிர்ச்சி,இயலாமை,சுய-வெறுப்பு,விரக்தி அத்தனையையும் ஒரு பத்து நொடி close -up ஷாட்டில் காட்டி விடுவார்.(சிவாஜிக்கு இது புதிதல்ல).அரை மனதோடு சம்மதிக்கும் காட்சியில் அடுத்த பத்தொன்பது வருட வாழ்கை சித்திரம் நமக்கு கோடி காட்ட பட்டு விடும்.
வயதான பிறகு,வரும் காட்சிகளின் அழகு மனைவி விமலாவுடன் பாந்தமான ,இதமான ஆனால் ஒட்டாத ஒரு உறவு.(விமலாவின் இயல்பே அதற்கு ஒரு காரணம் என்றாலும்). நண்பன் கோபாலுடன் வரும் அனைத்து காட்சிகளிலும்,இதமோ,இங்கிதமோ இல்லாத கோபாலின் பேச்சுகளுக்கு, ஒரு தந்தை,ஒரு ரெண்டுங்கெட்டான் நண்பன்,குத்தும் தன மனசாட்சி மூன்று நிலையிலும் கோபாலை வரித்து ,மிக அழகாக கையாள்வார்.அவருக்கு ஒருவேளை உறுத்தல் குறைய ,ஈகோவை கோட் ஸ்டாண்டில் மாட்ட,தந்தையின் இழப்பை சரி செய்ய , இந்த நண்பன் அவசிய தேவை போலும்!
கோபாலுடன் நண்பன் என்ற உரிமையில் பேசும் கணங்கள்,கோபாலின் உடல்நிலை சம்பந்தமான இடங்கள்.கோபால் நிதானம் தவறும் இடங்கள்.குழந்தையை போல் நடத்துவார். இந்த இடங்களை கையாள இனி ஒரு நடிகன் பிறப்பது இயலாது.(பாத்திரத்தை அதன் குணாதிசயம்,கதையியல்பு,மனோதத்துவ பின்னணியில் புரிந்து,அதை நேர்த்தியுடன் செயல் படுத்தும் நடிப்பு வெளிப்பாடு.)
சோர்ந்து இருக்கும் போது ,உடல் கோளாறு என்று டாக்டரை கூப்பிடும் இடத்தில், விமலா,கோபால் இருவருக்குமான இடம் ,ராஜுவின் உடல் மொழியில்,பொய் அனுசரணையுடன் பிசைதலுக்கு இசையும் காட்சியில் ஒரு revelation போல பரவச படுத்தும்.
NT யின் நடிப்பு பரிமாணங்களை அலசும் போது ,இந்த படத்தில் மறக்க முடியாத இன்னொரு புது பரிமாணம், சத்யாவுடன் அவருக்கு develop ஆகும் உறவு. பல படங்களில் இந்த மாதிரி உறவுகள் வரும் போது pre -Emptive & Prevailing mood பாணியிலோ அல்லது விரோத அடிப்படையிலோ தான் பிளாட் development premise ஆக இருக்கும். இந்த படத்திலோ முற்றும் புது பரிமாணம். அதை சிவாஜி ஆண்டிருக்கும் விதம் ஒரு தனி சுவை. ஒரு வெகுளி தனமான ,rawness கொண்ட படிப்பறிவில்லா ஒரு பையன் மேல் ஒரு soft -corner என்பதற்கு மேல் செல்ல மாட்டார். முதல் முறை பார்க்கும் போது சாதா அறிமுகம், டாக்டர் சிபாரிசில் வேலை என்பதுடன் , மற்ற படி எந்த ஒரு கவனிப்பும் காட்ட மாட்டார். சத்யன் ஆங்கிலம் தெரியாமல் ,விமலாவுடன் மாட்டி கொண்டு முழிக்கும் காட்சியில் ஆகட்டும், பிறகு சம்பளத்தை கொடுத்து ஆசிர்வாதம் வழங்கும் காட்சியில் ஆகட்டும்(முதலில் அம்மாவிடம் என்பார்) ,ஒரு செல்லமான தோரணையில் ஒரு நல்ல ரெண்டுங்கெட்டான் வேலைகார பையன் என்ற அளவிலேயே நிற்கும். அம்மா படத்திற்கு நேர்ந்த அவமானத்தை சகிக்காமல்,சத்யம் விலக விரும்பும் காட்சியில் கூட டாக்டரிடம் ,முதல்லே அவனுக்கு புத்தி சொல்லு என்று பொறுப்பை டாக்டரிடம் கொடுப்பார். டாக்டர் குடித்து விட்டு நிதானம் இழக்கும் காட்சியிலும் ,வேலையாளாகவே நடத்தி வெளியேற சொல்வார். ஆனால் டாக்டரின் மரணத்திற்கு பிறகான வெற்றிடத்தில்,சத்யனின் பிரத்யேக அக்கறை தன்மையிலும்,retire ஆன மாணிக்கம் என்ற முதிய வேலையாளின் வேண்டுகோள் படியும் துளி அக்கறையும் , நெருக்கமும் கூடும் வெகு இயல்பாக. அந்த சாப்பிடும் காட்சி ஒரு கவிதை. பிறகு கூட மனைவியின் தலையீட்டில் சத்யன் பாதிக்க படும் போது ஓவர்-ரியாக்ட் செய்யாமலே அன்பை விளக்குவார்.
விமலாவுடன் வரும் வெடிக்கும் காட்சியில்(வசனப்படியே கட்டுபடுத்தி வைத்திருந்த எரிமலை) முத்திரைகளுடன் கூடிய சீற்றமாய் வெளிப்படும். நெருப்பில் தன மனைவியை காப்பாற்ற தவறி ,பொய் வாழ்கை வாழும் ஒருவனின் ,inhibition துறந்த சீற்றம்.Incoherent ஆய் துவங்கி,கோபமாய் வெடித்து,நிலை உணர்ந்து படி படியாய் அடங்க வேண்டிய காட்சி. ஆனால் follow thru காட்சியில் நடிப்பு தெய்வம் நிலைமையை சீர் செய்யும். கோபம் சிறிதே அடங்கி,சோபாவில் கால் போட்டிருக்கும் போது ,சமாதானமாய் shoe அவிழ்க்க வரும் வரும் மனைவியிடம் பிணக்கமுற்ற சமாதான கோடி காட்டும் அந்த சிறிய கால் மாற்றும் gesture கோடானு கோடி கதை பேசி விடும்.
விமலாவிடம் வெடித்த பின் ,planter 's conference செல்ல ,புறப்படும் போது, விமலா சத்யனை கூப்பிட்டு போக சொல்லும் போது ,ஒரு அன்னியோன்யமான ,ஆச்சர்யத்தை வார்த்தையின்றி வெளிப்படுத்துவார். அந்த வெடிப்புக்கு பின், விமலாவும் இல்லாமல் இருக்கும் சூழ்நிலையில்,டிரைவர் சுந்தரத்தை பழைய சிறு வயது நண்பராக்கி, பார்வதியுடன் இருந்த போது அடைந்த சுதந்திரத்தை உணர்வார்.
அந்த நாள் ஞாபகம் பாடல்,தமிழ் பட சரித்திரத்தில் மைல் கல். Dancing இல் ஒரு பகுதி usage of property for effective rendering . என்று ஒன்று உண்டு. இந்த பாடலில், வாக்கிங் ஸ்டிக்கை ஒரு துணை பாத்திரம் ஆகவே உபயோக படுத்தி இருப்பார். அவர் சிறு வயது சந்தோஷங்களை விவரிக்கும் போது ,ஒரு விளையாட்டு பொருளாய் கையில் சுழலும். உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என்ற வரிகளில் அவர் உயர்ந்திருக்கும்.வாக்கிங் ஸ்டிக்கை, கீழே விடும் அழகே தனி.(வீரபாண்டிய கட்டபொம்மனின் வாள் உரையில் போடும் அழகை ஒத்தது ) டென்ஷன் ஆன வரிகளில் வாக்கிங் stick கழுத்திலும், மிக மிக மன அழுத்தத்திற்கு ஆட்படும் வரிகளில் ,நடக்கவே ஒரு சப்போர்ட் போலவும் பயன்படுத்துவார்.நண்பனுடன் சம நிலையில் பழ குவதாய் பாவனை செய்தாலும்,அலட்சியமாய் கழுத்தில் மாட்டி இழுப்பார். ராஜுவின் குணாதிசயம் வன்மைக்கு பணிதல்(தந்தை,விமலா, கோபால்),கீழோரிடம் empathy இருந்தாலும், ஒரு அந்தஸ்து தோரணை ஒட்டி பிறந்த குணம் போலும்!!
அடுத்த காட்சியில் அவர் வாக்கிங்கிற்கு சுந்தரத்தை அழைக்கும் போது தொப்பியை கழற்ற சொல்லும் gesture . கவுரி-சத்யா காதலை உணர்ந்து அவர் அதை அணுகும் பிரச்சனைக்குரிய காட்சி, NT யின் மேதைமைக்கு ஒரு சான்று. conference போய் வந்த தோரணையில் பிரச்சனையை அணுகுவார். தள்ளி நிற்பார், மிரட்டுவார், ஆழம் பார்ப்பார், ஒரு உயர்ந்த ,வறண்ட,flat வாய்ஸ் இல் பேசுவார்.இறுதியாய் உறுதியை உணர்ந்து சிறிதே உணர்ச்சி வச பட்டு ஒபபுவார். எனக்கு தெரிந்து இவ்வளவு காம்ப்ளெக்ஸ் ஆக ஒரு காட்சியை யாரும் அணுகியதில்லை.
கடைசி காட்சி (நாகேஷ் அவர்களை ஒரு விமான பயணத்தில் சந்தித்த போது இக்காட்சியை சிலாகித்தார்).Acting is not about discipline ,Technic , Perfection ,control and execution alone .Some times you loose your control and self to surprise yourself to surprise the audience .இதற்கு நல்ல உதாரணம் அவர் திருட்டு பழி விழுந்து தன நம்பிக்கையை குலைத்த சத்யாவை manhandle செய்யும் விதம்.(தில்லானா காட்சியில் அடிக்காமல் பாய்வார்) தன்னிடம் பேசும் கவுரி
விமலாவிடம் பேசாதே என்ற விஷயத்தை பேச முயலும் போது ,விமலா இருக்கும் போது இந்த விஷயத்தை என் பேசுகிறாய் என்பது போல் உடல் மொழி ,முகபாவத்தில் சொல்லும் அழகில்....
இந்த படத்தின் தனி சிறப்பு ஆற்றோட்டமான திரைகதை. Flashback அது இது என்று போட்டு (நிறைய சந்தர்பங்கள் இருந்தும் ) கதையின் மெல்லிய ஓட்டத்தை சிதைக்காமல், நேரடியாக கொண்டு சென்றிருப்பார்கள். ஜாவர் சீதாராமனின் வசனங்கள் (அந்த நாள்,ஆண்டவன் கட்டளை) தமிழ் பட நியதிகளை மீறாமல் , பாத்திர இயல்புகளை முன்னிறுத்தி ,மிக polish ஆக இருக்கும். கோபால்-ராஜூ உரையாடல்கள்,விமலா-ராஜூ, தொழிலாளி-முதலாளி உறவு சார்ந்தவை,கோபால் மரண காட்சி, கொடைக்கானல் காட்சிகள் குறிப்பிட வேண்டியவை.(ஒருவேளை உதர் புருஷ் வசனங்களை மொழி மாற்று செய்திருப்பார்களோ என்ற அளவு வித்யாசமாக இருக்கும்.) Hats off ஜாவர்.மற்ற படி ரொம்ப Technical விஷயங்கள் தேவை படாத கதை.
கிருஷ்ணன்-பஞ்சு சிவாஜியுடன் பிணங்கி (குங்குமம்)இந்த படத்தில் இணைந்தார். அமைதியான துருத்தாத இயக்கம்.
அடுத்த படி சரியான பாத்திர தேர்வு. சுந்தர் ராஜன் ,டாக்டர் வேஷத்திற்கு தேர்வு செய்ய பட்டிறிந்தாலும் ,அவரால் நேர் அல்லது எதிர் நிலைகளில் இயங்கியிருக்க முடியுமே தவிர நேர்-எதிர்,எதிர்-நேர் என்ற கோபாலின் புதிர் நிலை மனபான்மைகளுக்கு அசோகனின் கோமாளி தனம் கலந்த mystic ஆன நடிப்பு ஒரு புதிர் தன்மையை நிலை நிறுத்துகிறது.(Dark knight Heath Ledger போல்) .அசோகன் நல்ல தேர்வு.
வாணிஸ்ரீ ஒரு அற்புதம்.அறிமுகமாகி இரண்டாம் வருடத்தில் ஒரு rawness , Passion ridden poor teenager , பாத்திரத்துக்கு பொருத்தம். சௌகார், sophisticated ,obsessive -compulsive குணங்கள் நிறைத்த இந்த பாத்திரத்திற்கு இரண்டாவது nomination கூட இருக்க முடியாது. சிவகுமார் இதே குணாதிசயம் கொண்ட மனிதர்.கேட்கவா வேண்டும்?
நாகையா,சுந்தர ராஜன்,ராமதாஸ் அத்தனை பெரும் நல்ல பங்களிப்பை செய்திருப்பார்கள்.
இசை புரட்சி நிகழ்த்தியிருப்பார் விஸ்வநாதன்.(ராமமூர்த்தியை பிரிந்த பின் தனியாய் போட்ட படங்களிலேயே மிக சிறந்த படம்) பால் போலவே,வெள்ளிக்கிண்ணம்தான்,என்-கேள்விக்கென்ன பதில்,அந்த நாள் என்ற பாடல்கள் வாலி கூட்டணியில்.உறுத்தாத பின்னணி இசை.
ஏ.வீ.எம்.செட்டியார் சிவாஜியை உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டி இந்த படத்தை re-make செய்ய முடியாது என்று சொன்னார்.
கிருஷ்ணன்-பஞ்சு சிவாஜியை best perfectionist என்று பாராட்டினார்கள்.
ரசிகர்களின் பார்வையில் இன்றளவும் மறக்க முடியாத படம்.
மனிதரில் மாணிக்கம்.(41 ஆம் ஆண்டு நிறைவு)
என்னுடைய அத்தை கணவர் ,கன்னடத்தில் எடுத்த படம் அருணோதயா.(இவர்தான் பெல்லி மோடா படம் மூலம் புட்டண்ணா வை இயக்குனராக அறிமுகம் செய்தவர்)
இதை தழுவி தமிழில் எடுக்க பட்ட படம் மனிதரில் மாணிக்கம்.
படம் என்னவோ சோதனையே. ஆனால் கௌரவ நடிகரான ஜோடியில்லாத சிவாஜியை ,சி.வீ.ராஜேந்திரன் ஒரு surprise package ஆக பயன் படுத்தி படத்திற்கு புதிய ஒளி பாய்ச்சியிருந்தார். காமெடி கலந்த eccentric Doctor பாத்திரத்தில் நடிகர்திலகம் பின்னியிருப்பார்.
இந்த பாத்திரம் நான் நிஜமாகவே வாழ்வில் சந்தித்த மூன்று மருத்துவர்களை நினைவு படுத்தியது.(இதை என்னுடைய பத்து நண்பர்கள் அவர்கள் வாழ்க்கையோடு இணைத்து உறுதி படுத்தினர்).கதையின் இழையோடு பயணிக்கும் இந்த பாத்திரம் ,நடிகர்திலகத்தின் நடை முறை வாழ்க்கையில் வினோத மனிதர்களின் சாயலை சித்திரித்ததுடன். comedy sense &timing பிரமாதமாக கலந்திருக்கும். அவ்வளவு delightful &Enjoyable Character . அப்பப்பா என்ன மகா நடிகனையா !!!எங்கள் தங்கராஜா,கெளரவம்,ராஜபார்ட் ரங்கதுரை ,மனிதரில் மாணிக்கம் என்று ஒன்றுக்கொன்று தொடர்பேயில்லாத வேறு பட்ட பாத்திரங்கள்!!!!உலகில் இனி இப்படி ஒருவர் பிறக்க சாத்தியமேயில்லை.
ஆரம்ப அறிமுகமே ஜோர். கிறுக்கு தனமான ,பேஜார் நகைச்சுவை உணர்வுடன் மனிதாபிமானம் மிக்க டாக்டர்.
ஏழை நோயாளியிடம் காட்டும் எள்ளல் மிகுந்த அனுதாபம், ராஜனுடன் ஆரம்ப காட்சிகள்,பிரமிளாவுடன் (மனோரமா) I will sing for you என்று வித வித நடன கூத்தடிப்பு. (படு ஜாலியான performance .என்றும் ரசிக்கலாம்),கடைசி கடத்தல் காட்சியில் காமெடியன் இல்லாத குறையை போக்கி பின்னி விடுவார்.(இதே பாத்திரம் சற்றே மாற்றத்துடன் அபூர்வ ராகங்களில் நாகேஷ் செய்தார்).
என்ன சொல்ல? சிவாஜி என்ற நடிப்பு தெய்வம், வளர வளர என்னுள் வியாபித்து என்னை ஆச்சர்ய படுத்தி,பக்தியில் மேலும் மேலும் திளைக்கவே வைக்கிறது.
Gopal Sir,
ONLY You can write . This is ultimate ! This shows how far you have admired scene by scene. UM is one of the very best of our Idol Sir. Hats off to you . The standards that you have set is phenomenal . Such posts have to be converted into a book on THilagam .
Can someone guide me on how to upload photos . I have some precious one from UM.
MY FAVOURITE NT ACTING PERFORMANCE SCENES
https://www.youtube.com/watch?v=8PljHuFQ6vk
https://www.youtube.com/watch?v=BAQmk-MKt7w
https://www.youtube.com/watch?v=LZhpfHiumGw
https://www.youtube.com/watch?v=SI-oU1FUZuE
(நடிப்பு வெறி கொண்ட) காட்டாற்று வெள்ளத்துக்கு கரை கட்டி நெறிப்படுத்திய பொறியாளர்கள்
நடிகர்திலகத்தின் திரையுலக அறிமுகமே ஒரு பொங்கிப் பாயும் காட்டாற்று வெள்ளமாக சீற்றம் மிகுந்த ஊழிக் கடல் அலையாக குமுறிக் கிளம்பிய எரிமலைக் குழம்பாக இடியென தரையைத் தாக்கிய மேக மின்னலாக கார்மேகம் வெடித்துக் கொட்டிய பருவ மழையாக அமைந்து இந்த வையகத்தில் இன்று வரை எந்தவொரு கலைஞனும் முறியடிக்க முடியாத சாதனைச் சிகரம் !
இவை யாவுமே முறையாக நெறிப்படுத்தப் பட்டு கட்டுக்குள் வைக்கப் பட்டதால் நாம் பெற்ற பலன்கள் கணக்கிலடங்காதவையே. ஒவ்வொரு வகையான நடிகர்திலக ஆற்றல் சீற்றங்களையும் இயக்குனர் நாற்காலியில் அமர்ந்து நெறிப்படுத்திய பொறியாளர்கள் கிருஷ்ணன் பஞ்சு, பந்துலு, A.P. நாகராஜன், K.S. கோபாலகிருஷ்ணன், T. பிரகாஷ் ராவ், ஸ்ரீதர், பீம்சிங், ராமண்ணா,திருலோகச்சந்தர் மாதவன், K. சங்கர், K. விஜயன், D.யோகானந்த் பாரதிராஜா..... அனைவரையும் நினைவு கூர்ந்து நன்றி நவின்றிட வருகிறார் நம் நடிப்பு தெய்வம்!!
Compilation in progress. Possibly in January, the New Year 2015!
Quote:
டியர் சிவா - நன்றி நெய்வேலி வாசுவிர்க்கே செல்லவேண்டும் - இன்னும் ஒரு short கட் உள்ளது - இந்த பதிவு மூலம் மற்ற இணைய நண்பர்களுக்கு இது உதவியாக இருந்தால் என்னை விட அதிகம் மகிழ்ச்சி அடைபவர் யாரும் இருக்க முடியாதுQuote:
http://www.mayyam.com/talk/images/misc/quote_icon.png Originally Posted by sivaa http://www.mayyam.com/talk/images/bu...post-right.png தற்போழுதுஎன்னால் image பதிவிடமுடிகிறது
ரவி சார் தங்கள்மூலம் என்னுடைய பிரச்சினைக்கு
முடிவு வந்துள்ளது என நினைக்கின்றேன்
உதவிய அனைவருக்கும் நன்றி
Steps Involved
1. Visit www .photobucket.com
2. Get yourself registered
3. After registering , you can now upload the images saved on your desktop
4. Now click the image saved in your login page
5. The image will expand
6. On right hand side there is a profile of URLs – select the URL under image
7. Just paste the HTTP stings in the Mayyam page you have opened in the thread for posting
8. Before submitting go to advance view and see the picture – it is relatively bigger
9. Don’t use attachment option in Mayyam for images – you will encounter capacity constraint
You can send me a PM in case you could not succeed in this attempt
முன்னர் நண்பர் ரவி எனக்கு
தந்து உதவிய குறிப்பு
நண்பர் செந்தில்வேல் சிவராஜ்
தாங்கள் படங்களை இணைப்பதில்
சிரமப்படுவதை கவனித்துள்ளேன் எனவே
தாங்ளும் மேலுள்ள இந்த குறிப்பை பயன்படுத்தி
படங்களை பதிவிடுங்கள்
நீல வானம்(10/12/1965)
http://i.ytimg.com/vi/AUJKwygGd3s/maxresdefault.jpg
இன்று 49 வருடங்களை கடந்து 50 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நீலவானம் படம், தனிப்பட்ட முறையில் பல சிவாஜி ரசிகர்களின் பிடித்த வரிசையில் இருந்தாலும் சுமாரான வெற்றியையே ஈட்டிய படம். (இந்த மாதிரி வரிசையில் ராஜாராணி,புதையல்,அன்னையின் ஆணை ,செல்வம்,பேசும் தெய்வம்,தேனும் பாலும்,துணை போன்ற படங்களை சேர்க்கலாம்).
இந்த படத்தின் சிறப்புக்கள், கே.பாலசந்தர் -சிவாஜி இணைவு.எம்.எஸ்.வீ இசையமைப்பில் தனி பெயரில் வந்த முதல் சிவாஜி படம்,ராஜஸ்ரீ ஜோடியாக நடித்த முதல் படம்,தேவிகா சிவாஜி இணையாக நடித்த 60களின் கடைசி படம் (70களில் சத்யம்)சாந்தி theatre முக்கிய இடம் பெறும் காட்சிகள் என்று பல.
எனக்கு மிக பிடித்த படங்களின் வரிசையில் ஒன்று. தேவிகா ,கிட்டத்தட்ட கை கொடுத்த தெய்வம் சாவித்திரிக்கு இணையான பாத்திரம். சிவாஜி ,இந்த கதாநாயகி முக்கியத்துவம் கொண்ட கதையில் நடித்தும் ,தனித்து நிற்பார்.தேவிகா ,ராஜஸ்ரீ,சகஸ்ரநாமம் என்று அனைவருமே நன்கு பரிமளிப்பார்கள்.
கிட்டத்தட்ட இரண்டு இணை கோடுகள் கொண்டு நகரும் கதை. சிவாஜியின் வறுமை ,ராஜஸ்ரீ காதல்,காதல் தியாகம்,அது சார்ந்த வெறுப்பு,பழியுணர்வு எதிர்பாரா முடிவு ஒரு track . அப்பாவி தேவிகாவின் கான்சர் , சிவாஜியின் தியாக திருமணம், தேவிகாவிடம் வியாதி சார்ந்த ,தன வாழ்க்கை சார்ந்த விவரணை மறைப்பு, அது வெளியாக நேரும் தருணங்கள், எதிர்பார்த்த முடிவு என்று இன்னொரு track .இரண்டும் இணையும் சமாதானிக்கும்.
முதலில் காதல், நகைச் சுவை என்று பயணிக்கும் கதை, பிறகு தியாகம்,அன்னியோன்யம்,சோகம்,பழி சார்ந்த பரபரப்பு,தேவிகாவிடம் உண்மை வெளியாகாமல் தொடர்ந்த பொய்கள் என்று அல்லல்.
ஒரு நகைச் சுவை (வீ.கே.ஆர்-நாகேஷ்-ISR )track உடன் செல்லும்.
பாலசந்தர் திரைகதை-வசனம் படு இயல்பான புத்திசாலித்தனம் கொண்டது. மாதவன் கூட பாலசந்தர் முகம் வழியாகவே இயக்குனராக அவ்வப்போது வெளிப் படுவார்.
எனக்கு மிக பிடித்த இடங்கள்- தேவிகா வீட்டிற்கு வரும் இடம்,விசேஷம் சென்று சிவாஜி படும் அல்லல், லிட்டில் பிளோவேர் பாடல் காட்சி, சிவாஜி -தேவிகா முதலிரவு காட்சி மற்றும் அன்னியோன்ய காட்சிகள், ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே, சிவாஜி-தேவிகா குழந்தைக்கு பேர் வைக்கும் காட்சி,உண்மை வெளியாகும் காட்சி,போட்டோ எடுக்க முனையும் காட்சி(சிவாஜி natural -overplay -underplay மூன்றையும் இரண்டே நிமிடத்தில் கலந்து நம்மை அதிசயத்தில் ஆழ்த்துவார்), இறுதி காட்சி என்று அவ்வளவும் பிடிக்கும்.
பாடல்கள் படு பிரமாதம்.
நடிகர்திலகம் ,ஆரம்ப நகைசுவை,காதல்,தேவிகாவிடம் படி படியாக அனுதாபம் பாசமாக மாறும் பரிமாணம்,இறுதி விரக்தி என்று அவ்வளவு பிரமாதமாக நடிப்பார். (ஒரு காட்சியின் குச்சி ஐஸ் சாப்பிட்டு குழந்தை ஒன்றிடம் வழிவது-ஆஹா)
தேவிகாவின் மிக சிறந்த performance என்பதில் சந்தேகமே இல்லை. சிவாஜியிடம் உண்மை மனைவி கூட காட்ட முடியாத அளவு அன்னியோன்யம் காட்டி சிறந்த அண்ணிகளில் ஒருவர் என்று நிரூபித்து விடுவார்.
பார்க்காத ரசிகர்களே ,இந்த மாதிரி under -rate பண்ண பட்ட படங்களையும் முனைந்து பார்த்தால்தான் சிவாஜியின் முழு பரிமாணம் புரியும்.
Quote:
Quote:
NT rises back to view his flamboyant flora !
நடிப்புச் சூரியனின் ஒளியால் வளம் கண்டு பூத்துக் குலுங்கி நடிப்பு நறுமணம் பரப்பிய பசுமைப் பூந்தோட்டங்கள் ! நடிப்புத் தெய்வத்தின் வழிபாட்டுக்கு உகந்த நடிப்பு மலர்கள் !! மலர் மாலைகள்!!!
கதாநாயகரின் கதாநாயகியர்
அல்லி மலர்மாலை 14 M.N. ராஜம்
நிலவொளியில் மலரும் அல்லிமலரே ராஜம் என்றாலும் அந்த நிலவும் கதிரோளியைத்தானே கடன்வாங்கி பிரதிபலிக்கிறது ராஜத்தின் முகவெட்டு ஹிட்ச்காக் படங்களில் அழகிய ஒப்பனையில் காட்டப் படும் கதாநாயகியர் போன்று தனித்துவமும் கவர்ச்சியும் நிறைந்த பாவைவிளக்கு. கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை உள்வாங்கி இயக்குனரின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் அமைதியான நட்சத்திரம் நடிகர்திலகத்துடன் பெருமை அடைந்த படங்கள் பாசமலர் பதிபக்தி மற்றும் பாவைவிளக்கு. தனிப்பட்ட முறையில் புகழ் வெளிச்சம் விழுந்த படங்கள் மக்களைப் பெற்ற மகராசி, மணாளனே மங்கையின் பாக்கியம் .....ரத்தக்கண்ணீர்....the initials made me to think whether M.N. Rajam was a sister to M.N.Nambiar!
The Signature song sequence for MNRajam in Pasamalar!
பாவையின் முகத்தைப் பார்த்துப் பரவசமான நடிகர்திலகத்தின் முகத்தை ராஜம் பார்க்கவில்லையாமே
https://www.youtube.com/watch?v=G2B97RTcB3E
The significant song sequences of MN Rajam!
With NT in Pathibakthi
https://www.youtube.com/watch?v=E18POUkDaIE
With NT in Paavai Vilakku giving life to Shahjahan and Mumtaj!
https://www.youtube.com/watch?v=RuXW83PLumE
In Raththakkanneer with Chandrababu
https://www.youtube.com/watch?v=IuvYXNgXLy8
With Guruswamy Nambiar in Makkalai Petra Maharasi! only in our NT movie Nambiar was given a song sequence!! Another chance was in Mirudhanga Chakkaravarthi!
https://www.youtube.com/watch?v=EgFTJDYI42w
இந்த காலகட்டத்தில், படித்த பெண்கள் சினிமாவுக்கு வர ஆரம்பித்திருந்தார்கள். இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக அமைந்த சுகன்யாவும் படித்தவர். வெளிநாடுகளிலும் பரத நாட்டியத்தின் சிறப்பை வெளிப்படுத்தியவர். அதோடு எனக்கு கிடைத்த இன்னொரு உயரமான இந்தப் படத்தின் ஒரு காட்சி ரொம்பவே உருக்கமானது. பார்வையற்ற என் மனைவி, எதிரிகள் சதியால் குழந்தைக்கு விஷம் கலந்த புட்டிப்பாலை கொடுத்து விடுவார். இதனால் குழந்தை இறந்து போகும்.
இந்தக் காட்சியில் நான் மனம் உடைந்து கதறி அழ வேண்டும். டைரக்டர் 'ஸ்டார்ட்' சொன்னதும், கேமரா ஓடத் தொடங்கியது. குழந்தை இறந்தது தெரிந்ததும் சுகன்யா கதற, நான் அழ, கேமரா ஓடிக் கொண்டிருந்தது.
காட்சி முடிந்தும் டைரக்டர் பி.வாசு 'கட்' சொல்லவில்லை. அந்தக் கேரக்டருக்குள் கரைந்து போயிருந்ததால், எனக்கும் தொடர்ந்து கேமரா ஓடிக் கொண்டிருப்பது தெரியவில்லை. திடீரென பி.வாசு என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டபோதுதான், காட்சி படமாகி முடிந்து விட்டதை தெரிந்து கொண்டேன். வாசு கண்களிலும் கண்ணீர். இதன் பிறகே அவர் 'கட்' சொல்ல, கேமராமேன் கேமராவின் இயக்கத்தை நிறுத்தினார். கேமராமேன் முகத்தைப் பார்த்தேன். அவர் கண்களிலும் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
சிவாஜி நடிப்பில் இன்றைக்கும் மறக்க முடியாத படம் "பாசமலர்". அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தங்கை சாவித்திரியை தனது பார்வையற்ற நிலையில் சந்திப்பார். அப்போது சிறுவயதில் தங்கையின் பாசத்துக்குரிய அண்ணனாக பல விஷயங்களை நினைவுபடுத்துபவர், கடைசியில் உள்ளம் உடைந்து "கைவீசம்மா கைவீசு, கடைக்குப் போகலாம் கைவீசு" என்று பாடும்போது டைரக்டர் பீம்சிங் 'கட்' சொல்லவும் மறந்து, அவரும் பிழியப் பிழிய அழுதிருக்கிறார்.
நடிகர் திலகம், நடிகையர் திலகம் இருவரின் ஒப்பற்ற நடிப்புக்கு சான்றான இந்த சம்பவம் பற்றி நானும் கேள்விப்பட்டிருந்தேன். இப்போது இந்த மாதிரி ஒரு சம்பவம், நான் நடித்த படத்திலும் நேர்ந்தபோது, எனக்கு 'பாசமலர்' சம்பவம் தான் நினைவுக்கு வந்தது.
இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
Quote:
Quote:
nt rises back to view his flamboyant flora !
நடிப்புச் சூரியனின் ஒளியால் வளம் கண்டு பூத்துக் குலுங்கி நடிப்பு நறுமணம் பரப்பிய பசுமைப் பூந்தோட்டங்கள் ! நடிப்புத் தெய்வத்தின் வழிபாட்டுக்கு உகந்த நடிப்பு மலர்கள் !! மலர் மாலைகள்!!!
கதாநாயகரின் கதாநாயகியர்
நந்தியாவட்டைமலர்மாலை 15 ராஜசுலோச்சனா
நந்தியாவட்டைமலர் இறைவழிபாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ குணங்கள் நிறைந்த மலர். அவ்வண்ணமே ராஜசுலோச்சனாவும் படித்தால் மட்டும் போதுமா திரைப்படத்தில் நந்தியாவட்டை மலராக பளீரென்று ஒளிர்ந்த நடிப்பை வழங்கி சிறப்பித்தமைக்குஇதயபூர்வ நன்றிகள்
Significant songs of Rajasulochchana with NT
தாழ்வு மனப்பான்மையால் ஆட்கொள்ளப்பட்டு கட்டிய மனைவியின் முன் மனம் சுருங்கிடும் கதாநாயகனின் விரக்தி வேதனை இழையோடும் மனக்குமுறல் !
https://www.youtube.com/watch?v=o17JQ6TWP30
கோமாளி கோமாளி பாடல் காட்சியமைப்பு நடிகர்திலகத்தின் பெருந்தன்மைக்கு மற்றுமோர் உரைகல் அதிகம் பிரபலமாகாத முன்னேறி வரும் நகைச்சுவை
துணை நடிகரகளுக்கு முழு கருத்தாழமிக்க பாடலுடன் கூடிய நடனக்காட்சியை ஒதுக்கி மனைவி முன் கூனிக்குறுகி மனவேதனையை விரக்தியான
முகபாவங்கள் மூலம் அவர் வெளிப்படுத்தியிருக்கும் பாங்கு எந்தவொரு மேலைநாட்டு ஆஸ்கார் வென்ற நடிகரும் கூட காண்பித்து இருக்க முடியாத ஓர் அற்புத நிகழ்வு அந்த வேதனை வெளிப்பாட்டை நாமே உணர்வதுதான் நடிகமேதையின் வெற்றி! ராஜசுலோச்சனாவின் வாழ்நாள் நடிப்பு முத்திரை இக்காணொ ளிக் காட்சி சாட்சியாகவே!
https://www.youtube.com/watch?v=Eeod3MiL-YQ
Signature songs of Rajasulochana :
With NT in Saarangathaara
சாரங்கதாரா எதிர்பார்த்த பிரகாசத்தைத் தராது போய்விட்டாலும் இந்தப் பாடல் காட்சி (இந்தப் புறா ஆட வேண்டுமென்றால் இளவரசர் பாடவேண்டும்...!) அமரத்துவம் பெற்றுவிட்டதே! நடிகமேதையின் இணையில்லாதபாடல் உதட்டசைவுக்கும் முகபாவங்களுக்கும் உடல்மொழிக்கும் முன்னால் அசைந்தாடும் பெண்புறா ராஜசுலோச்சனாவின் நடனமொழி வசந்தமுல்லையே!
https://www.youtube.com/watch?v=wKGNgRiL7Ns
In Kaithi Kannaayiram
https://www.youtube.com/watch?v=wjgiT7lfQYI
அன்பு சிவாஜிசெந்தில்,
கதாநாயகரின் கதாநாயகியர் m.n.ராஜம் பாடல்கள் வரிசையில் 'தெய்வப்பிறவி' - 'காளை வயசு கட்டான சைசு'-வையும் சேர்க்கலாம்.
https://www.youtube.com/watch?v=lkDSwYJwj2I
இலங்கை வானொலில் மிகவும் புகழ் பெற்ற பாட்டும் பதமும் வரிசையில் நடிகர் திலகம் புகழ் பாடும் ஒரு பதம்.
வழங்குபவர் : டாக்டர் சாந்தாராம் அவர்கள்...(கூடிய விரைவில் நம் மையம் இணையத்துக்கு வர வேண்டுகோள் விடுத்துள்ளேன்)
பாட்டும் பதமும் - புதிய வடிவில் !
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படங்களில் வந்த பாடல்களைக்கொண்டு !
முழுக்க முழுக்க சிவாஜி கணேசன் பாடல்களில் !
நான் எடுத்த்க்கொண்ட வாக்கியம் :
" செந்தமிழ் வெள்ளி திரை உலகின் ஈடற்ற ஒளி விளக்கே ,திலகமே, நீயே எங்கள் உள்ளத்தில் என்றும் வாழ வேண்டும் ! "
மேற்கண்ட நீண்ட வாக்கியத்திற்கு ஒவ்வொரு சொல்லுக்கும் நான் கொடுக்கும் நடிகர் திலகத்தின் பாடல்கள் :
பாடல் : " செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று தேரினில் வந்தது கண்ணே ! "
படம் : " வைர நெஞ்சம் " ( 1975 ) )
பாடியவர்கள் : டி எம் எஸ் - பி.சுசீலா
இசை : மெல்லிசை மன்னர்[/b]
வெள்ளி:
பாடல் : "வெள்ளி மணி ஓசையிலே உள்ளமென்னும் கோயிலிலே "
படம் : " இரு மலர்கள் " ( 1967) )
பாடியவர் : சுசிலா
இசை : மெல்லிசை மன்னர்
திரை :
பாட்டு : திரை போட்டு நாமே மறைத்தாலும் காதலே தெரியாமல் போகுமா "
படம் : " ராஜா ராணி " ( 1956 )
பாடியவர்கள் : ஏ.எம்.ராஜா - ஜிக்கி
இசை : டி. ஆர். பாப்பா
உலகின் :
பாடல் : " உலகின் முதல் இசை தமிழிசையே"
படம் : " தவப் புதல்வன் " ( 1972 )
பாடியவர்கள் : டி எம் எஸ் - பி.பி. எஸ்
இசை : மெல்லிசை மன்னர்
ஈடற்ற :
பாடல் : " ஈடற்ற பத்தினியின் இன்பத்தை கொன்றவன் நான்"
( " ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே " )
தொகயறாவிலுருந்தும் சொல்லை எடுக்கலாம் !
படம் : " தங்கப் பதுமை "( 1959 )
பாடியவர் : சி.எஸ்.ஜயராமந் ( பத்மினியில் குரலோடு )
இசை : மெல்லிசை மன்னர்கள்
ஒளி :
பாடல் : " ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது "
படம் : " பச்சை விளக்கு " ( 1964 )
பாடியவர் : டி எம் எஸ்
இசை : மெல்லிசை மன்னர்கள்
விளக்கே :
பாடல் : " விளக்கே நீ தந்த ஒளியாலே "
படம் : " நிறை குடம் " ( 1969 )
பாடியவர் : டி எம் எஸ்
இசை : வி.குமார்
திலகமே ! :
பாடல் ள் : " திலகமே, உலகின் திலகமே தமிழ் நாட்டு கலை உலகின் திலகமே "
படம் : " வடிவுக்கு வளை காப்பு " ( 1962 )
பாடியவர் : டி எம் எஸ்
இசை : கே.வி. மகாதேவன்
நீயே
பாடல் : " நீயே உனக்கு என்றும் நிகரானவன்"
படம் : " பலே பாண்டியா " ( 1962 )
பாடியவர் : டி எம் எஸ் & மற்றொருவர்
இசை : மெல்லிசை மன்னர்கள்
எங்கள் :
பாடல் : " எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம் "
படம் : " கலாட்டா கல்யாணம் " ( 1968 )
உள்ளத்தில் :
பாடல் : " உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்தடா "
படம் : " கர்ணன் " ( 1964 )
பாடியவர் : சீர்காழி
இசை : மெல்லிசை மன்னர்கள்
என்றும்
பாடல் : " என்றும் புதிதாக இளமை குறையாத"
( " உலகத்திலே உருவம் என உயர்ந்து நிற்கும் திலகமே ! "
படம் : " வியட்னாம் வீடு "( 1970 )
பாடியவர்கள் : சுசீலா, ஏ.எல் .ராகவன், சூலமங்கல்
இசை : கே.வி. மகாதேவன்
வாழ:
பாடல் : " வாழ நினைத்தால் வாழலாம் "
படம் : " பலே பாண்டியா " ( 1963 )
பாடியவர்கள் : டி எம் எஸ் - பி.சுசீலா
இசை : மெல்லிசை மன்னர்கள்
வேண்டும் :
பாடல் : " வேண்டும் வேண்டும் உங்கள் உறவு"
படம் : " வசந்ததில் ஒரு நாள் " ( 1982 )
பாடியவர்கள் : டி எம் எஸ் - வாணி ஜெயராம்
இசை : மெல்லிசை மன்னர்.
எப்படி இருந்தது நண்பர்களே...
[QUOTE]Dear Kalnayak sir,
I thought of adding, but the song lines were "too suggestive" (Kattaana sizu) that may sometimes irk the viewers taste among other better songs.Also, I try to add songs mostly with the screen sharing by NT, of course with some exceptions like the Nambiar song 'ondru serndha anbu...' that was inevitable in projecting the traits of these heroines towards glorifying our main deity NT!
thanks for such a positive suggestion
regards, senthil
One more impressive dance performance by MNR is from MGR-Banumathi starrer Alibaabaavum 40 thirudargalum!! enjoy this scintillating music beat of old times!!
https://www.youtube.com/watch?v=dBMoxfdFS-s
But this song adapts its musical rhythm from the incomparable Venus of Indian Screen Madhubala starrer Hindi film Phagan (1958). Enjoy this too!! Amazing dance steps by Madhubala!!(with an enchanting snake-charmer's magudi music!)
https://www.youtube.com/watch?v=c1RyLil-4KY
http://i1369.photobucket.com/albums/...ps6288609f.jpg
எவரும் எட்டாத அதிசியம் சிவாஜி புகழ் காப்போம்.
Thanks for uploading this rare photograph of NT, Mr. Yukesh.
Any supporting lines or background information on this occasion....my curiosity rises ..for the benefit of all NT fans.
regards, senthil