மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் சமீப காலமாக இனிய நண்பர்கள் திரு கலிய பெருமாள் , திரு ஜெய்சங்கர் , திரு ராமமூர்த்தி , மற்றும் சில நண்பர்கள் பதிவுகளை காண முடிய வில்லையே ?
திரு கலை வேந்தனின் நேற்றைய பதிவுகள் எல்லாமே நன்றாக இருந்தது .
Printable View
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் சமீப காலமாக இனிய நண்பர்கள் திரு கலிய பெருமாள் , திரு ஜெய்சங்கர் , திரு ராமமூர்த்தி , மற்றும் சில நண்பர்கள் பதிவுகளை காண முடிய வில்லையே ?
திரு கலை வேந்தனின் நேற்றைய பதிவுகள் எல்லாமே நன்றாக இருந்தது .
http://i160.photobucket.com/albums/t...psoj2qa6qz.jpg
http://dinaethal.epapr.in/469976/Din...2015#page/13/1
For saving/records purposes only, do not read small letters.
சொக்குதே மனம்… சுத்துதே ஜெகம்!
எம்.ஜி.ஆர். வைஜயந்திமாலா இணைந்து நடித்த பாக்தாத் திருடன் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடலின் பல்லவியில் நிச்சயம் ஒரு மயக்கம் உண்டு!
ஜி.கோவிந்தராஜுலு நாயுடு இசையில் கட்டுண்ட நாகம்போல் நாமும் மாறலாம்! இனிமை அதிலுண்டு! இயற்றியவர் மருதகாசி பி.சுசீலாவின் குரலில் …சொக்குதே மனம்!!
அந்தப்புர சங்கதிகளின் அடிநாதமாய் விளங்கும் பெண்மையை வைத்தே காய்கள் நகர்த்துவதும் ஒருவித ராஜதந்திரம் என்றது அந்தக்காலம்!
எந்த காலத்திலும் ஆட்சியிலிருப்பவர்களும் அதிகாரத்திலுப்பவர்களும் எளிதில் அகப்பட்டுக்கொள்வது இந்த போதையில்தானே!
திரைப்படங்களில் இந்தக் காட்சியில் பாடல் இடம்பெறுவது எழுதப்படாத விதியாகவே அன்றுமுதல் இன்றும் தொடர்கிறது!
ஆட்டம் பாட்டம் … அதற்கிடையில் கதையின் நகர்வு… இசையின் துள்ளல் நம்மைக் கிறங்க வைக்க… எழுத்தில் வடித்துவிடும் கவிஞர்களின் கற்பனா சக்தியில்… திரைக்கதை… மூலக்கதை எல்லாம் முன்மொழியப்படும்…
சொல்லப்போனால் திரைப்படத்தின் முடிவு வருவதற்கு முன் வருகின்ற பாடலாகவே இதுபோன்ற பாடல்கள் இடம்பெறும்!
திருமதி.பி.சுசீலா அவர்களின் குரலில் இந்தப் பாடல் எனக்கென்னவோ… சொல்லத் தெரியாத இன்பத்தை தந்துவிடுகிற பாடல் என்றே சொல்லத் தோன்றுகிறது!
அமர்க்களம்… அட்டகாசம்… என்பதெல்லாம் நிறைவுபெறாத வார்த்தைகள் என்றே நினைக்கிறேன்!
பூத்து குலுங்குதே புது உணர்வு காணுதே… ஏ…
காத்திருந்த என் பருவ காலமிதே… ஆ…
எதிர் பார்த்திருந்த
இன்ப நாள் வந்ததே தன்னாலே
பார்வையிலே காதல் அலை
பொங்குதே உன்னாலே…
சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
கொலைகார வேடன் வலை கண்டதாலே
நிலை மாறி வந்த இள மானும் நானே
என்னாசைத் தங்கமே அஞ்சாத சிங்கமே
நீ தஞ்சமே
சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
கருவண்டின் முன்னே களிப்போடு ரோஜா
கண்ணாலே பேசி செய்யுதே தமாஷா
எண்ணாதே லேசா என் காதல் பாதுஷா
ஏன் தாமதம்
சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
அழகின் கஜானா உந்தன் ஜனானா
அதற்கேற்ற மைனா வந்ததே தானா
மௌனம் ஏன் வீணா திரும்பாதே போனா
ஆலம்பனா
சொக்குதே மனம் சுத்துதே ஜெகம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
தூண்டில் மீனை போலே ஆனேனே உன் வசம்
படம்: பாக்தாத் திருடன்
பாடல்: மருதகாசி
இசை: ஜி.கோவிந்தராஜுலு நாயுடு
எம்.ஜி.ஆருடன் டி.ஆர்.ராமச்சந்திரன் இசைகோஷ்டியாக வேடமிட…நம்பியாரை நோக்கி நாட்டியமாடுகிற நங்கையாக திருமதி. வைஜயந்திமாலா வேகம்காட்டி ஆடும் ஆட்டம் சிறப்பானது!
பலமுறை கேட்டிருந்தாலும் பாக்தாத் திருடன் பாடல்.. மறுமுறை கேட்கத்தூண்டும் அதிசயம் என்ன?
Courtesy -கவிஞர் காவிரிமைந்தன்.
இன்று மறக்க முடியாத நாள் .
பெங்களுர் ஜக்கூர் விமான நிலையத்தில் 1.4.1975 அன்று மக்கள் திலகத்தின் நாளை நமதே - கிளைமாக்ஸ் காட்சி
படமாக்கப்பட்டது .கொளுத்தும் வெயிலில் மக்கள் திலகம் எம்ஜிஆர் , நாகேஷ் சந்திர மோகன் , நம்பியார் , கண்ணன் ,ராமதாஸ் நடிகை லதா , கலந்து கொண்டார்கள் ,படப்பிடிப்பை காண ஏராளமான பொது மக்களும் ரசிகர்களும்
கூடியிருந்தார்கள் .கூட்டத்தை கட்டுபடுத்த காவல் துறையினர்கள் மிகவும் சிரமபட்டார்கள் ..படபிடிப்பிற்க்கு இடையே
மக்கள் திலகம் மக்கள் குழுமியிருந்த இடத்திற்கு வந்து வணக்கத்தை தெரிவித்து சிறிது நேரம் பேசிவிட்டு பின்னர் பட பிடிப்பிற்கு சென்றார் .
PL WATCH 2.17.00 onwards- BANGALORE -JAGUR AIRPORT SCENES
https://youtu.be/Jh1EthgBBAg
Now Makkal Thilagam MGR in ''Thirudathe '' @ Sun Life channel .
http://i59.tinypic.com/10e0qvo.jpg
விடைபெறுகிறேன்! நன்றி!
அனைவருக்கும் வணக்கம்.
அன்னை மடியை விரித்தாள் எனக்காக.. பதிவுக்கு பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
கடந்த ஓராண்டாக்கும் மேலாக பதிவுகள் இட்டு வந்திருக்கிறேன். தலைவர் பற்றிய தவறான விமர்சனங்களுக்கு மறுப்பும் என்னால் முடிந்த அளவுக்கு விளக்கங்களையும் பதில்களையும் அளித்திருக்கிறேன். மாற்றுக் கருத்து கொண்ட நண்பர்களோடு நட்புறவையும் ஏற்படுத்தி சுமூகமான சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறேன்.
இப்போது எனக்கு வேலை பளு அதிகமாகிவிட்டதால் அடிக்கடி திரிக்கு வரமுடியாத நிலைமை. எனவே, விடைபெறுகிறேன். ஆதரவு கொடுத்த, சகோதரர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
என்னுடைய இந்த அறிவிப்பால் வருத்தப்படுவோருக்கு எனது பணிவான நன்றிகள்.
என்ன? மகிழ்ச்சியா?... பரவாயில்லை. உங்களுக்கும் நன்றிகள்.
மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் வணக்கம். நன்றி.
...இப்படியெல்லாம் சொல்லலாம் என்றுதான் பார்த்தேன். ஆனால், இன்று ஏப்ரல் 1-ம் தேதி என்பது நினைவுக்கு வந்ததால் மேலே சொன்னதையெல்லாம் வாபஸ் வாங்கிக் கொண்டு திரியில் தொடரலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். என்ன, சரியா?
திரியில் ஒரு கலகலப்பு வேண்டாமா? எப்போதும் சீரியஸா இருக்கக் கூடாதுங்க! என்னத்தக் கொண்டு போகப் போறோம்? இருந்தாலும் யாரும் கோபிக்க வேண்டாம். மன்னிக்கவும் என்று அன்போடு கோருகிறேன்.
இதைத்தான் தலைவர் அடிமைப் பெண் படத்தில், ‘ஏமாற்றாதே, ஏமாற்றாதே, ஏமாறாதே, ஏமாறாதே’ என்று நமக்கெல்லாம் பாடல் மூலம் பாடமாக சொல்லியிருக்கிறார்.
அந்தப் பாடலில் ‘நிழல் பிரிவதில்லை தன் உடலைவிட்டு...’ அருமையான வரி. நான் உங்களை விட்டு பிரியமாட்டேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
http://i57.tinypic.com/2i7v1h5.jpg
மதுரை மீனாட்சி பாரடைசில் , நாளை முதல் (02/04/2015) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
"அன்பே வா " என ரசிகர்களை , தினசரி 4 காட்சிகளில் அழைக்கிறார்.
தகவல் உதவி: மதுரை திரு. எஸ். குமார்.
கலாநிதி- தயாநிதியின் ரூ.742 கோடி சொத்துக்கள் முடக்கம்
http://www.dinamalar.com/news_detail.asp?id=1220379
Marans' Assets Seized in Aircel-Maxis Case Include Fixed Deposit Worth 100 Crores
http://www.ndtv.com/india-news/maran...-lateststories
தேசிய செய்திகள் கிரிராஜ் சிங் வீடு நோக்கி முட்டை வீச்சு: இளைஞர் காங்கிரஸ் போராட்டம்
http://www.dailythanthi.com/News/India
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: தயாநிதி மாறனின் ரூ.700 கோடி சொத்துகள் முடக்கம்
http://tamil.thehindu.com/
=================================
http://www.dinakaran.com/
http://www.murasoli.in/
NOTHING TO SAY AS OF NOW.. Did anyone stop you from publishing this news?
பத்திரிக்கை சுதந்திரம் இல்லை [ நான் சொல்லவில்லை]. இப்போ யாரு தங்களை தடுத்து?
https://www.youtube.com/watch?v=Ma410RAP4nM
http://i160.photobucket.com/albums/t...psacmjzaco.jpg
கேப்டன் டோணிக்கு ஆயிரத்தில் ஒருவன் என்று வாத்தியார் பெயரை வைத்துள்ளனர்.
http://i160.photobucket.com/albums/t...ps0qdhsegf.jpg
ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு எங்க வீட்டுப் பிள்ளை....
மக்கள் திலகம் எம்ஜிஆர் அன்றே சொல்லிவிட்டார் ....
நம்நாடு படத்தில் இடம் பெற்ற இந்த காட்சி இன்றைய அரசியலுக்கு பொருந்துகிறது .
https://youtu.be/y8HRpeWXFqA
திரு கலை வேந்தன் - உங்கள் பதிவுகளை படிக்கும்போது பொறாமையாக இருக்கிறது - தமிழ் உங்களிடம் தஞ்சம் புகுந்து கொண்டதால் , அதை உங்களுக்கு தெரியாமல் என்னிடம் வரவழைக்க எந்த உக்தியும் தெரியாமல் திண்டாட வேண்டியதாக உள்ளது . அருமை என்று எழுதுவது மிகவும் குறைத்து எழுதுவதுபோல எனக்கு புலப்படுகின்றது . உங்களிடம் தஞ்சம் புகுந்துள்ள தமிழை சிறிது இரவல் தந்தால் , சில வார்த்தைகளை என்னால் தேடி கண்டுபிடித்து எழுத முடியும் - முடியுமா ??
இந்த பதிவை திரு லோகநாதனுக்கு சமர்பிப்பதில் சந்தோஷம் அடைகிறேன் . நேற்று பாதியில் தான் " திருடாதே " படத்தை பார்க்க முடிந்தது - படத்தின் முடிவை பார்க்க மனம் இல்லாததினால் , என் ரிமோட் வேறு சேனலுக்கு தாவியது . பார்த்த வரையில் எனக்கு கிடைத்த சில இனிய அனுபவங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் . எளிமையான கதை , தெளிந்த நீரோட்டம் போல வசனங்கள் - மனதில் தைக்கும் போதனைகள் , சில கருத்துள்ள பாடல்கள் , யோசிக்க ஏதுவாக இருக்கும் திருப்பங்கள் , யோசிக்கவே முடியாத ஒரு முடிவு - படம் முழுவதும் நம்மை அறியாமல் நாம் சந்திக்கும் ஒரு இழைந்தோடும் சோகம் , சிரிக்க வைக்கும் நகைச்சுவைகள் , சிந்திக்க வைக்கும் அறிவுரைகள் - ஒரு புதிய , மாறுபட்ட மக்கள் திலகத்தை சந்திக்கிறோம் - உணர்ச்சியின் பிழம்பாக . காதலும் , சண்டைகளும் இருந்தாலும் முக்கியத்துவம் கொடுத்தது , இனம் தெரியாத சோகத்திற்கும், கை தட்டலுக்கு உரிய நடிப்பும் தான் -
MT யின் அடுத்த பக்கத்தை , உணர்ச்சியினால் உருவம் எடுக்கும் அந்த உன்னத நடிப்பை தாங்கி கொண்டு வந்த இந்த படம் பல முறை பார்க்க வேண்டியவைகளில் ஒன்று . அவரின் உணர்ச்சி கொண்ட நடிப்பு இந்த படத்தின் டைட்டில் யையே மாற்றி அமைத்தது - படம் " திருடாதே " அல்ல " திருடுங்கள் " என்று - ஆம் - பணத்தை அல்ல , பார்பவரின் மனதை ------- படத்தை முழுவதும் பார்க்காததினால் , கதையை விமர்சிக்க நான் தகுதி உள்ளவன் அல்ல - இருந்தாலும் சில வசனங்கள் மனதை தொட்டன
1. நாகையா ஒரு இடத்தில் MT உண்டியலில் பணம் போடுவதை தடுப்பார் " தம்பி இந்த பணம் , நீ உண்டியலில் போடுவதை நான் சம்மதிக்க மாட்டேன் - இது நேர் வழியில் உனக்கு வந்ததில்லை "
MT இதற்க்கு சொல்லும் வசனம் பிரமாதம் " ஐயா - இந்த உண்டியில் விழும் பணம் எல்லாம் நேர் வழியில் வந்தது என்று நீங்கள் நம்புகிறீர்களா - அப்படி இருந்தால் இதில் ஒரு காசும் விழுந்திருக்காது !"
2. நாகையாவிடம் தான் திருடுவதிர்க்கும் ஒரு காரணம் உள்ளது என்பார் - உடனே நாகையா அவரிடம் " தம்பி இப்பொழுதெல்லாம் தவறுகள் செய்வதற்கு ஒரு நல்ல காரணத்தை கண்டு பிடித்து விடலாம் என்பார் . பொட்டில் அறைந்தது போல MT அதை கேட்டு துடிப்பார் ..
2. MT யை ஒரு கூட்டம் வழி மறைக்கும் - அவர்களிடம் MT சொல்லும் விதம் மிகவும் ரசிக்க வேண்டியவை " நான் திருடுவதைத்தான் விட்டுவிட்டேன் - உங்களை உதைப்பதை அல்ல !"
குறிக்கோள் மிகவும் உயர்ந்ததாக இருந்தாலும் , கெட்ட வழிகளில் அதை அடைய முயற்சி செய்யக்கூடாது என்பதை இந்த படம் அழகாக எடுத்து சொல்லியுள்ளது - பாவத்தின் விலை உயிரே !!
தாயை மதிப்பவன் தவறுகள் செய்ய முனைய மாட்டான் - மற்றவர்கள் மனதையும் புண்படுத்த மாட்டான் என்பதை ஆணித்தரமாக எடுத்து சொல்லும் படம் இது - வார்த்தைகளில் வரும் வெப்பம் , தாயை கொல்லும் பாவத்திலும் கொடியது என்பதை மிகவும் அழகாக எடுத்து சொல்கின்றது இந்த படம் - காதல் இருக்கின்றது ஆனால் அதில் வன்முறை இல்லை - வசனங்கள் இருக்கின்றது - மற்றவர்களை புண் படுத்த அல்ல - பண் படுத்த !! சண்டைகள் இருக்கின்றது - அதில் செயற்கை இல்லை - இது ஒரு படம் மட்டும் அல்ல , எல்லோருக்கும் ஒரு பாடமும் கூட - ஒரு தாய் தன் மகனுக்காக எந்த அவமானத்தையும் ஏற்று கொள்வாள் - ஆனால் அவன் திருடி பிழைப்பவன் என்று மட்டும் அறிந்தால் அவள் கர்பப்பை கொடுக்கும் வலியில் தன்னை மடித்துக்கொல்வாள் - சுமந்தது பத்து மாதங்கள் - நடை தளர்ந்தது ஆறு மாதங்கள் - கண் சொருகியது இரண்டு மாதங்கள் , தூக்கம் விடை பெற்றது கடைசி ஒரு மாதம் - தன் மகன் ஒரு நல்லவன் அல்ல என்று அறிந்ததும் பிரியும் உயிர் ஒரு நொடியில்- இதுதான் அன்னை ! அதனால்தான் அவள் ஒரு கோயில் - அங்கே வாழும் தெய்வமும் அவள்தான் .
நம் எல்லோருக்கும் நம் தாய் சொல்லித்தரும் பாடம்
Culture of Discipline
Son ,
When you have disciplined yourself , you don't need hierarchy ;
When you have disciplined thought , you don't need bureaucracy;
When you have disciplined action , you don't need excessive controls;
when you combine a culture of discipline with an ethic of entrepreneurship ,
you get the magical alchemy of great performance !!
Not all people are most important asset to me , my dear son - but you, the right son is !!!!
அன்புடன் ரவி
[QUOTE=g94127302;1217461]
MT யின் அடுத்த பக்கத்தை , உணர்ச்சியினால் உருவம் எடுக்கும் அந்த உன்னத நடிப்பை தாங்கி கொண்டு வந்த இந்த படம் பல முறை பார்க்க வேண்டியவைகளில் ஒன்று . அவரின் உணர்ச்சி கொண்ட நடிப்பு இந்த படத்தின் டைட்டில் யையே மாற்றி அமைத்தது - படம் " திருடாதே " அல்ல " திருடுங்கள் " என்று - ஆம் - பணத்தை அல்ல , பார்பவரின் மனதை ------- படத்தை முழுவதும் பார்க்காததினால் , கதையை விமர்சிக்க நான் தகுதி உள்ளவன் அல்ல - இருந்தாலும் சில வசனங்கள் மனதை தொட்டன
ரவி சார்
திருடாதே படத்தை பற்றிய உங்களின் விமர்சனம் சூப்பர் . மிகவும் அனுபவித்து ரசித்து படத்தை பார்த்த உங்களின் பதிவு அருமை . வாழ்த்துக்கள் ரவி சார் .
அன்பிற்கினிய திரு. ரவி சார் அவர்களுக்கு,
தங்களின் பெரிய மனத்துடன் கூடிய பாராட்டுக்கு நன்றி. ஆனால், உண்மையில் உங்களைப் போன்றவர்களின் எழுத்துக்களை படித்துதான் நல்ல அம்சங்களை, உத்திகளை நான் கற்றுக் கொள்கிறேன். குறிப்பாக, மேலே நீங்கள் எழுதிய கடைசி பாரா....
‘‘தாயை மதிப்பவன் தவறுகள் செய்ய முனைய மாட்டான்.......
நம் எல்லோருக்கும் நம் தாய் சொல்லித்தரும் பாடம்’’
.... என்ன ஒரு சரளமான, நடை. யோசித்து, யோசித்து எழுதியதாக தெரியவில்லை.எழுத திண்டாடுவதாக நீங்கள் கூறுவது உங்கள் அடக்கத்தை காட்டுகிறது. நிறைகுடம் தளும்பாது என்பார்கள். நீங்கள் நிறைகுடம் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.
இந்தப் பதிவை திரு.லோகநாதன் அவர்களுக்கு சமர்ப்பித்துள்ளீர்கள். தாயை இழந்து வாடும் அவருக்கு உங்கள் பதிவு நிச்சயம் ஆறுதல் அளிக்கும்.
திருடாதே படம் பற்றிய உங்கள் கருத்துக்கள் அருமை திரு.ரவி சார். நீங்கள் குறிப்பிட்ட காட்சிகளை நானும் பார்த்து ரசித்திருக்கிறேன். தனது மகன் திருடன் என்பதை அறிந்த மக்கள் திலகத்தின் தாயாக வரும் லட்சுமி பிரபா அவர்கள், இந்தக் கையாலே வளர்த்தேனே என்று அங்குள்ள மேஜையில் கைகளை அறைந்து கொள்வார். தாய்க்கு கை வலிக்கக் கூடாது என்று மக்கள் திலகம், அம்மா... என்று கதறிக் கொண்டே ஓடிப் போய் மேஜை மேல் பாதி உடலை வைத்து முதுகைக் காட்டி அடிகளை தானே வாங்கிக் கொள்வார். வார்த்தையே இல்லாமல், தாய் மீது பேரன்பு கொண்ட மகனின் மன நிலையை காட்டுவார்.
நேற்று முன்தினம் திரு.சின்ன அண்ணாமலை அவர்களைப் பற்றி கூறியிருந்தேன். மன்னிக்கவும் சார். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ரசிகர் மன்றத் தலைவராக இருந்த திரு. சின்ன அண்ணாமலையைப் பற்றி உங்களிடம் நான் கூறுவது பில்கேட்சிடம் மைக்ரோசாப்ட் பற்றி கூறுவது போல. உங்களுக்குத் தெரிந்திருக்கும். முதலில் திருடாதே படத்தை அவர்தான் தயாரித்தார். மக்கள் திலகத்துக்கு கால் முறிவு ஏற்பட்டதால், படம் தாமதமானால் நஷ்டத்தை தாங்க முடியாது என்பதால் அவரது யோசனைப்படி கவியரசர் கண்ணதாசனின் தமையனார் ஏ.எல்.எஸ் அவர்களிடம் படத்தை விற்றுவிட்டார்.
நீங்கள் முழுப் படத்தையும் பார்த்தால் எங்களுக்கு பெரிய விருந்தே கிடைக்கும் போலிருக்கிறதே. அடிக்கடி வந்து உங்கள் உயர்ந்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.ரொம்ப நன்றி சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
தின இதழ் -பத்திரிகையில் தினமும் மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய கட்டுரை மற்றும் வல்லமை இணயதளத்தில்
இடம் பெற்ற மனதில் நிறைந்த மக்கள் திலகம் -கட்டுரைகள் பதிவுகளை வழங்கி வரும் இனியநண்பர்கள் திரு லோகநாதன் திரு சைலஷ் , திரு குமார் அவர்களுக்கு நன்றி . கலைவேந்தனின் பதிவுகளும் அருமை .
நாளை பிறபகல் - ஜெயா டிவியில் மக்கள் திலகத்தின் ''என்கடமை '' ஒளிபரப்பாகிறது.
சரியான நேரத்தில் நம்நாடு வீடியோ பதிவிட்ட குமார் சார் அவர்களுக்கு பாராட்டுக்கள் .
1969ல் வெளிவந்த நம்நாடு படத்தில் மக்கள் திலகம் கூறும் வசனங்கள் இன்றைய அரசியல் தலைவர்கள் , பதவியில் இருந்தவர்கள் பற்றிய காட்சிகள் அத்தனையும் பொருத்தமாக உள்ளது .
நண்பர் திரு. ரவி அவர்களுக்கு வணக்கம் .
தங்களின் "திருடாதே " விமர்சனம் என் உள்ளத்தை கவர்ந்தது. சமூக படங்களில் மக்கள் திலகம் முதன் முதலாக நடித்து தன் முத்திரையை பதித்த , எனக்கு பிடித்த படங்களில் ஒன்று.
மக்கள் திலகத்தின் நடிப்பு, வசனங்கள், நகைச்சுவை, எல்லை தாண்டாத காதல்,இனிமையான பாடல்கள் -திருடாதே, என்னருகே நீ இருந்தால், ஓ மிஸ்டர் பாலு, அழகான சின்ன பொண்ணு போகுது .
சுறுசுறுப்பான, விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள், மக்களுக்கு அறிவுரை/போதனை சொல்லக் கூடிய கருத்தாழமிக்க வசன வரிகள், ஆகியவற்றை தங்கள் பாணியில் திறம்பட விமர்சித்ததற்கு நன்றி.
திருட்டு தொழிலில் ஈடுபட்டு , தன் தாயிடம் உண்மை நிலையை எடுத்துச் சொல்லி,மன்னிப்பு கோரும் காட்சியில், இதுநாள் வரையில் திருடிக் கொண்டுதான் இருந்தேன்.இனிமேல் திருடமாட்டேன் . என்னம்மா அப்படி பார்க்கிறீங்க .என்று குழந்தைத்தனமாக,அதே நேரம், தாயை எப்படியாவது நம்பவைத்து, தவறுக்கு
பிராயச்சித்தம் தேட முயற்சிக்கும் காட்சியில் மக்கள் திலகத்தின் நடிப்பு மிக
அபாரம், அருமை.
தன் தாய் இறந்ததும், நடிகர் நாகையாவிடம், அண்ணனை இழந்த சாவித்திரிக்கு
ஆறுதல் கூறுவேனா, அல்லது கணவனை இழந்த மனைவியை தேற்றுவேனா ,ஐயா என் இதயமே வெடித்துவிடும் போல் உள்ளது என அழுது புலம்பும் காட்சியிலும் இயல்பாக, அருமையாக நடித்துள்ளார் மக்கள் திலகம். அப்போது
நடிகர் நாகையா, பாலு (மக்கள் திலகம் ) மறந்தும் இனி திருடமாட்டான்.
ஏனெனில், அவன் செய்த திருட்டினால் தன் தாயை இழந்துவிட்டான்.என்கிற காட்சியும் அருமை.
வில்லனை பிடித்துக் கொடுத்ததால் , அரசு மூலம் கிடைத்த பணத்தை, நடிகர் நாகையாவிடம் ஒப்படைத்து, குழந்தைகள் நல நிதிக்கு பயன்படுத்துமாறு
கூறி, கைகூப்பி வணங்கி செல்கிறார் மக்கள் திலகம்..நம் நெஞ்சைத் தொட்டவாறு.
ஒருவன் செய்யும் திருட்டினால் , ஒரு குடும்பத்தில் நேரும் இன்னல்களையும்,
துன்பங்களையும், தன் தாயையே இழக்கும் கொடுமையையும், பின்னர் திருட்டு பழியில் இருந்து மீண்டு ,அரும்பாடுபட்டு திருந்தியவனாக, நல்லவனாக , கதாநாயகனை மிக அழகாக சித்தரித்த திரைப்படம்.
1974 முதல் 1980 வரையிலான காலத்தில், பிரைட்டன், சரவணா, பத்மநாபா,
பிராட்வே , பிரபாத், மேகலா,தங்கம், பாரகன், என பல அரங்குகளில் நண்பர்களுடன் அரங்கு நிறைந்த காட்சிகளுடன் கண்டுகளித்தது பசுமையான நினைவுகள்.
1981ல் நண்பர் திரு. கே. எஸ். மணி அவர்களுடன் நாகர்கோவில் - ராஜேஷில்
பார்த்த அனுபவமும் உண்டு. அப்போது நான், திருவனந்தபுரத்தில் பணியாற்றி வந்தேன். திரு. மணி ,நாகர்கோயிலில் பணியாற்றி வந்தார்.
முதலில் நண்பர் திரு. வினோத் அவர்களுக்கு தான் நன்றி சொல்லவேண்டும்.
ஏனெனில், மக்கள் திலகம் திரியில் தற்போது " திருடாதே " ஒளிபரப்பாகி கொண்டு
இருக்கிறது -சன் லைபில் என்று பதிவிட்டதனால் அதுவும் ஒரு மணி நேரம் கழித்து தான் படம் பார்க்க முடிந்தது.
ஆர். லோகநாதன்.