RAMZAN FASTING BEGIN
https://www.youtube.com/watch?v=3FEOtAlu7Mo
https://www.youtube.com/watch?v=ZPLOJS3JP-o
Printable View
RAMZAN FASTING BEGIN
https://www.youtube.com/watch?v=3FEOtAlu7Mo
https://www.youtube.com/watch?v=ZPLOJS3JP-o
சிவாஜி கணேசன் தன் பெற்றோர் மற்றும் சிறுபிள்ளைகளுடன்
http://i1170.photobucket.com/albums/...psrpm0olzi.jpg
பெருமைத் திலகங்கள்!
http://i1170.photobucket.com/albums/...psmbp75m3e.jpg
இந்த நாளில் அன்று (19.06.1960) 1959-ம் ஆண்டின் சிறந்த நடிகர் சிவாஜி கணேசன்; சிறந்த நடிகை பத்மினி; சிறந்த படம் கல்யாணப் பரிசு
1959-ம் ஆண்டில் திரையிடப்பட்ட பல தென்னிந்திய மொழி சினிமாப் படங்களில் சிறந்த படங்கள், நடிகர்கள், நடிகைகள், டைரக்டர்கள் ஆகியோருக்கு சென்னை கவர்னர் ஸ்ரீ விஷ்ணுராம் பரிசுகள் வழங்கினார்.
சினிமா ரசிகர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த பரிசளிப்பு விழாவுக்கு திரையுலகப் பிரமுகர்களும், ஏராளமான ரசிகர்களும் வந்திருந்தனர்.
சிறந்த படமாக வீனஸ் பிக்சர்ஸின் கல்யாணப் பரிசு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த நடிகராக சிவாஜி கணேசன் (பாகப்பிரிவினை), சிறந்த நடிகையாக பத்மினி (தங்கப்பதுமை), சிறந்த டைரக்டராக ஸ்ரீதர் (கல்யாணப் பரிசு), சிறந்த துணை நடிகராக டி.எஸ். பாலையா (பாகப்பிரிவினை), சிறந்த துணை நடிகையாக சி.ஆர். விஜயகுமாரி (கல்யாணப் பரிசு), சிறந்த நகைச்சுவை நடிகராக கே.ஏ. தங்கவேலு (மஞ்சள் மகிமை), சிறந்த இசையமைப்பாளராக ஏ.எம்.ராஜா (கல்யாணப் பரிசு) சிறந்த குழந்தை நட்சத்திரமாக மாஸ்டர் பாபுஜி (கல்யாணிக்குக் கல்யாணம்) உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
courtesy dinamani
மிக்க நன்றி யுகேஷ். நீங்களும் ,சைலேஷ் அவர்களும் எங்களுக்கு உற்சாகம் அளிக்கிறீர்கள். தமிழனின் தலையாய பெருமையான நடிகர்திலகத்தின் பக்கங்களுக்கு அழகும் ,மெருகும் சேர்க்கும் உங்களுக்கு நாங்கள் கடன் பட்டுள்ளோம். அடிக்கடி வாருங்கள்.
யுகேஷ்
நடிகர் திலகத்தின் அபூர்வமான நிழற்படங்களைப் பகிர்ந்தளிக்கும் தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
அண்ணன் ஒரு கோயில் வெற்றி விழாவில் நடிகர் திலகத்திடம் கேடயம் பெறுவது வாணி ஜெயராம் அவர்கள் என எண்ணுகிறேன்.
யுகேஷ் சார்,
1960-ம் ஆண்டு சிறந்த கலைஞர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு அன்றைய சென்னை மாகாண கவர்னர் திரு விஷ்ணுராம் மேதி அவர்களிடம் விருது பெற்றோர் பற்றிய அரிய தகவலுக்கும், அரிய புகைப்படங்களுக்கும் மிக்க நன்றி.
சிவாஜியால் மட்டுமே முடியும்.
முறுக்கு மீசை,உருட்டு விழிகள் இல்லாமலே ஒரு கதாபாத்திரத்தை முரடனாகக் காட்ட முடியுமென்றால்,அது
(முரடன் முத்து )சிவாஜியால் ட்டுமே முடியும்.
இளமையில் வயதான கதாபாத்திரமாகவும்
மட்டுமல்ல வயதான பின்பும் வயதானகதாபாத்திரமாகவும் நடிப்பது மட்டுமல்லாமல் அதை வெற்றிகரமான
பாத்திரபடைப்பாக மக்களின் மனதில் பதிய வைத்து சாதனை படைக்க சிவாஜியால் மட்டுமே முடியும்.
பல பக்க வசனம் பேசி புரிய வைக்க வேண்டிய காட்சிகளுக்கு வசனங்கள் பேசாமல் கண்களாலாலேயேகாட்சிகளை நடத்திக் காட்டும் திறமை சிவாஜியால் மட்டும் முடியும்.
இந்திப் படங்களில் நடிக்காமலேயே இந்தி
ஜாம்பவான் நடிகர்களை தன் கால்களில் விழவைக்கவும் குருவாக நினைக்க வைக்கவும் சிவாஜியால் மட்டுமே முடியும்.
எதிரிகள் கூட ஏற்கும் நடிப்பைக் கொடுக்க சிவாஜியால் மட்டுமே முடியும்.
நாடகங்களை வெற்றிகரமாக நடத்திஅந்த
நாடகங்ளையே திரைப்படமாக்கி அதையும் வெற்றிகளாக்க சிவாஜியால் மட்டுமே முடியும்.
மனிதனைப் படைத்தவன் கடவுளென்றால்,
அந்தக் கடவுளையே படைக்க சிவாஜியால் முடியும்.
திரைப்படப்பட்டியல் திரியில் அடுத்து....
http://i1094.photobucket.com/albums/...lar/Appar1.jpg
Perception of Vision ... இந்த அறிவியல் கூற்றை வைத்து மேலே உள்ள படத்தை Mouse மூலம் ஸ்க்ரால் செய்து கொண்டே வந்தால் பின்னணியில் உள்ள கதவு பக்கவாட்டில் நகர்வது போல் தோன்றுகிறது. நடிகர் திலகம் காட்சியளிக்கும் நிழற்படம் கூட நடிக்கும் போலிருக்கிறதே...
நடிப்பறிஞரின் அடிப்படைக் கேள்விகள் நடிப்பின் வேள்விகளே !! NT's FAQ Basics!!
பகுதி 1 : யார்? (Who?)Quote:
மனிதன் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறையும்வரை வாழ்க்கை என்பது என்னவென்று அறிந்திட வாழ்வின் அர்த்தம் புரிந்திட அவனுள் உறையும் அடிப்படைக் கேள்விகள் யார் ), என்ன? (What?), ஏன்?எதனால்? ( Why?), எங்கே (Where?), எப்படி ( How?), எது (which), எதற்காக (What for?), யாருக்காக (for whom?).........
இதற்கெல்லாம் நமது நடிப்பு ஞானகுரு கேட்கும் கேள்விகளுக்கு விடையளித்தாலே போதுமே !?
யார் தருவார் இந்த அரியாசனம் ?
https://www.youtube.com/watch?v=Fm7QOXpd3jU
யார் அந்த நிலவு ? ஏன் இந்த கனவு ?
https://www.youtube.com/watch?v=R8mgrtqbfNw
https://youtu.be/f6fjSETI5D0
தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனியிடம் பிடித்த இயக்குநர் மகேந்திரன் நடிகர் திலகத்துடன் பணிபுரிந்த நினைவுகளை இக்காணொளியி்ல் பகிர்ந்து கொள்கிறார். எம்.ஜி.ஆர்., சோ, ரஜனிகாந்த் என அனைவருடனும் பழகிய, பணிபுரிந்த நினைவுகளும் இதில் இடம் பெற்றுள்ளன.
மிகையுணர்ச்சி மிக்க நடிப்பு என்பதைப் பற்றி. யதார்த்த இயக்குநர் என அறியப்படும் மகேந்திரன் அவர்களின் விளக்கத்திற்குப் பிறகும் இனி யாராவது மிகை நடிப்பு என, இல்லாத ஒரு அம்சத்தைப் பற்றிப் பேச முன்வருவரோ..
இக்காணொளியைச் சுட்டிக்காட்டிய திரு சைலேஷ்பாசு அவர்களுக்கு நன்றி.
என் உயிர் நண்பர் மகேந்திரனுடன் மணி கணக்காக உரையாடிய நாட்கள் நினைவில் நிழலாடுகிறது. பலமுறை காரசாரமாக விவாதிப்போம்.என்னை எழுத தூண்டியவர் இவர்தான். உங்களிடம் எவ்வளவு விஷயங்கள் கொட்டி கிடக்கின்றன கோபால் ,நீங்கள் எழுதணும் என்று கட்டளையிடுவார்.நடிகர்திலகம் பற்றி மணிக் கணக்காக பேசி மகிழ்ந்திருக்கிறோம்.கே. எஸ்.கோபாலகிருஷ்ணன் மீது மதிப்பு கொண்டவர்.
நடிகர்திலகம் மீது டாகுமெண்டரி எடுக்க விழைந்து , அதற்கு நடிகர்திலகம் ஒப்புதலும் கொடுத்த பிறகு, ஒருவர் குறுக்கே நுழைந்து கெடுத்த கதையை சொல்லி சொல்லி மாய்வார்.நண்பனுடன் பேசிய பல விஷயங்கள் பிரத்தியேகம் என்பதால் வெளியிட முடியாது. ஆனால் ஒரு முழு "குடும்பமும்" திரைத்துறையில் புகுந்து அடித்த கூத்துக்கள் சொல்லி மாளாது.
மகேந்திரன் சிந்தனையுடன் ஒத்து போவது போல ,நான் எனது ஆய்வுக்கு எழுதிய கள முன்னுரை அமைந்தது . அதன் சாரம்.(அதாவது நடிகர்திலகம் என்ற மேதையின் திறமைக்கு ஒப்ப ,மற்ற திறமைகள் தமிழ் திரையுலகில் வளராத காலகட்டத்தில் அவர் சிக்கினார். )
என்னுரை.
"பொருளாதாரம் படித்தவர்களுக்கு புரியும். ஒரு உண்மையை நிரூபிக்க அனைத்து புற காரணிகளையும் constant என்ற நிலையில் வைத்து, அவற்றை பொருட்படுத்தாது, நாம் எடுத்து கொண்ட பொருளை மட்டும் ஆராயும் variable என்ற உயிர் பொருளாக்க வேண்டும்.
நான் உதாசீனம் செய்யும் புற காரணிகள்- star என்பவன் இந்தியாவில்(cine field) நிலைக்க செய்ய வேண்டிய நீர்மைகள்(Dilution )&compromises, நமது அழகுணர்ச்சி(அதுவும் தமிழக மக்களின் விபரீத அழகுணர்ச்சி),கூத்து மரபாகவே தொடர்ந்த நமது திரைப்பட கலையாக்கம்(பாடல்களுடன்), நமது talkie என்ற காரண பெயர் கொண்ட படங்கள், அவியல் ஆன அவற்றின் ஆக்க முறைகள்,உலகபார்வையில் tribalised ஆக தெரியும் நமது விரிந்த கலாச்சாரங்கள்,நமது மொழியின் seperation &peculiar nuiances (தமிழ் மொழியின் வினோதமான பேச்சு வழக்கு/எழுது முறை வேறுபாடுகள்மற்றும் அதன் நூற்று கணக்கான வட்டார வழக்கு,தூய தமிழ் பேச்சு ETC ), நமது பிரத்யேக வியாபார நிர்பந்தங்கள்(இதிலும் தமிழ் வினோதம்), ஒரே நேரத்தில் பல தர பட்ட படங்களில் shift முறையில் ஓயாது உழைத்த நடிகர்திலத்தின் பிரத்யேக சிரமங்கள் ,Focus இல்லாத நமது படங்களின் செக்கு மாட்டு கதை-காட்சியமைப்புகள், இவற்றை பற்றிய ,இவை சார்ந்தவற்றை முற்றாக ஒதுக்கி, நடிகர் திலகம் என்ற மேதை தான் அறியாமலேயே எப்படி அத்தனை பொருட்படுத்த தக்க உலக நடிப்பு பள்ளிகளின் அனைத்து பாணியையும் , தன்னிடையே கொண்டு விளங்கி தனக்கு பிறகு ஆயிரம் இடங்கள் காலியாகவே இருக்கும் படி செய்த விந்தையை எனக்கு தெரிந்த வரையில் சுலபமாக ,அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் புரியும் வண்ணம் விளக்க முயல்கிறேன்.
முதலில், ஏன் உலக பள்ளிகளோடு ஒப்பீடு என்ற கேள்விக்கு பதில் திரை படம் என்பதே மேல் நாட்டார் நமக்கு அறிமுக படுத்தி,அவர்களாலேயே வளர்த்தெடுக்க பட்ட கலை. இன்றும் கூட தர நிர்ணயம்,பரிசுகள் எல்லாமே அவர்கள் போட்ட பாதையில்தான் பயணிக்கின்றன(விமரிசனங்கள் உட்பட). முதலில் அவர்களின் முக்கிய நடிப்பு பள்ளிகள்(Different schools of Acting) என்ன, அதன் சாரங்கள் என்ன, அதில் பயின்ற முக்கியமானவர்கள் யார் யார் என்று சுருக்கமாக பார்த்து விட்டு தொடருவோம் .மேலை நாடுகளில் நடிப்பு துறைக்கு வர விரும்பும் அனைத்து நடிகர்களுமே, ஏதோ ஒரு நடிப்பு பயிற்சி பள்ளியில் படித்து தேர்ந்து, ஒரு school of acting இல் முறையாக சிறப்பு பயிற்சி பெறுவது நடைமுறை. அதனால் சில வெளிநாட்டு நடிகர்களை அந்தந்த பள்ளிகளில் உதாரணம் காட்டி உள்ளேன்.
இதில் நான் இன்னொன்றையும் குறிப்பிட்டு சொல்ல விழைகிறேன். நான் தேர்ந்தெடுத்த படங்களில் பிரதானமான நடிப்பு முறையை பிரித்தெடுத்தாலும்,அந்த மேதையை கூண்டுக்குள் அடைப்பது சிரமம் என்பதால்,பிற பள்ளிகளின் தாக்கமும் சிறிதளவு இருக்கும்.
அதே போல ஒரே படத்திலேயே மூன்று விதமான நடிப்பு பள்ளிகளின் கூறுகள் உண்டு. தெய்வ மகன் அப்பா (method Acting ),கண்ணன் (Chechov பாணி),விஜய்(Oscar Wilde பாணி).நான் தவற வாய்ப்புள்ளதால் அங்கங்கே திருத்துமாறு வேண்டுகிறேன்.
சக்கரத்தை திரும்ப திரும்ப கண்டு பிடித்தல் என்ற சொற்றொடர் (reinventing the wheel ) ஆங்கிலத்தில் உண்டு. NT இடம் நமக்கு மிக பரிச்சயமான, முயற்சி,பயிற்சி,கடின உழைப்பு,கூரிய பார்வையுடன் கவனிப்பு திறன்,உடல்-மனம் சார்ந்த ஆளுமை,அங்க ஒத்திசைவு,கற்பனை திறன், கிரகிப்பு,ஒருங்கிணைப்புடன் கூடிய சிந்தனை திறன், concentration,aptitude,improvisation இவை எல்லா பள்ளிகளுக்கும் பொருந்தும், அவருக்கு பிறவியிலேயே கை வந்த விஷயங்கள். இதற்குள்ளும், மிக நுழையாமல், ஒவ்வொரு பள்ளிகளின் கோட்பாடு, வித்யாசங்கள்,நிறை-குறைகள், சில படங்கள் (NT ) உதாரணங்கள், அவற்றில் நடிகர்த்திலத்தின் நிறை பங்குகள். இவ்வளவுதான் ஆய்வின் scope ".
நான் வணங்கும் எங்கள் குல தெய்வம் மக்கள் திலகத்தின் இதய தெய்வமாகிய, தென்னாட்டு பெர்னார்ட் ஷா, இந்நாட்டு இங்கர்சால், காஞ்சி கரிபால்டி, எனது தெய்வத்தின் தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்களுடன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தோன்றும் அரிய புகைப்படத்தை பதிவிட்டமைக்கு, சகோதரர் திரு. ரவி கிரண் சூரியா அவர்களுக்கு நன்றி !
திட்டமிட்டு, இரண்டு மூன்று நாட்களாக பார்வையாளர்களை அதிக படுத்த முயல்வது போல தெரிகிறதே? வேடிக்கை தொடர்கிறது.
Nice understanding about Nadigar Thilgam.
The only aspect i beg to differ here is his definition about "yadhaarththam" in tamizh film making incomparison with hollywood film making.
There are many differences in culture, behaviour, approach to life, approach to materialistic things etc., between the people of India more specifically Tamizhnadu and the people of West !
For example : When a mother dies, the son / daughter / close relations certainly burst out in Tamizhnadu. Here too, the level of bursting out is different between communities or caste !
In West, it does not happen at all..! they cross their hand, they lower their head, their lips are tight.....there are no sentiments / emotion attached to this extent due to the cultural differences.
This being the case, the very comparison is highly idiotic and unacceptable...!
The Guy who interviews Mr. Mahendran, himself would react the same way every tamizhan reacts when he experiences Joy / Sorrow etc.,
Why should we get influenced by something that's not in our gene and debate on this in the form of interview...?
On that context it is totally unagreeable - Comparison of Tamil Film Making and Hollywood Film Making and branding that Tamizh films are not reality !
Regards
RKS
நடிப்பறிஞரின் அடிப்படைக் கேள்விகள் நடிப்பின் வேள்விகளே !! NT's FAQ Basics!!
பகுதி 2 : எங்கே!Quote:
மனிதன் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறையும்வரை வாழ்க்கை என்பது என்னவென்று அறிந்திட வாழ்வின் அர்த்தம் புரிந்திட அவனுள் உறையும் அடிப்படைக் கேள்விகள் யார் ), என்ன? (What?), ஏன்?எதனால்? ( Why?), எங்கே (Where?), எப்படி ( How?), எது (which), எதற்காக (What for?), யாருக்காக (for whom?).........
இதற்கெல்லாம் நமது நடிப்பு ஞானகுரு கேட்கும் கேள்விகளுக்கு விடையளித்தாலே போதுமே !?
வாழ்க்கையில் ஆட்படும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு கட்டத்தில் எங்கே எங்கே என்று தேடி அலைவது நிம்மதியைத்தான்
ஒரு சின்னத் தவறால் வாழ்வின் நிம்மதியை தொலைத்தவராக நடிகர்திலகம் !!
https://www.youtube.com/watch?v=UuMzmHuqN2I
சோதனையான கட்டங்களில் இறைவனையே தேடுகிறோமே !!
https://www.youtube.com/watch?v=Ry7xzM477BI
நதி எங்கே போகிறது ...?
https://www.youtube.com/watch?v=a53nuTu5SAU
எங்கே கால் போகும் போகவிடு ...முடிவை பார்த்துவிடு
https://www.youtube.com/watch?v=NaItT2DZVXU
பட்டாக்க்கத்தி பைரவருக்கும் எங்கெங்கோ செல்லுமாம் எண்ணங்கள் !
https://www.youtube.com/watch?v=w-l5vYDIh8U
தர்மம் எங்கே நியாயம் எங்கே
https://www.youtube.com/watch?v=j81loZmnJAo
மெத்தை விளம்பரத்தில் கண்ணதாசன் பாடல் 'கட்'.. எதிர்ப்புக்கு பணிந்தது ஸ்லீப்வெல்!
கண்ணதாசன் ரசிகர்கள் அதிர்ச்சி மலர்ந்தும், மலராத பூ போல இருக்காதீங்க, தூங்குவதற்கும் விழிப்புணர்வு தேவை என்று கூறி அந்த விளம்பரம் முடிந்தது. ஆனால், இவ்விளம்பரம், பாசமலர் திரைப்பட ரசிகர்களை மட்டுமின்றி கவிஞர் கண்ணதாசன் ரசிகர்களையும் கொந்தளிக்க செய்தது.
http://tamil.oneindia.com/img/2015/0...aratha5-60.jpg
பாசமலர் ரசிகர்களும் கோபம் அண்ணன்-தங்கை உறவை மிக அருமையாக சித்தரித்த பாசமலர் படத்தில் இடம்பெற்ற பாடலை, கணவன்-மனைவி படுக்கையில் புரளும் விளம்பரத்துக்கு பயன்படுத்தியது பாசமலர் ரசிகர்களை காயப்படுத்தியது என்றால், கண்ணதாசன் எழுதிய சூழ்நிலையிலிருந்து மாறுபட்டு மற்றொரு சூழ்நிலைக்காக இந்த பாடல் பயன்படுத்தப்பட்டது கவிஞர் ரசிகர்களை கொந்தளிக்க செய்தது.
ஸ்லீப்வெல் நிறுவனம் விளம்பர நோக்குடன் பாடலின் கருத்தை தங்கள் இஷ்டத்துக்கு பயன்படுத்தியது கண்டிக்கத்தக்கது" என்று இருமுறை சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் புவியரசு மற்றும் கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா போன்றோர் வெளிப்படையாக தெரிவித்தனர். தமிழ் கலைக் களஞ்சியத்தின் உதவி ஆசிரியர் பேராசிரியர் கே.சுப்ரமணியன் மற்றும் திரை விமர்சகரும், திரைச்சீலை புத்தகத்திற்கு தேசிய விருது வாங்கியுள்ள ஜீவானந்தம் ஆகியோரும் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கண்ணதாசனின் புத்தகங்களை வெளியிடும் அவரது மகன், ஸ்லீப்வெல் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன் அவர்கள் உடனடியாக இந்த விளம்பரம் ஒளிபரப்புவதை நிறுத்தாவிட்டால் சட்டப்படி அவர்கள் மீது வழக்கு தொடுக்கவிருப்பதாகக் கூறினார்.
இதுகுறித்து, ஸ்லீப்வெல் மெத்தை தயாரிப்பாளர்களான, ஷீலா ஃபோம் நிறுவன உயர் அதிகாரி பிரின்ஸ் குரேஜா கூறுகையில்,
இந்தப் பாடல் வரிகள் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானது என்பதைத் தெரிந்து அது வாடிக்கையாளர்களின் கவனத்தை கவரும்
என்று தான் நாங்கள் எங்கள் விளம்பரத்தில் பயன்படுத்தினோம், மற்றபடி வேறு எந்த நோக்கமும் இல்லை' என்றார். ஆனால் எதிர்ப்பை கருத்தில் கொண்டு, ஜூன் 19ம் தேதி முதல் ஸ்லீப்வெல் நிறுவனம், பாசமலர் திரைப்பட பாடலை தவிர்த்துவிடுவதாக கூறியுள்ளது.
http://tamil.oneindia.com/news/tamil...nt-229208.html
நாளை ரங்கனை பார்த்து ரசிக்க போகும் படித்த மற்றும்,படிக்காத மேதைகளே. என் வயிற்றெரிச்சல் உங்கள் எல்லோர் மீதும் . வெளிநாட்டில் வாழ்வதற்கு கொடுக்க வேண்டிய விலையா இது? அந்த படத்தை பற்றி ரவி,முரளி ,பிரபுராம் மற்றும் எனது அலசல்கள்.
முதலில் ரவி.
என்றும் அழியாத கதாபாத்திரங்கள் -8
ரங்கன்
இந்த பதிவு ஸ்ரீரங்கத்தில் அனந்தசயனத்தில் இருக்கும் அந்த ரங்கனை பற்றியது அல்ல - பாண்டுரங்கத்தில் ருக்மணியுடன் நின்று அருள் பாலித்து கொண்டுருக்கும் அந்த பாண்டு ரங்கனை பற்றியதும் அல்ல - வேறு யாராக இருக்க முடியும் ? அந்த ஆலய ரங்கனைவிட அதிகமாக கருணை , பணிவு , அடக்கம் , பேசும் வார்த்தைகளில் ஒரு கண்ணியம் , நன்றியின் மொத்த இடமும் உள்ளவர்கள் இருக்க முடியுமா ? அப்படி இருந்த ஒரு நபரையாவது காட்ட முடியுமா ?
உங்கள் கேள்விகளுக்கு சற்று நேரத்தில் பதில் கிடைக்கும்
எனது நண்பர் ஒருவர் சில நாட்களுக்கு முன் என்னை பார்க்க வெளியூரில் இருந்து வந்திருந்தார் - எல்லா உபசரிப்புகளும் முடிந்தபின் அவர் எனக்கு வைத்த கோரிக்கை என்னை பல வருடங்கள் பின்னோக்கி அழைத்து சென்றது - துணைக்கு என் நண்பரும் என் நினைவளைகளுடன் கூடவே வந்தார் ---
அவர் எனக்கு வைத்த கோரிக்கை இதுதான் :
ஒரு அநாதை , நல்ல உடற்கட்டுடன் , அன்பே உருவமாய் , பணிவே அணிகலன்களாய் , குழந்தைகளை பார்த்துக்கொள்ள , அவருடைய வயதான தாயை கவனித்துக்கொள்ள , எல்லா வீட்டு வேலைகளையும் இன்முகத்துடன் பண்ண , வீட்டுடன் நிரந்தரமாய் இருக்கும் படி ஒரு நபர் தேவையாம் - சுருக்கமாக இதோ நாம் சந்திக்க இருக்கும் ரங்கனை போல ஒரு நபர் கிடைத்தால் , மிகவும் கடமை பட்டவனாக இருப்பேன் என்றார் ---
ஆமாம் - கேட்பதற்காக தவறாக எண்ண வேண்டாம் - உங்கள் மகள் உங்கள் உத்தரவு இல்லாமல் திருமணம் செய்து கொண்டாள் - உங்கள் மகன் வெளிநாட்டில் இருந்து கொண்டு இதுவரை உங்களை பார்க்க வருவதில்லை - ஆனால் அவர்களிடம் எதிர்பார்க்காத குணாதிசயங்களை ஒரு அநாதை நபரிடம் எப்படி எதிர் பார்க்கிறீர்கள் ??
அவர் சொன்னார் -- நீங்கள் சொல்வது நியாமே ! அந்த அநாதை நபரிடம் அதிகமான எதிர்பார்ப்புக்கள் இருக்க முடியாது - கொஞ்சம் உணவுடன் நன்றி உள்ளவனாக இருப்பான் - மேலும் படிக்காமல் இருந்தால் அவன்தான் எண்கணிப்பில் ஒரு மேதை !!
அந்த மாதிரி ஒரு ரங்கனை இப்பொழுது பார்க்க முடியுமா ? இவருக்கு கிடைப்பானா ? - கண்களில் பொங்கிவரும் கண்ணீரை துடைத்துக்கொண்டே என் ரங்கனை பற்றிய என் எண்ணோட்டங்களை அவருடன் பகிர்ந்து கொள்ள தயாரானேன்- உங்களுடனும் தான் ----
ஒரு மாறுதலுக்காக கதையை அலச போவதில்லை - அலச எதுவுமே பாக்கி இல்லையே - பலருக்கும் பிடித்த படம் - பலர் பல முறை பார்த்த , பார்த்து கொண்டிருக்கும் படம் - சரி கதையை அலசியுள்ளவர்கள் , பாத்திரங்களை அலசியிருக்க மாட்டார்களா - உங்கள் கேள்வி புரிகிறது - கதையை என்னால் இனி மாற்ற முடியாது - அலசிய பாத்திரங்களை புதிய முலாம் பூசி ஒரு புதிய கண்ணோட்டத்தில் பதிவிடுகிறேன்
ஒவ்வொருவரும் அலசம்போதும் , எழுதும் போதும், NT மட்டுமே ஒரு புதிய அவதாரம் எடுத்து ஒவ்வொருவரையும் ஒரு புதிய , இதுவரை அலச படாதவகையில் வெளிவந்து நம் எழுத்துக்களுக்கு ஒரு வலிமையையும் , உற்சாகத்தையும் சேர்ப்பார் .
காட்சி 1 : மணிவிழா
அதோ 60வயது நிரம்பிய ஒரு இளம் வாலிபனுக்கு மணிவிழா - கல்யாணத்திற்கு கூட்டம் நிரம்பி வழிந்தது கொண்டிருந்தது - இந்த படமும் பல மணிவிழாக்களை காணும் என்று முன்கூட்டியே சொல்வதுபோல் முதல் காட்சி - "ஆனந்த கண்ணீரும்" இப்படிதான் முதல் காட்சியில் மணிவிழாவுடன் ஆரம்பிக்கும் - ஆனால் அதில் இருக்கும் சிவாஜி , இந்த மணிவிழாவில் இருக்கும் SVR யை விட மிகவும் பொலிவுடன் இருப்பார் ( ரங்கனுக்கு நான் சொன்னது கேட்டுவிட்டால் என்னை உண்டு இல்லை என்று செய்துவிடுவான் )
மெதுவாக நானும் என் நண்பரும் மண்டபத்தில் நுழைகிறோம் - என் கண்கள் , ஏன் எல்லோர் கண்களும் அழகை முழுவதும் குத்திகை எடுத்து கொண்ட ரங்கனை தேடுகிறது - மனம் என்னமோ மணி விழாவில் நாட்டம் கொள்ளவில்லை - இதோ ரங்கன் வந்து விட்டான் - இதோ எந்தன் தெய்வம் முன்னாலே - ஒரே ஒரு புன்னைகையில் கண்டுகொண்டோம் - அவனுக்கு திரிஷ்ட்டி சுத்தி போடுவதற்கு பதிலாக , மணிவிழா காணும் தம்பதிகளுக்கு பெரிய பூசணிக்காயை ரங்கன் திரிஷ்ட்டி சுத்துவதுடன் , எங்கள் எண்ணங்களிலும் ரங்கன் சுற்ற தொடங்கினான் - நான் ஒரு அனாதை என்று சொல்லுங்கள் மாமா என்ற வார்த்தையுடன் கலை கட்ட ஆரம்பிக்கும் படம் காலங்கள் பல மாறினாலும் அதே கலையுடன் இன்றும் மினிர்கின்றது - அந்த வார்த்தைகள் மனதில் தையித்த முட்களாக குத்தும் வண்ணம் இருக்கின்றன - ஒருவர் எதார்த்தமாகவும் , வெகுளியாகவும் , அதே சமயத்தில் ஆணித்தரமாகவும் சொல்ல முடியுமா ?? இதோ அவர் பேசும் விதத்தை பாருங்கள் :
"அட போங்க மாமா! தூரத்து, பக்கத்து எல்லாம் சொல்லிக்கிட்டு, யாருமில்லாத அனாதை பய, சின்ன வயசிலிருந்தே நம்ம வீட்டிலே தான் இருக்கான்னு !சொல்லுவீங்களா" என சாதாரணமாக சொல்வது, நமக்கெல்லாம் அசாதாரணமாக இருக்கும் - உள்மனதில் தான் அநாதை என்ற ஒரு ஆதங்கம் - உடனே ஒரு தயிரியம் , நமக்குதான் மாமாவும் , அத்தையும் இருக்கிறார்களே , நாம் எப்படி அனாதையாக இருக்க முடியும் ? அந்த வீட்டில் தனக்கு இருக்கும் உரிமை - அதை இழக்க கூடாது என்ற எண்ணம் - தான் ஒன்றும் பெரியவன் அல்ல - சாதரணமானவன் - என்ற எண்ணம், எளிமையான , ஈகோ இல்லாத ஒரு ஏழையின் உரிமைக்குரல் ----- அப்பப்பா ஒரே வாக்கியத்தில் நம்மை எப்படி பைத்தியமாக்கி விடுகிறார் பாருங்கள் !!!
உண்மையில் ரங்கனின் குடும்பம் ஒரே விந்தையிலும் விந்தை
காட்சி 2 : போட்டோ session
ராஜம்மா , ராவ்பகதூர் சந்திரசேகரன் பிள்ளையின் ( SVR ) மூத்த மகள் - ஒரு விதவை - வார்த்தைகளிலும் விதவைத்தனம் அதிகம் - "எங்காவது நின்று தொலைங்களேன் " என்று சொல்லும்போது, SVR சொல்லும் வார்த்தைகள் இன்றும் தேவைப்படும் - அப்படி பேசாதே ராஜம்மா - அவர்களுக்கு என் மீது இருக்கும் அன்பினால் தானே என்னுடன் சேர்ந்து நிற்க போட்டி போடுகிண்டார்கள் - எல்லோரும் மாதிரி என்றும் அன்புடன் இருக்க வேண்டும் என்று SVR சொல்லும்போதே அப்படி இவர்கள் இருக்க போவதில்லை என்று புரிந்து போய் விடுகின்றது - ரங்கன் ஒரு பாலம் என்பதை இங்கே NT எப்படி ஆழகாக புரிய வைக்கிறார் !!
காட்சி 3 : ரங்கனுக்கு இன்னுமொரு மகனுக்கு பார்த்திருந்த பெண்ணை நிச்சியம் செய்தல்
இங்கே வசனங்கள் NTயிடமிருந்து தேனாக வெளிவரும் - மூன்றாவது மகன் தாய் சொல்லும் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டு சென்று விட, கொடுத்த வாக்கை நினைத்து தாய் கவலைப்பட, அங்கே வரும் NT " நான் பண்ணிக்கிறேன் அத்தை" என்பார். "ஏண்டா நீ பொண்ணை பார்க்க வேண்டாமா?" என்று கேட்கும் போது "வேண்டாம்! வேண்டாம்! நீ பார்த்திடில்லே,அம்புடுதான். காரியத்தை முடி! காரியத்தை முடி!" என்று NT பதில் சொல்லுவது அவ்வளவு அற்புதமாக இருக்கும். - வெறும் பிள்ளையை மாப்பிளையாக்கி விடு என்று சொல்வதாகட்டும் , கல்யாணம் என்றால் என்ன ஒரு சாதாரண விஷயமா - அந்த பெண்ணை நீ வைத்து காப்பாத்த வேண்டாமா என்று தாய் கேட்க்கும் கேள்விக்கு கொஞ்சம் கூட அலட்டிக்காமல் ஒப்புரானை என்ன பேச்சு பேசற - மாமா - இவ்வளவு நாள் நீங்கள் என்னை வைச்சு காபாத்தல ( நாம் இங்கு ஒரு நிமிடம் நினைப்போம் -- இனி காப்பாத்தினது போதும் என்று சொல்வாரென்று - NT யின் சொல்வளம் இங்கு கொடிகட்டி பறக்கும் ) அதே மாதிரி அந்த பொண்ணையும் வைச்சு காப்பாத்துங்க - என்ன நான் சொல்வது - SVR இங்கு இதை கேட்டுவிட்டு ஒரு பூம் பூம் மாட்டு காரன் போல தலையாட்டுவதை காண கண் கோடி வேண்டும்
காட்சி 4 : E .V சரோஜாவும் NT யும்
EVS , NT யுடன் நடித்த வெகு சில படங்களில் சிறந்த படம் இது - ரங்கனுக்கும் பெண் நிச்சயம் ஆகிவிட்டது என்று தெரிந்தும் ரங்கனை கலாய்ப்பதை பாருங்கள் - இவ்வளவு உயிரோட்டம் உள்ள சீனை வேறு எவர் படத்திலாவது பார்க்க முடியுமா ? அந்த கலாய்ப்பை ரங்கன் எப்படி தன்நம்பிக்கையுடன் தளர்த்து எறிவான் பாருங்கள்
மாப்பிள்ளை மாமா , மாப்பிள்ளை மாமா ,
மாப்பிளேனா மாப்பிளேனா , மண்ணாங்கட்டி தோப்பிலே
பூ போட்ட சாக்கிலே போடப்பா இரட்டிலே ---------
மாமா இனி தவில் எல்லாம் உன் இஷ்ட்டதிர்க்கு வாசிக்க முடியாது , உன் பொண்டாட்டி உன் காதை திருகி இழுத்துக்கொண்டு போயிடுவாள்
உடனே ரங்கன் - நம்ம பொண்டாட்டியா - யாரு பயில்வான் பொண்டாட்டியா - என்னை தொடுவாளா ??? - அவர் உடற்கட்டில் அவருக்கு இருக்கும் நம்பிக்கை அப்படி அவரை தன்னை மறந்து பேச வைக்கின்றது
காட்சி 5 : திருமணம்
அந்த முக்கியமான தருணத்திலும் , கனவில் மிதக்க வேண்டிய தருணத்தில் தன் மனைவியையும் சேர்த்து மாமா காப்பாற்றினால் மட்டுமே குடத்தில் கைவிட்டு வைர மோதிரத்தை எடுப்பேன் என்று ரங்கன் சொல்லும்போது நம் இரு கைகளும் பலத்த கரகோஷம் செய்கின்றன - வாழ்க்கையை ஆரம்பிக்கும் முதல் நாளே தன்னை நம்பி வந்த பெண்ணும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஒருவனே மனிதன் என்று NT இங்கே அற்புதமாக விளக்குவார் - SVR உடன் சேர்ந்து நாமும் அந்த தம்பதிகள் பல வருடம் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்திவிட்டு வெளி வருகிறோம்
காட்சி 6 :முதல் இரவு
எல்லாம் லக்ஷ்மிக்கு சொன்னபின் ரங்கனை அவளிடம் அனுப்ப வருகிறாள் - இங்கு நடைபெறும் உரையாடலை கேட்க , அன்புவிக்க பலகோடி காதுகளும் , கண்களும் தேவை ---
அத்தை : என்னங்க உங்களைத்தானே ! - அவன்தான் அசடு என்றால் , அவனை அங்கு அனுப்பாமல் இங்கு வைத்து கொண்டுருக்கிண்டீர்கள்
மாமா : oh அதுவா - டேய் , போடா போடா
அத்தை : ரங்கனிடம் - டேய் அங்கு லக்ஷ்மி தனியாக இருக்கிறாள் - உன்னிடம் ஏதோ விஷயம் சொல்ல வேண்டுமாம் -
ரங்கன் : என்னடா அக்கிரமாக இருக்கிறது - இன்னைக்குத்தான் கல்யாணம் ஆகி இருக்கிறது - அதற்குள் என்ன தனியா பேச வேண்டி கடக்கிறது - அவளுக்கு வெட்கமா இருக்காது ? போய் படுத்து தூங்க சொல்லு - எல்லாம் காலையில் பேசிக்கொள்ளலாம் - போ போ ---
ஒரு வழியாக ரங்கனை அனுப்பிவிட , மீண்டும் அவன் மாமாவிடம் வந்து - எழுந்திருங்கள் உடனே என்பான் - முதல் இரவுக்கும் , அவன் மாமாவிற்கும் என்ன சம்பந்தம் என்று நாம் குழம்பும் போது அவரை எழுப்பி விட்டு , அவர் பின்னால் இருக்கும் தன் சட்டையை எடுத்துக்கொள்வான் - சட்டையிலும் மாமாவின் அன்பை தேடும் அந்த பண்புக்கு வார்த்தையேது வர்ணிக்க ---
முதல் இரவில் வர்ணிக்கப்படும் வார்த்தைகள் எல்லாமே , மாமாவையும் அத்தையையும் பின்னணியாக வைத்து கொண்டுதான் - ரங்கனின் உடலில் இருந்து இரத்தத்தை பிரித்துவிடலாம் - ஆனால் அவன் வணங்கும் மாமாவையும் அத்தையையும் அவனிடமிருந்து பிரிக்கவே முடியாது என்பதை NT எடுத்து சொன்ன விதம் இன்றைய தலை முறைக்கு ஒரு வரப்பிரசாதம் !!
அருமையாக சென்று கொண்டிருக்கும் கதையின் கருவில் சற்றே மாறுதல்கள் - கதைக்கு ஒரு சகுனியாவது அல்லது ஒரு கூனியாவது வேண்டுமே - ராஜம்மா மூலம் அந்த குறை தவிர்க்க படுகின்றது
காட்சி 7 :கீதாவிற்கு , பெண் பார்க்கும் படலம்
யார் வேண்டுமானாலும் கொத்திக்கொண்டு போகும் அளவுக்கு அழகு அவள் - "என்ன சார் - வைத்த பலகாரங்கள் அப்படியே இருக்கின்றது என்று SVR கேட்க , அவர் நண்பர் அதற்க்கு பதில் சொல்லும் விதம் - இவைகள் KSG பட்டறையில் இருந்து தான் வெளி வரும் என்பது மறைக்க முடியாத உண்மைகள்
நண்பர் : நல்லா சொன்னிங்க போங்க - உங்களுக்கு பயந்து கொண்டு நான் சாப்பிடலாம் , என் வயிறு இடம் கொடுக்க வேண்டாமோ ???
பெண் பார்த்தவிதத்தை யார் ரசித்தார்கள் ?? - NT அவர் நடிக்கும் போது வேறு யாரை ரசிக்க விட்டார்? - கண்ணை கண்டான் - கண்ணையே கண்டான் என்று சொல்வது போல NT யையே விழி கொட்டாமல் பார்த்து கொண்டிருக்கும் இன்னுமொரு காட்சி இது : அந்த மாப்பிள்ளை பலசாலியா என்று சோதிப்பதும் , வந்தவர்களை , பண்ணிய உணவு வீணாக போகாமல் சாப்பிட்டு விட்டு போக சொல்வதிலும் , மாமா - டேய் - கீதாவிற்கு பயில்வானை தேட வில்லை , மாப்பிளையை தேடுகிறோம் என்று சொல்லும் போது , தனது தொழில் மிகவும் முக்கியம் என்பதுபோல் வரிந்து கட்டிக்கொண்டு பேசுவதும் - காண கண் கோடி வேண்டும் !!
மனதை மயக்கும் மதுர கானம் - சீவி முடித்து சிங்காரித்து - செவந்த நெற்றியில் பொட்டும் வைத்து -ஆவல் தீர மாப்பிள்ளை அழகை அள்ளி பருகிய கன்னி பெண்ணே !! ------- இங்கு ஆரம்பம் !!
காட்சி 8 - திருப்புமுனை
கதை நம் திரி மாதிரி பல twists களை சுமந்துகொண்டு படு வேகமாக இங்கிருந்து செல்ல ஆரம்பிக்கும் - நம்மை seat உடன் கட்டிபோடும் காட்சிகள் ஏராளம் - ஆயிரம் வாட் பல்பில் ஒரு fuse போனதுபோல் முத்துராமன் முகமும் , அசோகனின் முகமும் , NT என்ற சூரிய ஒளி முன் பொலிவு இழந்து - அந்தோ பரிதாபம் என்றிருக்கும்
கனவுகள் கட்டும்போது கூட step by step ஆகத்தான் கட்டவேண்டும் என்பார்கள் - கனவுதானே , வேகமாக கட்டினால் என்ன என்று நினைத்தால் இங்கு நடக்கும் மாதிரி தான் பலூன் ஊதி வெடி படும்
ஒரே தபாலில் ராவ்பகதூர் 25 இலக்க்ஷம் பங்கு சண்டை மார்க்கெட்டில் இழந்து விடுகிறார் - அதை இனி சம்பாதிக்க முடியவே முடியாது என்றும் புலம்புகிறார் -------- ஏகப்பட்ட கடன் தொல்லைகள் புற்றீசல் போல புறப்படுகின்றன - இதன் நடுவில் - கீதாவை பிடிக்க வில்லை என்று நிச்சியம் பண்ணிய திருமணம் நின்றும் விடுகின்றது --------
கீதா இத்தனை துரதிஷ்ட்டமும் தன்னால் தானே வந்தது என்று தாழ்வு மனப்பான்மையின் உச்ச கட்டத்திற்கு செல்கிறாள் ----
இங்குதான் NT பேசும் வசனங்கள் நம் நெஞ்சையெல்லாம் ஒட்டு மொத்தமாக பிழிந்து எடுக்கும் - ரங்கன் வாழ்கிறான் இங்கே
- நீ படித்து என்ன உபயோகம் - இடி விழுந்த மாதிரி மாமா இருக்கிறார் - நாங்கள் இருக்கிறோம் என்று சொல்ல அந்த இரண்டு தடி பசங்களுக்கும் புத்தி இல்லே - நீ வேற இப்பவா மாமா மனதை புண் படுத்தனும் ----?
position போயிட்டா possession உம் போய் விடும் என்று சொல்வார்கள் - ராவ் பகதூர் காரும் அவரிடம் விடை பெறுகிறது -
காட்சி 9: வாழும் போதில் கூட்டம் கூட்டமாய் வந்து சேரும் உறவினர்கள்
வாழும் போதில் கூட்டம் கூட்டமாய் வந்து சேரும் உறவினர்கள் - கை இழந்த வீட்டில் உடைந்த பானையாக இருக்கும் ராவ் பகதுரை யாருமே அங்கு கண்டுகொள்ளவில்லை - வேலைக்காரனை - அவன் மற்றவர்களிடம் அவமானப்படுவதை தாங்க முடியாமல் ராவ் பகதூர் வீட்டை விட்டு அனுப்பி விடுகிறார்
திரும்பி மார்க்கெட்டில் இருந்து வருவது ஒரு புயலா அல்லது ரங்கனா ?? நடிப்பு இங்கே ஊர்த்தவ தாண்டவம் புரியும் - எருமை இறங்காமல் குட்டை கலங்காதே என்று ஆரம்பித்து பேசும் வசனங்கள் - KSG யே சந்தேகப்பட்டாராம் , அவருடைய வசனங்களா இவைகள் - இவைகளுக்கு ஒருவர் இவ்வளவு உயிர் கொடுக்க முடியுமா என்று - KSG யே தன்னை மறந்து கை தட்டின வசனங்கள் இவைகள் - முத்துராமனை ஒரு தூசியாக - ஏ சின்ன பயலே - நீ சும்மா இரு --- என்று சொல்வது - முத்துராமனின் மீது கர்ணனில் போட முடியாத பிரம்மாஸ்திரத்தை இங்கு போட்டு விடுவார் NT
இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்த்து நாம் தனியே போய் விடலாம் என்று சொல்லும் மனைவியிடம் கோபப்படுவது (" என்னது பிறத்தியாரா? தியாகுவையும் ஸ்ரீதரையுமா நீ பிறத்தியார்னு சொன்னே? நாங்க இன்னிக்கு அடிச்சிகுவோம்,நாளைக்கு சேர்ந்துகுவோம். இனிமே இந்த மாதிரி பேசினே எனக்கு கெட்ட கோபம் வரும்"),- இப்படி வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கும் ரங்கன் - இப்பொழுது சொல்லுங்கள் பாண்டுரங்கத்தில் இருக்கும் அந்த விட்டலை விட ஒரு படி இந்த ரங்கன் உயர்ந்துவிட வில்லை ???
காட்சி 10 : ரங்கனால் பிணைக்கப்பட்ட பாச கயிறு
ரங்கனால் இதுவரை வசதி என்ற போர்வைக்குள் மறைத்து வைத்திருந்த பிரச்சனைகள் ஒவ்வொன்றாய் தலை காட்ட ஆரம்பித்தன - பணம் இல்லை - சரியாக பிள்ளைகள் வளர்க்க படவில்லை - அவர்களிடம் தனிப்பட்ட முறையில் பணம் இருந்தும் குடும்பம் கஷ்ட்டம் படும்போது முன் வந்து கொடுத்துதவ மனமும் இல்லை - ஒருவர் நோய் வாய்ப்பட இவ்வளவு காரணங்கள் போராதா ??
கூத்தும் நடனமும் இருக்கும் வீட்டில் , பவர் கட் ஏது ? -- ராவ்பகதூர் கொஞ்சம் கொஞ்சமாக தன் வாழ்க்கையின் இறுதி கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிண்டார் என்பதை எவ்வளவு அழகாக கதையாக பிண்ணி இருப்பார்கள் - அவருக்கும் வேண்டாத பாலை ரங்கன் அருந்தும் வேலையில் ராஜம்மா பேசும் துடுக்கான வார்த்தைகளால் அழும் ரங்கனுடன் சேர்ந்து நாமும் அழுகிறோம் - வீட்டில் கடுபிடி அதிகமாக ராவ்பகதூர் தன்னுடைய பிடித்தமான balck & white சிகரெட்க்கும் விடுதலை கொடுக்கிறார் ----
அப்பாவிதனத்திலும் , வெகுளி தனத்திலும் phd யே வாங்கிவிடுவார் NT - அந்தநாள் ராஜனா இது - திரும்பி பார் வில்லனா இது ? துளி விஷம் வாசுவா ( மன்னிக்கவும் வாசுவின் ஆழ்ந்த பதிவுகளின் தாக்கம் இன்னும் என்னை விட வில்லை ) இது - இப்படி கேட்டுக்கொண்டே போகலாம் - பதில் ஒன்றுதான் - அதுதான் NT .
" சந்தோஷமாக இருந்தால் ஒருவர் ஓடுவாங்க , ஆடுவாங்க , இல்ல பாடுவாங்க - எங்கே நீ ஓடு பார்க்கலாம் என்று SJ விடம் சொல்லும் போது - திரை அரங்கே இரண்டாக பிளக்கும் அந்த நகைச்சுவையை தாங்க முடியாமல் ------
இதற்க்கு அப்புறம் தான் காலத்தால் அழிக்க முடியாத அந்த மயக்கும் மதுர கானம் வெளிவரும் - ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா ---
--------------------
-------------------
படித்திருந்தும் தந்தை தாயை மதிக்க மறந்தான் - ஒருவன்
படுக்கையிலே முள்ளே வைத்து பார்த்து மகிழ்ந்தான்
பிடித்த முயல் அத்தனைக்கும் மூன்று கால் என்றான் - ஒருவன்
பெண்டாட்டியின் கால்களுக்கு காவல் இருந்தான் .
பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார் -அதை பிள்ளைக்கு மேல் கண்களை போல் காத்து வளர்த்தார்
உண்மை அன்பு தேவை என்று மூன்றும் கொடுத்தார் - அதன் உள்ளத்திலே வீடு கட்டி தானும் இருந்தார்
சொந்தம் என்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை - ஒரு
துணை இல்லாமல் வந்ததெல்லாம் பாரமும் இல்லை - நன்றி உள்ள உயிர்கள் எல்லாம் பிள்ளை தானடா - தம்பி நன்றி
கெட்ட மகனை விட நாய்கள் மேலடா - தம்பி நாய்கள் மேலடா ----
என்ன வார்த்தைகள் - என்ன பாடல் - இன்றும் இந்த பாடல் பல குடும்பங்களில் தேவை ---------
சௌகார் நடிப்பை பற்றி நாம் ஒன்றும் சொல்ல தேவையே இல்லை - ரங்கனே ஒரு இடத்தில் சொல்லுவான் -- " சதா அழுதுண்டே இருக்கும் வேலை தானா உனக்கு - தனி குடுத்தினம் - தனி குடுத்தினம் என்று ஓயாமல் புலம்புவதை நிறுத்து
SVR - NT யை கூப்பிட்டு வீட்டை விட்டு போக சொல்லும் அந்த இடம் - இது ஒன்று போதும் - ஆஸ்காருக்கு இல்லாத பெருமை , பாரத ரத்தின்னாவுக்கு இல்லாத பெருமை அனைத்தும் இவரை தேடி இங்கு வந்துவிடும் இந்த பட்டங்கள் எல்லாம் இவருக்கு ஒரு ஜுஜிபி - இவரிடம் பிச்சை வாங்க வேண்டும்
உரையாடலை கவனிப்போமோ
ரங்கன் : மாமா கூப்டீங்களா ? ---- என்ன நான் கேட்கிறேன் நீங்க பாட்டு உலாத்திகொண்டு இருக்கிண்டீர்கள் ? நான் வேலை செய்துகிட்டிருகிறேன் தெரியுமில்ல ? ஆமாம் அந்த சின்ன பையன் நீங்க கோபமாக இருப்பதாக சொன்னானே ! ஏன் கோபமாக இருக்கீங்க ? யார் உங்களை என்ன சொன்னா ?
ராவ்பகதூர் : டேய் நான் ஒன்னு சொல்றேன் செய்வீயா ?
ரங்கன் : இப்படின்னு சொல்லரதற்குள்ளே செய்ஞ்சு விடுகிறேன்
ராவ்பகதூர் : நீ உடனே வெளியே போ
ரங்கன் : இதோ போயிட்டேன்
ராவ்பகதூர் : : டேய் எங்கடா போறே ?? நீ மட்டும் இல்லேடா , உன் மனைவி லக்ஷ்மியையும் அழைத்து சென்று விடு
ரங்கன் - ஒரு சிரிப்பு சிரிப்பார் இங்கே பாருங்கள் - எல்லோரும் பிச்சை வாங்க வேண்டும் - ஐயையோ அவளை தனியா அழைத்துக்கொண்டு வெளியே போய் பழக்கம் கிடையாது - அத்தையோடுவாது போகட்டும்
ராவ்பகதூர் : அத்தையா - நீயே அழைச்சுண்டு போடா - கொஞ்ச நாளைக்கு என் கண்ணில் படாமல் இரு
ரங்கன் - இதுவரை குழந்தையாக பேசினவர் முகத்தை 360 டிகிரி மாற்றிக்கொண்டு - அப்படின்னா மாமா என்னை வீட்டை விட்டே போக சொல்லுறீங்களா?
ராவ்பகதூர் போய் குடுசையில் இரு என்றவுடன் ரங்கனுக்கு வரும் கோபம் , உரிமை எதையுமே அளவிடமுடியாது - நீ சம்பாதித்து அவளுக்கு சோறு போடு என்றதும் - ஏன் இங்கு என்ன குறைச்சலு ? சோறுக்கு பஞ்சமா என்ன - இங்குதான் ஒவ்வொன்னும் மூணு வேளைக்கு ஆறு வேளையா தின்னுட்டு பெருத்து இருக்கே என்பான்
ராவ்பகதூர் : அடடா நான் என்ன சொல்லவறேன் என்று உனக்குபுரியல்ல - உன் உடம்பிலே நல்ல இரத்தம் ஓடலே - ரங்கன் : "ஆமாம் ஓடுது" -
ராவ்பகதூர் : நீ ஆம்பிள்ளை இல்ல ---
ரங்கன் : "ஆமாம் ஆம்பிள்ளைதான் " -
ராவ்பகதூர் : "அவளை உன்னால் காப்பாத்த முடியாது??
ரங்கன் : முடியாது ---- முடியாது மாமா -- இங்கு நிற்பார் NT - அவர் நிற்கும் இடம் இமயமலையின் உச்சி
அடுத்தது கண்ணகி கண்ணாம்பாவை நிற்க வைத்து சிலையாக்கும் காட்சி
ரங்கன் : இப்படி அவளை வெளியே போக சொல்வதற்குத்தான் எனக்கு கல்யாணம் பண்ணி வைத்தீர்களா? - எனக்கு என்ன தெரியும் - கையலே காசும் இல்லை - உன் மகன்களை போல என்னை படிக்க வைச்சியா - என்னை மக்கு பயல் மாதிரித்தானே வளர்த்தே நீ - கண்கள் குளமாகும் காட்சி இது
வீட்டை விட்டும் செல்லும் காட்ச்சியில் தபலா சண்டை வரும் - அசோகன் , NT யிடமிருந்து தபலாவை பிடுங்கி கொள்வான் - அப்பொழுது கண்ணாம்பா சொல்லும் வார்த்தைகள் - இன்று நாமெல்லாம் புலம்பும் வார்த்தைகள்
" கேவலம் தபலா இல்லையடா - இந்த வீட்டிலிருந்து விலை மதிக்க முடியாத அன்பு , பாசம் , பண்பு " இவைகளை எடுத்துண்டு போறியேடா - அதற்க்கு நாங்க எங்கடா போவோம் ?????
அவர்களை ராவ்பகதூர் தனியாக சந்தித்து அறிவுரை சொல்லும் காட்சி - ரங்கராவ் நடிப்பின் உச்சம் - ஒரு நிமிடத்தில் NT தான் என்று பண்ணிவிடுவார் நமது ஆள்
காட்சி 11 : ரங்கனின் புதுவாழ்வு மாமாவின் வட்டத்தின் வெளியே
வெளியில் வந்த ரங்கன் அவன் நண்பர் மூலம் வேலை ஒன்றில் சேருகிறான் - அங்கே மீண்டும் மனதை மயக்கும் மதுரகானம் -
உள்ளதை சொல்வேன் - சொன்னதை செய்வேன் - வேறோன்றும் தெரியாது --உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது - NT தன்னை பற்றி இப்படி சொல்லிகொள்வார் - எவ்வளவு உண்மை
" பள்ளிக்கு சென்று படித்ததில்லை ஒரு எழுத்தும் தெரியாது - நான் பார்த்த உலகத்தில் பாசத்தை தவிர எதுவும் கிடையாது " ------
---------------------------------------------
நன்றியை மறந்தால் மன்னிக்கமாட்டேன் -பார்வையில் நெருப்பாவேன் -நல்லவர் வீட்டில் நாய் போல் உழைப்பேன் -காலுக்கு செருப்பாவேன் -------------------
வேலையை முடிந்து மாமாவையும் , அத்தையையும் பார்க்கவரும் ரங்கனுடன் நாமும் கொஞ்சம் ஒட்டி கொள்கிறோம் - அந்த வீட்டில் மகிழ்ச்சியை மீண்டும் காண !!
அத்தை ரகசியமாக ரங்கனிடம் - டேய் லக்ஷ்மி - மாங்கா , புள்ளிப்பு ஏதாவது கேட்கிறாளாடா ? என்று வினவும் போது ஒரு நகைச்சுவையில் படத்தை நிரப்பி விடுவார் - ஆ-- அதெல்லாம் இல்லை நான் தான் ஒரு மாதத்திற்கு மளிகை சாமான் வாங்கி போட்டுவிடுவேனே !! ---------
முதல் சம்பளம் வந்தவுடன் மாமாவிற்கு பிடித்த Black & White சிகரெட் பாக்ஸ்ஐ வாங்கி கொண்டு போய் நீட்ட, அவர் "உன் மனைவிக்கு சம்பளத்தை கொடுத்தியா" , உடனே NT " இல்லை " என்று casual ஆக சொல்ல, மாமா சத்தம் போட, NT அதற்கு " புரிஞ்சிடுச்சு! தலையை சுத்தி மூக்கை தொடறீங்க. நீ வீட்டுக்கு வந்தது பிடிக்கலேனு நேரடியா சொல்லாம இப்படி சொல்றீங்க" என்று கோபித்து கொள்வதாகட்டும்,கையில் இருக்கும் கட்டை பார்த்து என்னவென்று கேட்க " ஓவர் டைம் பண்ணும் போது கொஞ்சம் கண்ணசந்துடேனா, சுத்தியை கையிலே போட்டுடாங்க" என்று கூலாக பதில் சொல்லுவது - ரங்கன் ஒரு அவதாரம் - அந்த விஷ்ணு - நம் NT
அடுத்த மனதை மயக்கும் மதுர கானம் - "எங்கிருந்தோ வந்தான் "
சீழ்காழியின் இனிய குரலில் - காலம் காலமாக இன்னும் ஒலித்து கொண்டிருக்கும் பாடல் - உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது ----- இதே பாணியில் மற்றுமொரு விடிவெள்ளி -- இன்றும் என்றும் கேட்கலாம் - கண்ணனை ரங்கனாக்கிய பாடல் -------
கண்ணனின் வேணுகானத்துடன் ராவ்பகதூரின் ரங்கனுக்காக வைத்திருந்த உயிர் பிரிந்து கரைகின்றது -------------
காட்சி 12 : ரங்கனின் விஸ்வரூபம்
மாமா இறந்து தெரிந்தவுடன் வெடித்து சிதறுவது, மாமாவின் காரியங்களுக்கு செலவு செய்ய மகன்கள் யோசிக்கும் போது எல்லா சாமான்களையும் தானே போய் வாங்கி வருவது, ஏது பணம் என்று கேட்கும் அத்தையிடம் " என் கல்யாணத்திற்கு நீ போட்ட நகையை வித்தேன்" என்று சொல்லுவது,
அத்தை கோபித்து கொண்டவுடன் வீட்டுக்கு போகாமல் இருப்பது, அத்தைக்கு உடம்பு சரியில்லை என்று தெரிந்தவுடன் டாக்டரை பணம் கொடுத்து அனுப்பி வைப்பது, - ரங்கன் வாழும் இடம் இது -----
இங்கே இன்னுமொரு மனதை மயக்கும் மதுர கானம் -
படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு - பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு -------
கொடுப்பதற்கும் , சிரிப்பதற்கும் படிப்பு வேண்டுமா ? என்றும் குழந்தையை போல் வாழ்ந்து விட்டால் துன்பம் தோன்றுமா ?
வாழை மரம் படித்ததில்லை கனி கொடுக்க மறந்ததா ?
வான்முகிலும் கற்றதில்லை - மழை பொழிய மறந்ததா ?
சோலையெல்லாம் கற்றதில்லை நிழல் கொடுக்க மறந்ததா ?
சுதந்திரமாய் பாடிவரும் குயிலும் பாடம் படித்ததா ??
--------------------------------------
மனைவியிடம் புலம்புவது ("உனக்கு கொஞ்சம் கூட இரக்கம், நன்றி உணர்ச்சியே இல்லை. என்னைத்தானே வீட்டுக்கு வரவேண்டாம்னு
சொன்னாங்க, நீ போய் பார்த்துட்டு வரலாம்லே"), - ரங்கன் வாழாத இடமே இல்லை
கீதாவை தட்டி கேட்பது - அவள் வேலைக்கு தான் செல்கிறாள் என்று தெரிந்துகொண்டவுடன் குரலில் அன்பை கலப்பது , இதுவரை கோயிலுக்கு செல்லாமல் மாமாவும் அத்தையும் தான் தெய்வம் என்றிருந்தவன் - அத்தையை கடவுள் தான் காப்பார்த்தவேண்டும் என்று சொன்னவுடன் ரங்கன் துடிக்கும் துடிப்பு , நம் நரம்பெல்லாம் புடைக்கும் - வேண்டாம் என்று வெறுத்த மாப்பிளையை ஒரு பெரிய விபத்திலிருந்து ரங்கன் காப்பாத்துகிறான் - பிறந்த உறவு ரங்கனால் மலர்கின்றது - அங்கு பணம் ஒருவனை காப்பாற்றவில்லை - ஒரு மனித நேயம் தான் - இதை நம்மில் எவ்வளவு பேர் உணர்கிறோம் ??
ஒவ்வொருவரும் தன் தவறை உணர்ந்து திருத்தி கொள்கிறார்கள் - திருந்திக்கொள்ள ரங்கன் ஒரு பாலமாக இருக்கிறான் –
வீட்டு வாசலில் அசோகனிடம் "அத்தையையும் சாகடிச்சுடீங்கனா உங்களுக்கு நிம்மதியாடும். நான் இந்த ரோட்டில் நின்னு பார்த்துட்டு போறேன்" என்று உணர்ச்சிவசப்படுவது, இப்படி நவரச நடிப்பை மேதைகளாக இருந்தால் தான் ரசிக்க முடியும்.
திருத்தும் ஒவ்வாருவரையும் தன்னால் தான் திருந்துகிறார்கள் என்று சொல்லாமல் - மாமாவின் குழந்தைகள் எல்லோருமே கெட்டவர்கள் அல்ல என்று சொல்லும் அந்த பரந்தன்மை யாருக்கு வரும்?
மருதூருக்கு தாயத்து அத்தைக்காக வாங்கவேண்டி 15km ஓடும் வேகம் - நடுவில் அனாதையாக திரியும் ராவ்பகதூரின் மகள் ராஜம்மாவிற்கு அடைக்கலம் - ஓடும் இடமில்லாம் புண்ணியத்தை சம்பாதித்துகொண்டே ஓடுகிறான் ரங்கன் - அவன் பின்னால் நம் மனமும் ஓடுகின்றது - தாயத்தில் குணம் ஆகிறதோ இல்லையோ , ரங்கனின் அன்பில் வியாதி குணமாகும் என்கிறாள் அந்த தாயத்தை கொடுக்கும் தாய்
பிறகு பல திருப்பு முனைகள் - தனக்கு உதவி செய்ய வரும் முதலாளி மகனை கீதாவை கல்யாணம் செய்து கொள்ள மறுத்ததை கண்டிப்பது, கிளைமாக்ஸ்-ல் தாக்கப்படும் அவர் அதற்கான காரணத்தை சொல்லுவது ( "மந்திர தாயத்து கொடுக்க வந்த என்னை இந்த தியாகு பய மண்டையிலே அடிச்சிபிட்டான்"), வீட்டை விட்டி வெளியேற முற்படும் மகன்களை தடுத்து நிறுத்துவது (ஏண்டா, நீங்க வீட்டை விட்டு விட்டு வெளியே போனா, என் மகன்களை வீட்டை விட்டு துரத்திட்டியேனு மாமா என்னக்கு சாபம் கொடுக்க மாட்டாரு?") - ஒருவரியில் சொல்லவேண்டுமானால் ரஹீமாக வந்து அன்பை போதித்தான் - இதில் ரங்கனாக வந்து - போதித்ததை நடைமுறையில் நடத்தி காட்டினான்
படம் மீண்டும் ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா என்ற வரிகளுடன் இன்பமாய் முடிவடைகின்றது - உண்மை என்று நம் மனம் உரக்க கத்துகின்றது - இந்த ஊரில் மட்டும் எங்கள் இந்த தங்க ராஜா வாழவில்லை - உலகம் முழுவதும் இன்றும் , என்றும் வாழுகிறார் எங்கள் எல்லோருடைய மனதிலும் ஒரு முடிசூடா மன்னனாக NT !!
----
நினைவலைகள் திரும்பின - என் நண்பரை காணவில்லை - ரோடில் பார்த்த பலர் என்னிடம் ஓடி வந்து , சார் உங்கள் நண்பர் , ரங்கா ரங்கா என்று சொல்லிகொண்டே போகிறார் -- ஒருவேளை அவருக்கு ஒரு ரங்கன் கிடைக்கலாம் - யார் கண்டது??
Original Posting by Murai .
படிக்காத மேதை
திரைக்கதை இயக்கம்: பீம்சிங்
வசனம்: கே.எஸ்.ஜி
தயாரிப்பு: பாலா மூவிஸ்
இசை : கே.வி.மஹாதேவன்
வெளியான நாள்: 25.06.1960
மறக்க முடியாத ப வரிசை படங்களில் ஒன்று.
ஊரில் பெரிய செல்வந்தர் ராவ்பகதூர் சந்திரசேகரன் பிள்ளை. அவருக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள். மூத்த மகள் ராஜம்மா ஒரு விதவை. அவளின் மகன் சந்துரு. மூத்த மகன் தியாகு அவன் மனைவி கமலா. இரண்டாவது மகன் ஸ்ரீதர், அவன் மனைவி மங்களா. மூன்றாவது மகன் சேகர், கடைக்குட்டி கீதா. இவர்கள் அனைவரும் (சந்திரசேகரின் மனைவியையும் சேர்த்து) ஒன்றாக வசிக்கிறார்கள். இவர்கள் வீட்டில் இருக்கும் இன்னொரு முக்கியமான நபர் ரங்கன். ஒரு தூரத்து உறவினர் மகன். ஆனால் சிறு வயது முதல் இங்கே வாழ்ந்து வருபவன். ரங்கன் படிக்கவில்லை. ஆனால் வீட்டில் உள்ள எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்பவன். சந்திரசேகருக்கு மணி விழா (60th Birthday) கொண்டாட்டத்துடன் படம் ஆரம்பம்.
அந்த மணி விழாவிலே சந்திரசேகரின் நண்பரான ஒரு தொழில் அதிபருக்கு கீதாவை பிடித்து போய் விடுகிறது. அவரது மகனுக்கு இந்த பெண்ணை மனமுடிக்கலாம் என்று நினைக்கிறார். சந்திரசேகரின் மூன்றாவது மகன் சேகர் ஒரு பெண்ணை காதலிக்கிறான். அவள் ஒரு சாதரண குடும்பத்தை சேர்த்த பெண். ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வீட்டில் வேலை பார்க்கும் அவளை அந்த வீட்டு பெண்ணாக நினைத்துக்கொண்டு கல்யாணம் செய்து கொள்ள நினைக்கிறான். அந்த பெண் தன் அக்கா வீட்டில் இருக்கிறாள். அக்காள் கணவன் ரிக்க்ஷா ஓட்டுகிறான். இதற்கிடையில் சந்திரசேகரின் மனைவி கோவிலில் வைத்து தன் பழைய Friend-ai பார்க்கிறாள். அவளின் பெண்ணையே தன் மருமகளாக்கி கொள்ள முடிவெடுக்கிறாள். ஆனால் மகன் ஒப்பு கொள்ள மறுத்து வீட்டை விட்டு வெளியேறுகிறான். கொடுத்த வாக்கை காபாற்றுவதற்க்காக ரங்கன் அந்த பெண் லக்ஷ்மியை கல்யாணம் செய்துகொள்கிறான். கல்யாணத்தன்று சந்திரசேகரின் மூன்றாவது மகனுக்கு தான் காதலித்த பெண் பணக்கார வீட்டு பெண் இல்லை என்று தெரிகிறது. வீட்டுக்கு சென்று சொத்தில் பங்கு கேட்கும் மகனை சந்திரசேகர் துரத்தி விடுகிறார்.
கீதாவிற்கு கல்யாணம் நிச்சயமாகிறது. தடபுடல் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்திருந்த 20 லட்சம் நஷ்டமாகிறது. இதனால் கல்யாணம் நின்று போகிறது. ராஜம்மாளும் அவளது மகனும் சேர்ந்து வீட்டில் உள்ள பொருட்களை திருடி விற்கிறார்கள். பழி லக்ஷ்மியின் மேல் விழுகிறது. சந்திரசேகருக்கு வீட்டில் மரியாதை குறைகிறது. மகன்களும் மருமகள்களும் அவரை உதாசினப்படுத்துகின்றனர். காரை விற்க வேண்டிய சூழ்நிலை வருகிறது. இந்த சூழ்நிலையில் தன் மாமாவிற்கும் அத்தைக்கும் விசுவாசமாக இருக்கும் ரங்கனுக்கும் மகன்கள்- மருமகள்கள் இடையே சண்டை வருகிறது. ரங்கனின் மனைவி லக்ஷ்மி நாம் தனி குடித்தனம் போய்விடலாம் என்று சொல்ல ரங்கனுக்கு பயங்கர கோபம் வருகிறது.
இதையெல்லாம் பார்க்கும் சந்திரசேகர் ரங்கனை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். முதலில் வேடிக்கையாக சொல்கிறார் என்று நினைக்கும் ரங்கனுக்கு அவர் சீரியசாக சொல்கிறார் என்று தெரிந்ததும் திகைத்து போய் சண்டை போட்டும் அவர் மனசு மாறவில்லை. மனைவியுடன் வெளியே போகும் அவனுக்கு சேகரின் சகலையின் நட்பு கிடைக்கிறது. தன் வீட்டிலேயே அவர்களை தங்க வைத்து ஒரு மில்லில் வேலையும் வாங்கி கொடுக்கிறான். சம்பளம் வாங்கின பணத்திலிருந்து மாமாவிற்கு பிடித்தமான சிகரெட்டை வாங்கி போக, அவர் சத்தம் போட்டு அவனை அனுப்பி விடுகிறார். மகன்களின் உதாசினம் மற்றும் ரங்கனின் பிரிவு அவரை அதிகமாக பாதித்து அவர் உயிரை பறித்து விடுகிறது. ஆனால் அவரின் மரணம் பற்றி ரங்கனுக்கு தகவல் தெரிவிக்காமலே எல்லாம் முடிந்து விடுகிறது.
இது தெரியாமல் வீட்டிற்க்கு வரும் ரங்கன் உடைந்து போய் விடுகிறான். தகப்பனாருக்கு செய்ய வேண்டிய சடங்குகளை பணம் செலவாகி விடும் என்று செய்யாமல் தவிர்க்கும் மகன்களை பார்க்கும் போது அவனுக்கு கோபம் வருகிறது. தன் அத்தை கல்யாணத்தின் போது போட்ட நகைகளை விற்று பொருட்கள் வாங்கி வரும் ரங்கனை " பெற்ற மகன்களுக்கே இல்லாத அக்கறை உனக்கு ஏன்" என்று சொல்லி சத்தம் போடும் அத்தையிடம் ரங்கன் வாக்கு வாதம் செய்ய, அத்தை கோவத்தில் நீ வீட்டு வாசல்படி மிதிக்க கூடாது என்று சொல்லி அனுப்பி விடுகிறாள். அந்த வீட்டிற்க்கு மேலும் பல கஷ்டங்கள். வெளியிலிருந்து கேள்விப்படும் ரங்கன் தன்னால் ஆன உதவிகளை செய்ய முற்படுகிறான்.
மில்லில் ஒரு பெரிய விபத்திலிருந்து முதலாளி மகனை காப்பாற்றும் ரங்கன் அவன்தான் கீதாவை கல்யாணம் செய்து கொள்ள மறுத்தவன் என்பது தெரிந்ததும் அவனையும் அவனது தந்தையையும் கடுமையாக பேசி விடுகிறான். ராஜம்மாளின் மகன் சந்துருவை கடன்காரார்களிடமிருந்து காப்பாற்றும் ரங்கன் அவனுக்கும் மில்லில் வேலை வாங்கி கொடுக்கிறான். சந்திரசேகரின் மகன் சேகர் மனைவியோடு திரும்பி வர அவனையும் வாழ வைக்கிறான்
சோதனைகளின் உச்சக்கட்டமாக சந்திரசேகரின் வீடு ஏலத்திற்கு வர, அவரது மனைவியை அது கடுமையாக பாதிக்கிறது.. மகன்கள் இருவரும் கை விரித்து விட அவள் நோய்வாய்ப்படுகிறாள்
அத்தையின் உயிருக்கே ஆபத்து என்று தெரிந்ததும் ஒரு ஆன்மிகவாதியிடமிருந்து ஒரு மந்திர தாயத்து வாங்கி கொண்டு வீட்டிற்க்குள் சுவரேறி குதிக்கும் ரங்கனை (அத்தை வீட்டு வாசல் படி மிதிக்க கூடாது என்று சொன்னதால்) இரு மகன்களும் தாக்க அப்போது உண்மையை சொல்கிறான்.
சந்திரசேகரின் தொழில் அதிபர் நண்பர் அந்நேரம் ஏலம் போன வீட்டை மீட்டு அதை ரங்கன் பெயருக்கே பதிவு செய்து கொண்டு வருகிறார். மேலும் கீதாவை தன் மகனுக்கு கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார். ரங்கனின் பெயரில் வீடு வந்து விட்டது என்று தெரிந்ததும் வீட்டை விட்டு வெளியேற நினைக்கும் தியாகுவையும் ஸ்ரீதரையும் ரங்கன் நீங்க ரெண்டு பேரும் இல்லேன்னா நானும் இந்த வீட்டிலே இருக்கபோறதிலே என்று சத்தம் போட, அவர்களுக்கு ரங்கனின் பாசமும் பண்பும் புரிகிறது. எல்லோரும் மீண்டும் அந்த வீட்டில் சந்தோஷமாக வாழ தொடங்குகிறார்கள்.
படிக்காத மேதை - Part II
நடிகர் திலகத்தின் ஒரு சில படங்களை பற்றி விமர்சிக்கும் போது சில காட்சிகள் நம்மை வெகுவாக கவரும். அதைப்பற்றி எழத தூண்டும். வேறு சில படங்களை எடுத்துகொண்டோமானால் எதை எழுதுவது எதை விடுவது என்று திகைத்து போய் நிற்போம். அந்த இரண்டாவது ரகத்தை சேர்ந்தது படிக்காத மேதை. நண்பர் சிவன் சொன்னது போல இப்படியும் நடிக்க முடியுமா என்ற மலைப்பு பார்ப்பவர் மனதினில் அலையடிக்கும்.
NT அறிமுகமாகும் முதல் காட்சியிலிருந்து A Film from Krishnaswamy Bala Movies என்று படம் முடியும் வரையிலும் பின்னியிருப்பார். எப்போதுமே வெகுளி,அப்பாவி வேடங்கள் என்றால் வெளுத்து வாங்கும் NT இதில் முரட்டுத்தனமான விசுவாசமிக்க ரங்கன் கதாபாத்திரத்தை மெருகேற்றி ஜொலிக்க வைத்திருப்பார். சில உதாரணங்கள். மணி விழாவில் குடும்பத்தினரை எல்லாம் நண்பருக்கு அறிமுகப்படுத்தும் காட்சி. எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு கொண்டு செய்யும் NT-யை யார் என்று கேட்க, தூரத்து சொந்தக்கார பையன் என்று ரங்கராவ் சொல்ல அதற்கு " அட போங்க மாமா! தூரத்து, பக்கத்து எல்லாம் சொல்லிக்கிட்டு, யாருமில்லாத அனாதை பய, சின்ன வயசிலிருந்தே நம்ம வீட்டிலே தான் இருக்கான்னு சொல்லுவீங்களா" என சாதாரணமாக சொல்வது, மூன்றாவது மகன் தாய் சொல்லும் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டு சென்று விட, கொடுத்த வாக்கை நினைத்து தாய் கவலைப்பட, அங்கே வரும் NT " நான் பண்ணிக்கிறேன் அத்தை" என்பார். "ஏண்டா நீ பொண்ணை பார்க்க வேண்டாமா?" என்று கேட்கும் போது "வேண்டாம்! வேண்டாம்! நீ பார்த்திடில்லே,அம்புடுதான். காரியத்தை முடி! காரியத்தை முடி!" என்று NT பதில் சொல்லுவது அவ்வளவு அருமையாக இருக்கும்.
கீதாவை பெண் பார்க்க வரும் மாப்பிளையின் கையை பிடித்து பலம் பார்த்துவிட்டு ஆள் நல்ல பலசாலிதான் என்று முகபாவத்திலேயே வெளிப்படுத்துவது, தன்னை மட்டம் தட்டும் மருமகள்களையும் மகன்களையும் அழகாக பதில் சொல்லி மடக்குவது, இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்த்து நாம் தனியே போய் விடலாம் என்று சொல்லும் மனைவியிடம் கோபப்படுவது (" என்னது பிறத்தியாரா? தியாகுவையும் ஸ்ரீதரையுமா நீ பிறத்தியார்னு சொன்னே? நாங்க இன்னிக்கு அடிச்சிகுவோம்,நாளைக்கு சேர்ந்துகுவோம். இனிமே இந்த மாதிரி பேசினே எனக்கு கெட்ட கோபம் வரும்"), வீட்டை விட்டு வெளியே போக சொல்லும் மாமாவிடம் பேசும் பேச்சு (இதை நண்பர் பிரபுராம் ஏற்கனவே எழுதிவிட்டார்), வேலை கொடுக்க லஞ்சம் (1960 லியே அன்பளிப்பு என்ற வார்த்தை வந்து விட்டது) கேட்கும் கிளார்க்கை மானேஜரிடம் மாட்டி விடுவது, முதல் சம்பளம் வந்தவுடன் மாமாவிற்கு பிடித்த Black & White சிகரெட் பாக்ஸ் ஐ வாங்கி கொண்டு போய் நீட்ட, அவர் "உன் மனைவிக்கு சம்பளத்தை கொடுத்தியா" , உடனே NT " இல்லை " என்று casuala-ga சொல்ல, மாமா சத்தம் போட, NT அதற்கு " புரிஞ்சிடுச்சு! தலையை சுத்தி மூக்கை தொடறீங்க. நீ வீட்டுக்கு வந்தது பிடிக்கலேனு நேரடியா சொல்லாம இப்படி சொல்றீங்க" என்று கோபித்து கொள்வதாகட்டும்,கையில் இருக்கும் கட்டை பார்த்து என்னவென்று கேட்க " ஓவர் டைம் பண்ணும் போது கொஞ்சம் கண்ணசந்துடேனா, சுத்தியை கையிலே போட்டுடாங்க" என்று கூலாக பதில் சொல்லுவது, மாமா இறந்து தெரிந்தவுடன் வெடித்து சிதறுவது, மாமாவின் காரியங்களுக்கு செலவு செய்ய மகன்கள் யோசிக்கும் போது எல்லா சாமான்களையும் தானே போய் வாங்கி வருவது, ஏது பணம் என்று கேட்கும் அத்தையிடம் " என் கல்யாணத்திற்கு நீ போட்ட நகையை வித்தேன்" என்று சொல்லுவது, அத்தை கோபித்து கொண்டவுடன் வீட்டுக்கு போகாமல் இருப்பது, அத்தைக்கு உடம்பு சரியில்லை என்று தெரிந்தவுடன் டாக்டரை பணம் கொடுத்து அனுப்பி வைப்பது, மனைவியிடம் புலம்புவது ("உனக்கு கொஞ்சம் கூட இரக்கம், நன்றி உணர்ச்சியே இல்லை. என்னைத்தானே வீட்டுக்கு வரவேண்டாம்னு சொன்னாங்க, நீ போய் பார்த்துட்டு வரலாம்லே"), வீட்டு வாசலில் அசோகனிடம் "அத்தையையும் சாகடிச்சுடீங்கனா உங்களுக்கு நிம்மதியாடும். நான் இந்த Road-ile நின்னு பார்த்துட்டு போறேன்" என்று உணர்ச்சிவசப்படுவது, தனக்கு உதவி செய்ய வரும் முதலாளி மகனை கீதாவை கல்யாணம் செய்து கொள்ள மறுத்ததை கண்டிப்பது, கிளைமாக்ஸ்-ல் தாக்கப்படும் அவர் அதற்கான காரணத்தை சொல்லுவது ( "மந்திர தாயத்து கொடுக்க வந்த என்னை இந்த தியாகு பய மண்டையிலே அடிச்சிபிட்டான்"), வீட்டை விட்டி வெளியேற முற்படும் மகன்களை தடுத்து நிறுத்துவது (ஏண்டா, நீங்க வீட்டை விட்டு விட்டு வெளியே போனா, என் மகன்களை வீட்டை விட்டு துரத்திட்டியேனு மாமா என்னக்கு சாபம் கொடுக்க மாட்டாரு?")
ஒரே வரியில் சொன்னால் அவர் அறிமுகமாகும் முதல் காட்சியிலிருந்து கிளைமாக்ஸ் வரை எல்லா காட்சிகளையுமே குறிப்பிட வேண்டும்.
இந்த படத்தின் மற்றொரு தூண் ரங்காராவ். அவரது மிக சிறந்த படங்களை எடுத்தால் அதில் படிக்காத மேதைக்கும் கண்டிப்பாக இடம் உண்டு. அவருக்கே உரித்தான அந்த casualness இதிலும் வெளிப்படும். எல்லாவற்றையும் easy-aga எடுத்துக்கொள்ளும் மனோபாவம் ( "அவன் Point of View-vile அவன் சொல்லறது கரெக்ட்,இவன் Point of View-vile இவன் சொல்றதும் கரெக்ட்."). NT-யை வெளியே போக சொல்லிவிட்டு அவர் படும் வேதனை, செலவை குறைக்க சொன்னவுடன் மருமகள்கள் தான் சிகரெட் குடிப்பதை குத்தி காட்ட, சிகரெட் பாக்ஸ்-ஐ தூக்கி எரிந்துவிட்டு,கையில் புகையும் சிகரெட்டை கடைசியாக ஒரு இழுப்பு இழுத்துவிட்டு தூக்கி போடுவது கிளாஸ். எங்கிருந்தோ வந்தான் பாடல் காட்சி அவரது மற்றொரு சிறப்பு.
கணவனுக்காக வாழும் மனைவியாக சௌகார் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பார். கண்ணாம்பா என்றாலே சோகம் என்பதற்கு இதுவும் விதி விலக்கல்ல. அசோகனும் முத்துராமனும் மகன்கள். சந்தியாவும் வசந்தாவும் மருமகள்கள். வீட்டை விட்டு ஓடி போகும் மகனாக T.R. ராமசந்திரன், TRR காதலிக்கும் பெண்ணாக ஏ.சகுந்தலா,விதவை மகளாக சுந்தரிபாய். கடைக்குட்டி கீதாவாக E.V.சரோஜா, NT-kku உதவும் தம்பதிகளாய் T.S..துரைராஜ், T.P.முத்துலக்ஷ்மி எல்லோரும் குறைவற செய்திருப்பார்கள்.
கே எஸ் ஜியின் Down to Earth வசனம் படத்திற்கு மிக பெரிய பலம். “மாமா” இசை அமைப்பில் பீம்சிங் இயக்கிய மிக சில படங்களில் இதுவும் ஒன்று (மற்றொன்று பாலாடை). பாடல்கள் எல்லாமே தேனிசை பாடல்கள்.
சிந்தையிலும் பெரிய - E.V.சரோஜா டான்ஸ் பாடல்
பக்கத்திலே கன்னி பெண்ணிருக்கு - TRR, ஏ.சகுந்தலா பாடுவது
சீவி முடிச்சு சிங்காரிச்சு - E.V. சரோஜவை கிண்டல் செய்து NT பாடுவது
இன்ப மலர்கள் - இந்த பாடலை விட பாடலின் ஆரம்பத்தில் வரும் Prelude ரொம்ப பிரபலம். இலங்கை தமிழ் சேவை வானொலியில் மாலை 4 மணிக்கு தினமும் இது ஒலிபரப்பாகும்.
ஒரே ஒரு ஊரிலே - இதை பற்றி எதுவும் சொல்ல தேவை இல்லை
உள்ளதை சொல்வேன் - NT பாடுவது.
எங்கிருந்தோ வந்தான்- சீர்காழியின் டாப் 10 பாடல்களில் ஒன்று. கிருஷ்ண பரமாத்மாவாக தோற்றமளிக்கும் NT எந்த வேஷவும் தனக்கு கச்சிதமாக பொருந்தும் என்பதை நிருபித்திருப்பார்.
படித்ததனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு - சௌகார் பாடும் பாடல்.
இது தவிர குழந்தைகளுக்கு நடன பயிற்சி அளிக்கும் E,V.சரோஜா பாடும் ஒரு பாடலும் உண்டு.
இந்த படம் வியாபார ரீதியாகவும் மிக பெரிய வெற்றி பெற்ற படம் என்பதற்கு ஒரு சான்று, ஆசியாவிலேயே மிக பெரிய திரையரங்கமான மதுரை தங்கம் தியேட்டரில் 112 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது.
ஒரே வரியில் சொல்வதென்றால் நடிகர் திலகத்தின் மணி முடியில் ஒரு வைரம்.
அன்புடன்.
நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting
Gopal.
படிக்காத மேதை ரங்கன் மூடனுமல்ல ,உலகம் தெரியாதவனும் அல்ல. படத்தின் தலைப்பே சொல்வது போல formal education தர படாத ,transparency கொண்ட, நேரிடை சிந்தனை கொண்ட (no crookedness ), utility man என்று சொல்ல படும் நல்லவன் .(வெகுளி என்ற சொல்ல விரும்பினால் அது உங்கள் விருப்பம்)
பின்னாளில் பிரபலமான Emotional Intelligence (intelligence Quotient என்ற பிரபல மனித வள மதிப்பீட்டு முறைக்கு மாற்றானது) என்பதை ஒட்டி Forest Gump போன்ற படங்கள் 1990 களில் பிரபலம் அடைந்தது. ஆனால் 1960 இல் இதை நம் கே.எஸ்.ஜி, பீம்சிங் ,சிவாஜி இணைவு கொடுத்ததை நாம் அவசியம் பாராட்டியே ஆக வேண்டும்.
இதில் முக்கிய அம்சங்கள் -
Emotional Intelligence, or EI, describes an ability or capacity to perceive, assess, and manage the emotions of one's self, and of others.* EQ, or Emotional Quotient, is how one measures Emotional Intelligence.*
Impulse Control- Delay his own gratification by allowing others ahead on priority.
Self Awareness-Understand his own moods and Emotions .
Self Management-More Action and utility oriented.
Social Awareness- Ability to connect and develop Rapport with new people.
Relationship Management-Understand other's emotions and treat them as they wish to be treated.(Empathy)
பல ஆய்வுகள் நடத்தி ,மனிதர்களின் திறனை,வாழ்க்கையில் அடைய போகும் உயரங்களை வெற்றிகளை நிர்ணயிக்க IQ போதுமானதல்ல என்று கண்டு பின்னாளில் develop ஆனா ஒரு concept EQ . ஆனால் நமக்கு சிவாஜியின் வழி 1960 இலேயே கிடைத்தது. நம் இனம் அதை புரிந்து ஆதரித்ததா என்பது வேறு. ஆனால் 1960 யின் அதிக பட்ச வசூலை கொடுத்தது தமிழகம்.
நடிகர்திலகத்தின் நடிப்பிலேயே மிக மிக சிறந்த படங்களில் ஒன்று. பாத்திரத்தை மிக மிக துல்லியமாக புரிந்து கொண்டு நூல் பிடித்து accurate ஆக ரசிக்கும் படி கலை நுட்பத்துடன் பின்னியிருப்பார்.(What a Spontaneity???)
Gopal
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வசனங்களும்,பாத்திர படைப்பும், சிவாஜி அதை கையாண்ட விதம் எல்லாமே ஒரு magic . படிக்காத மேதை சிவாஜியின் நடிப்பு ஆபரணங்களில் ஒரு கோஹினூர் வைரமாய் மின்னும்.
1)ஆரம்ப அறிமுக காட்சி.
2)சௌகாரை கல்யாணம் செய்ய ஒப்பும் காட்சி.
3)சௌகாரின் முதலிரவு அறைக்குள் தள்ளப்பட்டு அவர் மாமாவுடன் ஜீப்பில் சென்ற அனுபவம்.
4)மற்றவர்களின் உதாசீனத்தை பொருட்படுத்தாமல் ,நல்லது என்ற பட்டதை சொல்லி மற்றவர்களை அடக்க முயலும் காட்சிகள்.
5)சௌகார் மனமறியாமல் அவரை கண்டித்து அடக்கும் காட்சி.
6)மாமா வெளியேற சொல்லும் சொல்ல அவர் முறைக்கும் காட்சி. பிறகு வண்டியில் செல்லும் காட்சி.
7)சிகரெட்டுடன் மாமாவை சந்திக்க வரும் காட்சி.
8)மாமாவின் மரண காட்சி.பிறகு தொடரும் இறுதி சடங்கு காட்சிகள்.
அப்பப்பா ,இதற்கு மேலும் Stanislavsky நினைத்தும் பார்க்க முடியுமா?
இந்த படம் 200 முறையாவது பார்த்திருப்பேன். இன்றும் நண்பர்கள் வந்தால் இந்த படத்தை போட்டு பார்ப்பது என் மகிழ்ச்சிகளுள் தலையானது.
Prabhu Ram
17th October 2011, 11:37 AM
Yes. The thing is, he works us to such an emotion high with his demeanor that after a point every single moment is touching.
I guess it is pretty much like what they say about stand up comedy. It is the ice-breaking and getting the first laughs that is the problem. But once you've got the audience going you every joke is going to get a laugh.
Similarly here, Sivaji pierces through my cynicism and thereafter I am totally captivated. Every line, every scene works. The scene where he learns Sundari Bai's son has worked overtime to redeem the jewel he stole and pawned, all he says is: "என் மாமா வீட்டு பிள்ளைங்க, யாருமே கெட்டவங்க இல்லை". Regard for the family dominates every fibre of his being. Extremely moving. Look at the time when he says that, it is when Asokan and Muthuraman are still at their worst behaviour.
When asked about the money for spending on the tenth day ceremony: உன் பணம் தானே அத்த...நீ தானே நகை பண்ணி கொடுத்தே, அதைத் தான் வித்தேன்....மாமாவுக்கு இல்லாம பின்ன இந்த அம்மா போட்டு மினுக்குறதுக்கா?. It is uncharitable of him to talk about his wife - who is the most undemanding person - in such a manner. But even she knows that he is saying that out of love for RangaRao. That it seems obvious to him, that that is the course of action, is moving in itself. And his expression heightens the emotions. It is not even selflessness, in the normal meaning of putting others before oneself. But truly breathing meaning to the word selflessness in not even being aware of oneself as a separate entity, and relegating one's interest being a natural, unconscious response.
The scene where he meets SundariBai gathering wood when he running to meet the sAmiyAr is just fantastic. "உனக்கு அறிவு இருக்கா" he rails at her for not coming to his home directly. Her wrongs do not even register with him. This is not even a நன்னயம் செய்து விடல் or a "they know not what they are doing", this is just being a much larger person than anyone around him. In the end also, when Sowcar Janaki asking him about his bleeding head, he says dismissively: "இந்தப்பய அடிச்சுட்டாம்....போறான் விடு"
His posture with when he talks to the piLLaiyAr, is just earnestness personified. When the sAmiyAr asks him to bathe, in one shot he plunges into the pond and hastily crawls back out to her.
.....
SVR is terrific. Their scenes together are simply on a different level. Such ease of performance.
அடிக்கடி தான் நினைச்சிக்கிறீங்களா...எனக்கு சதா உங்க நினைப்பு தான்.
He describes his work as 'nothing too difficult' and elaborates on his salary: எட்டு மணிநேரம் வேலை பார்த்தா த்ரீ ருபீஸ்...ஓவர்டைம் பார்த்தா ட்டூ ருபீஸ்...அகமொத்தம் ஃபைவ் ருபீஸ்.The way he pronounces the 'rubees' has a childishness that cannot be explained, nor can one imagine it being taught. Only experienced. So much so that the 'உள்ளதைச் சொல்வேன், சொன்னதைச் செய்வேன், வேறொன்றும் தெரியாது' is rendered an unnecesaary elaboration - when after all he exudes that in every action, every word, intonation.
....
When he asks him why he bought him cigarettes and didn't buy his wife anything, he says
"ஓ..இப்படி (தலையை சுத்தி மூக்கைத் தொடுவார்)...இப்படி கேக்குறீங்களாக்கும். ஏண்டா வந்தேங்கறதை....ஏண்டா சிகரெட் வாங்கிட்டு வந்தேன்னு"
In their whole exchange, their are parts where his mumbling is even unintelligible, still they are communicating. Their is a free flow of emotions on the surface and simultaneously a torrent of emotional running deeper - which these two fantastic actors make it so evident to us, the audience. We think we have perceived a miscommunication. That we 'understand' SVR's concerns, but the simple Rangan is not getting it. But at the same time we are conscious that they share a communication whose depth is just beyond what we can perceive. A bond so strong, that while we are moved, we perhaps cannot entirely dismiss a jealousy we feel for their bond.
.....
In the end he says, with a bleeding head: ஏண்டா நான் திருடன்னு நினைச்சு தானேடா அடிச்சீங்க....இப்பொ நான் நல்லவன்னு தெரிஞ்சதும் ஏண்டா வீட்டை விட்டு போறேன்றீங்க?
The logic is astounding, isn't it? Sounds like wise words that tumble out of a child's mouth and stun us adults, who considered ourselves the child's intellectual superiors all along.
Of course they will leave. That is their natural reaction (and so too goads Sundaribai). But the way Rangan puts it, he points out that what they are abandoning is 'goodness itself'. That is what he regards the house to be. An embodiment of goodness. Why on earth, will people who seek good, leave it? Even in their misconception of taking him to be a thief, he can see the goodness of their thinking that ' a thief deserves to be beaten'. Jaw dropping how he is able to see goodness every-bloody-where!
And he is just incapable of taking offence. When Kannamba thoughtlessly asks him if he has indeed stolen like those around accuse him (and we the audience are annoyed with her for asking Rangan such a question), Rangan says: என்ன அத்த நீயும் வரவர என்னை சந்தேகப்பட ஆரம்பிச்சுட்ட. The way he says it, it is abundantly clear he has not taken it to heart. Merely pointing out the silliness in her supposition.
And the cherry is of course his response to Kannamba when she asks him why he didn't come by the door. I can't recall a moment which matches this in stature in being simultaneously hilarious and poignant.
திருவாசகத்துக்கு உருகாரும் இப்படத்துக்கு உருகுவார்.
Thank you, Gopal sir there is no words to explain my feelings while reading Ravi's writing about "Padikkatha methai".